Jump to content

'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, - எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
TrinityEvantst-banner-2013-seithy-150.jp

இசைஞானி இளையராஜவின் 'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம்.

  

கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுக்கள், புதியதிகதியில் செல்லுபடியாகும். மேற்கூறிய புதிய திகதியில் இந்த நிகழ்ச்சிக்கு செல்லமுடியாத வாடிக்கையாளர்கள், தங்கள் நுழைவுச்சீடுக்களுக்கான கட்டணங்களை மீழப்பெற்றுகொள்வதற்கான இறுதித்திகதி, தை மாதம் 18, 2013. இந்நிகழ்ச்சி பற்றிய மேலதிக விபரங்களைப்பெற, அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கம் 1-855-554-4554, மற்றும் ட்ரினிட்டி இவன்ட்ஸ் உத்தியோகபூர்வ இணையத்தளம்www.trinityeventsonline.com.

காதலர்தினம் (Valentine Day ), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend ) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.

 

Trinity-Events-Press-Release-_2013-70095

 

 

Trinity-Events-Press-Release-_2013-70079

 

http://www.seithy.com/breifNews.php?newsID=71667&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • Replies 90
  • Created
  • Last Reply

 காதலர்தினம் (Valentine Day ), மற்றும் கனடா குடும்ப தினங்ளை (Family Day Long weekend ) ஒட்டி இந்நிகழ்ச்சி கோலாகலமாக இடம்பெறவிருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு கொடுத்து, மீண்டும் இந்நிகழ்ச்சியை அரங்கேற்றும் வரை பொறுமை காத்த அனைத்து ரசிகர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு, இந்நிகழ்ச்சிக்கு எல்லோரையும் வருகவென வரவேற்கிறார்கள் ட்ரினிட்டி இவன்ட்ஸ் குழுவினர்.
 

 

சிறப்பாக நடக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரியில் வருவதால் இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா கனடாவில் இன்னிசை நிகழ்ச்சியை வைக்கின்றார் என்று பரப்புரை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரியில் வருவதால் இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா கனடாவில் இன்னிசை நிகழ்ச்சியை வைக்கின்றார் என்று பரப்புரை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

வாயிருந்தால் வங்காளம் போகலாம்" என்பது உண்மைதான்....ஒருசில நக்கல்களுக்கு தள்ளியிருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

Link to comment
Share on other sites

சீமான் இந்த பேட்டியில்; http://www.yarl.com/forum3/index.php?showtopic=112747 ; இன்று ஏன் இன்று இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் நாட்டிற்கு "ஏற்றுமதி' செய்யப்படுகின்றன? என்ற கேள்விக்கு பதில் வைக்கிறார்.

 

 



எவ்வாறு சினிமா என்ற மோகத்தில் குடிபோதை என்ற பழக்கத்திற்குள் மக்களை அடிமையாக்குவது என்பது சாத்தியப்பட்டதோ, அந்த அணுகுமுறைக்கு புலம்பெயர் தமிழர்களும் விதி விலக்கு அல்ல.

Link to comment
Share on other sites

ஒரு கணக்கு பார்வை :
 
ஏற்கனவே 23000 சீட்டுக்கள் விற்பனை ஆகியுள்ளன என கூறப்படுகின்றது. முழுமையாக 40000 சீட்டுக்களை விற்றால் வரும் தொகை சராசரியாக (அண்ணளவாக) = 40000 x 50                                                                                                                                                     = 2,000,000
அனுசரணையாளர்கள், ஸ்பொன்சர்கள் :                      = 0,050,000
 
 
கிட்டத்தட்ட நூறு பேர் இந்தியாவில் இருந்து வந்தால் ஆளுக்கு 2000 டார்கள் செலவு எனப்பார்த்தால் : 100 x 2000 = 200,000
நடக்கும் இட மற்றும் செலவுகள் :            = 100,000                                                                                                                                                                             

