Jump to content

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????


Recommended Posts

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ????????

600343_10151185901429891_894084362_n.jpg

என்இனமும் என்மண்ணும்

சிறக்க களமாடிய தவக்கொழுந்துகளுக்கு

வடை றோலின் பெயரில்

வணக்க விழாவாவாம்

கூதல் குடிகொண்ட

புலம்பெயர் மண்ணில்

புலன் பெயர்ந்தவர்களால்

புலம்பெயர்க்கப்பட்ட

அந்நியம் தொட்டு

அருவருப்படைந்த

கார்த்திகைப்பூக்கள்

தலைநிமிர்ந்து சிரிக்கவில்லை

உங்களை வணங்குகின்றோம்

என்றபெயரில் களியாட்டா விழா

கொதிக்க கொதிக்க கொத்துறொட்டியும்

மொறுமொறுப்பாய் றோல்சும்

கல்லா கட்டும் உணவ(ன்வணக்)க விழாவில்

இவைகளைப் பாராது

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ??

582_10151185900874891_1605091226_n.jpg

என்மண்ணில் உயிருடன் உலாவும்

கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி.........

அவள் வாழ்வும் அவள்

பிள்ளைகளும் நடுறோட்டில் ..........

சிங்களத்தின் கொட்டடியில்

பல கார்த்திகைபூக்கள் மனநிலை

பிறழ்ந்து கருகிப்போயின ........

இவர்களுக்கு வழிசொல்லி ,

கொதிக்க கொதிக்க கொத்துறொட்டி

வித்து மொறுமொறுப்பாக

றோல்சும் சாப்பிட என் கூதல்

நகரத்து மக்களுக்கு மனமில்லை

இவைகளைப்பாராது ஏன்பள்ளி கொண்டீர் ஐயா??

கார்த்திகைப் பூக்களை மனதால்

வரித்தவன் உங்களைப் போல்

மௌனமாகி மனதால்

உங்களை வணங்கி செயலால்

காட்டுகின்றான் கொட்டமடிக்கும்

குள்ளநரிகள் மத்தியில்

அவன் பெற்ற பெயர் துரோகி !!!!!

இவைகளையும் பார்க்காமல்

ஏன்பள்ளி கொண்டீர் ஐயா ?????????

******** படங்கள் யாழில் இருந்து . நன்றி யாழ் இணையத்திற்கு .

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாவற்றிற்குமே அந்திமக்காலம் என்று ஒன்று இருக்கு, அதே போல இவைகளுக்கும் காலம் அதிகம் இல்லை

இன்னும் ஓரிருவருட்டங்களின் பின்னர் இவையும் காணாமல் போகலாம். மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாதது.

Link to comment
Share on other sites

நேற்று தூயவனும், அருவியும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்..! :lol:

Link to comment
Share on other sites

இது புலம்பெயர்ந்த எம்மைகேவலப்படுத்தும் சுத்த சுயநலவாதக் கவிதை.அக்காவை வைச்சு பேக்கரி வாங்கின வடிவேலுமாதிரி எங்களைவித்து நீங்கள் கவிதை எழுதிகிழிச்சு என்ன செய்ய போறியள்?

Link to comment
Share on other sites

நேற்று தூயவனும், அருவியும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்..! :lol:

என்ன சொல்லவாறியள்? இவை ரண்டுபேரும் தேத்தண்ணி குடிக்கதான் அங்கை போனவையோ?

Link to comment
Share on other sites

என்ன சொல்லவாறியள்? இவை ரண்டுபேரும் தேத்தண்ணி குடிக்கதான் அங்கை போனவையோ?

அதுவல்ல அதன் சாராம்சம்.. :rolleyes:

ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்தால் அதற்குரிய குறைந்தபட்ச வசதிகளை வழங்கவேண்டும் என்பது சட்டம். குறிப்பாக, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, உணவு வசதி (நேர அளவைப் பொறுத்தது.) இவை மேற்குல‌க‌ விதிக‌ள். :unsure:

இங்கே உண‌வு விற்க‌ப்ப‌ட் :rolleyes: ட‌தைக் க‌ண்டித்திருக்கிறார் கோம‌க‌ன். அத‌ன் விளைவால் எழுந்த‌ க‌ருத்தே என‌தும்.

