Jump to content

"தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்!


Recommended Posts

"தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்!

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்ததன் பிற்பாடு, புலம்பெயர்ந்து வாழும் சில தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது. என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று எதுவும் தெரியாத நிலையில் ஒரு தடுமாற்றத்துடன் நிற்கின்றார்கள். இதுதான் சமயம் என்று மக்களை மேலும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்துகின்ற வேலையை தேசிய விரோதிகளின் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன. இந்த வேளையில் சில விடயங்களை தெளிவு படுத்துகின்ற கடமை எமக்கு உண்டு.

விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்திருந்தாலும், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கின்ற, எழுதுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. இதை எந்த சட்டமும் தடுக்க முடியாது. விடுதலைப்புலிகள் என்பது ஒரு விடுதலை இயக்கம் என்றும், தமிழினம் அவர்களை ஆதரிக்கிறது என்றும், விடுதலைப்புலிகளை அங்கீகரியுங்கள் என்றும் தாராளமாக குரல் கொடுக்கலாம். விடுதலைப்புலிகளின் பக்கம் உள்ள தர்ம நியாயத்தை எடுத்துச் சொல்லி பரப்புரை செய்யலாம். விடுதலைப் பாடல்களைக் கேட்கலாம். பாடலாம், ஆடலாம். தேசியத் தலைவரினதோ, வேறு போராளிகளினதோ படங்களை வைத்திருப்பதும் குற்றம் என்று ஆகாது. பொதுவாக இதுவரை செய்து வந்ததில் பெரும்பாலானவற்றை தொடர்ந்து செய்யலாம்.

ஆனால் விடுதலைப்புலிகளுக்காக நிதி வழங்குவதும், நிதி சேர்ப்பதும், வன்முறைகளை தூண்டுவதும் குற்றங்கள் ஆகின்றன. ஆனால் அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையின்படி விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்திற்கான நிதியை சேர்த்துவிட்டார்கள். ஆகவே நிதி சம்பந்தமான குற்றத்தை செய்ய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இனி ஏற்படப் போவதில்லை. வன்முறைகளை தூண்டுவது போன்று தமிழர்கள் பொதுவாகவே நடந்து கொள்வதில்லை என்பதால், அது குறித்தும் கவலை கொள்ளத் தேவை இல்லை.

ஆகவே தேசிய விரோதிகளின் பிரச்சாரங்களாலும், மித மிஞ்சிய அச்சத்தாலும் தடுமாறாது எமது மக்கள் இருக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியம் போட்ட தடையோடு, எமக்கு நாமே மேலும் அர்த்தமற்ற தடைகளை போட்டுவிடக் கூடாது. நாம் வாழும் நாடுகளின் சட்டங்களை மதித்து நடப்பதோடு, எமது நாட்டின் விடுதலைக்கான பணிகளை தொடர்ந்து செய்வோம்.

www.Webeelam.com

Link to comment
Share on other sites

அமெரிக்காவில் இருந்து இயங்குகின்ற மனித உரிமைகள் மையத்தின் அறிக்கையின்படி விடுதலைப்புலிகள் இறுதி யுத்தத்திற்கான நிதியை சேர்த்துவிட்டார்கள். ஆகவே நிதி சம்பந்தமான குற்றத்தை செய்ய வேண்டிய தேவை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு இனி ஏற்படப் போவதில்லை

உண்மையாகவா? ஐரோப்பிய ஒன்றியம் நிதியை முடக்கினாலும் பிரச்சினை இல்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மங்கள சமரவீர இவ்வாறு சொல்கிறார் -தினக்குரல்

மேற்குலகில் திரட்டப்பட்ட நிதியை சிங்கப்பூர், மலேசியாவுக்கு கொண்டு வரும் புலிகள் தென்கிழக்காசியாவில் ஆயுதக் கொள்வனவு

-மங்கள சமரவீர தெரிவிப்பு மேற்குலக நாடுகளில் திரட்டப்படும் நிதியை சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரும் விடுதலைப் புலிகள் அந்த நிதியை பயன்படுத்தி தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து வெளியாகும் நியூ ஸ்டிரெய்ட் ரைம்ஸ் செய்தித்தாளிற்கு அளித்துள்ள பேட்டியிலேயே மங்கள சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் நிதி திரட்டுவதையும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதையும் கட்டுப்படுத்துமாறு இந்த நாடுகள் கேட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் திரட்டப்பட்ட நிதியை மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் பணி குழப்பமானது என தெரிவித்துள்ள மங்கள சமரவீர இதன் காரணமாகவே மலேசியா போன்ற நாடுகளின் உதவியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மலேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகள் இதனை பாரதூரமான விடயமாக கருத தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குலகில் திரட்டப்படும் நிதி பெருமளவிற்கு தென்கிழக்காசிய நாடுகளில் குறிப்பாக மலேசியா , கம்போடியா போன்ற நாடுகளில் ஆயுதங்களை கொள்வனவு செய்யவே பயன்படுகின்றது எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அணிசேரா இயக்கத்தின் 116 ஆவது மாநாட்டிற்காக மலேசியா சென்றுள்ள அமைச்சர், மலேசிய வெளிவிவகார அமைச்சரின் உதவியை நாடியுள்ளதுடன் இந்த விடயம் குறித்த புலனாய்வு தகவல்களை பரிமாறவும் இணங்கியுள்ளார்.

