Jump to content

சிந்தனை செய் மனமே !!!!!!!!!


Recommended Posts

அடியில் இருப்பது

 

 

ஓர் ஆறு. அதன் இரு கரைகளிலும் இரண்டு கிராமங்கள்.

அந்த ஆற்றில் வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாளும் தண்ணீர் அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும். அதைச் சமாளித்து நீந்தி அடுத்த கரைக்குச் செல்வது மிகவும் சிரமம். இதனால் அந்த இரு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த ஆபத்தான முயற்சியில் இறங்கவில்லை. அவரவர் தங்களுடைய சொந்தக் கிராமத்திலேயே நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். அடுத்த கிராமத்துடன் உறவும் இல்லை, விரோதமும் இல்லை என்கிற நிலைமை.

 

ஒருநாள் வலது கரைக் கிராமத்துக்கு ஜென் துறவி ஒருவர் வந்தார். அவர் ஆற்றங்கரையில் நின்றபடி இடது கரைக் கிராமத்தைப் பார்த்தார்.

 

‘நான் அங்கே போகணுமே!’ என்றார்.

 

‘அது சாத்தியமில்லை சாமி’ என்று பதில் வந்தது. ‘இந்த ஆத்துல நீச்சலடிக்கறது தற்கொலைக்குச் சமம்!’

 

அந்த ஜென் துறவி அதனை ஏற்கவில்லை. ‘ஆற்றைக் காரணம் காட்டி நீங்கள் பிரிந்திருப்பது சரியல்ல. நீங்கள் ஏன் ஒரு பாலம் கட்டக்கூடாது?’ என்றார்.

 

‘அடப் போங்க சாமி, நீச்சலுக்கே வழியில்லை, பாலம் எப்படிக் கட்டமுடியும்?’

 

‘நிச்சயமா முடியும். நான் உங்களுக்கு உதவறேன்’ என்றார் அவர். அந்தக் கிராமத்திலிருந்த இளைஞர்கள் நூறு பேரைத் திரட்டிக்கொண்டு வேலையைத் தொடங்கினார்.

அடுத்த பல நாள்கள் ராப்பகலாக வேலை நடந்தது. வெயிலிலும் மழையிலும் அவதிப்பட்டு எப்படியோ அவர்கள் பாலத்தைக் கட்டி முடித்துவிட்டார்கள். இப்போது இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களும் இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்கும் போய்வரமுடிந்தது. கல்வி, வேலை தேடுவது, திருமணத்துக்குப் பெண் எடுப்பது என்பதுபோன்ற நல்ல உறவுகள் ஏற்பட்டன. இதனால் அந்த இரு கிராமங்களின் மக்களும் சேர்ந்து அந்த ஜென் துறவியைச் சந்தித்தார்கள்.

 

‘நாங்க எல்லாரும் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்த முடிவெடுத்திருக்கோம்!’ என்றார்கள்.

 

‘வேண்டாம்’ என்றார் அந்தத் துறவி. ’இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கு இருவகையான கற்களைப் பயன்படுத்தியிருக்கிறோம். நீங்கள் மேலோட்டமாகப் பார்க்கும்போது பாலத்தின் சிமென்ட் கற்கள்மட்டும்தான் உங்கள் கண்ணுக்குத் தெரியும். ஆனால் மறைமுகமாக அந்தப் பாலத்தைத் தாங்கி நிற்பது ஆற்றுக்குள் அஸ்திவாரமாகப் போட்டிருக்கும் பாறாங்கற்கள்தான்.’

 

‘அது சரி சாமி. அதுக்கும் நீங்க பாராட்டு விழா வேணாம்ன்னு சொல்றதுக்கும் என்ன சம்பந்தம்?’

 

‘வெளியே தெரியாமல் தங்களுடைய வேலையைச் செய்துகொண்டிருக்கும் அந்தப் பாறாங்கற்களைப்போல்தான் நானும் இருக்க விரும்புகிறேன். எனக்கு எந்த விளம்பரமோ பாராட்டோ தேவையில்லை’ என்றார் துறவி.

 

http://www.tamilpaper.net/?p=2971

Link to comment
Share on other sites

  • Replies 208
  • Created
  • Last Reply

பசுவா ?? பன்றியா ??

 

 

’என் சொத்துகளையெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்துவிடப்போகிறேன்!’ என்றான் ஒரு பெரிய பணக்காரன்.

 

‘எப்போது?’ என்று கேட்டார் அவனுடைய குருநாதர்.

 

‘இதென்ன கேள்வி? என் காலத்துக்குப்பிறகுதான்!’ என்றான் அந்தப் பணக்காரன். ‘ஏற்கெனவே உயிலெல்லாம் எழுதிவைத்துவிட்டேன். எனக்குப்பின் இந்தச் சொத்துகள் எல்லாம் ஏழை எளிய மக்களின் நன்மைக்குப் பயன்படும்.’

 

‘ஓஹோ! சரி!’

 

’வெறும் சரிதானா? இவ்வளவு பெரிய தர்மம் செய்கிறேன். என்னை இன்னும் நாலு வார்த்தை பாராட்டக்கூடாதா?’

 

‘நீ பசுவாக இருந்தால் பாராட்டலாம். பன்றியாக இருக்கிறாயே!’

 

‘என்னது? பன்றியா? அது எப்படி?’

 

‘பசு உயிரோடு இருக்கும்போதே நிறையப் பாலை அள்ளித்தருகிறது. ஆனால் பன்றி, இறந்தபிறகுதான் தன்னுடைய மாமிசத்தையும் கொழுப்பையும் தருகிறது. பசு தரும் பாலின் மதிப்பைவிடப் பன்றி இறைச்சியின் மதிப்பு அதிகமாக இருந்தாலும், உயிரோடு இருக்கும்போதே தருவதற்கு ஒரு மனம் வேண்டுமல்லவா?’

 

‘உண்மைதான். எனக்கு அந்த மனம் வரவில்லையே. என்ன செய்ய?’

’நமக்குச் சொந்தமாக எதுவுமே இல்லை என்று நினைக்கச் சொல்கிறது ஜென். என் வீடு, என் குடும்பம், என் பணம், என் கார், என் கம்ப்யூட்டர், என் புத்தகம் என்று நாம் நினைப்பது எல்லாமே உண்மையில் வேறு யாருடையதோ. நாம் அவற்றுக்கு நிஜமான சொந்தக்காரர்கள் இல்லை, வெறும் வாடகைக்காரர்கள்தான். அவற்றைத் தாற்காலிகமாகச் சொந்தம் கொண்டாடுகிறோம். எந்த விநாடியிலும் அது நம்மிடமிருந்து பிடுங்கப்பட்டுவிடலாம் என்பது புரிந்தால், அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கிடக்கமாட்டோம்!’

 

‘ஏன் இப்படிப் பயமுறுத்தறீங்க?’

 

‘பயமுறுத்துவது என் நோக்கம் இல்லை. சாதாரணப் பொருள்களின்மீது அளவுக்கு அதிகமான ஒட்டுதல் ஏற்படுத்திக்கொள்ளாமல் மனிதர்களோடு செலவிடும் நேரத்தை மதிக்கப் பழகு. உன்னுடைய வாழ்க்கைக் கண்ணோட்டமே மாறிவிடும்!’

 

http://www.tamilpaper.net/?p=2724

Link to comment
Share on other sites

சுவைத்தல்

 

 

ஜென் சிந்தனையாளர் ஒருவருடைய வீடு. அங்கே நான்கைந்து மாணவர்கள் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். தினந்தோறும் ராத்திரிச் சாப்பாடு முடிந்தவுடன் அவர்களுக்கு ஒரு ஸ்பூன் தேன் வழங்கப்படும். அதைக் குடித்துவிட்டுதான் கை கழுவவேண்டும்.

அன்றைக்குத் தேன் குடித்த மாணவன் ஒருவன் முகம் அஷ்டகோணலாக மாறியது. ‘த்தூ, த்தூ! ஒரே கசப்பு!’ என்றான் அவன்.

 

பக்கத்தில் உட்கார்ந்திருந்த இன்னொரு மாணவனுக்குக் கோபம். ‘உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?’ என்று கத்தினான். ‘தேன் அற்புதமா இனிக்குது. அதைப்போய்க் கசப்புன்னு சொல்றியே!’

 

‘இல்லை. இந்தத் தேன் கசக்குது!’

 

‘இல்லவே இல்லை. இனிக்குது!’

 

அவர்கள் கைகூடக் கழுவாமல் தங்களுடைய குருநாதரிடம் ஓடினார்கள். ‘ஐயா, எங்களுக்குள்ள ஒரு சின்னச் சண்டை. நீங்கதான் தீர்த்துவைக்கணும்’ என்றார்கள்.

 

‘என்ன சண்டை?’

