Jump to content

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிய மாலைப் பொழுது மெல்லிய காற்று இதமாய் வீசிக்கொண்டிருந்தது. மாலை மப்பும் மந்தாரமுமாக இருந்தது. நெடுஞ்சாலைகள் தாண்டி நானும் அருவியும், அஜீவன் அண்ணாவைச் சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்தோம். இடையே ராமாக்காவின் அதட்டல் மிக்க தொலை பேசி தொல்லை தந்தாலும், ஒரு வித பரபப்பான மனதுடன் நாம் சென்றோம். ஏற்கனவே திட்டமிட்டாலும், பலருக்கு அழைப்பு அனுப்பியும் அவர்கள் வராவிட்டாலும் சிறு பதிலாவது போட்டிருக்கலாம். அவர்கள் அதையும் செய்ய வில்லை. மிக குறுகிய காலத்தில் நாம் இதை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில், இறுதியில் ஐவர் மட்டுமே பங்கு பற்ற வேண்டியதாயிற்று. 

அருகிலிருந்து முகமறியாத உறவுகளை நேரில் காண  அஜீவன் அண்ணா உதவியுள்ளார் என்பதில் அவருக்கும், அவரால் நேரே அறிமுகமான எமக்கும் மிக்க மகிழ்ச்சி, அஜீவன் அண்ணாவின் அறிமுகம் அவரின் குறும்படங்களைப் பார்த்து எனக்குக் கிடைக்கவில்லை. “உப்பிலுறைந்த உதிரங்கள்” எனும் தமிழீழ திரைக்காவியத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று சுவிஸ் நாட்டில் நடைபெற்ற போது அதில் இருந்த ஒரு நிழல்ப்படத்தில், தான் அஜீவன் அண்ணா அறிமுகமாறினார். அதன் பின்னர், பல படங்களைப் பார்த்தேன், பின்னர் யாழில் இணைந்த பின்னர் யாழ் இணைய உறவாகவும், எம்.எஸ.என் தகவல் பரிமாறியூடாகவும், தொடர்ந்து நட்பாயிருந்தோம்.

அப்படியே கடந்த வருடம் முதல் அஜீவன் அண்ணா கனடா பயணத்திற்குத் திட்டமிட்டிருந்திருந்தார். அப்படியே அவரும் வந்து விட்டார். 

19ho3.jpgபொங்கல் விழா, அது இது என்று யாழ் கள உறவுகள் ஒன்று கூட முனைந்தும் அவை வெறும் வாய்ப்பேச்சில் நின்றதால், நான் அனைவரும் சந்திப்பதைப்பற்றி, முதலில் சிந்திக்கவில்லை. ஆனாலும் கள உறவுகளான, ரமா, இரசிகை, அருவி, சினேகிதி ஆகியோருடன் பேசிய போது அனைவரும் ஒன்றாக சந்திப்பது என்று முடிவாகியது. திட்டமிட்ட படி சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது.  நடைபெறுமா? சாத்தியமா? போட்டுத்தள்ள வழியா என்று பலர் பொங்கல் விழா அழைப்பில் சொல்லியிருந்ததை யாழ் இணைய நண்பர்கள் - கனடா முயன்றால் முடியும் முக மூடி தேவையில்லை என்று காட்டியுள்ளனர் எனலாம்.

இனிமையான ஒரு பொழுது

ரொரன்ரோ மாநகரின் -ஸ்காபுரோ நகரத்தில் இந்த சந்திப்பு ராப்ஸ்கோட் அன்ட் மேல்வின் சந்திப்பில் நடைபெற்றது. 5.45 மணியளவில் அஜீவன் அண்ணா தனது தோழருடன் வந்திறங்கினார்.

