Jump to content

உள்ளதைச் சொல்லுவோம்-புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை


Recommended Posts

உள்ளதைச் சொல்லுவோம் - புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை

வணக்கம் சகோதரர்களே!

நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்குவோமா? அனைவரது ஒத்துழைப்புடனும் இந்த அரட்டைக் களத்தை ஆரோக்கியமானஇ காத்திரமான கருத்துக் களமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

அப்படி என்னதான் செய்யப் போகிறோம்?

நமது சமூகம் எதிர்நோக்குகின்ற ஏதாவது சவாலை அல்லது பிரச்சினையை பிரச்சினையைத் தெரிந்தெடுத்து ஒவ்வொருவரும் அது தொடர்பான கருத்துக்களை முன் வைப்போம். இது ஒரு பட்டிமன்றம் இல்லை என்பதைக் கருத்தில் கொண்டு ஒரு பக்கம் சாராமல் குறித்த விடயம் சம்பந்தமான எம்முடைய எண்ணங்களை வெளிப்படுத்துவோம்.

நிச்சயமாக பல்வேறு கோணங்களில் ஒன்றோடொன்று முரண்படக் கூடிய கருத்துக்கள் வரத்தான் செய்யும். அப்படி வரத்தான் வேண்டும். அப்பொழுதுதானே அரட்டை முழுமையடையும்.

கடைசியில் குறிப்பிட்ட தலைப்பைப் பிரேரிப்பவர் நடுநிலமையில் நின்று சகல கருத்துக்களையும் உள்வாங்கி ஒரு தொகுப்பை வெளியிடுவார். அத்துடன் கருத்துச் சொன்னவர்களில் ஒருவரை அடுத்த தொகுப்பாளராக பிரேரிப்பார். இவ்வாறே சுழற்சி முறையில் தொகுப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு விடயங்கள் அலசப்படும்.

சரி முதலாவது விடயமாக 'புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை' என்ற தலைப்பை நான் பிரேரிக்கிறேன்.

இன்றைக்குத் தாயகத்திலிருந்து பல்வேறு காரணங்களால் புலம் பெயரும் எங்கள் முதியவர்கள் இந்தத் தேசங்களில் எப்படி வாழ்கிறார்கள்? அவர்கள் சந்தோசமாக இருக்கிறார்களா? அவர்களுக்கு இருக்கின்ற குறைகள் எவை? அவற்றை நிவர்த்தி செய்வதற்கு குடும்பம் என்ற முறையிலே ஒரு சமூகம் என்ற முறையிலே நாங்கள் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இது போன்ற விடயங்களை உள்ளடக்கி உங்கள் கருத்துக்களோடு வாருங்கள். இது விடயத்தில் தாயகத்தில் உள்ளவர்களின் நிலைப்பாடும் கருத்துக்களும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும் என்று நினைக்கிறேன்.அந்த வகையில் நீங்களும் வாருங்கள்.

எல்லோருடைய கூட்டு முயற்சியிலும் இதை ஒரு வளமான அரங்காக மாற்றுவோம். சரிதானே.

அன்புடன்

மணிவாசகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி.

'புலம் பெயர் நாடுகளில் முதியவர்களின் நிலை' என்ன என்று சொல்ல லண்டனில் பெற்றோரை கூப்பிட்டுவிட்டு அவர்களுக்கு கொடுக்கும் வீட்டை விட்டு வெளியேற்றி தங்களுக்குள்ள BOX அறையில் விட்டு விட்டு, அந்த வீட்டை வாடகைக்கு விடும் சமாத்தியத்தை சொல்லவா???

(சாத்திரியின் ஐரோப்பாவின் அவலத்தில் புலம்பலாய் இதை சொல்லுவார் என்று பார்த்தால் எழுத்தாளர் பக்கம் தான் அவர் கவனம் இப்போ விழுந்திருக்கு)

Link to comment
Share on other sites

இன்றைக்குத் தாயகத்திலிருந்து பல்வேறு காரணங்களால் புலம் பெயரும் எங்கள்

முதியவர்கள் இந்தத் தேசங்களில் ஒரு அடிமை மாதிரி வாழ்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

புலத்தில் உள்ள முதியோர்களில் பெரும்பாலோனோர் அவர்களது உறவுகளால்

சரியாக கவனிக்கப்படுகிறார்கள் இல்லை உதாசீனப்படுத்துகிறார்கள் என்றே கூற வேண்டும்.

