Jump to content

காணாமல் போய்விட்டதோர் ஈழத்து சிவாலயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில்

ஈழத் திருநாட்டின் புனிதம் மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் தென்னாவரம் தொண்டீஸ்வரம் சிவன் திருக்கோயிலும் ஒன்று. (இன்று காலத்தின் கோலத்தாலும், பிற சமய விரோதிகளின் சதியாலும் இத் திருக்கோயில் உருமாறி, பெயர் மாறி, உருத்தெரியாமல் ஆகியிருந்தாலும், இத் திருக்கோயிலைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது ஈழத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

sltemple.jpg

காலத்தால் முற்பட்ட இந்த அழகுத் திருக்கோயில் இன்று அழிந்துவிட்டாலும், இதனைப் பற்றி அறிந்து வைத்திருந்தால், ஏனைய ஈழத்து இந்துத் திருக்கோயில்களும் இதே நிலையை அடைந்து விடாமல் விழிப்புடன் பாதுகாத்துக்கொள்ள இயலும் என்பதே உண்மை.)

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில், ஈழத் திருநாட்டின் ஏனைய நான்கு ஈஸ்வரங்களைப் போலவே, காலத்தால் மிகவும் முற்பட்டது. இதன் ஆதிகாலத் திருக்கோயிலின் உருவாக்கம் பற்றி இன்று அறிய முடியவில்லை ஆயினும், இபின் பத்தூட்டா முதலிய பிற நாட்டு யாத்திரீகர்களும் வந்து, பார்த்து, வியந்து பாராட்டி, தமது வரலாற்று ஏடுகளில் எழுதி வைத்துச் செல்லுமளவுக்கு இத் திருக்கோயில் அழகிலும், செல்வாக்கிலும், தெய்வீகத்திலும் சிறந்து விளங்கியிருக்கின்றது.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம், அத் திருக்கோயில் சைவ, வைஷ்ணவ பேதங்களுக்கு இடமளிக்காமல், முழு இந்து மதத்தவர்க்கும் பொதுவாக விளங்குமாறு, சிவபெருமான், மகா விஷ்ணு ஆகிய இரு தெய்வங்களுக்கும் ஒரே வளாகத்துள்ளேயே கோயில்களைக் கொண்டு அமைந்திருந்தது என்பதாகும். ( இதேபோல், தமிழகத்தில் தில்லைச் சிதம்பரம் முதலான சில சிவன் திருக்கோயில்களில் மகா விஷ்ணுவுக்கும் ஆலயங்கள் அமைந்து, "ஹரியும் சிவனும் ஒண்ணு, இதை அறியாதவர் வாயில் மண்ணு" என்று காஞ்சிப் பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியதை மெய்ப்பிப்பனவாக அமைந்துள்ளன.)

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இத் திருக்கோயில், இலங்கைத் தீவின் தெற்கு முனைப்பகுதியில், மாத்தறை என்னும் கடலோர நகரத்தில் அமைந்திருந்தது.

இத் திருக்கோயில் தேவன்துறை கோயில், நாக ரீச நிலாக் கோயில் ( இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால், அவர் 'சந்திர மௌலீஸ்வரர்' என்னும் திருப்பெயரைக் கொண்டிருக்கின்றார். அதனாலேயே இப்பெயர்) முதலிய பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. சிங்கள மொழியில் இத்திருக்கோயில் தெவுந்தர தேவாலே என்று அழைக்கப்படுகின்றது.

மாத்தறைக் கடலோரத்தில் மிகவும் பரந்த இடத்தில் அமைந்திருந்த இத் திருக்கோயில் வளாகத்தில், சந்திர மௌலீஸ்வரர் என்னும் திருநாமங் கொண்ட சிவபெருமானுக்கும், தென்னாவரம் நயினார் என்று அழைக்கப்பட்ட மகா விஷ்ணுவுக்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன. அவற்றுடன் கூடவே, விநாயகப் பெருமான், முருகப்பெருமான், மகா லக்ஷ்மி தேவி, அம்மன், பத்தினித் தெய்வமான கண்ணகி அம்மன், மற்றும் பல பரிவார தேவதைகளுக்கும் திருக்கோயில்கள் அமைந்திருந்தன.