ஏற்கனவே இரத்து  செய்யப்பட்ட செலவுகள் :            = 050,000                                                                                                                                                       

இதர செலவுகள்:                   = 050,000                                                                                                                                                                                                                    

 
மொத்த செலவுகள் :        = 400,000                                                                                                                                                                                                                       

 
இலாபம் :            = 1,650,000                                                                                                                                                                                                                                   

இளையராஜாவிற்கு :      இரண்டு கோடிகள்   (400,000 CAD $)                              
 
நிகர இலாபம் : 1.2 மில்லியன்கள் (அண்ணளவாக )

Link to comment
Share on other sites

இளையராஜா ஒரு இசைஞானி.

 

எதில் இசைஞானி ?தமிழ் இசையில்.

வேறு எந்த மொழியிலும் இல்லை என்றே எண்ணுகின்றேன்.

 

இவரை இவ்வாறான ஒரு பிரமாண்ட நிகழ்விற்காக யார் அணுகமுடியும்?

 

கையில் பணம் உள்ளவர்கள். எவ்வளவு பணம் - குறைந்தது இரண்டு மில்லியன்கள் கையில் உள்ளவர்கள். அதுவும் புலம்பெயர் ஈழத்தமிழர்களிடமே பெற முடியும்.

 

கனடாவில் இந்த நிகழ்வை நடாத்துபவர்கள் யார்? இவர்களிடம் இவ்வளவு பணம் உள்ளதா?
நடாத்துபவர்களில்  முதன்மையானர் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை வைத்திருப்பவர், இசையில் சம்பந்தப்பட்டவர் அல்ல.

 

எனவே ஒரு நியாயமான கேள்வி எழுகின்றது.

இதில் கருப்பு பணம் சம்பந்தப்பட்டுள்ளதா?

இந்த பல மில்லியன் டாலர் பெறுமதியான நிகழ்வை நடாத்துபவர்கள் பின்னால் யார் இருக்கக்கூடும்?
 

 

தொடர்பு பட்ட செய்தி : கறுப்பு பணம்: பிரிட்டனில் கைதான தமிழர்களுக்கு பிணை : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112649

 

இரண்டு மில்லியன்களை வைத்து சிங்களம் தமிழர்களிடமே ஒரு மில்லியனை சம்பாதிக்க முனைகின்றதா?

 

 இல்லை என்றால் நானே முதல் சந்தோசப்படுபவன்  :D

Link to comment
Share on other sites

கார்த்திகையில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை நடாத்த இருந்த சிறிலங்கா அரசு தானாம் மாசியிலும் நடாத்த இருக்கிறது.

Spoiler
Link to comment
Share on other sites

இப்படி ஒரு நிகழ்வை இளையராஜா இல்லை இன்னொரு தமிழக பிரபலம் ஏன் ஈழ மக்கள் துயர் துடைக்க செய்யக்கூடாது?

 

செய்ய மனம் இல்லையா ?


இல்லை சிங்களம் அனுமதிக்காதா?

Link to comment
Share on other sites

சீமான் இந்த பேட்டியில்; http://www.yarl.com/forum3/index.php?showtopic=112747 ; இன்று ஏன் இன்று இவ்வாறான பிரமாண்டமான நிகழ்வுகள் புலம்பெயர் தமிழர்கள் நாட்டிற்கு "ஏற்றுமதி' செய்யப்படுகின்றன? என்ற கேள்விக்கு பதில் வைக்கிறார்.

 

 

எவ்வாறு சினிமா என்ற மோகத்தில் குடிபோதை என்ற பழக்கத்திற்குள் மக்களை அடிமையாக்குவது என்பது சாத்தியப்பட்டதோ, அந்த அணுகுமுறைக்கு புலம்பெயர் தமிழர்களும் விதி விலக்கு அல்ல.

 

இன்று முதல் சீமான் சினிமா எடுப்பதை நிறுத்தி  தமிழக மக்களுக்கும்  போராட்ட உணர்வை கொண்டுவருவார் என  நம்புவோமாகா.

