Jump to content

ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு


Recommended Posts

அறை வாங்கினேன்

மறு கன்னத்திலும்

ஏசுவே

இனி என்ன செய்ய???????

(காசி ஆனந்தன் நறுக்குகள்)

விசுகு அண்ணா ஏசுநாதர் ""ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்று கூறியது"" ......ஒருவர் அடிக்கும் போது மறு கன்னத்தை காட்டு என்று இயேசுவை சிலுவையில் அறைந்த மனித இனம் மேலோட்டமாய் புரிந்து கொண்டு பைபிளை கற்பிப்பதால் தான் இவ்வளவு பிரச்னையும் ..................உண்மையில் அவர் கூறிய கருத்தின் ஆழத்தை பார்த்தால் இன்னொருவன் உனக்கு தீங்கு செய்யும்போது அவனுக்கு நீ செய்தது தீங்கு என்று உணர்த்தி அவனை நல்வழியில் நடாத்தி அவனுடன் சமாதானம் செய் என்பதாகும் ..................அவனை பழி வாங்காதே என்னும் அர்த்தத்தையே கூறி நிற்கிறது ................இதையே நான் படித்தேன் .......ஆனால் இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் அறவே மறந்து அநியாயம் செய்பவர்களை இருப்பதை பார்க்கும் போது .மனம் வெறுக்குது ..............

ஆனால் ஒருவன் உன்னை அடித்து உன் உடைமைகளை பறித்து ,உன்னை கொள்ள வரும்போது உன்னை நீ பாது காத்துக்கொள்ள நீ நடவடிக்கை எடுப்பது குற்றம் அல்ல ..................பைபிளில் எங்கும் இப்படி சொல்லப்படவில்லை

இதை

ஏன்

எழுதுகிறேன் என்றால் மதிப்புக்குரிய காசியானந்தன் அவர்களுடைய வரிகளை உங்கள் அடையாள வரிகளாய் கண்டேன் ...

அருமையான வரிகளுக்கு என்னாலான சிறிய விளக்கத்தை தருகிறேன் ..........இது உங்களுக்கல்ல ...............இதனால் பயன்படக்கூடிய அனைத்து உறவுகளுக்கும் .............நன்றி ......

Link to comment
Share on other sites

அறை வாங்கினேன்

மறு கன்னத்திலும்

ஏசுவே

இனி என்ன செய்ய???????

சிலுவையை சுமந்து உனது முடிவை தேடு!

ஏசு ஆன்ம விடுலைக்கு வழிகாட்டி. யாரிடம் எதற்கு பாதை கேட்கவேண்டும் என்பதை தெரிய வேண்டும். கோவலன் தனது மனைவியின் நகைப் பொதியை விரித்துக்காட்டி விலை கூறியவர் தப்பான ஆள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

தழிழில் ஒரு பொருள் முதுமொழி(சொலவடை) சொல்வார்கள்.

"கொல் குறளும், தச்சு நெடிசும்". அதாவது நீங்கள் அளவு எடுக்கும் போது என்ன வேலையை தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம்.

இரும்புத்துண்டு ஒன்றை வைத்து வேலையை ஆரம்பிக்கிறீர்களாக இருந்தால், துண்டை நறுக்கும் போது சற்று சிறிதாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் எனில் காச்சி அடிக்கும் போது அது நீண்டுவிடும். ஆனால் அப்படி நீளாமல் இருந்துவிட்டால் தேவையான நேரம் தட்டி நீட்டிவிடலாம். ஆனால் மறுவளம் எளிதல்ல.

மரதுண்டை எடுத்து வேலையை ஆரம்பிக்கிறீர்களாக இருந்தால், சற்று நீளகாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அறுக்கும் போது மரத்துண்டு சிறு கனத்தை இழந்துதான் அறுபட்டு முடியும். அப்படி இல்லாமல் அது இருந்துவிட்டால் வேலை செய்யும் போது உளியால் செத்துக்கி நீக்கிவிடமுடியும். மறுவளம் சாத்தியம் இல்லை.

பரமகம்சரிடம் முத்தியை பற்றியும் ராஜராஜ சோழனிடம் யுத்தத்தை பற்றியும் அறிவுரை கேட்பதுதான் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு தமிழ் சூரியன்

இதை நான் பதிவுக்கு கொண்டுவர முதல் பல தடவை யோசித்தேன்.

ஏனெனில் பல உறவுகள் இருக்கும் இடமிது. அத்துடன் எவ்வாறு என்றாலும் எங்கு என்றாலும் மத உணர்வுகளை மதிப்பவன் நான். அந்தவகையில் எவரையும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அதிலிருக்கும் ஏசுவே என்ற வரியை எடுத்துவிட்டு பதியலாமா என்றும் யோசித்தேன். ஆனால் அது இன்னொருவரது படைப்பு அதில் தலையிட எனக்கு உரிமையில்லை என்பதால் அவ்வாறே இங்கு பதிந்தேன்.

முன்னர் எழுதும்போது எனக்கு உடன்பாடான கருத்துக்கள் வந்தபோது வெறும் ஆமென் என்று போட்டு எனது நேரத்தை மீதப்படுத்திக்கொண்டேன். அதற்கு நிலாமதி ரீச்சர் அவர்கள் அது ஒரு மதம் சம்பந்தப்பட்ட சொல். அதை தவிர்க்க முடியுமாயின் தவிருங்கள் எனக்கேட்ட அன்றிலிருந்து அந்த சொல்லை நான் எக்காரணம் கொண்டும் பாவிப்பதில்லை. அந்தளவுக்கு மற்றவர்களின் மதம் சம்பந்தமாக மரியாதை அளிப்பவன் யான்.

எனக்கு இவ்வரிகள் பிடித்ததற்கு காரணம்

நான் இன்று இந்த நிலையிலேயே உள்ளேன். தமிழன் ஒவ்வொருவரது நிலையும் இதுவே.

பொறுமையின் எல்லையில் உள்ளோம் என்பதே இதன் அர்த்தம்.

எமது அடுத்த முடிவுக்கு எம்மை தள்ளுகிறீர்கள் என்பதே நிலை.

அந்த முடிவுக்கான சகல வேலைகளையும் நீங்கள் செய்து தள்ளியபோதும் நாம் மௌனமாக பொறுமை காத்து அமைதிக்காக வேண்டிநிற்கின்றோம். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது என்பதே கேள்வி.........??

அதே நேரம் அடுத்த கட்டத்துக்கு போகமுன் தமிழனுக்கான தீர்வை வையுங்கள்.

இல்லாதுவிட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல என்பதே சொல்லாத செய்தி.

தம்பி படத்தின் இறுதிக்காட்சியில்

எல்லாவகையிலும் அடக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு அல்லோகல்லப்பட்ட கதாநாயன்

வன்முறை வேண்டாம் என்பவரைப்பார்த்து

அதை உடைத்து வரக்கூடாது என்று கட்டளையிட்டவரிடம் கேட்கும் கேள்வி

இப்போ என்ன செய்ய..........?? என்பது.

அதுவும் இதுவும் ஒன்றே.

யாராவது தெரிந்தால் செல்லுங்கள்

நான் இனி என்ன செய்ய............???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.