Jump to content

கோடைகாலம் ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோடைகாலம் என்றாலே உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லித் தர வேண்டியதில்லை. அந்த எச்சரிக்கை உணர்விற்கு சில யோசனைகள் இங்கே:

இளநீர்

1. இளநீரில் இருப்பவை : சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து, வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன.

2. மருத்துவக் குணம் எப்படி?

தினமும் இளநீர் நம்மை இளமையாக வைத்திருக்கும். குறிப்பாக, கோடைகாலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்னபிற பொதுவான சத்துக்களும் உடலில் இருந்து வியர்வை மூலமாக வெளியேறி விடுவதால், உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித்துடிப்பு தளர்ந்து, தசைகள் இறுகுவது நடக்கும். இதற்கெல்லாம் முக்கியமான காரணம், உடலில் உள்ள உப்பு சுத்தமாக வெளியேறுவதுதான். இளநீரில் இருக்கின்ற உப்புச்சத்து, நம் உடலில் வெப்ப நிலையை சமச்சீராகப் பாதுகாப்பதோடு மட்டுமின்றி, உடலின் வெப்பநிலையை உள்வாங்கி, சரிவர வெளியே தள்ளுகிறது. இதனால் கோடையில் வரும் அவசர வேனல் பிடிப்பு, வேனல் அயர்ச்சி போன்ற தொந்தரவுகள் தொலைந்து போகிறது.

3. எப்படிச் சாப்பிடலாம்?

இளநீரை உடனடியாகக் குடித்துவிடுவதுதான் நல்லது. வாங்கி இதனை ஃபிரிட்ஜில் வைத்திருந்தோ அல்லது இரண்டு, மூன்று மணிநேரம் கழித்தோ குடிப்பது நல்லதல்ல. இளநீரின் மருத்துவக் குணம் மாறாமல் இருக்க வேண்டுமென்றால், அதனை வாங்கிய அரை மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். இதில் எதனையும் கலந்து குடிக்கக்கூடாது. சர்க்கரை நோயாளிகள் குறைவாகக் குடிக்கலாம். சிறுநீரகச் செயலிழப்பு நோயாளிகள் குடிக்கக்கூடாது. இதய நோயாளிகளுக்கு இளநீர் இதம்.

4. இளநீருக்கு மாற்று குளிர்பானமா?

குளிரூட்டப்பட்ட செயற்கை குளிர்பானங்களில் 'கார்பனேட்டட் வாட்டரும்', காற்றும்தான் செயற்கையாக அடைக்கப்படுகிறது. இதில் உடலுக்குத் தேவையற்ற கலோரிச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால், உடல் குண்டாகும். எலும்புகள் பலவீனமடையும். குடற்புண் உண்டாகும். இவையெல்லாம் தொடர்ந்து குடிப்பதில் உள்ள பக்க விளைவுகள்.

நீரின்றி அமையாது உடல்

1. தண்ணீரில் இருப்பவை : கோடையில் தண்ணீர் மிகவும் தரமான பொருள். ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கால்சியம், மினரல்கள், உப்புகள், தண்ணீரில் தரம் குறையாமல் இருப்பவை.

2. மருத்துவக் குணம் எப்படி?

நீரின்றி அமையாது உடலும், உடல் உறுப்புகளும். தண்ணீரின் தலையாய வேலையே வெப்பத்தை / வெப்பத் தாக்குதலை தன்னுடன் கொண்ட தாதுப்பொருட்களைக் கொண்டு தவறாமல் காப்பதுதான். கோடையில் தொடர்ந்து கடினமான வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள், இயந்திரங்களை இயக்குபவர்கள், நீண்ட தூரம் வாகனங்கள் ஓட்டும் டிரைவர்கள், 'ஷிப்ட்' முறையில் பணிபுரிபவர்கள் போன்றவர்களுக்கு, உடம்பில் தண்ணீரின் அளவு வெகுவாகக் குறைந்து சோர்ந்துவிடுவார்கள். தண்ணீரைக் குடித்தால் உடன் புத்துணர்ச்சி பெற்று, வேலைகளைச் செய்ய முடியும். நம் உடம்பின் செல்களும், திசுக்களும், சிறுநீரகமும் தண்ணீரால் புத்துணர்வு பெறுகின்றன. சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனை பெறலாம்.

3. எவ்வளவு குடிக்கலாம்?

