Jump to content

சிந்தனை செய் மனமே !!!!!!!!!


Recommended Posts

ஆயுதம் எதற்கு?

 

போகுதென் என்கிற ஒரு சாமுராய். பெரிய வீரர். ஜென் கற்றவர். ஆனால் ஒருபோதும் தன்னுடைய திறமைகளைத் தம்பட்டம் அடித்துக்கொள்ளமாட்டார். அமைதியான பேர்வழி.

ஒருநாள் போகுதென் படகில் சென்றுகொண்டிருந்தார். அவரோடு இன்னும் ஏழெட்டுப்பேர் அதே படகில் பயணம் செய்தார்கள்.

 

சிறிது நேரம் கழித்து அவர்களில் ஒருவன் பேச ஆரம்பித்தான். ’நான் பெரிய போர்வீரன். தெரியுமா?’

 

யாரும் பதில் சொல்லவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. சரேலென்று எழுத்து நின்றான். வாளை உறுவினான். சுழற்றினான். ’இங்க எவனுக்காச்சும் தைரியம் இருத்தா என்னோட ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா. பார்த்துடலாம்.’

 

இப்போதும் அவர்கள் வாய் திறக்கவில்லை. ஆத்திரத்தில் அவன் இன்னும் அசிங்கமாகக் கத்தினான். ஆவேசமாகக் குதித்தான். கடைசியாக போகுதென் பேசினார்.

 

’தம்பி, கொஞ்சம் அமைதியா உட்காருப்பா. நீ இப்படிக் குதிக்கறதால படகு கண்டபடி ஆடுது. அது கவிழ்ந்துட்டா நம்ம எல்லாரோட உயிருக்கும் ஆபத்து.’

 

அவன் சட்டென்று போகுதெனைப் பிடித்துக்கொண்டான். ’உனக்கு அவ்வளவு அக்கறைன்னா நீ என்னோட சண்டைக்கு வா!’ என்று சவால் விட்டான்.

 

’சரி’ என்று ஒப்புக்கொண்டார் போகுதென். ’ஆனா இங்கே சண்டை போட்டா மத்தவங்களுக்கு இடைஞ்சலா இருக்குமே!’

 

’அதனால?’

 

’அதோ, அங்கே ஆத்துக்கு நடுவில ஒரு தீவு இருக்கு. நீயும் நானும் அங்கே போய்ச் சண்டை போடலாம்.’

 

’சரி.’

 

போகுதென் துடுப்பை எடுத்துக்கொண்டார். அந்தத் தீவை நோக்கிப் படகைச் செலுத்தினார்.

சில நிமிடங்களில் படகு தீவுக்கரையைத் தொட்டது. அந்த வீரன் உருவிய வாளோடு கீழே குதித்தான்.

 

மறுவிநாடி போகுதென் படகை எதிர்த் திசையில் செலுத்த ஆரம்பித்தார். அந்த வம்புச்சண்டைக்காரனைத் தீவில் தனியாகப் புலம்பவிட்டுவிட்டுப் படகு தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தது.

 

படகில் இருந்த மற்றவர்கள் போகுதெனை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். ’ஐயா, நீங்க பெரிய சாமுராயாச்சே. கத்தியை உருவி ஒரே சீவுல அவன் கதையை முடிச்சிருக்கலாமே!’

 

’உண்மைதான்’ என்றார் போகுதென். ’ஆனா வாளை உருவாமலே சண்டையில ஜெயிக்கலாம்ங்கறப்போ அநாவசியமா ஆயுதமெல்லாம் எதுக்கு?’

 

http://www.tamilpaper.net/?p=1536

Link to comment
Share on other sites

  • Replies 208
  • Created
  • Last Reply

படைப்பின் ரகசியம் என்ன?

 

ஆசிரமம் ஒன்று இருந்தது. ஆசிரமத்தில் குருவும், நான்கு சீடர்களும் வசித்து வந்தார்கள். பக்கத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று மக்களை நல்வழிப்படுத்தும் வேலையை அந்த குரு செய்து கொண்டிருந்தார்.

அவருடைய வழிகாட்டலால் அந்தக் கிராமத்து மக்கள் எந்தப் பிரச்சினையும் இன்றி அமைதியாக வாழ்ந்தனர். ஆசிரமத்திற்கு வேண்டிய பொருட்களை அவர்கள் மனம் மகிழ்ந்து, போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வந்தனர்.

குரு தேவைக்கு மட்டுமே எடுத்துக்கொள்வார். அதனால் ஆசிரமமும் எந்தவித இன்னலும் இன்றி அமைதியாக இயங்கிக் கொண்டிருந்தது. குரு சீடர்களுக்கு வேத பாடங்கள், நல்வழிக் கதைகள், இறைவனைப் பற்றிய கதைகள் என்று தினமும் ஒரு மணி நேரம் பாடம் நடத்துவார்.

"படைப்பின் ரகசியம் என்ன?" என்று சீடர்களில் ஒருவன் கேட்டபோது,

"அதை நீயே ஒருநாள் உணர்வாய்" என்றார் குரு.

கேட்ட அந்த சீடன் ஒரு நாள், ஆசிரமத்தின் ஜன்னல் வழியே, வெளியே இருக்கும் ஆள் அரவமற்ற பாதையையும், அதற்கு அருகில் உள்ள பெரிய ஆலமரத்தையும், அதன் அருகில் இருந்த கொன்றை மரத்தையும் அவற்றில் குடியிருக்கும் பறவைகளையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.

அப்போது அந்த இரண்டு மரங்களுக்கும் இடையில் இருந்த பெரிய கரையான் புற்றில், மிகவும் நீளமான நாகப்பாம்பு ஒன்று விறு விறுவென ஏறி, புற்றுக்குள் நுழைந்தது. நுழைந்து மறைந்தும் விட்டது.

அடுத்த நிமிடம், அந்தப் புற்றுக்குள் இருந்து ஆயிரக்கணக்கான கரையான்கள் வெளியேறி வந்து, வேறு திசையில் செல்ல ஆரம்பித்தன. எல்லாம் ஒரு அவசரகதியில் புற்றைக் காலி செய்து கொண்டிருந்தன.

அதைக் கண்ட சீடன் பதறிவிட்டான். என்ன கொடுமை? இந்த சிற்றினங்கள் கட்டி வசித்து வந்த இடத்தை ஒரு பாம்பு ஒரு நொடியில் கை பற்றிக் கொண்டுவிட்டதே!

இது அக்கிரமம் இல்லையா? கேட்க ஆள் இல்லையா?

அப்போது தற்செயலாக குரு அங்கே வர, சீடன் நடந்ததைப் பதற்றத்துடன் சொன்னான்.

"குரு சீடனை சாந்தப் படுத்தியதோடு, "பொறுத்திருந்து பார்' என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார்.

அன்று மதியம் கனத்த மழை பெய்தது. அப்படியொரு அசுர மழை!

அந்த மழையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சாலையின் எதிர்ப்புறம் இருந்த பள்ளமான பகுதிகள் தண்ணீரால் நிரம்ப ஆரம்பித்தன.

புற்றிற்குள்ளும் வெள்ள நீர் புகுந்து புற்றும் நிரம்பி வழிய ஆரம்பித்தது. அப்போதுதான் அது நடந்தது.

புற்றைவிட்டுத் தப்பி வெளியே வந்த நாகப் பாம்பு, நீரைக் கடந்து சாலைக்கு வேகமாக நெளிந்து நெளிந்து வந்து சேர்ந்தது. ஈரமாக இருந்த சாலையைக் கடந்து எதிர்ப்புறம் உள்ள பகுதிக்குத் தப்பிவிட அது முனைந்தது.

அப்போது அந்தப் பக்கம் வந்து கொண்டிருந்த கிராமத்து இளைஞன் ஒருவன், பாம்பைக் கண்டு பதறாமல், தன் கையில் இருந்த கடப்பாரையால் பாம்பின் மீது இரண்டு போடு போட பாம்பு இறந்து மூன்று துண்டுகளாகியது. நீண்ட அந்தத் துண்டுகளைத் தன் கடப்பாரையின் உதவியால் தள்ளிக்கொண்டு சென்று எதிர்ப் புறம் இருந்த பகுதியில் தள்ளி விட்டு, சாலை சுத்தமாகி விட்டதா என்று ஒரு பார்வை பார்த்து விட்டு, மீண்டும் அவன் செல்ல ஆரம்பித்து விட்டான்.

