Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மலரும் காந்தள் பூ


Recommended Posts

cf979971582ccd2db9d8846e9f971eed.jpg[size=4]மண்ணில் விழும் வித்துக்கள் அனைத்தும் முளைத்து மரமாக வேண்டும் என்ற காரணத்துடனேயே விழுகின்றன. அவற்றில் சில முளைத்து விருட்சமாகி விட பல ஏனோ முளைத்து வளராமல் வளர்ந்தும் பயன்தராமல் போய்விடுகின்றன.[/size][size=2]

[size=4]இயற்கையின் இந்தக் கொடை எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. விழுந்த வித்துக்கள் எல்லாம் முளைத்து விடுவதில்லை. முளைத்தவையெல்லாம் விருட்சமாகி விடுவதில்லை என்றாலும் ஒரு நோக்கத்துக்காக விதைக்கப்பட்ட வித்துக்கள் சரியாகப் பராமரிக்கப்பட்டு பயன்பெறுதலை நோக்காகக் கொண்டு வளர்க்கப்படுகின்றன.

இயற்கையின் தத்துவத்தை மீறி அபரிமிதமாக மனிதனால் எதையும் சாதித்து விட முடியுமா என்பது கேள்விக்குரிய விடயமாகவே இருக்கின்றது. சமய பண்பாட்டு பழக்கங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் விதி பற்றியும் முற்பிறப்பு, பலாபலன்கள் பற்றியும் பாவ வினை பற்றியும் பேசுவார்கள்.

இந்த சாஸ்திர சம்பிரதாயங்களை மீறி விஞ்ஞானமும் அறிவியலும் வளர்ந்திருந்தாலும் ஏதோ ஒரு கட்டத்தில் தோற்றுப் போனவர்களாக மீளவும் விதி பற்றியும் வினை பற்றியும் பேசிக் கொள்ள வேண்டியவர்கள் ஆகின்றனர்.

எண்ணிக்கைகளற்ற வித்துக்கள்

இலங்கையில் வடக்குக் கிழக்குப் பகுதி தமிழ் மக்களுக்குரிய பண்பாட்டு கலாசார விழுமியங்களுடன் கூடிய பாரம்பரிய தேசமாகக் கொள்ளப்படுகின்றது. வரலாற்றுச் சான்றுகளுடன் இந்த உண்மை நிறுவப்பட்டாலும் அதற்கான முழு அங்கீகாரமும் இதுவரை எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

வடக்குக் கிழக்கு தமிழர்களது தேசம் என்பதையும் அதை தமிழ் மக்கள் சுதந்திரமாகவும் சுயநிர்ணய உரிமைகளுடனும் ஆள வேண்டும் என்பதற்காகபோராட ஆரம்பித்தனர். இந்தத் தூண்டுதலை தமிழ் மக்களுக்கு வழங்கியவர்கள் சிங்கள மக்களே. அதிகாரத்தின் இருப்பு யாருடைய கையில் என்பது இந்தப் போராட்டத்துக்கு உந்துதல் ஆகியது.

ஒரு காலத்தில் அரசியல் சாணக்கியம் பெற்றவர்களாக தமிழ்த் தலைவர்கள் இருந்த போது சிங்களத் தலைவர்களுக்கு அவர்கள் வழிகாட்டியாக இருந்தனர். அந்த வளர்ப்பு பின்னர் விஷமாய் திருப்பி விடப்பட்டது. இந்த நாள் கொண்டு தமிழ் மக்கள் சிங்கள தேசத்தை எதிர்க்க வேண்டியவர்களாக மாற்றப்பட்டனர்.

அஹிம்சை வழியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வலுவடைந்து தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது. இதுவரையில் இருந்த அடக்கு முறைகளை ஆயுதம் கொண்டு மாற்றியமைக்க முற்பட்ட இளைஞர் அணி வலுவடைந்து ஓர் இனத்தின் விடுதலை இயக்கமாக மாற்றமடைந்திருந்தது.

