Jump to content

கொழும்பில் கிளைமோர்த் தாக்குதல்: பேரூந்து சாரதி காயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கிளைமோர்த் தாக்குதல்: பேரூந்து சாரதி காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் வெலிசறயில் அமைந்துள்ள சிறிலங்கா கடற்படைத் தளத்திற்கு 50 மீற்றர் தொலைவில் கிளைமோர் குண்டொன்று வெடித்ததில், பேரூந்து சாரதியொருவர் காயமடைந்துள்ளார்.

கொழும்பு கட்டுநாயக்கா வீதியில் பயணித்த பேரூந்து ஒன்று, இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:45 மணியளவில் வெலிசற கடற்படை முகாமிற்கு அருகே செல்லும்போது இந்த கிளைமோர் குண்டு வெடித்துள்ளது.

கடற்படையினரின் வாகனத்தை இலக்குவைத்து இந்த கிளைமோர் வைக்கப்பட்டிருந்ததாக சிறிலங்கா இராணுவத் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ள போதிலும், தாக்குதல் நடந்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

-புதினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் கிளைமோர்த் தாக்குதல்: அதிர்ச்சியில் தென்னிலங்கை

கொழும்பு வெலிசறை கடற்படை முகாம் அருகே இன்று கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டது தென்னிலங்கையை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புத் தாக்குதல்- சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையால் நடத்தப்பட்டது: சு.ப.தமிழ்ச்செல்வன்

சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலானது சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறையினரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார்.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவிலிருந்து இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது:

கொழும்பில் நடத்தப்பட்டுள்ள கிளைமோர்த் தாக்குதலானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதலாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களைத் தூண்டிவிடுகிற ஒரு முயற்சியாகும்.

இத்தாக்குதல் நடத்தப்பட்ட சூழ்நிலையானது தாக்குதலின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. தோல்வியடைந்து விட்ட அரசாங்கமாக வர்ணிக்கப்படுகிற சிறிலங்கா அரசாங்கமானது தடைகளுக்கு அப்பால் தமிழீழ விடுதலைப் புலிகளை இழிவு செய்வதற்காக இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்கிறது.

இதேபோல்தான் வெலிக்கந்தை ஓமடியாமடுவிலும் தாக்குதலை நடத்தினார்கள். ஐரோப்பிய ஒன்றியத் தடை அறிவிப்பைத் தொடர்ந்து ஓமடியாமடுத் தாக்குதலை நடத்தினார்கள்.

சிறிலங்கா இராணுவ புலனாய்வுப் பிரிவினரும் துணை இராணுவக் குழுவினரும் குவிக்கப்பட்டு அப்பாவி சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். சிறிலங்கா இராணுவத் தலைமைப்பீடத்தின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டமிட்ட தாக்குதலை நட்டத்தினார்கள் என்றார் சு.ப.தமிழ்ச்நெல்வன்.

-புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.