Jump to content

இந்தியா கசாப்பினைத் துாக்கிலிட்டுள்ளது


Recommended Posts

[size=4]2001 ஆம் ஆண்டு டெல்லி பார்லிமெண்டை தாக்கியவரை [/size] [size=4] தூக்கில் போட கேட்கிறார்கள் <_<[/size]

Link to comment
Share on other sites

  • Replies 68
  • Created
  • Last Reply

[size=4] தூக்கு மேடை ஏறும் முன்பு கசாப் கூறியது என்ன?

புனே: அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.

பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப் புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு தூக்கிலிடப்பட்டான். தூக்கிலிடும் முன்பு அவனின் கடைசி ஆசையைக் கேட்டதற்கு அப்படி எதுவும் இல்லை என்றான். ஆனால் தூக்கு மேடை ஏறும் முன்பு அவன் கூறுகையில், அல்லாஹ் மீது ஆணையாக மறுபடியும் இது போன்ற தவறை செய்ய மாட்டேன் என்று தெரிவி்த்துள்ளான்.

முன்னதாக கடந்த 12ம் தேதியே கசாபிடம் அவனது தூக்கு தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அவன் இந்த தகவலை தனது தாயிடம் தெரிவிக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளான்.

இந்நிலையில் கசாபின் தூக்கு குறித்து எழுத்தாளர் சோ கூறுகையில்,

தீவிரவாதி கசாபை தூக்கிலிட்டது சரி தான். இது அவசியம் என்று நினைக்கிறேன். சில கொடூர குற்றங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும். குற்றங்களுக்கு சரியான தண்டனை அளிக்காத சமூகம் கட்டுப்பாட்டை இழக்கும். என்னைப் பொறுத்தவரை கசாபை தூக்கிலிட்டது சரியே. இந்த தூக்கு தண்டனை ரகியமாக வைக்கப்பட்டது என்று நான் நினைக்கவில்லை. இதில் ரகசியம் இருப்பதாகவும் தெரியவில்லை என்றார்.

தமிழர் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன் கூறுகையில்,

தனது உறுப்பு நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித நேயத்திற்கு எதிரானது.

காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது. அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில் வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது.

மரண தண்டனை உலகம் முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில் இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.

கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலி: தூக்கு கண் துடைப்பா?

புனே: தீவிரவாதி கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அவனை தூக்கிலிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது வெறும் கண்துடைப்பு என்றும் தகவல் கள் வெளியாகி வருகின்றன.

26/11 தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனேவில் உள்ள ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான். அவனை தூக்கிலிடும் செய்தி பரம ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் இன்று காலை கசாப் தூக்கு செய்தி கேட்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இந்நிலையில் கசாப் டெங்கு காய்ச்சலுக்கு பலியானதாகவும், அதை மறைத்து அவனை தூக்கிலிட்டுவிட்டதாக தெரிவிப்பது வெறும் கண்துடைப்பே என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தகவல் உண்மை என்பது போல கசாபை தூக்கிலிட்ட கையோடு சிறைக்குள்ளேயே அவனது உடலை புதைத்துவிட்டனர்.

இது குறித்து மக்கள் டுவிட்டரில் கூறியிருப்பதைப் பார்ப்போம்,

1. கசாபுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தகவல் வெளியாகியது. உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தூக்கிலிட இந்திய சட்டம் அனுமதிக்கிறதா?

2. கசாப் டெங்குவால் இறந்தானா? அரசின் அதிவேக நடவடிக்கை அதை மறைக்கத் தானா?

3. கசாப் டெங்குவால் இறந்திருக்கக்கூடும். ஆனால் அரசோ அவனைத் தூக்கிலிட்டதாகக் கூறுகிறது.

4. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கசாபுக்கு டெங்கு காய்ச்சல் வந்தது. கசாப் டெங்குவால் இறந்தானா அல்லது அரசு தூக்கிலிட்டதா?