 

 

  சொஞ்ச படம் எடுத்து  புகழ்(?) பெற்ற சீமான்  தமிழக்க கோடீஸ்வரர்  போல வழம்வருவது சொந்த பணமா இல்லை புலத்து மக்களின் பணமா என  உரிமையாக என்னால் கூற முடியாமைக்கு வருந்துகிறேன் :D

Link to comment
Share on other sites

ஒரு கணக்கு பார்வை :

 

ஏற்கனவே 23000 சீட்டுக்கள் விற்பனை ஆகியுள்ளன என கூறப்படுகின்றது. முழுமையாக 40000 சீட்டுக்களை விற்றால் வரும் தொகை சராசரியாக (அண்ணளவாக) = 40000 x 50                                                                                                                                                     = 2,000,000

அனுசரணையாளர்கள், ஸ்பொன்சர்கள் :                      = 0,050,000

 

 

கிட்டத்தட்ட நூறு பேர் இந்தியாவில் இருந்து வந்தால் ஆளுக்கு 2000 டார்கள் செலவு எனப்பார்த்தால் : 100 x 2000 = 200,000

நடக்கும் இட மற்றும் செலவுகள் :            = 100,000                                                                                                                                                                             

ஏற்கனவே இரத்து  செய்யப்பட்ட செலவுகள் :            = 050,000                                                                                                                                                       

இதர செலவுகள்:                   = 050,000                                                                                                                                                                                                                    

 

மொத்த செலவுகள் :        = 400,000                                                                                                                                                                                                                       

 

இலாபம் :            = 1,650,000                                                                                                                                                                                                                                   

இளையராஜாவிற்கு :      இரண்டு கோடிகள்   (400,000 CAD $)                              

 

நிகர இலாபம் : 1.2 மில்லியன்கள் (அண்ணளவாக )

 

அகூதா   உரிமையில் ஒன்று உங்களில்டம் ஒரு வேண்டு கோள்?

உங்களின் உண்மையான சுயருபத்தை காட்டாமால்  நீங்கள் செய்யும் நல்ல செய்ற்களை மீண்டும் முனெடுங்கள்.

Link to comment
Share on other sites

சசி,
நான் எழுதும் கருத்துக்களை நீங்கள் வாசித்து பல இடங்களில் பதில் கருத்துக்களும் வைப்பது எனக்கு ஒரு நம்பிக்கையை உங்கள்மேல் தருகின்றது.

 

நன்றிகள்.

Link to comment
Share on other sites

நவம்பரில் இந்த நிகழ்வு நடக்க கூடாது என்று ஒரு பிரிவினர் மாவீரர் மாதத்தினைச் சாட்டாக வைத்து கூவும் போது இவர்கள் வியாபார நோக்கில் தான் எதிர்க்கின்றனர் என்று சிலர் கூறியது எவ்வளவு உண்மை என்று இன்று அகூதாவின் பதில்கள் எமக்கு வெளிக்காட்டுகின்றன.

 

அகூதா போன்றவர்கள் தாம் இணைந்து இருக்கும் புலம்பெயர் அமைப்புகளின் பெயரைச் சொல்லி, அவற்றுக்காகத் தான் இங்கு இப்படி எழுதுகின்றோம் என்று உண்மையை கூறினால் நேர்மையாக இருக்கும்.

 

 

ஒரு உறுப்பினர் அண்மையில் இங்கு எழுதும் பலர் தாம் இருக்கும் அமைப்புகளிற்காக முகமூடி இட்டு எழுதுகின்றனர் என்று கூறியது மிகச் சரியாகத்தான் இருக்கின்றது.

 

கறுப்புப் பணம் பற்றி, கள்ளப் பணம் பற்றி அக்கறைப் பட்டால் நேரடியாக கனடிய அரசுக்கு உங்கள் சந்தேகங்களைத் தெரிவியுங்கள்.