yarl0pz.jpg

அவரை ரமாக்காவும், இரசிகையும் வரவேற்று அழைத்து வந்தனர். மற்றவர்கள் சில வேலைகளால் சற்று தாமதமாக வரவேண்டியேற்ப்பட்டது கிட்டத்தட்ட 6.00 மணியளவில் நானும் அருவியும், சினேகிதி அதற்கு முன்னரும் சந்திப்பிடத்திற்கு வந்து சேர்ந்தோம். 

dsc006567gk.jpg

வந்த பின்னர், சினேகிதி அவர்கள் அனைவரையும் வர வேற்று தனது நகைச்சுவைப்பண்பால், சிரிக்கவைத்தார். (கடியோ கடியென்று கடித்து விட்டா) பின்னர் எம்மை நாம் அறிமுகப்படுத்தி கொண்டோம்.  ஒவ்வொருவரைப்பற்றியும் அஜீவன் அண்ணா தெரிந்து கொண்டார். பின்னர், அவரது அனுபவங்கள் பற்றி பேசினோம்,  சிறிது பேச்சுக்கு இடைவெளி கொடுத்து, சிற்றூண்டிகளை உண்ண ஆரம்பித்தோம் ஆனாலும் பேச்சு தொடர்ந்தது ( வந்த வேலை முடிஞ்சுது என்று சினேகிதி கிளம்ப ஆயத்தம்) தொடர்ந்து அமெரிக்க, கனடிய சுற்றுலா பற்றி அஜீவன் அண்ணாவிடம் கேட்டறிந்து கொண்டோம்.

dsc006619rc.jpg

பின்னர், யாழ் கள உறவுகள் அஜீவன் அண்ணாவுக்கு வாழ்து தெரிவித்து ஒரு வாழ்த்து மடலை வழங்கினார்கள். இறுதியாக கொஞ்சம் நாட்டு நடப்பு பற்றி கதைத்தோம், அரசியல் தான், அதன் பின்னர் அஜீவன் அண்ணாவுக்கு ஒரு தொலைக்காட்சி பேட்டி ஒன்று  இருந்ததால் பயணமானார். அவரது கனடிய சுற்றுலா தொடர்கின்றது. நாளையும் நாளை மறுதினமும் அவர் ரொரன்ரோவில் தங்கியிருப்பார் திங்கள் அவர் வன்கூவர் நகருக்கு செல்கின்றார். அங்கு ஒரு வாரகாலம் தங்கி விட்டு அவர் மீண்டும்  எதிர்வரும் 9 ம் திகதி சூவிஸ் பயணமாகின்றார்.

dsc006657gy.jpg

சந்திப்பு பற்றி ஏனையவர்கள் கருத்துக்களை எதிர் பார்க்கிறேன்....

நன்றி

 

Link to comment
Share on other sites

  • Replies 226
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி நிதர்சன்! யாழ்கள பொங்கல் நிகழ்வால் ஏற்பட்ட சில மனஸ்தாபங்கள் நீங்கி எம் உறவுகள் ஒன்று கூடிப் பேசலாம் என்பதற்கான ஆரம்ப முயற்சி இது!

இவ்வாறே ஒரிரு நண்பர்கள் கூடி, கலந்துரையாடி இருந்தாலும் அதையும் மிறிய யாழ் சாதனையாக 6 பேர் கலந்து கொண்டுள்ளீர்கள்!

மற்றய நண்பர்களும் அவ்வாறு கலந்து கொள்ளவேண்டும் என வரவேற்கின்றோம்! பரணியண்ணா கனகாலம் யாழ் வராதபடியால் அவர் மடலைப்படித்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன்! இருந்தாலும் உறவுகளுக்காக இணைப்பு முயற்சியாக இதைக் கருதி வாழ்த்துகின்றோம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

yarl0pz.jpg

உம்!!

நான் கொடுத்த கரித்துணி மேக்கப் எவ்வளவு எல்லோரையம் வடிவாக வைத்திருக்கின்றது! அஜீவன் அண்ணாவும் அப்படிப் போட்டிருந்தால் நன்றாக இருக்குமே! :wink: :wink: :P :P

பரவாயில்லை! அடுத்த முறை எல்லோரும் அதை முயற்சி செய்யுங்கள்! :wink:

Link to comment
Share on other sites

உம்!!