கசாப் டெங்கு காய்ச்சலால் அவதிப்படுவதாக அண்மையில் ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால் அவனுக்கு சாதாரண காய்ச்சல் தான் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே கசாப்தூக்கிலிடப்பட்டிருந்தால் அவனது உடலை புகைப்படம் எடுத்து ஏன் வெளியிடவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

கஸாப் தூக்கால், சரப்ஜித் சிங் கருணை மனுவை பாக் அதிபர் நிராகரிக்க வாய்ப்பு!

டெல்லி: அஜ்மல் கஸாப் தூக்கிடப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய மரண தண்டனைக் கைதி சரப்ஜித் சிங்கின் கருணை மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக இஸ்லாபாத் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1990-ம் ஆண்டு பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக இந்தியாவைச் சேர்ந்த சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்குள் ஊடுருவி உளவு பார்த்ததாகவும், குண்டு வெடிப்புக்கு சதி வேலை செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்.

ஆனால் குடிபோதையில் வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்துவிட்டேன் என்பதுதான் சரப்ஜித் சிங்கின் வாதம். பொய்க்குற்றச்சாட்டின் கீழ் சரப்ஜித்சிங் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது என்கின்றனர் அவரது உறவினர்கள்.

கடந்த 21 ஆண்டுகளாக சரப்ஜித் சிங் பாகிஸ்தான் சிறையில் இருந்து வருகிறார். தன்னை தூக்குத் தண்டனையிலிருந்து விடுவிக்குமாறு சரப்ஜித் சிங், பாக் அதிபர் சர்தாரிக்கு சமீபத்தில் கருணை மனு சமர்ப்பித்துள்ளார்.

இந்த மனு அதிபரின் பரிசீலனையில் இருப்பதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறியிருந்தன. இந்த நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியான அஜ்மல் கஸாபை இன்று காலை தூக்கில் போட்டுவிட்டது இந்தியா.

இது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவுக்கு எதிராக அமைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கஸாபை தூக்கிலிட்டதால், இப்போது சரப்ஜித் சிங்கின் கருணை மனுவை அதிபர் சர்தாரி நிராகரித்துவிட வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.[/size]

http://tamil.oneindia.in

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வி.புலிகள் நிழல் அரசை நிகழ்த்தி பல சமூக விரோதிகளை திருத்துவதற்கான இடம் (பள்ளி) அவர்களால் நடாத்தப்பட்டுள்ளது. தேசதுரோகிகள் (அரசுக்கு காட்டிக்கொடுத்தோர்) மரண தண்டனைக்கு உள்ளானார்கள்.திருந்துவதற்கான சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டும் திருந்தாதவர்கள் சமூகத்துக்குள் திருப்பி அனுப்பப்பட முடியாது.

உலகின் சனநாயக நாடாக மதிக்கப்படும் அமெரிக்காவின் ரெக்சஸில் வருடத்துக்கு கொல்லப்படும் கைதிகளின் எண்ணிக்கை கீழே

http://www.deathpena...and-region-1976

ஏன் இவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால் சமூகத்துக்குள் திருப்பி விடப்பட்டால் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என்பதால் ஆகும்.

போன வாரம் பிரான்சில் நடந்தது

மனைவியை பலமாக தாக்கியவருக்கு 4 மாதம் சிறைத்தண்டனை கிடைத்தது.

அவர் வெளியில் வந்து

தனது இரு பிள்ளைகளைக்கொன்று (ஐந்து வயது மற்றும் சில மாதங்கள்)

ஒன்றை சாதாரண குளிர்பெட்டிக்குள்ளும்

மற்றையதை அதி கூடிய குளிர்ப்பெட்டிக்குள்ளும் வைத்துவிட்டு மனைவியையும் கொன்று குளிக்கும் தெதாட்டிடிக்குள் போட்டுவிட்டு போய் விட்டார். ஆளைத்தேடுகிறார்கள். (துனிசியாவைச்சேர்ந்தவர்)

எனதுது கேள்வி என்னவென்றால்

இனி பிடித்து இவருக்கு 40 மாத தண்டனையா?