இவற்றை எல்லாம் ஜன்னல் வழியாக நின்று பார்த்துக்கொண்டிருந்த சீடனுக்கு ஒரு மன நிம்மதி ஏற்பட உள்ளே ஓடிச் சென்று, குருவை அழைத்து வந்து இறந்து தூண்டுகளாகிக் கிடந்த பாம்பைக் காட்டிவிட்டு நடந்ததைச் சொன்னான் .குரு ஒன்றும் சொல்லாமல், ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

"அக்கிரமங்களையும், அக்கிரமக்காரர்களையும், இறைவன் பார்த்துக் கொள்வார்" என்று குரு அடிக்கடி சொல்லும் வாக்கியத்தின் பொருள் சீடனுக்கு இப்போதுதான் புரிந்தது.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai112.htm

Link to comment
Share on other sites

நீங்கள் வளர்க்கும் காக்கை எது?

 

டீ போட்டுக்கொண்டிருந்தான் சீடன். சமையல் அறைக்கு வந்த குரு,

 

‘வடிகட்டு’ என்றார்.

 

‘ஆயிற்று குருவே’ என்றான் சீடன்.

 

‘அதனால்தான் சொல்கிறேன் வடிகட்டு’ என்றார் குரு.

 

சீடனுக்குப் புரியவில்லை. சரி, குரு சொல்கிறாரே என்று திரும்பவும் ஒருமுறை தேநீர்ச் சாறை வடிகட்டினான். குருவிடம் நீட்டினான்.

 

‘நான் உன்னை வடிகட்டச் சொன்னேனே?’ என்றார் குரு. சீடனுக்குத் தலை சுற்றியது. தடாலென்று குருவின் காலில் விழுந்தான். ‘புரியவில்லை குருவே’ என்றான்.

குரு சிரித்தார்.

 

‘தேநீரைச் சொன்னேன் என்று எப்படி நீயே முடிவு செய்துகொண்டாய்?’ என்று கேட்டார்.

 

இந்தக் கதை புரிய இன்னொரு கதை சொல்லலாம்.

 

ஒரு காக்கை. ஒரு புறா. இரண்டும் நல்ல நண்பர்கள். இந்தப் புறா மிகவும் நல்ல புறா. எந்த வம்புக்கும் போகாது. தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று இருக்கும்.

ஆனால் காக்கை அப்படியல்ல. சரியான திருட்டுப் பேர்வழி. ஒரு சின்ன வாய்ப்புக் கிடைத்தாலும் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பி மீன் பிடித்துவிடும். ஆகவே இவர்கள் இருவரும் நட்பாக இருப்பதைப் பார்த்துப் பலருக்கு ஆச்சரியம். சிலர் புறாவிடம் அறிவுரை சொன்னார்கள்.

 

‘நீ ஏன் அந்தப் பொல்லாத காக்காவோட சேர்ந்து பழகறே? என்னிக்காவது அவனால உனக்குப் பிரச்னை வரும்!’

 

புறா அவர்களுடைய அறிவுரையை மதிக்கவில்லை. ‘யார் என்ன சொன்னாலும் அவன் என் நண்பேண்டா’ என்று சொல்லிவிட்டது.

 

ஒருநாள் இந்தப் புறாவும் காக்கையும் ஜாலியாகப் பேசியபடி பறந்துகொண்டிருந்தன. அப்போது அங்கே ஒரு விவசாயி வந்தான். அவன் தலையில் ஒரு தயிர்ப் பானை.

அதைப் பார்த்ததும் காக்கை சட்டென்று பறந்து சென்று அந்தப் பானையில் விளிம்பில் உட்கார்ந்தது. உள்ளே இருந்த தயிரைக் குடித்துவிட்டு மாயமாக மறைந்துபோனது.

தலையில் திடீரென்று பாரம் குறைவதை உணர்ந்த விவசாயி நிமிர்ந்து பார்த்தான். அவன் கண்ணில் பட்டது அப்பாவிப் புறாதான்.

 

’திருட்டுப் பறவையே’ என்று கோபப்பட்ட அவன், தன்னுடைய வில்லை எடுத்தான். ஒரே அம்பில் அந்தப் புறாவைக் கொன்றான்.

 

பக்கம் பார்த்துப் பழகவேண்டிய காலம் இது. உங்களுடைய நட்புகளை வைத்துதான் மற்றவர்கள் உங்களைப்பற்றிச் சொல்வார்கள். அவர்கள் அப்படி என்ன சொல்கிறார்கள்? அது நல்ல விஷயம்தானா? இல்லை எனில் உங்கள் இமேஜைக் கெடுக்கும் அந்தக் ‘காக்கை’ யார்? அதைக் கண்டுபிடியுங்கள். கழற்றிவிடுங்கள். தொடர்ந்து நல்ல நண்பர்களைத் தேடுவதுபோலவே, அவ்வப்போது கெட்டதையும் வடிகட்டவேண்டியது அவசியம்!

 

http://www.tamilpaper.net/?p=331

Link to comment
Share on other sites

  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?

முள்ளம்பன்றி ஒன்று காட்டில் சென்று கொண்டிருந்தது. அதன் எதிரே ஓநாய் ஒன்று வந்து நின்றது. தன் முன்னால் வந்து நின்ற ஓநாயைப் பார்த்து தன் முட்களைச் சிலிர்த்துக் கொண்டு நின்றது முள்ளம் பன்றி.

இதைப் பார்த்த ஓநாய், “முள்ளம் பன்றியே பயப்படாதே. நான் உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கிறேன் என்றது.

“என்னது? நான் அழகாக இருக்கிறேனா?”

“ஆமாம். உண்மையில் நீ அழகுதான். ஆனால், அந்த அழகை உன் உடம்புல இருக்கிற முற்கள்தான் கெடுக்கின்றன”

 

“எங்கள் பாதுகாப்புக்காக இறைவன் கொடுத்தது அந்த முற்கள். அது என் அழகைக் கெடுத்தாலும் எனக்குத் தேவைதானே”

“அழகைக் கண்டு மயங்குபவர்கள் ஆயிரம் பேர். ஆனால் அவர்கள் இந்த முற்களைப் போன்ற ஆபத்தைக் கண்டு ஒதுங்கிப் போய் விடுவார்கள். எனவே உன் முற்களை மட்டும் எடுத்து விட்டால் உன் பின்னால் உன் அழகைக் கண்டு பொறாமைப்படுவார்கள்”

ஓநாயின் இனிப்பு வார்த்தையில் மயங்கிப் போனது முள்ளம்பன்றி.

மறுநாள் தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்ற அந்த முள்ளம் பன்றி,

 

“இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா?” என்று கேட்டது.

“அழகாய் மட்டும் இல்லை, அடித்துச் சாப்பிட வசதியாகவும் இருக்கிறாய்” என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய். முள்ளம் பன்றி ஓநாய்க்கு இரையானது.

இப்படித்தான் பலரும் தங்களைப் பிறர் புகழ்கிறார்களே என்று வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டுத் தங்களை இழந்து நிற்கிறார்கள்.

 

http://www.muthukamalam.com/parable/p196.html

Link to comment
Share on other sites

மிச்சமுள்ள கேள்வி

 

அதிகாலை நேரம். ஒரு விவசாயி தன்னுடைய மாட்டை விற்பதற்காகச் சந்தைக்குக் கிளம்பினார். கூடவே அவருடைய சின்னஞ்சிறு மகனும் ஒட்டிக்கொண்டான்.

அந்த விவசாயிக்குத் தன்னுடைய மகன்மீது பாசம் அதிகம். ’சின்னக் குழந்தை நடந்து சிரமப்படவேண்டாமே’ என்று அவனைத் தூக்கி மாட்டின்மீது உட்காரவைத்தார். மாட்டை நடக்கவிட்டுப் பின்னாலேயே சென்றார். சிறிதுதூரம் போனதும் ஒரு காய்கறிக்கடை எதிர்ப்பட்டது. அங்கே கல்லாவில் உட்கார்ந்திருந்தவன்,

 

‘என்ன ஆளுய்யா நீ? வயசுப் பையன் அவன்பாட்டுக்கு நடந்து வருவான். உனக்குதான் ரொம்ப தூரம் நடந்தா களைப்பாயிடும். பேசாம அவனைக் கீழே இறக்கிட்டு நீ மாட்டுமேலே உட்கார்ந்துக்கோ’ என்றான்.

