Jump to content

டெல்லி மருத்துவ பீட மாணவி இறந்துவிட்டதாக Singapore மருத்துவமனை அறிவித்துள்ளது


SUNDHAL

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எது என்னவாக இருந்தாலும் ஒரு பெண் மனித இனம் வெட்கம் அடையும் வகையில் சிதைக்கப்பட்டிருக்கின்றாள். அது டெல்லியில் நடந்தால் என்ன தமிழ்நாட்டில் நடந்தால் என்ன உலகின் வேறு எந்த மூலையில் நடந்தால் என்ன கண்டிக்கப்படவேண்டியது.

 

இந்த நாகரிகம் மிகுந்த உலகில் பெண்கள் மீது ஆண்களால் மேற்கொள்ளப்படும் காட்டுமிராண்டித் தனமான பாலியல் வன்முறைகள் குறித்து, ஓர் ஆண் என்ற வகையில் வெட்கித் தலைகுனிகிறேன்.

 

இவ்வாறான பேர்வழிகளுக்கு தண்டனையாக அவர்கள் கொல்லப்படக்கூடாது நிரந்தரமாக அண்ணகர்களாக்கப்பட்டு அந்த வலியுடன் வாழவிடப்படவேண்டும்.

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

418007_236320963166712_25797953_n.jpg

- முகநூல்

ஏன் இந்த மனிதாபிமான வேறுபாடு என அருந்ததி ராய் சனல் நாலிற்கு கூறுகின்றார்:

அதில் ஒன்று - ஆயுதமாக பயன்படுத்தப்படுவது.

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~%2CAAAAAEabvr4~%2CWtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=2049927601001

 

 

தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன நடந்தது என சரியா தெரியவில்லை?...அவரும் கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருந்தால் உடனே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டியது முதலில் தமிழ் நாட்டு மக்களே!...அப்போது வாயை மூடி பேசாமல் இருந்து போட்டு டில்லிப் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நட‌ந்தவுட‌ன் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்ட‌ம் அது,இது என முதலில் செய்ய வெளிக்கிட்டவுட‌ன் தமிழ் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்யாமல் டில்லிப் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்களே என சண்டை பிடிக்கிறீங்களே வெட்கமாய் இல்லை...தமிழ் பெண்ணுக்கு என்ன நட‌ந்தது என்பதே ஊட‌கங்களில் அதுவும் தமிழ் ஊட‌கங்களில் பெரிதாக வர‌வில்லை அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி தெரிய வரும்?
 
இந்தியாவில் ஒவ்வொரு நிமிட‌த்திற்கு ஒவ்வொரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்தது வித்தியாச‌ம்...ஓடும் பேருந்து,6 பேர்,ஆண் நண்பரை தாக்கி போட்டு இப்படி அந்த பெண்ணுக்கு நட‌ந்திருக்குது,வன்புணர்ந்து முடிந்த பின்னரும் அந்த பெண்ணினது உறுப்புக்களை சிதைத்திருக்கிறார்கள் இதற்கு பேசாமல் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம்...  கேவலத்திலும்,கேவலமான வக்கிர‌ மனம் படைத்தவர்களாலேயே இப்படி செய்ய முடியும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

சபாஷ் ரதி டெல்லி பெண்கள் பொறுத்தது போதும் என்று கிளர்ந்தெழுந்து போராட்டம் நடாத்துக்கின்றார்கள் அகூதா அண்ணா போன்றவர்கள் அதுக்குள்ளும் புகுந்து அரசியல் செய்கின்றார்கள் மிகவும் கேவலமான விடையம்

யாழ்ப்பாணத்தில நாலு வயசு பொண்ணு பாலியல் பாலத்த்காரம் செய்து கொலப்பட்டால் அதுக்கு yethira போராட யாழ்ப்பான பொண்ணுங்களுக்கு வாக்கில வந்திட்டாங்க இந்திய பொண்ணுங்களா குறை சொல்ல