அந்தநாளில் இருந்து தேச விடுதலையை நோக்காகக் கொண்டு போராளிகள் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொள்ள, விடுதலைப் போராட்டத்தின் இறுதிக்கணங்கள் என்று சொல்லப்படும் நாள்கள் வரை எண்ணிக்கையற்ற வித்துக்கள் விதைக்கப்பட்டன. தேசம் விடிய வேண்டும். ஈழம் மலர வேண்டும் என்ற நோக்கத்துக்காய் இந்த வித்துக்கள் விதையாக்கப்பட்டன.

எண்ணிக் கொண்ட நாள்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் கெரில்லா முறையில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டு சகல கட்டமைப்புக்களையும் கொண்ட மரபுவழி இராணுவமாக மாற்றிக் கொள்ளப்பட்டது. இருந்தாலும் சர்வதேச ரீதியில் இருந்த நெருக்கடிகளும் தடைகளும் தமிழீழ விடுதலைப்புலிகளை மரபு வழி இராணுவமாக ஏற்றுக் கொள்ளாது உலகத்தில் இருக்கக் கூடிய பயங்கரவாத அமைப்புப் பட்டியலிலேயே சேர்த்து வைத்திருந்தது.

அரசு என்ற அடிப்படையில் சிங்கள ஆட்சியாளர்கள் சர்வதேச ரீதியில் இதற்கான தூண்டுதல்களை வழங்கியிருந்ததுடன் காலத்துக்குக் காலம் அந்தத் தடையை நீடிப்பதற்கான வியூகங்களை சர்வதேச சமூகத்துக்கு வழங்கிக் கொண்டிருந்தனர்.

ஆயுத விற்பனைக்காக இராஜ தந்திரத் தொடர்புகளை வைத்திருந்த நாடுகள் தவிர ஏனைய நாடுகள் எல்லாம் பிராந்திய ஆதிக்க போட்டிகளின் அடிப்படையில் செயற்பட்டதால் இலங்கைத் தீவில் இரண்டு அரசுகள் இருக்கவிரும்பவில்லை. இதன் காரணமாக இலங்கையில் இடம்பெற்ற போர்குறித்து அவை உன்னிப்பான அவதானத்தைச் செலுத்தவில்லை.

சில வல்லரசுகள் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்ளும் வகையில் அயல்நாடுகள் இடையே உள்முரண்பாடுகளைத் தூண்டிவிட்டு அவதானிப்புக்களை அவற்றின் மீது செலுத்திவிட்டன. இதனால் விடுதலைப் புலிகள் எதற்காகப் போராடுகிறார்கள் என்ற நிலைப்பாட்டையே மாறுபட்டு புரியவைக்க முற்பட்டுள்ளனர். தவிர போராட்டம் குறித்து, சில சர்வதேச நாடுகள் புரிந்து வைத்திருந்தாலும் நேரடித் தலையீடுகளுக்கு அவை பின்னடித்தன அல்லது பாராமுகமாக இருந்தன.

இதனால் விடுதலைப் புலிகளை ஒழித்து விட வேண்டும் என்ற கை மேலோங்கியது.

தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சி கொண்ட விடுதலைப் புலிகள் மீது வலிந்த போர் நிறுத்த உடன்படிக்கையோடு அழித்தொழிப்பதற்கான திட்டத்தை சில வல்லரசு நாடுகள் இலங்கை அரசுடன் இணைந்து தீட்டிவிட்டன.

இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் அழிவு சர்வதேச நாடுகளால் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. அதில் தமிழ் மக்களின் பல நூறு உயிர்கள் தினமும் மாண்டு போவதையும் அந்தச் சமூகம் பார்த்துக் கொண்டேயிருந்தது.

பயிரிடையே களைகள்

விடுதலைப்போராட்டம் மரபு வழிக்கட்டமைப்பை அடைந்திருந்த போது திறமை மிக்க போராளிகள் உருவாக்கப்பட்டிருந்தனர். அவர்களது தியாகம், அர்ப்பணிப்பு, கடமையுணர்வு போராட்டத்தை நின்று நிலைக்கச் செய்தது.