பி.கு: எனக்கும் நேற்று நல்ல தலையிடி. இவர்கள் தேனீர் குடித்ததும் பத்தாது என்று என்னை ஒப்புக்கு கேட்டார்கள்..! நானும் சும்மா மரியாதைக்கு வேண்டாம் எண்டவுடன் அப்படியே கைவிட்டுவிட்டார்கள்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோவிலிலும் தானே, மரக்கறி ரோல்சும், மசாலா தோசையும் விக்கிறார்கள்?

அதற்காகக் கோவிலுக்குப் போகாமல் விடுவதா?

[size=4]என்மண்ணில் உயிருடன் உலாவும்[/size]

[size=4]கார்த்திகைப்பூ பெற்ற பெயர் வேசி.........[/size]

மேலுள்ள வரிகளின் மூலம், எல்லோரது மனத்தையும், மாற்றுக்கருத்தாளர்கள் என்று தங்களை அழைப்பவர்களின் மனங்களையும் கூட, நீங்கள் புண் படுத்தி விட்டீர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்!

கவிதைக்கு நன்றிகள், கோமகன்!

Link to comment
Share on other sites

இது புலம்பெயர்ந்த எம்மைகேவலப்படுத்தும் சுத்த சுயநலவாதக் கவிதை.அக்காவை வைச்சு பேக்கரி வாங்கின வடிவேலுமாதிரி எங்களைவித்து நீங்கள் கவிதை எழுதிகிழிச்சு என்ன செய்ய போறியள்?

உங்கள் கருத்திற்கும் வரவிற்கும் மிக்க நன்றிகள் வண்டுமுருகன் . உண்மையை எழுதுவதற்கு பெயர் சுயநலமா உங்கள் ஊரில்??? அக்காவை வித்து பேக்கரி வாங்கினது வடிவேலு . நான் என் இனத்தையும் மாவீரர்களையும் இந்த கொத்துரொட்டி வடிவேலுகள் வித்துவிடக் கூடாதென்றுதான் எழுதுகிறேன். . மொத்ததில் வடிவேலு இந்த புலத்து வியாபரிகளும் , அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்றவர்களும் தான் . .மனச்சாட்சியே இல்லாமல் பொய்களுக்கு துணைபோகும் நீங்களும் மனிதர்களா என்று சற்று உங்கள் மனசாட்சியை தட்டுங்கள் . திறக்கட்டும் துருப்பிடித்த இரக்கமற்ற உங்கள் இதயங்கள் ..... இதயம் முழுதும் ஈரம் நிறைந்த மாவீரர்களுக்காகவாவது......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோமகன் மாவீரர் நாள் நிகழ்வுக்கு நானும் போயிருந்தேன். கிட்டத்தட்ட 1 மணிவரை யாரும் உணவகத்தின் பக்கம் போகவில்லை. அதிக தூரத்திலிருந்தது எல்லாம் மக்கள் இதற்காக வருவார்கள் கடும் குளிர் மழை வேறு சிறிய பிள்ளைகள் நிறையப்பேர் வந்திருந்தார்கள். காலை 5 மணிக்கே செயற்பாட்டாளர்கள் வந்துவிட்டனர். வந்த நேரம் தொடக்கம் அவர்களும் ஓடியோடி எதோ ஒரு வேலையைச் செய்துகொண்டு தான் இருந்தார்கள். எல்லோராலும் பசியைப் போருக்க முடியாது.தங்கள் நேரத்தை ஒதுக்கி.வேலைவேட்டிகளை விட்டு,பல மைல்கள் பிரயாணம் செய்து வருபவர்கள் ஒன்றும் உண்ணாமல் குடிக்காமல் விரதம் இருங்கோ என்று நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கட்டாயம் விரதம் இருந்து மற்றவர்களுக்காக நடிப்பதிலும் விட போசிக்கும் நேரம் உணவு விற்றால் வாங்கி உண்பதில் என்ன தவறு. உணவு விற்பனை கூட மண்டப ஒழுங்குகள் செலவுகளுக்காகத்தானே விற்கப்படுகின்றன. நீங்கள் ஏன் அதை ஊதிப் பெரிதுபடுத்துகிறீர்கள் என்றுதான் எனக்கு விளங்கவில்லை. முதலில் நீங்கள் மாவீரர் தினப் பொது நிகழ்வு எதிலாவது கலந்து கொண்டீர்களா. இல்லை என்பது உங்கள் பதிலாயின் நீங்கள் இதுபற்றிக் கதைக்க உரிமை அற்றவர். நான் போனேன் ஆனா ஒன்றும் உண்ணவில்லை எனில் அது உங்கள் பிரச்சனை. :D