தினசரி கோடையில் குறைந்தது 3_4 லிட்டர் வரை குடிக்கலாம். ஒரே நேரத்தில் நிறையக் குடிப்பதற்குப் பதிலாக, சிறிது சிறிதாகத் தொடர்ந்து குடித்துக் கொண்டே வரலாம். ஒரு நேரத்தில் அரை லிட்டர் வரை அதிகபட்சமாக குடிக்கலாம். சாப்பிட்ட பிறகு, ஒரேயடியாக நிறையத் தண்ணீரைக் குடிப்பது செரிமான சிக்கலை உண்டு பண்ணும். வயிறு நிறைய தண்ணீரைக் குடிப்பதும், உடனே படுப்பதும் தவறுதான். இவையெல்லாம் தண்ணீரில் நாம் செய்யும் தலையாயத் தவறுகள். கோடையில் இரவில் இடைவெளிகளில் தண்ணீரைக் குடிப்பது, நார்ச்சத்துடன் சேர்ந்து காலையில் மலச்சிக்கலைத் தீர்க்கும். மாலையில் மனச்சிக்கலைத் தீர்க்கும். பெரிய 'மீட்டிங்' நடக்கும் போது முதலில் தண்ணீரை வைத்திருப்பதற்கான காரணம், Mood Relaxant. அது மனப்பதற்றத்தைக் குறைக்கும், மூளையின் வேதிப்பொருளை ஒழுங்குபடுத்தும். தண்ணீர், ஓர் உயிர் நீர்.

இயற்கைப் பழச்சாறுகள்

அதிக நீருள்ள பழங்கள், திராட்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, தர்ப்பூசணி, போன்றவற்றில் வைட்டமின் சத்துக்கள் குறிப்பாக, எல்லா வைட்டமின்களும் உள்ளன. மற்ற எல்லாப் பழங்களையும் சாப்பிடலாம்.

வெள்ளரிப்பழம் _ வெள்ளரிப்பிஞ்சு: வெல்லுமா கோடையை?

1. வெள்ளரியில் நீர்ச்சத்துடன், மாவுச்சத்தும் அதிகம் இருக்கிறது. குறிப்பாக, வெள்ளரிப் பழத்தில் நிறைய 'கார்போஹைட்ரேட்டுகளும்', 'புரோட்டீனும்', கால்சியமும், தாது உப்புக்களும் உள்ளன. வெள்ளரிப் பிஞ்சைவிட, வெள்ளரிப் பழம் கோடைக்கு மிகவும் உகந்தது. ஏனெனில், வெள்ளரிப் பிஞ்சில் நீர்ச்சத்து மட்டும்தான் உள்ளது. வெள்ளரிப் பழத்தில் உள்ள தித்திப்பான சர்க்கரைச் சத்து உடலுக்கு உடனடியாக கலோரிகளைக் கொடுத்து, வெப்பத் தாக்கலிலிருந்து வெளியேற உதவுகிறது.

2. மருத்துவக் குணம் எப்படி?

கடுமையான கோடையில் தொடர்ந்து செய்த வேலையால், மயக்கமான நிலையில் இருப்பவர்கள் வெள்ளரிப் பழத்தை சாப்பிடலாம். இதிலிருக்கும், மாவும், சர்க்கரையும் நீரும் உடலுக்கு உடனே, புத்துணர்ச்சியைக் கொடுக்கும். ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் ஒரு துண்டு அல்லது இரண்டு துண்டுக்கு மேல் வெள்ளரிப்பழத்தைச் சாப்பிடக்கூடாது. வெள்ளரிப்பிஞ்சை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

3. எப்படிச் சாப்பிடலாம்?

வெள்ளரிப் பிஞ்சைக் கழுவி அப்படியே சாப்பிடலாம். மிளகு உப்பு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். வெள்ளரிப்பழச் சாற்றுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தும் குடிக்கலாம்; இல்லை சாதாரண சர்க்கரையோடு வெள்ளரிப் பழத்தையும் சாப்பிடலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் என அனைவரும் சாப்பிடலாம்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மட்டும் வெள்ளரிப்பழம் மிகவும் இனிப்பாக இருந்தால், சாப்பிடுவதில் அக்கறை தேவை. 4. வெள்ளரியின் வெவ்வேறு வகைகள்:

இப்போது நாட்டு வெள்ளரி, சீமை வெள்ளரி என்று பிஞ்சிலும் சரி, பழத்திலும் சரி வெவ்வேறு வகைகள் வருகின்றன. எல்லா வகையும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டவை தான். சத்துக்கள் இரண்டு வகைகளிலும் சரிசமம் தான். விருப்பப்படி சாப்பிடலாம்.

நுங்கு _ பதநீர் கோடைக்கு எவ்விதம் ஏற்றது?

1. எதில் என்ன சத்து?

