Jump to content

காரணம் தெரியுமா ?


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,
    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?
    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?
     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

 
உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?
   
தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?
சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

 

ஏனெனில் தமிழனிடம் அதைக் கேட்கும் துணிவு இல்லை

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

 

ஒருமுறையாவது அவர்களிடம் இதுபற்றி பகிடியாகவாவது கேட்டிருக்கிறீர்களா 

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

 

 மீன் சந்தையில் மீன்களை வெட்டித் தரும்படி நீங்கள் கேட்பதில்லை. அத்தோடு மீன்கடை சிறிய இடமாக இருப்பதனால் கழிவுகளின் நாற்றம் மேலோங்கி இருப்பதும் காரணமாக இருக்கலாம்

 

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

 

தமிழனுக்கு தமிழன் மேல் இருக்கும் மதிப்பு அவ்வளவுதான் :D :D

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

 

தமிழரில் பலர் தாமும் சுத்தமில்லை.தம் பிள்ளைகளுக்கும் சுத்தம் பற்றிச் சொல்லிக் கொடுப்பதில்லை.அப்பாடிப்பட்ட ஒன்று இரண்டு பேரால் எல்லோருக்கும் துன்பம்.

 

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

 

தமிழர்களில் பலர் பொறுப்பற்றவர்களாகவே புலம்பெயர் நாட்டிலும் இன்னும் இருக்கிறார்கள். சிலரை திருத்தவே முடியாது. :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில விடயங்கள்... பார்ப்பதற்கு, அசிங்கமாக இருந்தாலும்....
தமிழர் நாம்... பச்சைத்தண்ணியில், பலகாரம் சுடுகிற ஆட்கள்.
நாமும்.. தாராளமாகச் செலவழித்தால்... வியாபாரியும்... கடையை... மெருகூட்டுவார் தானே...
ஐரோப்பாவில் உள்ள கடைக்குப் போய்... "கருவேப்பிலைக் கட்டு, ஒரு ஐரோ... விக்கிறியளோ... என்று கேட்டு, ஊர் ரூபாய்க் கணக்கில் பெருக்கிப் பார்க்கும்... எங்களை வைத்துக் கொண்டு, அவர்கள் எப்படி, முதல் தரமான.. சேவையை, செய்ய முடியும்? அதை... நீங்கள் முதலில் யோசியுங்கள்.
இதனைப் பற்றி... ஜீவா, சஜீவன், விசுகு, நந்தன் போன்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

 

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

   

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

 

நாடுகளுக்கேற்ப எம்மவர்களும் வாழ்கின்றார்கள். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடுகளுக்கேற்ப எம்மவர்களும் வாழ்கின்றார்கள். :D

 

நல்ல மினுப்பாக... இருந்தாலும், ஒண்டுக்கிருக்க... கூச்சமாய் இருக்கும் :D.

நாவூறு படாமல் இருக்க‌, கை கழுவும் தொட்டியில்... ஏற்கெனவே.... கக்கூஸ் பேப்பரை அடைத்து வைத்திருப்பார்கள். :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

 

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

   

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

 

 

லண்டனிலும் அநேக இடங்களில்.. இந்த நிலை தான். ஊரில சின்னப் பிள்ளையளா இருக்கேக்க.. பேதி மருந்து என்று கொடுக்கிறது.. சமிபாட்டுப் பிரச்சனைக்கு. இஞ்ச தமிழ் கடையில சாப்பிட்டால் போதும்.. பேதி.. வாந்தியோட.. பீதியா போகும்.  என்ன மாயமோ மந்திரமோ தெரியல்ல.. அந்தந்த நாட்டு அடிப்படை சுகாதார விதிகள் மீறப்பட்டும்.. இவர்கள் எப்படித்தான் பிடிபடாமல்.. உதுகளை நடத்தினம் என்றது தான்.. எனக்கு ஆச்சரியமா இருக்குது. நான் பொதுவா தமிழ் கடைகளுக்குப் போறது குறைவு காரணம்.. இந்தச் சுகாதாரமின்மை.. சரியான நுகர்வோர் உபசரிப்பின்மை.. போன்ற காரணங்கள் தானே ஒழிய.. மற்றும்படி வேற காரணங்கள் இல்லை.  :icon_idea::)

Link to comment
Share on other sites

சமூகத்தில் அக்கறை இருந்தால் நகரசபைக்கு (லா சப்பலில்  என்னவோ தெரியாது) சொன்னால் வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பார்கள். கனடாவில் தமிழரின் சில உணவகங்கள் மூடப்பட்டதற்கு சுத்தமின்மை தான் காரணம் என அறிந்தேன்.

 

 

Link to comment
Share on other sites

சில விடயங்கள்... பார்ப்பதற்கு, அசிங்கமாக இருந்தாலும்....

தமிழர் நாம்... பச்சைத்தண்ணியில், பலகாரம் சுடுகிற ஆட்கள்.

நாமும்.. தாராளமாகச் செலவழித்தால்... வியாபாரியும்... கடையை... மெருகூட்டுவார் தானே...

