Jump to content

பருதியின் படுகொலையும் விநாயகம் கைதும்! பின்னணி என்ன? புலனாய்வுத்தகவல்!


Recommended Posts

பிரபாகரனைத் தவிர எவரையும் நம்பும்படியாக யாருமேயில்லை.

சத்தியமான வார்த்தைகள்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனைத் தவிர எவரையும் நம்பும்படியாக யாருமேயில்லை.

ஒருசில வருடங்களாக என்மனதில் இருப்பதும் இதுதான்.

Link to comment
Share on other sites

முன்பு இலங்கை அரசாங்கத்தினாலும் ஒட்டுக் குழுக்களினாலும் வெளிநாடுகளுக்கு செய்த பிரச்சாரம் என்ன என்றால் புலம்பெயர் நாடுகளில் புலிகள் வன்முறை மூலமும் மிரட்டல் மூலமுமே பணம் வசூலிக்கிறார்கள் என்பது அதை சுவிஸ் நாட்டில் பல இடங்களில் இப்பிடியான முறையீடுகளை ஒட்டுக்குழுவினர் செய்தார்கள். அதை இப்ப உணமையாக்குவது போல இந்த நெருடல் செய்தி உள்ளது. தம்மை நடுநிலை என்று கூறும் நெருடல் எந்த இடத்திலும் நடுநிலைமைய காட்டவில்லை என்பது பிரதானம். இப்பிடியான தேசியவாதிகள் வாழ்க

Link to comment
Share on other sites

நான் நெருடல் செய்தியப்பற்றி எழுதியவை ஏன் தூக்கப்பட்டன?

சும்மாதான்.. :D

Link to comment
Share on other sites

அதற்கு முதல் கேவலமான பிறவிகளாய் எம் இனத்தில் பிறந்த பூச்சி புழுக்களை ஒடுக்க வேண்டும் ,,,,,,,,,,,,,,,எல்லாம் நிறைவேறும்........

உங்களுக்கு எதனையும் உணர்ச்சியின் அடிப்படையிலன்றி பகுத்தறிவின் அடிப்படையில் உணர முடியாது என்பதை அடிக்கடி காட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

இந்த அரசியல் தான் எங்களை நாதியற்று நடுத்தெருவில் விட்டு இருக்கின்றது.

புலம்பெயர் நாடுகளில் இனியும் வன்முறை அரசியல் செய்து கொண்டு விடுதலையைக் காண முடியும் என்று நம்பாதீர்கள். புலிகள் தங்களது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். தாம் அழியப் போகின்றோம் என்று அறிந்து விட்டு அவர்கள் அறிவித்தது, அதனை மிச்சம் இருப்பவர்கள் தொடரத்தான்.

இன்று புலிகள் இல்லை என்ற நிலையை பயன்படுத்தி வெளிநாடுகளில் வன்முறை அற்ற அரசியல் செயல்பாடுகளினூடகத்தான் எமக்கான வெளிகளை உருவாக்க முடியும்.

பரிதி போன்றவர்களின், விநாயகம் போன்றவர்களின், நெடியவன் போன்றவர்களின் மிரட்டி அரசியல் செய்யும் வன்முறை அரசியலைச் செய்து கொண்டு வெளிநாடுகளில் எம் விடுதலைக்கான ஆதரவை கட்டி எழுப்ப முடியாது. உலக நாடுகளின் பட்டியலில் இருந்து எம் போராட்டத்தின் மீதான தடையை அகற்ற முடியாது.

வெளிநாடுகளின் பொலிஸாரினதும், உளவு துறையினதும் கழுகுக் கண்கள் மொய்த்துக் கொண்டு இருக்கும் சூழலினைத் தோற்றுவித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக குரல் எழுப்ப முடியாது.

அமைதியான முறையில், வன்முறையற்ற காத்திரமான முறையில் இயங்கினால் தான் எம்மால் சர்வதேச நாடுகளது மக்களின் ஆதரவையும் அரசுகளின் ஆதரவையும் திரட்ட முடியும்.

