Jump to content

தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!


Recommended Posts

தமிழர்களின் சுயாட்சிக்கு அமெரிக்கா ஆதரவு!

ஆனால் ஆயுதப் போராட்டம் தவறான வழியாம்

தமிழர் தாயகத்திற்கு அமெரிக்கா தந்த முதலாவது அங்கீகாரம்!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக அமெ ரிக்கா தடை விதித்திருக்கின்ற போதிலும், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு சுயாட்சி முறையின்கீழ் அவர்கள் வாழும் உரிமைகளை பெறுவதற்கு அமெரிக்கா மதிப்பளிப்பதோடு நின்றுவிடாமல் அங்கீகாரத்தையும் வழங்குகிறது'' என்று தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் ரிச் சார்ட் பௌச்சர் கொழும்பில் வைத்து வலி யுறுத்திக் கூறியிருக்கிறார்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அமெ ரிக்கா வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தடவையே தமிழர்களின் தாயகக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வரவேற்றும், அங்கீகரித்தும் ரிச்சர்ட் பௌச்சர் மூலம் அமெரிக்க அரசு சொல்லவும் வைத்திருக்கிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

சட்டபூர்வமான இலட்சியத்தை நோக்கியதாகவே தமிழர் போராட்டம் இருக்கிறது. ஆனால், அதனை அடையப் புலிகள் கையாளும் ஆயுதப் போராட்ட வழியைத்தான் அமெரிக்கா எதிர்க்கிறது. வெறுக்கிறது. ஏற்புடைய ஜனநாயகப் போராட்ட வழிகள் பல இருக்கும் பொழுது எவராலும் ஏற்க முடியாத ஆயுதம் தூக்கும் வழியைப் புலிகள் கையாளுவதையே அமெரிக்கா வெறுக்கிறது; எதிர்க்கிறது என்றும் ரிச்சர்ட் பௌச்சர், குறிப்பிட்டிருக்கிறார்.

கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் மாநாடு ஒன்றிலும், பின்னர் ஜூன் முதலாம் திகதி நடந்த இலங்கை அமெரிக்க வர்த்தக "சேம்பர்ஸ்' கூட்டத்தில் பேசும் போதும், தமிழர்களின் சுயாட்சிக் கோரிக்கை மீது அமெரிக்காவின் நிலை என்ன என்பதைத் தெட்டத் தெளிவாக பௌச்சர் எடுத்து முன்வைத்திருக்கிறார்.

""பரம்பரை பரம்பரையாகத் தாங்கள் வாழ்ந்து வரும் தாயக மண்ணில் தங்களைத் தாங்களே ஆளும் தங்களது தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும் தங்களது வாழ்க்கை முறையைத் தாங்களே வகுத்துக் கொள்ளும் விருப்பங்கள் ஒரு இனத்தின் சட்டபூர்வமான அபிலாஷைகளே! இதனை அமெரிக்கா அங்கீகரித்தே வருகிறது.'' என்றும் அவர் சுட்டிக் காட்டிப் பேசினார்.

பயங்கரவாத்தை

கைவிட வேண்டும்

""புலிகள் பயங்கரவாதத்தைக் கைவிட வேண்டும். அப்படி அவர்கள் கைவிட்டால், அவர்களுடன் பேசுவதற்குரிய வாய்ப்புகளை அமெரிக்கா, பின்னர் பரிசீலனைக்கு எடுக்க வழிகள் பிறக்கும். பயங்கரவாத்தை முறியடிப்பதற்கு முழு உலகமுமே இன்று ஒன்று பட்டுத் திரண்டு வருகிறது என்பதை விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் விளங்கிக் கொள்ள வேண்டும். அந்தப் பயங்கரவாதம் ஆப்கானிஸ்தான் மலைகளிலிருந்து வந்தால் என்ன, வன்னியின் வயல் வெளிகளிலிருந்து வந்தால் என்ன அவற்றை முடியடிக்கவே உலகம் திரண்டு ஒன்றுபட்டு நிற்கிறது.

