Jump to content

வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பாரிய தாக்குதல் தொடங்கப்படு


Recommended Posts

தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை பேசியதாவது:

மக்கள் படை கட்டுமானத்தின் முதலாவது பயிற்சியின் நிறைவு மூலம் ஒரு பெரியதொரு செய்தி மிக விரைவாக உலகத்துக்குச் சொல்லப் போகிறது.

மக்கள் படை கட்டுமானத்தினது சூழ்நிலையையும் தற்போதைய நெருக்கடிகளையும் உணர்ந்து, "போராடினால்தான் வாழ்வு" என்ற பதத்துக்குள் பத்து நாட்களுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலும் சகல வேலைகளையும் புறந்தள்ளி முதலாவது கட்ட பயிற்சியை முடித்திருக்கிறீர்கள்.

எங்களுடைய தமிழீழ விடுதலைப் போராட்டத்தினுடைய இறுதி வெற்றியைத் தீர்மானிக்கப் போகிற முதலாவது அங்கம் இந்தச் செயற்பாடு.

1999 ஆம் ஆண்டு மிக நெருக்கடியான காலகட்டம். எதிரியானவன் 30 ஆயிரம் படை திரட்டி ஒன்று சேர்ந்து ஜெயசிக்குறு என்று ஒரு இராணுவ நடவடிக்கைக்குப் பெயர் சூட்டி வன்னியினுடைய பெரும்பகுதியை தனது இராணுவ நடவடிக்கையினூடாகப் பிடித்து வந்தான்.

அந்த காலகட்டத்தில் இங்கே இருந்த மக்கள் - வன்னியில் எங்கள் ஆளுகைக்குள் இருந்த மக்கள்- எந்த நேரத்திலும் அவன் முழுமையாக வன்னியைப் பிடித்து கண்டி வீதிக்கூடாக யாழ். போக்குவரத்துக்கான பாதையை திறப்பதோடு தமிழீழ விடுதலைப் புலிகளையும் முடித்துவிடலாம் என்ற கங்கணத்தோடு படை திரட்டி பாரிய நடவடிக்கையை மேற்கொண்டான்.

அந்தச் நேரத்தில் இந்த 3 இலட்சம் மக்களுக்குள் இருந்துதான் போராளிகளாக- வன்னியை பிடிக்கின்ற நடவடிக்கையில் முனைப்புடன் செயற்பட்டனர். ஒட்டுமொத்தமாக வன்னியின் பல பாகங்களிலிருந்தும் ஒன்றுதிரட்டப்பட்ட 10 அயிரம் எல்லைப் படையினர் எங்களோடு கரம் கோர்த்தனர்.

ஆனால் இன்று புதுக்குடியிருப்பில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயிற்சி எடுத்து முதலாவது பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.

அன்று 10 ஆயிரம் எல்லைப்படையினர் பயிற்சி எடுத்துக் கொண்டு வன்னியை எதிரியானவன் படிப்படியகப் பிடித்துக் கொண்டு வந்த அந்த சூழலில் ஓயாத அலைகள்-03 இன் பாய்ச்சலுக்காக புலிகளோடு கரம் கோர்த்து யுத்த முனையில் போராடினார்கள். பெருமளவில் நிலப்பரப்பு மீட்கப்பட்டது. எதிரியானவன் இராணுவ நடவடிக்கையைக் கைவிட்டான்.

10 ஆயிரம் எல்லைப் படையினரும் மரணிக்கவில்லை. மாறாக 281 எல்லைப்படையினருடைய அர்ப்பணிப்போடு ஆக்கிரமிக்கப்பட இருந்த வன்னி நிலப்பரப்பும்- அதைவிட மேலதிகமான நிலப்பரப்பும் புலிகள் பிடித்தனர். தலைவர் வழிநடத்தினார்.

இன்று அதே போன்ற ஒரு நெருக்கடியில்தான் நாங்கள் நிற்கிறோம்.

