Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது


SUNDHAL

Recommended Posts

இந்திய பெண் எழுத்தாளர் மீனா கந்தசாமி, காஸ்மீரில் இந்திய இராணுவம் பெண்களுக்கு செய்யும் கொடுமைகள் பற்றி ஒரு கட்டுரையை இந்த நேரத்தில் எழுதி விழிப்புணர்வை கொண்டுவர முயன்றுள்ளார்:

 

http://m.outlookindia.com/story.aspx?sid=4&aid=283463

 

ஈழப்பெண்கள் இன்றைய மற்றும் கடந்த கால அவலங்களை பற்றியும் நாம் முறையாக எடுத்து கூறவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply

யாழ் மருத்துவமனைக்குள் புகுந்து இந்திய அட்டூழியப்படை மருத்துவர்களையும், தாதிமார்களையும்கூட கொலை செய்தது. இது சந்தேகத்துக்கு இடமற்ற ஆவணமாக இருக்கிறது. அண்மையில்கூட நினைவேந்தலைச் செய்தார்கள் மருத்துவமனையில்.

 

கவலைப்பட்டார்களா வட இந்தியவாலாக்கள்?

Link to comment
Share on other sites

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையது அல்ல

Link to comment
Share on other sites

அதற்காக மிகக்கொடுரமாக சித்ரவதை பட்டு இறந்த ஒரு மாணவியை வைத்து ஆசியால் செய்வது ஏற்புடையது அல்ல

 

நிச்சயமாக இல்லை. ஆனால் அதைத்தான் அவர்கள் செய்தார்கள்.

Link to comment
Share on other sites

இந்தியாவில், உலகத்தின் பெரிய ஜனநாயக ஆட்சியிலும், ஆப்கானிஸ்தானின் தலிபானின் ஆட்சியிலும்,  பெண்கள் பலவேறு கொடுமைக்கும் உள்ளாகின்றார்கள்.

 

எனவே ஆட்சி முறையில் தவறு இல்லை, ஆளுபவர்களைலேயே தவறு !

Link to comment
Share on other sites

இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த நாடகம். ஆளும் கட்சிகளின் மாணவர்கள் இத கையில் எடுத்து  போராட்டம் என்ற பேரில் குப்பை கொட்டுகிறார்கள். இதுவரை இந்தியாவில் கற்பளிப்பே  நடக்கலையா?  சமீப காலத்தில் பழங்குடிப் பெண்களை இந்திய பாது காப்பு படைகள் கற்பளித்த போது இந்த மாணவர்கள் எங்கே போனார்கள்?

Link to comment
Share on other sites

ஒரு நியாயமான நாடு என்றால் மன் மோகன் சிங்  பதவியை துறக்கவேண்டும். அது நடக்காது.

 

 பெண்கள் நியாயம் வேண்டும் என்றால், அவர்களே யாரையாவது வைத்து சோனியாவின் குடும்பத்தில் ஒருவர் மீது பாலியல் வன்புணர்வை செய்தால் உண்மையான மாற்றங்கள் நிகழலாம்  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவியை... பாலியல் வன்புணர்செய்து விட்டு, ஓடும் பேரூந்தில்... இருந்து தள்ளி விட்டதை... எந்த மனிதனும், செய்யத் துணியாத செயல். குற்ற வாளிகளின்... ஆணுறுப்பில், மன்மோகனையும், சோனியா குடும்பத்தினரையும் விட்டு....   யாழ்ப்பாண முறைப்படி தயாரித்த‌ மிளகாய்த்தூள் தடவுவிக்க‌ வேண்டும்.

Link to comment
Share on other sites

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search


2. Sri Lanka:

 

a. 4 children under 16 are raped daily, 24 June 2012,
http://www.sundaytimes.lk/120624/news/4-children-under-16-are-raped-daily-4170.html

 

b. Colombo high-end perverts worse than touts, beach boys — foreigners, 26 October 2012,
http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=64661

 

c.Pl let me know if anybody finds the following news in English:
மண்டைத்தீவில் நான்கே வயதேயான சிறுமி பாலியல் வண்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87050/language/ta-IN/article.aspx

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த  அப்பாவி பெண் பிள்ளைக்கு அஞ்சலிகள்.