புலிகளின் ஆயுத மெளனிப்புக்கு பின்னாலான அரசியலை வன்முறை நடவடிக்கைகளின் மூலம் முன்னெடுக்கும் எவரும் தமிழ் மக்களின் விரோதியாகத்தான் காலம் இனம் காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகங்களில் வெளியான செய்தியில் சில மர்மங்கள் நிறைந்தும், மற்றும் உண்மைத் தன்மைகள் இல்லாமல் இருப்பதாக சந்தேகித்து பிரான்ஸில் இயங்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியஸ்தர் ஒருவரிடம் இது குறித்து கேட்டேன்.

அது யார் பெயர் வெளியே சொல்ல விரும்பாத முக்கியஸ்தர்? இப்படி இருட்டுக்குள் இருப்பவர்கள்தான் தமிழர்களின் அமைப்புக்களை ஜனநாயக வழியில் முன்னெடுத்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள காத்திரமான செயற்பாடுகளைச் செய்யப்போகின்றார்களாக்கும்.

திகில்களும் மர்மங்களும் நிறைந்த சுவாரஸ்சியமான கதைகள் எப்போதுமே கவர்ச்சியைத் தரும் என்று நமது தமிழ்ச் செய்திகளை உற்பத்தி செய்யும் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்குத் தெரியும்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஒரு மாவீரன்.. இப்படி அநியாயப் பூனைகளின் அதிகார ஆசைக்கு.. மாவீரர் காலத்திலேயே இழிவுபடுத்தப்படுகிறான். அதற்கு தலைப்பு புலனாய்வு. பூனைகள் எல்லாம் புலி என்ற நினைப்பில் உலா வரும் காலம்..! நல்லா ஆடுங்க இது உங்க நேரம்..! :icon_idea:

நிர்வாகம் சிரிப்புப் பகுதியில் சுமே அக்கா எழுதிய ஒரு "புலனாய்" அறிக்கையை உடன தூக்கினது. இதை எல்லாம் அது எந்தப் புலனாயை வைச்சு ஆராய்ஞ்சு உண்மை என்று கண்டு அனுமதிச்சிருக்குது..???????????! ம்ம்ம்... நிர்வாகமும்.. புலனாய்(வு)ப் பக்கம் போல...!

இதுதான் இப்ப எங்க நிலை...............

Link to comment
Share on other sites

உங்களுக்கு எதனையும் உணர்ச்சியின் அடிப்படையிலன்றி பகுத்தறிவின் அடிப்படையில் உணர முடியாது என்பதை அடிக்கடி காட்டிக் கொண்டு இருக்கின்றீர்கள்.

சுயநலத்தை அப்பட்டமாக வெளிக்காட்டுவோர் இந்த பாடம் எடுப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

இந்த அரசியல் தான் எங்களை நாதியற்று நடுத்தெருவில் விட்டு இருக்கின்றது.

ஐ.நா வரையில் தன்னைத்தான் விசாரிக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அரச ஆதரவாளர்கள் பலர் நாதியற்றுப்போய் தவிக்கிறார்கள்.

புலம்பெயர் நாடுகளில் இனியும் வன்முறை அரசியல் செய்து கொண்டு விடுதலையைக் காண முடியும் என்று நம்பாதீர்கள். புலிகள் தங்களது ஆயுதங்களை மெளனிக்கச் செய்வதாக பகிரங்கமாக அறிவித்து விட்டுத்தான் ஆயுதப் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தார்கள். தாம் அழியப் போகின்றோம் என்று அறிந்து விட்டு அவர்கள் அறிவித்தது, அதனை மிச்சம் இருப்பவர்கள் தொடரத்தான்.

