Jump to content

பயணம் - உலக அழிவு சிறப்புச் சிறுகதை


Recommended Posts

அவள் கண்களில் மிரட்சியோடு என்னை பார்த்துக் கொண்டு அந்தப் படகில் கிடந்தாள். அவள் பெரிய எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. என்னோடு வருவதை அவள் விரும்பியும் இருக்கலாம். ஆனாலும் ஒரு எச்சரிக்கை உணர்வில் அவளின் கைகளை கட்டிப் போட்டிருந்தேன்.

அன்றைக்கு கடல் அமைதியாக இருந்தது. அவளையும் தூக்கி படகில் போட்டுக் கொண்டு வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன்.

......

என்னுடைய மனைவியின் வருகைக்காக நானும் என்னுடைய சிறுவயது மகளும் காத்துக் கொண்டிருந்தோம். இன்று பகல் முழுவதும் காத்திருந்து விட்டு வந்தாலும் வராவிட்டாலும் இரவில் பயணத்தை தொடர வேண்டும்.

பகலில் பயணம் செய்வது மிகவும் ஆபத்தானது. யாராவது மனிதர்களின் கண்களில் பட்டு விடலாம்

சில வாரங்களுக்கு முன்புதான் என்னுடைய மனைவிக்கு பிரசவம் பார்த்தேன். அந்த அழகான சிவப்பு நிறக் குழந்தை இறந்தே பிறந்திருந்தானது எனக்கு நிம்மதியை கொடுத்தது. குழந்தையை கொல்வதற்கு நான் இன்னும் பழக்கப்பட்டிருக்கவில்லை.

பல மாதப் பயணங்களில் நேற்று மீண்டும் மனிதர்களுடன் எதிர்ப்பட நேரிட்டது. வைத்திருந்த இறைச்சியையும் பழங்களையும் பறித்துக் கொணடு என்னுடைய மனைவியையும் இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

கடந்த முறை நடந்தது போல் சில நாட்களில் மனைவியை விட்டு விடுவார்கள் என்று நம்பி ஒரு மறைவான இடத்தில் காத்துக் கொண்டு நின்றோம்.

......

இன்னும் சில நூறு மைல்கள் இலக்கை அடைவதற்கு இருக்கின்றன. இப்பொழுது தனித்துப் பயணிப்பதால் என்னுடைய ஓட்டத்தின் வேகம் அதிகரித்திருந்தது.

என்னுடைய மகளை ஓநாய்களிடம் விட்டு விட்டு ஓடிய பொழுது இருந்து வேகம் அப்படியே இப்பொழுதும் இருந்தது.

மனைவி திரும்பி வராமலேயே போனதன் பிற்பாடு மகளை மிகவும் கவனமாக பாதுகாத்தபடிதான் பயணித்துக் கொண்டிருந்தேன். மனைவி இல்லை என்றாலும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு மகள் உதவுவாள் என்கின்ற நம்பிக்கையும் இருந்தது.

நீண்ட பயணம் மகளை பலவீனப்படுத்தியது. நோய் வந்து நடக்கவே துன்பப்பட்டாள். ஓநாய்கள் வந்த பொழுது அவளால் ஓட முடியவில்லை. ஓநாய்கள் மகள் மீது கவனமாக இருந்ததை பயன்படுத்தி நான் மட்டும் ஓடி வந்து விட்டேன்.

ஓநாய்கள் தின்றிருக்காது விட்டாலும் அவளுடைய நோய் அவளை நிச்சயமாக தின்றிருக்கும் என்பதே எனக்கு இருந்து சமாதானம்.

......

இப்பொழுது சில பத்து மைல்கள்தான் இருக்கின்றன. என்னுடைய ஓட்டம் நின்றிருந்தது. தேடல் ஆரம்பமானது. மனிதர்களின் கண்ணில் படாமல் ஓடிக் கொண்டிருந்தவன் இப்பொழுது எங்காவது மனித நடமாட்டம் இருக்கிறது என்று தேடிக் கொண்டிருந்தேன்.