ஐரோப்பாவில் உள்ள கடைக்குப் போய்... "கருவேப்பிலைக் கட்டு, ஒரு ஐரோ... விக்கிறியளோ... என்று கேட்டு, ஊர் ரூபாய்க் கணக்கில் பெருக்கிப் பார்க்கும்... எங்களை வைத்துக் கொண்டு, அவர்கள் எப்படி, முதல் தரமான.. சேவையை, செய்ய முடியும்? அதை... நீங்கள் முதலில் யோசியுங்கள்.

இதனைப் பற்றி... ஜீவா, சஜீவன், விசுகு, நந்தன் போன்றவர்களின் கருத்தை எதிர்பார்க்கின்றேன்.

 

தமிழ்சிறியின் கருத்துதான் எனதும். ஐந்து சதத்திற்கு இடியப்பம் எதிர்பார்த்தால் அவர்களும் என்ன செய்வார்கள்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது அந்த நாட்டின் சட்டதிட்டங்களை & பொறுப்பான அதிகாரிகளை  பொறுத்தது. ஒருக்கா உங்கள் பகுதி சுகாதார பொறுப்பாளருக்கோ அல்லது அமைச்சுகோ மொட்டைக்கடிதம் அனுப்பிவிடுங்கள், நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிவான இடங்களில் சுத்தம், சுகாதாரம் எல்லாம் இருக்குமா..

 

சுற்றுலாப் பயணிகள் அதிகம் நடமாடும் மத்திய பாரிஸ் பகுதிக்கும், லா சப்பலுக்கும் அதிக தூரம் இல்லை. ஆனால் சுத்தத்தில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் இருக்கும்..

 

 

Link to comment
Share on other sites

நியுயோர்க்கில் ஐந்து போரோக்கள். தமிழர் இருப்பது குயின்ஸ்சிலும் ஸ்டேட்டன் ஐலண்டிலும்தான். இவை இரண்டும் .இடைத்தர போரோக்கள். அவற்றிலும் தமிழர் இருக்கும் பக்கம் இடைத்தரமானவை. மன்கட்டந்தான் வியாபாரத்தளம்.

 

நியூயோர்க்க தமிழர் மத்திய வகுப்பில் இருப்பதால் மத்திய வகுப்பு வாழ்க்கையை நடத்த முடிகிறது.

 

இது டொரொண்டொவில் காணப்படும் உணவகம். ஸ்காபரோ பக்கம் போனால் "மார்க்கம் லோகேசனை" ஒரு தடவை போய் பார்த்துவிடுங்கள்.

 

20110916-babu-1.jpg

 

 

How do they do it for that price??
FAVOURITE
DINER REVIEW • JUN 28, 2011
Just take it from me a standard issue Canadian white guy who stood out like a sore thumb among the largely Sri Lankan immigrant clientele....but I learned one magic word from the smiling counter staff....Combo!!
 

That's right just say combo and into a generous sized container goes chicken biryani rice, mushroom curry and butter chicken for a whalloping $4.50 out the door! I will never eat fast food again, I am a Babu junkie!!! Normally Indian food is usually very pricy, if these guys keep this up and give this quality for the $$ you wont eat anywhere else...I'm talking flavour!!!! I frequent the Markham location which is clean and shiny new. Best food deal in the GTA no kidding, especially when you factor in the frequent diner card you can get right at the counter so you tenth lunch is free, (the only drawbacks, no dining in and kind of irregular counter service but they are always nice and who can complain for this $$?? I wouldnt change a thing, Best to go in off hours as they are lined up out the door at normal diner times.

http://www.urbanspoon.com/r/10/1435679/restaurant/Scarborough/Babu-Takeout-and-Catering-Toronto

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் தெரியுமா ?

பாரிஸ் லாச்சப்பல் தமிழ்க் கடை பகுதியில்  அவதானித்தேன்

பெரும்பான்மையான  பலசரக்குக் கடைகளில் தரப்படும் சிட்டைகளில் பொருட்களின் விபரம் இல்லை ஏன் ? பொருட்களுக்கான தெளிவான விலை கூட இல்லை ஏன் ?

சிகை அலங்கார நிலையங்களில்      உடைந்த சீப்பு,     ஊத்தை தெரியும் கறுப்பு மேல்அங்கி,

    அனைவருக்கு ஒரே துவாலை  பாவிப்பது ஏன் ?

    (சவர அலகு மாற்றுகிறார்கள்)

மீன் சந்தையில் கூட  இல்லாத நாற்றம், லாச்சப்பலில் உள்ள மீன்கடைகளில் இருந்து வருவது ஏன் ?

     (நாத்தம் குடலைப் பிடுங்குகிறது.  பத்தாக் குறைக்கு ஊதுபத்தி வேறு கொழுத்தி விடுவார்கள்)  

 

உணவகத்தில் குறுகிய கழிவறைகள்,  அசுத்தமாகவும்  (தரை) ஈரமாகவும் இருப்பது ஏன் ?