இன்று புலிகள் இல்லை என்ற நிலையை பயன்படுத்தி வெளிநாடுகளில் வன்முறை அற்ற அரசியல் செயல்பாடுகளினூடகத்தான் எமக்கான வெளிகளை உருவாக்க முடியும்.

பரிதி போன்றவர்களின், விநாயகம் போன்றவர்களின், நெடியவன் போன்றவர்களின் மிரட்டி அரசியல் செய்யும் வன்முறை அரசியலைச் செய்து கொண்டு வெளிநாடுகளில் எம் விடுதலைக்கான ஆதரவை கட்டி எழுப்ப முடியாது. உலக நாடுகளின் பட்டியலில் இருந்து எம் போராட்டத்தின் மீதான தடையை அகற்ற முடியாது.

இவ்வளவற்றையும் எழுதி பருதியும், விநாயகமும், நெடியவனும் வன்முறையாளர்களாகவும் இவர்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் முயற்சியில்தான் பருதியை விநாயகம் கொலை செய்தார் என்பதுதான் தங்கள் காட்ட முயலும் எழுத்தின் உட்கருத்து. (கட்டுரை சொல்வது பருதியை பாம்பு குழு கொலை செய்ததென்பது. மேலும் இந்த கொலையை K.P யின் உறவினர்கள் வழிநடத்தியிருக்கலாம் என்பதும். பாம்புக்குழுவின் நோக்கத்தை பிரான்சு புலனாயுவுகள் முழுமையாக வெளிவிடவில்லை.) உங்கள் உட்கருத்து மூலம் கட்டுரையை ஆதாரிக்கிறீர்களா எதிர்க்கிறீர்களா என்பதை மறைத்து வைத்துகொண்டு காழ்ப்புணர்வை மட்டும் கக்குகிறிர்கள். இங்கே, உங்களின் முடிவு உங்களுக்கே குழப்பமாக இருக்கிறது. கட்டுரை, பாம்புக்குழுவை "வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது" என்று பருதி சொன்னதாக சொல்கிறது. அதன் பின் நாங்கள் பருதிடம் கற்றுக்கொள்ளும் பாடம் பிழை என்று என்ன காரணத்திற்காக தொடர்ந்து வாதாடுகிறீர்கள்.

வெளிநாடுகளின் பொலிஸாரினதும், உளவு துறையினதும் கழுகுக் கண்கள் மொய்த்துக் கொண்டு இருக்கும் சூழலினைத் தோற்றுவித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவுக்காக குரல் எழுப்ப முடியாது.

தயவு செய்து வெளிநாட்டு புலனாய்வு பற்றிய அறிவு இருந்தால் இதை எழுதவும். எல்லா மேற்கு நாட்டிலும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டின் மீதும் அவர்களின் புலனாய்வு தொடர்ந்து இயங்கிக் கொண்டுதான் இருக்கும். இலங்கையை போன்று அதிகாரத்தில் உள்ளவர்கள் மற்றவர்களை அடக்க புலனாய்வு பயன்படுத்தப்படுவதில்லை. ஒரளவு புலனாய்வு துறையினதும், பொலிஸ் போன்ற பாதுகாப்பு துறையினதும் கவனங்களை எடுக்கத்தக்கதாகத்தான் எமது போராட்டங்கள் வடிவமைக்கப்படுவது. இதனால் இவற்றை விசாரிக்க வரும் புலனாய்வு, அரசின் செயலை,நடப்பவற்றை நேரடியாக பதிந்துகொள்வதால், விளங்கிக்கொள்ளும். உ+ம் பருதி கொலை செய்யப்படும் முன்னர் இலங்கையில் இருந்து அரச ரவுடிகள் பிரான்சில் இறக்கப்பட்டார்கள் என்பதை புலனாய்வினர் தெரிந்து வைத்திருப்பதாக பிரான்சு பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதனால் தான் நாம் பருதி போன்றவர்களின் ஜனநாய போராடங்களுக்கும் ஆதரவு கொடுப்பது. இது போராட்டங்களை புலனாய்வு நன்றாக கண்காணித்து அரசின் திசை திருப்பல்களுக்கு மேற்கு நாடுகள் ஏமாந்து போய்விடாமல் இருக்க உதவும்.