அத் திருக்கோயில்கள் யாவுமே, திராவிட - கேரள சிற்ப மற்றும் கட்டிடக்கலை முறைகளுக் கிணங்க, சிவாகம விதிகளுக்கு அமைய அமைக்கப்பட்டிருந்தன. எல்லாத் திருக்கோயில்களும் அதி உன்னதமான கருங்கல் சிற்ப வேலைப்பாடுகளுடனும், தங்க முலாம் பூசப்பட்ட பித்தளைக் கோபுரங்களுடனும் உயர்ந்து விளங்கின.

அவ்வாறு தங்க வண்ணக் கோபுரங்களுடன் இத்திருக்கோயில் கோபுரங்கள் பிரகாசமாக விளங்கியதால், கடல் மூலம் மாத்தறை மற்றும் காலித் துறைமுகங்களுக்குப் பயணம் செய்த மாலுமிகளின் பார்வையில் இத் திருக்கோயில் வளாகம் ஒரு தங்க நகரமாகக் காட்சியளித்ததாக வரலாற்று எழுத்தாளர்கள் எழுதியுள்ளார்கள்.

கிரேக்க கடலோடியான தொலமி என்பவர் வரைந்த இலங்கைத் தீவின் வரைபடத்தில் இந்த ஐந்து ஈஸ்வரங்களும் குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

ஆறாம் நூற்றாண்டில், தமிழகத்தைச் சேர்ந்த பல்லவ மன்னனான சிம்ம விஷ்ணுவின் ஆட்சிக் காலத்தில், இலங்கைத் தீவின் கரையோரப் பிரதேசங்கள் முழுவதுமே தமிழ் மன்னர்களின் ஆட்சியின்கீழ் இருந்தது. யாழ்ப்பாணத்தைத் தலைநகராகக்கொண்ட அந்தப் பிரதேசம் நாகநாடு என்று அழைக்கப்பட்டது. ( உ-ம்:நாகதீபம் திருக்கோயில் முதலியன).

அவர்களின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தீவின் கரையோரத்தில் முக்கியமான முனைகளில் அமைந்திருந்த இந்த ஐந்து ஈஸ்வரங்களும் மிகச் சிறந்த முறையில் அபிவிருத்தி அடைந்தன.

சிம்ம விஷ்ணுவின் பேரனாகிய முதலாம் நரசிம்ம வர்மன் என்ற பல்லவ மன்னன் இலங்கைத் தீவை ஆட்சி செய்தபோது, இதுபோன்ற மேலும் பல கருங்கற்கோயில்களைக் கட்டினான்.

மேலும், தமிழகத்தில் ஆட்சிசெய்த சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இத் திருக்கோயிலுக்குப் பெருமளவு தானங்களை அளித்ததுடன் பல திருப்பணிகளையும் செய்து சிறப்பித்தார்கள்.

தென்னாவரம் தொண்டீஸ்வரம் திருக்கோயில் மிகச் சிறந்த துறைமுக நகராகவும் விளங்கியது. வணிகர்களும், யாத்திரீகர்களும் கடல் மூலம் இத் துறைமுகத்துக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டதுடன் (முக்கியமான வணிகப்பொருட்கள்: முத்து, கறுவாப்பட்டை முதலிய வாசனைப் பொருட்கள்) சிவனையும், விஷ்ணுவையும் ஒருங்கே வழிபட்டுக் காணிக்கைகளைச் செலுத்திச் சென்றனர்.

அதன் காரணமாக இத் திருக்கோயில் பெரும் செல்வ வளம் நிறைந்ததாக விளங்கியது. தமிழகத்திலிருந்து யாத்திரீகர்கள் மாதோட்டம் (திருக்கேதீஸ்வரம்), புத்தளம் (முன்னேஸ்வரம்) முதலிய துறைமுக நகரங்கள் வழியாக அத்தலங்களில் அமைந்திருந்த ஏனைய ஈஸ்வரங்களில் விழிபட்டபின்னர், அவ்வழியாக கடல்மூலம் மாத்தறை தொண்டீஸ்வரம் துறைமுகத்துக்கு வருகை தந்து இறைவனை வழிபட்டுச் சென்றனர்.