 

ஒரு தென் இந்திய கலைஞர் புலம்பெயர் தேசத்துக்கு வந்து நிகழ்வு  செய்யும் போது கறுப்புப் பணம் பற்றி அக்கறைப்படும் இவர்கள் போராட்டத்துக்கு காசு சேர்த்து பதுக்கி வைத்திருக்கும் நபர்களைப் பற்றி எழுதினால் உடனே பொங்கி எழுவார்கள் எனப்தையும் அவதானிக்க் கூடியதாக இருக்கின்றது.

 

தாம் மட்டுமே வியாபாரம் செய்ய வேண்டும். தாம் மட்டுமே லாபம் அடைய வேண்டும். தம் பணப்பை மட்டுமே நிரம்ப வேண்டும்.

 

இன்னொருவர் செய்ய முனைந்தால், இன்னொருவர் லாபம் அடைய முனைந்தால் எந்தளவுக்கு அதனை குழப்ப முடியுமோ அந்தளவுக்கு குழப்புவீர்கள். அதுவும் அவர் தமிழனாக இருந்து விட்டால் போதும். வெறித்தனமாக எதிர்பீர்கள்

 

அதுக்காக மாவீரரை இழுத்து கேவலமான அரசியலை செய்யவும் தயங்கமாட்டீர்கள்.

 

 

கெட்டிக் காரன் புளுகுக்கும் கூட எட்டு நாளைக்குதான் கெடு.

 

உங்கள் வேடங்களும் கலையும்.

 

 

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த நிகழ்விற்கு பின்னால் இருப்பவர் ஒரு பெரிய திறமைசாலி. அவர் முப்பெரும் வாகன நிறுவனங்களுடன் வர்த்தகம் செய்பவர்.

 

பல தராதர பட்டங்கள் பெற்று பல தமிழ் இளைஞர்களுக்கு பெரிய நிறுவனங்களில் வேலை எடுக்க உதவியவர். மற்றும் இளையோரை மதித்து அவர்களை உற்சாகபடுத்துபவர்.

 

மற்றும் பல தமிழ் அமைப்புகளுக்கு தன் பெயர் தெரியாமல் உதவி வருகிறார்.

 

இந்த நிறுவனம், http://www.trinitytechinc.ca/ , வட அமெரிக்க வாகன உற்பத்தியில் (ஜி.எம். கிரைஸ்லர்,, போர்ட்) ஆகியவற்றுடன் சில வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக கூறுகிறீர்கள். ஆனால், நேரடியாக அவர்கள் எந்த ஒப்பந்தமும் செய்தது போன்று தெரியவில்லை.

 

இளையோருக்கு உதவினால், அது மிக நல்ல விடயம். முடிந்தால் எந்த அமைப்பு என்று கூறினால் நன்றாக இருக்கும். TYO, CYTA, CanTYD போன்ற அமைப்புக்களின் நிகழ்வுகளுக்கு சென்ற பொழுது இந்த நிறுவனம் உதவியதாக இல்லை நடாத்துபவர் உதவியதாக கேள்விப்படவில்லை.

நாம் இந்த நிகழ்வை தமிழீழத்தின் பெயரில் தூற்றினால் எமக்கு எதிராக 23,000 பேரை இலகுவாக மாற்றும்.

நான் யாரையும் யார் சார்பாக தூற்றவில்லை. எனது கேள்வி என்பது: எவ்வாறு இவ்வாறான ஒரு நிகழ்வை சமூகத்தில் பிரபலம் இல்லாத ஒருவர் செய்ய முடிகின்றது? இதனால் நாம் ஏமாரவும், எமது சமூகத்திற்கு பயன் இருக்கவேண்டும் என்பதுவுமே.

நாம் இந்த நிகழ்விற்கு ஆதரவு கொடுத்து ஏதாவது தொண்டு நிறுவனத்திற்கு உதவ கேட்கலாம்.