பதநீரில் நீர்ச்சத்து அரைப்பாகமும், உப்புச்சத்தும், கால்சியம் சத்தும், தாதுப்பொருட்களின் (Minerals) சத்தும் உள்ளது. கோடையின் வெப்பத்திற்கும், கோடையில் ஏற்படும் உஷ்ண தாக்குதலுக்கு சத்துக்கள் மிகவும் அவசியம்.

நுங்கு ஆக மாறும் போது, அதில் நீர்ச்சத்து குறைந்து, கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட் என்ற மாவுப் பொருளின் அளவும், அடர்த்தியும் கூடி விடுகிறது. இது உடல் உஷ்ணத்திற்குச் சரியானக் குளிர்ச்சியைத் தரக்கூடிய காம்பினேஷன்.

இள நுங்காக இருக்கும்போது, நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். இது வெயிற்காலங்களில் வயிற்றுக்கோளாறைப் போக்கவும் பயன்படும். அல்சர், மூலம், குடற்புண் மற்றும் குடல் தொந்தரவு உஷ்ணத்தால் உண்டாகின்றவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நுங்கு முற்றும்போது அதாவது, கடினமாக ஆகும்போது சத்துக்கள் அப்படியே இருந்தாலும் சிறிது செரிமானம் ஆக நேரம் ஆகும். மற்றபடி இது செரிமானக் கோளாறுகளை எல்லாம் உண்டாக்கவே உண்டாக்காது.

2. மருத்துவக் குணங்கள்:

இரைப்பை, குடல், மலக்குடல், மூலம், இரத்த மூலம் சம்பந்தப்பட்ட வயிறு மற்றும் மலக்குடல் வியாதி உள்ளவர்களுக்கு, நுங்கு மிகச்சிறந்த மருத்துவப் பொருள். மிகப்பெரிய மருந்து. அதுவும் உஷ்ணத்தால் உண்டாகின்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு உண்டு.

3. யார் சாப்பிடலாம்?

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இதனை வயது வித்தியாசமின்றி சாப்பிடலாம். எந்த மருத்துவ முறையில் மருந்துகளைச் சாப்பிடுவராக இருந்தாலும், நுங்கை சாப்பிடலாம். பதநீரோ அல்லது நுங்கோ மருந்தை முறிக்கும் என்பது, தவறான கண்ணோட்டம்.

கோடையில் என்னென்ன உணவுகளை எப்படிச் சாப்பிடலாம்?

1. சாப்பிடக்கூடிய உணவுகள்:

நிறைய கீரைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை முடிந்தளவு சேர்த்துக் கொள்ளலாம். கோடையில் சைவ உணவுகளே உகந்தது. அசைவ உணவாக இருப்பின், கடல் உணவுகள் விரைவில் செரித்துவிடக்கூடிய தன்மை வாய்ந்தவை. மற்ற உணவுகளை ஒப்பிடும்போது, இந்த வகைகளைச் சாப்பிடலாம். குளிர்ச்சியான உணவுகளில் கீரைகளும், பழங்களும் முதல் இடத்தைப் பெறுகின்றன. மிகவும் இனிப்பானவற்றைக் குறைத்து சாப்பிடலாம். குறைந்த இனிப்பு உள்ளவைகளை அதிகம் சாப்பிடலாம். சர்க்கரை நோயுள்ளவர்கள் அதிக இனிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் பப்பாளி, சீத்தாப்பழம், எலுமிச்சை, தர்ப்பூசணி, அத்தி ஆகியவற்றை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை அதிகரிக்காது.

2. தவிர்க்க வேண்டியவை:

பச்சரிசி, நிலக்கடலை, தேங்காய், சேப்பங்கிழங்கு, உருளை போன்ற கிழங்கு வகைகள், வாழைக்காய், மரவள்ளி, கேரட் மற்றும் கட்டாயம் மதுவகைகளைத் தவிர்க்க வேண்டும். இனிப்பான வெல்லம், சர்க்கரை, தேன், ஜாம், வெண்ணெய், நெய், வனஸ்பதி, கோலா, Ice Cream, Cooldrinks, Cakes, கொழுப்பு மிகுந்த இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவை உகந்ததல்ல.

3. சேர்த்துக் கொள்ள வேண்டியவை:

அகத்திக்கீரை, தண்டுக்கீரை, முருங்கை, மனத்தக்காளி, டர்னிப், நூற்கோல், முள்ளங்கி, நீர்ப்பூசணி, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, பீன்ஸ், கத்தரி, வெண்டை, புடலங்காய், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், தக்காளி, பாகற்காய், வெங்காயம் நிறைய சேர்க்கலாம்.

