Jump to content

சரத் பொன்சேகா தாக்குதல்- சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா தாக்குதல்- டோரா தாக்குதலினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு: அனுரா

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல் மற்றும் கடற்படையின் டோராப் படகுகள் அழிப்பு ஆகியவற்றால் சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது:

நாட்டின் நலன் கருதி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நெகிழ்வுப் போக்குடன் யதார்த்த ரீதியாக செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மேலதிக அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக சர்வதேச சமூகத்திடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நோர்வேயை நாம் துரத்திவிட முடியாது. இந்தியாவும் அதைத்தான் இப்போது கூறுகிறது. இது விடயத்தில் இந்தியா பின்னால் இருந்து செயற்படுகிறது. நம்முடன் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொள்ளவில்லை. மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையானது அவரை சிங்களப் பேரினவாதியாகவும், சிங்களவர்களுக்கு ஆதரவான- தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுடையவராக வெளிப்படுத்தியது.

இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சியின் போதும் கூட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பொறுமை காத்திருந்தார். அத்தகைய தாக்குதல் ஒரு யுத்த நடவடிக்கையாகும்.

மாறிவரும் உலக சூழலில் நாம் நமது கருத்துகளை மாற்றிக் கொள்ளாமல் அடம்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. மா சேதுங்கை சீனா தொடர்ந்து பின்பற்றியிருந்தால் அந்நாடு வீழ்ந்திருக்கும். மா சேதுங்க் தான் சீனாவின் தந்தை. ஆனால் அத்தகைய தலைவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டாலும் தற்போது இடதுசாரித் தன்மையிலிருந்து வலதுசாரித் தன்மைக்கு மாறி வருகிறார்கள்.

தற்போதைய சீனாவானது இடதுசாரி உலகின் ஒரு முதலாளித்துவ நாடு. வியட்நாம் மீது அமெரிக்கா பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்த போதும் அந்நாட்டில் பாரிய அளவில் முதலீடு செய்துள்ளது அமெரிக்கா.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வலியுறுத்தியபடியான ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டின் படி அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். உலகக் கூட்டமைப்புகளை இங்கே நாம் பயன்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. இதையே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் தங்களது உரைகளின் மூலம் வலியுறுத்தி வந்தனர்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து 400 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்துவிட்டனர்.

கடற்படையின் டோராப் படகுத் தாக்குதலையடுத்து 1,000 ஜப்பானியர்கள் தங்களது சிறிலங்கா பயணத்தை இரத்து செய்துவிட்டனர். இங்கே வந்து கொல்லப்படுவதற்காக யாரும் பணம் செலுத்தி வரத் தயாராக இல்லை. இந்த நாட்டிற்கு வருமானம் ஈட்டித் தரக் கூடிய மூன்றாவது பெரிய துறை சுற்றுலாத்துறை. இந்தத் துறையினது வளர்ச்சியில்லாமல் நாட்டினது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்துவிடமுடியாது. இந்தத் துறையை மேம்படுத்தாமலும் முதலீடு செய்யாமலும் இருந்தால் நாட்டினது பொருளாதாரம் தொடர்ந்து குழப்பமானதாகவே இருக்கும்.

மாலைதீவுகளுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ஜப்பானியர்கள் சுற்றுலாப் பயணிகளாக சென்றுள்ளனர். ஆனால் சிறிலங்காவுக்கோ 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஜப்பானியர்களே வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டினது பிரதான எதிர்க்கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரசு ஆகியவற்றின் நம்பிக்கையை வென்றெடுப்பது இன்று மிகவும் அவசியமானதாகும். கிழக்குப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள் வசிப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களில் முஸ்லிம்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அமைதி முயற்சிக்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே.

நாடாளுமன்றக் குழுக்கள் தொடர்பிலான பிரச்சனையானது சமரசத்துக்கு இடமில்லாத சூழ்நிலையில் இருந்தபோது எப்படி சமரசமாக தீர்வு காணப்பட்டதோ அதோபோல் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியமானது என்றார் அனுரா பண்டாரநாயக்க.

-புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.