 

விவசாயிக்கு அவன் சொல்வது நியாயமாகப் பட்டது. மகனை இறங்கச் சொல்லிவிட்டு இவர் மாட்டின்மீது ஏறிக்கொண்டார். பயணம் தொடர்ந்தது. சற்றுத் தொலைவில் ஒரு கூடைக்காரி வந்தாள்.

 

‘பாவம், பச்சைப்புள்ளை, அதை நடக்கவெச்சுட்டு நீ ஒய்யாரமா மேலே உட்கார்ந்துகிட்டு வர்றியே, நீயெல்லாம் மனுஷனா?’ என்று காறி உமிழ்ந்தாள்.

 

விவசாயி யோசித்தார். எதுக்கு வம்பு? மகனையும் தூக்கித் தன் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். மறுபடியும் பயணம் தொடர்ந்தது. இப்போது இன்னொருவன் எதிரே வந்தான்.

 

‘வாயில்லா ஜீவன், அதுமேல 2 பேர் உட்கார்ந்து சவாரி போறீங்களே, உங்களுக்கெல்லாம் இரக்கமே கிடையாதா?’ என்றான்.

 

அதற்குமேல் விவசாயிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. தானும் இறங்கிக்கொண்டார். மகனையும் இறக்கிவிட்டார். மாடு முன்னே நடக்க இவர்கள் இருவரும் பின்னால் நடந்தார்கள். முதலில் இருந்தே இந்தக் காட்சிகளைப் பார்த்தபடி அதே சாலையில் வந்துகொண்டிருந்த ஒரு ஜென் குரு அந்த விவசாயியை அணுகி, சிரித்தபடி சொன்னார்:

 

‘இன்னும் ஒரு கேள்வி மிச்சம் இருக்கு. ஜாலியா மாட்டுமேல உட்கார்ந்துகிட்டுப் போறதை விட்டுட்டு இப்படி நடந்து வர்றீங்களே, உங்களுக்கென்ன பைத்தியமா?

 

 வாழ்க்கை, ரப்பர் அல்ல. இழுத்தவர் இழுப்புக்கெல்லாம் போய்க்கொண்டிருந்தால் நம் வண்டி ஓடாது.

 

http://www.tamilpaper.net/?p=576

Link to comment
Share on other sites

பாவம் மன்னிக்கப்படுமா?

 

ஒரு துறவியிடம் இரண்டு பேர் வந்தனர். அவர்களிருவரும் தாங்கள் பாவம் செய்தவர்கள் என்றும் அதற்குப் பிராயசித்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டனர்.

துறவி இருவரையும் செய்த குற்றங்களை விவரமாகக் கூறும்படி கேட்டார்.

முதலாமவன், “சுவாமி! என்னுடைய ஆத்திரபுத்தியினால் என் நண்பன் ஒருவன் இறக்கக் காரணமாகி விட்டேன். என் மனசாட்சி என்னைத் துன்புறுத்துகிறது. அந்தச் செயலை நினைத்து வேதனைப்படுகிறேன்” என்று சொல்லி அழுதான்.

இரண்டாமவன், “நான் பெரிய குற்றம் ஏதும் செய்யவில்லை. சிறிய சிறிய குற்றங்களாகப் பல செய்திருக்கிறேன். அவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ள இயலவில்லை.” என்றான்.

துறவி சிறிது நேரம் யோசனை செய்தார்.முதலாமவனைப் பார்த்து, “உன்னால் சுமக்கக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய கல்லாகப் பார்த்துத் தூக்கிக் கொண்டு வா” என்றார்.

இரண்டாமவனைப் பார்த்து, “ஒரு கோணிப்பை எடுத்துக் கொள். சிறிய சிறிய கற்களாகப் பொறுக்கி எடுத்துக் கோணிப் பையில் போட்டுக் கொண்டு வா” என்று கூறினார்.

இருவரும் துறவி கூறியபடியே செய்தனர்.

துறவி முதலாமவனைப் பார்த்து, “நீ எடுத்து வந்த கல்லை எடுத்த இடத்திலேயே போட்டுவிட்டு வா” என்றார்.

முதலாமவன் அப்படியே செய்தான்.

பிறகு இரண்டாமவனைப் பார்த்து, “நீ கொண்டு வந்த கற்களை எங்கெங்கு எடுத்தாயோ, அங்கேயே போட்டுவிட்டு வா” என்றார்.

இரண்டாமவன் விழித்தான். தான் பொறுக்கி எடுத்த இடங்களைக் கண்டுபிடிக்க இயலாது என்றும் கூறினான்.

“அன்பர்களே! பாவங்கள் இந்தக் கற்களைப் போன்ற்வையே. பெரும்பாவம் செய்தவன் மனம் பெரிய கல்லைப் போலவே அழுத்திக் கொண்டே இருக்கும். அவன் அதை உணர்ந்து, நினைத்து வருந்தும் போது, அந்தப் பாவத்தை மன்னித்து விட முடியும். எண்ணற்ற சிறிய சிறிய பாவங்களைச் செய்தவன், தான் என்ன பாவம் செய்தோம் என்பதையே எண்ணிப் பார்க்க முடியாமல், அவற்றை நினைத்து வருந்தவும் முடியாதவனாக இருப்பதால் அவன் எப்போதும் பாவியாக இருக்கிறான்.

“பாவம் சிறியதானாலும், பெரியதானாலும் அது பாவமே. அதை நினைத்து மனப்பூர்வமாக வருந்தி ஆண்டவனிடம் முறையிட்டால் ஆண்டவன் மன்னிப்பார்” என்றார் துறவி

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai184.htm

Link to comment
Share on other sites

மாபெரும் யுத்தம்

 

ஒரு ஜென் துறவி. பார்ப்பதற்கு நோஞ்சான் மாதிரி இருப்பார். ஆனால் மல்யுத்தத்தில் கை தேர்ந்தவர். அதே ஊரில் இன்னொரு மல்யுத்த வீரரும் இருந்தார். அவர் பெரிய கோபக்காரர். யார் மேலாவது ஆத்திரம் வந்தால் அப்படியே தூக்கி வீசிவிடுவார். தினந்தோறும் யாரிடமாவது வம்புச் சண்டை போடாமல் அவருக்குத் தூக்கமே வராது. இந்தக் கோபக்காரருக்கு நம்முடைய ஜென் துறவியைப் பார்த்துப் பொறாமை.

 

‘அந்த ஆள்கிட்டே என்ன இருக்கு? எல்லாரும் அவர் கால்ல போய் விழறீங்களே!’ என்று ஆதங்கப்பட்டார்.

 

அவர் எவ்வளவுதான் புலம்பினாலும், மக்கள் கேட்கவில்லை. துறவியைப் பார்க்க வருபவர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இதைப் பார்த்துக் கடுப்பான கோபக்காரர் துறவி வீட்டு வாசலில் போய் நின்றார்.

 

‘நீ தைரியமான ஆம்பிளையா இருந்தா வெளியே வா. என்னோட சண்டை போடு!’ என்று தொடை தட்டினார்.

 

துறவி மெல்லப் புன்னகை செய்தார். ஆனால் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

அவரோடு இருந்த சிஷ்யர்களுக்கெல்லாம் ஆவேசம் பொங்கியது.

 

‘குருஜி, நீங்கதான் பெரிய மல்யுத்த வீரராச்சே. வெளியே போய் அந்தாளைப் போட்டுத் தள்ளிட்டு வாங்க!’ என்று அவரைத் தூண்டினார்கள்.

 

அப்போதும் துறவி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை. அவர் பாட்டுக்குத் தியானத்தில் ஆழ்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் வெளியே கத்திக்கொண்டிருந்த ஆளுக்குக் கத்திக் கத்தித் தொண்டை வற்றிவிட்டது. இனிமேல் சத்தம் போட்டுப் பிரயோஜனம் இல்லை என்று மூட்டையைக் கட்டிவிட்டார்.

 

இப்போது துறவி பேசினார். அதுவும் மூன்றே வார்த்தைகள். ‘எப்படி என் மல்யுத்தம்?’