Link to comment
Share on other sites

கவிதை எல்லாம் நல்லா எழுதாலாம் ஹால் காசும் செக்யூரிட்டி காசும் mic செட் மற்றும் இதரபல செலவுகளுக்கும் கொத்துரொட்டி காசு தான் அன்னை உதவுது......... தாயாக மாவீரர் தினத்திலும் கலை நிகழ்சிகள் நடந்து தான் இருக்கு அதை நாங்கள் நேரிலையும் பாத்திருக்கம் மற்றது ஒருத்தர் செத்தால் உடன சாப்பாட்டு கொண்டு போய் கொடுக்கிறது தமிழர் பண்பாடு அந்த 31 நாளும் ஒவொரு வீட்டில் இருந்தும் சாப்பாடு வரும்.....

Link to comment
Share on other sites

கோவிலிலும் தானே, மரக்கறி ரோல்சும், மசாலா தோசையும் விக்கிறார்கள்?

அதற்காகக் கோவிலுக்குப் போகாமல் விடுவதா?

மேலுள்ள வரிகளின் மூலம், எல்லோரது மனத்தையும், மாற்றுக்கருத்தாளர்கள் என்று தங்களை அழைப்பவர்களின் மனங்களையும் கூட, நீங்கள் புண் படுத்தி விட்டீர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்!

கவிதைக்கு நன்றிகள், கோமகன்!

உங்கள் கருத்துக்களுக்கும் வரவிற்கும் மிக்க நன்றிகள் புங்கையூரான் . மேலும் நான் இந்தக்கவிதையை பொழுதுபோக்குக்காகவோ அல்லது நானும் இருக்கின்றேன் என்று காட்டவோ எழுதவில்லை . எனது கண்ணால் கண்டு வெதும்பி நேரடி ஆதரத்துடன் தான் எழுதினேன் . நிட்சயம் இது எல்லோரையும் கொதிக்கவைக்கும் என்பதும் எனக்குத்தெரியாத விடையமல்ல . மேலும் , மாவீரர்களுடன் சுத்த போலித்தனமான கோயில்களை கொண்டு சென்று நீங்களே ஒப்பிடுவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது . சுத்த போலித்தனங்களும் பிற்போக்குதனங்களும் , ஊட்டி வளர்க்கப்படும் லூசுத்தனமான கோவில்களும் , தன் இனத்துக்காக எல்லாவற்றையும் துறந்து போராடிய புனிதர்களையும் ஒப்பிடுவதா????? அந்த புனிதர்களின் நினைவுகளைக் கொண்டாடும் இடத்தில் றோலும் , பனிசும் சாப்பிட்டு மகிழ்ச்சி விருந்து கொண்டாடுவதா??? அல்லது அவற்றை வித்து காசாக்குவதா???? அந்த இடத்தில் வியாபாரம் செய்வதை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது???? ஒருமணித்தியாலம் இந்தப் புனிதர்களுக்காக பசி பொறுக்காதவர்கள் தேசியம் பேசுவது முரண்நகை புங்கையூரான் . தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லத்துக்கு பக்கத்தில் மாவீரர் நாளில் ஒரு கச்சான் காறியாவது கடலை விற்பதை கண்டிருக்கிறீர்களா??????

அத்துடன் உண்மையைத்தானே அந்த வரிகளில் எழுதினேன் புங்கையூரான் . அப்படித்தானே புலம்பெயர்ந்தவர்கள் அந்த பெண்களை அருவருப்புடன் நோக்குகிறார்கள் . உண்மைகளை அந்த அந்த நேரத்தில் உரத்து பேசாமல் இருப்பது கூட என் இனத்துக்கு செய்யும் ஒருவித துரோகம்தான் புங்கையூரான் . எங்கு தப்பு நடந்தாலும் நான் பேசுவேன் என் இனத்துக்காகவும் ஒரு மனச்சாட்சியுள்ள கவிஞனாகவும் .