அல்லது வெடியா தீர்வு...........???

Link to comment
Share on other sites

பக்கிஸ்த்தானிய பஞ்சாப் மாநிலத்தில் ஃபரிட்கொட் என்னும் கிராமத்தில் பிறந்த அஜ்மல் கசாப் 2006 நவம்பர் 26-ம் திகதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா என்னும் பக்கிஸ்தானிய தீவிரவாத அமைப்பினர் நடாத்திய துணீகரத் தாக்குதலில் பங்க்கேற்ற பத்துப் பேரில் தப்பிய ஒரேஒருவராகும். அஜ்மல் கசாம் 21/11/2012 காலை இந்திய நேரப்படி 7.30இற்கு புனேயில் உள்ள யெர்வாடாச் சிறைச்சாலையில் இரகசியமாகத் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டான்.

கசாப்புக்கு தூக்கு . இந்திராகாந்தி தன் பாதுகாவலர் களால் சுட்டுக் கொள்ளப் பட்ட போது , இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான சீக்கியர்கள் , படுகொலை செய்யப் பட்டனரே , என்ன தண்டனை அந்தக் கொலை காரர்களுக்கு ? "

Link to comment
Share on other sites

[size=4]கசாப் பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும். [/size]

இந்த இந்திய மொடேன் காந்திகளின் மனநிலை இப்படியிருக்க, இலங்கையில் தமிழர்களை இந்திய இராணுவம் கொலை செய்தது என்று கத்தி எந்த வடக்கு அரசியல் வாதியின் காதுகளில் அது கேட்கும்?

Link to comment
Share on other sites

[size=5]கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்[/size]

[size=4]பாகிஸ்தான் ஊடகங்களோ இது குறித்து அவ்வளவாக செய்தி வெளியிடவில்லை. பாகிஸ்தானின் முன்னணி செய்தி சேனலான ஜியோ டிவியின் இணையதளத்தில் கசாபை தீவிரவாதி என்று குறிப்பிடாமல் மும்பை தாக்குதல் கன்மேனை இந்தியா தூக்கிலிட்டது என்று செய்தி வெளியாகியுள்ளது.[/size]

[size=4]“அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டான்: இந்திய ஊடகங்கள்” என்று பாகிஸ்தான் நாளிதழான டான் செய்தி வெளியிட்டுள்ளது. [/size]

[size=4]மும்பை தீவிரவாத வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகமது அஜ்மல் அமிர் கசாபின் கருணை மனுவை அந்நாட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததையடுத்து அவன் இன்று காலை இந்திய சிறையில் தூக்கிலிடப்பட்டான் என்று டான் செய்திகள் தெரிவிக்கின்றன.[/size]

[size=4]தி நியூஸ் இன்டர்நேஷனலில், இந்தியாவில் அஜ்மல் கசாப் சாகும்வரை தூக்கிலிடப்பட்டான் என்று கூறப்பட்டுள்ளது.[/size]

[size=4]தி நேஷன் இணையதளத்தில் முக்கியத்துவம் இல்லாத இடத்தில் மும்பை தாக்குதல் கன்மேன் கசாப் தூக்கிலிடப்பட்டான் என்ற செய்தி உள்ளது. [/size]

[size=4]தி டெய்லி டைம்ஸ் தனது இணையதளத்தில் இது குறித்து எந்த முக்கியத்துவம் வாயந்த செய்தியையும் வெளியிடவில்லை. [/size]

[size=4]பாகிஸ்தானின் அதிகாரப்பூரவ ஊடகமான பிடிவியின் இணையதளத்தில் கசாப் தூக்கு குறித்து ஒரு செய்தி கூட இல்லை.[/size]

