Jump to content

இது அவன் தான்....


Recommended Posts

கணவரை இழந்த அந்த அம்மாவின் சொந்தமாக இப்போ அந்த வீட்டில் இருப்பது அவளின் கடைசி மகளும், கடைசி மகனை நம்பி ஓடிவந்த மருமகளும் தான்.
 
இராணுவ கட்டுப்பாடு பகுதியில், இரவு நேரத்தில் ஆண்கள் வீட்டில் இருந்தாலும் தங்க பயப்படும் காலத்தில், அவர்களுக்கு துணிவும் நம்பிக்கையும் இருந்தமைக்கு அந்த அம்மாவின் கடைசி மகன் தான் காரணம்.
 
தங்களுக்கு ஏதும் நடக்க அவன் விடமாட்டான். 
 
மூத்த மகன், கொழும்பில் நடந்த காட்டி கொடுப்பில் சிறைபட்டு ஆறுமாதம். இரண்டாவது மகன் புலிசேனையில் அண்ணனுக்கு பக்கபலமாக, ஒரு வருடத்துக்கு இரு முறை தான் பேசுவான்.
இருந்த ஒரே ஆறுதல் அவவின் கடைசி மகன்,  கொள்ளி  போட கூடவே வைத்திருந்தாள் அந்த அம்மா.
 
அவனோ அண்ணன்கள் வழியில், புலிகளின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக யாழ் மாவட்டத்திலே பல தாக்குதல்களை வழி நடத்துவது கூட தெரியாமல், அன்னை மடியில் படுத்திருந்து சோறு உண்பது கூட அந்த தாய்க்கு அவன் சாகுமட்டும், ஏன் இன்று மட்டும் தெரியாது.
 
திடீர் என்று வீட்டை விட்டு போவான், எப்படியும் வருவான் என்று அம்மா காத்திருப்பா, நிச்சயமாக இரவுக்குள் வீடுக்கு வருவான். இது கொஞ்ச காலமாக மாறி போயிருந்தது. சில நாட்கள் வாராமலே இருந்தான்.
 
நாட்கள் வாரங்களாக மாதங்களாக அவன் எப்போ வரு வான் என்று அம்மாவுக்கும் தெரியாத காலமானது.
 
அவனது மனைவி அப்போ 8 மாத கர்ப்பம். ஒரு முறையாவது தந்து மனைவியை பார்த்திட வேண்டி அனுமதிக்காக காத்திருந்ததை அவனுடைய ஆசை மனைவியோ, அம்மாவோ அறிந்திருக்க வாய்ப்பில்லை.
 
அவன் இரண்டு கைகளாலும் துப்பாக்கி சுடும் வல்லமை உள்ளவன். நேருக்கு நேராக அவனை யாருமே எதிர் கொள்ளமுடியாது என்று அவனது பயிற்சி ஆசிரியர் சங்கீதன் 19 முகாமில் அடிக்கடி கூறுவார்.
 
புதுவருடம் பிறந்து சில நாட்களில் அவன் வீடுக்கு வந்திருந்தான். மாலை மங்கும் நேரத்தில். ஒரு மணி நேரத்தில் போய்விடுவேன் என்று கூறி தாயின் கையால் சோற்றை உண்டு, தங்கை கூட செல்ல சண்டை போட்டு, மனைவி வயிற்றை தடவி என் புலிக்குட்டி என்ன சொல்லுகிறான் என்று நேரம் போவதே தெரியாமல் விளையாடி கொண்டிருந்தான். தன்னை சுற்றி நடக்கும் சதிவேலை கூட அன்று அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 
பள்ளி நாட்களில் இருந்தே வீட்டை விட்டு வெளியில் போகும்போது தாயின் கால்களை தொட்டு வணங்கும் பழக்கமுடைய அவன், அன்றும் அவன் குனிந்து வணங்கும் போது கயவர்களின் முதலாவது சூடு கழுத்தை பதம்பார்த்தது. பீறின  இரத்தம் தாயின் பாதங்களை கழுவும் பொது இரண்டாவது அவன் மக்களை தாயை நேசித்த நெஞ்சிலே வீழ்ந்தது.  இன்று வரை அவன் புலி என்றே தெரியாத அந்த வீர தாயின் மடியில் தன் உயிரை விட்டான்.
 
பின்னொரு நாளில் ஒரு மறைமுக இடத்தில் நடந்த வீர வணக்க உரையில், அவன் தாயை குனித்து வணங்காவிட்டால் எதிரியை அவன்தான் சுட்டிருப்பான் என்று.
 
இன்று அவனது குழந்தை, அவனது அம்மாவை அம்மா என்று தான் கூப்பிடுகிறது. பேத்தியை அம்மா என்று கூப்பிடும் அதிசயம் என்று ஊரே நம்ப முடியாமல் தவிக்க, அவனது மனைவி  மட்டும் உறுதியாக நம்புகிறாள்.
 
இது அவன் தான். 
 
(இந்த உண்மை கதை வாழும் புலம் பகுதியில் எழுதிய இப்படியும் ஒரு தாய் என்ற கதையை வாசித்த போது  எனக்கு தெரிந்த அம்மாவின் ஞாபகமாக எழுதிய உண்மை கதை ) 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நீண்ட‌ நாட்களுக்கு பிறகு எழுத்தினூடாக அபிராமை காண்பதையிட்டு மகிழ்ச்சி
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான, எமது வாழ்நாளில், எண்ணி முடிக்கக முடியாத, உண்மைக்கதைகள் நிரம்ப உண்டு!

கதையைக் கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றிகள், அபிராம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி எத்தனை பெயர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார்கள்.
 
பகிர்விற்கு நன்றி அபிராம். 
 
Link to comment
Share on other sites

நீண்ட‌ நாட்களுக்கு பிறகு எழுத்தினூடாக அபிராமை காண்பதையிட்டு மகிழ்ச்சி
 

 

ஒரு நோயின் தாக்கமும், மன உளைச்சலும் தான் மீண்டும் எழுதும் படி தூண்டியது. 

 

இப்படியான, எமது வாழ்நாளில், எண்ணி முடிக்கக முடியாத, உண்மைக்கதைகள் நிரம்ப உண்டு!

கதையைக் கண் முன் கொண்டுவந்ததற்கு நன்றிகள், அபிராம்!

தொடர்ந்து இணைந்திருங்கள்!

 

இந்த கதைக்கும் என் சொந்த வாழ்க்கைக்கும் நிறைய தொடர்புண்டு புங்கையூரான். நன்றி உங்கள் பகிர்வுக்கு.

 

இப்படி எத்தனை பெயர் மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்தார்கள்.
 
பகிர்விற்கு நன்றி அபிராம். 
 

 

அவர்களின் கனவு நிச்சயம் நனவாகும். நன்றி தமிழரசு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்டியும் இருக்கு அப்படியும் இருக்குது. நன்றி இணைப்பிற்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.