நீண்ட நாட்கள் தேடிய பின்பு ஒருநாள் அவர்களைக் கண்டேன். ஒரு கிழவனும் இளம் பெண்ணும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். நான் பேசுகின்ற அதே மொழியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மெதுவாக அவர்களிடம் போனேன்.

என்னைக் கண்டதும் கிழவன் கத்தியை தூக்கினான். நான் பேசிப் பார்த்தேன். வந்த நோக்கத்தை சொன்னேன். அதைக் கேட்டதும் இன்னும் ஆக்ரோசமாகி என் மீது பாய்ந்தான்.

எனக்கு வேறு வழி இருக்கவில்லை.

......

அந்த இளம்பெண் கண்களில் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்க நான் படகை வேகமாக வலி;த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் கரை தெரிந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. என்னுடைய வேகம் அதிகரித்தது.

கரையில் என்னுடைய கால்கள் பட்டன. அவளுடைய கால்களும்தான்.

கரையில் இறங்கி அங்கும் இங்கும் ஓடினேன். ஒரு நீளமான தடி ஒன்று கிடந்தது. அதுவரை பத்திரமாக ஒளித்து வைத்திருந்த அந்தக் கொடியை தடியில் கொழுவி மண் மீது நாட்டினேன்.

அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டேன்.

Link to comment
Share on other sites

நான் இதை வாசிக்கும்பொழுது ஒருவித உலர்நிலையை உணர்ந்தேன் . அதாவது ஈரலிப்பைக் காணவில்லை . பல இடங்களில் சம்பவங்கள் தொங்குபறியில் இருக்கின்றது . இன்னும் கொஞ்சம் விளக்கங்களைத் தந்திருக்கலாம் என நினைக்கின்றேன் . வித்தியாசமாகச் சிந்தித்த சபேசனுக்கு எனது பாராட்டுக்கள் :) :) .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தடுமாற்றத்தோடு சபேசன் கதையை எழுதியுள்ளார.

Link to comment
Share on other sites

விளக்கங்களை வாசிப்பவர்களிடம் விடக் கூடிய படிதான் கதையை எழுதினேன். மனைவி திரும்பி வரவில்லை என்கின்ற செய்தியை கூட சொல்லாமலேயே முதலில் கதையை கொண்டு போனேன். பின்பு அதை மாற்றி அடுத்த பந்தியில் சேர்த்தேன். சில தடுமாற்றங்கள் இருந்தது உண்மைதான்.

Link to comment
Share on other sites

கோமகனின் வார்த்தையில் சொல்வது என்றால் கதையின் முடிவை நெருங்கும் வரை நான் ஈரலிப்பு பற்றி சிந்திக்கவில்லை. உலகம் அழிந்த பின மனிதன் உணர்வுகள் உலர்ந்த நிலையிலேயே இருப்பான் என்கின்ற அடிப்படையில்தான் இதை எழுதினேன். அவன் தன்னை காத்துக் கொள்ள எதையும் செய்வான். சொந்த மண்ணை பார்த்த பின்பு "கண்ணீர்", "முத்தம்" என்று கொஞ்சம் ஈரலிப்பை கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

சுய()நலம்  இழப்பின் வேஷம் மறப்பதுக்கு  சந்தோசம் தொடர்ந்து தேடல் ஆரம்பிக்கும்.

 

Link to comment
Share on other sites

கோமகனின் வார்த்தையில் சொல்வது என்றால் கதையின் முடிவை நெருங்கும் வரை நான் ஈரலிப்பு பற்றி சிந்திக்கவில்லை. உலகம் அழிந்த பின மனிதன் உணர்வுகள் உலர்ந்த நிலையிலேயே இருப்பான் என்கின்ற அடிப்படையில்தான் இதை எழுதினேன். அவன் தன்னை காத்துக் கொள்ள எதையும் செய்வான். சொந்த மண்ணை பார்த்த பின்பு "கண்ணீர்", "முத்தம்" என்று கொஞ்சம் ஈரலிப்பை கொண்டு வர முயற்சித்திருக்கிறேன்.

