Jump to content

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய நாடுகள் முடிவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையின் சமாதான பேச்சுவார்த்தையில் விடுதலைப்புலிகள் கலந்து கொள்வதை ஊக்கு விக்கும் வகையில் அவர்கள் மீதான தடையை ஜரோப்பிய நாடுகள் தளர்த்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் சமாதான பேச்சுவாhர்ததைகள் நடைபெறுமாயின் தமிழீழ விடுதலைப்புகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல கூடிய வகையில் அந்த அமைப்பு மீதான தடையை தளர்த்த ஐரோப்பிய ஓன்றிய நாடுகள் கொள்கையளவில் இணங்கியுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை யை அந்த நாடுகள் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது

சங்கதியில் இருந்து எடுத்தது. இதைப்பற்றி வேறு எங்காவது செய்தி வந்திருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் தினக்குரலில் வந்த செய்தி

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகள் தடையின்றி பயணங்களை மேற்கொள்ளலாம்

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடைசெய்திருந்தாலும், சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் நோக்கில் விடுதலைப் புலிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் பயணங்களை மேற்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தலைமையாளரும் இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவருமான நேநொற் எஸ்.வான் டிஜிக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்து புலிகளை தடை செய்ததை அடுத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் கருதுகின்ற போதும் சமாதான முயற்சியை முன்னெடுக்கும் நோக்கில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதை இந்தத் தடை தடுக்காது.

பயங்கர வாதிகளாக முத்திரை குத்தப்பட்ட தனிநபர்களே ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படும்.

எனினும், விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை இதுவரை எந்தவொரு உறுப்பினரதும் பெயர் பயங்கரவாதிகள் என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டதாக தெரியவரவில்லை.

பயங்கரவாதிகளின் பட்டியலில் இவர்கள் எவரும் இல்லையென்றால், சமாதான முயற்சிகளில் உதவ எப்போதும் இவர்கள் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய முடியும்.

இதனைச் சட்ட ரீதியிலும் தடுப்பதற்கான வாய்ப்பில்லையென்றே தான் கருதுவதாகவும் நெதர்லாந்துத் தூதுவர் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கர வாதிகளாக முத்திரை குத்தப்பட்ட தனிநபர்களே ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்படும்
.

பிறகென்னத்திற்காம் புலிகளை தடைப்பட்டியலில் சேர்த்தவையாம். தனிப்பட்ட நபர்களை பட்டியலிட்டிருக்கலாமே. சும்மா பூச்சுக் காட்றாங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மீளமைப்புப் பணிகள் தொடரும்: ஐரோப்பிய ஒன்றியம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருந்த போதும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மீள் கட்டமைப்புப் பணிகள் தொடரும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

சிறிலங்கா மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஆணையக் குழுத் தலைவர் ஜுலியன் வில்சன் இது குறித்து கூறியதாவது:

விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கப்பட்டிருப்பினும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் உள்ளிட்ட அனைத்து வடக்கு - கிழக்குப் பகுதிகளுக்குமான எமது உதவிகள் தொடரும். 7 ஆண்டுகளுக்கு 70 மில்லியன் யூரோ அளவிலான உதவிகள் வழங்க ஓப்புக்கொள்லப்பட்டுள்ளன.

ஐரோப்பியத் தடை முக்கியமானது. ஆனால் இந்த ஒரு தடைச் சட்டத்தின் மூலம் உறவுகளைப் பேணுதலை வரையறுத்துவிட முடியாது. ஐரோப்பிய உதவியானது ஒரு அரசியல் கருவி அல்ல. வடக்கு - கிழக்கை மீளக் கட்டியெழுப்பும் பணி தொடரும். எந்த ஒரு தரப்பையும் நாம் ஆதரிக்கவில்லை. வடக்கு - கிழக்குப் பணிகள் தொடர வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம்.

ஐரோப்பிய ஒன்றிய அரச சார்பற்ற நிறுவனங்களினது பாதுகாப்புகள் இல்லாது போனால் இயற்கையாகவே அந்த நிறுவனங்களும் தங்களது பணிகளிலிருந்து விலகிக் கொள்ளும்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான சீமெந்து, இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புகின்ற மீள்கட்டுமானப் பணிகளுக்கான உகந்த சூழ்நிலையை அரசாங்கம் உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

அமைதி முயற்சிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றார் ஜுலியன் வில்சன்.

புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.