 

’இன்னிக்குச் சாப்பாட்டோட பரிமாறின தேன் இனிக்குதுன்னு நான் சொல்றேன். கசக்குது-ன்னு இவன் சொல்றான். எங்கள்ல யார் சொல்றது சரி?’

 

’ரெண்டுபேர் சொல்றதும் சரிதான்!’ என்றார் குருநாதர்.

 

‘அது எப்படி முடியும்? நீங்க தேனைக் குடிச்சுப் பார்க்காமலே தீர்ப்புச் சொல்றீங்களே!’

 

’அவனுக்குத் தேன் இனிக்கிறது. உனக்கு அது கசக்கிறது. எனக்கு அது புளிக்கலாம், அல்லது காரமாகக்கூட இருக்கலாம். அவரவர் சுவை அவரவர்க்கு’ என்று புன்னகைத்தார் குருநாதர். ‘சுவைப்பதுதான் முக்கியம். உங்கள் சுவை அடுத்தவர்களோடு ஒத்துப்போகிறதா என்பதுபற்றி யோசித்துக் கவலைப்படாதீர்கள்!’

 

http://www.tamilpaper.net/?p=1217

Link to comment
Share on other sites

வேர்

 

யோக்கா என்பவர் ஜென் ஞானி. அவரிடம் பல சிஷ்யர்கள் பாடம் பயின்றுவந்தார்கள்.

ஒருநாள், பெரிய வியாபாரி ஒருவன் யோக்காவைப் பார்க்க வந்தான். ‘நான் உங்களிடம் சீடனாகச் சேரவேண்டும்’ என்றான்.

 

யோக்கா அவனை மேலும் கீழும் பார்த்தார். ‘நீ பெரிய பகட்டுக்காரனாக இருக்கிறாயே. எங்கள் ஆசிரமத்தின் எளிமையான வாழ்க்கைமுறை உனக்கு ஒத்துவருமா? எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு எளிய துறவியாக வாழ்வது என்பது மிகவும் கடினமான விஷயம். அது உன்னால் முடியுமா?’ என்றார்.

 

’நிச்சயமாக’ என்றான் அவன்.

 

‘நான் இன்றைக்கே இந்தப் பட்டுத் துணிகளைத் தூக்கி எறிந்துவிட்டுக் கைத்தறித் துணிகளைக் கட்டிக்கொள்கிறேன். எளிமையாகச் சாப்பிட்டுப் பழகுகிறேன். என்னுடைய சொத்துகளையெல்லாம் தர்மத்துக்கு எழுதிவைத்துவிடுகிறேன். நீங்கள் எதிர்பார்க்கும்படி நடந்துகொள்கிறேன். எனக்கு ஞானம்மட்டும் கிடைத்தால் போதும்!’

 

அப்போதும் யோக்காவுக்கு முழுத் திருப்தி வரவில்லை. ‘பார்க்கலாம்!’ என்றார். ‘நான் உன்னைச் சில நாள்கள் கவனித்துப் பார்த்து முடிவு செய்கிறேன்!’ அன்று தொடங்கி அந்த வியாபாரி அவருடைய ஆசிரமத்திலேயே தங்கினான். அவன் சொன்னபடி மிகவும் எளிமையானமுறையில் வாழத் தொடங்கினான். பத்து நாள் கழித்து யோக்கா அவனை அழைத்தார். ‘தம்பி, உனக்கு இந்த ஆசிரம வாழ்க்கை சரிப்படாது. நீ வீட்டுக்குப் போகலாம்!’ என்றார்.

 

‘என்ன குருவே இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? நான் உங்களுக்காகப் பணத்தைத் துறந்தேன், சொத்துசுகத்தையெல்லாம் துறந்தேன், வசதியான வாழ்க்கையைத் துறந்தேன். இது போதாதா?’

 

யோக்கா சிரித்தார். ‘நான் வேரை அறுக்கச் சொன்னேன். நீ சில கிளைகளையும் இலைகளையும் கத்தரித்துவிட்டு அதைப்பற்றிப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறாய்!’ என்றார்.

 

http://www.tamilpaper.net/?p=2741

Link to comment
Share on other sites

மாவீரனின் கடைசி ஆசைகள்

 

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர். ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து,

 

"என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார். அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள். அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

 

1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai135.htm

Link to comment
Share on other sites

போகுமிடம்

 

கடைத்தெரு. எதிரெதிரே நடந்துவந்த இரண்டு ஜென் துறவிகள் சந்தித்துக்கொண்டார்கள்.

முதல் துறவி கேட்டார்.

‘ஐயா, வணக்கம். நலம்தானே? எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

 

’இந்தக் காற்று என்னை எங்கே அழைத்துச்செல்கிறதோ, அங்கே செல்கிறேன்’ என்றார் இரண்டாவது துறவி.

 

அன்றுமுழுவதும் முதல் துறவி இதைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தார். அந்த இன்னொரு துறவியை மடக்கும்படி ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று அவர் விரும்பினார்.கடைசியாக, அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. ‘ஒருவேளை காற்றே இல்லாவிட்டால்? அப்போது என்ன செய்வீர்கள்?’

 

இந்தக் கேள்வியை மனப்பாடம் செய்துகொண்டு மறுநாள் அதே கடைத்தெருவுக்குச் சென்றார் இவர். அதே துறவியைச் சந்தித்தார். அதே கேள்வியைக் கேட்டார்.

 

‘எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

 

‘என்னுடைய கால்கள் என்னை எங்கே அழைத்துச்செல்கின்றனவோ, அங்கே செல்கிறேன்’ என்றார் இரண்டாவது துறவி.

 

அவ்வளவுதான். முதல் துறவிக்குக் கை காலெல்லாம் உதறிவிட்டது. அவர் நாள்முழுக்கக் கஷ்டப்பட்டு யோசித்துவைத்திருந்த கேள்வி பயன்படாமல் போய்விட்டது. வருத்தத்துடன் தன்னுடைய ஆசிரமத்துக்குத் திரும்பினார். மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார்.

கடைசியாக, அவருக்கு இன்னொரு நல்ல கேள்வி மாட்டியது.

 

‘ஒருவேளை உங்களுக்குக் காலே இல்லாவிட்டால்? அப்போது எங்கே செல்வீர்கள்?‘

 

மறுபடியும் இந்தப் புதுக் கேள்வியை மனப்பாடம் செய்துகொண்டு அவர் கடைத்தெருவுக்குச் சென்றார். அதே துறவியைச் சந்தித்தார். அதே கேள்வியைக் கேட்டார்.

 

‘எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?’

 

அவர் அமைதியாக பதில் சொன்னார். ‘நந்தவனத்துக்குப் பூப்பறிக்கச் செல்கிறேன்!’

 

நாம் எத்தனை யோசித்து நம்மைத் தயார் செய்துகொண்டால் என்ன? அதைவிட அதிவேகத்தில் நம்மைச் சுற்றியிருக்கிற உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. அந்த நீரோட்டத்துடன் மிதந்து செல்லப் பழகிக்கொள்ளாவிட்டால், தேவையில்லாத முன்தயாரிப்புகளிலேயே நம் வாழ்க்கை வீணாகிவிடும்!

 

http://www.tamilpaper.net/?p=2498

 

Link to comment
Share on other sites

ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்தால்...?

 

ஒருவன் பாறைகளிலிருந்து கல்லுடைக்கும் வேலையைச் செய்து வந்தான். கடுமையான வேலை, குறைவான கூலி. அதனால் அவன் வேலையின் மீது அதிருப்தி கொண்டான். அவன் ஒரு நாள் தெய்வமே நான் உன்னை தினமும் வணங்குகிறேன், நீ என்னை பணக்காரனாக்கக் கூடாதா? என்னை பட்டு மெத்தையில் படுக்க வைக்கக் கூடாதா? என்று பிரார்த்தித்தான். தெய்வம் அவன் முன் தோன்றி "நீ விரும்பிய வண்ணமே ஆவாய்" என்று வரம் கொடுத்தது. அவன் பணக்காரனாகி விட்டான்.

பட்டு மெத்தையில் படுத்திருந்தான். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் அவன் மாளிகை வழியாக அழகிய தேரில் முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் சென்றான். அதைப் பார்த்ததும் அவனுக்கு அரசனைப் போல் இருக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது. தெய்வமே என்னை அரசனாக்கக் கூடாதா? என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆவாய்" என்றது. அவன் அரசனாகி விட்டான்.

முன்னும் பின்னும் குதிரை வீரர்களுடன் தேரில் ஊர்வலம் போனான். அப்போது கடுமையான வெயிலடித்தது. அவன் வெயிலின் கொடுமையால் வெந்து புழுங்கினான். அவன் "தெய்வமே அரசனை விட சூரியனே அதிக சக்தி படைத்ததாகத் தெரிகிறது. எனவே நீ என்னை சூரியனாக்கி விடு" என்றான்.

 

தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் சூரியனாகி எல்லோரையும் சுட்டான்.