1236 - 1270 ஆம் ஆண்டுக்காலத்தில், தம்பதேனியாவை ஆண்ட இரண்டாம் பராக்கிரமபாகு மற்றும் 1301 - 1326 ஆம் ஆண்டு ஆட்சி செய்த நான்காம் பராக்கிரமபாகு என்ற மன்னர்கள் இத் திருக்கோயிலுக்குப் பெருந்தொகையான தானங்களை வழங்கியதுடன் பல திருப்பணிகளையும் செய்தார்கள். மேலும் கோட்டை என்ற நகரத்திலிருந்து ஆட்சி செய்த ஏழாம் புவனேகபாகு என்ற மன்னன்.

இவன் ஓர் இந்து மன்னன், தனது அரசாணைகள் யாவையும் தமிழ் மொழியிலேயே கையொப்பமிட்டான். இத் திருக்கோயிலுக்குப் பலவித திருப்பணிகள் செய்து கோயிலை மேலும் அழகுபடுத்திச் சிறப்பித்தான்.

மொராக்கோ என்ற நாட்டைச் சேர்ந்த யாத்திரீகரான இபின் பத்தூட்டா என்பவர் பதினான்காம் நூற்றாண்டில் புத்தளம் வழியாக கடல்மூலம் இத்திருக்கோயிலுக்கு வந்து, இத்திருக்கோயிலின் அழகையும், புனிதத்துவத்தையும், அங்கே வாழ்ந்துவந்த பக்தர்கள், துறவிகள் மற்றும் இறைவன் சந்நிதியில் நடனமாடிய நூற்றுக்கணக்கான தேவ நடனப் பெண்களையும் பற்றி தமது பயண நூலில் அழகுற வர்ணித்துள்ளார்.

இவ்வாறு, பல நூற்றாண்டுக்காலம் மன்னர்களாலும், பக்தர்களாலும், பிற தேச யாத்திரீகர்களாலும் சிறப்பாகப் போற்றப்பட்ட இத் திருக்கோயில், இலங்கைத்தீவைக் கைப்பற்றிய அந்நிய ஆட்சியாளர்களாகிய போர்த்துகேயர்களால் முற்றிலுமாக இடித்து, அழித்துச் சூறையாடப்பட்டது.

போர்த்துக்கேயக் கடற்படைத் தளபதியான தாமஸ் டி சூசா என்பவனின் தலைமையில், பெருந்தொகையான போர்த்துகேய வீரர்கள் இத் திருக்கோயில்களையும், கோயில் வளாகம் முழுவதையும் 1588 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இடித்து அழித்ததுடன் கோயிலில் பணியாற்றிய பக்தர்கள், பூசகர்கள் முதலிய அனைவரையும் படுகொலை செய்து, திருக்கோயில்களில் நிறைந்திருந்த விலையுயர்ந்த திரவியங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தார்கள்.

திருக்கோயிலினுள்ளே பசுமாட்டை வெட்டி கோயிலின் புனிதத்துவத்தை இழிவுபடுத்தினார்கள்.

இத் திருக்கோயில்களின் கருங்கற்களைக் கொண்டு மாத்தறைக் கோட்டையைக் கட்டியெழுப்பினார்கள். அந்நாட்களுடன் இத்திருக்கோயில் தனது புனிதத்துவத்தையும், மகத்துவத்தையும் இழந்தது.