 

http://www.tamilpaper.net/?p=509

Link to comment
Share on other sites

தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்

 
ஒரு அரசனின் பஞசனையில் மந்த விசர்ப்பணி என்கிற சீலைப் பேன் ஒன்று வசித்து வந்தது. இந்த பஞ்சனைக்கு ஒரு மூட்டைப் பூச்சி எப்படியோ வந்து சேர்ந்தது. இதைப் பார்த்த சீலைப் பேனுக்கு பயமாகி விட்டது.
 
" நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கிருந்து போய் விடு" என்றது அந்த சீலைப் பேன்.

"இந்த ராஜாவின் பஞ்சனை உனக்கு மட்டுமா சொந்தம்? மகாராஜாவே மக்களுக்குச் சொந்தம். அவருடைய பஞ்சனையை நீ மட்டும் சொந்தம் கொண்டாடுவதா? நான் போக முடியாது." என்று மறுத்தது அந்த மூட்டைப் பூச்சி.

" நீ பொல்லாதவன். முட்களைப் போன்ற உன் பற்களால் தூங்குவதற்கு முன்பே கடிப்பவன். சமய சந்தர்ப்பம் தெரியாத நீ இந்த ராஜாவின் படுக்கையில் இருக்கத் தகுதி உடையவனல்ல. இந்த இடத்தை விட்டு உடனே போய் விடு." என்று சீலைப்பேன் சொல்லியது. அதற்கல்லவா தெரியும் பக்குவமாக அந்தப் பஞ்சனையில் நாளைத் தள்ளி வருவதில் உள்ள சிரமம்.

ஆனால் கெட்டிக்கார மூட்டைப் பூச்சி சட்டென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு," நான் இங்கே அப்படி செய்ய மாட்டேன். நீ சொன்னபடியெல்லாம் கேட்பேன். என்னை இங்கிருக்க அனுமதிக்க வேண்டும." என்று கெஞ்சியது. அரசனுடைய ரத்தம் அதற்கு உணவாகக் கிடைக்கும் போது காலைப் பிடித்துக் கெஞ்சுவதில் தவறு ஒன்றும் இல்லை என்று நினைத்துக் கொண்டது அந்த மூட்டைப் பூச்சி.
 
காலைப் பிடித்து கெஞ்சிக் கேட்டதால் கடுமையாகப் பேச முடியாத சீலைப் பேன் தன் நிலையில் இருந்து சற்று இறங்கி வந்தது.

"அரசர் உடலில் வெடுக்கென்று கடிக்கக் கூடாது. அவர் தூங்கிய பின்பு அவருக்கு வலி ஏற்படாமல் கடிக்க வேண்டும். அளவாக ரத்தம் குடிக்க வேண்டும்" என்று சில நிபந்தனைகளை விதித்து அங்கே தங்கிக் கொள்ள அனுமதித்தது.

இரவு நேரமாகி விட்டதால் அரசர் களைப்புடன் பஞ்சனையில் வந்து படுத்தார். சில நிமிடங்கள் கூட ஆகியிருக்காது. அந்த மூட்டைப் பூச்சி அரசனின் இரத்தத்தைக் குடிக்கும் ஆர்வத்துடன் நறுக்கென்று கடித்தது. தன்னை ஏதோ ஒன்று கடிப்பதை உணர்ந்த அரசன் திடுக்கிட்டு எழுந்து சேவகர்களை அழைத்தான். சேவகர்களிடம் இந்தப் பஞ்சனையில் ஏதோ ஒன்று கடிப்பது போலிருக்கிறது பாருங்கள் என்று கட்டளையிட்டான்.

அவர்கள் பஞ்சனை முழுவதும் தேடினார்கள். மூட்டைப் பூச்சி வேகமாகக் கட்டிலின் இடுக்கிற்குள் சென்று மறைந்து கொண்டது. சீலைப் பேன் போர்வையில் ஒட்டிக் கொண்டிருந்ததால் சேவகரின் பார்வையில் பட்டு நசுக்கப்பட்டது.

தகுதியில்லாதவருக்கு அளிக்கும் அடைக்கலம் தனக்குத்தான் ஆபத்தைத் தரும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
 
Link to comment
Share on other sites

அழுக்கு

 

 

இரண்டு சிறுவர்கள். மகிழ்ச்சியாகப் பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று அவர்களில் ஒருவன் பந்தை உயரமாகத் தூக்கி வீசினான். அது ஒரு மரத்தின் உச்சாணிக் கிளையில் சென்று சிக்கிக்கொண்டது. அந்தச் சிறுவர்கள் இருவருக்கும் மரம் ஏறத் தெரியாது. திருதிருவென்று விழித்தபடி அந்த மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்தார்கள்.

 

அப்போது அந்தப் பக்கமாக ஒரு சாமியார் வந்தார். அழுக்கான தோற்றம். பல நாள் தாடி, மீசை. அவர் குளித்துச் சில மாதங்களாவது ஆகியிருக்கும் என்பது பார்த்தாலே தெரிந்தது.

அந்தச் சாமியார் இந்தச் சிறுவர்களைப் பார்த்தார். பக்கத்தில் வந்து ‘என்னப்பா பிரச்னை?’ என்று விசாரித்தார். முதல் பையன் அவரை ஏற இறங்கப் பார்த்துவிட்டு

 

‘என்ன பிரச்னையா இருந்தா உனக்கென்ன? உன் வேலையைப் பார்த்துகிட்டுப் போய்யா!’ என்றான்.

 

இரண்டாவது பையன் அப்படிச் செய்யவில்லை. சாமியாருக்கு வணக்கம் சொன்னான். ‘பந்து மரத்தின்மீது சிக்கிக்கொண்டுவிட்டது’ என்றான்.

 

சாமியார் சிரித்தார். தன்னுடைய பையிலிருந்து சில வைக்கோல்களை எடுத்தார். அந்த இரண்டாவது பையன் கையில் கொடுத்தார். அவன் காதில் ஒரு மந்திரத்தை உபதேசித்தார்.

 

‘இந்த மந்திரத்தைச் சொல்லி ஒரு வைக்கோலைத் தூக்கி எறி’ என்றார்.

 

அந்தப் பையன் சாமியார் சொன்னபடி செய்தான். அந்த வைக்கோல் பந்தின்மீது சென்று தாக்கி அதைக் கீழே தள்ளியது. பூமராங்போல அவன் கைக்கே திரும்பியது.

சிறுவர்கள் அசந்துபோனார்கள். சாமியாரை மரியாதையோடு பார்த்தார்கள். பிறகு குஷியாக விளையாடச் சென்றுவிட்டார்கள்.

 

அப்போது அவர்களுக்குத் தோன்றாத ஒரு விஷயம், அழுக்குச் சாமியாரை அலட்சியமாகப் பார்த்த சிறுவனுக்கு ஒரு மந்திரம் நஷ்டம், ஒரு வித்தை நஷ்டம், ஓர் ஆயுதம் நஷ்டம்.

நீங்கள் எப்படி? ஒரு புத்தகத்தை அதன் அட்டையை வைத்துத்தான் மதிப்பிடுவீர்களா? அதனால் இழப்பு யாருக்கு?

 

http://www.tamilpaper.net/?p=688

Link to comment
Share on other sites

நம் மகிழ்ச்சி பிறருக்குத் தொல்லையாக இருக்கலாமா?
 
மதிய வேளை. மரப்பொந்து ஒன்றில் ஆந்தை ஒன்று தூங்கிக் கொண்டிருந்தது. கீழே புல்தரையில் வெட்டுக்கிளி பாட்டுப்பாடிச் செய்து கொண்டிருந்த ஆர்ப்பாட்டம் ஆந்தையின் தூக்கத்திற்கு இடையூறாக இருந்தது. அந்தப் பாட்டு சகிக்க முடியாத நிலையில், வெட்டுக்கிளியிடம் அது பாடுவதை நிறுத்தும்படி ஆந்தை கேட்டது. ஆனால் வெட்டுக்கிளி கேட்கவில்லை.அது ஆந்தையிடம் கோபமாக,
 
“நீ குருட்டுக் கழுதை! பகலில் வெளியே தலை காட்டுவதில்லை. எல்லாரும் இரவில் தூங்கிய பின்புதான் நீ வெளியே வருவாய். இரவில் உன்னைப் போன்ற திருடர்கள்தான் வெளியில் திரிவார்கள்.” என்று திட்டியது.