[size=4]பிபிசியில் மும்பை தாக்குதல் கன்மேன் தூக்கிலிடப்பட்டான் என்பது தான் அதிகம் ஷேர் செய்யப்பட்ட செய்தி ஆகும். இன்று நண்பகல் வரை வாஷிங்டன் போஸ்ட் மற்றும் ஹஃப்பிங்டன் போஸ்ட்டில் கசாப் பற்றி ஒரு செய்தி கூட இல்லை. மேலும் நியூயார்க் டைம்ஸ் காலை 11.30 மணிக்கு தான் கசாப் தூக்கு பற்றி ஒரேயொரு செய்தி வெளியிட்டுள்ளது.[/size]

[size=4]பாகிஸ்தான் தீவிரவாதியான கசாப் ஒரு ஹீரோ என்றும், அவரது மரணம் மேலும் பல தாக்குதல்களை நடத்த ஊக்குவிக்கும் என்றும் லஷக்ர் இ தொய்பா அமைப்பு தெரிவித்துள்ளது.[/size]

[size=4]அல்லாஹ் மீது ஆணையாக, இது போன்ற தவறை நான் மறுபடியும் செய்ய மாட்டேன் என்பது தான் கசாப் சாகும் முன்பு கூறிய வார்த்தைகள்.[/size]

http://www.alaikal.com/news/?p=117530

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கசாப் தூக்கும், பாகிஸ்தான் ஊடகங்களும்

அடக்கி வாசிக்கின்றார்கள்..........பின்விளைவு பயங்கரம்....இந்தியன் சட்டரீதியாக ஒரு பாகிஸ்தானியை தூக்கில் போட்டது அவர்களுக்கு வரலாற்றுரீதியான கறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரையோ போட்டு போட்டார்கள் சரி ஓக்கே.. பதில் நடவடிக்கை இன்னும் காணோமப்பா.. சரி விரைவில் எடுப்பார்கள் என்று நம்புவம் உலகத்தின் மக்கள் தொகை குறைஞ்சா சந்தோசம் தான் :icon_idea:

Link to comment
Share on other sites

யாரையோ போட்டு போட்டார்கள் சரி ஓக்கே.. பதில் நடவடிக்கை இன்னும் காணோமப்பா.. சரி விரைவில் எடுப்பார்கள் என்று நம்புவம் உலகத்தின் மக்கள் தொகை குறைஞ்சா சந்தோசம் தான் :icon_idea:

[size=4]அடுத்த முறை பெரியளவில் தாக்குதல் நடக்கலாம் என்கிறீர்களா?? :rolleyes:[/size]

Link to comment
Share on other sites

ஆசியாவின் வல்லரசு இந்தியா என்பது 10 பேர் ஆயுதங்களுடனும் GPS உடனும் இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பையில் தாக்குதல் நடத்துதல் என்பதாகும்.

Link to comment
Share on other sites

அஜ்மல் கசாப், 21, என்ற பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.பாதுகாப்பு மிக்க, மும்பை, ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, கசாப்புக்கு, 2010 மே, 6ல், செஷன்ஸ் கோர்ட், தூக்கு தண்டனை விதித்தது. அந்த தண்டனையை, மும்பை உயர் நீதிமன்றம், 2011 பிப்ரவரி, 21ல் உறுதி செய்தது. உச்ச நீதிமன்றம், கசாப்பை தூக்கிலிட, இந்த ஆண்டு, ஆகஸ்ட், 29ல் பச்சைக்கொடி காட்டியது."உலகின் சிறந்த ஜனநாயக நாடு' என்பதை பறைசாற்றும் விதமாக, கொலையாளியாக இருந்த போதிலும், பிடித்த உடனே கொல்லாமல், சிறையில் அடைத்து, கசாப்புக்கு அனைத்து வாய்ப்புகள், வசதிகள் வழங்கப்பட்டன.

