Jump to content

இன மானம் காக்க தம்முயிர் ஈர்ந்த புனிதர்களின் நினைவு வாரம் (நவம்பர் 21-27) !


Recommended Posts

[size=4]நவம்பர் 21 தொடக்கம் 27![/size]

[size=4]தேசவிடுதலைக்காக தமது இன்னுயிரை நீத்த உத்தமவீரர்களை நினைவுகூரும் புனித வாரம் . இலட்சியக்கனவுடன் துயில்கொள்ளும்அந்த தெய்வங்களை பூஜிப்பதற்கு எமக்கு கிடைத்துள்ள அற்புத தருணம். தமது இனத்தின் அடிமைச்சங்கிலியை தகர்த்தெறிவதற்காக உயிரையே காணிக்கையாக்கிய அந்த தியாக செம்மல்களை வணங்குவதற்கு கிடைத்துள்ள தூய வாரம்.[/size]

[size=4]ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளும் சிக்கிச்சீரழிந்து உரிமைகள் பறிக்கப்பட்ட வெறும் உடலங்களாக சிஙகளதேசத்தின் அடிமைகளாக வாழ்ந்த தமிழினத்தின் விடிவுக்காக ஆயுதம் தரித்து தாய்மண்ணுக்காக உயிர்துறந்த அஞ்சா நெஞ்சங்களையே இவ்வாரத்தில் நாம் நினைவு கூருகிறோம். தமது இனத்தின் விடிவே தமது இலட்சியம் என்ற கொள்கை வரித்துக்கொண்ட இந்த மாவீரர்கள் தமது மக்களையும் மண்ணையும் அவ்வளவுக்கு நேசித்தார்கள். தங்களது இறப்பின் ஊடாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தவேண்டும். அந்த வலியில் ஆக்கிரமிப்பாளன் எமது தேசத்தை விட்டகலவேண்டும் என்ற கொள்கையுடன் தேசத்துக்காக உயிர் நீத்தவர்கள்தான் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]அவர்கள் தங்களது வாழ்வை பற்றிக்கவலைப்படவில்லை. தங்களது ஆசா பாசங்களை பற்றி கவலைப்படவில்லை. தமக்கு விடுதலைவேண்டும் என்றுகூட ஆசைப்படவில்லை. அடுத்தகணம் உயிர்துறப்பதற்கு தயாராகி கந்தகசுமையுடன் எதிரியுடன் மோதத்துணிந்தவர்கள் தமக்கு விடுதலைவேண்டும் என்ற போராடவில்லை. தமது மண்ணுக்கும் மக்களுக்கும் விடுதலைவேண்டும் என்ற இலட்சியத்துடனேயே போராடினார்கள்.நெஞ்சிலே குண்டேற்று வீழ்ந்தார்கள். [/size]

[size=4]எமது தேசத்தின் ஆன்மாவையும் தேசியத்தின் உறுதியையும் இனத்தின் வெற்றியையும் இன்று பாரெங்கும் உள்ளவர்கள் உற்றுப்பார்த்து உறைந்து போயுள்ளார்கள் என்றால் அதற்கு காரணம் இந்த மாவீரர்கள். வீரம் செறிந்தது தமிழினம் என்று எட்டுத்திங்கும் பறைசாற்றிவிட்டு சென்றவர்கள் இவர்கள். எமது இனத்துக்கு ஒரு விடிவை சிங்களதேசம் வழங்க மறுப்பினும் சர்வதேசமும் அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எழுதாத விதியை தமது உயிரால் எழுதிச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் தமிழீழ தாகத்தையும் விடுதலைப்புலிகளையும் ஒற்றைச் சொற்களுக்குள் அடக்கிவிடமுடியாது என்ற உண்மையை உலகஅரங்கிலே இன்று இந்த மாவீரர்களின் இறப்பு எழுதிச்சென்றிருக்கிறது. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடி இறந்திருக்கிறார்கள் என்றால் அதனை எவருமே ஒரு கிள்ளுக்கீரையாக ஒதுக்கிவிடமுடியாது. ஒரு இனம் தனது நியாயமான உரிமைகளையும் அபிலாஷைகளையும் வேண்டி சத்தியத்தின்வழி நின்று போராடியது என்ற உண்மையை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும். அந்த இனத்தின் வேண்டுதலை நிறைவுசெய்யவேண்டும் என்ற அழுத்தத்தை ஏற்படுத்திச்சென்றவர்கள் இந்த மாவீரர்கள்.[/size]