 

நீங்கள் தாரளமாக ஒரு தமிழர் மில்லியன் டொலர் உழைக்கிறார் என்று மகிழ்ச்சி அடையலாம்.

 

ஏற்கனவே பலரு ம்கேட்டதால் தான் இலாபத்தில் தாயகத்தில் ஒரு உதவியை செய்ய முன்வந்ததாக அறிவித்து இருந்தனர். அது நல்ல விடயம்.

 

தமிழர் ஒருவர் ஒரு மில்லியன் உழைப்பது நல்ல விடயம். ஆனால், அது எமது சமுகத்தின் ஊடாக உழைக்கப்ப்படும்பொழுது சமூக நலங்களுக்கும் கொஞ்சம் பயன்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை. அவர் தமிழரல்லாத சமூகத்தை வைத்து உழைக்கும்பொழுது நான் அவ்வாறு கேட்கமாட்டேன்.

Link to comment
Share on other sites

நவம்பரில் இந்த நிகழ்வு நடக்க கூடாது என்று ஒரு பிரிவினர் மாவீரர் மாதத்தினைச் சாட்டாக வைத்து கூவும் போது இவர்கள் வியாபார நோக்கில் தான் எதிர்க்கின்றனர் என்று சிலர் கூறியது எவ்வளவு உண்மை என்று இன்று அகூதாவின் பதில்கள் எமக்கு வெளிக்காட்டுகின்றன.

 

அகூதா போன்றவர்கள் தாம் இணைந்து இருக்கும் புலம்பெயர் அமைப்புகளின் பெயரைச் சொல்லி, அவற்றுக்காகத் தான் இங்கு இப்படி எழுதுகின்றோம் என்று உண்மையை கூறினால் நேர்மையாக இருக்கும்.

 

நான் எந்த அமைப்பிற்காகவும் எழுதவில்லை, காரணம், நான் எந்த அமைப்பையும் பிரதிநிதித்துவம் செய்யவும் இல்லை.

 

 

ஆனால், பல நல்ல வேலைகளை செய்து பணத்திற்காக கடினப்படும்  அமைப்புக்களுக்கு தனிப்பட்ட ரீதியில் உதவினேன் / உதவுகின்றேன்:

 

- CTC - - மாதம் மாதம் உதவுகின்றேன்

- GTF - வருடம் வருடம் உதவுகின்றேன்

- CYTA - வருடம் வருடம் உதவுகின்றேன்

- TYO  - வருடம் வருடம் உதவுகின்றேன்

- ITMO: International Tamil Medical Organization: மாதம் மாதம் உதவுகின்றேன்

- Nesakkaram : இடைக்கிடை உதவுகின்றேன்.

 

இந்த அமைப்புக்கள் எல்லாம் அரசியல் , சமூக சேவைகளை செய்கின்றன. ஆனால், பல நூறு திட்டங்கள் இருந்தும் அவற்றை முன்னெடுக்க முடியாத நிலை. காரணம் $$$$. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெப்ரவரியில் வருவதால் இலங்கையின் சுதந்திர தினத்தை ஒட்டி இசைஞானி இளையராஜா கனடாவில் இன்னிசை நிகழ்ச்சியை வைக்கின்றார் என்று பரப்புரை செய்ய யாரும் வரமாட்டார்கள் என்று நம்புகின்றேன்.

 

ஞாபகப்படுத்தியதற்கு நன்றி  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியுமா? :o

 

 

முடியல :lol:

முடியல :lol:

முடியல :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பவாதத்திற்காக மாவீரரையும் தமக்கு சாதகமாக பயன்படுத்த தயங்காத கூட்டத்தை இந்தத்திரியே நல்லா அடையாளங்காட்டுது நடக்கட்டும் நடக்கட்டும். இந்தத் திரி நன்றாக வளர்ந்து கொளுந்துவிட்டெரிய வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

இந்த திரியுடன் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் சம்பந்தப்பட்ட ஒரு கருத்து:

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இப்பொழுது இரண்டாவது தலைமுறையை இந்த புதிய தேசங்களில் வளர்க்கின்றார்கள். அவர்கள் தாமாக சந்தித்த கலாச்சார, வேலை தள அதிர்ச்சிகளுக்கு அப்பால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்பொழுது வித்தியாசமான அதிர்ச்சிக்கு பலரும் முகம் கொடுக்கின்றார்கள், அது - " சுயமாக சிந்தித்தல்".  