அதன்பின்னர், இந்தப் பிரதேசம் தமிழ் மக்களின் கைகளை விட்டு அகன்றதால், இத்திருக்கோயிலை மீண்டும் புதுப்பித்துக் கட்டித் திருப்பணி செய்து, அதன் பழைய மாட்சியை மீண்டும் நிலைநாட்ட யாருமே முன்வரவில்லை.

thodeswaramlingam.jpg

நீண்ட காலத்துக்குப் பின்னர், இருபதாம் நூற்றாண்டில், புதைபொருள் ஆராய்ச்சியாளர்களால் இத்திருக்கோயிலின் சிதைபாடுகளும், தெய்வத் திருவுருவச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டன. அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பொருட்களில், நான்கரை அடி உயரம் கொண்ட பூர்வீகமான சிவலிங்கமும், விநாயகர், முருகன், நந்தி, லக்ஷ்மிதேவி, துவார பாலகர்கள் முதலிய திருவுருவச் சிலைகளும், இருநூறுக்கும் மேற்பட்ட கருங்கற் தூண்களும், மகர தோரண வாயில்களும் அடங்கும். இப் பொருட்கள் யாவும் தற்போது பல பொருட்காட்சிச் சாலைகளில் உறங்குகின்றன.

இத் திருக்கோயில் அமைந்திருந்த வளாகத்தில் புத்த மத விகாரை அமைந்திருப்பதுடன், அவற்றின் ஒரு புறத்தில், சிங்கள பௌத்தமயமாக்கப்பட்ட விஷ்ணு தெய்வத்தின் கோயில் ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றது.

சிங்கள மக்கள் மகா விஷ்ணுவை 'சக்க தெய்யோ' என்று அழைத்து வணங்குகின்றார்கள். அவர் தமது கரத்தில் சக்கரம் வைத்திருப்பதால் அப்பெயர். அதேபோன்று, கணபதி என்று அழைக்கப்படும் விநாயகரை கண தெய்யோ என்றும், கண்ணகியை பத்தினி தெய்யோ என்றும் அழைக்கின்றார்கள்.

dondra%205.jpg.jpeg

இந்தக்கோயில் சிங்களக் கலாச்சார முறையில் ஒரு கூரைக் கோயிலாக அமைக்கப்பட்டிருக்கின்றது. கோயிலினுள்ளே காணப்படும் மகாவிஷ்ணுவின் திருவுருவம் நீல வண்ணத்தில், சிங்களக் கலாசார முறையில் அமைக்கப்பட்டிருப்பதுடன், கோயிலின் சுவர்களும் நீல வண்ணத்தில் காட்சியளிக்கின்றன.

சிங்கள பௌத்த மக்கள் இத்தெய்வத்தை உப்புல்வண்ண தெய்யோ என்று அழைத்து வணங்குகின்றார்கள்.

dondra%207.jpg.jpeg

79308866.jpg

76537981.jpg

மிஞ்சி இருக்கும் கல் தூண்கள்... பக்கத்தில் விகாரை

79308807.jpg

55764575.jpg

http://www.devinuwaravishnudevalaya.com/history.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவலுக்கு, நன்றிகள் நாதமுனி!

இங்கு Wollongong என்ற இடத்தில ஒரு சிவன்கோவில் அமைக்கப் பட்டுள்ளது! அதன் அருகே, விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இரண்டும் ஒரே வளாகத்தினுள் அமைந்துள்ளன!

இதில் என்ன ஆச்சரியம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?

அந்த சிவன்கோவில் லிங்கத்தின் பெயர் ' சந்திர மவுலீஸ்வரர்:!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவலுக்கு, நன்றிகள் நாதமுனி!

இங்கு Wollongong என்ற இடத்தில ஒரு சிவன்கோவில் அமைக்கப் பட்டுள்ளது! அதன் அருகே, விஷ்ணுவின் கோவிலும் உள்ளது. இரண்டும் ஒரே வளாகத்தினுள் அமைந்துள்ளன!

இதில் என்ன ஆச்சரியம் உள்ளது என்று நினைக்கிறீர்களா?

அந்த சிவன்கோவில் லிங்கத்தின் பெயர் ' சந்திர மவுலீஸ்வரர்:!