நான் கொடுத்த கரித்துணி மேக்கப் எவ்வளவு எல்லோரையம் வடிவாக வைத்திருக்கின்றது! அஜீவன் அண்ணாவும் அப்படிப் போட்டிருந்தால் நன்றாக இருக்குமே! :wink: :wink: :P :P

பரவாயில்லை! அடுத்த முறை எல்லோரும் அதை முயற்சி செய்யுங்கள்! :wink:

:P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

நிதர்சனுக்கும் பங்கு பற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

கனடேயத் தமிழர் எப்பவும் மற்றவர்களுக்கு முன் நோடிகள் என்று நிரூபித்துள்ளீர்கள்.உதைப்போ

Link to comment
Share on other sites

படிக்கவும், பார்க்கவுமே மகிழ்ச்சியாக இருக்கிறதே...:lol:

Link to comment
Share on other sites

சந்தோசமாக இருக்கின்றது. :P :P :P :P

என்ன எல்லோரும் கறுப்பு உடை அணிந்திருக்கிறியள். இது நல்லதல்ல ஆமா :twisted:

Link to comment
Share on other sites

yarl0pz2xv.jpg

ஒரு ஊகத்தில் எது யாராக இருக்கலாம் என்று போட்டிருக்கன், பிழையெண்டா சண்டைக்கு வராதீங்க :P

சந்திப்பு நடந்திருக்கு , நல்ல மகிழ்ச்சியா இருக்கு.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை அருவி ஒல்லியா இருப்பார் என்று, நிச்சயம் குண்டாத்தான் இருப்பர், அவரது சின்னவயது படத்தை அவரூரில் போட்டிருக்கிறார் பாருங்கள், யம்மோ ரசிகை இவ்வளவு குண்டா??? சும்மா பகிடிதான்.

கள உறவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

நான் நினைக்கவில்லை அருவி ஒல்லியா இருப்பார் என்று, நிச்சயம் குண்டாத்தான் இருப்பர், அவரது சின்னவயது படத்தை அவரூரில் போட்டிருக்கிறார் பாருங்கள், யம்மோ ரசிகை இவ்வளவு குண்டா??? சும்மா பகிடிதான்.

கள உறவுகளை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.

சின்னனிலை குண்டா இருந்தா இப்பவும் குண்டா இருக்கணும் எண்டு விதியா என்ன? :P :wink:

Link to comment
Share on other sites

கனடிய யாழ் கள உறவுகள் அஜீவன் மூலமாகவேனும் சந்திப்பு ஒன்று நிகழ்ந்ததையிட்டு மகிழ்ச்சி... :lol:

Link to comment
Share on other sites

குளகாட்டனின் கணிப்பு பிழையானது என எனது கணிப்பு.... ஒவ்வொருதரம் சொல்லுங்கள் பார்க்கலாம்....உங்கள் ஊகங்களை :?: :?:

Link to comment
Share on other sites

சொல்லுறதை கவனிச்சு எழுதுங்க பிறகு ஏன் படத்தைப் போட்டம் எண்டு யோசிப்பினம்.

Link to comment
Share on other sites

Santhippu Niravaium , Mahilvaum Irunthathu.....

Mihavum Iniyavargal........

Innum Santhippu neendu irukkalam Pondra mana nilai.........

Ellorum Neenda Naal Palakkamana

Oru Kudumbam Pondra kuthookalm.........

yarl0pz2xv.jpg

Nandrikal En Iniya Sonthangale...........

Link to comment
Share on other sites

வணக்கம் நண்பர்களே

அன்பு உறவுகள் சந்திப்பு பார்க்கும் போது மிக்க மகிழ்வாக இருக்கின்றது. உண்மையிலேயே நினைக்க நெஞ்செல்லாம் உவகை ஊசலாடுகின்றது.

