Jump to content

ஹைக்கூ வில் ஒரு முயற்சி....


Recommended Posts

கெளரி பாலன் !

காளான் ஹைக்கூ ஒரு ஆச்சரியம் அல்லது ஒரு ஒப்பீட்டைத் தருகின்றது என நம்புகின்றேன்.

இது எப்படி ஒரு வாசகனின் சிந்தனையைத் தட்டி விடுகின்றது?

இப்படிச் சொல்வதால் எனக்கு ஏதோ பெரிதாகத் தெரியும் என்று எண்ணிவிட வேண்டாம். நானும் உங்களுடன் சேர்ந்து ஒரு தேடலில் தான் ஈடு பட்டுள்ளேன்.

// காய்ந்த காலடி

துளிர்க்கும் புல்

தை மாதம்//

ஒரு நம்பிக்கை கொடுக்கும் விடயமாகப் பார்த்தேன். காய்ந்த காலடி என்பது வரட்சியில் புல் பூண்டுகளற்றுக் இருந்தால் தான் காணக் கிடைக்கும். அதில் துளிர்க்கும் புல் என்பது வாழ்வு பற்றிய ஒர் நம்பிக்கை. இதில் எப்படி தை மாதம் பொருந்தும் என்று பார்த்தால் ... தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது இன்னொரு நம்பிக்கை.... ஆகவே நம்பிக்கைக்கு நம்பிக்கை இன்னும் வலு சேர்க்க தை மாதத்தையும் இணைத்து வாழ்க்கையின் நம்பிக்கை என்ற ஒரு சிந்தனையை ஒரு முகப் படுத்திப் பார்த்தேன்.

இது எனது பார்வையும் இந்த ஹைக்கூ (?) இற்கு எனது மூளையைச் சலவை செய்த சிந்தனையையும்...

//இறந்த பூனை

திறந்த வாயுடன்

கொட்டும் மழையில்//

இதில் எனது சிந்தனைச் சில்லுகள் சிலிர்த்துக் கொண்டது எப்படியென்றால் எத்தனை மழை பெய்தாலும் இறந்த பின் நமக்கு ஒரு சொட்டு நீர் கூட உதவாது. நாம் வாயைத் திறந்து வைத்திருந்தாலும் மூடி வைத்திருந்தாலும் எதுவும் எமக்குப் பிரயோசனமற்றவை. வாழ்க்கை என்பது உயிருடன் இருக்கும் வரை தான். எதைச் செய்தாலும் இப்போதே செய்ய வேண்டும் என்ற சிலிர்ப்பைத் தந்தது.

// உதிரும் மலரொன்று

மீண்டும் கிளைக்குத் திரும்புகின்றதோ

ஓ... வண்ணத்துப் பூச்சி//

வாழ்க்கையில் ஒரு கதவு மூடிக்கொண்டாலும் இன்னொரு கதவு திறந்து கொள்ளும் என்பார்கள். மலர் உதிர்ந்து விட்டாலும் அந்த இடத்தை/இழப்பை ஒரு வண்ணத்துப் பூச்சி போன்ற இன்னொரு அழகு வந்து இடம் பெயர்த்து விடும்

ஆகவே போனதையிட்டு கவலை கொள்ளாமல் இருப்பதை ஏற்று வாழவேண்டுமென்று பட்டம் கட்டிப் போதிக்கின்றதே....

இன்னும் இப்படி எத்தனையோ சொல்லிக் கொள்ளளாம்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சிந்தனை வரலாம். தவறில்லை. நாம் யானை பார்த்த குருடர்களாய்க் கூட இருக்கலாம். ஆனால் சிந்திக்கத் தூண்டுகின்றது என்பதால் இந்தக் ஹைக்கூக்கள் வெற்றி பெற்று விட்டன என்றே என்னளவில் உணருகின்றேன். ஒத்துக் கொள்கின்றேன்.

அறிவென்னும் தீக்குச்சியை உரசிப் போகும் எவையும் என்னைப் பொறுத்தவரை நல்ல கவிதைகளே.

இனிப் பாருங்கள்... உங்கள் காளான் கவிதையில் ..பொதிந்திருக்கும் விடயம் என்னவென்று சொல்லுங்கள்......

//நனைத்த மழை

கேட்ட குடை

காளான் // இது எனது காளான்.