தமிழ் நாட்டில் ஒரு மாணவி கொள்ளப்படதர்க்கு தமிழ் நாட்டு மாணவர் அமைப்புக்கள் ஆல்லாவா போராடி இருக்கணும் அதுவும் இல்ல டெல்லில நடக்கிற கொடுமைக்காக அவங்க போராடுறாங்க அதுக்குள்ளே ஆட்டுக்குள்ள மாட்ட கொண்டுவந்து விட்டுகிட்டு

விட்டா சொல்லுவான்கையா இலங்கையின் வடக்கு கிழக்கில் நடை பெரும் இராணுவ ஆட்சிக்கு எதிராவும் எகிப்து மாணவர்கள் போராடி புரட்சி செஞ்சிருக்கணும் என்று :D

Link to comment
Share on other sites

டில்லியில் இதுவரை 635 வன்புணர்வு ; 1க்கு மட்டும் தண்டனை

 

இந்திய தலைநகர் டில்லியில் இதுவரை இந்த ஆண்டில் மட்டும் 635 பாலியல் வல்லுறவு வழக்குகள் பதியப்பட்டதாகவும், இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளி என தண்டனை கிடைத்ததாகவும் தற்போது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

 

2012 ம் ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையிலான வழக்கு தொடர்பான இந்த அறிக்கையின்படி 635 பாலியல் வல்லுறவு வழக்குகள் தொடர்பாக 754 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 403 பேர் கோர்ட் இறுதி விசாரணையின கீழ் இருந்து வருகின்றனர். 348 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணையில் உள்ளனர். 2 பேர் விலக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் மொத்தம் பெண்களிடம் சில்மிஷம் செய்தது தொடர்பாக 624 வழக்கு, ஈவ்டீசிங் தொடர்பாக 193 வழக்குகள் , 111 வரதட்சணை கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 128 பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டு புள்ளி விவரங்களை பார்க்கும் போது சராசரியாக 10 சதம் குற்றம் அதிகரித்து வந்துள்ளதை காட்டுகிறது. வழக்கு, விசாரணை,

தண்டனை என்ற போதிலும் குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை என்பது வேதனையான விஷயம்.

 

ஆண்டு வாரியாக விவரம் : @@

 

கடந்த ஆண்டில் பதிவான பாலியல் வல்லுறவு வழக்குகள் விவரம் வருமாறு: ஆண்டு அடைகுறிக்குள் வழங்கப்பட்டுள்ளது . 572 வழக்குகள் ( 2011 ), 507 ( 2010 ) , 469 ( 2009 ) , 466 ( 2008) .

 

கடந்த 2011 ல் மட்டும் 745 பேர் பாலியல் வல்லுறவு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 18 பேர் குற்றவாளிகளாக கோர்ட் தீர்ப்பளித்தது. 34 பேர் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். 597 பேர் விசாரணை கட்டத்தில் உள்ளனர். 86 பேர் மீது ஆரம்ப கட்ட விசாரணை, 10 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

2010 ல் 685 பேர் கைது செய்யப்பட்டு 37 பேர் குற்றவாளிகள் என முடிவு செய்யப்பட்டது. 107 பேர் போதிய ஆதாரம் இல்லாமல் தப்பித்து விட்டனர் . 518 பேர் வழக்கு விசாரணைக்குள் இருக்கின்றனர். 13 பேர் மீதான விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. 2009 ல் 675 பேரும் , 2008 ல் 604 பேரும் கைது செய்யப்பட்டு , மொத்தம் இரு ஆண்டும் சேர்த்து 134 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87-%E0%AE%B5%E0%AE%B0-635-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-104000034.html



Tamil_News_large_616581.jpg

Link to comment
Share on other sites

பாலியல் வல்லுறவு: உயிரிழந்தவருக்கு இறுதிச்சடங்கு

 

இந்தியத் தலைநகர் தில்லியில் பேருந்தில் வைத்து பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இறந்து போன இளம் பெண்ணுக்கு இறுதிக்கிரியைகள் நடந்து முடிந்தன.