ஆம், பிள்ளைகளை கனடாவில் உள்ள பாடசாலை முறைகள் தாயகத்தில் 'கிளிப்பிள்ளைகள்' போன்ற வளர்ந்த எங்களின் பிள்ளைகளை 'சுயமாக சிந்திக்கும்' பண்பை கூறி வளர்க்கின்றார்கள். இதை ஏற்க முடியாத பல பெற்றோர்கள் - பிள்ளைகளுடன் சண்டை பிடித்து - உறவை புண் படுத்திக்கொள்ளுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியுடன் நேரடியாக சம்பந்தப்படாத ஆனால் சம்பந்தப்பட்ட ஒரு கருத்து:

 

புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் இப்பொழுது இரண்டாவது தலைமுறையை இந்த புதிய தேசங்களில் வளர்க்கின்றார்கள். அவர்கள் தாமாக சந்தித்த கலாச்சார, வேலை தள அதிர்ச்சிகளுக்கு அப்பால், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பும்பொழுது வித்தியாசமான அதிர்ச்சிக்கு பலரும் முகம் கொடுக்கின்றார்கள், அது - " சுயமாக சிந்தித்தல்".  

 

ஆம், பிள்ளைகளை கனடாவில் உள்ள பாடசாலை முறைகள் தாயகத்தில் 'கிளிப்பிள்ளைகள்' போன்ற வளர்ந்த எங்களின் பிள்ளைகளை 'சுயமாக சிந்திக்கும்' பண்பை கூறி வளர்க்கின்றார்கள். இதை ஏற்க முடியாத பல பெற்றோர்கள் - பிள்ளைகளுடன் சண்டை பிடித்து - உறவை புண் படுத்திக்கொள்ளுகிறார்கள்.

 

பிள்ளைகள் மட்டுமில்லை பெரியவர்களும் சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும் அகூதா.

 

ஆமா உங்களுக்கு இந்த இசை நிகழ்வில் ஆரம்பத்திலிருந்தே ஒரு வித எதிர்ப்பான தன்மைகள் இருக்கின்றன இந்தத்திரியை ஆரம்பித்து வைத்தவருக்கு அடுத்ததாக வாழ்த்து தெரிவித்துவிட்டு தொடர்ந்து உங்களுடைய சுயம் அப்படி என்னால் நினைக்கமுடியவில்லை ஏதோ ஒரு முகமூடிக்குப்பின்னால் நின்று கருத்துகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் வேறு விடயங்களில் உங்கள் மீதாக உள்ள அளவற்ற மதிப்பு இங்கு நீங்கள் தொடர்ந்தும் கறுப்புப் பணம் என்று சொல்லாடுவதன்மூலம் அடிபட்டுப்போகிறது.  அப்படியே கறுப்புப் பணம்பற்றி எழுத வெளிக்கிட்டால் நிறையவே அது நம்மவர் மத்தியில் இருக்கிறது அதுவும் வெளிப்படையாக நான் சொல்ல விரும்பாத பக்கங்களில் நிறையவே புழக்கத்தில் உள்ளன. அவற்றையும் நீங்கள் எடுத்து வந்தால் உங்களிடம் நேர்மை இருக்கிறது.