ஆந்தை சிறிது நேரம் யோசனை செய்தது. நம் தந்திரத்தால்தான் இந்த வெட்டுக்கிளியை அடக்க வேண்டும் என்று தீர்மானித்தது.
 
சில நிமிடங்கள் யோசனைக்குப் பிறகு,
 
"நண்பனே, என்னைத் தூங்கவிடாமல் நீ செய்ய விரும்பினால் செய்துவிட்டுப் போ.ஆனால் விழித்துக் கொண்டிருப்பதற்கு இனிமையாய் இருப்பதற்காகவாவது உன் சங்கீதம் உபயோகப்படட்டுமே...உன் சாரீரம் இனிமையானது.அதைத் தேவகானம் மாதிரி செய்வதற்கு என்னிடம் ஓர் அமிர்தம் இருக்கிறது. அதில் இரண்டு துளி சாப்பிட்டால் போதும். உன் குரலும் அமிர்தமாய் விடும். மேலே வா,தருகிறேன்"என்றது.

ஆந்தையின் இனிமையான பேச்சைக் கேட்டு ஏமாந்த வெட்டுக்கிளி மரத்தில் ஏறி ஆந்தையிடம் போனது. வெட்டுக்கிளி பக்கத்தில் வந்தது
ம் ஆந்தை, அப்படியே பிடித்து நசுக்கிக் கொன்றது.

பிறருக்கு நம்முடைய
மகிழ்ச்சி தொல்லையில்லாத வரை நமக்கும் தொல்லை இல்லை.
 
Link to comment
Share on other sites

குறையொன்றும் உண்டோ?

 

 

இருட்டு அறை. அதன் ஒரு மூலையில் வெள்ளைத்திரை. எதிரே இருபது பேர் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். எல்லோருடைய கவனமும் அந்தத் திரையில் குவிந்திருந்தது.

சிறிது நேரத்தில் படம் தொடங்கியது. சினிமா இல்லை. நாடக பாணியில் காட்சிகளைக் கொண்ட ஆவணப் படம். சில நிமிடங்கள் கழித்து முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு பெண் நெளிந்தாள்.

 

‘என்னா படம் காட்டறானுங்க? ஒரு பாட்டு உண்டா, ஃபைட்டு உண்டா, காமெடி உண்டா, செம போர்!’ என்றாள்.

 

‘ப்ச், சும்மாயிரு.’ அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவள் கிசுகிசுத்தாள். ‘உனக்குப் பிடிக்கலைன்னா எழுந்து வெளியே போயிடு, மத்தவங்களைத் தொந்தரவு பண்ணாதே!’

அதற்குள் பின்னாலிருந்து யாரோ கத்தினார்கள்.

 

‘சைலன்ஸ்!’

 

‘இந்த குப்பைப் படத்தை எப்படிய்யா பொறுமையா உட்கார்ந்து பார்க்கறீங்க?’

 

‘படம் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷம்கூட ஆகலை. அதுக்குள்ள நீங்களா முடிவுக்கு வந்துட்டீங்களா? கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பாருங்கப்பா!’

 

‘ஆமா, இவரு பெரிய ஷங்கரு. அட்வைஸ் பண்ண வந்துட்டார். போவியா?’

 

மறுநிமிடம் அங்கே பலத்த அடிதடி. ஒரு பெண் பாக்கெட்டிலிருந்த கத்தியை உருவிக்கொண்டு இன்னொருத்திமீது பாய்ந்து குத்த ஆரம்பித்தாள். ரத்தத்தைப் பார்த்து மற்றவர்கள் அலற, உடனடியாகப் படம் நிறுத்தப்பட்டது. கடைசியில் போலீஸ் வந்தபிறகுதான் நிலைமை கட்டுக்குள் வந்தது.

 

காவல்துறையினர் காயம் பட்ட பெண்ணுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். குத்திய பெண்ணைக் கைது செய்தார்கள். விசாரணை ஆரம்பமானது.

 

‘இங்கே என்னப்பா படம் காட்டினீங்க? எதுக்கு?’

 

’நாங்கல்லாம் ஒரு ட்ரெய்னிங்குக்கு வந்திருந்தோம் சார். அது தொடர்பான வீடியோதான் இது!’

 

‘என்ன ட்ரெய்னிங்?’

 

’கோபத்தை அடக்கறதுக்கான Anger Management ட்ரெய்னிங் சார்’ என்றாள் அந்தப் பெண். போலீஸ்காரர்கள் சிரிப்பை அடக்கச் சிரமப்பட்டார்கள்.

 

இது கற்பனைக் கதை அல்ல. இரண்டு வாரம் முன்பாக அமெரிக்காவில் நிஜமாக நடந்த விஷயம்.

 

’யாருக்காகவும் நாம் வீண் வேஷம் போடவேண்டியதில்லை’ என்கிறது ஜென். நம்முடைய முதுகில் இருக்கும் அழுக்கை நாமே பார்க்கத் தவறினால், அல்லது நல்ல சட்டை போட்டு அதை மறைத்துக்கொண்டுவிட்டால் அதனால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் இல்லை. அடுத்தவர்களுக்காகக் குறைகளைத் திருத்திக்கொள்வதுபோல் நடிப்பதற்கும் நாமே உணர்ந்து திருந்துவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ளாதவரை கோவிலில் சுவாமி தரிசனம் செய்துகொண்டிருக்கும்போதுகூட, நம் மனம் வாசலில் கிடக்கும் செருப்பைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருக்கும்!

 

http://www.tamilpaper.net/?p=970

Link to comment
Share on other sites

இரும்பு ஏன் அழுதது?

 

உலோகங்களில் உயர்ந்ததான தங்கத்திற்கு உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்தது. ஒரு இடத்தில் யாரோ பெருமூச்சு விட்டு அழும் குரல் கேட்டது. யார் அழுகிறார் என்று பார்க்கும் நோக்கத்துடன் அழுகுரல் வந்த திசையை நோக்கிச் சென்றது. அங்கே கொல்லனுடைய உலைக்களம் இருந்தது. அங்கு இரும்புத் துண்டு ஒன்றை சம்மட்டியால் அடித்துக் கொண்டிருந்தார்கள். வேதனை தாங்க முடியாமல் அந்த இரும்புத் துண்டு அழுது புலம்பிக் கொண்டிருந்தது. அதை அன்புடன் பார்த்த தங்கம்,

 

“ இரும்பே அனைத்து உலோகங்களும் உன்னைப் போல் அடிபடப் பிறந்தவைகள்தான். இப்படி அழுது புலம்புவதால் என்ன பயன்? நானும் உன்னைப் போல் அடி வாங்குகிறேன். எனவே வேதனையைப் பொறுத்துக் கொள். அழாமல் இருக்கப் பழகிக் கொள்” என்றது.
 

அதைக் கேட்ட இரும்பு,

 

“தங்கமே, உனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு, எனக்குக் கிடைக்கும் தண்டனை வேறு. நீ பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்கலாம். என்னால் அப்படி இருக்க முடியாது” என்றது.

உடனே தங்கம் “நானும் உன்னைப் போல்தான் அடி வாங்குகிறேன். இருவர் தண்டனையும் வேறு என்று எப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டது.

“தங்கமே, உன்னை, உன்னைப் போன்ற தங்கமா அடித்துத் துன்புறுத்துகிறது? நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் துன்புறுத்தும் போது தாங்கிக் கொள்ளலாம். என் நிலையைப் பார். என்னைப் போன்று இன்னொரு இரும்பு அல்லவா என்னைத் துன்புறுத்துகிறது. இதை என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்?” என்றபடி மீண்டும் கண்ணீர்விட்டது.

 

http://www.muthukamalam.com/parable/p200.html

Link to comment
Share on other sites

கற்றுக் கொடுக்கும் திறனை விட...

 

ஒரு ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் தன் சீடர்களுக்கு தியானம், யோகா கற்றுக் கொடுத்தார். அவர் சாத்திரங்களைக் கற்றுக் கொடுத்து மாணவர்களை மிகவும் வல்லவராக்கினார். எனவே அவரது குருகுலத்தில் படிப்பதற்கு நிறைய போட்டி இருந்தது. அங்கு மன்னர், அமைச்சர், செல்வந்தர்கள் என வசதி படைத்தவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

 

இந்த குருகுலத்தில் முனிவருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரின் பரிந்துரையின் பேரில் ஒரே ஒரு ஏழை மாணவன் மட்டும் சேர்த்துக் கொள்ள வேண்டியதாகி விட்டது.