முயற்சி மெய் வருத்தக் கூலி தரும். தட்டுங்கள் திறக்கப் படும் .... இவை இதனுடன் பொருந்திப் போகின்றதா?

தவிர்க்க முடியாத தேவை உத்வேகத்தைத் தந்து பலனைக் கொண்டுவரும் என்று எடுத்துக் கொள்ளலாமோ..?

தொடர்ந்து எழுதுங்கள்.. ஒரு திறந்த வெளி விவாதமாக எடுத்துச் சொல்வோம்.

உரசும் மூங்கில்கள் தான் தீயைப் பிறப்பிக்கும். யாழ் களத்தில் தீ எரியட்டும்.

தீப்பந்தத்துடன் - எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

mushroom0wk.jpg

நேற்றுப் பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் என்பார்கள்...காளான் முளைப்பதற்கு மழை காரணியாக அமைந்துள்ளது..அது உருவாகுவதற்கு காரணமாக இருந்த மழை நாளை வரும் போது அதனை ஒதுக்கும் எண்ணம் போல் குடைபிடிக்கும்(காளானை பார்த்தால் குடை வடிவில் இருக்கும்) ஒருவர் உருவாவதற்கு இன்னொருவர் உதவி செய்யும் போது உருவாகிய பின்னர் அவரையே எட்டி உதைப்பது போல.... இதுதான் எனது சிந்தனை,

தங்கள் கவிகளின் சிந்தனை விளக்கம் அருமை இது ஒரு சிறிய முயற்சி என்பதனால்..சிந்தனை விளக்கம் அவசியப் படுகின்றது சிந்தனையில் உள்ளதனை எப்படி ஹைக்கூ வடிவில் கொண்டு வரலாம் என்பதனை எடுத்துக்காட்டுவதற்கு

நன்றி

Link to comment
Share on other sites

மக்கள் முன்னால்

ஆடையுடன்

புத்தனின் நிர்வாணம் - இது எப்பிடி......

புத்தா உனக்குச் சமர்ப்பணம்

:lol::lol::lol::lol::D

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலே கஷ்டமான விடயம் பல பேர் முன்னிலையில் ஆடை இல்லாமை இருப்பது

மக்களின் முன்னால்

ஆடையுடன்

புத்தனின் நிர்வாணம்

மக்களின் பின்னால்

துப்பாக்கியுடன்

புத்தனின் பக்தர்கள்

Link to comment
Share on other sites

உலகத்திலே கஷ்டமான விடயம் பல பேர் முன்னிலையில் ஆடை இல்லாமை இருப்பது

மக்களின் முன்னால்

ஆடையுடன்

புத்தனின் நிர்வாணம்

மக்களின் பின்னால்

துப்பாக்கியுடன்

புத்தனின் பக்தர்கள்

நீங்கள் சொல்லும் நிர்வாணமும்........

வேறு வேறு புத்தன் சாரே...

வேறுபடுத்தலுடன் -எல்லாளமஹாராஜா-

Link to comment
Share on other sites

ஒரு நல்ல செய்தி !!!!!!

நமது நண்பர் ஹைக்கூ கணேஷ் அவர்கள் ஹைக்கூ பற்றிய இன்னோரன்ன விடயங்களை தொடர்ந்து இப்பகுதியில் எழுத இருக்கின்றார்.

அவரை வருக வருக என்று சபைதனில் வரவேற்கின்றோம்.

வரவேற்புடன் -எல்லாள மகாராஜா-

Link to comment
Share on other sites

எப்போது வருகின்றார்...?நிறைய விடையங்கள் அவரிடம் இருந்து அறிய ஆவலாகவுள்ளேன்.

வர வேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் :wink:

Link to comment
Share on other sites

மகாராஜா விரிவான விளக்கத்திற்கு நன்றி.

நான் கூறவந்தது கருப்பொருட்களைப் பற்றி அல்ல. ஹைக்கூ கவிதை மரபுகளைப் பற்றித்தான்.

நல்லது ஐயா! நீங்கள் அறிந்து தெரிந்து புரிந்து வைத்திருக்கும் ஹைக்கூ மரபுகள் பற்றி எழுதினால் நாங்களும் ஹைக்கூ பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

தயவுடன் எழுதுங்கள்.....

எதிர்பார்ப்புடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.