Link to comment
Share on other sites

அருமை .......இந்தக்கவிதையில் கீழ் உள்ள வசனங்களை மிஸ் பண்ணப்பட்டுள்ளது .இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

[size=5]ஒண்டுக்கும் ,இரண்டுக்கும் ,இருக்க மலைசல கூடம் ........[/size]

Link to comment
Share on other sites

அதுவும் ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் விமர்சிச்சாலும் ஏற்றுக்கொள்ளலாம் இவர்கள் எல்லாம் சந்தர்ப்பம் பாத்துக்கொண்டு இருந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுபவர்கள்

Link to comment
Share on other sites

நேற்று தூயவனும், அருவியும் தேனீர் குடித்துக்கொண்டிருந்தார்கள்..! :lol:

நன்றி இசை வருகைக்கும் கருத்திற்கும் .

Link to comment
Share on other sites

எல்லாவற்றிற்குமே அந்திமக்காலம் என்று ஒன்று இருக்கு, அதே போல இவைகளுக்கும் காலம் அதிகம் இல்லை

இன்னும் ஓரிருவருட்டங்களின் பின்னர் இவையும் காணாமல் போகலாம். மாற்றம் ஒன்று தானே உலகில் மாறாதது.

உண்மையான யோசிக்க வைக்கும் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் ஜீவா .

Link to comment
Share on other sites

கோமகன் அண்ணா உங்கள் கருத்துப் படி நாங்க விரதம் இருந்து வீட்டிலேயே மாவீரர் தினம் அனுஸ்டிச்சா நல்லம் என்று நினைக்கிறீங்க? இதைதான் அரசாங்கம் ஆசைப் படுது. தேசியத்தின் பெயரால் தமிழர் ஒன்று கூடக் கூடாது என்று. நரிகளோ சற்று வித்தியாசமாக புலிகளின் பெயரால் தமிழர் ஒன்று சேரக் கூடாது என்று நினைக்கிறார்கள். நம்ம உள் குத்து ஜனநாயக வாதிகளோ இப்பிடி பிழை பிடிச்சே விருது வாங்குரார்கள். இப்பிடியே கத்தி கத்தி எதிர்காலச் சந்ததிக்கு மாவீரர் தினம் என்றால் என்ன என்று தெரியாமல் ஆக்குங்கோ.மாவீரர் தினத்தில் சாப்பிட வேண்டாம் என்று தலைவர் சொன்னவரோ? இல்லை அந்த நிகழ்வை நாடாத்த வரும் செலவுகளுக்கு இலங்கை அரசு பணம் தருமா? இல்லை அந்த நிகழ்வை நடாத்துவதற்க்காக மூன்று நாலு நாளாக வேலை வெட்டி குடும்பம் விட்டு குளிரில் காயும் அந்த தொண்டர்கள் பட்டினியில் கிடக்க வேண்டுமா? வெறுமனே வந்து தீபம் ஏற்றி உடனே சென்றால் யாருக்கும் பசியோ தாகமோ இருக்காது. முழு எழுச்சி நிகழ்வையும் பார்க்கணுமே அப்பதானே வருங்கால சந்ததி எமது போராட்டம் மாவீரர் பற்றி அறியும். நாட்டிலே சமாதிகள் ஒருக்கா அமைச்சால் வேறு செலவு இல்லை. அங்குள்ள சவுண்டு காரன் சும்மா வந்து லவுஸ் பீக்கர் கட்டுவான்- இங்கு வெள்ளையனுக்கு அதிக காசு கொடுக்கணும் அதுக்கு எங்கே போக? பல நூறு கிலோ மீற்றர் துரத்தில் இருந்து வாறவர்கள் எப்பிடி இருப்பார்கள்? நீங்க மாவீரர் தினம் போனால் கடைப் பக்கம் போகாமல் அந்த நிகழ்விற்கு தேவையான உதவிகள் செய்துவிட்டு விளக்கேற்றி பின்னர் மாவீரர் நிகழ்வு முடிய தேவையான உதவிகளை செய்து விட்டு திரும்ப வேண்டியதுதானே ஏன் கொத்து ரோட்டிய பார்க்குறீங்க கவிதையா கொட்டுறீங்க? ஒரு நாள் முழுதும் விடிய 5 ,6 மணிக்கு போய் உதவி செய்து களைத்து இரவு 12 ,1 மணிக்கு வந்த எவரும் இதை குற்றம் எண்டு சொல்ல மாட்டான். போகாதவனும் அந்த நேரத்திற்கு சினிமா பார்க்க போறா மாதிரி போய் வந்தவனும் தான் இப்பிடி கூறுவார்கள். உண்மையில் கோமகன் நீங்க என்ன டைம் மாவீரர் தினம் போனீங்க அங்கு என்ன செய்தீங்க என்று கூற முடியுமா?

