Jump to content

தமிழர் வாழ்வியல் கருவூலம் பாகம் இரண்டு


Recommended Posts

பொருட்பால் - அரசியல் - இடன் அறிதல் ( Knowing the Place , Du discernement du terrain.)

 

 

தொடங்கற்க எவ்வினையும் ; எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது.491

பகைவரை வளைத்தற்குத் (முற்றுகையிடுவதற்கு) தகுந்த இடத்தைத் தெரிந்து கொண்டாலன்றி எத்தொழிலையும் தொடங்கக் கூடாது . அவர் வலிமையற்ற சிறியர் என்று இகழவும் கூடாது .

எனது கருத்து :

இந்த " இடம் " எண்டிற சாமான் எவ்வளவு தூரம் ஒருத்தனை கவிண்டுகொட்டுண வைக்கும் எண்டு சதாம் விசையத்திலை பாத்தன் . ஒழுங்காய் அமெரிக்காவுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த சதாம் , சும்மா கிடக்காமல் பக்கத்திலை இருந்த குவைத்துக்குள்ளை காலை வைக்கைப்போய் , கடைசியிலை அந்தாளே பங்கருக்குள்ளை இருக்கவேண்டியதாய் போச்சுது .

Begin no work of war, depise no foe,
Till place where you can wholly circumvent you know.


Ne rien commencer avant d'avoir trouvé le terrain où (l’ennemi) puisse être enveloppé ! Ne pas le dédaigner !

முரண்சேர்ந்த மொய்ம்பி ன்அவர்க்கும்
அரண்சேர்ந்தாம் ஆக்கம் பலவும் தரும்.492

பகைவரைக்காட்டிலும் வலிமையுள்ள அரசர்க்கும் தக்க காவலையுடைய இடத்தை அடைதல் பல நலன்களை உண்டாக்கும்


எனது கருத்து:

ஒருத்தர் கேம் கேட்டால் அதை வெட்டியாடிற தில் உங்களுக்கு இருந்தாலும் , இடம் பாத்து அடிச்சால் ஆள் அரக்காது . இல்லாட்டில் உங்களுக்கு ஏழரைச்சனிதான் . இதைத்தான் எங்கடை பெரிசுகள் பருவத்தே பயிர் செய் எண்டும் சொல்லியிரிக்கினம் .

Though skill in war combine with courage tried on battle-field,
The added gain of fort doth great advantage yield.


A l'armée dont la force est dissimulée (à l'ennemi), l'appui d'une place fortifiée donne de nombreux avantages.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 146
  • Created
  • Last Reply

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின்.493

பகைவரை வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, போர்த் தொழிலைச் செய்தால் , வலிமை இல்லாதவரும் வலிமையடைந்து வெற்றி பெறுவர் .

எனது கருத்து :

இதுக்கு செரியான உதாரணம் உலகத்திலை இருக்கிற விடுதலை இயக்கங்களின்ரை போராட்ட முறையான கெரில்லாத் தாக்குதல்தான் . குறைஞ்ச மனிதவளத்தோடை இடம்பாத்து அடிக்கிறது . அதிலை நாங்கள் மாஸ்ரர் டிக்கிறி செய்தனாங்கள் கண்டியளோ.

E'en weak ones mightily prevail, if place of strong defence, They find, protect themselves, and work their foes offence.

Même une faible armée acquiert la force de vaincre, si elle se fait protéger et combat l'ennemi sur unterrain reconnu propice.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 494

பாதுகாப்பாயுள்ள இடத்தைப் பொருந்தி நின்று போர் செய்வாராயின் , அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தைக் கைவிடுவர் .

எனது கருத்து :

ஒருத்தரை அடிக்கமுதல் அவற்றை வேலையளை புலன்ஆய்வு செய்து முற்றுகை இட்டால் ஆள் சரண்டர் ஆகவேண்டியதுதான் .

The foes who thought to triumph, find their thoughts were vain,
If hosts advance, seize vantage ground, and thence the fight maintain.


Les Rois) qui ont choisi leur position et attaquent, couverts par une place fortifiée, font perdre à l'ennemi, l'espoir de vaincre.