இது தினமலரில் வந்த ஒரு செய்தியின் ஒரு பகுதி

Link to comment
Share on other sites

நல்ல செய்தி. இவனுக்கு எல்லாம் சீர்திருத்தம் சரிவராது. மரணதண்டனையை நிச்சயமாக ஆதரிக்கிறேன். மக்களின் வரிப்பணத்தில் சிறையில் இருந்து திண்டு கொழுப்பதை விட சாவது மேல். தீவிரவாதிகளை மன்னித்து வெளியிலே விட்டால் இன்னும் பெரியலேவலிலே அடுத்த தாக்குதலை திட்டமிடுவார்கள். ஆயுள் கைதியாக உள்ளே வைத்திருந்தால், வேறு பிரபலங்களை, விமானங்களைப் பணயமாகக் கடத்தி பேரம் பேசுவார்கள். இவர்கள் உயிரோட இருந்தும் என்ன பலன்.

Link to comment
Share on other sites

மும்பை: புதன்கிழமை அஜ்மல் கசாபுக்கு முக்கிய நாளாக அமைந்து விட்டது. பயங்கரவாத தாக்குதலை நடத்த கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதன் கிழமையன்று மும்பை வந்த கசாப்புக்கு , அதே புதன் அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு 26ம் தேதி பயங்கரவாத தாக்குதலில் கசாப் உள்ளிட்ட பயங்கரவாத குழுவினர் ஈடுபட்டனர். அன்று இரவே கசாப் கைது செய்யப்பட்டான்.

Dinamalar

புதுடில்லி: கசாப் தூக்கு நிறைவேற்றப்பட்டது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில், கசாப் தூக்கில் போடுவதை மத்திய உள்துறை அமைச்சகம் ரகசியமாக வைத்திருந்தது. காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு கூட தகவல் தெரிவிக்கவிப்படவில்லை. நானும் கசாப் தூக்கு குறித்து சோனியாவிடம் கூறவில்லை. தூக்கு தண்டனை குறித்து சிறிய குழுவுக்கு தான் தெரியும் என கூறினார்.

புதுடில்லி: கசாப் தூக்கு தண்டனை குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், கசாபுக்கு அதிகபட்ச தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு சோக சகாப்தம் (மும்பை தாக்குதல்) முடிவுக்கு வந்துள்ளது. மும்பை தாக்குதலில் பலியான 166 பேரின் உயிர்களை திரும்ப கொண்டு வர முடியாது. ஆனால் கசாப் தண்டனை மூலம் அவர்களுக்கு திருப்தி கிடைக்கலாம் என கூறினா

Link to comment
Share on other sites

அட நம்ம ஜனநாஜக வாதிகள் நல்லா பேசுறாங்க.

அதே போன்று தான் நாங்க செய்வதும் எங்க போராட்டமும் இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் பயங்கர வாதமா தெரிஞ்சிருக்கும். அவங்க பத்திரிகைகள் அப்பிடி பிரச்சாரம் செய்திருக்கும். எங்கட அழிவும் சரியா பட்டிருக்கும் அவங்களுக்கு

Link to comment
Share on other sites

அஜ்மல் கசாப், பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பரித்கோட் என்ற கிராமத்தில் 1987, செப்.,13ம் தேதி பிறந்தான். முழுப்பெயர் முகமது அஜ்மல் அமீர் கசாப். பெயர் குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பல பெயர்களில் இவன் அழைக்கப்பட்டான். பெற்றோர் ஷாபன் கசாப், நூர் இலாஹி. தந்தை பானி பூரி வியாபாரி. கசாபுக்கு இரண்டு சகோதரர்களும், இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.2005ம் ஆண்டு, தந்தையுடன் சண்டையிட்டு, வீட்டை விட்டு வெளியேறினான். லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தில் சேர்ந்தான். இவனுடன், 24 பேருக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதலில் உளவியல் ரீதியான பயிற்சி அளிக்கப்பட்டு, பின், படிப்படியாக நவீன ஆயுதங்களை கையாளுதல், இலக்கை தாக்குதல், கடலில் பயணம் செய்தல், நீச்சல், பாய்மர படகை இயக்குதல் போன்ற பயிற்சிகள் தரப்பட்டன.பயிற்சி பெற்ற குழுவிலிருந்து, சிறந்த 10 பேரை தேர்வு செய்து, மும்பை தாக்குதலை நடத்தினர். இதற்காக கசாப்புக்கு, 1.5 லட்சம் ரூபாய்

கொடுக்கப்பட்டது.