அப்போது ஒரு மேகம் அவனுக்கும் பூமிக்கும் இடையில் வந்தது. அதனால் பூமியில் உள்ளவர்களைச் அவனால் சுட முடியவில்லை.

 

"தெய்வமே மேகம் சூரியனின் கதிர்களையே தடுக்கக் கூடிய சக்தியுடையதாக இருக்கிறது. ஆகையால் என்னை மேகமாக்கி விடு"

 

என்று வேண்டினான். தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மேகமாகி சூரியக் கதிர்களைத் தடுத்தான்.

பூமி மீது பெரு மழை பொழிந்தான். வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, வீடுகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன, வயல்களெல்லாம் அழிந்து விட்டன. ஆனால் ஒரு பாறை மட்டும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. அவன் வெள்ளத்தை உண்டாக்கி எவ்வளவோ முயன்று பார்த்தான் அந்தப் பாறையை அசைக்கவே முடியவில்லை.

 

"தெய்வமே மேகத்தை விடப் பாறையே சக்தி வாய்ந்தது எனவே என்னை பாறையாக்கி விடு" என்றான்.

 

தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் பாறையாகி விட்டான்.

கர்வத்தோடு அமர்ந்திருந்தான். அப்போது அங்கே ஒருவன் உளியும் சுத்தியலும் கொண்டு வந்து அந்தப் பாறையை உடைக்க தொடங்கினான். அவன் உளி பாறையைத் தகர்க்கத் தொடங்க்கியது.

 

"தெய்வமே பாறையை விடக் கல்லுடைப்பவன் சக்தி மிகுந்தவன். என்னை கல்லுடைப்பவனாகவே ஆக்கி விடு.” என்றான்.

 

தெய்வமும் "அப்படியே ஆகட்டும்" என்றது. அவன் மீண்டும் கல்லுடைப்பவனாக ஆகி விட்டான்.

கல்லுடைப்பவன் கல்லுடைப்பவனாகவே இருக்க வேண்டும். ஆசைப்படக் கூடாது என்பதல்ல இந்தக் கதையின் நீதி. ஆசைக்கு எல்லை இல்லை. ஆசைப்படுபவன் நிம்மதியாக இருக்க முடியாது என்பது தான் இக் கதையின் நீதி.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai136.htm

Link to comment
Share on other sites

நூறு சட்டைகள்

 

 

அந்தக் காலத்தில் உதயணன் என்று ஓர் அரசன். அவனைச் சந்திப்பதற்காக ஒரு ஜென் துறவி வந்திருந்தார். உதயணன் முறைப்படி முனிவரை வணங்கி உபசரித்தான்.

 

‘ஐயா, தங்களுக்குச் சேவை செய்யும் சந்தர்ப்பத்தை எனக்கு வழங்குங்கள்’ என்றான்.

 

‘உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் கேளுங்கள். உடனே தருகிறேன்!’

 

அரசன் இப்படிக் கேட்டதும் அந்தத் துறவி ஒரு நிமிடம்கூட யோசிக்கவில்லை. ‘எனக்கு நூறு சட்டைகள் வேண்டும்’ என்றார்.

 

அரசனுக்கு ஆச்சர்யம். அதை மறைத்துக்கொண்டு’முனிவர் பெருமானே, நீங்கள் கேட்டபடி நூறு சட்டைகளைத் தருவதற்கு உடனே ஏற்பாடு செய்கிறேன்’ என்றான். ’ஆனால், என்னுடைய ஒரு சந்தேகத்தைத் தீர்த்துவைப்பீர்களா?’

 

‘என்ன சந்தேகம்? தயங்காமல் சொல்லப்பா!’

 

‘நீங்களோ துறவி. உங்களுக்கு எதற்கு நூறு சட்டைகள்?’

 

முனிவர் சிரித்தார். ‘இவையெல்லாம் எனக்கில்லை. என்னுடைய ஆசிரமத்தில் இருக்கும் சீடர்களுக்காக!’

 

‘அப்படியானால் அவர்களுடைய பழைய சட்டைகளை என்ன செய்வீர்கள்?’

 

‘அவற்றைக் கிழித்துத் தைத்துப் படுக்கை விரிப்புகளாக மாற்றிவிடுவோம்!’

 

‘அப்படியானால் அந்தப் பழைய படுக்கை விரிப்புகளை என்ன செய்வீர்கள்?’

 

‘அவற்றைக் கிழித்துத் தைத்துத் தரை துடைக்கப் பயன்படுத்திக்கொள்வோம்!’

 

‘அப்படியானால் அந்தப் பழைய தரை துடைக்கும் துணிகளை என்ன செய்வீர்கள்?’

 

‘அவற்றை அரைத்துச் சேற்றோடு கலந்து சுவற்றில் பூசுவோம். அவை எங்களுடைய ஆசிரமச் சுவர்களுக்குப் பலம் தரும்!’

 

அரசன் உதயணன் முனிவருடைய கால்களில் விழுந்தான். ‘இந்தப் பூமியில் எதுவுமே வீணாவதில்லை, எல்லாமே பயனுடையதுதான் என்கிற பெரிய தத்துவத்தை எனக்கு உணர்த்திவிட்டீர்கள். நன்றி ஐயா’ என்றான்.

 

ஜென் துறவி மெல்லமாகச் சிரித்தார். ‘நமக்கு உரிமையானது என்று இந்த மண்ணில் எதுவுமே இல்லை அரசனே, எல்லாமே தாற்காலிகமாக நாம் வைத்திருக்க, பயன்படுத்தத் தரப்படுவதுதான். இதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் உன்னை எந்தத் துயரமும் பாதிக்காது!’ என்று ஆசி வழங்கினார்.

 

http://www.tamilpaper.net/?p=2454

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தனையும் முத்துக்கள், நல்ல பொருள் நிறைந்த தகவல்கள்

நன்றி கோமகன் அண்ணா இணைப்புக்கு.. :)

Link to comment
Share on other sites

மனம் நிறைவடையாதது ஏன்?

 

ஒரு திருடன் தன் தொழிலின் மூலம் ஏராளமான சொத்து சேர்த்திருந்தான்.அவன் கட்டளைக்கு அடிபணிய சில திருடர்கள் இருந்தனர்.ஆனாலும் அவனிடம் நிறைவில்லை.

ஒரு ஞானியிடம் தன்னைப் பற்றிய விபரங்களைக் கூறி, தன் மனக்குறையை நீக்க ஒரு வழி காட்டுமாறு வேண்டினான்.

 

ஞானி அவனை ஒரு மலை அடிவாரத்திற்குக் கூட்டிச் சென்றார்.அங்கே கிடந்த மூன்று பெரிய கற்களைத் தூக்கிக் கொண்டு அவர் பின்னே வரச்சொன்னார்.

அவர் மலை ஏறத் தொடங்கி விட்டார். திருடனால் மூன்று கல்லையும் தூக்கிக் கொண்டு நடக்க முடியவில்லை. அவன் அதை ஞானியிடன் கூற அவரும் ஒரு கல்லைக் கீழே போட்டு விட்டு இரண்டை மட்டும் தூக்கி வரச் சொன்னார்.

 

சிறிது தூரம் சென்றவுடன் இரண்டு கல்லுடன் நடப்பதும் சிரமமாக இருப்பதாகக் கூறினான்.

ஞானி, இன்னொரு கல்லைக் கீழே போட்டு விட்டு ஒரு கல்லை மட்டும் எடுத்து வரச் சொன்னார்.

 

மீண்டும் சிறிது தூரம் நடந்தார்கள். ஒரு கல்லைத் தூக்கிக் கொண்டும் அவனால் மலை மீது ஏற முடியவில்லை. அதைக் கண்ட ஞானி அந்த ஒரு கல்லையும் கீழே விட்டுவிட்டு வரச் சொல்ல அவனும் எளிதாக அவருடன் மலை ஏறினான். இருவரும் வேகமாக மலை உச்சியை அடைந்தனர்.

 

ஞானி சொன்னார், ''நேர்மை வழியிலிருந்து பிறழ்ந்து விட்டால் மனசாட்சி மிகவும் கனமாகிவிடும். கனமான கற்களைத் தூக்கி கொண்டு உன்னால் மலை ஏற முடியவில்லை. அது போல மனசாட்சியைக் கனமாக வைத்துக் கொண்டு உன்னால் நிம்மதியாகவும் நிறைவாகவும் வாழ முடியாது.'' திருடனும் திருந்தினான்.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai137.htm

Link to comment
Share on other sites

குரங்கு

 

அந்தக் கல்லூரியில் புத்தாண்டுக் கொண்டாட்டம். மாணவர்கள் எல்லோருக்காகவும் ‘புதையல் வேட்டை’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

 

’நம்ம காலேஜ்ல வெவ்வேற இடங்கள்ல நாலு பானைகளைப் புதைச்சுவெச்சிருக்கோம். அந்தப் பானைகள் ஒவ்வொண்ணுக்குள்ளயும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் இருக்கு’ என்று அறிவித்தார் ப்ரின்சிபால். ‘நாங்க கொடுத்திருக்கிற குறிப்புகளை வெச்சு நீங்க அந்தப் பானைகளைக் கண்டுபிடிக்கணும். அப்படிக் கண்டுபிடிச்சுட்டா அந்தப் பரிசுகள் உங்களுக்குதான்!’