[size=4]தமிழீழ விடுதலைப்போராட்டம் இன்று வித்தியாசமான பரிமாணத்தை எடுத்திருக்கிறது. இந்த மாவீரர்களின் மீது சத்தியம் செய்து அவர்களின் இலட்சியக்கனவுகளை அமைதிவழியில் சென்று அடைவதற்கான நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அல்லல்படும் எமது மக்களுக்கு அமைதிவேண்டும் என்றும் அவர்களுக்கு அவர்களது உரிமைகள் வேண்டும் என்பதே மாவீரர்கள் அவா. நிறைவேறாத அவர்களது ஆசையை நாங்கள் நிறைவேற்றவேண்டிய வரலாற்று பொறுப்பாளிகளாக நாங்கள் இங்கு நின்றுகெண்டிருக்கிறோம். விதைகுழியில் தூங்குகின்ற மாவீரச்செல்வங்களின் நெஞ்சிலே கனன்ற இலட்சிய நெருப்பு எமது நெஞ்சிலும் எரியவேண்டும். அவர்களை போல கழுத்திலே நஞ்சுடன் களத்தில் நின்று போராடவேண்டிய தேவை இன்று இல்லை. அவர்களது இலட்சிக்கனவை நாங்கள் பொறுப்பேற்று விடுதலைக்காக அவர்கள் அமைத்த உறுதியான பாதையில் பயணம்செய்தாலே, அவர்களின் கனவுக்கு உரமூட்டும் பாரிய பணியாக அமையும்.[/size]

[size=4]சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.[/size]

[size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்.[/size]

[size=4]-பகலவன்[/size]

http://www.tamilleader.com/mukiaya/7596--21-27-.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கனவுகளுடன் தூங்கும் இந்த உத்தமவீரர்களை பார்த்து, உங்கள் இலட்சியங்களை நிறைவேற்றிவிட்டோம் என்று கூறி கல்லறையையும் கசியவைப்போம். அதுவே எம் மாவீரச்செல்வங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கை. அந்த சத்திய வேள்வியை நிறைவேற்ற உறுதியுடன் பயணிப்போம்[/size].

உறுதி எடுத்துக்கொள்வோம்.

Link to comment
Share on other sites

[size=4]

சர்வதேசமும் உற்றுப்பார்க்க ஆரம்பித்திருக்கும் எமது போராட்டத்தின் நியாயங்களை இன்னும் தெளிவாக அவர்களுக்கு விளக்குவோம். மாவீரர்களின் துப்பாக்கிகளிலிருந்து குண்டுகள் பாய்ந்த வேகத்துடன் இந்த பணியை நாங்கள் முன்னெடுப்போம்.. குருதியில் தோய்ந்து சாம்பர் மேடுகளாக காட்சியளிக்கும் எங்கள் தாயகபூமியை மீண்டும் சிங்களத்திடமிருந்து மீட்டு சொர்க்கபூமியாக்கிக்கொள்வதற்கு உறுதியெடுப்போம்.
[/size]

[size=4]தொடர்ந்து சர்வதேசம் ஊடாக ஒரு அரசியல் தீர்வை பெற ஒற்றுமையாக பயணிப்போம். [/size]

[size=1]

[size=4]"தமிழர்களின் தாகம் தமிழீழ தாயகம்"[/size][/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]உறுதி எடுத்துஒற்றுமையாக பயணிப்போம்.[/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் நடந்து செல்லும், கரடு முரடான பாதையில், ஒரு மிகவும் முக்கியமான கால கட்டத்தில் நிற்கிறோம்!

இன்னும் ஒரு சில காலத்திற்கு நகர்த்தப் படவேண்டிய, நகர்வுகளிலேயே, எமது தலைவிதி தங்கியுள்ளது!

மாயை, தனது பல முகங்களை, இனித் தான் கடுமையாகக் காட்டும்!

அதனை அடையாளம் கண்டு, பயணிப்போம்!

Link to comment
Share on other sites

3911_350481391714097_1964048894_n.jpg

[size=4]மாவீரர் தமிழீழ மண்ணில் எழுதினரே மந்திரம்

அதை புலத் திசையாவும் மீட்டனரே

எம் எதிர்கால தலைமுறையினர்

மலை போன்ற உறுதி ஐயா உம்மிடம்

எங்கள் மனதெல்லாம் உம நினைவின் செம்தடம் .....[/size]

[size=5](முகநூல்) [/size]

Link to comment
Share on other sites

காலம் கனிந்து வரும் கார்த்திகையை மூட வந்த கார் மேகங்கள் விலகும்.

பல மதங்கள் கொண்டாடும் இந்த ஒளிமாதம் முழுவதும் ஒரு நாள் ஒரு தனி திருநாளாக மலரும்.

அன்று வரை ஒரே நோக்காக, ஒரே இனமாக போராடி தமிழீழம் அமைப்போம்.

Link to comment
Share on other sites

தமிழ் மக்களை கருத்தில் கொண்டு, சிங்களத்தை பொது எதிரியாக கொண்டு அனைவரும் ஒற்றுமையாக பயணிப்போம்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.