அந்தக் குருகுலத்தில் முனிவர், அந்த ஏழை மாணவனை கடைசி வரிசையில் உட்கார வைத்தார். அவனுக்கு பல வேலைகளைக் கொடுப்பார். மிகவும் உதாசீனப்படுத்துவார்.

தேவலோக இந்திரன் ஒரு நாள் அந்த குருகுலத்தைப் பார்வையிட வந்தான். முனிவர் தன் குருகுலத்தை இந்திரன் பார்வையிட வந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்.

இந்திரன் அவருக்கு ஒரு பெட்டியைக் கொடுத்தான்.

 

“சுவாமி! இதில் சில பொருட்கள் இருக்கின்றன. இதை ஒன்றாகப் பொருத்தினால், ஒரு அரிய பொருள் உங்களுக்கு கிடைக்கும்,'' என சொல்லி அவரிடம் அதைக் கொடுத்துவிட்டு கிளம்பினான்.

 

முனிவர் அந்தப் பெட்டியை அவசர அவசரமாகப் பிரித்தார். ஏதோ விலை உயர்ந்த பொருள் இருக்குமென நினைத்தார். பெட்டியில் இருந்த பாகங்களை ஒன்று சேர்க்க முயற்சித்தார். அவரால் ஒன்று சேர்க்க முடியவில்லை அந்தப் பெட்டியை அப்படியே போட்டுவிட்டு வெளியில் சென்று விட்டார். திரும்ப வந்து போது, ஒரு தங்கக்கலசத்தில் அமுதம் இருப்பதைப் பார்த்தார்.

 

“யார் இதைப் பொருத்தியது?” என்றார்.

 

“நான் தான்” என்றான் அந்த ஏழைச்சீடன்.

 

“நான் மிகவும் கஷ்டப்பட்டும் இதைச் சேர்க்க முடியவில்லை. நீ எப்படி சேர்த்தாய்?” என்றார் முனிவர்.

 

அவன் அப்பாவியாக, “சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான். முனிவருக்கு வெட்கமாகப் போய் விட்டது.

 

http://www.muthukamalam.com/muthukamalam_kuttikathai180.htm

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுவாமி! பிறருக்கு கல்வி கற்றுக் கொடுக்குமளவு திறமை இருந்தால் மட்டும் போதாது. அதைப் பயன்படுத்தக் கூடிய திறனும் இருக்க வேண்டும்” என்றான். முனிவருக்கு வெட்கமாகப் போய் விட்டது.
பெடி சொன்ன விசயத்தை எங்கன்ட பாசையில் சொல்வது என்றால் "மச்சி சொல்லுறது இசி கடைப்பிடிக்கிறதது கஸ்டம்"
Link to comment
Share on other sites

பெடி சொன்ன விசயத்தை எங்கன்ட பாசையில் சொல்வது என்றால் "மச்சி சொல்லுறது இசி கடைப்பிடிக்கிறதது கஸ்டம்"

 

அதே .......... :lol:  :lol: .

Link to comment
Share on other sites

மனிதனும் விலங்கும்

 

மாறுபட்ட கருத்துடையவர்களும் ஒருங்கிணைந்து வாழ முடியும் என்பதனை விளக்குவதற்காக ஒரு மிருகக் காட்சி சாலையில் ஒரே கூட்டில் ஒரு புலியும் முயலும் சேர்த்து வைக்கப் பட்டிருந்தன.இந்த அதிசயக் காட்சியைக் காண தினமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்.புலி படுத்திருக்கும்.அதன் வயிற்றில் சாய்ந்தவண்ணம் முயல் படுத்து தூங்கிக் கொண்டிருக்கும்.ஒரு பெண்மணி இதை வியப்புடன் பார்த்து விட்டு நிர்வாகியிடம் சென்று,

 

''இது எப்படி சாத்தியம்? எப்படி இவ்வாறு பயிற்சி கொடுத்தீர்கள்?''என்று ஆர்வமுடன் கேட்டார்.அன்று அந்த நிர்வாகி பணியிலிருந்து ஓய்வு பெரும் நாள் எனவே அவர் அந்தப் பெண்ணிடம் மெதுவாக,'

 

'இதில் பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை.தினசரி நாங்கள் ஒரு ஆட்டை மாற்றிவிடுவோம்,இதை யாரிடமும் சொல்லி விடாதீர்கள்,''என்றார்.


புலி விலங்குகளை அடித்துக் கொல்லும் கொடிய மிருகம்தான்.ஆனால் அது பசித்தால் மட்டுமே தேவைக்கேற்ப விலங்குகளைக் கொல்லும்.பசி தீர்ந்தால் அது சாதுவாகிவிடும்.மனித இனம் மட்டும் தான் காரணம் ஏதுமின்றி பிற மனிதர்களைக் கொல்லும் குணமுடையது..ஒரு அணுகுண்டைப் போட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொல்லுவான்.ஹிட்லர் போன்ற மனிதர்கள் தான் இனத்தின் பேரால் பல லட்சம் மனிதரைத் தீர்த்துக் கட்ட இயலும்.


ஒரு உணவு விடுதிக்கு திடீரென ஒரு சிங்கமும் முயலும் சேர்ந்து வந்தன.அனைவரும் அரண்டு போய் நின்றபோது விடுதி மேலாளர் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முயலிடம் சென்று,

 

''நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்?உங்கள் நண்பர் என்ன சாப்பிட விரும்புகிறார்?''என்று கேட்க முயல் சிரித்துக் கொண்டே சொன்னது,

 

''இங்கு நான் மட்டும் தான் சாப்பிட வந்தேன்.என் நண்பர் பசியுடன் இருந்தால் நான் உடன் வந்திருக்க முடியுமா?நானே உணவாகியிருப்பேனே!''என்று சொன்னதாம்.

 

http://jeyarajanm.blogspot.fr/2013/01/blog-post.html

Link to comment
Share on other sites

தெளிவு

 

அவர் ஒரு அரசியல்வாதி.ஊரில் பெரிய மனிதன்.எப்பொழுதும் மன சஞ்சலத்திலேயே இருந்ததால் தெளிவு வேண்டி ஒரு ஜென் குருவை அணுகினார்.அவரும் சில பிரார்த்தனைகளையும்.பயிற்சிகளையும் தியானத்தையும் சொல்லிக் கொடுத்து அதை தினசரி செய்து வரச் சொன்னார்.சில நாட்களில் அவரிடம் மறுபடியும் வந்த அந்த பெரிய மனிதன்,

 

''நீங்கள் சொன்னதெல்லாம் செய்தேன்.ஆனால் தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே,''என்றார்.உடனே குரு,

 

''சரி,வெளியே சாலையில் ஒரு பத்து நிமிடங்கள் நில்லுங்கள்,''என்றார்.

 

அப்போது கடுமையாக மழை பெய்து கொண்டிருந்தது.

 

''இந்த மழையிலா என்னை வெளியே நிற்கச் சொல்லுகிறீர்கள்?''என்று கேட்க,குருவும்,

 

''ஒரு பத்து நிமிடம் நின்றால் உங்களுக்குத் தெளிவு பிறக்கும்,''என்றார்.

 

''சரி பத்து நிமிடம் தானே,தெளிவு பிறந்தால் சரி,''என்று சொல்லிக்கொண்டே மழையில் நனைந்தபடி நின்றார்.அப்போது அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.பின் கண்களை மூடிக் கொண்டார்.பத்து நிமிடம் ஆயிற்று.கண்ணைத் திறந்து பார்த்தால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம்.அனைவரும் அவரை கேலியாகப் பார்த்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.பெரிய மனிதருக்கு கோபம் வந்துவிட்டது.உள்ளே விறுவிறுவென்று சென்று,

 

''தெளிவு ஒன்றும் பிறக்கவில்லையே?''என்று கேட்டார்.

 

வெளியில் நின்றபோது எவ்வாறு உணர்ந்தீர்கள்?''என்று குரு கேட்க அவர் சொன்னார்,

 

''எல்லோரும் என்னைப் பார்த்து சிரிக்குமாறு செய்து விட்டீர்கள்.நான் ஒரு முட்டாள் போல உணர்ந்தேன்''

 

உடனே குரு சிரித்துக் கொண்டே சொன்னார்,

 

''பத்து நிமிடத்தில் நீங்கள் ஒரு முட்டாள் என்பதை உணர்ந்து கொண்டால் உங்களுக்கு பெரிய அளவில் தெளிவு பிறந்து விட்டது என்றுதானே பொருள்?''