 

மாணவர்கள் உற்சாகமானார்கள். குறிப்புகளைப் படித்துவிட்டுத் திசைக்கு ஒருவராக ஓடினார்கள். எதையெதையோ புரட்டிப் போட்டுத் தேட ஆரம்பித்தார்கள். பத்தரை மணியளவில் ஒரு பையன் முதல் பானையைக் கண்டுபிடித்துவிட்டான். மதியச் சாப்பாட்டு நேரத்தில் இன்னொரு பையன் இரண்டாவது பானையைத் தோண்டி எடுத்தான். மாலை நான்கு மணிக்கு ஒரு பெண் மூன்றாவது பானையைக் கண்டுபிடித்தாள். ஆனால் அந்த நான்காவது பானைதான் யாருக்கும் அகப்படவில்லை. சில நூறு பேர் பல மணி நேரம் தேடியும் கிடைக்கவில்லை.

 

இப்படி ஒருபக்கம் மாணவர்கள் பானை தேடிக்கொண்டிருந்தபோது, இந்தப் புதையல் வேட்டையில் ஆர்வமே இல்லாத சில ஜந்துக்களும் இருந்தார்கள். அவர்கள் விடுமுறையை வீணடிக்க விரும்பாமல் நன்றாகக் குரட்டை விட்டுத் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு கும்பகர்ணன் மாலை மங்கிப் பொழுது இருட்டும்வரை உறங்கினான். அப்புறம் மனமே இல்லாமல் எழுந்தான். முகத்தைக் கழுவிக்கொண்டு கேன்ட்டீனில் டீ சாப்பிடச் சென்றான்.

 

டீ குடிப்பதற்கு முன்னால் வாயைக் கொப்புளித்துத் துப்புவது அவனுடைய பழக்கம். அப்படித் துப்பச் சென்ற இடத்தில் அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. இடறிப் பார்த்தால், பானை. குஷியான அவன் முழுப் பானையையும் தோண்டி எடுத்தான். உள்ளே புதையல் பரிசுகள். ஐபாட் ஒன்று, மொபைல் ஃபோன் ஒன்று, ஏழெட்டு சினிமா டிக்கெட்கள்.

இதைப் பார்த்த அவனது நண்பர்கள் துள்ளுக் குதித்தார்கள்.

 

‘நீ பெரிய அதிர்ஷ்டசாலிதான், போட்டியில கலந்துக்காமயே ஜெயிச்சுட்டியே!’

அவன் சலித்துக்கொண்டான். ‘ம்ஹூம், நான் பெரிய துரதிருஷ்டசாலி!’

 

‘என்னய்யா சொல்றே?’

 

‘இவ்ளோ நேரம் தூங்காம சீக்கிரமாவே எழுந்திருந்தேன்னா, இதுவரைக்கும் நாலு டீ குடிச்சிருப்பேன், நாலு பானையும் எனக்கே கிடைச்சிருக்கும்!’

 

கட்டுப்பாடில்லாமல் துள்ளி ஓடுகிற மனத்தைக் குரங்குக்கு ஒப்பிடுகிறார்கள். பேராசை, கிடைத்ததை எண்ணித் திருப்தி அடையாமை, உழைக்காமல் பலனுக்கு ஆசைப்படுவது போன்ற குணங்கள் அந்தக் குரங்கு மனத்தின் அடையாளம். ஜென் சிந்தனையும் தியானமும்தான் மனக் குரங்கை அமைதிப்படுத்தி ஒழுங்குக்குக் கொண்டுவருகின்றன.

 

http://www.tamilpaper.net/?p=1931

Link to comment
Share on other sites

துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்?

 

 

பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அந்தப் பானை உயரமானதாக இருந்ததால் பாலைக் குடிக்க முடியாமல் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது என்றும், அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின. அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:

"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு மேலே இருந்த எலி மிரண்டு போய் பால் பானைக்குள் விழுந்து விட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் இந்தப் பானையிலிருக்கும் பால் அனைத்தும்" என்று நினைத்தது.

பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.
பால் பானைக்குள் விழுந்த எலி மேலே ஏறி வர முடியாமல் உயிரை விட்டது.

 

இப்படித்தான் துன்பத்திலிருந்து விடுபட ஒருவருக்குப் பிறரின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. ஆனால் அது சரியாக இல்லா விட்டால் இருவருக்குமே ஆபத்தாகி விடுகிறது.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai133.htm

Link to comment
Share on other sites

பயணிகள் ரசனைக்கு

 

விவசாயி ஒருவர். அவருடைய நிலத்தில் ஏகப்பட்ட தென்னை மரங்கள் இருந்தன. அவற்றில் விளைந்த தேங்காய்களைப் பறித்து வண்டியில் ஏற்றினார். சற்றுத் தொலைவிலிருந்த சந்தைக்குக் கிளம்பினார். ஊர் எல்லையை நெருங்கியபிறகு திடீரென்று அவருக்கு ஒரு சந்தேகம். ‘சந்தை எவ்வளவு தொலைவில் இருக்கிறது? அங்கே போய்ச் சேர்வதற்கு எவ்வளவு நேரமாகும்?’ விவசாயி சுற்றிலும் பார்த்தார். மனித நடமாட்டமே இல்லை. கொஞ்சதூரத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லின்மீது சம்மணம் போட்டு அமர்ந்திருந்த ஒரு சாமியார்மட்டும்தான் தென்பட்டார்.

 

வண்டியை விரட்டிய விவசாயி அந்தச் சாமியாரை நெருங்கினார்.

 

‘ஐயா, இங்கிருந்து சந்தைக்குப் போறதுக்கு எவ்வளவு நேரமாகும்?’

 

’மெதுவா வண்டியை ஓட்டினா பத்து நிமிஷமாகும்’ என்றார் சாமியார். ‘வேகமா ஓட்டினா ஒரு மணி நேரமாகும்!’

 

’ஏன் சாமி கிண்டலடிக்கறீங்க?’ என்று சிரித்தார் விவசாயி. ’வண்டியை வேகமா ஓட்டினா ரொம்பச் சீக்கிரமா சந்தைக்குப் போய்ச் சேர்ந்துடலாமே!’

 

’ம்ஹூம். இல்லை’ என்றார் சாமியார். ‘நீ வண்டியை மெதுவா ஓட்டினாதான் சீக்கிரமாப் போய்ச் சேரமுடியும். அப்புறம் உன் இஷ்டம்.’

 

விவசாயி யோசித்தார். ‘சாமியார் ஏதோ கேனத்தனமா உளர்றார்’ என்று முடிவெடுத்தார். சாட்டையைச் சொடுக்கி வண்டியை வேகமாக ஓட்டினார். ஆனால் சந்தைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமானதாக, கரடுமுரடாக இருந்தது. அதில் அவருடைய வண்டி வேகமாகச் சென்றபோது தேங்காய்கள் அடிக்கடி குதித்துக் கீழே விழுந்தன. அவற்றையெல்லாம் எடுத்துப் போட்டுக்கொண்டு சந்தையை நெருங்குவதற்குச் சுத்தமாக ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. நொந்து நூலாகி விவசாயி அங்கே சென்று சேர்ந்தபோது, சாமியார் சிரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.

 

‘என்னப்பா? வேகமா வந்தியா? மெதுவா வந்தியா? எது சீக்கிரம்?’ என்று விசாரித்தார்.

 

’இந்தக் கணத்தை வாழ்தல்’ என்ற ஜென் அடிப்படைக்கு வேகமும் அவசரமும் சரிப்படாது. அடுத்த கட்டம் என்ன, இலக்கு என்ன என்பதையெல்லாம் யோசிக்காமல் இந்த விநாடியில் கவனம் செலுத்தி வாழ்வது ஒரு தனி அனுபவம். அது நம்மால் முடியாவிட்டாலும்கூட, பயண நேரத்தின்போது அவசரப்படாமல், அங்கே சென்றுசேர்ந்தபிறகு என்ன செய்யப்போகிறோம் என்கிற சிந்தனையில் மூழ்காமல் தவிர்க்கலாம். இல்லாவிட்டால் நம்மால் பயணத்தை ரசிக்கமுடியாமலே போய்விடும்!

 

http://www.tamilpaper.net/?p=1674

Link to comment
Share on other sites

நல்ல பகிர்வு.. பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

நம்மால் நாலு பேருக்கு மகிழ்ச்சி.