ஐரோப்பியத் தடையும் அது கொடுத்த உற்சாகத்தால் இன்று மகிந்தவின் சிந்தனையில்- நாங்கள் பிடித்து வைத்திருக்கும் பகுதியை மீட்டெடுக்கலாம் என்ற கற்பனையோடு அந்த எதிரி தன்னுடைய நடவடிக்கையை மேற்கொள்கிறான்.

இன்று நாளாந்தம், ஒவ்வொரு நாளும் புலிகளின் குரல் செய்தியை கேட்டாலும் எமது நாளேடுகள் செய்தி ஏடுகளைப் பார்த்தாலும்சரி- சராசரியாக 6 அல்லது 7 பொதுமக்கள் கொல்லப்பபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். எங்களுடைய உறவுகள் 6-7 பேர் என கொல்லப்படுகின்றனர். மக்கள் சாவு பெறுமானம் இல்லாத பொருளாக உள்ளது.

ஜெனீவாவில் பேச்சு நடத்திவிட்டு வந்த பிறகு எங்கள் மக்களின் சாவு 200ஐத் தாண்டிவிட்டது. ஆனாலும் சர்வதேசம் கண்மூடி மெளனமாக இருக்கிறது.

நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அளவுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு எங்களுடைய நல்லெண்ணத்தின் சமிக்ஞைகள்- செயற்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் இன்று மக்களினது சாவுகளை- எங்கள் தமிழ் பேசும் உறவுகளினது சாவுகளை நினைத்துக் கூடப் பார்க்காமல் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை- தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகப் போராடிக் கொண்டிருக்கிற தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய நாடுகள் கூட்டாகத் தடை செய்திருக்கின்றன.

இந்தத் தடை கண்டு அச்சப்படத் தேவையில்லை.

1987 ஆம் ஆண்டு இந்திய- இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு இந்திய படையானது ஆக்கிரமிப்புப் படையாக மாறியபோது 2 ஆயிரத்துக்கு குறைவான விடுதலைப் புலிகள்தான் இருந்தனர். அந்த 2 ஆயிரம் பேர்தான் இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிரான தலைவரின் கீழ் நின்று போராடினார்கள்.

அந்த ஆக்கிரமிப்புப் படை- விடுதலைப் புலிகளை துவம்சம் செய்ய வெளிக்கிட்ட போது- ஆக்கிரமிப்பிலிருந்து விடுபடுவதற்காக- விடுதலைப் புலிகளுடன் தோளோடு தோள் கோர்த்து இந்திய இராணுவத்தை வெளியேறச் செய்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மேன்மையை இந்த உலகுக்கு உணர்த்தியதும் முன் நகர்த்தியதும் இந்த மக்களே.

2 ஆயிரம் விடுதலைப் புலிகள் வன்னியைத் தளமாக வைத்துக் கொண்டு மணலாற்றிலிருந்து தலைவர் வழிநடத்தியபோது உலகின் 4 ஆவது வல்லரசே தோற்றுத் திரும்பியது.

ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிக்கலாம்- அந்தத் தடை எங்களுக்கு பொருட்டல்ல.

1605 ஆம் ஆண்டு ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தார்கள். இந்த ஐரோப்பியர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு முதல் எங்கள் மக்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொண்டு நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தனர். இந்த ஐரோப்பியர்கள் எங்கள் மண்ணை ஆக்கிரமிப்பு செய்த பின்னர்தான் எமது சுதந்திரத்தையையும் இறைமையையும் இழந்தோம். இன்று இந்த மண்ணிலே நாங்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக வாழ்கிறோம்.

எங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நப்பாசை கடந்த நான்கரை ஆண்டுகளாக இருந்தது. அது கிடைக்கும்- அது கிடைக்கக் கூடிய சூழ்நிலை வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

இந்திய இராணுவம் நம்மை ஆக்கிரமிக்க முயன்றபோது எப்படித் தலைவருக்கு தோளோடு தோள் கொடுத்து விடுதலையை வீச்சாக்கினார்களோ- அதே போல் 1999 ஆம் ஆண்டு வன்னியைத் தளமாக வைத்துக் கொண்டு போராடிய விடுதலைப் புலிகளுக்கு எல்லைப்படையாக நின்று பெரியதொரு வெற்றியைப் பெற்றுத் தந்தார்கள்.