புனே: பயங்கரவாதி, அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டவருக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. தூக்கிலிட்டவர் யார் என்பது பற்றிய தகவல், மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதி அஜ்மல் கசாப், தூக்கிலிடப்பட்டது குறித்து, மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, எரவாடா சிறை வட்டாரங்கள் கூறியதாவது:கசாப், தூக்கு நடவடிக்கைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. இந்த நடவடிக்கைக்கு, "ஆபரேஷன்-எக்ஸ்' என, பெயரிடப்பட்டிருந்தது. தூக்கிலிடுவதற்காக, கசாப்பை, மும்பையிலிருந்து, புனேக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான, தகவல் பரிமாற்றங்களை, மகாராஷ்டிரா போலீசார், ரகசியமாக கையாண்டனர்.எந்த சூழ்நிலையிலும், தங்களின் தகவல் பரிமாற்றத்தின் போது, கசாப்பின் பெயரை, அவர்கள் குறிப்பிடவில்லை. "சி-7096' என்ற எண்ணை, ரகசிய குறியீடாக பயன்படுத்தினர். கசாப்பை, தூக்கிலிட்டவரை பற்றிய விவரங்களும், ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. தூக்கிலிட்டவர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.தூக்கிலிடப்படுவதற்கு, சில நிமிடங்களுக்கு முன் தான், "நாம், கசாப்பை தூக்கிலிடப் போகிறோம்' என்பது, சம்பந்தப்பட்ட நபருக்கு தெரியும். கசாப்பை தூக்கிலிடுவதற்காக, அவருக்கு, 5,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.மீரட் மத்திய சிறையில், கைதிகளை தூக்கிலிடும் பணியை மேற்கொண்டிருந்த மானு சிங் என்பவர், "கசாப்பை தூக்கிலிட, ஆர்வமாக இருக்கிறேன்.

இதற்காக, சம்பளம் எதுவும் வாங்கப் போவது இல்லை' என்றும் தெரிவித்திருந்தார். ஆனால், அவரது ஆசை நிறைவேறவில்லை. கடந்தாண்டு, மே மாதம், மானு சிங் இறந்து விட்டார்.அதேபோல், மேலும் பலர், தாங்களாகவே முன் வந்து, கசாப்பை தூக்கிலிட விருப்பம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு, எரவாடா சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamalar

Link to comment
Share on other sites

தனிப்பட்ட ரீதியில் மரண தண்டனையை ஆதரிக்கின்றேன். பொதுவான குற்றம் செய்கின்றவர்களுக்கு சிறைத் தண்டனை என்பது சீர்திருந்த உதவலாம் (சிறை அமைப்பும், அரசுகளின் பொறுப்பணர்வையும் பொறுத்தது. இலங்கைச் சிறையில் இருந்து வெளிவரும் குற்றவாளி முன்னை விட மோசமான குற்றவாளியாகவே வெளிவருவது பொதுவான அம்சம்). ஆனால் திட்டமிட்டு பயங்கர குற்றம் செய்பவர்களுக்கு முதலில் சில வருட கடூழியச் சிறையும் பின் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டனையும் தான் மிகச் சிறந்த தண்டனை.

குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்கின்ற மிருகங்களுக்கு, போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுகின்ற மற்றும் உற்பத்தி செய்கின்றவர்களுக்கு, மக்களின் பணத்தை / வரிப்பணத்தை சுருட்டி வைத்து இருப்பவர்களுக்கு கடூழியச் சிறையும், கொடுமையான மரண தண்டனையும் தான் குறைந்த பட்ச தண்டனைகளாக அறிவிக்க வேண்டும். Period.