Link to comment
Share on other sites

நெடும்புனலுள் வெல்லும் முதலை;
அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற.495

முதலை ஆழமுள்ள நீர்நிலையில் பிற உயிர்களை வெற்றி கொள்ளும் .அந்நீர் நிலையை விட்டு அது நீங்குமாயின் அம்முதலையையை பிற உயிர்கள் வென்று விடும்.

எனது கருத்து:

உண்மைதான் கண்டியளோ . உலகத்திலை இருக்கிற சர்வாதிகாரியளுக்கு அவையின்ரை அடிபொடியள்தான் பலம் . எங்கை ஒருநாள் சனத்தோடை சனமாய் நிக்கச்சொல்லுங்கோ , அடிச்சே கொண்டுபோடுவங்கள் , கொலனல் கடாபிக்கு நடந்தமாதிரி .

The crocodile prevails in its own flow of water wide,
If this it leaves, 'tis slain by anything beside.


Dans une eau profonde, le crocodile triomphe de tous (les êtres vivants); s'il s'en écarte (tous les êtres vivants) ont raison de lui.

கடல்ஓடாக் கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து. 496

நிலத்தில் இயங்கும் வலிமையான சக்கரங்களையுடைய தேர்கள் கடலில் ஓடமாட்டா; கடலில் ஓடும் கப்பல்கள் பூமியில் ஓடமாட்டா .

எனது கருத்து :

புகழ் எண்ட போதையிலை கற்பனையான விசயத்தை உண்மை எண்டும் , உண்மையான விசயத்தை கற்பனை எண்டும் முடிவுகட்டி , காரியத்திலை இறங்கி கவிண்டு கொட்டுண்டு போன ஆக்களை நான் கன இடத்திலை பாத்திருக்கிறன் .

The lofty car, with mighty wheel, sails not o'er watery main,The boat that skims the sea, runs not on earth's hard plain.

Les grands chars qui ont des roues puissantes pour rouler sur terre pleine ne peuvent rouler sur l'océan, de même les vaisseaux qui parcourent la mer ne peuvent voyager sur terre.

Link to comment
Share on other sites

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா, எஞ்சாமை எண்ணி

இடத்தால் செயின். 497

குறைவற ஆராய்ந்து, தமக்கு ஏற்ற இடத்தோடு பொருந்தச் செய்வாராயின் அரசர்க்குத் தமது மனத்திண்மையே அன்றி வேறு துணை வேண்டுவதில்லை .

எனது கருத்து :

இது ஒருவகையிலை ஒருத்தரை பப்பாவிலை ஏத்திறமாதிரி . ஏனெண்டால் ஒருத்தரை விழுத்த அஞ்சாமை எண்டிற பயப்பிடாத குணம் மட்டும் காணாது . கடைசிவரை உயிரைகொடுக்கிற படைத்தளபதியள் வேணும் . அவையளை எதிரி விலைக்கு வாங்கீட்டால் கதை கந்தல் கண்டியளோ .

Save their own fearless might they need no other aid,
If in right place they fight, all due provision made.


Celui qui engage la bataille, après avoir arrêté son plan sur tous les moyens de combattre l'ennemi et avoir bien choisi ses positions, n'a pas besoin de secours autre que sa propre valeur.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 498

பகைவன் சிறுபடையுடையவனாயினும் தக்க இடத்தில் பொருந்தியிருந்தால் பெரும்படையுடைய அரசன் தன் முயற்சியில்தோல்வியடைவான் .

எனது கருத்து :

இந்தக் குறள் இந்தக்காலத்திலை எடுபடாது . எப்பிடியெண்டால் நாங்கள் சிங்களத்தோடை ஒப்பீட்டளவிலை சிறிய படைதான் . ஏன் வெல்லாமல் போனம் ?? ஏனெண்டால் இண்டைக்கு உலகம் எண்டது கிராமமாய் போச்சுது .

If lord of army vast the safe retreat assail
Of him whose host is small, his mightiest efforts fail.


Celui qui a une puissante armée, s'il va combattre chez lui un roi, qui n'a qu'une faible armée, perd sa réputation, grâce à celui-ci.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499

அரணின் வலிமையும் ஆற்றலும் இல்லாதவராயினும் அம்மாந்தரை அவர்கள் வாழுகின்ற இடத்தில் சென்று தாக்குதல் இயலாது .