2000 ஆம் ஆண்டு வெறும் 600 மகளிரும் 600 ஆண்களும் கொண்ட 1,200 பேர் போராளிகளைத்தான் வெற்றிலைக்கேணியிலிருந்து மாமுனையில் தரை இறக்கினோம்.

தளபதி பால்ராஜ்- தளபதி விதுசா- தளபதி துர்க்கா தலைமையில் 1,200 பேர்தான் படை இறக்கப்பட்டனர். எங்கள் எல்லைகளில் 800 போர் வீரர்கள் தளபதி வீரன் தலைமையில் நிறுத்தப்பட்டனர். ஒரு மாத காலத்தில் எதிரியினது பாரிய படையெடுப்புகளை முறியடித்து பெரியதொரு நிலப்பரப்பை மீட்டெடுத்து யாழ்ப்பாணத்தை நோக்கிய பாய்ச்சல் நடந்தேறியது. அது பாய்ந்த விதம் அறிவீர்கள்.

இன்று 5 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் சிறிலங்கா தன்னுடைய படையெடுப்பை மேற்கொள்வதற்கான ஆசியை சர்வதேச சமூகம் வழங்கியிருக்கிறது. கண்துடைப்பு நடவடிக்கைகளையே சர்வதேச சமூகம் மேற்கொள்கிறது.

முல்லைத்தீவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் என்னைச் சந்தித்த போது,

போர்த் தளபடாங்கள் வாங்குவதற்காக நாங்கள் சிறிலங்காவுக்கு நிதி அன்பளிப்புச் செய்யவில்லை- மக்கள் வாழ்வாதாரத்தை பொருளாதாரத்தை பெருக்கவே நிதியை வழங்குகிறோம் என்றார்.

நாம் கூறினோம்- நிறுத்துங்கள்-

இந்த சமாதான காலத்துக்குள்தான் அமெரிக்காவிலிருந்து ஒரு போர்க் கப்பல்- இந்தியாவிலிருந்து சயூரா எனும் ஒரு போர்க்கப்பல் என நேரடியாகவே கொடுத்திருக்கிறீர்கள் என்றோம். அந்த மனிதர் மெளனமாகவே இருந்தார்.

இந்த ஐரோப்பிய நாடுகள் இந்த விடுதலைப் போராட்டத்தை பார்க்கின்ற- மாடுகள்.

சிங்களவனுக்குச் சொன்னால் புரியாது- சிங்களவனுக்குச் சொல்ல வேண்டிய முறையான அடியில் சொன்னால்தான் தெரியும்.

ஆட்சிக்கு மாறி, மாறி வருகிற சிங்கள அரசியல்வாதியாக இருக்கலாம்- இராணுவத் தளபதியாக இருக்கலாம். எல்லாருக்கும் நப்பாசை. தன்னுடைய 5 ஆண்டுகாலத்தில் போர் நடத்தி வென்றுவிடலாம் என்று நப்பாசை. அதே ரீதியாகத்தான் மகிந்தவுக்கும் இப்போது நப்பாசை.

அந்த நப்பாசைக்கு எங்கள் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்-

சுமார் 2 ஆயிரம் பேரை வைத்துக் கொண்டுதான் வெற்றிலைக்கேணியிலிருந்து மாமுனை வரையிலான நிலத்தை நாங்கள் மீட்டெடுத்தோம். அதேபோன்றுதான் எங்களுடைய போரை இறுதிப் போராக- இனி அங்குலம் அங்குலமாக பிடித்துக் கொண்டிருக்கிற நடவடிக்கையாக இல்லாமல்- ஒரேயடியாக இந்தப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதுதான் தலைவரின் விருப்பம்.

தலைவரின் விருப்பத்தை நிறைவு செய்ய மக்களே நீங்கள் தயாரா?

(பொதுமக்கள் ஒருமித்த குரலில் நாங்கள் தயார் என்று உற்சாகக் குரல் எழுப்பினர்)

இனி பகுதி பகுதியாக சண்டை பிடிப்பது இல்லை- ஒரே முறையில் வடக்கு - கிழக்கில் நடக்கப் போகிற போரில் ஒரேடியாக நமது தாயகம் மீட்கப்பட வேண்டும் என்பதுதான் தலைவரது திட்டம்.