2001 ஆம் ஆண்டு விடுதலைப் போராட்டத்துக்கான விலைப்பேச்சு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் கேள்விகள் திட்டமிட்டு மலிய வைக்கப்பட்டன. (விலைப்பேச்சு என்பது நோர்வே நாட்டின் அனுசரணையுடன் அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை குறிக்கிறது.)

உண்மையில் நோர்வே விடுதலைப் புலிகளை அழிக்கத் தூண்டியதா அல்லது தார்மீகப் பொறுப்புடன் நடந்து கொண்டதா என்பதில் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் வெளிவருகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் இறுக்கமான கட்டமைப்புக்குள்ளேயே நம்பிக்கை மிக்க போராளிகள் எதிராளிகளாக மாற்றப்பட இந்த இடைவெளி போதுமானதாக இருந்தது.

கிழக்கில் பெயர் குறிப்பிடக் கூடிய போராளியாக இருந்த கருணா விடுதலைப் புலிகளுக்கு எதிராக மாறிக் கொண்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் தமிழனை தமிழனே கொல்லும் கொடுமை நிகழ்ந்தேறியது.

கருணாவின் சூழ்ச்சியை விடுதலைப் புலிகள் வெளியளவில் பெரிதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இராணுவ ரீதியில் கருணாவுக்கு இருந்த போரிடும் ஆற்றல் மற்றும் விடுதலைப் புலிகளின் இரகசியத் திட்டங்கள், நகர்வுகள் குறித்த விவரங்கள் சிங்கள இராணுவத்துக்கு கொடுக்கப்பட்டது என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற எதிரான போராளிகள் பலர் இறுதிக் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அந்த அமைப்பில் இருந்தே செயற்பட்டிருந்தனர் என வாய் வழி வியாக்கியானங்கள் பேசப்படுகின்றன.

இது உண்மையென்று அறியப்படாவிடினும் சூழ்ச்சி ஊடுருவல் மூலம் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களை முற்று முழுதாக அறிந்து கொண்டது என்பதை மறுக்க முடியாது.

புலம்பெயர்ந்து போராட்டம்

நிலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டம் பலவீனப்பட்டுக் கொண்டிருந்த வேளை புலத்தில் அறவழிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. புலம் பெயர்ந்திருக்கக்கூடிய தமிழ் மக்கள் வன்னியில் இடம்பெறும் படுகொலைகளை நிறுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

ஆனாலும் அந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை. அவர்களது கோரிக்கைகள் கொலை செய்யப்பட்டதுடன் இறுதிவரை தமிழ் மக்கள் மீதான கொலைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் தமிழின உணர்வாளர்களின் எதிர்ப்புப் போராட்டம் ஏட்டுச்சுரக்காய் ஆனது.

உண்மையில் விடுதலைப் போராட்டம் பற்றி அடிப்படைகள் எதனையும் புரிந்து கொள்ளாத தமிழகத் தலைவர்கள் ஈழப்படுகொலையை நிறுத்துமாறு கோரிக் கொண்டனர். இன்றும் அவர்களது கோஷம் நிறைவுறவில்லை. ஆனாலும் இவர்களின் கருத்து ஒரு பொருட்டாகவே கொள்ளப்பட்டதாகத்தெரியவில்லை.

மீட்பர்களாக இராணுவம்

இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களை திட்டமிட்டு படுகொலை செய்த இராணுவம் எஞ்சியோரை மீட்டு அகதி முகாம்களுக்கு கொண்டு சென்றனர். இதன்போது பயங்கரவாத போரை தாம் வெற்றி கொண்டு விட்டதாகவும் பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டு விட்டனர் எனவும் மகிழ்ச்சி கொண்டாடிய இராணுவம் தமிழ் மக்களின் மீட்பர்களாக தம்மை காட்டிக் கொள்ள முற்பட்டது.

இன்றளவும் வடக்குக் கிழக்கில் சமூக சேவைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையில் நிலையான புரிந்துணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் அரசு கூறிக்கொள்கிறது.