எனது கருத்து:


சிவசத்தியமாய் ஐயன் என்ன சொல்ல வாறியள் ??? போரியலிலை அரிச்சுவடியே சிங்கத்தின்ரை குகைக்குள்ளை போய் ஹாய் மச்சான் எண்டு கேக்கிறதுதானே போர் ?? நிண்ட இடத்திலை நிண்டு கொண்டு எப்பிடி ஐயன் போர் செய்யிறது ??

Though fort be none, and store of wealth they lack, 'Tis hard a people's homesteads to attack!

Il est difficile d'attaquer chez elles, des troupes ennemies, même si elles n'ont pas la force de résister et une fortresse indestructible.

 

Link to comment
Share on other sites

கால்ஆழ் களரில் நரிஆடும் ; கண்ணஞ்சா
வேல்ஆள் முகத்த களிறு. 500

வேல் வீரர்களைக் கண்டு அஞ்சமால் எதிர் நின்று தாக்கியழித்த யானையாயினும், கால் அழுந்தி விடும் சேற்று நிலத்தில் அது சிக்கிக்கொண்டால் அதனை நரியும் கொன்று விடும் .

எனது கருத்து :

யானை ஏலாமல் படுத்திருந்தால் சுண்டெலியும் யானைக்கு கிட்டப் போய் ரெண்டு கடி கடிச்சு , ஹவ் யூ மச்சான் எண்டு கேக்குமாம் .

The jackal slays, in miry paths of foot-betraying fen, The elephant of fearless eye and tusks transfixing armed men.

L'éléphant fougueux qui n'obéit pas à son connac et fait intrépidement face à une multitude armée de javelles, est à la merci d'un chacal, s'il s'enfonce dans un terrain bourbeux.

Link to comment
Share on other sites

பொருட்பால் - அரசியல் - தெரிந்து தெளிதல் ( Selection and Confidence , S’éclairer après expérimentation. 501 -510)

 

அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும். 501

ஒருவனை அறம் , பொருள் , இன்பம் , உயிர் பொருட்டால் அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையிலும் ஆராய்ந்து தக்கவனாயின் அவனை நம்புதல் வேண்டும் .

எனது கருத்து:

இந்தக்குறளை படிக்கேக்கை எனக்கு ஒரு விசயம் ஞாபகத்துக்கு வருகுது . அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் இந்த நாலையும் வெண்ட ஒரு படையணி எங்களிட்டை இருந்தது . உலகத்தையே திரும்பி பாக்க வைச்சம் . ஏன் நாங்கள் தோத்துபோனம் ??? எனக்கு இண்டுமட்டும் விளங்கேலை !!!!!!!!

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.


Que celui qui a satisfait aux quatre épreuves suivantes: l'amour de la vertu, l'or. la luxure et la crainte pour la vie, soit choisi (par le Roi).

 

 

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் சுட்டே தெளிவு. 502

நல்ல குடியில் பிறந்து , குற்றங்களில் இருந்து நீங்கிப் பழிச்செயலைச் செய்ய அஞ்சி நாணுகின்றவனையே நம்பி வேலையைக் கொடுக்கலாம் .

எனது கருத்து:

இந்தக்காலத்திலை இப்பிடி ஒருத்தரையும் நான் காணேலை . பதவிக்கு தெரிவு செய்யிறதே நல்ல முசுப்பாத்தியாய் போச்சு . பந்தம் பிடிக்கிறவையும் சிங்சக் அடிக்கிறவையும் தான் இண்டைக்கு பதவியளிலை இருக்கினம் கண்டியளோ .

Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.


Que le choix s'arrête sur celui qui sst de bonne naissance, dégagé de vices, plein de retenue et qui craint le déshonneur.