அமைதியான முறையில், வன்முறையற்ற காத்திரமான முறையில் இயங்கினால் தான் எம்மால் சர்வதேச நாடுகளது மக்களின் ஆதரவையும் அரசுகளின் ஆதரவையும் திரட்ட முடியும்.

அரசு வன்முறையை போராடத்தில் திணித்து அவற்றைக் குழப்ப முயல்கிறது. மேலே சொன்னவற்றை பருதி சமாதானபடுத்த முயன்று தோற்றவராக குறிப்பிடப்படும், K.P. யின் உறவினருக்கு நேரடியாக தெரியப்படுத முடியுமா? பெரும்பாலானோர் இமானுவல் அடிகளார், உருத்திரா, ஜெயலிங்கம் போன்றவர்களுக்கு ஆதரவு கொடுத்து போராடும் போது புலம் பெயர் மக்களை குட்டி, இரும்பொறையாக சித்தரிக்க முயல்வது ஏனோ?

புலிகளின் ஆயுத மெளனிப்புக்கு பின்னாலான அரசியலை வன்முறை நடவடிக்கைகளின் மூலம் முன்னெடுக்கும் எவரும் தமிழ் மக்களின் விரோதியாகத்தான் காலம் இனம் காட்டும்.

புலிகளின் ஆயுத மௌனிப்புக்கு பின் வரும் போராட்டங்களை, வன்முறையார்களை ஏவி தொடர்ந்து அரசு குழப்பி வருகிறது. கட்டுரையில் சொல்லப்படும் K.P போன்ற பணய கைதிகளை வைத்துக்கொண்டு மாவீரர தினத்தை உடைத்து இரண்டாக்கிவிட்டு போராடும் தமிழர் மீது பழி போடுகிறது அரசு. இந்த கெடு செயல்களின் பின் போராடங்களை வன்முறை நடவடிக்கையாக சித்தரிக்க முயல்வோரை அரசின் ஆதவாளர்களாவும், தமிழன விரோதிகளாகவும் தான் காலம் இனம் காட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுரையாளரின் கதையை நம்பினால் இப்போது புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சண்டியர்களின் ஆதிக்கம் கைமீறிப் போய்விட்டது என்றுதான் கொள்ளவேண்டும். இப்படியான குழுக்கள் வளர்ந்துவரும் சிறுவர்களை விரைவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு நிலக்கீழ் கலாச்சாரத்தைத் தமிழர்களுக்கிடையில் உருவாக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

இந்தக் கட்டுரையில் பரிதி அவர்கள் குண்டர்களுடன் தொடர்பில் இருந்தார்; குண்டருக்குரிய வேலைகளைச் செய்தார் என்று உள்ளது. உண்மையா?

ஒருவர் இறந்து விட்டால் அவரை பற்றி தாம் விரும்பிய படியெல்லாம் கட்டுரை எழுத வெளிக்கிடுவார்கள். அதிலும் உண்மையை சொல்வது போல் சொல்லி இடையில் பொய்யையும் கலந்து விடுவார்கள். அதனால் வாசகர்கள் அந்த பொய்யையும் உண்மை என்று நம்பிவிடும் சாத்தியம் உள்ளது.

உண்மை தன்மை இல்லாத எந்த செய்தியையும் நாம் இனங்கண்டு கொள்ள வேண்டும். :rolleyes:

சொல்கின்றவன் சொன்னால் கேட்பவனுக்கு மதியென்ன???

இந்த ஆராய்ச்சியாளர்களது கண்களில் அவர் உயிருடன் இருக்கும்பேது ஏன் தெரியவில்லை

புலத்தில் அதிலும் பிரான்சில் வர்த்தகர்களிடம் வெருட்டிப்பணம் பறித்தவிடயம்....???