இலங்கை அரசுக்கும்

கடப்பாடு உண்டு

தமது உரையின்போது அமெரிக்கத் துணை ராஜாங்க அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர், இலங்கை அரசு செய்ய வேண்டியவற்றையும் எடுத்துக் கூற மறக்கவில்லை.

சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யக் கூடிய முறையில் இலங்கை அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனநாயகத்தை வரித்துக் கொண்ட ஒரு அரசிடமிருந்து நாங்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். சிறுபான்மை இன மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண் டும். சகலரும் கட்டுப்பாடுகள் இல்லாத தெளிவான ஆட்சி நிலவ வேண்டும். சமாதானத்துக்கான தூர நோக்கும் தெட்டத் தெளிவாகத் தெரிய வேண்டும். இத்தகைய லட்சணங்களையே நாம் ஜனநாயக அரசுகளிடமிருந்து எதிர்பார்த்து நிற்கிறோம்.

இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்த மட்டில், அது இங்கு வாழுகின்ற சிறுபான்மை இன மக்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்ணயிக்கும், தங்கள் வாழ்க்கை முறையைத் தாங்களே தீர்மானிக்கும் தங்களின் அபிலாஷைகளை இந்த அரசு இலங்கை என்ற ஒரே தேசியத்தின் கீழ் செய்து தரும் என்பதை வெளிக்காட்டுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது நேர்மையை அரசு வெளிக்காட்ட வேண்டும்.

அரசின் நேர்மைத் தன்மையை, விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்கு உதாரணம் ஒன்றையும் பௌச்சர் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்மொழியின் பாவனைக்குள்ள உரிமையை உறுதிப்படுத்தி, அதனை அரச மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் சம சந்தர்ப்பங்கள் வழங்குவதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அந்த உதாரணமாகும்.

அரசு மீது

குற்றச்சாட்டு

கடந்த பெப்ரவரியில் ஜெனிவாவில் நடந்த பேச்சின் போது இணங்கப்பட்டபடி, துணை ஆயுதக் குழுக்களிடமிருந்து ஆயுதங்களைக் களைவதற்கு இலங்கை அரசு தவறி விட்டது என்ற குற்றச்சாட்டையும் ரிச்சார்ட் பௌச்சர் தமது உரையின் போது முன் வைத்திருக்கிறார்.

வன்செயல் பெருக்கத்திற்கான பாரிய பொறுப்பை விடுதலைப் புலிகளே சுமக்க வேண்டியிருக்கிறது. யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏறக்குறைய முறிந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கும் புலிகளே ஓரளவுக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்றும் அமெரிக்க துணை ராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

புலிகளுக்கு எதிராக நாங்கள் இலங்கைக்கு ஆதரவு தருகிறோம். இந்த ஆதரவை, ராஜரீக ரீதியாக, பொருளாதார ரீதியாக, இராணுவ ரீதியாக வழங்குகிறோம். ஆனாலும், மறுபடியும் யுத்தம் மூளுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்களின் இந்த உதவி, யுத்தத்துக்குப் போவதற்கு ஊக்கம் தருவதற்காக வழங்கப்படவில்லை. இலங்கை யின் இனப்பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை மூலம் தீர்வைக் காண முடியாது என்பது எமக்குத் தெரியும்.

மீண்டும் ஒரு முழு அளவிலான யுத்தம் மூளுமாயிருந்தால் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும். முதலீடுகள் வராது. உல்லாசப் பயணிகள் வருகை நின்று விடும். கப்பல் சேவைக்கான காப்புறுதிக் கட்டணம் உயரும். அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய நிதி யுத்தத்துக்கு முடக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

சாத்தியமானளவு மிக விரைவாக விடுதலைப் புலிகளும், அரசும் பேச்சுக்குப் போக வேண்டும் என்பதே எங்கள் எல்லோரது விருப்பம் என்றும் அவர் கூறத் தவறவில்லை.

http://www.uthayan.com/pages/news/today/04.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சங்கதியில் வந்த செய்தியினைப் பார்க்க இங்கே செல்லவும்

http://sankathi.com/content/view/3307/26/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதயசுத்தியை' வெளிப்படுத்த அரசாங்கத்தை கேட்கும் அமெரிக்கா

வட, கிழக்கை தாயகமாக கொண்ட தமிழ் மக்களின் சுயாட்சிக் கோரிக்கைக்கு அமெரிக்க அரசாங்கம் வலுவான அங்கீகாரத்தை வழங்கியிருப்பதை அண்மையில் வருகை தந்திருந்த அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் பௌச்சர் தெரிவித்த கருத்துகள் உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன.