மாவீரர்கள்

ஈழக்கனவோடு உயிர் நீத்த தமிழ்ப் போராளிகள் "தங்களின் சாவால் இன்னொரு தமிழன் வாழ்வான்" என்ற நம்பிக்கையோடு இரையாகிப் போக, இன்று தமிழ் இனம் தனது இருப்புக்காக அலைய விடப்பட்டுள்ளது. கட்டியெழுப்பப்பட்ட நம்பிக்கைகளும், விடுதலைப் போர் பற்றிய அபிப்பிராயங்களும் நசுங்கிப் போக இறந்து போன வீரர்களை எள்ளி நகையாடும் கூட்டம் எம்மிடத்திலே தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இவர்களின் இறப்பை நியாயப்படுத்திய பலர் அநியாயம் அந்தப் பிள்ளைகள் என்று கவலைப்படுகின்றனர். இது இவர்களின் இருப்புக்கான பரிதவிப்பு. போராளி தனது உயிரை எதற்காக அர்ப்பணித்தானோ அந்த நோக்கம் இன்று சிதைந்து போயிருக்கின்றது.

திட்டமிட்டு சிதைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் உண்மையான தமிழ் உணர்வுள்ள எந்த மனிதர்கள் மத்தியிலும் வீரத்தின் உருவம் சிதைந்து போகவில்லை. எம்மில் இருக்கும் களைகளை களைவதே மாவீரர்களுக்கு நாம் செய்யும் தியாகம்.[/size][/size][size=2]

http://www.onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=6341042127217000[/size]