ஒரே ஒரு தப்பு

தமிழனுக்காக போராட புறப்பட்டது

புலத்தில் வந்தும்

பிரெஞ்சுக்குடியுரிமை இருந்தும்

அம்மக்களுக்காக அயராது உழைத்தது. :( :( :( :( :( :(

உண்மை...

Link to comment
Share on other sites

நெருடல் இணையம் ஒரு விநாயகம் குழுவின் ஆதரவுப் பிரச்சார தளம். இதன் செய்திகளை இங்கு இணைப்பது எவ்வளவு நம்பிக்கைய பெறுவது என்பது கேள்விக் குறியே- அந்த இணையத்தில் முழுவது விநாயகம் கோஷ்டியால் செய்யப்படும் மாவீரர் தின விளம்பரங்களே உள்ளது. ஏனைய எனைத்தும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகம் இப்பிடி பொறுப்பில்லாம இயங்கும் நெருடல் இணையத்தையும் அதிர்வு,எதிரி போன்று கருப்பு பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்

Link to comment
Share on other sites

பாவம் ஒரு மாவீரன்.. இப்படி அநியாயப் பூனைகளின் அதிகார ஆசைக்கு.. மாவீரர் காலத்திலேயே இழிவுபடுத்தப்படுகிறான். அதற்கு தலைப்பு புலனாய்வு. பூனைகள் எல்லாம் புலி என்ற நினைப்பில் உலா வரும் காலம்..! நல்லா ஆடுங்க இது உங்க நேரம்..! :icon_idea:

நிர்வாகம் சிரிப்புப் பகுதியில் சுமே அக்கா எழுதிய ஒரு "புலனாய்" அறிக்கையை உடன தூக்கினது. இதை எல்லாம் அது எந்தப் புலனாயை வைச்சு ஆராய்ஞ்சு உண்மை என்று கண்டு அனுமதிச்சிருக்குது..???????????! ம்ம்ம்... நிர்வாகமும்.. புலனாய்(வு)ப் பக்கம் போல...!

இதுதான் இப்ப எங்க நிலை...............

இச் செய்திகள் மூலம் உண்மையில் யாரைக் காப்பற்றப் பார்க்கிறார்கள் இந்த புலநாய்கள். இந்த கட்டுறைய எழுதியவர் இதற்கு முன்னம் ஒருகட்டுரையும் எழுதி கேள்விப் படவில்லை. நல்லா எழுதுறாங்க தங்கள் தரப்பைக் காப்பற்ற ஒரு மாவீரனையும் ஒட்டு மொத்த புலிகளையும் வன்முறை மூலம் நிதி சேகரித்தார்கள் என்று கொச்சைப் படுத்துவது நல்லதல்ல. இந்த கட்டுரையை இணைத்த உறவையே நாளை கொச்சி படுத்தலாம். அகதிகளுக்கு என்று கட்டாயப் படுத்தி வன்முறைக் குழுக்கள் மூலம் நிதி சேகரிக்கிறா என்று இத அர்யுன் போன்றவர்கள் திருந்தாத ஜென்மம் என்று வரவேற்கலாம் கவனம். தன் வினை தன்னைச் சுடும் ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
Link to comment
Share on other sites

கட்டுரையாளரின் கதையை நம்பினால் இப்போது புலம்பெயர் நாடுகளில் தமிழ்ச் சண்டியர்களின் ஆதிக்கம் கைமீறிப் போய்விட்டது என்றுதான் கொள்ளவேண்டும். இப்படியான குழுக்கள் வளர்ந்துவரும் சிறுவர்களை விரைவில் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஒரு நிலக்கீழ் கலாச்சாரத்தைத் தமிழர்களுக்கிடையில் உருவாக்கும் காலம் அதிக தூரத்தில் இல்லை.