 
 

http://jeyarajanm.blogspot.fr/2012/10/blog-post_16.html

Link to comment
Share on other sites

நாய்வால்

 

ஒரு நாய் தன வாலைக் கடிக்க முயற்சி செய்து முடியாமல் தன்னைத்தானே சுற்றி சுற்றி வந்தது.என்ன முயற்சி செய்து அதனால் வாலைக் கடிக்க முடியவில்லை.இதை நீண்ட நேரம் கைவைத்துக் கொண்டிருந்த இன்னொரு நாய் இதனிடம் வந்து விளக்கம் கேட்டது.முதல் நாய் சொன்னது,

 

''ஒரு பெரிய மகானைப் பார்த்தேன்.அவர்,என் மகிழ்ச்சி என் வாலில் இருப்பதாகக் கூறினார்.அதனால் தான் வாலைப் பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்,''

 

இரண்டாவது நாய் சொன்னது,

 

''அன்பு நண்பனே,நானும் அந்த மகானைப் பார்த்தபோது என்னிடமும் அவர் இதையேதான் சொன்னார்.நானும் முயற்சி செய்து பார்த்துவிட்டு முடியாமல் சோர்வடைந்து போனேன்.ஆனால் அதற்குப்பின் அதைப் பற்றிக் கவலைப்படாமல் என்னுடைய அன்றாட வேலைகளைக் கவனிக்கப் போய்விட்டேன்.ஆனால் நான் எங்கே போனாலும் என் வாலும் பின்னாலேயே வருகிறது.அதாவது மகான் சொன்ன என் வாலிலுள்ள மகிழ்ச்சி என் பின்னாலேயே வருகிறது.''


நாம் மகிழ்ச்சியைத் தேடிப்போனால் கிடைக்காது.நாம் நம் கடமைகளை சரிவர செய்து வந்தால்,மகிழ்ச்சி தானே நம் பின்னால் வரும்.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/10/blog-post_3169.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாக்காலை மூக்கை தொட்ட கதைக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை தானே.. :lol:

 

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா:: :)

Link to comment
Share on other sites

மூன்று முறை

 

எப்போதும் தேவையானவை எல்லாம் உன் மனதிற்கு எதிரானவை. எனவே மனமானது எந்த ஒரு உண்மையையும் உன்னுள் நுழைய அனுமதிக்கப் பயப்படுகிறது. அது அந்த உண்மையைத் தட்டிக் கழிக்க ஆயிரத்தொரு காரணங்களைக் கண்டு பிடிக்கிறது. ஏனெனில் உண்மை உனது மனத்தைக் கலைத்துவிடும். அதனால் மனதிற்கு ஆதரவானதை மட்டுமே அது அனுமதிக்கிறது. மேலும் மனமே ஒரு குப்பை. அதனால் அது குப்பையைத்தான் சேகரிக்கும். அதையும் மகிழ்வோடு சேகரிக்கும்.
புத்தர் எதையும் மூன்று முறை கூறுவது வழக்கம் . காரணம் கேட்டபோது அவர் சொன்னார்

 

''முதல் முறை நீங்கள் கேட்பதே கிடையாது. இரண்டாம் முறை ஏதாவது ஒரு பகுதியைத்தான் கேட்பீர்கள். மூன்றாம் முறைதான் நான் கூறுவதை சரியாகக் கேட்கிறீர்கள் . முதல் முறை சொல்லும்போது நீங்கள் உட்கருத்தை உணர முடியாது. இரண்டாம் முறை,உணர்ந்தாலும் சரியான முறையில் கருத்தை உணர மாட்டீர்கள். மூன்றாம் முறை நான் என்ன எதிர் பார்க்கிறேனோ அதை சரியாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று நம்புகிறேன்.'' 


ஏதாவது ஒன்று தேவையற்றது என்று நீ கண்டு கொண்ட கணமே அதன் மீது உன் கவனத்தை செலுத்தாதே. அதை விட்டு விலகிச் சென்றுவிடு. பொய்யைப் பொய் என்று கண்டு கொள்வதே மெய்யை மெய் என்று கண்டு கொள்வதற்கான ஆரம்பம்.




 
  http://jeyarajanm.blogspot.fr/2012/09/blog-post_2.html

 
Link to comment
Share on other sites

தடை

 

 

ஓவியரான ஒரு ஜென் குரு தன சீடரைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு ஓவியம் தீட்டிக் கொண்டிருந்தார்.சீடரும் அவ்வப்போது ஓவியத்தை விமரிசித்துக் கொண்டிருந்தார்.குரு எவ்வளவோ முயற்சி செய்தும் ஓவியம் சரியாக வரவில்லை.சீடரும் சரியில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அப்போது வண்ணப்பொடிகள் தீரும் நிலையில் இருந்ததால் குரு சீடரை வண்ணப்பொடிகள் வாங்கி வர அனுப்பினார்.சீடர் வெளியே சென்றார்.குருவும் இருக்கும் வண்ணங்களைக் கொண்டு ஓவியத்தை மாற்றிக் கொண்டிருந்தார்.வெளியே போய் வந்த சீடர் வந்ததும் அசந்து விட்டார்.குரு மிக அற்புதமாக ஓவியத்தை முடித்து வைத்திருந்தார்.ஆர்வத்துடன் குருவிடம் அது எப்படி சாத்த்யமாயிற்று என்று கேட்க குரு சொன்னார்,

 

''பக்கத்தில் ஒரு ஆள் இருந்தாலே ஒரு படைப்பு ஒழுங்காக உருவாகாது.உள்ளார்ந்த அமைதி உண்டாகாது.நீ அருகில் இருக்கிறாய் என்ற உறுத்தல்தான் ஓவியத்தைக் கெடுத்தது.நீ வெளியே சென்றதும் எனக்கு தடை நீங்கியது.ஓவியமும் ஒழுங்காக உருவானது.சிறப்பாக அமைய வேண்டும் என்ற நினைப்பே சிறப்பாக இல்லையோ என்ற குறைபாட்டை ஏற்படுத்தி விடும்..குறைபாடு என்ற நினைவே ஒரு குறைபாடுதான்.அது இருக்கும்வரை முழுமைத்தன்மை வராது.குறை மனதோடு எதையும் அணுகக்கூடாது.இயல்பாகச் செய்யும் செயலே முழுமையைத் தரும்.''

 

http://jeyarajanm.blogspot.fr/2011/09/blog-post_5095.html

 

Link to comment
Share on other sites

நாக்காலை மூக்கை தொட்ட கதைக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை தானே.. :lol:

 

நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள் கோமகன் அண்ணா:: :)

 

சிவசத்தியமாய் இல்லை :lol: :lol: . வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜீவா :) .

Link to comment
Share on other sites

மூன்று தலைகள்!

 

மாமன்னர் அசோகர் குடிமைப் பணிகளைப் பார்வையிட்டு அரண்மனை திரும்பிக் கொண்டிருந்தார். போரே வேண்டாம்… போரே மன்னனின் தொழில் என்றிருந்த அவர் புத்தரின் பாதையில் அன்பு வழி போதும் என மனதளவில் மாற்றம் அடைந்திருந்த நேரம்!

இப்போது அவருக்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒரு வயோதிக துறவியும் அவரது சீடர்களும் மன்னருக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர்.

 

அசோகரின் பார்வை ஒதுங்கி நின்ற துறவி மீது பட்டது. உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று புத்த பிக்ஷுவின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அவரது முடி துறவியின் காலில் பட்டது. ஒரு புன்னகையுடன் துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசீர்வதித்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடம்.

 

‘எத்தனை பெரிய ராஜ்ஜியத்தின் அதிபதி… உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த பரதேசியின் காலில் விழுந்து, முடியை வேறு காலில் பட வைத்துவிட்டாரே!’ என்ற நினைத்து உள்ளுக்குள் கொஞ்சம் கோபமும் எரிச்சலும் அடைந்தார்.

அரண்மனை சென்றதுமே அசோகரிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின் பேச்சைக் கேட்ட மன்னர் சிரித்தார். ஆனால் அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. அவரிடமிருந்து ஒரு விசித்திர உத்தரவு வந்தது அமைச்சருக்கு.