ஆச்சரியம் என்று எனக்குபடுவது..ஒரு காலத்தில் சிவபக்தர்கள்(சைவர்) ,விஷ்ணு பக்தர்கள்(வைணவம்) என்று அடிப்பட்டு மாண்டார்கள்.....இப்ப எல்லோரும் இந்துக்களாம் எண்டு ஒண்ணாயிருக்கிறாங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் என்று எனக்குபடுவது..ஒரு காலத்தில் சிவபக்தர்கள்(சைவர்) ,விஷ்ணு பக்தர்கள்(வைணவம்) என்று அடிப்பட்டு மாண்டார்கள்.....இப்ப எல்லோரும் இந்துக்களாம் எண்டு ஒண்ணாயிருக்கிறாங்கள்....

சைவர்களுக்கும், சமணர்களுக்குமிடையில் தான் அடிபாடுகள் அதிகம் நடந்துள்ளன, புத்தன்!

ஆனால், சமண மதம் (ஜைன மதம்) மிகவும் சிறந்த மதம்!

அதற்கு ஒரு நல்ல உதாரணமாகத் திகழ்பவர், திருவள்ளுவர்! அவர் வாழ்ந்த காலத்தில், அவரைப் பறையன் என்றும் அழைத்தார்கள்!

ஆனால், இன்று காலத்தை வென்று நிற்பது, திருக்குறள் மட்டுமே!

உண்மையில், வைஷ்ணவ சமையத்தை, வளர்த்தேடுதவர்களும், தமிழர்களே!

ஆண்டாள், இவர்களில் மிகவும் முக்கியமானவர். மிகவும் பிரபலமான ஆழ்வார்கள் பலர் தமிழர்களே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில், வைஷ்ணவ சமையத்தை, வளர்த்தேடுதவர்களும், தமிழர்களே!

ஆண்டாள், இவர்களில் மிகவும் முக்கியமானவர். மிகவும் பிரபலமான ஆழ்வார்கள் பலர் தமிழர்களே!

தமிழன் எந்த சமயத்தை வளர்க்கவில்லை ....எல்லா சமயத்தையும் வளர்த்தான்...வளர்க்கிறான்...தற்பொழுது இஸ்லாம்,கிறிஸ்தவம், பெளத்தம்.....இப்படி பல ...என்ன சொன்னாலும் சமயம் என்று வரும் பொழுது தமிழன் ஒரு தலை சிறந்த ஜனநாயகவாதி....:D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சரியம் என்று எனக்குபடுவது..ஒரு காலத்தில் சிவபக்தர்கள்(சைவர்) ,விஷ்ணு பக்தர்கள்(வைணவம்) என்று அடிப்பட்டு மாண்டார்கள்.....இப்ப எல்லோரும் இந்துக்களாம் எண்டு ஒண்ணாயிருக்கிறாங்கள்....

புங்கை, வந்தி உங்களுக்கு நன்றி .

புத்தன்,

மதத்தின் பெயரால் அடிபடுவது மனிதனுக்கு சகஜம்.

வேறு மதங்கள் இல்லாத காலத்தில் சைவம் எதிர் வைஷ்ணவம். வேறு மதங்கள், இந்தியாவினுள் நுழைந்த போது, வேறுபாடு களைந்து இந்துவாக எழுந்து தற்க்காத்துக்கொண்டது.

புத்தம் வந்ததும், விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக இந்து சமயத்தினுள் உள்வாங்க முயன்றது

இஸ்லாமியரிடையும் இரு பிரிவுகள், மோதல்கள்.

கிறிஸ்தவர் மோதல்கள்: Protestant, Church of England, Roman Catholicism.....

ஆக மனிதனுக்கு பக்தியும், சண்டையும், பொழுது போக்குமாக மதங்கள் விளங்குகின்றன போல் படுகின்றது.

Link to comment
Share on other sites

[size=4]நல்ல தகவலுக்கு, நன்றிகள் நாதமுனி![/size]

சிலுவைப் போரிலே லட்சக் கணக்கான ஐரோப்பியர்கள் மாண்டனர். இரண்டு உலக மகா யுத்தத்தில் கூட அவ்வளவு பேர் சாகவில்லை. எல்லா மததிட்குள்ளும் பிரிவுகள் சண்டைகள் உள்ளன. அழிவுகளும் நடந்து உள்ளது-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நாதமுனி. இந்த கோயிலைப்பற்றி கேள்விப்படவேயில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நாதமுனி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.