விரைவில் எல்லோரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையுடன்

என்றும் அன்புடன் பரணீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl0pz2xv.jpg

இதிற்பாக்க படத்தை போடாமலே விட்டிருக்கலாம் ஆமா.. எனது ஊகம் றமா என்று குறிப்பிட்டிருப்பவர் ரசிகை.. சரியா.. ம் கனடாவாழ் உறவுகள் கலக்கீட்டீங்களே.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படிக்கவும், பார்க்கவுமே மகிழ்ச்சியாக இருக்கிறதே...:lol:

அப்பிடியே நீங்களும் ஒரு சந்திப்பு நடாத்தினாலும் மகிழ்ச்சியா இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனைவருக்கும் நன்றிகள்,

மீண்டு மொருமுறை நாங்கள் சந்திக்கும் போதாவது மீதமுள்ள ரொரன்ரோ வாழ் நண்பர்களை, இணைந்து கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுறதை கவனிச்சு எழுதுங்க பிறகு ஏன் படத்தைப் போட்டம் எண்டு யோசிப்பினம்.

அப்ப யோசிக்காமல் படத்தை போட்டிட்டினம், என்று சொல்லுறீங்க :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl0pz2xv.jpg

இதிற்பாக்க படத்தை போடாமலே விட்டிருக்கலாம்

இப்ப மட்டும் படம் போட்டு இருக்கு,போஸ்ட் பண்ணியேல்லோ இருக்கு :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

yarl0pz2xv.jpg

இதிற்பாக்க படத்தை போடாமலே விட்டிருக்கலாம் ஆமா.. எனது ஊகம் றமா என்று குறிப்பிட்டிருப்பவர் ரசிகை.. சரியா.. ம் கனடாவாழ் உறவுகள் கலக்கீட்டீங்களே.. :wink: :P

இப்ப மட்டுமென்ன படம் போட்டா இருக்கு? போஸ்ட் எல்லோ பண்ணியிருக்கினம் :roll: அட என்னத்தை அப்பிடி கலக்கினவை? கூலையோ? மாவையோ அல்லது அஜீவனவர்களையோ :roll:

குறிப்பு: பாழாய் போன இடைநிலை அங்கத்துவத்தை இன்னும் தரவில்லை . அதால இருமுறை எழுத வேண்டீயிருக்கிறது. பிழை திருத்த முடியாமையல். இதற்க்காய் பறவைகள் வருந்து கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப மட்டும் படம் போட்டு இருக்கு,போஸ்ட் பண்ணியேல்லோ இருக்கு

இந்த ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.. என்ன பட்டம் தர..?? நக்கல் தானே வேணாங்கிறது.. :wink: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஆண்டின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு.. என்ன பட்டம் தர..?? நக்கல் தானே வேணாங்கிறது.. :wink: :P

தமிழினி மெல்ல மெல்ல சாகாது ஏனெனில் தமிழினி தமிழினி(ல்) எழுதுவதால், தமிழினி (ல்) ஒரு பட்டம் தந்தால் தமிழினி(ல்) வாழ்தலாம் :lol:

Link to comment
Share on other sites

குளமண்ணா சொன்னது தான் சரி. முறையே சினேகிதி ரசிகை ரமா அஜீவன் அருவி நிதர்சன். :roll: :P :arrow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளமண்ணா சொன்னது தான் சரி. முறையே சினேகிதி ரசிகை ரமா அஜீவன் அருவி நிதர்சன். :roll: :P :arrow:

