Jump to content

தமிழ்நாட்டு கால்பந்து விளையாட்டு வீரர்!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பார்த்திவ் படேலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? பதினாறே வயதில் இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகக் கோப்பை வரை போனாரே... அவர்தான். அணியில் இருந்து சில நாட்களில் நீக்கப்பட்டாலும் குறுகிய காலத்திலேயே நிறைய பணம் சேர்த்து கவலையில்லாமல் வசதியாக இருக்கிறார் பார்த்திவ்.

ஆனால், இதற்கு நேர்மாறான நிலையில், தமிழக விளையாட்டு வீரர் ஒருவர் இருக்கிறார். வியாசர்பாடியை அடுத்த கல்யாணபுரத்தைச் சேர்ந்த இந்த வீரரின் பெயர் அகஸ்டின். 17 வயதுக்கு உட்பட்ட இந்தியக் கால்பந்து அணியின் கோல்கீப்பர், பல போட்டிகளில், எதிரணியின் பந்துகளைத் தடுத்து இந்தியாவை வெற்றிபெறச் செய்யும் இந்த வீரர், வாழ்க்கையை நடத்த என்ன செய்கிறார் தெரியுமா? வியாசர்பாடியில் ரயில்களில் வரும் சரக்குகளை இறக்கும் அன்லோடிங் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார். இரண்டு நாட்கள் வேலை பார்த்தால் 150 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது. பசிக்குச் சாப்பாடு, கால்பந்து விளையாட ஷ¨... எல்லாம் இந்தப் பணத்தில்தான்.

இத்தனை கஷ்டப்பட்டு இந்த ஆட்டத்தைத் தொடரவேண்டுமா என்று கேட்டால், சிரிக்கிறார். "கஷ்டம்னு பார்த்தா நம்மால எதையுமே சாதிக்க முடியாதுங்க. ஒரு நாள் நானும் ஜெயிப்பேன். பூட்டியா, விஜயன் மாதிரி, நானும் ஒரு நல்ல கால்பந்து வீரனா வந்து நிறைய சம்பாதிப்பேன்" என்கிறார்.

கால்பந்தில் இவருக்கு உற்சாகம் வந்ததற்குக் காரணம், கல்யாணபுரத்தில் உள்ள 'குடிசைவாழ் சிறுவர்கள் விளையாட்டு, கல்வி மேம்பாட்டு அமைப்பு' என்ற உள்ளூர் அமைப்புதான். முன்னாள் இந்தியக் கால்பந்து வீரர்களான தங்கராஜ், செபஸ்டின் போன்றோரின் மேற்பார்வையில் நடக்கும் இந்தக் கால்பந்து பயிற்சியில் 5 வயது முதலே அகஸ்டின் சேர்ந்ததுதான் அவரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

"எங்க வீட்ல கஷ்டங்கள் அதிகம். இதனால, என் மனசுல அப்ப வெறுப்புகள் அதிகமா இருக்கும். அந்த வெறுப்பு தீர மைதானத்துல கால்பந்தை எட்டி உதைப்பேன். காலம் போகப்போக கால்பந்து போட்டி என் மனதைச் சமாதானப்படுத்தற தியானமா மாறிடுச்சு.

2003_ல் சென்னை அணிக்குக் கோல் கீப்பரான நான் 2005_ல் இந்திய ஜூனியர் அணியில் இடம்பிடிச்சேன்.

என்னுடைய இந்த வெற்றிக்கு, பயிற்சியோடு நான் வசிக்கிற பகுதியும் ஒரு காரணம். என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் எங்கள் பகுதி மக்கள் உதவியா இருந்தாங்க.

வீட்ல வெறும் இட்லியும், கஞ்சியும், காய்கறிச் சாப்பாடும் சாப்பிடற எனக்கு, பயிற்சி முகாமுல முட்டை, கறின்னு எல்லாச் சாப்பாடும் கிடைக்கும். ஆனா சாப்பிட முடியாது. சாப்பாட்டுக்குக் கஷ்டப்படற எங்க பகுதி மக்களையும், அந்தக் கஷ்டத்துலயும் எனக்கு அவங்க செய்யற உதவியும் ஞாபகத்துக்கு வந்து தொண்டையை அடைக்கும்.

'ஃபுட்பால் ஆடறவன் மூட்டைத் தூக்கறானே'னு நான் வேலை செய்யும்போது, சிலர் வருத்தப்படுவாங்க. ஆனா, வாழ்க்கை நடத்த எனக்கு வேற வழி தெரியல. எனக்கு ஒரு நல்ல வேலை தந்தா சந்தோஷமா இருக்கும். அந்தச் சந்தோஷத்துலயே சீனியர் டீம்ல இடம் பிடிச்சு, அடுத்த உலகக் கோப்பையில இந்தியா இடம்பிடிக்கப் பாடுபடுவேன். என் லட்சியமே ரொனால்டோ அடிக்கும் பந்தை இந்தியாவுக்காக தடுக்க வேண்டும் என்பதுதான்"' என்கிறார் அகஸ்டின்.

உலக அளவில் அகஸ்டினுக்குப் பிடித்த கோல் கீப்பர் ஜெர்மனியின் ஆலிவர்கான்தான். இருந்தாலும், பிரேசில் அணி உலகக் கோப்பையை ஜெயிக்க வேண்டும் என்பது இவரது விருப்பம்.

'குதிரை' எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அகஸ்டின். கால்பந்து வீரர்களின் வாழ்க்கையை பின்புலமாக கொண்ட 'குதிரை' ரேசில் வென்று திரும்ப நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

http://www.kumudam.com/magazine/Kumudam/20...-05-31/pg20.php

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.