 

 

Link to comment
Share on other sites

அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இண்மை அரிதே வெளிறு. 503

அறிவுக்குரிய நூல்கள் பலவற்றைப் படித்துக் குற்றங்கள் இல்லாமல் இருப்பவரிடத்திலும் ஆராய்ந்து பார்த்தால் சில அறியாமைகள் இருக்கும்

எனது கருத்து:

இதை இப்படியும் சொல்லலாம் " படிச்ச கோமாளியள் " எண்டு . சிலபேரைபாத்தியள் எண்டால் பெரியபட்டங்களெல்லாம் பின்னாலை கொழுவி , எந்தநேரமும் தங்களைபற்றி கதைக்காட்டிக்கு அவைக்கு திண்ட சாப்பாடு செமிக்காது . ஆனால் அவையின்ரை நடவடிக்கையளை வடிவாய் பாத்தியள் எண்டால் , எலிமெண்டறி பிள்ளையள் அளவுக்கு படு கேவலமாய் இருக்கும் .

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.


Même parmi ceux qui ont une rare instruction, et qui sont dégagés de tous les défauts, (ci dessus spécifiés), il est rare de ne pas trouver de sots, si l'on se livre à un examen minutieux.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504

ஒருவருடைய குணம் குற்றம் ஆகிய இரண்டையும் ஆராய்ந்து , அவற்றுள் மிக்கது எதுவோ அதனால் அவரை நல்லவர் என்றோ தீயவர் என்றோ கொள்ள வேண்டும்.

எனது கருத்து:

இப்படியான ஆக்கள் இந்தக்காலத்திலை இல்லை எண்டே சொல்லலாம் கண்டியளோ . ஒருத்தன் கொஞ்சத் நல்லாய் பிரதிபலிக்கமாய் இருக்கிறது எங்கடையாக்களுக்கு ஒத்து வராது பாருங்கோ . ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினால் காணும் அவன்ரை நல்ல பக்கத்தை விட்டுட்டு இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவனை ஒருவழி பண்ணி போடுவங்கள் எங்கடையாக்கள் . இதாலை நல்லவன் நல்லது செய்ய யோசிப்பான் . அதாலை இந்தக் குறள் இப்ப உள்ள நிலமையிலை சரிப்பட்டவராது எண்டுதான் நான் நினைக்கிறன் .

Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.


Peser les qualités et les défauts d'un homme Choisir d'après ce qui l'emporte.

 

Link to comment
Share on other sites

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505

ஒருவருடைய பெருமையை அறிவதற்கும் சிறுமையை அறிவதற்கும் அவர் செய்யும் செயலே தக்க உரைகல்லாகும்.

எனது கருத்து:

இதிலை ஐயன் சொல்லவாறதிலை எனக்கு உடன்பாடில்லை பாருங்கோ . ஒருத்தன் நல்லவனோ கெட்டவனோ எண்டு அறியிறது சந்தர்ப்பமும் சூழ்நிலையும் , அவனை மற்றவை பாக்கிற கண்ணோட்டத்தை பொறுத்தே ஒழிய ,தனிய செயலை மட்டும் தான் இல்லை பாருங்கோ . தனிய செயலை மட்டும் தான் பாக்கிறதெண்டால் சேணங் கட்டின குதிரையாய் தான் இருக்கேலும் .

Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.


Ce sont les propres actes d'un homme qui sont la pierre de touche de sa bonne et de sa mauvaise réputation.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்றுஅவர்
பற்றுஇலர் நாணார் பழி.506

சுற்றம் இல்லாதவரை அரசன் நம்பித் தெளியக்கூடாது. அவர் உலகில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு அஞ்சமாட்டார் .

எனது கருத்து:

இந்தக் குறளை பாக்கிற நேரம் எனக்கு தமிழகத்திலை இப்ப இருக்கிற அரசியல் நிலமையள்தான் ஞாபகம் வருகிது . ஒரு கட்சியிலை இந்தக் குறளுக்கு கருத்துரை எழுதின முக , தலைவர் . மற்றப்பக்கம் உறவுகள் சுற்றங்கள் அற்ற ஜெ தலைவி . இதிலை யாருடைய செயல்களால் தமிழகம் நிமிர்ந்தது ???? ஒருசெயலை செய்வதற்கு எப்பவுமே சுற்றம் உறவுகள் தடையாகத் தான் இருக்கும் எண்டு நினைக்கிறன் . அதோடை பழிக்கு அஞ்சினால் எப்படி ஒரு செயலை செய்யிறது ????

Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.


Renoncer à choisir ceux qui n'ont pas de parents: ils n'ont aucune attache avec le monde, donc ils ne craignent pas le déshonneur.