இதைவிட முக்கியமான பிரச்சினை அவர்களுக்கு தனிமை. தனிமை என்பது எவ்வளவு கொடுமையானது.

தாயகத்தில் பல உறவுகள் நட்புகளுடன் தாங்கள் பிறந்து வளர்ந்த இடத்தில் இருந்துவிட்டு

புலத்திற்கு வருபவர்கள் இங்கு கட்டிட காட்டின் தனிமையில் இருந்து மனதளவில் ஒடிந்து போகிறார்கள்.

புலத்தில் பிள்ளைகள் மருமக்கள் வேலைக்கு போன பின்பு வீட்டின் தனிமையில் இருக்கும்

இவர்களுக்கு நேரத்தை எப்படி கழிப்பது என்பதே முக்கிய பிரச்சனை.

தெரியாத மனிதர்கள், சூழல், புரியாத மொழி, பழக்க வழக்கங்கள் என்று பல விதமான காரணிகளால்

அவர்களுக்கு தனிமை உருவாக்கப்படுகிறது. அத்துடன் கூடுதலான முதியவர்கள்

தங்கள் பிள்ளைகளின் குழந்தைகளை பராமரிக்கும்

பொறுப்பிலே அவர்கள் பிள்ளைகளின் வீட்டிலேயே அமர்த்தப்பட்டு இருப்பார்கள்.

கவலையான விடயம் என்ன என்றால் முதுமைப் பருவமும் குழந்தைப் பருவமும்

உள்ளத்தில் ஒன்று என்று சொல்லுவார்கள் ஆனால் அவர்களிடமே திரும்பவும்

குழந்தை பராமரிக்கும் பொறுப்பு கொடுக்கப்படுவதுதான் ஜீரணிக்க முடியவில்லை.

இத்தனை வருடமும் தங்கள் பிள்ளைகளைப் பராமரித்தவர்கள் ஓய்வு பெறவேண்டிய

காலத்தில் மீண்டும் அப் பாரத்தை சுமக்க வைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும்

மனவேதனைக்குரிய விடயமாகும். இங்கு பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுத்து

அவர்கள் ஏக்கங்களையும் ஆசைகளையும் நிறைவேற்றி வைப்பவார்கள் மிக

குறைவு என்றே சொல்ல வேண்டும். எப்போ இங்குள்ளவர்கள் முதியோர்களை மதித்து

அவர்களது ஆசைகளை நிறைவேற்றி அவர்களது தனிமையை போக்குகிறார்களோ.

அப்போதான் அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

முதலில் சமூக நிலை சார்ந்து ஒரு நல்ல தலைப்பிலே கருத்துக்களைப் பகிர்வதற்கு சந்தர்ப்பம் அமைத்துத் தந்த யாழ்களத்திற்கும் மணிவாசகனுக்கும் மற்றும் கருத்துக்களை முன்வைத்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறேன்

புலம்பெயர் தேசத்தில் முதியவர்களின் நிலை தொடர்பான எதிர்மறையான கருத்துக்களே இதுவரையில் முன்வைக்கப்பட்டிருப்பதாலும

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம் சகோதரர்களே!

பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்த இந்தப் பகுதியில் கள உறவுகள் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.

எனவே இன்னும் ஒரு வாரங்கள் பார்த்துவிட்டு இந்தப் பகுதியை மூடி விடலாம் என்று யோசிக்கிறேன். இந்தப் பகுதிக்கு உயிரூட்ட விரும்புபவாகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள். இதில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது விசேட காரணங்கள் இருந்தால் தனிமடல் மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள். திருத்தங்கள் செய்வதற்கு ஆயத்தமாயுள்ளேன்.

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

நானும் இப்பக்கம் எழுத வேண்டும், எனவே கொஞ்ச நாள் விட்டுத் தர முடியுமா? வேலைப்பளு காரணமாக எழுதுவதற்கு நேரம் இல்லாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

மேற்கோள்:

வணக்கம் சகோதரர்களே!

பெரும் எதிர்பார்ப்போடு ஆரம்பித்த இந்தப் பகுதியில் கள உறவுகள் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.

அப்பிடிலாம் இல்ல - மணிவாசகன் ஐயா .......

சிக்கலான விடயம் உங்க தலைப்பு.........

பக்கம் பக்கமாய் எழுத வேண்டி இருக்குமே - இது பற்றி........

பொறுமை இல்ல என்பதை விட - நிறைய எல்லாரும் தங்கள - தாங்களே -கேள்வி கேட்கவேண்டி வருமோ - அதுதான்! 8)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.