 

நாங்கள் நன்றாக அலங்கரிக்கப்பட்டு அவரவர் இடத்தில் இருப்போம். எங்களைப் பார்க்க யாரவது வருவார்கள். எங்களில் இருந்து யாரையாவது பிடித்து விட்டால் அவர்களிடம் போய் விடுவார்கள். போகிறவர்கள் எங்களிடம் பிரியா விடை பெற்றுக் கொண்டு மௌனமாய் போவார்கள்.

 

அன்று நான் மிகவும் ஏங்கிய வண்ணம் இருந்தேன். வாசலில் ஆஜானுபாகுவாய் சிவந்த நிறத்துடன் ஒருவர் வந்தார். கண்களை எங்கள் மேல் ஓட விட்டார். நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அழகு. வேவ்வேறு திறமை உள்ளவர்கள். யார் யாரைக் கவருவோம் என்பது நேரம் அல்லது வருவோரின் தேவையைப் பொறுத்தது. பொதுவாக நாங்கள் மயக்குவோம். மற்றவர்கள் மயங்குவார்கள்.

இன்று வந்தவர் சாதுர்யமான பேச்சாற்றல் உள்ளவர் போலும். சிரித்த முகம். நெற்றியில் வெண்ணீறு அணிந்து, நடுவில் சந்தனப் பொட்டு. அழகாய் பார்ப்பவர்க்கு அசந்து போகும் ஒரு முகம். அவர் பார்வை என் மீது பட நான் இறைவனை வேண்டினேன். என் முனகல் சத்தம் உங்களுக்கு கேட்க நியாயமில்லை.

என் பிரார்த்தனை வீண் போகவில்லை. அந்த மனிதர் என்னை நோக்கி வந்தார். என்னை ஏற இறங்கப் பார்த்தார். லேசாக விரல் நுனியால் தொட்டார். என் நளின நரம்புகள்; சிலிர்க்க லேசாக வெட்கத்தில் முனகினேன். அதை ரசித்த வண்ணம் எங்கள் போஷகரிடம் பேச்சு வார்த்தை நடத்தி பணம் கைமாற அவர் வந்த ஆட்டோவில் அவருடன் பயணமானேன்.

 

வழியில் தொடாமலே மலரந்தேன். பள்ள மேடுகள் காரணமாக அதிர்வு தாளாமல் நான் சரிய அவர் என்னை லாவகமாய் பிடிக்க என் உள்ளுக்குள் ஓராயிரம் கீதம்.

நான் என் புதிய வாழ்க்கையைப் புதிய இடத்தில் தொடங்கப் போகிறேன்.

அவர் என்னை அணைத்துக் கொண்டு ஆட்டோவிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றார். அங்கிருந்த ஊஞ்சலில் என்னைக் கிடத்தினார்.

 

வீட்டீல் பெரியவர் சிறியவர் எல்லோரும் என்னை விசித்திரமாய்ப் பார்த்தார்கள்.

எனக்கோ பயமும் கூச்சமும்.

“அம்மா” என்றார்.

 

அப்போது அந்த வயதான பெண்மணி எனக்கும் மஞ்சள் குங்குமம் இட்டு.

 

“ராசகோபாலா ஹம்சத்தொனியில் பிள்ளையார் கீதம் வாசிடா இந்த வீணையில்” என்றார்.

 

அவ்வளவுதான் அவர் என்னை மடியில் கிடத்திக் கொண்டு ஆனந்தமாய் என்னை வருட நான் இசையாய் மழை பொழியத் தொடங்கினேன். என் இசையில் அந்த வீடு பக்தியுடன் மகிழ்ச்சியில் மூழ்கியது.

 

கடையில் பார்வைப் பொருளாய் அவ்வப்போது சிலரின் சீண்டலுக்கு உள்ளான எனக்கும் இப்போது மகிழ்ச்சிதான். நம்மாலும் நாலு பேரை மகிழ்ச்சி அடையச் செய்ய முடிகிறது.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai129.htm

Link to comment
Share on other sites

மைக்கல் ஏஞ்சலோ ஏன் அழுதார்?

 

ரெஜினால்ட் ஹொராஸ் ப்ளைத் என்ற ஆங்கில எழுத்தாளர். ஜப்பானியக் கலாசாரத்தினால் கவரப்பட்டவர். ஜென் பற்றி நிறைய எழுதியவர்.

ஒருமுறை அவரிடம் யாரோ கேட்டார்கள்.

 

‘ஜென் என்கிற விஷயத்தை எங்களுக்குப் புரியும்படி ஒரே வார்த்தையில் விளக்கமுடியுமா?’

 

’முடியும்’ என்றார் ப்ளைத். அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை: ‘பர்ஃபெக்ஷன்.’

 

‘ஜென் என்றால் எதையும் பர்ஃபெக்டாகச் செய்வது’ என்று ப்ளைத் குறிப்பிட்டபோது மற்றவர்கள் சிரித்தார்கள்.

 

‘அது எப்படி சார் முடியும்? இந்த உலகத்தில் தவறு செய்யாதவர்கள் உண்டா?’

 

‘தவறு செய்யுங்கள். ஆனால் அதையும் பர்ஃபெக்டாகச் செய்யுங்கள். அதுதான் ஜென்’ என்றார் ப்ளைத். ‘நீங்கள் தோற்றுப்போனாலும், பர்ஃபெக்டாகத் தோற்கப் பழகுங்கள். தினந்தோறும் நீங்கள் செய்கிற ஒவ்வொரு வேலையும் பர்ஃபெக்டான ஒரு விஷயமாக இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் அதைச் செய்கிற விதம் எப்போதும் பர்ஃபெக்டாக இருக்கவேண்டும். எங்கும் எதிலும் அந்த உன்னதத்தைத் தேடியே உங்களுடைய பயணம் அமையவேண்டும்.’

 

இதற்கு உதாரணமாக, மைக்கேல் ஏஞ்சலோவின் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவம் சொல்வார்கள்.

 

மைக்கேல் ஏஞ்சலோ அப்போது ஒரு புதிய சிலையைச் செய்து முடித்திருந்தார். அதை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு லேசாகக் கண்ணீர் விட்டார்.

பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர் கேட்டார். ‘ஏன் அழுகிறீர்கள்? சிலையில் ஏதாவது குறை தெரிகிறதா?’

 

‘குறையே தெரியவில்லை. அதற்காகதான் அழுகிறேன்.’

 

‘என்னய்யா இது? குறை இல்லை என்றால் ஏன் அழவேண்டும்?’

 

’என்னுடைய கண்களுக்குக் குறை கண்டுபிடிக்கும் தன்மை குறைந்துவிட்டது. அதற்காகதான் அழுகிறேன்!’ என்றார் மைக்கேல் ஏஞ்சலோ.

 

http://www.tamilpaper.net/?p=1621

Link to comment
Share on other sites

செய்வதை எப்படி செய்யலாம்?

 

 

ஒரு ஊரில் குகன் என்ற ஜமீந்தார் இருந்தார். நல்ல செல்வந்தர். ஊரில் உள்ள மக்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் உடனே ஒடோடிப் போய் செய்வார். நல்ல பக்திமான். பல அறக்கட்டளைகளை நடத்தி வந்தார். எந்தச் சூழ்நிலையிலும் கோபத்தை வெளிப்படுத்த மாட்டார்.

ஆனால் ஒரு விஷயத்தை கையிலெடுத்தார் என்றால் அவர்தான் தீர்ப்பு சொல்லுவார். அவர் கூறிவிட்டால் மறுவார்த்தை சொல்லாமல் மக்களும் ஒத்துக் கொண்டு போய்விடுவர். அவர் பெயரில் ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், திருமண மண்டபம், கல்லூரி என பல இருந்தன. ஆனால் அன்னதானத்திற்கு மட்டும் அவர் தன்வீட்டிலேதான் செய்வார். எதற்கு என்றால் யார் எப்படி சாப்பிடுகிறார்கள், அவர்களுக்கு என்ன தேவை என அறிய முடியும் என்று அடிக்கடி கூறுவார்.

இந்த அன்னதானம் செய்வதற்கு முன்பு, தினமும் ஒரு வாய் கூட தண்ணீர் குடிக்காமல் விரதம் இருந்து, பூஜை செய்து, நன்றாக பிரார்த்தனை செய்வார். அவர் காலையில் 6 மணிக்கு தொடக்கி மதியம் 1 மணிக்கு முடிப்பார். பூஜை முடித்த பின்னரே சாப்பாடு போடுவார். இவர் முடிப்பதற்கு முன்னரே எல்லா பதார்த்தங்களும் சரியாக திண்ணைக்கு வந்துவிடும். முடியாத மக்களும் சரியாக வரிசையில் நின்று விடுவர்.

இந்த சாப்பாடு திண்ணைக்கு வந்து 2 மணி நேரம் ஆனவுடனே தான் அன்னதானம் தொடங்கும். மக்களுக்கு இந்த சாப்பாடு வாசனையினால் இன்னும் பசி அதிகமாக எடுக்கும். இவர் எப்ப பூஜை முடித்து எப்படா போடுவார் என்று காத்துக் கொண்டு இருப்பர். இவர் வந்து தொடங்கினவுடனே மக்களும் நிம்மதி அடைவர். இந்த நிகழ்ச்சி எல்லா நாளும் இப்படித்தான் நடக்கும்.