   

தமிழர் கொண்டாட்டங்கள் நடைபெறும் மண்டபங்களில்  கை கழுவும் தொட்டி அடைப்பதேன் ?

சிற்றுண்டி மற்றும் தேனீர் பானங்களின் வெற்றுபாத்திரங்களை கதிரைக்குக் கீழ் தள்ளுவது ஏன் ?

 

பணம் ஒன்றையே குறியாக வைத்து இயங்கப்படுகிறது. அங்கே சுத்தம் என்ற சொல்லுக்கே இடம் இல்லாமல் போய்விடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமூகப் பார்வை, தூரநோக்கு, சேவை மனப்பாங்கு  இல்லாத வியாபாரங்கள்!

மனச்சாட்சியை ஆண்டவனிடம் அடகு வைத்துவிட்டு நடத்தப்படும் பகல் கொள்ளைகள்!

இல்லாத கடவுள், பாவங்களைக் கழுவி விடுவார், என்ற அதீத நம்பிக்கை!

தீய பழக்கங்களை, விட்டு விடக் கூட, அனுமதிக்காத வெறும் வரட்டுக் கவுரவம்!

தானும், தனது குடும்பமும், என்ற கோட்பாட்டில் வாழும் சராசரித் தமிழரின் மனநிலை!

 

மேலேயுள்ள எல்லாம் சேர்ந்ததன் விளைவு! :o

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் நடத்துபவர்கள் அப்படி இருந்தால் பின் அனைத்தும் அதுவாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதிலுரைத்த ஆர்வலர்களுக்கு நன்றிகள்

அண்மையில் லாச்சப்பல் கடையில் பொருட்களை கொள்வனவு செய்தேன்
வீடுசென்று சிட்டையை பார்த்த போது 17 பொருட்களுக்கு விலை போடப்பட்டிருந்நது
நான் வாங்கிய பொருட்கள் 15 தான். ஒருவேளை தவறுதலாக இரண்டு தரம் விலை
போடப்பட்டுள்ளதா என்று பார்த்த  பொழுது எல்லா விலைகளும்   வேறு வேறு விலையாக இருந்நது.  
எனவே அந்த மாயப் பொருள் எது என்றும் அதன் விலை என்ன என்றும் அறிய மறுநாள் கடைக்குச்
சென்று வினவிய போது
'இல்லை அண்ண ஒரே விலை மரக்கறியள ஒண்டா நிறுத்து பில் அடிச்சிருப்பினம்" என்றார்
அப்படி எனில் நான் வாங்கிய பொருட்களின் எண்ணிக்கை அல்லவா கூடியிருக்க வேண்டும் என்றதும்
அவர் சொன்னார் " நீங்கள் ஒரு வேள ஏதாவது சாமான பாக்கில போடாம மறந்திருப்பியள்"  ஆக்கள்
மறந்து விட்ட சாமான  கண்டா பொடியள் கீழ  எடுத்து வைச்சிருப்பினம்", பிறகு வாங்க கேட்டு சொல்லுறன்
என்றவாறு அடுத்த வாடிக்கையாளரின் பொருட்களுக்கு விலை அடிக்கத் தொடங்கிவிட்டார்.

கடைச் சிப்பந்தியின் பதில், பல பொருட்களை கொள்வனவு செய்யும் போது லாவகமாக
மாயப் பொருட்களையும் இணைத்து விடுகிறாரோ என்ற என் சந்தேகத்தை வலுவூட்டியது. :blink:

நீங்களும் அவதானமாக பொருட்களின் எண்ணிக்கையையும்  சிட்டையையும் சரி பாருங்கள்

அடுத்ததாக  பலரும் லா சப்பலில் விலை மலிவு  , சேவை   சுத்தம்  நலிவு என்ற கருத்தை
பதிந்தனர். விலை மலிவு என்பதை நான் ஏற்கவில்லை. எமது சமையலுக்கு தேவையான
பொருட்கள் (கறிவேப்பிலை முருங்கை காய் , கீரைவகை இட்லி அரிசி ....... பொரிஅரிசி வெற்றிலை சுண்ணாம்பு..
பொங்கல் பானை....)   இங்கே மட்டுமே கிடைப்பதாலும், எம் நாவுக்கு பழக்கமான சுவையில் உணவகங்கள் இருப்பதாலும்
நான் (நாங்கள்) செல்கி(றோம்)றேன்  என்பது என் கருத்து.    

மீன்கடைகளில் காட்சிப்படுத்தப்படும் மீனின் தொகைக்கு ஏற்ப போதுமான அளவு ஐஸ்கட்டி இடப்படுவதில்லை
இது கூட சுகாதாரக் கேட்டுக்கும் துர்நாற்றத்திற்கும் காரணமாக இருக்கும்.   :icon_idea:

குறைகளை உரிய நிர்வாகத்திடம் தெரிவிக்க, பிரன்சு மொழியில் அலுவலகக் கடிதங்கள் எழுதுவதில்
போதிய மொழியறிவு இன்மையும் ஒழுங்கீன (ர்களுக்குச்) ங்களுக்குச் சாதகமாக உள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.