 

மற்றும்படி

இசையின் கருத்தே  எனதும்.

Link to comment
Share on other sites

புதுடில்லி: டில்லியில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட மருத்துவ மாணவி உயிரிழந்த பிறகு அவரை பற்றி தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. டில்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, மாணவியை சந்தித்த அவரது பெற்றோர், சகோதரனிடம், தான் வாழ விரும்புவதாகவும், குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர விரும்புவதாகவும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்னரா என்று கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவ சிகிச்சை பெற்று வந்த போது, தனது பெற்றோருடன் சைகை மூலம் பேசி கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. டில்லியில் மாஜீஸ்திரேட்டிடம் இரண்டு முறை வாக்குமூலம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதனை பார்த்த டாக்டர்கள், அந்த பெண்ணை தைரியசாலி என பாராட்டியுள்ளனர்.

Dinamalar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த இந்த மாணவியின், பெயரால்....
ஈழத்தில்... ராஜீவின் அமைதிப்படை செய்த குற்றங்களுக்கும், முள்ளிவாய்க்கால் போரின் போதும், அதற்குப் பின்... நேற்றும், இன்றும்... இந்திய ஆசீர்வாத்தத்தால்... தொடர்ந்து கொண்டிருக்கும்... ஈழ உறவுகளுக்கும், விடிவு கிடைக்கும் முகமாக...
மன்மோகன் சிங், சோனியா காங்கிரஸ் ஆட்சியை.. டெல்லிப் போராட்டங்கள் வெட்கம் கொள்ள வைத்து, புற முதுகிட்டு ஓட வைக்க வேண்டும்.
"அரசன் அன்றறுப்பான், தெய்வம் நின்றறுக்கும்." இப் பழமொழி, ஈழத் தமிழன் வாழ்வில் நிஜமாக நடக்க வேண்டும். இதை... என் கண்ணால்... காணவேண்டும்.

Link to comment
Share on other sites

1. India: Petition: Pl sign the petition and pl ask your friends and family to do same:

http://www.causes.com/causes/807089-stop-gangrape-jago-re-india/actions/1716592?query=india&rank=0&utm_campaign=search

 

அதற்குள் 19, 093 பேர் கையொப்பமிட்டுள்ளார்கள். இதுவே தமிழகத்திலுள்ள மாணவிக்கு நடைபெற்றிருந்தால் அல்லது ஈழத்து மக்களுக்கான கையொப்ப வேட்டையாக இருந்திருந்தால் இவ்வளவு நேரத்துக்கும் ஒரு 1000 தாண்டியிருக்குமா?

Link to comment
Share on other sites

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள்.இது எங்கு யாரால் நடத்தப்பட்டாலும் மிக உயர்ந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.தயவு செய்து இதுக்குள்ள அரசியலை கலக்க வேண்டாம்.

Link to comment
Share on other sites

மக்களே தயவு செய்து இதை அரசியல் ஆக்காமல் இதை வைத்து அரசியல் செய்யாமல் இது ஒரு சக சகோதரிக்கு ஒரு பெண்ணிற்கு நடந்ததாக எடுத்துக்கொள்ளும்படி அன்புடன் கேட்க படுகின்றீர்கள் எமக்கு அரசியல் செய்ய பல விடையங்கள் இருக்கும் போது மனிதாபினம் அற்று நடந்து கொள்ள வேண்டாம் என்று அன்புடன் கேட்டுகொள்கின்றேன்

நன்றி

 

இதை வைத்து நான் அரசியல் செய்யவில்லை. நானும் மனிதாபிமான ரீதியில் கையொப்பமிட்ட பின்னர் தான் இதை எழுதினேன்.