மக்களுக்கு என்ன வருத்தம் என்றால் இவர் பாட்டுக்கு பூஜை செய்யட்டும். எங்களுக்கு சீக்கிரம் அன்னதானம் போட்டால் தேவலை என்று நினைத்தனர். ஆனால் இவருக்கு யார் அறிவுரை வழங்குவது என்று தெரியவில்லை. இருந்தாலும் இவரால் ஒருவேளை சாப்பாடு கிடைப்பதால் பேசாமல் இருந்தனர். இப்படியே நாட்கள் கடந்த நிலையில், அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தார். அவருக்கு மருத்துவம், சாஸ்திரம், என பல விஷயங்கள் தெரியும்.

இந்த ஜமீன்தரை பற்றி கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். ஆனால் மக்கள் அவரிடம் உள்ள குறையை மட்டும் இந்த துறவியிடம் சொல்ல பயப்பட்டனர். அவரும் அவர் போடுகிற சாப்பாட்டை சாப்பிட வந்தார். மக்கள் புலம்புவதை பார்த்து அமைதியாக இருந்தார். இந்த துறவியும் தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டார்.

ஒரு நாள் இந்த ஜமீன்தாருக்கு தீராத வயிற்று வலி. எததனையோ வைத்தியம் பார்த்தும் வலி குறையவில்லை. இந்தத் துறவியைப் பற்றி அவருடைய நண்பர் ஒருவர் சொன்னவுடன் அவரிடம் வைத்தியம் செய்யலாம் என்று முடிவு செய்தார்.

அந்தத் துறவி வீட்டிற்குச் சென்றார். இவர் போய் அரைமணியில் அனைத்து விதமான மருந்துகளும் தயாராக இருந்தது. ஆனால் அந்தத் துறவி சரியாக மூணு மணி நேரம் கழித்து மருந்து கொடுத்தார். அதற்குள் இந்த ஜமீன்தார் துடித்துப் போய் விட்டார். தொடர்ந்து இதே போல் ஒரு வாரம் வரச் சொன்னார். இதே நேரம் ஆகிவிட்டது. ஒரு வாரம் கழித்து அவருக்கு குணமாகிவிட்டது. இருந்தாலும் அவருக்குத் துறவி மேல் கோபம் இருந்தது.

ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து ஜமீன்தார் கேட்டார். என்ன துறவின்னு சொல்லறீங்க. ஆனா ஒரு வாரமா இந்த மருந்தைக் கொடுத்தீங்க. சரியான நேரத்தில கொடுத்து இருந்தா நேரம் விரயம் ஆகி இருக்காது என்று சொன்னார்.

துறவி சொன்னார் எல்லா விஷயத்தையும் நேரம் கடத்தாம செய்தா யாருக்கும் தொந்திரவு வராது. நீங்களும்தான் அன்னதானம் போடுகிறீர்கள். ஆனால் முன் கூட்டியே சாப்பாடு உங்க திண்ணைக்கு வந்திடுது. ஆனா மக்கள் நீங்க விரதம் முடிச்சு எப்படா சாப்பாடு போடுவீங்கன்னு காத்துகிட்டு இருக்காங்க.

ஒரு வாரம் வயித்தவலி உங்களால தாங்க முடியல. மக்கள் மட்டும் எப்படி பசிய தாங்குவாங்க. என்னைக்குமே ஆறின கஞ்சி பழங்கஞ்சி தான். நீங்க எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் விரதம் இருங்க. ஆனா மக்களுக்கு சரியான நேரத்தில சாப்பாடு போடுங்க. கடவுள் பஞ்ச பூதத்தில் இருக்காருன்னு சொல்கிறோம். என்னைக்காவது அரை மணி நேரம் ஓய்வில இருந்துருக்கா?. எல்லாமே கடவுள் கொடுத்ததுதான்.

கடவுளால படைக்கப்பட்ட பொருள் எல்லாத்தையும் மனுஷன்தான் தன் கட்டுப்பாட்டில வைத்து உரிமை கொண்டாடுகிறான். எல்லாரும் விரதம் இருக்கிறது எதற்கு என்றால், மனசு எப்பவும் அலை பாயும். அதை ஒரு நிலையில் கொண்டு வரணும் என்றால் நமக்கு நாமே ஒரு கட்டுப்பாடு விதித்துக் கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான். அடுத்தவர்கள் மனதால் நோகடிக்காமல் இருந்தாலே, அதுதான் நாம் கடவுள் பெயரால் செய்கின்ற விரதம். எனவே நீங்க விரதம் இருங்க. அன்னதானம் ஒரு பக்கம் நடக்கட்டும் என்று துறவி சொன்னார்.

ஜமீன்தார் மன்னிப்பு கேட்டு, விடை பெற்றார்.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai122.htm

Link to comment
Share on other sites

எனக்கு வேலை இருக்கு!

 

 

இரண்டாம் உலகப் போரின்போது ஒரு முக்கியமான சர்வதேச ஆளுமையாக உருவெடுத்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். சண்டை உச்சத்தில் இருந்தபோது அவரிடம் யாரோ கேட்டார்கள்.

 

‘இந்தப் போர் என்ன ஆகுமோ என்று நினைத்தால் உங்களுக்குப் பயமோ, கவலையோ இல்லையா?’

 

‘நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? எனக்குப் புரியவில்லை.’

 

‘ஒருவேளை, இந்தப் போரில் எதிரி நாடுகள் ஜெயித்துவிட்டால் இங்கிலாந்து என்ன ஆகும்? அதைப்பற்றி நீங்கள் அவ்வப்போது கவலைப்படுவதுண்டா?’

 

‘இல்லவே இல்லை’ என்றார் சர்ச்சில். ‘எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. கவலைப்பட நேரம் இல்லை!’

 

சர்ச்சில் சொன்ன இதே விஷயத்தை வாழ்ந்து காட்டிய ஜென் துறவிகள் பலர் உண்டு. ’இந்தக் கணத்தில் வாழுதல்’ எனும் ஜென் அடிப்படைக் கோட்பாட்டை நீட்டித்துப் பார்த்தால், முந்தைய கணத்தின் முடிவுகளைப்பற்றியோ அடுத்த கணத்தின் சாத்தியங்களைப்பற்றியோ கவலைப்பட நேரமில்லாமல் போகும். இந்தக் கணத்தையே முழுமையாக அனுபவித்து வாழமுடியும்.

 

ஒரு ஜென் துறவி. அவரிடம் யார் என்ன சொன்னாலும் அமைதியாகக் கேட்டுக்கொள்வார். ஆச்சர்யப்படமாட்டார். கோபப்படமாட்டார். பயப்படமாட்டார். வாழ்த்துச் சொல்லமாட்டார். திட்டமாட்டார். வெறுமனே கேட்டுக்கொள்வார். அவ்வளவுதான். இதைப் பார்த்த அவருடைய சிஷ்யர்களுக்கு ஆச்சர்யம். அவர்களெல்லாம் சேர்ந்து தங்களுடைய குருநாதரைப் பரிசோதனை செய்து பார்க்கத் தீர்மானித்தார்கள்.

 

தினமும் மாலை மூன்று மணியளவில் அவர்களுடைய குருநாதர் தேநீர் தயாரிப்பார். அதைச் சுடச்சுடக் குவளையில் ஊற்றிக்கொண்டு வருவார். வெளியே உட்கார்ந்து இயற்கையை வேடிக்கை பார்த்தபடி அருந்துவார்.

 

அன்றைக்கு அவர் சூடான தேநீர்க் குவளையோடு நடந்து வரும்போது சில சிஷ்யர்கள் திடீரென்று அவர்முன்னே குதித்தார்கள். பெரிதாகக் கத்தினார்கள். குருநாதர் அவர்களைக் கவனிக்கக்கூட இல்லை. அவர் முகத்தில் சிறு சலனமும் இல்லை. மெதுவாக வெளியே நடந்தார். வழக்கமான இடத்தில் அமர்ந்தார். தேநீர் அருந்த ஆரம்பித்தார். சிஷ்யர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள்.

 

‘குருவே, நாங்கள் உங்களைப் பயமுறுத்தினோமே. நீங்கள் பயப்படவே இல்லையே!’

 

‘அப்படியா? வேலையாக இருந்தேன். கவனிக்கவில்லை’ என்றார் குருநாதர்.

 

‘வேண்டுமானால் உங்களுக்காக இப்போது பயந்து காட்டட்டுமா?’

 

http://www.tamilpaper.net/?p=1569

Link to comment
Share on other sites

அதிக ஆண்டுகள் உயிர் வாழ ஆசை

 

 

வியாபாரி மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து பெரும்பொருள் ஈட்டினான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டனர்.