கசாப் என்ன தவறு செய்தான்?

Link to comment
Share on other sites

மரணதண்டனையுடன் எனக்கு உடன்பாடில்லை ,சிலவேளை யோசிக்க ஆயுள்தண்டனை மரண தண்டனையை விட மோசம் போலவும் இருக்கும் .

மாநிலத்திற்கு மாநிலம் , நாட்டுக்கு நாடு சட்டங்களை அவனவன் இஸ்டத்திற்கு இயற்றி வைத்திருக்கின்றான் .இதில் இந்தியாவை வந்து நோண்டுவதில் பயனேதுமில்லை .எத்தனை அமெரிக்க மரணதண்டனைகள் பார்த்துவிட்டோம் .சதாமையை live ஒளிபரப்பி தூக்கிய படுபாவிகள் அவர்கள் .

-------

Link to comment
Share on other sites

[size=4]சிங்களவர்களை தான் இதற்குள் இழுக்கவேண்டும். 1956 ஆம் ஆண்டிலிருந்து அண்மையில் கனடாவில் இருந்து போனவரின் ஆணுறுப்பையே வெட்டி மரண தண்டனை தருகிறார்கள். [/size]

Link to comment
Share on other sites

.எத்தனை அமெரிக்க மரணதண்டனைகள் பார்த்துவிட்டோம் .சதாமையை live ஒளிபரப்பி தூக்கிய படுபாவிகள் அவர்கள் .

அமெரிக்கா அல்ல தூக்கியது. ஒளிப்படம் கை தொலைபேசியில் திருட்டுதனமாக எடுக்கப்பட்டது. அரச சம்பந்தம் இல்லாதது.

தூக்கு போன்ற சிலவற்றில் அமெரிக்கா மற்றைய முன்னேறிய நாடுகளுடன் ஒத்துழைப்பதில்லை.

Link to comment
Share on other sites

கசாப் என்ன தவறு செய்தான்?

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

கசாப் என்ன தவறு செய்தான்?

கசாப்பும் அவனது 9 பாகிஸ்தானிய சகாக்களும் இந்தியா, மும்பாய்க்குள் ஆயுதங்களுடன் ஊடுருவி 160க்கும் மேற்பட்ட இந்திய பொதுமக்களை சுட்டுக்கொன்றார்கள். பின்னர் இந்திய பொலிஸ்/இராணுவத்துடனான மோதலில் ஏனைய 9 சகாக்களும் கொல்லப்பட கசாப் உயிருடன் பிடிபட்டார். இந்தியா தன்னுடைய நாட்டு மக்களை கொன்ற கசாப்புக்கு தூக்கு தண்டனை வழங்கியது.

Link to comment
Share on other sites

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

இதுதான் எனது உணர்வும் ...........

Link to comment
Share on other sites

புதுடில்லி: சிறிது நாள் அமைதிக்குப்பின் மத்திய அரசுக்கு எதிரான தனது புகார்களை மீண்டும் கூறத்துவங்கியுள்ளார் சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மும்பை தாக்குதல் சம்பவம் நடந்து 4வது ஆண்டு நினைவு தினம் இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்படவுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப் நேற்று தூக்கிலிடப்பட்டான். இந்நிலையில், சமூக சேவகரான அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு மீது புதுப்புகார்களை கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது, தங்களது உயிரையும் துச்சமாக மதித்து பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிய கமாண்டோ படையினரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது அவரது புகாராகும்.

