Jump to content

கனடிய கடவுச் சீட்டிற்கான கட்டணம் அதிகரிக்கப்படுகிறது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவின் கடவுச்சீட்டு 2013ம் ஆண்டில் புதிய வடிவம் பெறுவதுடன், கடவுச்சீட்டிற்காக அறிவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதுள்ள கடவுச்சீட்டிற்காக அறவிடப்படும் தொகையோடு தொடர்ந்தும்; மேற்படி திணைக்களம் செயற்பட முடியாது என்பதலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது விநியோகிக்கப்படும் ஐந்து வருடக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்படுவதுடன் அதன் தோற்றத்திலும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய வடிவம் பெறவுள்ளது.


இதேவேளை யூலை மாதம் 2013ம் ஆண்டிலிருந்து 10 வருடங்களிற்கான கடவுச்சீட்டுக்களை விநியோக்கிவுள்ள கனடா அதற்கான கட்டணமாக 160 டொலர்களை நிர்ணயம் செய்துள்ளது. கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள், பாவிக்க முடியாதபடி சேதமாக்கியவர்கள் இனிப் புதுக்கடவுச்சீட்டைப் பெற 45 டொலர்கள் செலுத்த வேண்டும்.

 

அத்தோடு வெளிநாட்டில் வதியும் கனடியப் பிரஜைகள் கடவுச்சீட்டுகளைப் பெற அதிக கட்டணம் செலுத்த வேண்டுமெனவும் ஜி-8 நாடுகளைப் போல கனடாவும் சிப் எனப்படும் கணிப்பொறிமுறை இணைக்கப்பட்ட கடவுச்சீட்டுக்களை விரைவில் விநியோகிக்க ஆரம்பிக்குமெனவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

 

 

 

 

 

Canada Mirror

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

5 வருடத்திற்கு 87$ 10 வருடத்திற்கு 160$ என்றால் கட்டணம் குறைக்க பட்டிருக்கிறது..:)

கடவுச்சீட்டு படம் 10$

முத்திரை செலவு 5$

நேரம் 2 மணத்தியாலம் (50$)

 

5 வருடத்திற்கு மொத்த செலவு.... (87 + 10 + 5 +50)*2 = $304 vs (160+10+5+50) = $224

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேசின் கணக்குப்படி லாபம் கிடைப்பதற்கு எதிர்வரும் யுலை வரைக்கும் காத்திருக்கவேண்டுமே எனக்கு மார்ச்சில் புதுப்பிக்கவேண்டும் :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்ச்சில் வெளியே போக வேண்டிய தேவை இருப்பின் புதுப்பிக்கலாம்.  இல்லா விடின் யூலை வரை காத்திருக்கலாம். காலாவதியாகி 1 வருடத்திற்குள் புதுப்பித்தாலும் short form உடன் புதுப்பிக்கலாம் என் சொன்னார்கள்.  ஆனால் புதிய கடவுசீட்டிற்கு புதிய பத்திரம் வருகுதோ தெரியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.