மாணிக்கம் ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று தோன்றியது. சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்து விட்டு இறந்துபோனார்.

பேராசை கொண்ட ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக் கொண்டு அண்ணன் முத்துவைக் கொலை செய்ய திட்டமிட்டனர். ஒரு நாள் அண்ணன் முத்து திரும்பி வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். அண்ணனும் தம்பிகள் சொன்னதை நம்பினான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கி கொண்டிருக்கும் போது அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர்.

அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தான் முத்து. ஆனால் அவன் உடம்பில் எந்த விதமான காயமும் இல்லை. அவன் முன்னால் கடவுள் தோன்றினார். கடவுளைக் கண்ட முத்து அவரை வணங்கினான்.

"முத்து, உனக்கு இனி எந்த ஆபத்தும் வராது. 100 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய்...." என்று வரமளித்து விட்டு கடவுள் மறைந்தார். முத்து வீட்டிற்குத் திரும்பினான் ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர்.

"காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம்... உங்களைப் பார்த்த பின்னர் தான்..... எங்களுக்கு உயிரே வந்தது" என்று சொல்லி நடித்து அழுதனர்.

"என்ன நடந்தது......" என்று கேட்டனர்.

எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து நடந்தது அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னான். தான் 100 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தையும் பற்றி கூறினான். தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழ வேண்டும் என்று திட்டமிட்டனர்.

பேராசை பிடித்த ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.

அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் அருகில் ஒதுங்கிக் கிடந்தனர்.

அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார்.

"உங்களுக்கு என்ன நடந்தது"? என்றார் கடவுள்.

தங்களை விரோதிகள் அடித்துப் போட்டதாக கூறினர்.

"கடவுளே நான் 200 ஆண்டு சாகாமல் வாழவேண்டும்....." என்றான் ரத்தினம்.

"நான் 400 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும்" என்றான் வைரம்.

ரத்தினம் 500 ஆண்டு என்றான். வைரம் 600 என்றான். இருவரும் இப்படி ஆண்டுகளை ஏற்றிக் கொண்டே சென்றனர்.

"நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறனுக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம்.." என்றார் கடவுள்.

"சொல்லுங்கள்... சொல்லுங்கள்" என்றனர் இருவரும் அவசரம் அவசரமாக.

"இந்தக் குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும்" என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.

இருவரும் நீருக்குள் மூழ்கினர். ரத்தினத்தை விட 100 ஆண்டாவது அதிகம் பெற வேண்டும் என்று வைரம் நினைத்தான்.

வைரத்தைவிட 100 ஆண்டு அதிகமாகப் பெற வேண்டும் என்று ரத்தினம் நினைத்தான்.

யார் அதிக ஆண்டு சாகாமல் இருக்கும் வரத்தைப் பெறப் போகிறார் என்று பார்த்தபடி கடவுள் நின்று கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் வைரமும், ரத்தினமும் பிணமாக குளத்தில் மிதந்தனர்.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai121.htm

Link to comment
Share on other sites

ஓட்டம்

 

 

கோவிந்தனின் வீட்டில் ஒரு பலா மரம் இருந்தது. அதில் இரண்டு பலாப்பழங்கள் நன்கு பழுத்திருந்தன. ஒருநாள் கோவிந்தனின் அப்பா அந்தப் பலாப்பழங்களை அறுத்து வீட்டினுள் கொண்டுவந்தார். ’ஒரு பெரிய கத்தியை எடுத்துகிட்டு வந்து உட்காரு’ என்றார் அவனிடம். அப்பாவும் கோவிந்தனும் ஆளுக்கு ஒரு பழத்தை எடுத்துக்கொண்டார்கள். அறுத்துச் சுளை எடுக்க ஆரம்பித்தார்கள். சில நிமிடங்களில் அப்பா அந்த முதல் பழத்தை இரண்டாகப் பிளந்து சுளைகளைப் பிரித்து எடுத்துப் பாத்திரத்தில் போட்டுவிட்டார். ஆனால் கோவிந்தன் இன்னும் போராடிக்கொண்டிருந்தான். அப்பா சிரித்தார். அவனிடம் இருந்த பழத்தை வாங்கிச் சரசரவென்று ஏதோ வித்தை செய்தார். சுளைகள் தானாக உதிர்ந்து விழுந்தன. கோவிந்தன் ஆச்சர்யத்தோடு கேட்டான்.

 

‘பலாப்பழத்தை அறுக்கறது ரொம்பக் கஷ்டம்ன்னு சொல்வாங்க. ஆனா நீங்கமட்டும் இப்படிப் படபடன்னு அறுத்து முடிச்சுடறீங்களே.

 

எப்படி? உங்களோட கத்தி ரொம்பக் கூர்மையா இருக்கறதாலயா?’

 

‘விஷயம் கத்தியில இல்லை’ என்றார் அப்பா. ‘பலாப்பழத்தை நறுக்கும்போது சில இடங்கள்ல பழம் நாம வெட்டறதுக்கு வசதியா வளைஞ்சுகொடுக்கும், வேற சில இடங்கள்ல என்னை வெட்டாதே-ங்கறமாதிரி எதிர்த்துநிற்கும்.’

 

‘எனக்கு இந்தப் பழம் எங்கே வளையும், எங்கே எதிர்க்கும்ன்னு தெரியும். அதுக்கு ஏத்தமாதிரி என் கத்தியை இடம் மாத்துவேன், அதிக எதிர்ப்பு உள்ள இடங்கள்ல போராடாம, குறைவான எதிர்ப்பு உள்ள இடங்கள்ல கவனம் செலுத்துவேன், அதனால கொஞ்ச நேரத்தில, கொஞ்சம் உழைப்பிலயே பழம் நல்லா வெட்டுப்பட்டுடும்!’

 

ஜென் இதனை ‘ஓட்டம்’ என்கிறது. நீரோட்டத்தின் போக்கில் மிதக்கிற ஓர் இலை கஷ்டப்படாமல் பயணம் செய்கிறது. அதுபோல நாம் செய்கிற வேலை எதுவானாலும்,

அதன் இயற்கைக் குணங்களை எதிர்த்து நிற்பதில் சக்தியை வீணடிக்காமல் ஓட்டத்தோடு மிதக்கப் பழகினால் அதிகம் சிரமப்படாமல் கூடுதல் தூரம் முன்னேறமுடியும்.

 

http://www.tamilpaper.net/?p=1509

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

‘எனக்கு இந்தப் பழம் எங்கே வளையும், எங்கே எதிர்க்கும்ன்னு தெரியும். அதுக்கு ஏத்தமாதிரி என் கத்தியை இடம் மாத்துவேன், அதிக எதிர்ப்பு உள்ள இடங்கள்ல போராடாம, குறைவான எதிர்ப்பு உள்ள இடங்கள்ல கவனம் செலுத்துவேன், அதனால கொஞ்ச நேரத்தில, கொஞ்சம் உழைப்பிலயே பழம் நல்லா வெட்டுப்பட்டுடும்!’

 

ஜென் இதனை ‘ஓட்டம்’ என்கிறது. நீரோட்டத்தின் போக்கில் மிதக்கிற ஓர் இலை கஷ்டப்படாமல் பயணம் செய்கிறது. அதுபோல நாம் செய்கிற வேலை எதுவானாலும்,

அதன் இயற்கைக் குணங்களை எதிர்த்து நிற்பதில் சக்தியை வீணடிக்காமல் ஓட்டத்தோடு மிதக்கப் பழகினால் அதிகம் சிரமப்படாமல் கூடுதல் தூரம் முன்னேறமுடியும்.

 

http://www.tamilpaper.net/?p=1509

 

ஆனால் எதிர்ப்பு இருக்கிற இடத்திலை செஞ்சூரி அடிக்கிறது தானே நம்ம பழக்கமே.. :rolleyes::lol:

 

 

டிஸ்கி: இருந்தாலும் இந்த கதையிலை ஏதோ உள்குத்து இருக்கு போல தோணுது.. :unsure:

Link to comment
Share on other sites

ஆனால் எதிர்ப்பு இருக்கிற இடத்திலை செஞ்சூரி அடிக்கிறது தானே நம்ம பழக்கமே.. :rolleyes::lol:

 

 

டிஸ்கி: இருந்தாலும் இந்த கதையிலை ஏதோ உள்குத்து இருக்கு போல தோணுது.. :unsure:

 

விதி யாரை விட்டிது :lol: :lol: ???????  ஒரு குத்தும் இல்லை ,  எல்லோரும் சிந்தியுங்கள் என்று எனக்கு பிடித்தவைகளை இதில் இணைக்கிறேன் :) :) .

Link to comment
Share on other sites

வீணாய்ப் போன போதனை.

 

குருஷேத்திர யுத்தம் கடுமையாக நடந்து கொண்டிருந்த காலம்.