தமிழனாக இருந்தால் யாரும் கண்டுகொள்கிறார்கள் இல்லை. அதை நீங்கள் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் கிந்தியாவில் ஜகஜம் .. இந்த விடயம் இது ஏதோ கொஞ்சம்   மேல் தட்டு வர்க்கம்..இல்லையென்றால் இஞ்சி மரபா விக்கறவன் கூட போராட வரமாட்டான்.. இதெல்லாம் தினசரி நடந்திட்டுதான் இருக்கு

டிஸ்கி:

வீட்டில் புரோட்டா சாப்ப்பிட்டு தூங்குங்கப்பா..

Link to comment
Share on other sites

இந்தியாவில் கடந்த 2011-ம் ஆண்டில் மட்டும் 24 ஆயிரத்து 202 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
சுமார் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரையில் பாலியல் தொல்லைகளுக்கு உள்ளாகியிருப்பதாக தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
தலைநகர் டில்லியில் 18 மணி நேரத்துக்கு ஒரு பாலியல் வன்புணர்ச்சி நடக்கிறது. ஆனால் இந்த அனைத்து சம்பவங்களும் ஊடகங்களின் கவனத்தையோ அரசியல்வாதிகளின் கரிசனையையோ பெறுவது கிடையாது.
அப்படியே ஊடகங்களின் கவனம் கிடைத்தாலும் கூட அவ்வாறான சம்பவங்களுக்கு நீதி கிடைத்துவிடும் வாய்ப்புகளும் மிகக்குறைவு.
BBC .

- from fb -
 

Link to comment
Share on other sites

அந்த பெண்ணினுடைய தந்தை ஒரு கூலித்தொழிலாளி அப்பிடி இருந்தும் அவர் தனது மகளை படிக்க வைத்து மருத்துவ பீடத்திற்கு அனுப்பி இருகின்றார் ஆக மேல்வர்க்கம் என்கின்ற வாதம் இங்கு எடுபட்டு போகின்றது

கண்டிப்பாக இந்தியாவில் அதுவும் டெல்லியில் இது ஒரு தொடர்கதை இதுக்கொரு முற்றுப்புள்ளி வைக்கத்தான் போராட்டங்கள் நடைபெறுகின்றது ஆகவே அந்த போராட்டங்களுக்கு அதரவு கொடுக்க வேண்டியது எமது கடமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின்ட நண்பர்  ஸ்டெடஸ் ..?  இருவரும் நண்பர்கள் .. அர்த்த ராத்திரியிலும் எங்கிட்டாவது சுத்திட்டு திரியட்டும் அது நமக்கு கவலை இல்லை.. அதை பற்றி அவர்கள் கவலை பட்டு இருக்கணும் ..  டில்லி அரசாங்கம் கவலை பட்டு இருக்கணும்  இவுங்களுக்காக நீங்க மாய்ந்து மாய்ந்து குரல் கொடுத்தாலும் ..  ஒட்டுறதுதான் ஒட்டும் (இனம்)

டிஸ்கி:

மறுபடியும் இந்திகாரங்களிடம் "டமில் இலம்" என்று ஆரம்பியுங்களேன்..  ஆக்கியுளி ...கெமிக்களி.. சைக்காலிஜிக்களி... மெண்டலி....  "ராஜிவி காந்திஜீ" ஈஸ் என்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கு குட்டைப் பாவாடை அணிந்து செல்வதால் பாலியல் தொந்தரவுகள் அதிகரிக்கிறது: பாஜக எம்.எல்.ஏ.


டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 

குறிப்பாக சிறுமிகளை பலாத்காரம் சமூகச் சீர்கேடுகள் பெருகி வருகிறது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் அடையாளம் காணப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கிறது.

 

அதேசமயம், இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் எந்த சூழ்நிலையில் ஏற்படுகிறது என்பதையும் ஆராய வேண்டியிருக்கிறது.