 

“மந்திரியாரே… ஓர் ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை மூன்றும் எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றார் மன்னர்.

நாம் சொன்னதென்ன…. இவர் உத்தரவென்ன…. என்ற திகைப்புடன் கட்டளையை சிரமேற்கொண்டு ஏவலாட்களை நாடெங்கும் அனுப்பினார்.

ஆட்டுத் தலைக்கு அதிகம் கஷ்டப்படவில்லை. கறிக்கடையில் கிடைத்துவிட்டது.

புலித்தலைக்கு ரொம்பவே அலைய வேண்டி வந்தது. கடைசியில் ஒரு வேட்டைக்காரனிடம் அது கிடைத்தது. ஆனால் மனிதத் தலை? உயிரோடிருப்பவனை வெட்டி தலையை எடுத்தால் அது கொலை… என்ன செய்யலாம் என யோசித்தபோது, வழியில் ஒரு சுடுகாடு தென்பட்டது. அங்கே புதைக்கக் கொண்டுவந்த ஒரு பிணத்தில் தலையை எடுத்துக் கொண்டனர். மன்னரிடம் கொண்டு போனார்கள். மூன்று தலைகளையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,

 

“சரி, இம்மூன்றையும் சந்தையில் விற்று பொருளாக்கி வாருங்கள்,” என்றார்.

 

மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவர்களுக்கு ஆட்டுத்தலையை விற்பதில் எந்த சிக்கலும் இல்லை. பதிலுக்கு பண்டமும் கிடைத்தது. புலியின் தலையை வாங்க யாரும் முன் வரவில்லை. பலரும் அதை வேடிக்கைதான் பார்த்தார்கள். கடைசியில் ஒரு பணக்காரர் தன் வேட்டை மாளிகையை அலங்கரிக்க அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். இப்போது மனிதத் தலைதான் மிச்சமிருந்தது. அதைப் பார்க்கவே யாரும் விரும்பவில்லை. அருவருத்து ஓடினர். வேறு வழியின்றி மனிதத் தலையுடன் அரண்மனைக்கே திரும்பினர் ஏவலாட்கள். மன்னரிடம் போய், விவரத்தைச் சொன்னார் அமைச்சர்.

 

“அப்படியா… சரி, யாரிடமாவது இலவசமாகக் கொடுத்துவிட்டு வந்துவிடுங்கள்”, என்றார் மன்னர்.

 

ஒரு நாளெல்லாம் அலைந்தும் இலவசமாகக் கூட அதனை பெற்றுக் கொள்ள யாருமே முன் வரவில்லை.

 

விஷயத்தைக் கேட்ட அசோக மன்னர் புன்சிரிப்புடன் இப்படிக் கூறினார்:

 

“மந்திரியாரே… நீங்கள் தெரிந்து கொண்டது என்ன?” என்றார்.

 

அமைச்சர் மவுனம் காத்தார்.

 

“மனிதனின் உயிர் போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை ஏது? சக மனிதன்தானே… வாங்கி வைத்துக் கொள்ளலாம் அல்லவா… ஆனால் நடை முறையில் இலவசமாகக் கொடுத்தாலும் அருவருத்து ஓடுகிறார்கள்… இதை யாரும் தொடக்கூட மாட்டார்கள்.

இருந்தும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமாக உள்ளபோது என்ன ஆட்டம் ஆடுகிறது! செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது. தம்மிடம் எதுவும் இல்லை என்றுணர்ந்தவர்கள்தான் ஞானிகள். அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதே ஞானத்தைப் பெறும் முதல் வழி..!” என்றார்.

 

அமைச்சர் தலை கவிழ்ந்து நின்றார்!

 

http://www.envazhi.com/three-heads-zen-stories-15/

Link to comment
Share on other sites

தேவையும் ஆசையும்

 

நமக்குத் தேவைகள் என்பவை வெகு சிலவே.அவை எளிமையானவை. உங்களுக்கு என்ன தேவை?உணவு,நீர்,உறைவிடம்,உங்களை காதலிக்க ஒருவர்,அவரை விரும்ப நீங்கள்.இவைதானே உங்களது தேவைகள்.இந்தத் தேவைகளுக்கெல்லாம் மதங்கள் எதிரிகள்.யாரையும் காதலிக்காதே,பிரம்மச்சாரியாக இரு என்கிறது மதம்.தேவைக்கு உணவை உண்ணாதே,விரதம் இரு என்கிறது மதம்.தங்க ஒரு வீடு தேவை,ஆனால் எதிலும் பற்றில்லாமல் சந்நியாசியாகி நாடோடியாகசுற்றித் திரி என்கிறது மதம்.நீங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மேலும் மேலும் துன்பத்திற்கு உள்ளாகிறீர்கள் .அதிலிருந்து மீள அந்த மதவாதிகளிடம் தஞ்சம் புகுகிறீர்கள் .மொத்தத்தில் அவர்கள் சொல்வதெல்லாம் நீங்கள் அவர்களை நம்பி இருப்பதற்காக உருவாக்கப் பட்டவை.
ஆசை என்பது என்ன?உங்களை காதலிக்க தேவை ஒரு பெண். கிளியோபாத்ராதான் வேண்டும் என்பது ஆசை..தங்க இடம் வேண்டுவது தேவை.அரண்மனை வேண்டும் என்பது ஆசை. உன்ன உணவு வேண்டும் என்பது தேவை.ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட வேண்டும் என்பது ஆசை.தேவைகள் எளிதில் அடையக் கூடியவை.ஆசைகள் அடைய முடியாதவை.உங்களுடைய எளிமையான தேவைகள் நிறைவேறினாலே நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும்.புத்தருக்கே இந்த தேவைகள் உண்டு.


உங்களது ஆசைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறையுங்கள்.ஆசைகள் செயற்கையானவை.தேவைகள் இயற்கையானவை.அதனால் உங்கள் தேவைகளைக் குறைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றுங்கள்.

 

http://jeyarajanm.blogspot.fr/2012/10/blog-post_14.html

Link to comment
Share on other sites

எதிர்பார்ப்பது தவறா?

 

மன்னன் ஒருவன் முனிவரிடம்,கேட்டான்,''கீதையிலே,'கடமையை செய்,பலனை எதிர்பாராதே,'என்று கூறப்பட்டுள்ளது.நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டியது என் கடமை.அதனை மக்கள் பாராட்ட வேண்டும் என்று நினைப்பது தவறா?''

 

முனிவர் அதற்கு,

'உன் கேள்விக்கு பதில் சொல்ல நீ ஒரு வாரம் என் ஆசிரமத்தில் சாப்பிட வேண்டும்,''என்றார்.

 

மன்னனும் அவ்வாறே அங்கு சாப்பிட்டு வந்தான்.சாப்பாடு மிகவும் சுவையாக இருந்தது.அதை ரசித்து அவன் சாப்பிட்டான்.ஒரு வாரம் முடிந்தவுடன் முனிவர் கேட்டார்,

 

''இங்கு சாப்பாடு எப்படி இருந்தது?''

 

மன்னன் சொன்னான்,

 

''நானே சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.சாப்பாடு மிகவும் அருமையாக இருந்தது.இதை சமைத்த சமையல்காரரை என் அரண்மனைக்கு அழைத்துச் சென்று தலைமை சமையல்காரராக நியமிக்கப் போகிறேன்,''

 

முனிவர் சொன்னார்,''சுவையாக சமைக்க வேண்டியது ஒரு சமையல்காரரின் கடமை.இந்த சமையல்காரன் தன் கடமையை செய்தான்.இப்போது அவனுக்கு அரண்மனையில் வேலை கிடைத்துவிட்டது.கடமையை சரியாக செய்தவனுக்கு அதற்கான பலன் கண்டிப்பாக தேடி வரும்.''


ஆசையின் அடுத்த நிலைதான் எதிர்பார்ப்பு.ஆசைக்கு அளவில்லை.பலனை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டால் நம்மால் அந்த செயலில் நிச்சயம் வெற்றி பெற இயலாது.சரியாக செய்தால் அதற்கான பலன் நமக்குக் கிடைப்பதை யாராலும் தடுக்க முடியாது.

 

 

http://jeyarajanm.blogspot.fr/2012/07/blog-post_30.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.