Jump to content

நாடகப் போட்டியாக கவிதைப் போட்டிகள்


Recommended Posts

நாடகப் போட்டியாக கவிதைப் போட்டிகள்

- சாந்தி ரமேஷ் வவுனியன் -

ஊரில் சமய குரவர்களின் குருபூஜைகள், பாடசாலை, தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் மன்றங்கள், இவற்றுடன் சமய ஒன்றியங்கள், அமைப்புக்கள் ஊடாக பேச்சுப்போட்டிகள், திருக்குறள் மனனப்போட்டிகள், மற்றும் கவிதையெழுத, கதைகள் எழுத, கட்டுரைகள் எழுதவென மாணவர்களுக்கு இடையேயான போட்டிகளைப் பார்த்திருக்கிறோம், பங்குபற்றியிருக்கிறோம். அத்தகைய போட்டிகள் பல எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, நாடகக்கலைஞர்களையெல்லாம் உருவாக்கித் தந்திருக்கிறது.

பேச்சாற்றலை வளர்க்கும் முகமாக பேச்சுப்போட்டிகள், ஞாபகப்புலனைப் பலப்படுத்த மனனப்போட்டிகள், எழுத்தாற்றலை வளர்க்க எழுதும் வல்லமையுள்ளோர் அவரவர் வயதுக்கேற்ப வளர்க்கப்பட்டனர்.

எழுத்தாற்றல் என்கின்றபோது சுயமாக ஒரு மாணவனோ மாணவியோ 5 வயதானாலும் சரி 15 வயதானாலும் சரி சொந்தக் கற்பனை வளத்தையே அங்கு போட்டிகளில் ஊக்கப்படுத்தியும் வளர்த்தும் விடப்பட்டார்கள். நடுவர்களின் தீர்ப்புகளும் வயதுக்கு ஏற்றதான வெளிப்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டார்கள், வளர்த்தெடுக்கப்படுகிறார்கள

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.