பலர் பிரான்சை பற்றி சொல்லிவிட்டார்கள். அது ஒரு பானை சோற்றுக்கு பதமாக எடுத்தக்க ஒரு சோறாகாது.

மேற்குநாடுகளின் புலனாய்வுகள் விட்டு பிடிப்பார்கள். ஆனால் பிரான்சுப் புலனாய்வு விட்டு பார்க்கிறார்கள்.

Link to comment
Share on other sites

அப்படியானால் இவர் மாவீரனே இல்லையா?

ஒரு ரவுடிக்கா கேணல் பட்டம் கொடுத்தார்கள்? (நான் கூறவில்லை. மேற்படி கட்டுரையில் அவ்வாறுதான் வருகின்றது)

உண்மையான ஊடகவியலாளர்கள், ஊடகங்கள் 2009 மே 19-க்குப் பின்னர் மௌனித்து விட்டார்கள் என்பதே சரி.

இப்போது செய்தி வெளியிடுகின்றவர்கள் எல்லாம் கனவு உலகத்தில் சஞ்சாரம் செய்து கொண்டு செய்தி வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றனர்.

சனங்களுக்கும் வேறு பொழுது போவது இல்லை. அதனால், சினிமா கிசுகிசுக்களை படிப்பது போலத்தான் தற்போது வெளிவரும் செய்திகளையும் படிக்கின்றனர்.

உண்மையைச் சொல்லப் போனால் சனங்கள் எதனையும் சீரியசாகவே எடுத்துக் கொள்வது இல்லை.

என்ன இருந்தாலும் அவர் செய்தார், இவர் செய்தார் என்று பல்வேறு ஊடகங்கள் செய்திகளை வெளிக்கொணர்ந்த நிலையில் நெருடலில் வந்த புலனாய்வுத்துறை கட்டுரை கணகணப்பாகத்தான் போய்க் கொண்டு இருக்கின்றது.

அவர் செய்தார், இவர் செய்தார் என்று சந்தேகித்தவர்களே! பரிதி உட்குத்து வெட்டுப்பாடுகளினாலும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மேற்படி கட்டுரையில் குறிப்பிட்டுக் கூறியதன்

அடிப்படையில் சந்தேகித்துத்தான் பாருங்களேன்.

Link to comment
Share on other sites

அது யார் பெயர் வெளியே சொல்ல விரும்பாத முக்கியஸ்தர்? இப்படி இருட்டுக்குள் இருப்பவர்கள்தான் தமிழர்களின் அமைப்புக்களை ஜனநாயக வழியில் முன்னெடுத்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ள காத்திரமான செயற்பாடுகளைச் செய்யப்போகின்றார்களாக்கும்.

திகில்களும் மர்மங்களும் நிறைந்த சுவாரஸ்சியமான கதைகள் எப்போதுமே கவர்ச்சியைத் தரும் என்று நமது தமிழ்ச் செய்திகளை உற்பத்தி செய்யும் குடிசைக் கைத்தொழிலாளர்களுக்குத் தெரியும்தானே.

[size=4]பல இணைப்புக்கள் அந்த அமைப்பின் பெயர் மற்றும் முகவரியுடன் ஏற்கனவே இந்த களத்தில் இணைக்கப்பட்டவை. இதை எழுதிய சுதந்திர ஊடகவியலாளர் ஏனோ **[/size][size=4]பெயரை [/size][size=4]குறிப்பிடவில்லை. ஆனால் தனது பெயரை (உண்மையான பெயராக இருக்கலாம்) மின்வலை முகவரியை (அது வேலை செய்கிறது) இணைத்து தனது மேல் நம்பிக்கை வையுங்கள் என உலகத்தை கேட்டுள்ளார். [/size]

[size=4]** [/size][size=4]எழுத்துப்பிழை திருத்தப்பட்டது [/size]