 

http://www.bbc.co.uk/tamil/india/2012/12/121230_rapefuneral.shtml

Link to comment
Share on other sites

இதே வேளை எல்லாவற்றுக்கும் இணங்கி விட்டு ஐயையோ என்ன கெடுத்திட்டாங்க என்று சொல்லும் பெண்களும் மற்றும் போலி புகார் கொடுக்கும் பெண்களும் இருக்காங்க அவங்களையும் தூக்கி உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டனும்

Link to comment
Share on other sites

எனது ஆழ்ந்த அனுதாபங்கள் ...............

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து ,நீதியும் சமத்துவமும் நிலை நாட்டி இப்படியான எந்த சம்பவங்களும் உலகில் ஒருவர்க்குமே நடக்க கூடாது என்பதே எனது அவா.......................

புரட்சி சொல்வது போல் நான் கூட பேச விரும்பவில்லை .அப்புறம் புலிப்பயங்கரவாதிகளுக்கும் ,இதற்கும் தொடர்பு உள்ளதென பிளேட்டை மாத்தினாலும் மாத்துவான்கப்பா. ................சோ .....நீதி கிடைக்க ,உண்மை நிலை நாட்டப்பட இறைவனை பிரார்த்திக்கிறேன்

Link to comment
Share on other sites

Tamil_News_large_616581.jpg

 

396829_315349025242272_1713720858_n.jpg

Link to comment
Share on other sites

SHE was due to marry her boyfriend in a matter of weeks, was the apple of her father's eye and her friends were convinced she would achieve great things after completing her medical studies.

While India has seen an outpouring of grief for the 23-year-old who suffered fatal injuries when she was gang-raped on December 16, those who actually knew her paint a portrait of a young woman who was both in love and much loved.

Although not formally engaged, it was well-known by her friends that she was planning to marry the boyfriend who also suffered serious injuries in the same attack that would ultimately lead to her death.

Meena Rai said that she had been shopping with the unnamed victim for wedding outfits and the contents of a wedding box.

"She was supposed to get married in February to the same guy who was attacked on the bus with her," said Rai, who lived next door in Mahavir Enclave, a neighbourhood in southwestern New Delhi.

Thanks to telegraph

Link to comment
Share on other sites

ஒரே மகிழ்ச்சி.. தமிழகத்தில் பெரிய நினைவேந்தல் ஏதும் நடைபெறவில்லை. மலையாள, ஐயர்வீட்டும் மாமிகள் சற்று இறுக்கத்துடனும், சில சிறுமிகள் புன்சிரிப்புடனும் காட்சியளித்தது மட்டும்தான் நடந்தது. :rolleyes:

 

தமிழகத்தின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே இதனைக் கருதுகிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

The young couple had spent the evening together at a mall watching The Life of Pi before they boarded a bus they thought would take them home.

Her parents sold their small piece of land in rural Uttar Pradesh in order to fund their daughter's education, often limiting their own meals to little more than rotis with namak (bread with salt), according to friends.

தங்களிற்கு என்று இருந்த ஒரு சின்ன காணித்துண்டை விற்று தாங்கள் ரொட்டியும் பாணும் சாப்பிட்டு கொண்டு தங்கள் பெண்ணை படிக்க வைதிஉகின்ட்ரார்கல் அந்த பெண்ணிற்கும் அந்த பையனுக்கும் இன்னும் சில மாதங்களில் திருமணம் நடக்க கூட இருந்ததாம்

