Jump to content

சரத் பொன்சேகா தாக்குதல்- சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகா தாக்குதல்- டோரா தாக்குதலினால் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு: அனுரா

சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதல் மற்றும் கடற்படையின் டோராப் படகுகள் அழிப்பு ஆகியவற்றால் சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அனுரா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தின் போது அனுரா பண்டாரநாயக்க பேசியதாவது:

நாட்டின் நலன் கருதி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நெகிழ்வுப் போக்குடன் யதார்த்த ரீதியாக செயற்பட வேண்டும். ஐக்கிய இலங்கைக்குள் மேலதிக அதிகாரப் பகிர்வு மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதாக சர்வதேச சமூகத்திடம் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நோர்வேயை நாம் துரத்திவிட முடியாது. இந்தியாவும் அதைத்தான் இப்போது கூறுகிறது. இது விடயத்தில் இந்தியா பின்னால் இருந்து செயற்படுகிறது. நம்முடன் இராணுவ ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொள்ளவில்லை. மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையானது அவரை சிங்களப் பேரினவாதியாகவும், சிங்களவர்களுக்கு ஆதரவான- தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடுடையவராக வெளிப்படுத்தியது.

இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சியின் போதும் கூட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பொறுமை காத்திருந்தார். அத்தகைய தாக்குதல் ஒரு யுத்த நடவடிக்கையாகும்.

மாறிவரும் உலக சூழலில் நாம் நமது கருத்துகளை மாற்றிக் கொள்ளாமல் அடம்பிடித்துக் கொண்டிருக்க முடியாது. மா சேதுங்கை சீனா தொடர்ந்து பின்பற்றியிருந்தால் அந்நாடு வீழ்ந்திருக்கும். மா சேதுங்க் தான் சீனாவின் தந்தை. ஆனால் அத்தகைய தலைவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டாலும் தற்போது இடதுசாரித் தன்மையிலிருந்து வலதுசாரித் தன்மைக்கு மாறி வருகிறார்கள்.

தற்போதைய சீனாவானது இடதுசாரி உலகின் ஒரு முதலாளித்துவ நாடு. வியட்நாம் மீது அமெரிக்கா பாரிய குண்டுத் தாக்குதல்களை நடத்தியிருந்த போதும் அந்நாட்டில் பாரிய அளவில் முதலீடு செய்துள்ளது அமெரிக்கா.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் வலியுறுத்தியபடியான ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பகிர்வு என்ற கோட்பாட்டின் படி அதிகாரப் பகிர்வை மேற்கொண்டு போர் முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். உலகக் கூட்டமைப்புகளை இங்கே நாம் பயன்படுத்த வேண்டும் என்று நாம் விரும்பவில்லை. இதையே ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவும் தங்களது உரைகளின் மூலம் வலியுறுத்தி வந்தனர்.

இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீதான தாக்குதலையடுத்து 400 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தை இரத்து செய்துவிட்டனர்.

கடற்படையின் டோராப் படகுத் தாக்குதலையடுத்து 1,000 ஜப்பானியர்கள் தங்களது சிறிலங்கா பயணத்தை இரத்து செய்துவிட்டனர். இங்கே வந்து கொல்லப்படுவதற்காக யாரும் பணம் செலுத்தி வரத் தயாராக இல்லை. இந்த நாட்டிற்கு வருமானம் ஈட்டித் தரக் கூடிய மூன்றாவது பெரிய துறை சுற்றுலாத்துறை. இந்தத் துறையினது வளர்ச்சியில்லாமல் நாட்டினது பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்துவிடமுடியாது. இந்தத் துறையை மேம்படுத்தாமலும் முதலீடு செய்யாமலும் இருந்தால் நாட்டினது பொருளாதாரம் தொடர்ந்து குழப்பமானதாகவே இருக்கும்.

மாலைதீவுகளுக்கு ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ஜப்பானியர்கள் சுற்றுலாப் பயணிகளாக சென்றுள்ளனர். ஆனால் சிறிலங்காவுக்கோ 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ஜப்பானியர்களே வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியானது நாட்டினது பிரதான எதிர்க்கட்சியாகும். ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரசு ஆகியவற்றின் நம்பிக்கையை வென்றெடுப்பது இன்று மிகவும் அவசியமானதாகும். கிழக்குப் பகுதியில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள் வசிப்பதால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களில் முஸ்லிம்கள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும். அமைதி முயற்சிக்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே.

நாடாளுமன்றக் குழுக்கள் தொடர்பிலான பிரச்சனையானது சமரசத்துக்கு இடமில்லாத சூழ்நிலையில் இருந்தபோது எப்படி சமரசமாக தீர்வு காணப்பட்டதோ அதோபோல் உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டியது அவசியமானது என்றார் அனுரா பண்டாரநாயக்க.

-புதினம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.