அப்ப வெண்ணிலா, இந்த பெயர்களில் ஒன்றுக்கு சொந்த காரியோ? :roll:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்மை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
    • "சிவப்பு உருவம்"   இரத்தினபுரி கஹவத்தையில் தொடங்கிய கிறீஸ் மர்ம மனிதன் விவகாரம் ஒரு ஊரிலோ, ஒரு மாவட்டத்திலோ மட்டுமல்லாமல், இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழர், முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியிலேயே இடம்பெற்றன. இச்சம்பவங்கள் 2011 ஆம் ஆண்டு ஜூலையில் ஆரம்பித்து ஆகஸ்ட்  மாதத்தில் கடுமையாக பரவியது. க்ரீஸ் பூதம் என்பது ஒரு திருடனாகும். அவன் வழமையில் உள்ளாடை மாத்திரமே அணிந்து கொண்டு உடல் பூராவும் க்ரீஸைப் பூசியிருப்பான். துரத்திச் செல்வோர் பிடிக்க முடியாமல் வழுக்கி விழக் கூடிய விதத்தில் க்ரீஸ் பூசப்படுவதுடன், திருடன் இலகுவாகத் தப்பிச் செல்வதற்கும் அது உதவியாக அமைந்து விடும். இப்படியான ஒரு கால கட்டத்தில் தான் நான், மலையகம் பகுதியில் தற்காலிகமாக வேலை நிமிர்த்தம் விடுதி ஒன்றில் தங்கி இருந்தேன்.   நான் தங்கி இருந்த விடுதி, கடல் மட்டத்திலிருந்து 1000-1500 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து நிற்கிறது. இந்தப் பகுதி மிகவும் அமைதியாகக் காட்சியளிப்பதுடன் ஒரு  நீர்வீழ்ச்சிக்கு மேலே மலைப்பகுதியில் அமையப் பெற்றுள்ளது. இங்கு இயற்கை எழில் சூழ்ந்த தேயிலை தோட்டங்கள், நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. மொத்தத்தில்  புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு குளிர் பிரதேசம் ஆகும். ஒரு வரவேற்பு கம்பளம் போல அமைக்கப் பட்ட மரகத பச்சை தேயிலை தோட்டங்களின் அழகை பார்த்தால் உங்களுக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி பொங்கி வழியும். ஆமாம், நீர்வீழ்ச்சிகள், பச்சை பசேல் புல்வெளிகள் மற்றும் அடர்ந்த தேயிலை தோட்டங்கள் இயற்கையாகவே காதலர்களின் கனவை நனவாக்குகிறது. அதற்கு நானும் விதிவிலக்கல்ல.   தேயிலை தோட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை செல்வி சயந்தியின் தொடர்பு, தற்செயலாக, அந்த பாடசாலையில் நடந்த தைப்பொங்கல் திருவிழா மூலம் கிடைத்தது. அவர் தான் அங்கு நடந்த நாட்டிய மற்றும் நாடகத்துக்கு பொறுப்பாக இருந்தார். அந்த நிகழ்வின் சிறப்புத் தன்மையை போற்ற அவரை சந்தித்தது, அவரின் அழகிலும் நடத்தையிலும் என்னை கவர வைத்து விட்டது. அதன் பின் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக இருவர் மனதிலும் மலர்ந்தது  .    "சிலுசிலு எனக் காற்று வீச கமகம என தேயிலை மணக்க  தொளதொள சட்டையில் வனப்பை காட்டி கிளுகிளுப்பு தந்து கூப்பிடுவது எனோ ?"   "தளதள ததும்பும் இளமை பருவமே   தகதக மின்னும் அழகிய மேனியே  சலசல என ஆறு பாய  வெலவெல என நடுங்குவது எனோ?"    "கலகல பேச்சு நெஞ்சை பறிக்க படபட என இமைகள் கொட்ட   கிசுகிசு ஒன்றை காதில் சொல்லி  சரசர என்று ஓடுவது ஏனோ ?"    ஒரு சனிக்கிழமை நாம் இருவரும் சந்தோசமாக தனியாக கழிக்க நுவரெலியா மாவட்டத்தில் ஹோட்டன் சமவெளியின் (Horton Plains) முடிவுடன் 1,200  மீட்டர் உயரத்தில், 700 - 1000 மீட்டர் செங்குத்து ஆழத்தைக் கொண்ட  உலக முடிவு [world's end] போய் பின், 19 மைல் நேரடி தூரத்தை அல்லது இருமடங்கு வீதி வழித் தூரத்தை கொண்ட  பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல [எல்லா / Ella] நகரம் சென்று அங்கு ஒரு நீரூற்றுக்கு அருகில் உள்ள 98 ஏக்கர் உல்லாசப் போக்கிடத்தில் [98 Acres Resort & Spa] தங்கி, ஞாயிறு மாலை அங்கிருந்து திரும்பினோம். இருவரும் மிக மகிழ்வாக பேருந்தில் இருந்து இறங்கி, எம் விடுதிகளுக்கு கால்நடையாக பேசிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம். நாம் அந்த கும்மிருட்டில் தேயிலை தோட்டங்கள் மற்றும் மரங்களுக்கிடையில் ஒரு மைல் நடக்கவேண்டும். ஆனால் எமக்கு அது பிரச்சனையாகவோ பயமாகவோ இருக்கவில்லை. அவள் அந்த ஊர் ஆசிரியை. நான் அந்த நகர பொறியியலாளர். எம்மை எல்லோருக்கும் தெரியும். அந்த ஊர் மக்கள் மிகவும் மரியாதையும் கண்ணியமும் ஆனவர்கள்.       ஆனால் எம் கணக்கு தப்பு என்பதை சிறிது தூரம் இருவரும் கைகள் கோர்த்தபடி இருட்டில் ஏதேதோ சந்தோசமாக பேசிக் கொண்டு போகும் பொழுது தான் சடுதியாகத் தெரிந்தது. கொஞ்ச தூரத்தில், மரங்களுக் கிடையில் சிவத்த சால்வை அல்லது  துப்பட்டா மட்டும் தலையை மூடி தொங்க, கைவிரல்கள் மட்டும் எதோ கையில் இருக்கும் சிறு ஒளியில் ஒளிர , ஒரே இருட்டான ஒரு சிவப்பு உருவம் எம்மை நோக்கி வருவதைக் கண்டோம்.     கிழக்கு மாகாணம், மலையகம் மற்றும் நாட்டின் சில பகுதிகளில், யாழ்ப்பாணம் உட்பட கிறீஸ் மனிதன் விவகாரம் அடிக்கடி பத்திரிகையில் வருவதைப் பார்த்துள்ளேன், ஆனால் இந்த சிவப்பு உருவம் ஒரு சிவப்பு துணியால் தலையை மூடி தொங்க விட்டுக் கொண்டு வருவது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை கிறீஸ் பூதத்தின் பரிணாமமாக இருக்கலாம்? அப்படியாயின் அவனை மடக்கி பிடிக்க முடியாது, அவன் உடல் வழுக்கும். ஆனால், அவன் சிவப்பு துணி தொங்க விட்டு வருவது எனக்கு சாதகமாக தெரிந்தது. அந்த துணியை வைத்தே அவனை மடக்க நான் தீர்மானித்தேன். ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டுவில் நான் நல்ல பயிற்சி பெற்றவன் என்பது எப்படி அவனுக்கு தெரியும்? காளைகளின் கொம்புகளை பிடித்து மடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டுக்கும் சிவப்பு நிற துணியை காளையிடம் காட்டி மடக்கும் ஸ்பெயின் நாட்டு விளையாட்டுக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு என்ன தெரியும் ?. சிவப்பு துணியுடன் எம்மை நோக்கி வருகிறானே, இந்த சிவப்பு உருவம்!    