ஒரே மகிழ்ச்சி.. தமிழகத்தில் பெரிய நினைவேந்தல் ஏதும் நடைபெறவில்லை. மலையாள, ஐயர்வீட்டும் மாமிகள் சற்று இறுக்கத்துடனும், சில சிறுமிகள் புன்சிரிப்புடனும் காட்சியளித்தது மட்டும்தான் நடந்தது. :rolleyes:

தமிழகத்தின் சிந்தனைப்போக்கில் ஏற்பட்ட மாற்றமாகவே இதனைக் கருதுகிறேன். :rolleyes:

தமிழ் நாட்டு காரங்களா விடுங்க அவங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு பொண்ணு கற்பளிக்கபட்டா கூட வீதி க்கு வர மாட்டாங்க அப்பிடியே ஜென்னல திறந்து வைச்சிட்டு அதுக்குல்லாலா ரோடு ல என்ன நடக்கிதின்னு எட்டி பாப்பாங்க

Link to comment
Share on other sites

சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள சம்பந்தம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சந்தியா (வயது 20) என்ற பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்புணர்ச்சி செய்ததோடு கடுமையாக தாக்கி சம்பவம் நடந்த 3-வது மாடியில் இருந்து வீசி இருக்கிறார்கள். இதனால் சந்தியாவுக்கு தலையில் பலத்த படுகாயத்ததால் இரத்தப்போக்கு அதிகரித்து ஆபத்தான நிலையில் கடலூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவர் வாக்குமூலத்தில், 'தன்னை 3 பேர் பலாத்தராத்திற்கு உட்படுத்தி மாடியில் இருந்து வீசியெறிந்தாக கூறி இருக்கிறார்.' அதற்கு பின் சில மணி நேரத்தில் இறந்திருக்கிறார். ஆனால் தொலைக்காட்சியிலும் ஊடகத்திலும் அப்பெண் தற்கொலை செய்து கொண்டதாக அறிவித்தன.

 

சமீப காலமாக பெண்கள் மீது தொடரும் பாலியல் குற்றங்கள் இன்னும் அதிகரித்திருக்கிற நிலையில் சட்டமும், அரசும், ஊடகங்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக செயல்படாமல் குற்றவாளிகளை பாதுகாக்கும் பொருட்டு கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு சமூக விரோத செயலை ஊக்குவிப்பது சர்வாதிகார ஆட்சியில் கூட ஏற்க முடியாத அநீதியாகும்...!!!

டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக போராடும் தமிழ்நாட்டு மக்கள் இந்த அநீதிக்கு எதிராக என்ன செய்யப் போகிறோம் ???

 

383609_396289817123215_1551322027_n.jpg

 

- from: fb -

Link to comment
Share on other sites

கூலித்தொளிலாளியாக டெல்லி விமான நிலையத்தில் வேலை செய்யும் அந்த பெண்ணின் தந்தை கூறுவாராம் நான் எனது மகளை கஷ்டப்பட்டு உழைத்து படிக்க வைகின்றேன் எனக்கு வயசானதும் அவள் என்னை பாத்துக்கொள்ளுவா என்று அதற்க்கு எற்றா போல அந்த மாணவியும் மிகவும் திறமை சாலியாம் நன்றாக உழைத்து தந்தையின் அந்த காணியை மீட்க்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுவாராம் தன்னுடைய நண்பர்களிடம்

Link to comment
Share on other sites

இன்று காலை நினைத்துக்கொண்டிருந்தேன்..

 

டெல்லி பஸ்ஸில் பாலியல் வல்லுறவு செய்தவர்கள் அந்தப்பெண்ணை குத்திக் கொலை செய்திருந்தார்கள் என்றால் இவ்வளவு பெரிய விடயமாகியிருக்குமா என்று. :unsure:

 

அதுபோல ஓடும் பேருந்தில் இருந்து தள்ளியிருக்காவிட்டால்??

 

அதுபோல அடித்து சிதைத்திருக்காவிட்டால்??