Link to comment
Share on other sites

கவிதை எல்லாம் நல்லா எழுதாலாம் ஹால் காசும் செக்யூரிட்டி காசும் mic செட் மற்றும் இதரபல செலவுகளுக்கும் கொத்துரொட்டி காசு தான் அன்னை உதவுது......... தாயாக மாவீரர் தினத்திலும் கலை நிகழ்சிகள் நடந்து தான் இருக்கு அதை நாங்கள் நேரிலையும் பாத்திருக்கம் மற்றது ஒருத்தர் செத்தால் உடன சாப்பாட்டு கொண்டு போய் கொடுக்கிறது தமிழர் பண்பாடு அந்த 31 நாளும் ஒவொரு வீட்டில் இருந்தும் சாப்பாடு வரும்.....

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் சுண்டல் மேலும் காசடிக்கிறதுக்கு நல்ல சாட்டு .பணம் சேர்க்க வேறுவழிகளை சிந்திப்பதை விட்டு இப்படியா மாவீரர்நாளை கேவலபடுத்தி கொண்டாடவேணும்? இப்படி கேவலப்படுத்தி காசு சேர்த்து கொண்டாடுவதைவிட வேறுவழிகள் பற்றி சிந்திக்கலாம்.

எனக்கு உங்கள் மாவீரர்நினைவுநாள் சம்பந்தமான அறிவும் புரிந்துணர்வும் புல்லரிக்க வைக்கிறது.வாழ்த்துகள் சுண்டல். :lol::D:icon_idea: .

Link to comment
Share on other sites

அருமை .......இந்தக்கவிதையில் கீழ் உள்ள வசனங்களை மிஸ் பண்ணப்பட்டுள்ளது .இதையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்

[size=5]ஒண்டுக்கும் ,இரண்டுக்கும் ,இருக்க மலைசல கூடம் ........[/size]

நான் மாவீரர் தினம் சென்றேன் மக்கள் மலசல கூடத்தில் முண்டி அடித்ததைப் பார்க்க வெறுப்பாக இருந்தது. ஒருநாள் இத அடக்க மாட்டார்களா இந்த மக்கள்? நாற நாற மக்கள் இருந்து நிகழ்வைப் பார்க்க வேண்டாமா?இதப் பார்க்க எனக்கும் கவிதை வந்தது ஆனால் நிர்வாகம் விடாது
Link to comment
Share on other sites

அதுவும் ஒரு விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் விமர்சிச்சாலும் ஏற்றுக்கொள்ளலாம் இவர்கள் எல்லாம் சந்தர்ப்பம் பாத்துக்கொண்டு இருந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுபவர்கள்

ஆக இன்னார் எழுதினால்தான் எடுபடும் எண்ட எழுதாத அடாவடித்தனத்தை கருத்துக்களத்தில் கொண்டுவருகின்றீர்கள் .

Link to comment
Share on other sites

எனக்கும் உங்கள் புலிகள்

மீதான அக்கறை புல்லரிக்க வைக்கின்றது

ஏன் என்றால் நெருடிய நெருஞ்சி என்ற தொடரை எழுதி மக்களை நன்றாக கவருவது மாதிரி கவர்ந்து இறுதியில் டக்லஸ் தேவன்தா நல்லவர் வல்லவர் அவரிடம் இருக்கும் கூட்டம் தான் சரி இல்லை என்று சொன்னிர்கள் பாருங்கள் அப்பவே உங்களை பற்றி நீங்கள் சொல்லி விட்டீர்கள்

கள உறவுகள் முடிந்தால் நெருடிய நெருஞ்சியை ஒரு

முறை படித்து பாக்கவும்

Link to comment
Share on other sites

உங்கள் வரவிற்கும் கருத்திற்கும் நன்றிகள் சுண்டல் மேலும் காசடிக்கிறதுக்கு நல்ல சாட்டு .பணம் சேர்க்க வேறுவழிகளை சிந்திப்பதை விட்டு இப்படியா மாவீரர்நாளை கேவலபடுத்தி கொண்டாடவேணும்? இப்படி கேவலப்படுத்தி காசு சேர்த்து கொண்டாடுவதைவிட வேறுவழிகள் பற்றி சிந்திக்கலாம்.

