Jump to content

பிரான்சு நல்லூர் ஸ்தானின் பரிசு வழங்கல் நிகழ்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.salanam.com/index.php?option=co...id=79&Itemid=49

எழுதியவர் -தொகுப்பு: அநாமிகன்

Friday, 09 June 2006

சென்ற 04.06.2006 ஞாயிறு மாலை பாரிஸின் புறநகரமான செவ்றோன் நகரசபையின் விழா மண்டபம் ஈழத்திரை ஆர்வலர்களால் நிறைந்திருந்தது. நீண்ட இடைவெளியின் பின் சந்தித்த நண்பர்களாக மகிழ்வுடன் அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர். ஆங்காங்கே சிறுசிறு குழுக்களாக அமர்ந்திருந்து உரையாடிக் கொண்டிருந்தனர் வேறுசிலர். பொதுவில் இளையோரது உற்சாகம் கரைபுரண்டோடியது. பலரும் பரீட்சை முடிவை அறியத்துடிக்கும் மாணவரது முகபாவத்துடன் காணப்பட்டனர். தமக்கான அடையாள அட்டைகளுடன் நல்லூர் ஸ்தான் அமைப்பினர் அங்குமிங்குமாகப் பரபரப்புடன் நடமாடிக் கொண்டிருந்தனர். காசேதான் கடவுளடா அந்தக் கடவுளுக்கும் இது புரியுமடா.. என்ற பாடல்வரியை தினமும் நினைவசைக்கும் இந்த ஐரோப்பிய புலம் பெயர்ந்த வாழ்வில் நம்மவர்களின் முயற்சியில் குறும்படங்கள் தயாராகி.. போட்டியிட்டு - வென்று, பரிசும் பெறும்.. அதுவும் பணப் பரிசைப் பெறும் நிகழ்வு செவ்றோன் கிராமத்தில் நடைபெறுகிறது என்பதை நினைக்க ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இதை விபரணப்படுத்த வார்த்தைகளைத் தேடித் தடுமாறவேண்டியுள்ளது.. அரங்க மேடையில் காணப்பட்ட அகண்ட வெண்திரை முதற்பார்வையிலேயே மலர்ந்த வரவேற்பைக் கொடுத்தது. இந்நிகழ்வின் பிரமாண்டத்தையும் காட்டியது. மிகக் குறுகிய காலகட்டத்தில் நல்லூர்ஸ்தான் நிறையவே பல்தரப்பட்ட பணிகளை ஆற்றி பிரஞ்சுப் புகலிடத்தில் இருக்கும் அமைப்புகளில் தன் தனித்துவமான பதிவை வைத்துள்ளதென்றே சொல்லலாம். துடிப்பான செயற்பாட்டாளர்களின் ஒன்றிணைவு பல்வேறு ஆரோக்கியமான சமூகப் பணிகளையாற்றி வரலாற்றிதழில் பதிவிடவைத்துள்ளன. இப்படியானதொரு பதிவான இந்நிகழ்வு இரண்டாவது தடவையாக நடந்தது. இவ்வருடப் போட்டியில் எட்டு குறும்படங்கள் பங்கேற்றன. தொடரும் இம் முயற்சியானது புலப்பெயர் வாழ்வின் திரைக்கலை ஊக்குவிபு;புப் பணியாக அமைவதென்பது சிறப்பாகும். இதில் இணையும் அமைப்பாளர்கள், தன்னார்வத் தாராளர்கள், படைப்பாளிகள் செயல்வடிவமுடைய பணியூடாக சிறந்த முன்னுதாராணமாகத் திகழ்கிறார்கள். தாயகத் தாகம் - பிரான்சு தாயின் மடி - பிரான்சு கானல் - பிரான்சு 1 = 5 - பிரான்சு மெதுவாய் ஒரு விசம் - பிரான்சு தாங்கும் விழுதுகள் - நோர்வே எழுத்துப் பிழை - பிரான்சு இடிமுழக்கம் - பிரான்சு இதில் 'தாங்கும் விழுதுகள்' குறும்படம் போட்டி விதிமுறைகளை மீறி ஏற்கனவே வெளிவந்த படமென்பதைக் கவனத்திலெடுத்த நடுவர் குழு போட்டியிலிருந்து இப்படத்தை நீக்கியதாக அறிவித்தது. தவிர கனடாவிலிருந்து இடம் பெற்ற அம்மா என்ற குறும்படம் சிறப்புக் காட்சியாக இடம் பெற்றது. போட்டியில் கலந்து கொண்ட ஏழு குறும்படங்களுக்குமான சான்றிதழ்கள் முதலில் நல்லூர்ஸ்தானால் வழங்கப்பட்டது. பின்னர் பரிசளிப்பும் கௌரவிப்பும் நடைபெற்றன. பரிசுகள் சிறந்த திரைக்கதை - திரு அ. றோபேர்ட் (கானல்) சிறந்த ஒளிப்பதிவு - திரு டெசுபன் (இடிமுழக்கம்) சிறந்த படத் தொகுப்பு- திரு டெசுபன் (இடிமுழக்கம்) சிறந்த இசைத் தொகுப்பு - திரு சாராம் (கானல்) சிறந்த இயக்கம் - திரு விக்ரம் (மெதுவாய் ஒரு விசம்) சிறந்த நடிகர் - திரு சதாபிரணவன் (இடிமுழக்கம்) சிறந்த நடிகை - திருமதி லீனா ஜெயக்குமார் (தாயின் மடி) சிறந்த குணசித்திர நடிகர் - திரு அப்பு (எழுத்துப் பிழை) சிறந்த ஏணசித்திர நடிகை - திருமதி க புனிதமலர் (எழுத்துப் பிழை) சிறந்த குழைந்தை நட்சத்திரம் - செல்வன் பா. பிரபு (மெதுவாய் ஒரு விசம்) சங்கிலியன் விருது பணப் பரிசுகள் பெறும் சிறந்த படங்கள் மூன்றாவது பரிசு (தலா 500 ஈரோக்கள்) 1. மெதுவாய் ஒரு விசம் 2. எழுத்துப் பிழை இரண்டாவது பிரிசு (1000 ஈரோக்கள்) இடிமுழக்கம் முதற்பரிசு (1500 ஈரோக்கள்) கானல்

அடுத்தது >

Link to comment
Share on other sites

நல்ல விடயம் அநாமிகன் !

பட விபரங்களைத் தரும் பொழுது இயக்கியவர் எடுக்கப்பட்ட நாடு போன்ற விபரங்களையும் கதையின் சுருக்கம் போன்றவற்றையும் கூறும் போது நீங்கள் நேரில் அடைந்த அனுபவம் எங்களுக்கும் வாய்க்கும்.

அது என்ன போட்டிக்கு வந்தது அத்தனையும் பிரான்ஸில் (ஒரு கனடிய படத்தைத் தவிர்த்து) எடுத்தவையா?

மற்றைய நாடுகளில் குறும்படமே எடுப்பதில்லையா?

விபரம் தந்தால் மகிழ்வோம்.முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.