 

இப்போது துளசி இணைத்த சந்தியாவின் கதையைப் படித்தபோதுதான் விளங்குகிறது..  இடம், இனம் பார்த்தே செய்திகளும் பிரபலமாகின்றன என்பது.. :rolleyes:

Link to comment
Share on other sites

சும்மா மற்றைய இனங்களையும் ஜாதிகளையும் நாடுகளையும் குற்றம் சாட்டாமல் முதலில் அவர்கள் போராடவேண்டும் இன்று தமிழ் நாட்டில் எத்தனை தலித் அமைப்புகள் கட்சிகள் இருக்கின்றன ஏன் அவர்கள் ஒன்றிணைந்து அந்த பொன்னுன்க்காக போராட கூடா?

Link to comment
Share on other sites

உண்மையில் இந்த டெல்லி மாணவியின் உயிரிழப்பு மிகத் துயர் மிக்கதே. அது கடும் தொனியில் கண்டிக்கப்படத்தக்கது மட்டுமன்றி தடுக்கப்பட வேண்டியதும் கூட. ஆனால் இதே காரணங்களோடு ஈழத்தில் சிங்கள இனவெறி அரசாலும்.. இந்திய அமைதிப்படையாலும்.. தமிழ் பெண்கள் திட்டமிட்டு பாலியல் ஆயுதம் கொண்டு.. அதுவும் கோத்தபாய போன்றவர்களின் பகிரங்க முழக்கத்துடன்.. அழிக்கப்பட்ட போது.. ஏன் இவர்கள் குரல் கொடுக்கவில்லை..???!

 

இன்று இந்த மாணவிக்கு இரங்கும் கருணாநிதி.. பிரணாப் முகர்ஜி.. மன்மோகன் சிங்.. சோனியா காந்தி போன்றவர்கள்.... அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தில் தமிழ் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட..(கோத்தாவின் வெளிப்படையான முழக்கமான தமிழ் பெண்கள் எமது படையினருக்கு (சிங்களப் படையினருக்கு).. தமிழ் ஆண்கள்.. நந்திக் கடலுக்கு என்று சொல்லிச் சொல்லி) முள்ளிவாய்க்காலிலும் அதன் பின்னரும் இன்று வரையும் தொடரும்.. மிகக் கொடூர பாலியல் வன்புணர்வுக் கொலைகளையும்.. ஏனைய தமிழினப் படுகொலைகளையும்.. அன்று மட்டுமன்றி..இன்று வரை கண்டிக்காத நிலையைக் காண்கிறோம். இந்த அரசியல் பச்சோந்திகளின் அரசியல் நீலிக்கண்ணீருக்கு.. ஆதாயத்திற்கு ஒரு அப்பாவி மாணவியின் உயிரும் அவலச் சாவும் தானா கிடைத்தது..???!

 

உண்மை தான்.

 

இந்த படத்தையும் பாருங்கள். :( :( :(இளகிய மனமுடையோர் பார்க்க வேண்டாம்.

https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-ash4/206467_455338661192919_1196882580_n.jpg

 

- பட மூலம்: முகநூல் -

 

Link to comment
Share on other sites

முதல்ல டெல்லி மாணவர்கள் மாதிரி இலங்கையில் இருக்கும் உங்கள் மாணவர்களையும் தமிழர்களையும் திரண்டு வீதிக்கு வந்து போராட சொல்லுங்க

Link to comment
Share on other sites

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல் #
BAN-Ki-Moon Condoles death of rape victim #

 


....you, one of the reason, for the rape & killing of thousands of innocent tamil women in srilanka. You stand with Srilankan govt in all their atrocities against women and children & You joined the Srilankan Govt's victory parade of their genocidal war.. A CRIMINAL's CROCODILE TEARS....