 

ஓ...........  இதுக்கு இப்படியும் ஒரு பார்வை உள்ளதா ?? நான்தான் கவனிக்கத் தவறிவிட்டேன் மன்னித்துக்கொள்ளுங்கள் .  ஆனால் கடைசியிலை ஈரலிப்பு காணாது எண்டிறது மட்டும் உண்மை :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

அந்த இளம்பெண் கண்களில் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருக்க நான் படகை வேகமாக வலித்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் கரை தெரிந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்தோடத் தொடங்கியது. என்னுடைய வேகம் அதிகரித்தது.

கரையில் என்னுடைய கால்கள் பட்டன. அவளுடைய கால்களும்தான்.

கரையில் இறங்கி அங்கும் இங்கும் ஓடினேன். ஒரு நீளமான தடி ஒன்று கிடந்தது. அதுவரை பத்திரமாக ஒளித்து வைத்திருந்த அந்தக் கொடியை தடியில் கொழுவி மண் மீது நாட்டினேன்.

 

அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டேன்.

 

உங்கள் கதையை மீண்டும் ஒருமுறை வாசித்தேன் . என்மனதில் சில சந்தேகங்கள் எழுகின்றன .  உங்கள் படகு தரை தட்டிய இடம் ஈழமா ?? கொடி நாட்டுவது பற்றி எழுதியிருக்கின்றீர்கள் . ஆக ஒரு ஆதாம் ஏவாளாக ஈழத்தில் புதிய உலகத்தை உருவாக்க முயன்றீர்கள் என்று எடுக்கலாமா ??  விடை தந்தால் நல்லது . மேலும் ,  இந்தக்கருத்துக்களம் எழுதுபவரைப் பார்த்துக் கருத்து எழுதாமல் விடும் போக்கையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உலகத்தில்  மௌனமாக இருக்க

அமைதியாக இருக்கக்கூட சுதந்திரம் இல்லாததை மிகவும் தாழ்மையுடன் கண்டிக்கின்றேன்........... :(

Link to comment
Share on other sites

ஒரு தமிழனாக இந்தக் கதையை வாசிக்கின்ற போது, பயணத்தின் இலக்கும் படகு கரை சேர்ந்த இடமும் ஈழம்தான். உலக அழிவில் தப்பிப் பிழைத்த புலம்பெயர்வாசி ஒருவன் தன்னுடைய குடும்பத்தையும் இழுத்துக் கொண்டு தாயகத்தை நோக்கிய பயணத்தை மேற்கொள்கின்ற கதை இது. மனைவியும் மகளும் இறந்து போக, தன் மொழி பேசுகின்ற ஒரு பெண்ணை கடத்திக் கொண்டு போய் புதிய நாட்டை உருவாக்குகிறான்.

அவன் ஏன் புலம்பெயர் நாட்டை விட்டு ஓடுகிறான் என்பதும், "தூய்மையான" இனத்தை உருவாக்க முனைகிறான் என்பதும் இந்தக் கதையின் எழுதப்படாத முதலாவது பந்தியில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் அழிந்து மீண்டும் புதுப்பிக்கும்போது மனிதன் பழையபடி மிருகத்தனத்திலிருந்துதான் ஆரம்பிக்கவேண்டும். கதையில் சில இடங்களில் மனிதத்தன்மை இருப்பதால் அதிர்வுகள் ஏற்படவில்லை.

 

ஜெயமோகனின் "ஏழாம் உலகம்" மனிதர்களின் குரூரத்தைக் கொப்பளிக்கும் நாவல். படித்துப் பாருங்கள் சபேசன்.

Link to comment
Share on other sites

கிருபன்! "ஏழாம் உலகம்" படிக்கவில்லை. பாலாவின் "நான் கடவுள்" படம் இந்தக் கதையைக் கொண்டே உருவாக்கப்பட்டதாக வாசித்த நினைவு இருக்கிறது.

என்னுடைய கதையில் மிருகத்தனம் குறைவாக இருப்பதாக குறிப்பிடுகிறீர்கள். இந்த மிருகத்தனத்தை எழுதுவதற்கே நான் மிகவும் தயங்கினேன். அதனாலேயே சொற்களுக்கு இடையில் படிக்கும்படி பல இடங்களை அமைத்தேன்.

உலகம் அழிந்த பின்....