 

Link to comment
Share on other sites

காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.507

அன்புடமை ஒன்றையே பற்றுக் கோடாக கொண்டு அறியவேண்டுவனவற்றை அறியாதாரை நம்புதல் அரசனுக்குத் துன்பத்தையே விளைவிக்கும் .

எனது கருத்து:

இதுக்கு என்னத்தைச் சொல்ல .........  ஒரு பதவியை எடுக்கிறதுக்கு எவை திறமை அடிப்படையிலை வருகினம் ??? எல்லாம் காசுகளை பின்னாலை தள்ளியும் , றெக்கமண்டேசனுகளாலையும் தானே வருகினம் பாருங்கோ . அப்பிடி பதவிக்கு வாறவையளாலை பதவிக்கு பெருமை இல்லை கண்டியளோ , அவமானம் தான் மிச்சம் .

By fond affection led who trusts in men of unwise soul,Yields all his being up to folly's blind control.

Choisir ceux qui ne savent pas ce qu'il faut savoir, uniquement à cause de l'affection qu'il a pour eux, conduit ( le Roi ) à faire toutes les sottises

தேராண் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508

தான் அறியாத ஒருவனை ஆராய்ந்து பாராமல் நம்பிய அரசனுக்கு அத்தெளிவு பின்வரும் தலைமுறையிலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும்

எனது கருத்து:

இது எல்லாம் இப்ப சரிவராது ஐயன் . கேடுகெட் ட காசும் காலமும் சேர்ந்தால் ஒரு கோமாளியை கூட பதவியிலை வைக்கலாம் . உங்கடை காலத்திலை சனங்கள் நல்லதுகளாய் இருக்கலாம் ஆனால் இப்ப அப்பிடியில்லை . சனங்கள் இப்படியான கோமாளியளின்ரை துன்பங்களுக்கு பழகிப் போயிட்டுதுகள்

Who trusts an untried stranger, brings disgrace,Remediless, on all his race.

Le choix de quelqu'un qui est étranger à soi sous tous les rapports, crée même à la postérité des maux irréparables.

Link to comment
Share on other sites

தேறற்க யாரையும் ; தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509

அரசன் எவரையும் ஆராய்ந்து பாராமல் தெளிதல் கூடாது .ஆராய்ந்து தெளிந்த பின்னர் அவர்பால் ஒப்படைக்கும் பணிகளை நம்பித் தெளிதல் வேண்டும் .

எனது கருத்து:

எப்பவும் வெளுத்ததெல்லாம் பால் எண்டு இருக்காமல் நாலுவளத்தாலையும் யோசிச்சு ஒருத்தரை வேலைக்கு எடுக்கவேணும் எண்டும் , பேந்து அவையிலை ஐமிச்சப்படக்கூடாது எண்டும் சொல்லுறியள் . நல்லவிசையம்தான் . ஆனால் ஐயன் இப்ப நம்பினவனுகே ஆப்படிக்கிற காலம் கண்டியளோ . என்னதான் இருந்தாலும் ஒரு கண் எப்பவும் முழிப்பாய் இருக்கவேணும் பாருங்கோ .

Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide


Né jamais choisir avant d'avoir éprouvé. Ne choisir que celui qui a satisfait à l'épreuve.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510

ஒருவனை ஆராயாமல் நம்புதலும் , ஆராய்ந்து நம்பிக்கை வைத்தவனிடம் சந்தேகப்படுதலும் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும் .

எனது கருத்து:

என்னைபொறுத்தவரையிலை ஒருத்தரை என்னதான் ஆராஞ்சு பதவிக்கு எடுத்தாலும் , அவருக்குமேலை அவருக்குத் தெரியாமல் ஒருகண் இருக்கத்தான் வேணும் பாருங்கோ . இல்லாட்டில் நாங்கள் இருக்கமாட்டம்.


Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.


Choisir sans épreuve préalable et suspecter celui qui a été choisi, après épreuve : tous les deux conduisent à des malheurs irréparables.



 

Link to comment
Share on other sites

பொருட்பால் - அரசியல் - தெரிந்துவினையாடல் ( Selection and Employment Selection d’employes 511-520)

 

 

employee-screening-and-selection-68.jpg

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 511

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து , நல்லதைச் செய்யும் தன்மை உடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும் .