 

- திருமுருகன் காந்தி -



முதல்ல டெல்லி மாணவர்கள் மாதிரி இலங்கையில் இருக்கும் உங்கள் மாணவர்களையும் தமிழர்களையும் திரண்டு வீதிக்கு வந்து போராட சொல்லுங்க

 

டெல்லியில் இலங்கை போன்று இராணுவ அடக்குமுறை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு என்ன நடந்தது என சரியா தெரியவில்லை?...அவரும் கூட்டாக பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகி இருந்தால் உடனே கிளர்ந்து எழுந்திருக்க வேண்டியது முதலில் தமிழ் நாட்டு மக்களே!...அப்போது வாயை மூடி பேசாமல் இருந்து போட்டு டில்லிப் பெண்ணுக்கு இப்படி ஒரு சம்பவம் நட‌ந்தவுட‌ன் அங்குள்ள மக்கள் ஆர்ப்பாட்ட‌ம் அது,இது என முதலில் செய்ய வெளிக்கிட்டவுட‌ன் தமிழ் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்யாமல் டில்லிப் பெண்ணுக்கு ஆர்ப்பாட்ட‌ம் செய்கிறீர்களே என சண்டை பிடிக்கிறீங்களே வெட்கமாய் இல்லை...தமிழ் பெண்ணுக்கு என்ன நட‌ந்தது என்பதே ஊட‌கங்களில் அதுவும் தமிழ் ஊட‌கங்களில் பெரிதாக வர‌வில்லை அப்படி இருக்கும் போது மக்களுக்கு எப்படி தெரிய வரும்?
 
இந்தியாவில் ஒவ்வொரு நிமிட‌த்திற்கு ஒவ்வொரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இந்த டில்லிப் பெண்ணுக்கு நட‌ந்தது வித்தியாச‌ம்...ஓடும் பேருந்து,6 பேர்,ஆண் நண்பரை தாக்கி போட்டு இப்படி அந்த பெண்ணுக்கு நட‌ந்திருக்குது,வன்புணர்ந்து முடிந்த பின்னரும் அந்த பெண்ணினது உறுப்புக்களை சிதைத்திருக்கிறார்கள் இதற்கு பேசாமல் கழுத்தை நெரித்து கொன்று இருக்கலாம்...  கேவலத்திலும்,கேவலமான வக்கிர‌ மனம் படைத்தவர்களாலேயே இப்படி செய்ய முடியும்.

 

இவ்வளவு பேசிற நீங்க.. தமிழச்சி தானே. பெண் தானே. ஏன் இன்னும் பெண்கள் மீதான இவ்வளவு கொடுமைகள் கண்டும்..கிளர்ந்து எழேல்ல...??! முதலில் உங்களைத் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு வழிகாட்டியா இருக்கிற துணிவை வளர்த்துக் கொள்ளுங்க... அப்புறம்.. தான் மற்றவனைப் பார்த்து.. மற்றவன் என்ன செய்யனுன்னு  சொல்ல உங்களுக்கு தகுதி வரும்.

 

உலகமே ஆச்சரியமாப்.. அதிர்ச்சியோடு.. பார்க்கும் இந்தச் சம்பவத்தினூடு.. உலகின் கண்களில் இருந்து மறைக்கப்பட்டு நடத்தப்பட்ட.. நடத்தப்படும் பெண்கள் மீதான இதை விட மோசமான கொடுமைகளை..  பாலியலை ஆயுதமாக்கும் ஆட்சியாளர்களின் கொடுமைகளைச் சொல்வது ஒரு எந்த வகையில் கேவலம்..??! அதைக் கேவலம் என்று சிந்திக்கிற நீங்கள் தான் சொல்லனும்.. எப்படி அந்தக் கொடுமைகளுக்கு உலகின் கவனத்தை ஈர்ப்பது என்று. அதைச் சொல்லிட்டு திட்டுங்கள். எதிலும் சும்மா நாலு பேரின்.. கவன ஈர்ப்புக்கு மாற்றி எழுதினாப் போல.. அது எல்லாம் ஆரோக்கியமான கருத்தாகாது. :icon_idea::(

Link to comment
Share on other sites

டெல்லி மாணவி மரணத்துக்கு பான்கீ மூன் இரங்கல் #

BAN-Ki-Moon Condoles death of rape victim #

....you, one of the reason, for the rape & killing of thousands of innocent tamil women in srilanka. You stand with Srilankan govt in all their atrocities against women and children & You joined the Srilankan Govt's victory parade of their genocidal war.. A CRIMINAL's CROCODILE TEARS....