மனைவியின் கற்பு என்பது இருக்காது. தன்னை காத்துக் கொள்ள அவளை பலியிடவும் வேண்டியிருக்கும்.

அவளை தூக்கி கொண்டு போகின்றவர்கள் அவளை கொல்லலாம். அல்லது அனுபவித்து விட்டு துரத்தி விடலாம். வைத்து சாப்பாடு எல்லாம் போட மாட்டார்கள்.

பிறக்கின்ற குழந்தை என்னுடையதாக இருக்காது. அதை காவித் திரிவதும் ஒரு சுமையாக மாறும். குழந்தையை கொல்ல வேண்டியும் வரலாம்.

சொந்த மகளை ஓநாய்க்கு தின்ன கொடுத்து விட்டு ஓடலாம். துணைக்கு யாரும் இல்லாத நிலையில் அவள் மீதும் வெறி வரலாம்.

வலிமையான மனிதர்களிடம் இருந்து தப்பி ஓடுகின்ற நான் என்னை விட வலிமை குறைந்த மனிதர்களை தேவைப்படின் கொலையும் செய்வேன். பெண்களை கடத்திக் கொண்டும் போவேன்.

இதற்கு மேல் மிருகத்தனமாக சிந்திக்க என்னால் முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் நீங்கள் தொகுத்தவை எல்லாம் கதையில் இருந்தாலும், இழைக்கும்போது மனிதம் கொஞ்சம் இருந்தது மாதிரித் தெரிந்தது. சிலவேளை Quentin Tarantino போன்றவர்களின் வன்முறைகள், பயங்கரங்கள் நிறைந்த படங்களைப் பார்த்து ஊழிக்காலத்தில் மனிதத் தன்மையே இருக்கக்கூடாது என்ற எண்ணம் அடிமனதில் ஆழமாக எனக்குப் பதிந்திருக்கலாம்!