எனக்கு உங்கள் மாவீரர்நினைவுநாள் சம்பந்தமான அறிவும் புரிந்துணர்வும் புல்லரிக்க வைக்கிறது.வாழ்த்துகள் சுண்டல். :lol::D:icon_idea: .

அவர்கள் காசடிக்கிரார்கள் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் வாங்கி சாப்பிடாமல் வெளியில் வந்து ஒரு பிட்சாவோ இல்லை கெபாப்போ வாங்கி சாப்பிட்டு அந்நியனை வளர்க்க வேண்டியது தானே- அப்ப உங்க இனத்தை அழிக்கும் அழித்த சிங்கள நாட்டின் பொருட்கள் ஒன்றுமே வாங்குவதில்லை தமிழ்க் கடைகளுக்கும் போவதில்லை உங்கள் இனம் விடுதலை பெறும் வரை வாழ்த்துக்கள் அப்பிடி இருப்பதற்கு
Link to comment
Share on other sites

"அப்பிடி சொல்லாதையுங்கோ . இப்ப சனம் எல்லாம் நல்ல தெளிவு கண்டியளோ . ஆர் தங்களுக்கு பிரையோசனமாய் இருக்கீனமோ , அவைக்குப் பின்னால நிக்குங்கள் . இப்ப டக்கிளசு சனத்துக்கு எவ்வளவோ நல்ல விசையங்களை செய்யிறார் . ஆனா, அவரோடை இருக்கிற கொஞ்ச குறுக்கால போனதுகளால அந்தாளுக்கு கள்ளப் பேர் " .

"ஏன் அவரும் நீங்கள் சொல்லுற ஆக்களை தட்டி நிமித்தலாம் தானே மாமா "?

நீங்கள் என்ன சொல்லுங்கோ , அந்தாள் வந்தாப் பிறகுதான் சனங்களின்ர பிரச்சனையள் எல்லாம் வெட்டிக் கொண்டுவாறார் . எந்த நேரத்திலையும் அவரைப் பாக்கலாம் . சரியான எளிமையான மனசன் பாருங்கோ".

" நாங்களும் இங்கை இருந்து பாத்தனாங்கள் தானே எல்லாற்ர விளையாட்டுகளையும்".

" ஏன் மாமா அப்படிச்சொல்லுறியள் "?

"உங்களுக்கு கனக்கத் தெரியாது தம்பி......... , நாங்கள் எல்லாம் , எல்லா வழியாலையும் பாவப்பட்ட சீவனுகளாய் போனம் . அதுகளை சொல்லுறதெண்டால் நெஞ்சுக் கொதி தான் ஏறும்".

ஏன் மாமா இப்பிடிச் சொல்லுறார் . இதில் எது பொய் ? எது உண்மை ? மக்களின் அடிப்படைத் தேவைகளை யார் தீர்த்து வைகின்றார்களோ , அவர்கள் மக்களால் முன்னிலைப் படுத்துவது மனித இயல்போ ? என்று எனது மனம் பலவாறாக அலைபாய்ந்தது . நானும் மாமாவோட சேர்ந்து புளியம்பழம் உடைச்சுக் கொண்டே கதையைத் தொடர்ந்தேன்,

"ஏன் மாமா இயக்கம் சனத்தை செரியாக் கஸ்ரப்படுத்திப் போட்டாங்களே"?

"அப்பிடி எல்லாம் இல்லை தம்பி......... ஒண்டுரெண்டு கதைக்ககூடிய மட்டத்தில இருந்தாங்கள் . மிச்சமெல்லாம் கதைக்கப் பேசத்தெரியாது . நாங்கள் ஒருத்தரையும் வித்தியாசம் பாக்கேல பாருங்கோ . பசிச்ச வயித்துக்கு சோறு போட்டம் . சில நேரம் சோறு போட்டதுகளுக்கே உலை வைச்சவங்களையும் கண்டிருக்கிறன் ".

"தம்பி உலகத்தில எல்லா இடத்திலையும் நல்லவனும் இருக்கிறாங்கள் , கெட்டவனும் இருக்கிறாங்கள்."