  • Like 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள், எந்தவித குற்றங்களுமின்றி😂
    • மக்கள் ஏன் 'வாயு'வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா? பரத் ஷர்மா பிபிசி 23 பிப்ரவரி 2018 புதுப்பிக்கப்பட்டது 1 ஏப்ரல் 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES 2018இல் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமானப் பயணி ஒருவர் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது என்ற செய்திதான் அது. துபையில் இருந்து நெதர்லாந்து சென்று கொண்டிருந்த அந்த விமானத்தில் ஆஸ்த்திரியாவை சேர்ந்த பயணியின் இந்த செயல், முதலில் அனைவரின் மூக்கையும் பொத்திக் கொள்ள வைத்தது. பிறகு துர்நாற்றம் தாங்க முடியாமல் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இதற்கு 'குசு தாக்குதல்' (Fart Attack) என்று பெயரிடப்பட்டது. டிரான்சேவியா விமான நிறுவனத்தின் விமானம் இந்த அதிரடி தாக்குதலை எதிர்கொண்டது. கட்டைவிரலை திருடியவர் மீது சீனாவின் கோபம் தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் சரி, இந்த சம்பவம் முதலில் வயிறு குலுங்க சிரிக்க வைத்தாலும், வயிறு பற்றிய பிரச்சனைகளை கவலையுடன் அணுக செய்கிறது. இந்த சம்பவத்தின் மையப்புள்ளியான அந்த பயணியின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? உடலில் இருந்து ஏன் காற்று வெளியேறுகிறது?   பட மூலாதாரம்,GETTY IMAGES அந்தப் பயணி வேண்டுமென்றே காற்றை வெளியேற்றியிருக்கமாட்டார். இதற்கு காரணம் என்ன? காற்று உடலில் இருந்து ஏன் வெளியேறுகிறது? இது நோயா? இதை கட்டுப்படுத்த முடியுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன. ஹெல்த்லைன் என்ற வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நம் உடலில் இருந்து மலவாய் வழியாக பிரியும் வாயுவானது உண்மையில் குடலில் இருந்து வாயுவை பிரித்தெடுக்கும் இயல்பான உடல் இயக்க செயல்முறை. நாம் உண்ணும் உணவு செரிமாணம் ஆகும்போது, அதன் ஒரு பகுதியாக பிரியும் வாயு குடலில் இருந்து மலக்குடல் வழியாக வெளியேறுகிறது. உலகில் எங்கும் நிறைந்திருக்கும் காற்று, நமது வயிறு, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் ஆகியவற்றை உள்ளடக்கிய நமது மொத்த செரிமான மண்டலத்திலும் இருக்கிறது. புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? அதன் வடிவம் மாறும்போது, கடந்து வரும் பொருட்களைப் பொறுத்து அது நாற்றமாகவும், மணமாகவும் உருமாறுகிறது. நமது உடலில் உள்ள வாயுக்களின் அளவு மாறுபடும் தன்மை கொண்டது. வாயு அதிகமாகும்போது, அது வாய் வழியாக வெளியேறினால் 'ஏப்பம்' என்றும், மலக்குடல் வழியாக வெளியேறினால் 'குசு' என்றும் அழைக்கிறோம். உடலில் வாயு அதிகரிப்பதற்கான காரணங்கள் இவைதான்: கரியமில வாயு கொண்ட பானங்களை பருகுவது மற்றும் உணவை மெல்வதன் மூலமாக நாள் முழுவதும் காற்று பலவழிகளில் உடலுக்குள் செல்வது. சிறுகுடலில் தேவைக்கு அதிகமாக பாக்டீரியாக்களின் அளவு அதிகரிப்பது, இரண்டாம் வகை நீரிழிவு நோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுகுடலில் ஏற்படும் குளூட்டன் ஒவ்வாமை (Coeliac disease) என்ற நோய் பாதிப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES கார்போஹைட்ரேட்டை முழுமையாக செரிமாணம் செய்யும் திறன் குறைந்துபோவதால் வாயு உருவாகிறது. சிறுகுடலில் உள்ள என்சைம்கள் எல்லா உணவுகளையும் செரிமாணம் செய்யவதில்லை. சரியாக செரிமானம் செய்யப்படாத உணவு, பெருங்குடல் அல்லது மலக்குடலை அடையும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் அந்த உணவை ஹைட்ரஜன் மற்றும் கரியமில வாயுவாக மாற்றுகின்றன. எப்போது வயிற்று வலி ஏற்படும்? பெருங்குடல் அல்லது மலக்குடலில் உருவாகும் இந்த வாயுக்கள் எங்கே செல்லும்? வாயுக்களில் சிலவற்றை நமது உடலே உறிஞ்சிவிடும். ஆனால் பெருங்குடலின் மேல் பகுதி மற்றும் சுவற்றின் மீது