Link to comment
Share on other sites

பரிதியைச் சுட்ட சத்தம் அடங்க முதல் இது 'கேபி' யின் வேலை என்று சொன்ன ஊடகங்கள் மீது கேள்வி இல்லை

பின்னர் விநாயகம் கைது என்று சோடித்து எழுதிய அதிர்வு கண்ணன் மீது ஒரு கேள்வியும் இல்லை,

தமக்குள் அடிபட்டு விட்டு, அதனை முற்று முழுதாக சிங்களம் மட்டுமே செய்தது என்று மக்களை முட்டாளாக்க முற்பட்ட செய்தித் தளங்கள் பற்றியும் ஒரு எழுத்தும் இல்லை.

ஆனால் உள் முரண்பாடுகளால் தமக்குள் பலியிடப்பட்டவர் பரிதி என்று எழுதினால் மட்டும் கூகிளில் தேடிப் பார்த்து களைத்துப் போகின்றீர்கள்.

அவர் அடிக்கடி google இல் தேடுவார். ஏனென்றால் உண்மையை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம். :rolleyes: உங்கள் கண்ணில் எதுவும் படவில்லை என்பதற்காக ஒருவர் மேல் அப்பட்டமாக குற்றச்சாட்டு வைக்க கூடாது. :D

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111407&#entry825225

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111407&st=20#entry825374

இன்னுமொரு நபர் பற்றி (அது அதிர்வு கண்ணனை பற்றியோ அல்லது வேறு யாரோ பற்றியோ :unsure:) கூட தேடி பார்த்ததாக கூறியிருந்த மாதிரி இருக்கு. எங்கு என்பதை மறந்து விட்டேன். இல்லாவிட்டால் அந்த link ஐயும் தந்து உதவி செய்திருப்பேன். :icon_idea:

Link to comment
Share on other sites

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

Link to comment
Share on other sites

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

நல்ல கதை நீளமில்லை. ஆனால் சின்னராசு சூப்பரா நடிச்சான்
Link to comment
Share on other sites

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

பாத்திரம் என்று கூறியதன் மூலம் இதுவும் ஒரு கட்டுக்கதை என்பதை ஏற்றுள்ளீர்கள். :D

ஆனாலும் நம்ம சின்னராசு என்று எழுதி விட்டீர்கள். கவனம்..... சில நாட்களில் உங்கள் பெயரையும் போட்டு கதை எழுத தொடங்கி விடுவார்கள். மக்கள் கோயில் கோயிலா போய் பாலபிசேகம் செய்தார்கள். அதனால் இறைவன் பருதி அண்ணாவை கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் சொல்லி விடுவார்கள். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=3] எல்லாவற்றையும் விட அந்த வழியால் வேலைக்குச் சென்றுவரும் நம்ம சின்னராசுவின் பாத்திரம்தான் சிறந்தது. :D :D [/size]

:D

நல்ல கதை நீளமில்லை. ஆனால் சின்னராசு சூப்பரா நடிச்சான்

அவருக்கு பெரிய விருது காத்து இருக்கு..எந்தப் பெரிய நடிப்பு நடிச்சு இருக்கிறார்

Link to comment
Share on other sites

பாத்திரம் என்று கூறியதன் மூலம் இதுவும் ஒரு கட்டுக்கதை என்பதை ஏற்றுள்ளீர்கள். :D

ஆனாலும் நம்ம சின்னராசு என்று எழுதி விட்டீர்கள். கவனம்..... சில நாட்களில் உங்கள் பெயரையும் போட்டு கதை எழுத தொடங்கி விடுவார்கள். மக்கள் கோயில் கோயிலா போய் பாலபிசேகம் செய்தார்கள். அதனால் இறைவன் பருதி அண்ணாவை கொலை செய்தார் என்று சந்தேகிக்கப்படுகிறது என்றும் சொல்லி விடுவார்கள். :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பல இணைப்புக்கள் அந்த அமைப்பின் பெயர் மற்றும் முகவரியுடன் ஏற்கனவே இந்த களத்தில் இணைக்கப்பட்டவை. இதை எழுதிய சுதந்திர ஊடகவியலாளர் ஏனோ **[/size][size=4]பெயரை [/size][size=4]குறிப்பிடவில்லை. ஆனால் தனது பெயரை (உண்மையான பெயராக இருக்கலாம்) மின்வலை முகவரியை (அது வேலை செய்கிறது) இணைத்து தனது மேல் நம்பிக்கை வையுங்கள் என உலகத்தை கேட்டுள்ளார். [/size]