 

அப்படியே நீங்கள் கறுப்புப்பணம்பற்றிக் கவலைப்பட்டால் கனடா காவல்துறைக்கு அறிவித்து நேர்மையான கனடாத் தமிழராக உங்களைக்காட்டிக் கொள்ளலாம். தந்திரமாக நீங்கள் கருத்தாடலாம். இன்றைய நிலையில் புற்றீசல்கள்போல் நிறையவே நிகழ்வுகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. இங்கு நடக்கும் எந்த நிகழ்வுக்கும் யாரும் கணக்குக் காட்டுவதில்லை. இப்போது இத்தகைய நிகழ்வுகளை ஒரு தொழிலாகவே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இந்த நிகழ்வு நடப்பதானால் இவ்வளவு பணத்தை இவர்களுக்கு அல்லது இந்த அமைப்புக்குக் கொடுங்கள் என்று வெளிப்படையாக எழுதினால் அந்த நேர்மையை பாராட்டுவோம். இப்போது வெளிப்படையாகவே இந்தத் திரியில் எந்த அமைப்பிற்கு அவர்கள் எவ்வளவு பணம் கொடுக்கவேண்டும் என்று எண்ணுகிறீர்கள் என்று தெளிவாக எழுதுங்கள் அவர்களும் இதனை வாசிப்பார்கள்தானே.

Link to comment
Share on other sites

பிள்ளைகள் மட்டுமில்லை பெரியவர்களும் சுயமாக சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதையும் சேர்த்துச் சொல்லவேண்டும் அகூதா.

ஆனால் பலரின் பதிகள் அப்படி இல்லை. உங்கள் பதிலிலும் 'முகமூடி' என்கிறீர்கள். ஆனால், அப்படி ஏதும் தேவை இல்லை என மேலே எழுதி உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் பலரின் பதிகள் அப்படி இல்லை. உங்கள் பதிலிலும் 'முகமூடி' என்கிறீர்கள். ஆனால், அப்படி ஏதும் தேவை இல்லை என மேலே எழுதி உள்ளேன்.

 

கேள்விக்கும் முகமூடி இருக்கிறது பதிலுக்கும் முகமூடி இருக்கிறது என்பதுதான் உண்மை. இதற்குள் பார்வையாளர்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்.

 

இவற்றையெல்லாம்பற்றி கவலைப்படுவதற்கு ஏதுமில்லை ஏனெனில் இதுவரை காலமும் நாங்கள் பார்க்காத புதிய விடயத்தையா இப்போது பார்க்கிறோம்?

Link to comment
Share on other sites

கேள்விக்கும் முகமூடி இருக்கிறது பதிலுக்கும் முகமூடி இருக்கிறது என்பதுதான் உண்மை. இதற்குள் பார்வையாளர்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்.

 

நான் கேள்விகள் கேட்பது இது போன்ற விடயங்களில் மக்கள் கேள்விகள் கேட்க வேண்டும் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே. மாறாக இந்த நிகழ்ச்சியில் இல்லை இதை நடாத்துபவர் மீது எந்த தனிப்பட்ட குரோதமோ இல்லை வெறுப்போ கிடையாது.

நாங்கள் ஒரு சமூக நோக்கமாக சிந்தித்து செயல்படுவது காணாது என்பதே எனது கருத்துக்கள். அதை புரிந்து கொள்ளும் விருப்பம் இல்லாதவர்கள் 'முகமூடி; என்று தம்மை ஏமாற்றி கொள்ளுகிறார்கள்.

 

நான் கேட்ட ஒரு சாதாரண கேள்விக்கு யாரும் பதில் தரவில்லை: எவ்வாறு பல மில்லியன்கள் செலவுள்ள நிகழ்வை அதில் சம்பந்தமில்லாத கூட்டத்தால் நடாத்த முடிகின்றது?

Link to comment
Share on other sites

மறுபடியுமா? :o

 

 

முடியல :lol:

முடியல :lol:

முடியல :lol:

 

 இப்போதைக்கு முடிய இது என்ன எமது போரட்டங்களா.

 

 

ஒரு செம்பு தண்ணியை மடக்கு மடக்கு என குடித்துவிட்டு நித்திரைக்கு போகவும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.