இந்த சந்திப்பின் போது, அவருடன் மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது, பயங்கரவாதிகளுடன் போராடிய தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த கமாண்டோ லான்ஸ் நாயக் சுரேந்திர சிங் என்பவரும் உடனிருந்தார். சம்பவத்தின் போது, சுரேந்தர் தனது கேட்கும் திறனை இழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதுவரை மத்திய அரசு தனக்கான உதவிகள் எதையும் வழங்கவில்லை என அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது காயமடைந்த 11 கமாண்டோக்களுக்கு வழங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதி மட்டுமே தனக்கு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கெஜ்ரிவால் மற்றும் சுரேந்தரின் புகாரை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி, சுரேந்தருக்கு ரூ. 31 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், பணியின் போது காயமடைந்ததால் அவருக்கு மாதம் ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்து கேட்கும் திறனை இழந்த சுரேந்தர் பின்னர் ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர் பணியில் சேர்ந்து 15 ஆண்டுகள் ஆகாததால் அவருக்கு ஓய்வுக்குப்பின்னான பணிக்கொடைகள் வழங்க முடியாது என இந்திய ராணுவம் தெரிவித்து விட்டது. ஆனால் மத்திய அரசோ சுரேந்தருக்கு ரூ. 31 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. சுரேந்தர் தனக்கு அரசு ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கியுள்ளதாக கூறுகிறார். எது எப்படியாகிலும்மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது மக்களுக்காக போராடியவர்கள் மதிக்கப்படவேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

கெஜ்ரிவால் கூறுகையில், சுரேந்திர சிங்கிற்கு மத்திய அரசு ரூ.31 லட்சம் கொடுத்திருப்பதாக சொல்கிறது. ரூ.31 லட்சம் கொடுத்தது காயமடைந்த 11 பேருக்கும் தான், சுரேந்திர சிங்கிற்கு மட்டும் அல்ல. அவர் பெற்றது வெறும் ரூ.2.5 லட்சம் தான். உண்மையில் சுரேந்தர் மாதம் ரூ.25 ஆயிரம் பெறுகிறார் என்பதை இந்த அரசு நிரூபிக்க தயாரா...? மீறி நிரூபிக்க தவறினால் பதவியில் இருந்து விலக தயாரா என்று கேள்வியுள்ளார். மேலும் தேசத்தை காப்பாற்ற போராடிய வீரர்களுக்கே இந்த நிலைமை என்றும், இதன்மூலம் இந்த அரசு தேசத்தை‌ தவறான பாதைக்கு அழைத்து செல்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Dinamalar

Link to comment
Share on other sites

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

எனது அபிப்பிராயம் முப்பாயில் கசாப் என்ன செய்தானோ அதே தான் கொழும்பிலும் செய்தார்கள் ஆனால் செய்கின்ற விதமும் செய்விக்கின்றவர்களின் சிந்தனையும் வேற வேற தோற்றம் .

கொழும்பில் ஒரு இராணுவ அதிகாரியை இலக்கு வைத்து தாக்குதல் செய்யப்படும் போது 100 பேர் இறந்தாலும் கொலையாளியின் நோக்கம் இராணுவ அதிகாரியே என்று செஒவதன் மூலம் கொளையாளிக்கு ஒரு மறைமுக அங்கிகாரம் கிடைக்கிறது ஆனால் கசாப்பை இஅயக்கியவர்களுக்கு அப்படியான ஒரு அங்கிகாரமும் தேவையில்லை 100 கோடி மக்களில் 166 பேரை கொல்வதால் இந்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம் எனபதாகவும் இருக்கலாம். மக்கள் என்பது எங்கையும் மக்கள் தான் அதே போல் போராளி என்பவன் எங்கையும் போராளி தான் அதற்க்கு மதமும் மொழியும் தான் வேறுபாடு ஆனால் சொல்லிக் கொள்கின்ற காரணங்கள் ஒன்று.

Link to comment
Share on other sites

நோர்வே வரலாற்றிலேயே மோசமான கொலையாளியான ப்ரெய்விக் பிடிபட்ட பின்பு 'இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்' என்றார். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நோர்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது!

-Ilamaran Mathivanan via FB

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.