 

அந்த வகையில், பள்ளிகளில் மாணவிகள் குட்டைப் பாவாடையை சீருடையாக அணிந்து வருவது, பாலியல் தொந்தரவு வழக்குகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. பன்வாரி லால் சிங்கால் கருத்து தெரிவித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக அவர் மாநில தலைமைச் செயலாளருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். அதில், ‘ஆழ்வார் நகரில் உள்ள பல இடங்களில் மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்கின்றனர் அல்லது பள்ளி பேருந்துகளுக்காக காத்திருக்கின்றனர். அப்போது குறும்பு மற்றும் கேலிப்பேச்சுக்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

 

இந்த நகரின் பல தனியார் பள்ளிகளில் குட்டைப் பாவாடைகளே சீருடையாக உள்ளன. பெண்களுக்கு எதிரான சமூக குற்றங்கள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, இத்தகைய சீருடைகள் தடை செய்யப்பட வேண்டும். அதற்குப் பதிலாக மாணவிகளுக்கு சல்வார் கமிஸ், பேண்ட்-சட்டைகளை சீருடையாக வழங்க வேண்டும். இது தீவிர சீதோஷ்ண நிலையில் இருந்தும்மாணவிகளை பாதுகாக்கும்’ என்று கூறியுள்ளார்.

 

நன்றி நக்கீரன்.

 

பா.ஜ.க  ஆக்களையும்.. இந்திய ஆண்களையும் பிறப்பு முதலே குட்டைப் பாவாடைகள் நிறைந்த பெண் பொம்மைகள் மத்தியில் வளர்த்தெடுத்து வந்தால்.. இந்தப் பிரச்சனை வராது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம்.. ஆண் - பெண் என்ற ஆழமான பால் பிரிவினையும்.... பெண் உடற்கூற்றியலில் பலவீனமானவள்.. கவர்ச்சியானவள் என்ற கருத்தியலை விதைக்கும் சினிமாவும்.. அரசியல்வாதிகளும்.. புராணங்களும்....இந்தியாவின் பிற்போக்கான கலாசாரப் பின்னணியுமே ஆகும். அத்தோடு சட்டத்தை சரியான வகையில் அமுலாக்காத நீதி நிர்வாகத்துறைகளும்.. பாலியல் அறிவு குறைந்த மாணவர் சமூகமும்..!

 

 

293970_10152384974795198_1989367738_n.jp

 

தமிழகத்தில் அண்மையில் பாலியல் வல்லுறவின் பின் கொல்லப்பட்ட இந்த தமிழ் மாணவி.. குட்டைப் பாவாடை.. அல்லது ஆண்களின் காமக் கிளர்ச்சியை தூண்டும்.. உடை என்பதன்  காரணமாகவா கொல்லப்பட்டார்...???!

 

இந்தியாவிலும் இலங்கையிலும் அடிப்படை சமூக அறிவியல் அறிவற்ற அரசியல்வாதிகளும் சினிமாக்காரர்களும் எடுக்கும் கருத்தியல் நிலைப்பாடுகளே பெண்களின் இந்த நிலைக்குக் காரணம். இந்த இரண்டு கூட்டத்திற்கும் சரியான மூளைப் புனருத்தாரனம் வழங்க வேண்டும். அத்தோடு சமூகவியலாளர்கள் சமூக ஆராய்ச்சிகள் மூலம் சமூகத்தை அறிவூட்டி வளர்க்க வேண்டும். மாறாக.. இப்படியான போலி அல்லது ஊகக் கருத்தியல்களை விதைக்க சந்தர்ப்பமளிப்பதை தடுக்க வேண்டும். இவையே பெண்கள் மீது தவறான பார்வைகளைத் தூண்ட வகை செய்கின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமியில் மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் பாலுறவுக்காக தன் துணைப் பாலை கொல்லும் அளவிற்கு துன்புறுத்துவதில்லை. ஆனால் 6 அறிவு கொண்ட மனிதனில்.. மட்டுமே இந்த வக்கிரம் தலையெடுத்துள்ளது. அதற்குக் காரணம்.. மனித சமூகக் கட்டமைப்புக்களும் சிறு வயது முதல் பல்வேறு வடிவங்களில்..விதைக்கப்படும்  பாலியல் மற்றும் ஆண்.. பெண் பற்றிய தவறான.. மிகைப்படுத்திய.. அதீத பாலுணர்வைத் தூண்டக் கூடிய.. கருத்தியல் சித்தாந்தங்களுமே..!