14ஆம் நாள் அதிகாலை

பகவான் கிருஷ்ணர் தன் மனதிற்கு இனிய அர்ஜுனனை அமரவைத்து மரணத்தின் தன்மையை, மேன்மையை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“என் இனிய அர்ஜுனா, மரணம் அனைவருக்கும் பொதுவானது. ஒருவன் பிறந்த அன்றே அவனுடைய இறக்கும் நாளும் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. ஒவ்வொருவருவனும், ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறான். மரணத்தை யாராலும் தவிர்க்க முடியாது. மரணத்தை யாராலும் வெல்ல முடியாது. உடம்பிற்குத்தான் மரணம். ஆன்மாவிற்கு அல்ல! மரணத்திற்காக வருத்தம் கொள்வதில் பயனில்லை.” என்று சொல்லிப் பல உதாரணங்களுடன் விளக்கியவர், இறுதியில் கேட்டார், “இன்றையப் பாடத்தில் என்ன தெரிந்துகொண்டாய்?”

அர்ஜுனன் சொன்னான். “மரணத்தைக் கண்டு பயப்படக்கூடாது, வருத்தப்படக்கூடாது என்று தெரிந்து கொண்டேன்!”

“சரி, வா, யுத்தகளத்திற்குப் புறப்படலாம்” என்று சொன்ன கிருஷ்ணர், சங்கை எடுத்து ஊதினார்.

அர்ஜுனன் ஏறிக்கொள்ள சாரதியாகச் செயல்பட்ட கிருஷ்ணர் தேரைச் செலுத்தினார். பொழுது புலர்ந்தும் புலராத அதிகாலை நேரம். ஓடு பாதை மங்கலான வெளிச்சத்தில் கீற்றாகத் தெரிந்தது. சற்று தூரம் சென்றவுடன், ஓடு பாதையில் கிடக்கும் சடலம் ஒன்றைப் பார்த்தவுடன், கிருஷ்ணர் தேரை நிறுத்தினார். அர்ஜுனனும் அதைக் கண்ணுற்றான். தேரைவிட்டுக் கீழே குதித்தவன், இறந்து கிடப்பவன் யாரென்று தெரிந்து கொள்ளும் நோக்குடன், அருகே சென்று பார்த்தான். அவனுடைய இதயம் சுக்கு நூறாக உடைந்தது. துக்கத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை! ஆமாம், இறந்து கிடந்தது அவனுடைய தவப்புதல்வன் அபிமன்யு. மகனின் பூத உடலைத் தூக்கித் தன் மடிமீது கிடத்திக் கொண்டவன், துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர்விட்டு அழுதான்.

ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். அப்போதுதான் அது நிகழ்ந்தது. பரந்து விரிந்த அவன் தோள்களின் மீது இரண்டு சொட்டுக் கண்ணீர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தான்.
கிருஷ்ண பகவான் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்தான் தன் தோள்களின் மீது விழுந்ததை அவன் உணர்ந்தான். தன் மகனின் சடலத்தைக் கிடத்தியவன், எழுந்து நின்று கேட்டான்:

“நான் என் மகன் என்பதற்காக அழுதேன். உங்கள் கண்களில் கண்ணீர் எதற்கு? எதற்காகக் கலங்குகிறீர்கள்?”

பகவான் சலனமற்றுப் பொறுமையாகச் சொன்னார்:

“உன் மகனுக்காக நான் கலங்கவில்லை! இப்படி நடக்கும் என்று தெரிந்துதான், இன்று அதிகாலை உனக்கு நான் மரணத்தைப் பற்றிப் போதித்தேன். என் போதனைகள் வீணாகி விட்டது பார்த்தாயா? அதற்காகக்தான் வருந்துகிறேன்!

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai119.htm

Link to comment
Share on other sites

நான்

 

மிஸ்டர் பரமசிவம் ஒரு ஜென் துறவியைச் சந்திக்கச் சென்றார்.

அந்த ஜென் துறவி நாள்முழுவதும் தியானத்தில் இருக்கிறவர். மிக அபூர்வமாகதான் பார்வையாளர்களைச் சந்திப்பார். ஆகவே துறவியின் ஆசிரமத்தில் இவரைத் தடுத்து நிறுத்திவிட்டார்கள்.

 

‘மன்னிக்கவேண்டும், குருநாதர் இப்போது யாரையும் சந்திப்பதற்கில்லை.’

 

‘என்ன இப்படிச் சொல்றீங்க?’ என்று கோபப்பட்டார் அவர். ‘நான் யார் தெரியுமா? இந்த ஊர் எம்.எல்.ஏ.’ என்றபடி பாக்கெட்டிலிருந்து ஓர் அட்டையை எடுத்துக் கொடுத்தார். ‘இந்த விசிட்டிங் கார்டை அவர்கிட்டே காட்டுங்க. உடனே என்னைக் கூப்பிட்டுப் பேசுவார்’ என்றார்.

 

சீடர்கள் உள்ளே சென்றார்கள். துறவியிடம் அட்டையை நீட்டினார்கள். அவர் அதை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு,

 

‘எம்.எல்.ஏ.விடம் பேச எனக்கு எதுவும் இல்லையே’ என்றார். ‘அவரைத் திருப்பி அனுப்பிவிடுங்கள்.’

 

திரும்பி வந்த சீடர்கள் மிஸ்டர் பரமசிவத்திடம் விஷயத்தைச் சொன்னார்கள். ‘நாங்கதான் அப்பவே சொன்னோம்ல. பந்தாவா கார்டை நீட்டி இந்த நோஸ் கட் தேவையா?’ என்று உள்ளுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

 

பரமசிவம் யோசித்தார். அதே கார்டின் பின்புறத்தில் தன்னுடைய பெயரைமட்டும் எழுதி நீட்டினார். ‘இதை அவர்கிட்ட காட்டுங்க. ப்ளீஸ்!’

 

சீடர்கள் மீண்டும் உள்ளே சென்றார்கள். துறவி அட்டையைப் பார்த்தார். ‘அடடே, பரமசிவம் வந்திருக்காரா? அவர் எனக்கு நல்ல நண்பராச்சே’ என்றபடி எழுந்து வந்தார்.

 

‘நான்’ அற்று இருப்பது – நான் அகற்றி இருப்பது ஜென்னின் முதல்படி.

 

http://www.tamilpaper.net/?p=1369

Link to comment
Share on other sites

கடவுள் பச்சோந்தியா?

 

ஒரு மனிதன் காட்டுக்குள் சென்றான். அங்கு ஒரு மரத்தின் மீது இருந்த சின்ன உயிரினத்தைப் பார்த்தான். திரும்பி வந்த போது மற்றொரு மனிதனிடம், காட்டில் ஒரு அழகான சிவப்பு நிற உயிரினத்தைப் பார்த்ததாகச் சொன்னான்.

அதைக் கேட்ட அம்மனிதன், "நானும் காட்டுக்குள் போன போது அந்த உயிரினத்தைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அது பச்சை நிறமாக இருந்தது. நீ ஏன் சிவப்பு என்று சொல்கிறாய்?" என்றான்.

அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருவன், அவர்கள் இருவர் சொல்வதுமே தவறு என்றும் அந்த உயிரின் நிறம் மஞ்சள் என்றான்.

இப்படியாக அங்கிருந்த ஒவ்வொருவரும், தாங்களும் அந்த உயிரினத்தைப் பார்த்திருப்பதாகவும் ஆனால் பிறர் கூறும் நிறங்கள் தவறென்றும், தாங்கள் கண்டதே சரியென்றும் கூறினார்கள். ஒருவரை ஒருவர் நம்பாமல் தொடர்ந்த இந்த உரையாடல் வாக்குவாதமாக உருவெடுத்தது. விவாதத்துக்கு தீர்வு காண அனைவரும் சேர்ந்து அந்த மரத்தடிக்குச் சென்றார்கள்.

அந்த மரத்தடியிலே வாழ்ந்து வரும் ஒருவனிடம், தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அவன், "ஆம், இந்த மரத்தடியில் நான் வெகு காலமாக வாழ்ந்து வருவதால், நீங்கள் சொல்லும் உயிரினத்தைப் பற்றி நன்கு அறிவேன். நீங்கள் சொன்னது அனைத்துமே சரிதான். அந்த உயிரினம் ஒவ்வொரு சமயமும் ஒவ்வொரு நிறமாகத் தோன்றுவது உண்மைதான். சமயத்தில் நிறமே இல்லாமல் கூடத் தோன்றும் அதன் பெயர் பச்சோந்தி", என்று தெரிவித்தான்.

இவ்விதமாகவே இறையன்பர்களும் தாங்கள் விரும்பும் வண்ணமாகவே இறைவனைக் காண்கிறார்கள். இறைவனும் தன் அளப்பரிய அன்பினால் தன் பக்தன் எப்படி விரும்புகிறானோ அவ்விதமாகவே அவனுக்குக் காட்சி அளிக்கிறான்.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai116.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.