Jump to content

15,000 பதிவுகளை நெருங்கும் நெடுக்கிற்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் பல துறை  சார்ந்தும் 

அநேகமாக எல்லா விடயங்களையும் எழுதும்  ஆற்றல் மிக்க

அதிலும் தாயக போராட்ட  மற்றும் அவர்களது தியாக வரலாறு பற்றி அதிகமான பற்றுடன் எழுதும் தம்பி  நெடுக்குக்கு  எனது வாழ்த்துக்கள்.

 

தொடர்ந்து எழுதவும்

அதே நேரம் அவரது கனவுகள் பலிக்கவும் எல்லாம் வல்ல இறைவன் துணை  நிற்பாராக.

 

   

Link to comment
Share on other sites

  • Replies 65
  • Created
  • Last Reply

வாழ்த்துகள் நெடுக்ஸ் அண்ணா.

பல விடயங்கள் பற்றிய அறிவு உங்களுக்கு உள்ளது. எழுத்துகளை தாயகத்துக்காக உபயோக்கிக்கும் உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் தங்கள் பணி. :)

அப்படியே அடிக்கடி பூக்களை குருவிகளை காதலிக்கும் போது அவற்றின் படங்களையும் இணையுங்கள். :lol:

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் !


பலராலும் கவரப்பட்ட ஆழமான அசையாத பற்றுள்ள கொள்கை கொண்ட கருத்தாளர்.


தொடர்ந்தும் பல ஆயிரம் கருத்துக்கள் / படைப்புக்களை எதிர்பார்க்கும்,

சக கள உறவு.

Link to comment
Share on other sites

நெடுங்காலமாய் கருத்துக் களத்தில் இணைந்திருந்து
நெடுந்தூரம் பயணித்து வந்து
நெடுந்தொகையில் கருத்தெழுதிய
நெடுக்ஸ் நீவீர் இன்னும்
நெடுங்காலம் களத்துடன் இருந்து
நெடிய பல கருத்துகள் தர
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

எமது விடுதலைப்போராட்ட வரலாற்றில் திறமைசாலிகள் .படித்தவர்கள் ,பதவியுள்ளவர்கள்  பெரும்பான்மையினர் தானுண்டு ,தன குடும்பம் உண்டென்று வாழும் சூழலில் .............உங்களைப்போன்றவர்களின் தாயகம் மீதுள்ள பற்றும், செயல்பாடுகளும் மனதிற்கு ஆறுதல் அளிக்கின்றது ...................வாழ்த்துக்கள் ...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெளிந்த பார்வையுடன், ஒருபக்கச்சார்பில்லாமல் ஆழ்ந்து அறிவான கருத்துக்களை முன் வைக்கும் நெடுக்ஸ் அண்ணை,

 

இன்னும் பல பல பல்லாயிரம் பதிவுகளை நெருங்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்[வாழ்த்தாட்டில் கோவிப்பீங்கள் இல்லையா :D ]...யாழில் எழுதி,எழுதி யாழை ஒரு வழி பண்ணுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன்



தெளிந்த பார்வையுடன், ஒருபக்கச்சார்பில்லாமல் ஆழ்ந்து அறிவான கருத்துக்களை முன் வைக்கும் நெடுக்ஸ் அண்ணை,

 

இன்னும் பல பல பல்லாயிரம் பதிவுகளை நெருங்க என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

 

 

தமிழ்தங்கை இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராய் இல்லை
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு,ஒரே குடும்பத்து உறவு மாதிரி!

கருத்துக்களத்தில் அடிபடுகிறது, பிடுங்குப் படுகின்ற மாதிரி எழுத்துக்கள் இருக்கும்!

ஆனால், அனைவரினதும் இறுதி இலக்கு, மட்டும் என்றும் திசை மாறியதில்லை!

வாழ்த்துக்கள், நெடுக்கர்!

தொடர்ந்து எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குவின் யதார்த்தமான சிந்தனைகள் கருத்துகளாய்  வெளிவருவது பிடிக்கும்.

தனக்கு சரி என்று பட்டதை இறுதிவரை கருத்துகளோடு மோதுவதும் பிடிக்கும்.

நெடுக்குவையும் பிடிக்கும்.

 

Link to comment
Share on other sites

என்ன தான் முரண்பட்டாலும் எனக்கும் நெடுக்ஸ் அண்ணாவை ரொம்ப பிடிக்கும். :)

இப்பொழுது எனக்கு பிடித்த நபர்களின் வரிசையை எழுதுவதில்லை என்று முடிவெடுத்ததால் அதை குறிப்பிடவில்லை. :)

Link to comment
Share on other sites

ஆரம்பத்தில் நெடுக்கின் பதிவுகளைப் பார்த்து (ஒரு) புருவத்தைத் உயர்த்தி நின்றாலும் :lol: காலப் போக்கில் நெடுக்கின் எழுத்திற்கு ஒரு விசிறி ஆனது என்பதே உண்மை, அவரின் எழுத்துக்களைத் தேடித் தேடி வாசிப்பேன்! :D