Link to comment
Share on other sites

இந்தியா எங்களுக்கு 1000 செய்திருக்கட்டும் தலைவர் சொன்னது போல இந்திய எங்களினுடைய தந்தை நாடு அதை நாங்கள் இன்றும் என்றும் ஆழமாக நேசிப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

இதே போல் இன்னொரு ஆதங்கம்... நியாயமான ஆதங்கமும் கூட... முக நூலில் இருந்து....

 

டெல்லி மாணவிக்கு தலைவர்கள் இரங்கல். தமிழ் பெண்களை பற்றி கவலையில்லை !

பாலியில் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டு பின்பு கொடூராமாக தாக்கப்பட்ட டெல்லி மாணவி இன்று இறந்த செய்தி இந்தியாவையே அதிர்ச்சிக் குள்ளாக்கியது. உலுக்கி உள்ளது .

இந்திய ஊடகங்களில் இது குறித்து விவாதம் நடந்த வண்ணம் உள்ளது . இந்தியா மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களில் கூட இந்த செய்தி தலைப்புச் செய்தியில் இடம் பிடித்துள்ளது. டெல்லி மாணவியின் இறந்த செய்தி கேட்டதும் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதிக்கு விரைந்து வந்துள்ளனர். அமைதிப் பேரணியும் நடத்துகின்றனர். டெல்லி நகரின் மாணவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்று கருதி டெல்லி அரசு 144 தடை சட்டம் போட்டுள்ளது. இதனால் பத்திற்கும் மேற்பட்ட தொடர்வண்டி நிலையங்கள் மூடப்பட்டன. இந்தியா நுழைவாயில் என்று சொல்லக் கூடிய இந்தியா கேட் பகுதியில் மக்கள் கூடுவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டங்களை தவிர்க்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்திய பிரமதரும் ஜனாதிபதியும் இறந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர். ஜனாதிபதி ஒரு படி மேலே போய் இறந்த பெண்ணுக்கு வீர வணக்கம் செலுத்தி உள்ளார். வீர மங்கை என்று போற்றி உள்ளார். தமிழகத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் . திமுக தலைவர் கருணாநிதி இந்த பெண்ணுக்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் உள்ள மேல்தட்டு குடும்பங்கள் இன்று அந்த பெண்ணுக்கு இரங்கல் தெரிவிக்க கடற்கரையில் ஒன்று கூடுகிறார்கள்.

இப்படி ஒரு நிலை இருக்க, டெல்லி நிகழ்விற்கு பிறகு தமிழகத்தில் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட பெண்கள், பள்ளி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. தூத்துக்குடி அருகே புனிதா என்னும் ஏழாம் வகுப்பு மாணவி வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டாள். சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

அடுத்ததாக காரைக்கால் பகுதியை சேர்ந்த வினோதினி என்ற பெண் மீது அமிலம் வீசி ஒரு கொடூரன் தாக்குதல் நடத்தினான். அதனால் வினோதினி தனது இரு கண்களையும் இழந்து ஒட்டு மொத்த முகமும் சிதைகப்பட்டு உள்ளது. முகம் முழுவதும் அறுவை சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் அவரும் உயிருக்கு போராடி வருகிறார். இவர் மருத்துவ செலவிற்கு நிதி உதவி கேட்டும் எந்த பெண்கள் அமைப்பும், சமூக அமைப்பும், ஆட்சியில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் உதவி செய்ய முன்வரவில்லை.

அதே போல் இடிந்தகரை அணுஉலைப் போராளி ரோசலின் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது நோய்வாய்ப் பட்டார். சிறையில் அரசு அவருக்கு மருத்துவம் சரிவர பார்க்கவில்லை. அதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்ததும் இறந்து விட்டார்.