அந்தத் தலைவரது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பயிற்சி தொடர்ந்து அரங்கேறும். இந்த மக்கள் படை கட்டுமானத்திலிருந்து புலிகளாக- துணைப் படையாக- மக்கள் படை கட்டுமானமாக- தலைவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும.

எதிரி நம்மை நோக்கி படையெடுப்பதைவிட அவனது நிலைகளை உடைத்துக் கொண்டு நமது நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். அதுதான் சிறந்த வழி.

அவன் எப்போது படையெடுப்பான்- அவன் எப்போது சண்டை தொடங்குவான் - அப்போது நாம் போய் முட்டிக்கொண்டு நிற்பதைவிட ஆக்கிரமித்து நிற்கும் எதிரியை- நாங்களாகவே பாய்ச்சல் மேற்கொண்டு பாய்வதனூடாகத்தான் வெல்ல முடியும்.

தலைவர் சொல்வது கிடையாது- செயலில்தான் செய்வார். அதுதான் அவரது விருப்பம்.

நாளாந்தம் மக்கள் கொல்லப்படுகிற நிகழ்வுகள் தலைவரது மனதை ஆழமாக வேதனைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த ஆழமான வேதனையிலிருந்து மிக விரைவாக எங்கள் நிலத்தை- மக்களை- மீட்டெடுப்பதற்கு அவர் எந்த நேரமும் தயாராக இருக்கிறார்.

இளைஞர்களே! யுவதிகளே! தாய்மார்களே! தந்தையரே!

தமிழீழ விடுதலைப் புலிகளை பலப்படுத்துவனூடாக-

அவன் பாய்வதற்கு முன்னதாக நாம் பாய்வதனூடாக

மிக விரைவில் வெற்றியைப் பெறுவோம். அந்த விரைவான பாய்ச்சலுக்கு நாங்கள் சண்டையைத் தொடங்கும்போது - அந்தப் பாய்ச்சலுக்கு புலிகள் தேவை. தமிழீழத் தேசியத் துணை படையாக- மக்கள் படையாக பல கோணத்திலும் வியூகத்திலும் எல்லா மக்களும் ஒன்று திரண்டு போராடவேண்டிய இறுதிக் கட்டம் இது.

இனியும் காலம் தாழ்த்துவதும் ஒவ்வொரு மணித்தியால நேரத்தை பிற்போடுவதும் நெருக்கடியைத்தான் தரும்.

இன்றைக்கு அவன் தீர்மானிப்பதுதான் சட்டம். புளியங்குளத்தில்-முகமாலையில் நிற்கிற எதிரியானவன் பாதையை மூட வேண்டும் என்று நினைத்தால் மூடுவான். திறக்க வேண்டும் என்றால் திறப்பான். மண்ணெண்ணெய் விட வேண்டும் எனில் விடுவான். இல்லையெனில் மறைப்பான்.

எண்ணிலடங்காத பல நெருக்குவாரங்களை- பொருளாதாரத் தடைகளைச் சுமத்தியிருக்கிறான். இதெல்லாம் பேசிப் பெற்றுக் கொள்ள வேண்டியவை அல்ல. இவை எல்லாவற்றையும் உடைத்து எறிந்து எங்களின் நிலத்தை மீட்டெடுக்க எல்லோரும் தலைவரது கரங்களை வலுச்சேர்க்க வேண்டும்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! என்றார் கேணல் சூசை.

http://www.eelampage.com/?cn=26637

Link to comment
Share on other sites

4 ஆம் ஈழப் போரின் கெரில்லாத் தாக்குதல்களே இப்போது நடைபெறுகின்றன: தளபதி கேணல் பால்ராஜ்

http://www.eelampage.com/?cn=26643

...............

இலங்கை மணித்திருநாட்டின் இறைமைக்கு எல்லாரும் ஒருக்கா 1நிமிடம் மொளன அஞ்சலி செலுத்துங்கோ.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.