Link to comment
Share on other sites

கிருபன்! நல்ல வேளையாக இதை சொன்னீர்கள். ஊழிக்காலத்தில் உங்களை தூரத்தில் கண்டாலே போதும், வந்த வழியில் திரும்பி ஓடி விடுவேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஒரு குட்டி ஸ்டோரி  50 வயதான எல்லாளன் பெரும் படையுடன்.  எதிரே, சிறிய படையுடன் - ஆனால் பதின்ம வயதின் முடிவில் உள்ள கட்டேறிய உடலுடன் டுட்டு கெமுனு. தந்திரமாக வீரர்கள் மாய வேண்டாம் - நீயும் நானும் மட்டும் போரிடுவோம் என்கிறான் கெமுனு. சின்ன பயல், அதுவும் மோட்டு குடியினன், கவுங் தின்பதில் மட்டும் சூரன் - போரின் முதல் தவறாகிய எதிரியை கீழ் மதிப்பீடு செய்வதை செய்கிறான் மாமன்னன் எல்லாளன். பெரும் படையை பாவிக்காமலே தோற்று, இறந்து போகிறான். தீவு முழுவதையும் ஆண்ட கடைசி தமிழ் அரசு முடிவுக்கு வருகிறது. எல்லாளனில் தொடங்கியது - புத்தன் வரை தொடர்கிறது. கெமுனுக்கள் வென்று கொண்டே இருக்கிறார்கள் 🥲. ——******——— (போர் நடந்த விதம் வரலாறா தெரியவில்லை, தமிழர் தரப்பில் கர்ணபரம்பரையாக வருகிறது - வெறும் கதையே என்றாலும் - செய்தி கனமானது).
    • காசை கொடுத்து ஓட்டு பிச்சை எடுத்து வெல்ற‌து எல்லாம் வெற்றியா...................... கிருஷ்ண‌கிரில‌   வீஜேப்பியை முந்துவா வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் ஆனால் இதில் வீர‌ப்ப‌ன் ம‌க‌ளுக்கு 4வ‌து இட‌ம் என்று போட்டு இருக்கு   பெரிய‌ப்ப‌ர் ப‌ந்தைய‌ம் க‌ட்டுவோமா நான் சொல்லுறேன் வீர‌ப்ப‌ன் ம‌க‌ள் வீஜேப்பிய‌ முந்துவா என்று💪..............................   இது முற்றிலும் திமுக்காவுக்கு சாத‌க‌மான‌ ஊட‌க‌ம் அது அவ‌ர்க‌ளையும் அவ‌ர்க‌ள் சார்ந்த‌ கூட்ட‌னிக‌ளையும் முன் நிறுத்தின‌ம்..................... ஆனால் யூன் 4ம் திக‌தி இந்த‌ ஊட‌க‌த்தை காரி உமுந்து துப்புவ‌து உறுதி........................   ப‌ல‌ ச‌ர்வே வேற‌ மாதிரி சொல்லுகின‌ம் ஆனால் இதில் முற்றிலும் பொய்யான‌ ச‌ர்வே............................. இது முற்றிலும் திமுக்காவுக்கு ஓ போடு ஓ போடு ஊட‌க‌ம் தாத்தா க‌ள‌ நில‌வ‌ர‌ம் வேறு மாதிரி இருக்கு😁......................
    • இது உங்களுக்கு விளங்கும் என்பதால், உங்களுக்கும், உங்களை ஒத்தோருக்கும் மட்டும் எழுதுகிறேன். அண்மையில் ஒரு பிரபல தாராளவய, இடது சார் (இடது சாரி அல்ல) எழுதிய Conservatism: The Fight for a Tradition என்ற புத்தகத்தை, (அதாவது இடதுசாரிகள், வலதுசாரியத்தை புரிந்துகொள்ள என ஒரு இடது சார் சிந்தனையாளர் எழுதிய புத்தகத்தை) புரட்டும் வாய்ப்பு கிடைத்தது. இந்த இடது சார் சிந்தனையாளர் யாருமல்ல - வலதுசாரிகளின் தங்க தலைவன் பொரிஸ் ஜோன்சனுக்கு மாமன், Edmund Fawcett. 200 வருட அமெரிக்கா, யூகே வலது அரசியலை அலசுகிறது இந்த புத்தகம். இந்த காலகட்டத்தில் அநேக காலம் இரு நாட்டிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தது - வலதுசாரிகள். ஆனால் தாமே கெட்டிக்காரர், வல்லமையானோர், முற்போக்குவாதிகள் எனவும், வலதுசாரிகள் மோடயர், அடிமைபுத்தியினர், பணப்பேய்கள், பிற்போக்கினர் எனவும் சொல்லிகொள்வார்கள் இடதுசாரிகள். இரெண்டு நாட்டிலும். இந்த புத்தகத்தின் முகவுரையில், வலதுசாரிகளை நோக்கி இவர் ஒரு கேள்வியை கேட்கிறார்: 'if we're so smart, how come we're not in charge? நாம் அவ்வளவு கெட்டித்தனமானவர்கள் என்றால் நாம் ஏன் அதிகாரத்தில் இல்லை? —————— இதை படித்த போது என் மனதில் தோன்றிய எண்ணம், உங்கள் பதிவை வாசித்ததும் மீள உதித்தது: எல்லாளன் காலத்தில் இருந்து ஒவ்வொரு சிங்கள படை எடுப்பிலும், 1948க்கு பின் அத்தனை அரசியல் போராட்டதிலும் தோற்றுக்கொண்டே வருகிறோமே; If we are so smart, how come  we haven’t even won at least once? நாம் அவ்வளவு கெட்டிக்காரர், அவர்கள் அவ்வளவு மோடையர்கள் என்றால் - ஏன் நாம் ஒரு தடவை கூட ஒரு அரசியல் வெற்றியை அடையவில்லை? கட்டாயம் வாசிப்போர் பதில் எழுத வேண்டும் என்பதில்லை. சிந்தனையை தூண்டினால் போதும்.        
    • கந்தையர்!இஞ்சை பாருங்கோ. ஆர் வெண்டாலும். ஆர் தோத்தாலும் காசி,இராமேஸ்வரம் போய்வர பிரச்சனை இருக்காது. நோ ரெஞ்சன் 🤣
    • இதில் வீஜேப்பி அண்ணாம‌லை போட்டியிடும் தொகுதி கோவை  இதை காண‌ வில்லை ஹா ஹா................... 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.