ஏற்றுக்கொள்ள முடியாத முறைகளை பிரயோகித்தாலும் நியாயபூர்வமான இலக்குகளை விடுதலைப்புலிகள் கொண்டிருப்பதாக பௌச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தில் கடந்த வியாழக்கிழமை உரையாற்றிய ரிச்சர்ட் பௌச்சர், விடுதலைப்புலிகளின் முறைமைகள் தொடர்பாக அமெரிக்காவுக்கு இணக்கப்பாடு இல்லாவிடினும் தமிழ் மக்களின் நியாயபூர்வ விருப்பமான, தமது வாழ்வை தாமே நிர்ணயித்தல், தமது விதியை தாமே தீர்மானித்தல், தமது சொந்தத் தாயகத்தை தாமே ஆட்சி செய்தல், அதாவது தாங்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பிரதேசத்தை தாங்களே நிர்வகித்தல் போன்ற அபிலாஷைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.

அதேசமயம், காலாதிகாலமாக தமிழ் மக்களின் நியாயபூர்வ உரிமைகளை வழங்க மறுத்துவரும் தென்னிலங்கை கடும்போக்கு சக்திகளுக்கும் கடுமையாக உறைக்கும் விதத்தில் முக்கியமான விடயமொன்றை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதாவது, சர்வதேசம் இலங்கை நெருக்கடி தொடர்பாக எதிர்பார்க்கும் விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென அவர் கூறியிருக்கிறார்.

ஜனநாயக அரசாங்கத்திடமிருந்து நாங்கள் அதிகளவை எதிர்பார்க்கிறோம். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், உரிமைகள் சகல மக்களுக்கும் கிடைக்க வேண்டும், சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கும் பௌச்சர், சமாதானம் தொடர்பாக "உண்மையான" தொலைநோக்கு இருக்க வேண்டுமென அழுத்தி உரைத்திருக்கிறார்.

இவை யாவற்றுக்கும் மேலாக இலங்கையென்ற நாட்டுக்குள் சிறுபான்மையினர் தத்தமது வாழ்வையும் விதியையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவர்களுக்கே இருக்கக்கூடிய வகையில் இந்த விடயங்கள் தொடர்பான தனது `இதயசுத்தியை' இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டுமெனவும் பௌச்சர் கேட்டிருக்கின்றார். இதற்கு அவர் ஒரு எளிமையான உதாரணத்தையும் முன்வைத்திருக்கிறார். தமிழ் மக்கள் தமது மொழியை பயன்படுத்தும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அரசாங்க, தனியார் துறையில் அவர்களுக்கு வேலை வாய்ப்பில் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், பௌச்சர் முன்னுதாரணமாக செய்ய வேண்டிய இந்த இரு விடயங்களில் கூட தமிழ் பேசும் மக்கள் மிகப் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என்பதே உண்மை. உதாரணமாக, தமிழ் மக்கள் அரச அலுவலகங்கள், திணைக்களங்களுக்கு தமிழில் அனுப்பும் விண்ணப்பங்களுக்கு உரிய முறையில் பதில் அனுப்பப்படாதமை ஒருபுறமிருக்க, அவர்களுக்கு சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன என்பதற்கு ஆசிரியர் பகுதிக்கு அனுப்பப்படும் `மக்கள் குறைகள்' தொடர்பான கடிதங்களே சிறிய சாட்சி.

இவற்றைவிட வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை சுட்டிக்காட்டி வருவது நீண்டகால வழக்கமாகிவிட்டது.

அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.