"ஏன் மாமா இதை இங்கை சொல்லுறியள் "?

"எங்கடை பெடியளுக்கு வீரமும் துணிவும் இருக்குது பாருங்கோ. ஆனால் , விவேகம் கொஞ்சம் மட்டு".

" ஏன் அப்பிடி சொல்லுறியள்?"

" நீங்களும் இந்த உலகத்திலதானே இருக்கிறியள் தம்பி."

" எண்டாலும் மாமா நீங்கள் அனுபவசாலிதானே அதுதான் கேட்டனான் என்னை வித்தியாசமாய் எடுக்காதையுங்கோ".

மாமா கெக்கட்டம் விட்டுச் சிரித்தார் . எனக்கு மாமாவின் சிரிப்பின் அர்த்தம் விளங்கவில்லை . அனுபவப்பட்ட பழுத்த பழங்கள் உப்பிடித்தான் கெக்கே பிக்கே எண்டு சிரிப்பார்களோ ? நானும் பொதுவாய் சிரித்தேன் .

இது இவர் நெருடிய நேரின்சியில் புகுத்திய ஒரு பகுதி மக்களே வடிவா வாசியின்கள் இவரின் நோக்கத்தை புரிவீர்கள் தெளிவு பெறுவீர்கள்

Link to comment
Share on other sites

மாவீரர் தினங்களை ஒழுங்கு செய்பவர்களுக்குதான் அவற்றின் செலவுகளை பற்றி தெரியும்.

அத்துடன் உணவு என்பது அடிப்படைத்தேவை மக்களுக்கு, தூர இடங்களில் இருந்து பிள்ளைகளுடன் வருபவர்கள் அவர்களுக்கும் தங்களுக்கும் சாப்பிட ஏதாவது தேவை. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதலாம்.

வேலை முடித்து மாவீரர் தினத்துக்கு ஓடி வருபவர்கள் மீண்டும் போய் சமைக்க எவ்வளவு நேரமாகும்?

வேறு யாரிடமாவது வாங்கினால் குற்றமில்லை, இதுதான் உங்கிளின் எண்ணமா கவிதை வடிவில்? உங்களுக்கே விளங்கவில்லை என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று.

இதை கதை கதையாம் பகுதியில் இணைத்திருக்கலாம்...

நானும் வேலை முடித்து மாவீரர் தினத்துக்கு பிள்ளைகளுடன் போய் முடிந்த பின்னர் பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுத்து வீடு வர 09:00pm விடிய 04:45am வேலைக்கு போக எழும்பனும், இதே நிலை பலருக்கு இருந்திருக்கும்.

குறை கண்டுபிடிப்பதை விட்டுவிட்டு, நல்ல வழியில் சிந்தியுங்கள்

நேர விரயம்

வெட்டு2?

Link to comment
Share on other sites

[size=4]

[/size]

[size=4]கோவிலிலும் தானே, மரக்கறி ரோல்சும், மசாலா தோசையும் விக்கிறார்கள்?

அதற்காகக் கோவிலுக்குப் போகாமல் விடுவதா?

[/size]

[size=4]

[/size]

[size=4]கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை. [/size]

[size=4]

பெய்யாமல் இருந்து மக்களைக் கெடுக்கவும் , அவ்வாறு கெட்டவருக்குத் துணையாகி நன்மை செய்யவும் வல்லது மழை.[/size]

[size=4]

அவர்கள் காசடிக்கிரார்கள் என்று நீங்கள் எண்ணினால் நீங்கள் வாங்கி சாப்பிடாமல் வெளியில் வந்து ஒரு பிட்சாவோ இல்லை கெபாப்போ வாங்கி சாப்பிட்டு அந்நியனை வளர்க்க வேண்டியது தானே- அப்ப உங்க இனத்தை அழிக்கும் அழித்த சிங்கள நாட்டின் பொருட்கள் ஒன்றுமே வாங்குவதில்லை தமிழ்க் கடைகளுக்கும் போவதில்லை உங்கள் இனம் விடுதலை பெறும் வரை வாழ்த்துக்கள் அப்பிடி இருப்பதற்கு

[/size]

[size=4]

எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

எப்பொருள் எத்தன்மையாகத் தோன்றினாலும் , அத்தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல் அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும் .

[/size]
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.