Jump to content

கனடாவில் திருமணமா? இரண்டு வருடங்கள் இணைந்து வாழ்ந்து நிரூபிக்க வேண்டும்: புதிய கடப்பாடு


Recommended Posts

[size=3]

கனடாவில் வசிப்பதற்காக போலியாக திருமண பந்தத்தில் இணைந்து கனடா சென்றதும் பிரந்துவிடும் விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வந்த சட்டமொன்று கனடாவிற்கு திருமணம் செய்து புதிதாய் செல்பவர்களிற்கு தேனிலவுக்காலம் இரண்டு வருடங்கள் என்ற வரையறைக் கொண்டு வந்துள்ளது.[/size][size=3]

கடந்த மாதம் 25ம் திகதிப் பிற்பாடு கனடாவில் வதிவதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த அனைவருக்கும் பொருந்தும் இச் சட்டத்தின் பிரகாரம் திருமண முடித்து கனடா வருபவர்களிற்கு இரண்டு வருடங்களுக்கு “கட்டுப்பாடுகளுன் கூடிய” [Conditional] நிரந்தர வதிவுரிமை வழங்கப்படும்.[/size][size=3]

திருமணம் முடித்து இரண்டு வருடங்களிற்குள்; உள்ளவர்களும், பிள்ளைகள் பெறாமல் இருப்பவர்களும் கனடாவில் வதியும் கணவனால் அல்லது மனைவியால் பொறுப்பேற்கப்படுமிடத்து அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு நிரந்தரவதிவுரிமை வழங்கப்படும் நாளிலிருந்து இரண்டு வருங்களிற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய வாசிகளாகவே கனடாவில் வதிய வேண்டும்.[/size][size=3]

இவர்கள் இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழவேண்டும் என்ற கட்டுப்பாட்டைத் தவிர மற்றைய சகல உரிமைகளும் ஏனைய நிரந்தரவதிவிடக்காரர்களிற்கு உள்ளது போல இவர்களுக்கும் உண்டு. எந்தவிதத் தடையுமில்லாம் இவர்கள் வேலை செய்வது, கல்வியைத் தொடர்வது, சமூகநலன்களைப் பெறுவது எனச் சகல உரிமைகளும் இவர்களிற்கு உண்டு.[/size][size=3]

[size=4]http://www.cic.gc.ca/english/department/media/backgrounders/2012/2012-10-26a.asp[/size][/size][size=3]

இவர்கள் அரசின் எதிர்பார்பிற்கேற்ப இரண்டு வருடங்களிற்கு இணைந்து வாழாவிட்டால் வெளிநாட்டிலிருந்து வந்தவரின் நிரந்தர வதிவுரிமை இரத்து செய்யப்படும் என்பதோடு பொறுப்பேற்றவரே தனது துணைக்காக முழுச் செலவையும் செய்யவேண்டும். இதேவேளை குடிவரவுத் திணைக்களம் எதற்காகப் பிரிவு ஏற்பட்டது, உண்மையான காரணம் என்வற்றைக் கண்டறிய விசாரணைகளை மேற்கொள்ளும் உரிமையையும் கொண்டுள்ளது.[/size][size=3]

மறுபுறமாக இவ்வாறு பொறுப்பேற்றலில் கனடாவிற்கு வருபவர் ஏதாவது குடும்ப வன்முறைகளிற்கோ அல்லது பொறுப்பேற்றவரால் எந்தவித அழுத்தத்திற்கோ உள்ளாக்கப்பட்டால் அவர் பொறுப்பேற்றவரைப் பிரிந்து கனடாவில் இருப்பதற்கும் சட்டம் இடமளிக்கிறது. இவ்வாறன வன்முறைகளோ அழுத்தங்களோ கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் பொறுப்பேற்றவர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதும் திண்ணம்.[/size][size=3]

எனவே இச்சட்டம் புதிதாய் வருபவரை மிகவும் பாதுகாக்கிறது. அவர்களிற்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தையும் கொடுக்கிறது. அதேவேளை கனடாவிலிருந்து பொறுப்பேற்றவர் மரணமடைந்தாலும் கட்டுப்பாடுடைய நிரந்தர வதிவிடப் பிரஜை கனடாவிலிருக்க அனுமதிக்கப்படுவார். ஆனால் பொறுப்பேற்றவர் மரணமடையும் போது இருவரும் நல்லுறவில் இருந்தால் மாத்திரமே இது செல்லுபடியாகும்.[/size][size=3]

ஆக மொத்தம் போலிக் கல்யாணங்களை நிறுத்த கொணரப்படும் ஒரு சட்டம் உண்மையாகத் திருமணம் செய்து வாழ்வியலில் இணையும் புதுமணத்தம்பதிகளை இரண்டு வருடங்கள் புரிதலுடன் “நான் பாதி, நீ பாதி கண்ணே” என வாழவைத்து நீடுழி நலமோடு வாழ வழியமைத்துக் கொடுக்கிறது.[/size][size=3]

hindu-wedding-300x225.jpg[/size][size=3]

http://www.canadamirror.com/canada/1815.html[/size]

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.