[size=4]** [/size][size=4]எழுத்துப்பிழை திருத்தப்பட்டது [/size]

எவரும் வெளியாகத் தெரியும் எந்த அமைப்பின் பெயரையும் தமது ஆக்கங்களில் பாவிக்கமுடியும். எனவே பெயரைக் குறிப்பிட விருப்பம் தெரிவிக்காதவரின் கருத்து என்று எழுதப்படுவதற்கு எந்த நம்பகத்தன்மையும் இல்லை. அதனை ஆதாரமாக வைத்து தனது கதைகளை நம்பும்படி கேட்பது நியாயமுமில்லை.

பெயரை வெளியே சொல்லவிரும்பாத ஒருவரின் கருத்து இப்படி இருந்தால், அந்த அமைப்பில் முக்கிய பதவியில் இருப்பவரும் இந்த சுதந்திர ஊடகவியலாளரின் கதைகளில் உண்மை இருக்கின்றது என்பதற்கு உடந்தையாகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் பிரான்சை பற்றி சொல்லிவிட்டார்கள். அது ஒரு பானை சோற்றுக்கு பதமாக எடுத்தக்க ஒரு சோறாகாது.

மேற்குநாடுகளின் புலனாய்வுகள் விட்டு பிடிப்பார்கள். ஆனால் பிரான்சுப் புலனாய்வு விட்டு பார்க்கிறார்கள்.

தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும்தான் கோஸ்டி மோதல்களும், சண்டைகளும், கொலைகளும் நடக்கின்றன. சுயமாகத் தொழில் செய்து முன்னேறும் சமூகத்தில் தாதாக்களும் அடியாட்களும் வைத்து அதே சமூகத்தில் உள்ளவர்களின் உழைப்பில் வாழ்பவர்களும் பலர் இருக்கின்றார்கள். அரசியல் செய்பவர்களுக்கும் அதிகாரங்கள் தேவை என்பதால் கும்பல்களின் அனுசரணையும் தேவை. இதையெல்லாம் வெளிப்படையாகச் செய்யமுடியாது, செய்யவும் மாட்டார்கள் என்பது பார்க்கும் தமிழ்ப்படங்களில் இருந்தே புரிந்துகொள்ளலாம்!

Link to comment
Share on other sites

தமிழர்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும்தான் கோஸ்டி மோதல்களும், சண்டைகளும், கொலைகளும் நடக்கின்றன. சுயமாகத் தொழில் செய்து முன்னேறும் சமூகத்தில் தாதாக்களும் அடியாட்களும் வைத்து அதே சமூகத்தில் உள்ளவர்களின் உழைப்பில் வாழ்பவர்களும் பலர் இருக்கின்றார்கள். அரசியல் செய்பவர்களுக்கும் அதிகாரங்கள் தேவை என்பதால் கும்பல்களின் அனுசரணையும் தேவை. இதையெல்லாம் வெளிப்படையாகச் செய்யமுடியாது, செய்யவும் மாட்டார்கள் என்பது பார்க்கும் தமிழ்ப்படங்களில் இருந்தே புரிந்துகொள்ளலாம்!

தமிழ் படங்களில் அரசியல் தர செய்திகளா?. யார்? இவற்றை எடுக்கிறார்கள்?. புலம் பெயர் கோஸ்டிக்கும் பங்கா? நான் படம் பார்ப்பது குறைவு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.