அழுத்தம் அதிகமாகும்போது வயிற்று வலி ஏற்படும், சிலருக்கு மார்பிலும் வலி ஏற்படும். இறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர் இந்த வாயுக்கள் உடலில் இருந்து வெளியேறினால்தான் வலி குறையும். உதாரணமாக ஒரு பலூனை எடுத்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் அதில் காற்றை செலுத்தினால் அது பெரிதாகும். காற்றை செலுத்தச் செலுத்த விரிவடைந்துக் கொண்டே போகும் அதன் தாங்கும் திறனுக்கும் ஒரு வரம்பு உண்டல்லவா? சரி உடலில் அழுத்தம் கொடுக்கும் வாயுவை அடக்க முயற்சித்தால் என்ன நடக்கும்? பொதுவாக வயிற்றில் உருவாகும் வாயுவை கட்டுப்படுத்தக்கூடாது. ஆனால் கட்டுப்படுத்தினாலும் இழப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் இப்போது கட்டுப்படுத்தினாலும், அடக்கப்பட்ட வாயுவை சிறிது நேரத்திற்கு பின் வெளியேற்றுவது அவசியம். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை உட்கொண்டு, காற்றை உடலுக்குள் கிரகிக்கிறோம், அது மாலை நேரத்தில் வெளியேறும் வழியைத் தேடுகிறது. பெருங்குடல் மற்றும் மலக்குடலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டிய வாயுவின் அளவு அதிகரிக்கும்போது, குடல் தசைகள் விரிவடைகின்றன. அப்போது உடலினுள் ஒருவிதமான மாற்றம் ஏற்படுகிறது, மலம் கழிக்க வேண்டும் என்ற உந்துதலும் ஏற்படுகிறது.   இது கவலைக்குரியதா? நாம் மலம் கழித்து வயிறு சுத்தமான பிறகும் மலத்துளை வழியாக காற்று பிரிவதற்கு இதுவே காரணம். இதைத் தவிர, சிலருக்கு உடற்பயிற்சி செய்யும்போதும், இருமல் வரும்போதும் உடலில் இருந்து வாயு பிரியும். வழுக்கைத்தலை இருக்கும் ஆண்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் பொதுவாக உடலில் இருந்து காற்று பிரிவது என்பது, வேர்வை வெளியேறுவது போன்று நமது உடலின் இயல்பான செயல்பாடு, இதில் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிரிட்டனின் தேசிய சுகாதாரத் திட்டம் (NHS) என்ற வலைத்தளத்தில் இவ்வாறு காணப்படுகிறது, 'ஒவ்வொரு மனிதனும் உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். ஆனால் அதன் அளவு ஒருவருக்கொருவர் மாறுபடும்.' பொதுவாக ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை உடலில் இருந்து காற்றை வெளியேற்றுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் உடலில் இருந்து காற்று பிரிவது இயல்பானதாக இருந்தாலும், எதுவாக இருந்தாலும், அது அதிகரிக்கும்போது சிக்கலாகிறது. வழக்கத்தைவிட அதிகமாக காற்று வெளியேறுவதாக ஒருவருக்கு தோன்றினால் அதைப் பற்றி கவனம் செலுத்த வேண்டும். சரி, மலக்குடலில் காற்று உருவாவதை குறைப்பது எப்படி? உணவு முறையில் மாற்றம் மலக்குடலில் அதிக அளவு வாயு உருவாவதை தவிர்க்க வேண்டும் என்றால், உணவுப் பழக்கத்தை சரிசெய்ய வேண்டும். உங்கள் உடல் பால் பொருட்களை ஏற்றுக்கொள்ளாது என்றாலோ, பால் ஒவ்வாமை இருந்தாலோ, பால் பொருட்களை குறைத்து உண்ணும்படி மருத்துவர் ஆலோசனை கூறலாம். பால் பொருட்களுக்கு பதிலாக மாற்று பொருட்களை கூடுதலாக உட்கொள்வதால், உடலில் செரிமான நடைமுறை இலகுவாகும். உடலில் உருவாகும் நாற்றத்தை குறைக்க விரும்பினால் கார்பனேற்றப்பட்ட உணவுகளையும், பானங்களையும் உண்பதையும் குறைத்துக் கொள்ளுங்கள். ஆனால், காற்றை மலக்குடல் அதிகமாக வெளியேற்றும் நிலை இருந்தால், திடீரென்று நார்ச்சத்து கொண்ட உணவின் அளவை அதிகரிக்க வேண்டாம், அது வாயு பிரச்சினைகளை அதிகரிக்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES நாற்றமெடுக்கும் காற்றை வெளியேற்றுவதை தவிர்க்கும் வழிமுறைகள் சிறிது சிறிதாக உணவை சாப்பிடவும். ஒரே நேரத்தில் அதிக உணவை உண்ணவேண்டாம், நன்கு மென்று சாப்பிடவும். உடற்பயிற்சி செய்வது அவசியம். உடல் இயங்கினால்தான் உணவு சுலபமாக செரிமானமாகும். அவசரமாக சாப்பிடும்போது அதிக காற்று உடலுக்குள் செல்கிறது. எனவேதான் நடக்கும்போது சாப்பிடக்கூடாது, ஒரு