பருப்பு வகைகளில் உளுந்து, பாசிப்பருப்பு, துவரம்பருப்பு, வறுத்த கடலை, புழுங்கல் அரிசி, கோதுமை, ராகி ஆகியவற்றை நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.

4. அறவே தவிர்க்க வேண்டியவை: கோடையில் அதிக எண்ணெய், காரம், மசாலா, அதிகம் வறுத்தது, உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கொழுப்பு முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஆவியில் வெந்த உணவுகள் உகந்தது. வறுத்த, எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகாது.

கோடையில் உடைகள்:

1. ஆள் பாதி, ஆடை பாதி என்பது போல, கோடையில் அரைக்கை, காட்டன் சட்டை போட்டுக் கொள்ளலாம். காட்டன் ஆடைகளையும், உள்ளாடைகளையும் பயன்படுத்தலாம். பாலியஸ்டர், நைலான் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.

கடும் கோடையில் வியர்வையை உறிஞ்சக்கூடிய காட்டன் ஆடைகளே மற்ற எல்லாவற்றையும் விட, உகந்ததாகக் கருதப்படுகிறது. சூரிய ஒளி ஒவ்வாமை அதாவது அலர்ஜி உள்ளவர்கள் தேவைக்கேற்ப ஆடைகளைப் பயன்படுத்தலாம்.

2. கோடையில் குளியல்:

ஒரு நாளைக்கு காலை, மாலை அல்லது இரவு, வேலைக்கு தகுந்தாற் போல குளிக்கலாம். வியர்வை நாற்றம் போகும். ஒரு நாளைக்கு மேல் ஒரு உடையைப் பயன்படுத்தக்கூடாது. கோடையில்

உடையால் தொற்றுகள் பரவும். சொறி, சிரங்கு, அம்மை, அக்கி போன்ற தொந்தரவுகள் வரும். தனித்தனி சோப்புகள், ஷாம்புகள், சீப்புகள், துண்டுகள், கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். தன் சுகாதாரம், பொது சுகாதாரம் பராமரிக்க வேண்டும். இதனால் நோய் வரும் முன்னர் காக்கவும், வந்த பின்னர் போக்கவும், பிறருக்குக் குறிப்பாகக் குழந்தைகளுக்குத் தொற்றாமலும் காக்கலாம்.

3. கோடையில் உறக்கம்:

கோடையில் உடம்பின் நீர்ச்சத்து கணிசமாகக் குறைந்துவிடுவதால், உடம்பு அடிக்கடி களைப்படையக்கூடும். இரவுகளில் ஆழ்ந்த உறக்கம் வரும். ஆனால், கடுமையானப் புழுக்கம் காரணமாகவும், வியர்வை காரணமாகவும் தூக்கம் தடைபடலாம். உறங்குகின்ற இடமே உஷ்ணமாகலாம். இதனைத் தவிர்க்க, நல்ல காற்றோட்டமுள்ள இடங்களில் உறங்க வேண்டும். இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, தளர்வான உடைகளைப் பயன்படுத்தலாம். கி/நீ யில் இருந்து கொண்டு அடிக்கடி வெளியே சென்று வியர்வையோடு உள்ளே நுழைபவர்களுக்குக் காற்றால் பரவக்கூடிய சுவாசத் தொற்றுகள் வரக்கூடும்.

A/c Temperature 25oநீக்குச் சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கும் கீழே குறைத்தால் மூக்கு, தொண்டை வறண்டு நுரையீரல் பிரச்னைகள் உருவாகும். கோடையில் உணவு, உடை, உறைவிடம் முக்கியம்.

http://www.kumudam.com/magazine/Health/200...6-05-15/pg2.php

Link to comment
Share on other sites

தம்பி உண்டியலான என்ன மருத்துவத்திற்கு வந்திட்டீர். ஆரோகரா! கோயில் உண்டியல் வருமானம் குறைஞ்சு போச்ச போலை! அது கிடக்க எனக்க கோடையிலை பிடிச்ச பானம் பியர் தான். அதுவும் இஞ்சை உள்ளுரிலை தாயரித்த ஏல் எண்டால் அது நல்லா சூட்டைக்குறைக்கும்!

அரோகரா!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவல் பகிர்விற்கு நன்றி ஜெயதேவன். :(

Link to comment
Share on other sites

அரோகரா அரோகரா என்ன அங்கிள் எல்லோரும் சேர்ந்து உங்களை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டார்களா

ஆனாலும் உங்களுக்கு நல்ல மூளை

நன்றி தங்கள் தகவலுக்கு மிகவும் பயனுள்ள தகவல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.