எனது கருத்து :

இந்தக்காலத்திலை ஒருத்தரிட்டையும் நூறுவீதம் நம்பி அலுவலைக் குடுக்கேலாது கண்டியளோ . எப்ப எங்கை அலுவலைக் குடுத்த உங்களுக்கே ஆப்படிப்பங்கள் எண்டு தெரியாது . எப்பவும் ஒரு மூண்டவது கண் அலுவலைக் குடுத்தவையிட்டை வைக்கவேணும் எண்டிறது இந்தக்காலம் ஐயன் . இதை நாங்கள் எங்கடை தேசியவிடுதலைப் போராட்டத்திலை கண்டு தெளிஞ்சிட்டம் .

Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.


N'employer à son service que celui qui (dans un cas déterminé) a pesé le pour et le contre et qui a eu le bon esprit de s'arrêter au moyen susceptible d'assurer !e succès.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் , தொடருங்கள் .

Link to comment
Share on other sites

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.512

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து , அவற்றால் வளத்தை ஏற்ப்படுத்தி , மேற்கொண்டு இடையூறுகளை நீக்க வல்லவனே செயலைச் செய்வானாக.

எனது கருத்து :

ஊரிலை பெரிசுகள் சொல்லுவினம் , " முயல் பிடிக்கிற நாயை மூஞ்சையிலை தெரியுமெண்டு " . ஒருதன் எப்பிடி வேலை செய்யவேணுமெண்டால் , வருவாயை பெருக்குறதோடை இல்லாமல் அதிலை வாற பிரச்சனையளையும் வெட்டியாடிற தில் உள்ளவனாய் இருக்கவேணும் . இப்ப வேலைக்குவாறவை தாங்கள் படிச்ச படிப்புகளை கிளிப்பிள்ளைமாதிரி சொல்லி , அனுபவப்பட்டவங்கள் சொல்லுறதை கேக்கிற நிலமையள் இந்தக்காலத்திலை குறைஞ்சு போச்சு பாருங்கோ .

Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand


Que celui qui a la capacité d'élargir les moyens des revenus, d'augmenter ainsi la prospérité (du Royaume), de découvrir et d'annihiler les obstacles qui l'empêchent serve (le Roi).

 

Link to comment
Share on other sites

அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குஉடையான் கட்டே தெளிவு.513

அன்பு , அறிவு , ஐயம் இல்லாமல் தெளியும் தெளிவு , அவா இல்லாமை ஆகிய இந்நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனை , செயல்களை ஆற்றுமாறு தெளியலாம் .

எனது கருத்து :

ஐயன் நல்ல விசயத்தைத் தான் சொல்லியிருக்கிறியள் . ஆனால் பாருங்கோ , இந்த பதவி நாற்காலி எண்டது எந்த ஒரு நல்லவனையும் ஒரு ஆட்டு ஆட்டித்தான் விடும் . எல்லாரும் பதவிக்கு வரும் வரைக்கும்தான் பம்முவினம் பேந்து அவையின்ரை கால் நிலத்திலை இருக்காது . மிதப்பாய்த்தான் திரிவினம் . எத்தினை அரசியல்வாதியளையும் , பெரிய பதவியளிலை இருக்கிறவையையும் நாங்களும் நாளந்தம் பாக்கிறம்தானே !!

A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.


Il est intelligent de ne choisir à son service que celui qui possède d'une manière parfaite les quatre qualités que voici: l'affection, l'intelligence, la décision et l'absence de cupidité.

Link to comment
Share on other sites

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர். 514

எல்லா வகையாலும் தெளிந்த பிறகும் அவ் வினையின் இயல்பால் வேறுபடும் மாந்தர் உலகில் பலராவர் .

எனது கருத்து :

ஆரோ உங்களுக்கும் ஆப்படிச்சு போட்டான் போலை கிடக்கு . இப்பிடி நொந்துபோய் சொல்லுறியளே ஐயன் ?? உங்கடை காலத்திலையும் இப்பிடியான ஆக்கள் இருந்திருக்கிறாங்கள் எண்டதை ஒத்துக் கொள்
ழு
றியள் தானே ஐயன் ??

Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!


Nombreux sont ceux qui. après avoir satisfait à toutes les épreuves, après avoir été chosis pour servir, changent de caractère dans l'exercice de leurs fonctions.

Link to comment
Share on other sites

அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று. 515

செய்யும் செயலை நன்கு அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்பவனைத் தவிர இவன் அன்பிற் சிறந்தவன் என்று யாரும் வேலை தரக்கூடாது.

எனது கருத்து :

உங்கடை கருத்திலை நான் உடன்பட்டாலும் , கூலிக்கு மாரடிக்கிறவையிட்டை எப்பிடி நாங்கள் உண்மையான விசுவாசத்தை எதிர்பார்க்கேலும் ???

No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.


Ne peut être employé que celui qui connaît les devoirs de sa charge et s'efforce de s'en acquitter avec patience et non celui qui a seulement de l'affection (pour l'employeur).

 

Link to comment
Share on other sites

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 516

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து செய்யும் செயலையும் ஆராய்ந்து தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து அவனிடம் ஒப்புவிக் வேண்டும்.

எனது கருத்து :

இதைத்தான் "பெரிசுகள்சொல்லுறவை காலம் , இடம் , பொருள் , ஏவல் பாத்து ஒரு அலுவலை செய்யவேணும்" எண்டு . ஆனால் இப்பிடியெல்லாம் யோசிச்சு வலு கிளியறாய் கிட்டமுட்ட 2 சந்ததியிளை துலைச்ச எங்கடை போராட்டம் ஏன் ஐயன் தோத்தது ???

Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed.


D'abord examiner la capacité de l'homme et la nature du service, puis choisir le moment propice à l'employer; enfin charger l'homme ainsi éprouvé, du service.

 

Link to comment
Share on other sites

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 517

' இந்தத் தொழிலை இக்காரணங்களால் இவன் முடிப்பான் ' என்று ஆராய்ந்த பிறகு அத்தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் .

எனது கருத்து :

என்னதான் ஒருத்தர் ஆள் பொருள் படையணியளோடை ஒரு வேலையிலை இறங்கினாலும் அந்தவேலை நடைமுறை யதார்த்தோடை ஒத்து ஓடுதா எண்டும் பாக்கவேணும் . அப்பிடி ஒத்து ஓடாத எந்த வேலையும் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை .

'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand;


Se convaincre d'abord qu'un tel a l'aptitude de remplir telle charge, par tel moyen approprié ; lui confier ensuite la responsabilité de la charge.

 

Link to comment
Share on other sites

வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரியன் ஆகச் செயல். 518

இவன் இந்த வேலைக்குத் தகுந்தவன் என்று ஆராய்ந்து கண்டபிறகே அவனை அத்தொழிலுக்கு உரியவனகச் செய்யவேண்டும் .

எனது கருத்து :

இது எங்கை ஐயன் நடக்குது ?? கன இடங்களிலை பொம்மையள்தான் பதவியிலை இருக்கு . ஒருத்தரும் தன்ரை பதவியின்ரை அதிகாரத்தை செய்யுறதுக்கு அரசியலும் காசுமல்லோ குறுக்காலை நிக்கிது !!!!

As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.


Jugez-vous, après examen, qu'un tel a les aptitudes à remplir telle charge, n'hésitez pas à le promouvoir à cet emploi.

Link to comment
Share on other sites

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறாக
நினைப்பானை நீங்கும் திரு. 519

எப்போதும் தன் தொழில் முயற்சி உடையவரது நட்பினைப் பாராட்டாமல் வேறாக நினைப்பவனிடமிருந்து செல்வம் நீங்கும் .

எனது கருத்து :

இதுதானே எல்லா இடத்திலையும் நடக்குது !!! இதை நாங்கள் " நண்டு குணம் " எண்டும் சொல்லுவம் . ஒருத்தன் தன்ரை வேலையை சரியா செய்தால் , ஒண்டில் அவனை " துரோகி " எண்டு சொல்லுவம் அல்லது " ஒட்டுக்குழு " எண்டும் சொல்லுவம் .

Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.


La Fille de Dieu (déesse de la Fortune) se sépare du Roi qui suspecte la conduite irréprochable de celui qui s'efforce de bien faire son service.

