Jump to content

போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா


Recommended Posts

[size=4]போரினால் பிரிக்கப்பட்ட குடும்பம் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இணைகிறது – ரைம்ஸ் ஒவ் இந்தியா[/size] [size=4][ புதன்கிழமை, 21 நவம்பர் 2012, 01:46 GMT ] [ கார்வண்ணன் ][/size]

[size=4]Mulli-2009.jpg[/size]

[size=4]சிறிலங்காவில் போரினால், பிரிந்துபோன தமிழ்க் குடும்பம் ஒன்று ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீள இணையவுள்ளது.

நித்தியா என்ற 31 வயதுடைய பெண், 2006ம் ஆண்டில் தனது இரண்டு பிள்ளைகளுடன் கடத்தப்பட்டதால், கணவர் மற்றும் மூத்த மகளிடம் இருந்து பிரிந்தார்.

இப்போது அவர்கள் நெதர்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், அவர்கள் மீள இணைந்து கொள்ளவுள்ளனர்.

கடந்து ஆண்டு தனது இளைய மகள் தாரணி (9), மகன் மதுரன் (7) ஆகியோருடன் சென்னை வந்த நித்தியா, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு முகாம்களில் தனது கணவரை சதாசிவம் (33) மற்றும் மூத்த மகள் லவாணி (10) ஆகியோரைத் தேடினார்.

“அவர்கள் உயிருடன் இருப்பதாக சிலர் என்னிடம் கூறினர்” என்றார் நித்தியா.

மண்டபம் முகாமில் உள்ள சிலர் சென்னையில் உள்ள இந்திய செஞ்சிலுவை குழுவை நாடுமாறு கூறினர்.

சென்னையில் உள்ள செஞ்சிலுவை சங்க அதிகாரி கிருஸ்ணமூர்த்தி, பூகோள தேடுதல் வலையமைப்பின் மூலம் தேடுதல் நடத்தியபோது, சதாசிவம் நெதர்லாந்தில் இருப்பது கண்டறியப்பட்டது.

நித்தியா முதலில் தனது கணவருடன் தொலைபேசியில் பேசினார்.

“கணவருடன் தொலைபேசியில் பேசிய அன்று, மாலை காணொளி இணையம் மூலம் அவர்களுடன் பேசிய போது எனது கண்களையே என்னால் நம்பமுடியவில்லை.” என்றார் நித்தியா.

2006இல்போர் மீண்டும் ஆரம்பமாகியிருந்த போது, அந்தக் குடும்பம் பிரிந்து போனது.

இவர்களின் குடும்பம் தலைமன்னாரில் உள்ள மாமாவின் வீட்டுக்குச் சென்றது.

“ஒருநாள் காலை லவாணி பாடசாலைக்குச் சென்றிருந்த போது, என்னையும், இளைய பிள்ளைகளையும் ஒரு குழுவினர் கடத்திச் சென்றனர்.

வன்னியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில், கண்களைக் கட்டி தடுத்து வைத்திருந்தனர்.

கணவர் இருக்கும் இடத்தை கேட்டனர். அவர் அங்கே இருக்கவில்லை.

ஒரு இருட்டறைக்குள் வைத்து மூன்று ஆண்டுகள் சித்திரவதை செய்தனர். அப்போது எனது மகன் பிறந்து சில மாதங்கள் தான்.” என்றார் நித்தியா.

தடுப்புமுகாமில் நெருப்பால் சுடப்பட்ட காயத்தழும்புகள் அவருடைய கையில் உள்ளன.

“எனது நண்பர் ஒருவர் பணம் கொடுத்து உதவினார். அதையும் என்னிடம் இருந்த நகைகளையும் இராணுவ அதிகாரிகளுக்கு கொடுத்து 2010இல் விடுவிக்கப்பட்டேன்.

கடவுச்சீட்டு எடுப்பதற்கு எமக்கு ஒரு ஆண்டு தேவைப்பட்டது.

நாம் செஞ்சிலுவை குழுவை அணுகி அதன் தலைவர் ஹரிஸ் மேத்தா இறுதியாக நீதி ரீதியாக உதவினார்.

இந்தியாவில் இல்லாவிட்டால், அவர் நெதர்லாந்தில் தஞ்சடைந்திருப்பார் என்று எனக்குத் தெரியும்.” என்றார் நித்தியா.

அதேவேளை சதாசிவத்தின் வாழ்க்கையும் சுலபமானதாக இருக்கவில்லை.

“தனது மனைவியும் பிள்ளைகளும் கடத்தப்பட்டதை அறிந்தவுடன் சதாசிவம் லவாணியை பாதுகாப்பதற்காக பாடசாலைக்கு ஓடினார்.

நித்தியாவும் இரு பிள்ளைகளும் சிறிலங்கா இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நினைத்தார்.

லவாணியுடன் இந்தியா வந்தார். இங்கிருந்து அம்ஸ்ரடாம் சென்றார்.

பின்னர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தினோம். மாதம் 3000 ரூபாவை அவர் தனது குடும்பச் செலவுக்கு அனுப்பத் தொடங்கினார்.

நெதர்லாந்து அரசினால் அவருக்கு வழங்கப்படும் உதவித்தொகையின் ஒருபகுதியை இவர்களுக்கு அனுப்புவதற்காக அவர் தனது ஒருநேர உணவை தவிர்த்து வந்தார் என்பது அண்மையில் தான் எமக்குத் தெரிந்தது.

நெதர்லாந்தை சென்றடைந்த இறுதிக்குழுவில் அவர் இருந்தார்.” என்றார் செஞ்சிலுவை குழு அதிகாரி கிருஸ்ணமூர்த்தி.

ஆரம்பத்தில், தனது கணவரைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாது போனால், தற்கொலை செய்து கொள்ளும் மனோநிலையில் இருந்த நித்தியாவுக்கு நாம் ஆலோசனை வழங்கினோம்.

தான் இறந்துபோனால் குழுந்தைகளை யாரிடமாவது கொடுத்து விடுமாறு அவர் கூறினார். அவரை அதிலிருந்து மீட்க சிலகாலம் சென்றது.

ஒரு ஆண்டுகால முயற்சிகளை அடுத்து இந்திய அரசாங்கம் நித்தியாவுக்கு அவரது குழந்தைகளுக்கும் வெளியேறுவதற்கான அனுமதியை அளித்துள்ளது.

அவர்களுக்கு இருமாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து நுழைவிசைவு வந்துவிட்டது.” என்றார் கிருஸ்ணமூர்த்தி.

செஞ்சிலுக்குழுவின் தமிழ்நாடு கிளை உறுப்பினர்களின் நன்கொடை மூலம் பெறப்பட்ட 86 ஆயிரம் ரூபா பெறுமதியான விமானப் பயணச்சீட்டுகள் நித்தியாவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

நித்தியாவும் அவரது குழந்தைகளும் நாளை காலை அம்ஸ்ரடாமுக்கு புறப்படவுள்ளனர்.

நித்தியா தனது பயணப் பையில் லவாணியின் சட்டையையும், சதாசிவத்தின் ரி-சேட்டையும் கொண்டு செல்கிறார்.

வழிமூலம் - ரைம்ஸ் ஒவ் இந்தியா[/size]

[size=4]மூலம்: [/size]http://www.puthinappalakai.com/view.php?20121121107318

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.