இவ்வாறு தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் தாக்கப்பட்டும், வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப் பட்டும் வருகிறார்கள். இது குறித்து எந்த பெண்கள் அமைப்பும் போராட முன் வரவில்லை. தமிழக முதல்வர் பெயருக்கு கூட இந்நிகழ்விற்கு கண்டனம் தெரிவிக்க வில்லை. கருணாநிதி போன்றவர்கள் வாய்மூடி மௌனம் சாதித்தனர். தமிழக ஊடகங்கள் டெல்லி நிகழ்விற்கு காட்டிய அக்கறை தமிழக பெண்களின் அவல நிலைக்கும் காட்டி இருந்தால் ஓரளவிற்கு இப்பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கும்.

மெரீனா கடற்கரையில் கூடிய வடஇந்திய மாணவர்கள் மற்றும் திரைப் பட நடிகைகள் தமிழக பெண்களை பற்றி கவலை படவில்லை . இன்று இந்தியாவே கொதிக்கும் போது தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்கள் தொலைக் காட்சியின் முன் அமர்ந்து நிகழ்சிகளை கண்டு ரசிக்கின்றனர். தமிழ் சமூக ஆர்வலர்கள் மட்டும் இந்திய நாட்டின் இந்த போராட்டத்தை கண்டு கொந்தளிக்கின்றனர். தமிழீழத்தில் இந்திய அரசின் துணையோடு தமிழ் பெண்கள் ஆயிரம் ஆயிரம் பேர்கள் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொன்று குவிக்கப்பட்டனர். அதற்காக தமிழ் மாணவர்கள், அமைப்புகள் கட்சிகள் போராடினர். ஆனால் இந்திய ஊடகங்கள் தமிழீழத்தில் நடைப் பெற்ற கொலைகளை நியாயப்படுத்தியது. இந்திய பிரதமரோ , ஜனாதிபதியோ ஒரு கண்டன அறிக்கை கூட விடவில்லை . தமிழகத்தின் அப்போதைய முதவ்வரோ , நடக்கின்ற போராட்டம் அனைத்தையும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டார். அதனால் முத்துக்குமார் போன்ற இன உணர்வாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர்.

தற்போது தமிழ் சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச் சாட்டு என்னவெனில் , தமிழ் பெண்களுக்கு இவ்வாறான அவல நிலை தொடரும் போது தமிழ் நாட்டில் உள்ள இந்தியர்களோ, இந்தியாவில் பிற பகுதியில் உள்ள இந்தியர்களோ ஏன் குரல் கொடுப்பதில்லை என்பது தான் . இந்திய ஆட்சியாளர்களும் தமிழ் நாட்டின் ஆட்சியாளர்களும் ஏன் தமிழ் சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுப்பதில்லை? தமிழகத்தை தமிழர்கள் ஆள வில்லை என்பதால் தமிழர்கள் போராட முன்வரவில்லையா அல்லது வடஇந்தியா மட்டும் தான் இந்தியாவா என்ற கேள்வி எழுப்பி உள்ளனர் தமிழ் சமூக ஆர்வலர்கள். இந்த கேள்விக்கு தமிழர்கள் தான் பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அவலத்திற்கு குரல் கொடுக்காமல் டெல்லியில் நடந்த அவலத்திற்கு தமிழக மக்கள் குரல் கொடுத்துக் கொண்டிருப்பது, தங்கள் வீட்டின் பிரச்னையை விட எங்கோ இருக்கும் வீட்டின் பிரச்சனைக்கு தான் தமிழர்கள் குரல் கொடுப்பார்கள் என்ற பழி தமிழ்நாட்டின் மக்களின் மேல் விழுந்துள்ளது . இந்த பழியை துடைக்க தமிழர்கள் ஒன்றாக வேண்டும் . தமிழ் இனத்திற்காக போராட முன் வரவேண்டும்.

- இராஜ்குமார் பழனிசாமி

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.