Link to comment
Share on other sites

நாடோறும் நாடுக மன்னன் ; வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு. 520

தொழில் செய்கின்றவன் தன் கடமையைச் சரிவரச் செய்வானாயின் உலகம் கெடாது .ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனைக் கவனித்து வரவேண்டும் .

எனது கருத்து :

அதாவது " அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி " எண்டு சொல்லிறியள் . ஆனால் பாருங்கோ பதவியிலை இருக்கிறவை பிழையளை விட்டுக்கொண்டு , கீழை இருக்கிறவை ஒழுங்குமுறையாய் இருக்கவேணும் எண்டு நினைக்கிறதுதான் இப்ப உள்ள நடைமுறை பாருங்கோ .

Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.


Si le fonctionnaire ne dévie pas de ses devoirs, le monde ne déviera pas de sa marche normale. Que le Roi surveille tous les jours et étroitement le fonctionnaire!


 

Link to comment
Share on other sites

பொருட்பால் - அரசியல் - சுற்றம் தழால் , Cherishing one's Kindred , S'attacher aux parents ,520 -530)

 

 

jeune-pousse.jpg

 

பற்றுஅற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 521

ஒருவர் செல்வத்தை இழந்து வறியவனாய் வாழும் போதும் தமக்கும் அவனுக்கும் உள்ள உறவுகளைக் கொண்டாடும் இயல்புகள் சுற்றத்தாரிடமே உள்ளன .

எனது கருத்து :

இண்டையான் திகதியிலை இருக்கிற சுற்றங்கள் எல்லாம் ஒருத்தனின்ரை பறியிலை எவ்வளவு இருக்கு எண்டு பாத்து பழகிற ஆக்கள் . ஏன் பெத்த அம்மாவே காசு உள்ள மகனிட்டை ஒருமாதிரியும் , காசு இல்லாத மகனிட்டை ஒரு மாதிரியும் பழகிற கலிகாலம் . இதிலை நாங்கள் கஸ்ரப்பட்ட நேரம் எங்கடை சொந்தங்கள் எங்களைப் பத்தி நல்லாய் கதைப்பினம் எண்டு எதிர்பார்க்கிறது பிழையானவேலை கண்டியளோ .

When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.


Témoigner l'ancien attachement, à celui qui est abandonné par la fortune ne se rencontre que chez les parents.

Link to comment
Share on other sites

விருப்புஆறாச் சுற்றம் இயையின் அருப்புஆறா
ஆக்கம் பலவும் தரும். 522

அன்பு அழியாத நல்ல சுற்றம் ஒருவனுக்கு வாய்க்குமாயின் அஃது அவனுக்கு குறைவில்லாத செல்வங்கள் பலவற்றையும் தரும்.

எனது கருத்து :

இப்பிடியான சீவியம் முந்தி ஒருகாலத்திலை இருந்தது உண்மைதான் . ஆனால் இப்ப ஒருத்தன் கொஞ்சம் சறுக்கினாலும் ஆப்படிக்கத்தான் சனங்கள் ஒருத்தனை சுத்தி இருக்கினம் பாருங்கோ .

The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows


Avoir une parenté dont l'affection n'est pas brisée, donne de nombreux biens de plus en plus productifs.

Link to comment
Share on other sites

அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் துஅற்று. 523

சுற்றத்தாருடன் மனம் கலந்து பழகாதவனுடைய வாழ்வு குளப்பரப்பு கரையில்லாமல் நீர் நிறைந்தாற்போல வீணே அழியும்.

எனது கருத்து :

சொந்தபந்தங்களோடை வேணும் விளையும் எண்டு பழகாதவனின்ரை சீவியம் , கரையில்லாத குளத்திலை தண்ணி இருக்கிறமாதிரி வேஸ்ற் எண்டு சொல்லுறியள் . நல்ல விசையம் , ஆனால் ஒரு பக்கம் மட்டும் அப்பிடி நடந்து என்ன பிரையோசனம் ?? கேணைப்பயல் எண்டு நினைக்கமாட்டினமோ ஐயன் ??

His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.


La vie de celui qui ne chérit pas sincèrement ses parents, ressemble à un étang sans berges qui se remplit (d'eau.)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.