நான் மிக நிதானமாக, ஆனால் அவசரமாக அவளிடம் எனது பையில் இருந்த சிகரெட் தீமூட்டியை கொடுத்து, பக்கத்தில் இருந்த மரத்தின் பின் ஒழிந்து இருந்து, அவன் என்னை நெருங்கும் பொழுது அதை தீம்மூடி அவனின் சிவப்பு துணிக்கு எரியூட்டக் கூடியதாக  எறியச் சொன்னேன். அவள் உயர் வகுப்புக்கு பிரயோக கணிதம் படிப்பிக்கும் ஆசிரியர் தானே, ஆகவே அவள் சரியாக செய்வாள் என்பதில் நல்ல நம்பிக்கை எனக்கு இருந்தது. அது மட்டும் அல்ல, பெரும்பாலான கிறீஸ் வகைகள் இலகுவாக எரியக்  கூடியவையும் ஆகும். நானும் கவனமாக அவன் நெருங்கும் பொழுது சிவப்பு துணியின் இரு தொங்களையும் தேவைப்பட்டால் பிடித்து இழுத்து, சிவத்த உருவத்தை  மடக்கி பிடிக்க ஆயத்தமாக முழு பலத்துடன் இருந்தேன்.   இந்த கிறீஸ் மர்ம மனிதர்கள் துட்டுகைமுனு அரசனின் வாளைத் தேடி அலைந்ததாக எத்தனை கதைகள் அன்று செய்திகளாக வந்தன. இது ஒன்றே இவர்கள் தமிழர்களை குறி வைத்து தாக்கியதுக்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. எல்லாளனின் நீதியான, சமத்துவமான, எதிரியையும் மதிக்கும் திறமையான ஆட்சிக்கு எதிராகவே அன்று அவன் சைவ மதத்தான் என்ற ஒரே காரணத்தால் துட்டுகைமுனு அவனை எதிர்த்தான் என்பது வரலாறு. அப்ப சிங்களம் என்ற மொழி வளர்ச்சி அடையாத காலம். ஆகவே சிங்கள தமிழ் வேற்றுமை அங்கு இருக்க முடியாது. அது மட்டும் அல்ல துட்டுகைமுனு சிங்களவனாக இருக்கவும் முடியாது. அது தெரியாத முட்டால்கள் தான் இந்த கிறீஸ் பூதங்கள்!    எல்லாம் நாம் திட்டம் போட்ட படி  நிறைவேற, பாவம் அந்த சிவப்பு உருவம் என்னிடம் முறையாக அகப்பட்டார். என் நீள்காற் சட்டையின் வார், அந்த சிவப்பு உருவத்தை, ஒரு மரத்துடன் கட்ட உதவியது. அவன் உடலில் ஏற்பட்ட எரிகாயங்களால் சத்தம் போட, ஊர்க்காரர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். அதன் பின் எமக்கு என்ன வேலை. அவர்களிடம் மிகுதி பொறுப்பை கொடுத்து விட்டு நாம் எம் விடுதிகளுக்கு போனோம் . ஆனால் அவள் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை!  ஆகவே அவளை என் விடுதியில் உறங்க சொல்லி விட்டு , காவலுக்கு அவள் பக்கத்திலேயே , அவளை, அவள் அழகை ரசித்தபடி, அந்த சிவப்பு உருவத்துக்கு நன்றி கூறிக்கொண்டு இருந்தேன்!!    "சயனகோலம் அவளின் அழகு கோலம்  சரிந்த படுக்கையில் தேவதை கோலம்  சங்கு கழுத்து சிவப்பாய் ஒளிர்ந்து  சங்கடம் தருகிறது அவளின் பார்வை"     "சயந்தி அவள் இந்திரன் மகள் சந்திரன் போன்ற அழகு நிலா  சரீரம் தரும் கவர்ச்சி மயக்கத்தில்  சற்று நானும் என்னை மறந்தேன்"     "சக்கர தோடு கழுத்தை தொட  சடை பின்னல் அவிழ்ந்து விழ  சலங்கை கால் இசை எழுப்ப  சங்காரம் செய்யுது இள நகை"   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.