- திருமுருகன் காந்தி -

டெல்லியில் இலங்கை போன்று இராணுவ அடக்குமுறை இல்லை.

அடக்கு முறை இருந்தாலும் அதையும் மீறி போராடலாம் எகிப்ப்தில மாணவர் புரட்சி அப்பிடி தான் நடந்திச்சு லட்சக்கணக்கில் மக்கள் திரளும் போது என்ன பண்ணிவிட முடியும் அத விட்டிட்டு இதுக்குள்ள வந்து அரசியல் பண்ணிட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சும்மா மற்றைய இனங்களையும் ஜாதிகளையும் நாடுகளையும் குற்றம் சாட்டாமல் முதலில் அவர்கள் போராடவேண்டும் இன்று தமிழ் நாட்டில் எத்தனை தலித் அமைப்புகள் கட்சிகள் இருக்கின்றன ஏன் அவர்கள் ஒன்றிணைந்து அந்த பொன்னுன்க்காக போராட கூடா?

 

இந்தப் பெண் மீதான கொடுமை மோசமானது. அதன் மீது கடும் நடவடிக்கைகள் அவசியமும் கூட. அதற்கு மாற்றுக் கருத்தில்லை. அதேபோல்..

 

இந்தப் பெண் மீது நடந்த கொடுமைகளை விட மோசமான கொடுமைகளை தமிழக மீனவர்கள் சந்தித்துள்ளார்கள். நூற்றுக்கணக்கில் உயிரையும் விட்டுள்ளனர். போராடியும் உள்ளார்கள். ஏன் அப்போது எவருக்கும் அவர்கள் மீது மனிதாபிமானம் வரல்ல..???! பாங்கி மூனுக்கு அனுதாபம் பிறக்கல்ல..???! சோனியாவுக்கு.. அக்கறை வரேல்ல..????!

 

இந்தப் பெண்ணின் விடயத்தில் உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டவர்கள்.. மீனவர்கள் சாவில் கடிதம் எழுதிக்கிட்டு ஏன் காலத்தைக் கழித்தார்கள்..???!

 

அதுபோக.. ஈழத்துப் பெண்கள் மீதான படுகொலைகளை தமிழகம் கூடிக் கண்டித்தது. போராட்டங்கள் நடத்தின..!! ஏன் அதைப் பற்றி ஹிந்திய ஊடகங்கள் எதுவும் பேசல்ல. கருணாநிதியின் ஊடகம் ஊமையானது..???! சனல் 4 லு காணொளியை இன்று வரை கருணாநிதியின் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்திருக்கின்றனவே..???! ஆனால் இந்தப் பெண்ணின் விடயத்தில் மட்டும் எங்கிருந்து பாசம் கிளர்ந்தது. சொர்க்கம் தங்கம் சோனியா இல்வோல்ட் ஆனதாலா..??! அல்லது சொர்க்கத்தங்கம் ஆட்சியில் இருக்கும் தலைமையிடம் அங்கு உள்ளதாலா..???!  அல்லது இது அவரின் ஆட்சிக்கு நெருக்கடி ஆவதோடு.. பெண்களின் வாக்கு வங்கியை சிதைக்கும் என்பதாலா..???! :icon_idea::(:rolleyes:

Link to comment
Share on other sites

அதுக்கு தமிழக மக்கள் முதலில் வீதிகளில் வந்து போராடட்டும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து 
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.