உண்மை சுடும் என்பதற்காக அதனை பொய் என்று மாற்ற/ ஏற்ற்றுக் கொள்ள முடியாது என்பதை நெடுக்கின் பல பதிவுகள் நினைவு படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.. உதவி, விளக்கம் என எது கேட்டாலும் தாமதிக்காமல் முன்சென்று உதவும் நல்ல மனப் பக்குவம்/ ஆற்றல் கொண்ட உறவுற்கு இந்த பதிவின் மூலம் நன்றியையும் வாத்துக்களையும் தெரிவித்து, மென்மேலும் உங்கள் பதிவுகள் பலருக்குப் பலனளிக்க நீங்கள் தொடர்ந்தும் யாழில் எழுத வேண்டிக்கொள்கிறேன்! :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வாழ்த்துக்கள் நெடுக்ஸ்,
 
உங்களைப்பற்றி எழுதுவதற்கு நிறைய உண்டு அதனை தொகுத்து எழுதத்தெரியவில்லை ....... உங்களைப்போன்று ஒருவர் நிச்சயமாக யாழ் களத்திற்கு வேண்டும் தொடர்ந்தும் யாழுடன் இணைந்து இருங்கள் சகோதரா ! என்னும் பல ஆயிரம் பதிவுகளை இணைக்க மீண்டும் வாழ்த்துக்கள்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நடமாடும் பல்கலைக்கழகம் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்



நெடுக்ஸ்சின் பல பதிவுகள், நல்ல ஒரு செய்தியைச் சொல்லி நிற்கும். மற்றவர்களின்... மனம் நோகாமல், தான் சொல்ல வந்த செய்தியை... ஆதாரபூர்வமாக, நாசூக்காக... வழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்... சொல்லி விட்டு, பந்தியின்... இறுதியில் ஒரு சிமைலி போடுவார்... அது, நக்கலா, நளினாமா... என்று வாசிப்பவர்களுக்கு கொஞ்சம் குழப்பம் ஏற்படுத்தும். வாழ்த்துக்கள் நெடுக்ஸ். எதிர்காலத்தில்... கலியாணம் கட்டினாலும்... தொடர்ந்து, யாழில்... இணைந்திருங்கள்.biggrin.gif

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்.. :D

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் நெடுக்கர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Edited by நிழலி, Today, 01:33 PM. 
படம் நீக்கப்பட்டுள்ளது

ஏன்... அந்தப் படத்தை, நிழலி நீக்கியவர் என்று, தெரியவில்லை. நெடுக்ஸ் இணைத்த தலைப்புக்களில்... "மாங்கனியும், தொட்டிலில்... ஆடுதடி..." என்ற தலைப்பும்... எனக்கு மட்டுமல்ல, அந்தத் தலைப்பே... யாழில்... பயங்கரச் சக்கை போட்டது. அதை.... நிழலி, அறியவில்லையா? என்னுடைய, அன்பளிப்பாக, நெடுக்ஸ்சிற்கு, வழங்கிய படத்தை, நிழலி, நீக்கியது சுத்த அநியாயாயம். எனக்கு... நியாயம் வேண்டும்.

Link to comment
Share on other sites

Edited by நிழலி, Today, 01:33 PM. 
படம் நீக்கப்பட்டுள்ளது

ஏன்... அந்தப் படத்தை, நிழலி நீக்கியவர் என்று, தெரியவில்லை.

நெடுக்ஸ் இணைத்த தலைப்புக்களில்... "மாங்கனியும், தொட்டிலில்... ஆடுதடி..." என்ற தலைப்பும்... எனக்கு மட்டுமல்ல, அந்தத் தலைப்பே... யாழில்... பயங்கரச் சக்கை போட்டது. அதை.... நிழலி, அறியவில்லையா?

என்னுடைய, அன்பளிப்பாக, நெடுக்ஸ்சிற்கு, வழங்கிய படத்தை, நிழலி, நீக்கியது சுத்த அநியாயாயம். எனக்கு... நியாயம் வேண்டும்.

 

அந்த படத்தை நீக்க சொல்லி report பண்ணியது நான் தான். எனவே நிழலி அண்ணா மேல் கோபப்படாதீர்கள். என் மேல் கோபப்படுங்கள். ஆனால் இந்த திரியில் வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த படத்தை நீக்க சொல்லி report பண்ணியது நான் தான். எனவே நிழலி அண்ணா மேல் கோபப்படாதீர்கள். என் மேல் கோபப்படுங்கள். ஆனால் இந்த திரியில் வேண்டாம்.

உங்களுக்கு.... ஏன், இந்த ஊர்... உளவாரம். நாலு, மட்டுறுத்தினர், களத்திற்க்கு இருப்பது... காணாதா? ஓகே... தனித்திரியை... நீங்கள் ஆரம்பியுங்கள். நான்... அங்கு வருகின்றேன்.

Link to comment
Share on other sites

உங்களுக்கு.... ஏன், இந்த ஊர்... உளவாரம். நாலு, மட்டுறுத்தினர், களத்திற்க்கு இருப்பது... காணாதா? ஓகே... தனித்திரியை... நீங்கள் ஆரம்பியுங்கள். நான்... அங்கு வருகின்றேன்.

 

தனித்திரி ஆரம்பிக்கும் அளவுக்கு இதனை பிரச்சினையாக்க விரும்பவில்லை. தனிமடல் போட்டிருக்கிறேன், பாருங்கள். :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.