இடத்தில் உட்கார்ந்துதான் சாப்பிடவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. சுயிங்கம் அதிகம் சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். அதிக சுயிங்கம் சாப்பிடுபவர்கள் உடலில் அதிக அளவு காற்று செல்கிறது. அதுவும் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதிக வாயு உற்பத்தி செய்யும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். பிரக்டோஸ் எனப்படும் பழச் சர்க்கரை, லாக்டோஸ் எனப்படும் இரட்டை சர்க்கரை, (காலக்டோஸ், குளுக்கோஸ்), இன்சுலின், நார்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளிட்ட சில உணவுப் பொருட்களில் இருக்கும் சிறப்பு கார்போஹைட்ரேட்டுகள் வாயு வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் குடலுக்குள் சென்று உணவு செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். பட மூலாதாரம்,GETTY IMAGES சோடா, பீர் மற்றும் பிற கார்பனேடட் பானங்களும் உடலில் வாயுவை அதிகரிக்கச் செய்கின்றன. அவற்றில் இருந்து எழும் காற்றுக்குமிழ்கள், உடலுக்குள் சென்று வாயுவாக மாறுகிறது. இவற்றில் சில செரிமான பகுதிகளை அடைந்து மலக்குடல் வழியாக வெளியேறுகின்றன. எனவே இதுபோன்ற பானங்களை தவிர்த்து, அதற்கு பதிலாக தண்ணீர், தேநீர், பழச்சாறு அல்லது வொயின் அருந்தலாம். நமது செரிமான உறுப்புகளில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால் அவற்றில் சில ஹைட்ரஜன் வாயுவை இன்னும் திறம்பட நீக்குகின்றன. புரோபயாடிக் (probiotic) எனப்படும் நுண்ணுயிர் கலந்த சிறுவாழூண் உணவில் இதே போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் காணப்படுகின்றன. புகை பிடிப்பவர்களுக்கும் வாயுத்தொல்லை அதிகமாக இருக்கும். அதேபோல, மலத்தை வெளியேற்றாமல் அது அதிக நேரம் மலக்குடலிலேயே தங்கி விடும்போதும் மலக்குடல் வெளியேற்றும் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால்தான் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மலம் கழிக்காவிட்டால் துர்நாற்றம் வீசுவதும், அது நம்மையே முகம் சுளிக்க வைக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. மருத்துவரிடம் செல்ல வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES உடலில் வாயு ஏற்படுவதோ அல்லது அதை மலக்குடல் வெளியேற்றுவதோ பிரச்சனை இல்லை. அதற்காக கவலைப்படவேண்டாம். உணவு முறையையையும், வாழ்க்கை முறையையும் சற்று மாற்றினாலும், பொதுவான சில மருந்துகளே போதுமானது. ஆனால், வாயு அதிகமாக வெளியேறுவது வேறு சில நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதையும் மறுக்கமுடியாது. டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய் எனவே காற்று அதிகமாக வெளியேறும் போது, அதனுடன் கீழ்காணும் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்துகிறோம்: வலி தலைசுற்றல் வாந்தி வயிற்றுப்போக்கு மலக்குடலில் இருந்து காற்று வெளியேற்றுவதில் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது அது குறித்து கேலி கிண்டலுக்கு ஆளாகியிருந்தாலோ இந்த கட்டுரையை படித்த பிறகு தெளிவு ஏற்படலாம். உங்களை கேலி செய்பவர்களுக்கு படித்தும் காட்டி உங்களிடம் இருந்து வெளியேறிய காற்று கட்டுப்படுத்த தேவையற்றது, அதற்கு நீங்கள் காரணமல்ல என்பதையும் நிருபிக்கலாம். ஆனால், இது அனைவரும் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய விடயம். ஏனெனில் ஒருவரின் உடலில் இருந்து வெளியேறிய காற்று விமானத்தையே தரையிறக்கிவிட்டதே... https://www.bbc.com/tamil/india-43166184
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • அந்த  மூன்று பேரில் ஒருத்தன், கூடப் பிறந்த சகோதனாம். எவ்வளவு கீழ்த்தரமான மனிதர்கள். 😡
    • ஓம். சிலவேளை…. அந்த இடம் 27,000 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் குறைவான இடமாகவும் இருந்திருக்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.