மேற்குலகில் திரட்டப்பட்ட நிதியின் ஒரு பகுதி மலேசியாவிலும் ஏனைய பிராந்திய நாடுகளிலும் உள்ள வங்கிகளில் வைப்புச் செய்யப்படலாம் எனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தென்கிழக்கு ஆசியாவில் நியாய பூர்வமான வர்த்தகத்தில் முதலீடு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் எனினும் இதற்கான ஆதாரம் எதனையும் முன்வைக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் நிதி திரட்டும் நடவடிக்கையை கட்டுப்படுத்துவதே சமாதான முயற்சிகளுக்கு உதவுவதற்கான சிறந்த வழி என தெரிவித்துள்ள மங்கள சமரவீர ஐரோப்பிய ஒன்றிய தடையை பாராட்டியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை புலம் பெயர்ந்த தமிழர்களிடமிருந்து நிதி கிடைப்பதை தடுக்கும் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

நீரென்ன தம்பி பக்கத்திலை நிண்டு எண்ணிக்குடுத்தனீரோ ? தம்பியவை உங்கடை கருத்துக்களை கொஞ்சம் யோசிச்சு எழுதுங்கோ ? உப்பிடியெல்லாம் பைத்தியக்காரத்தனமாகவெல்லாம

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எவர் எதனைச் செய்தாலும் உண்மையான தாயக உணர்வுகளை எவராலும் மழுங்கடிக்கச் செய்யமுடியாது. தடைகள் போடுவதும், நீக்குவதும் காலங்காலமாக நிகழ்பவைதான். எதிரியும், எதிர்ப்பவர்களும் இன்னும் எதையெதையோ செய்வார்கள். ஆனால் எமது இலக்கில் நாம் தெளிவாக இருந்தால் எமது நியாயமான போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும் சில கருத்துக்களை கூறவேண்டியுள்ளது விடுதலைப்புலிகளை ஐரோப்பாவில் தடைசெய்வதற்கு இலங்கை மட்டும் காரணமல்ல ஒரு சில புலம்பெயர்ந்த தமிழர்களும் தான் காரணம் இவர்கள் தாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி மாற்றுக்கருத்துள்ளவர்களை தூற்றினார்கள் இணையப்பக்கங்களில் மாற்றுக்கருத்துக்காரர்களைப

Link to comment
Share on other sites

நான் அரசியலில் ஈடுபடுவதில்லை என்றாலும் சில கருத்துக்களை கூறவேண்டியுள்ளது விடுதலைப்புலிகளை ஐரோப்பாவில் தடைசெய்வதற்கு இலங்கை மட்டும் காரணமல்ல ஒரு சில புலம்பெயர்ந்த தமிழர்களும் தான் காரணம் இவர்கள் தாங்கள் புலிகளின் ஆதரவாளர்கள் என்று சொல்லி மாற்றுக்கருத்துள்ளவர்களை தூற்றினார்கள் இணையப்பக்கங்களில் மாற்றுக்கருத்துக்காரர்களைப
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசு வேண்டி எழுதுவன் அல்ல நான் ஆனால் போலி ஊடகவியலாளர் நாகாPகமற்றமுறையில் எழுதுவோர் புலிகளின் பெயரைச்சொல்லி ஆபாசபபடங்களை தமது இணையப்பக்கங்களில் இணைததுள்ளவர்களுக்கு எதிராக நிச்சயம் எழுதுவேன்

Link to comment
Share on other sites

காசு வேண்டி எழுதுவன் அல்ல நான் ஆனால் போலி ஊடகவியலாளர் நாகாPகமற்றமுறையில் எழுதுவோர் புலிகளின் பெயரைச்சொல்லி ஆபாசபபடங்களை தமது இணையப்பக்கங்களில் இணைததுள்ளவர்களுக்கு எதிராக நிச்சயம் எழுதுவேன்

அப்ப நீர் ஒரு மாற்றுக்கருத்துகாறர் அல்லது அவர்கள் ஆதரவாளர் என்று பயமின்றி நெஞ்சை நிமிர்த்தி சொல்லுமன், எதற்கு பயப்படுவான், உமக்கும் கருத்து சுதந்திரம் மீது நம்பிக்கை இருந்தால். 8)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் மாற்றுக்கருத்துக்காரன் அல்ல ஆனால் அவர்கள் ஆதரவாளரும் அல்ல பயப்பிடNவுண்டிய அவசியம் எனக்கு இல்லi

Link to comment
Share on other sites

அய்யா கணேசா

இன்று மாற்றுக்கருத்து என்று ஒன்று இல்லை. உண்மையான மாற்றுக்கருத்துக்காரர்களும

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.