Jump to content

ஐ.ம.சு.கூ.இன் களனி பிரதேசசபை உறுப்பினர் ஹசித்த மடவல துப்பாக்கிச் சூட்டில் பலி


Recommended Posts

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேசசபை உறுப்பினரான ஹசித்த மடவல துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இன்று உயிரிழந்துள்ளார்.

ஹசித்த மடவலவில் வீட்டுக்ருமையில் வைத்து மாலை 7.30 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹசிக்க  உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=2401

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை

GTNBreakingNews.jpg


 

மேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை

களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொல்லப்பட்டார்.

 

இன்று மாலை களனியிலுள்ள அவரது வீட்டுக்கருகில் வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

 

இதில் படுகாயமடைந்த ஹசித்த மடவல ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

களினி பிரதேசம் தனக்குச் சொந்தமானது என கூறிவரும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கும் களனி பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் இடையே கடுமையான மோதல்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருந்தன. 

இதில் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கெதிராக ஹசித்த மடவல நேரடி மோதல்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

 

ஒரு சந்தர்ப்பத்தில் அமைச்சர் மேர்வின் சில்வாவின் அடியாள் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து வேறொரு குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87286/language/ta-IN/article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பழியைப் போடுவதற்கு இப்போது புலிகள் இல்லை ......... யாரையாவது சொல்லவேண்டியதுதான்.  

Link to comment
Share on other sites

மேர்வின் சில்வா குழுவினர் செய்திருக்கலாம்

 

சிங்களவர்களும் சகோதரப்படுகொலை செய்வார்களா?

Link to comment
Share on other sites

புலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு
 

 

 ஆனால் இவர்கள் ஆடுகள் மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல்கொடுக்கும் பண்பாளர்கள்  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களவர்களும் சகோதரப்படுகொலை செய்வார்களா?

 

எல்லாவற்றையும் சிங்களவருக்கு சொல்லி கொடுத்த தமிழன் (ஒட்டுகுழு ) சகோதர படு கொலை செய்வதை சொல்லி கொடுக்கமலா இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

களனி பிரதேச சபைத்தலைவரும் மற்றவர்களும் மேர்வின் கும்பலுக்கு எதிராக செயல்ப்பட்டவர்கள் அதன் தொடர்ச்சி தான் இந்த சம்பவமோ தெரியவில்லை

சுட்டுக்கொலப்பட்ட ஜேவிபி இளைஞர்கள் பெரும்பாலும் சிங்களவர்கள் தானே

அரசியல் தலைவர்களான சந்திரிகாவின் கனவனில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர வரை அரசியல் அதிகார போட்டிகளால் சிங்களவர்கலாலையே கொல்லப்பட்டவர்கள்

Link to comment
Share on other sites

UPFA Member of the Kelaniya Pradeshiya Sabha Hasitha Madawala who was arrested in Peliyagoda Saturday morning has been remanded till Monday.

 

This was after he was being produced before the Mahara Magistrate Court.

Police Media Spokesperson SP Ajith Rohana said that the Pradeshiya Sabha member was arrested when an argument broke out at a meeting that was held  to solve the issue of disposal of garbage.

A problematic situation arose as garbage in Kelaniya  had been not removed recently.

It is learnt that  garbage disposal activities disrupted due to an issue that cropped up with regard to a land in the Manelgama area in Peliyagoda that was used for this purpose.

A meeting was held Saturday morning to find solutions for this issue with the participation of  residents.

The meeting was presided by Senior DIG in charge of the Western Province Anura Senanayake while the Chairman of the Kelaniya Pradeshiya Sabha and health officials were also present at the discussion.

’’I will put a police post here and the police will fully control this. However, all tractors and
garbage loads that will come here need to sign. The police will put log books and a officer must be assigned from the Pradeshiya Sabha as well,’’ said Senior DIG in charge of the Western Province Anura Senanayake

However, the  residents had urged that the disposal of garbage at this location be stopped.

’’Just because you say -  I have no right to stop the disposal of garbage at the location. Yesterday the magistrate has issued an order what needs to be done," added Senior DIG in charge of the Western Province Anura Senanayake

Meanwhile,  UPFA member of the Kelaniya Pradeshiya Sabha Hasitha Madawala who was present at the location it is alleged had  behaved in an unruly manner thereby disrupting the meeting.

Residents had begun to leave the location in protest over the unruly behaviour of Madawala.

Hasitha Madawala was subsequently removed from the location with the intervention of the
police officers.

The  residents who left the premises had arrived at the hall yet again.

’’He attempted to behave in an unruly manner. I arrested him and he was being taken to the
police,’’ said Senior DIG-in-Charge of the Western Province Anura Senanayake

Tag: Sri Lanka News, Newsfirst, Lankanews,  Senior DIG in charge of the Western Province Anura Senanayake, UPFA member of the Kelaniya Pradeshiya Sabha Hasitha Madawala

 

 

http://www.newsfirst.lk/news1st/node/14281



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள் கொலைகள் என்பதை சிங்களவனே அதிகம் செய்தான்

செய்கின்றான்.

 

ஆனால் அவனது இலட்சியத்தில் அவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். அத்துடன் வெற்றியும் சேர்ந்து இவற்றை மறைத்துவிடுகிறது.

 

நாமும் வென்றிருந்தால்...................???

Link to comment
Share on other sites

களனி பிரதேசத்தில் மேர்வின் சில்வாவை எதிர்த்து தொடர் போராட்டங்களை நடத்தியவர்களில் இவரும் ஒருவர். ஆனாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட மாட்டார்கள். குற்றத்தை செய்தவர் எங்காவது மிருகங்கள் கொல்லப்படுகின்றனவா என்று ஆராய்ந்து கொண்டு திரிவார்.

Link to comment
Share on other sites

1956 லிருந்து தானும் தின்னாமல் தமிழரும் தின்னாமல் பார்த்துகொண்ட மோடையா கூட்டம்.  JVP கெதியிலை திரும்பி வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

;JVP கெதியிலை திரும்பி வரும்.

அப்ப இந்தியாவும் திரும்பி வரும்....

Link to comment
Share on other sites

அப்ப இந்தியாவும் திரும்பி வரும்....

 

ASP சண்முகம் போன்ற தமிழர் சிறிமாவை காப்பாற்றி முடியத்தான் இந்தியா வந்து சேர்ந்தது. சிறிமாதான் கூப்பிட்டவ. மகிந்தா மேற்கு நாடுகளிடமிருந்து தன்னை பாதுக்காக்க இந்தியாவை கூப்பிடலாம். 

 

J.R. இந்தியாவை கூப்பிட்டது தட்சரின் அறிவுறுத்தலின்படியே. 

 

அதாவது சிங்கள தலைமை பீடம் ஆபத்தை சந்திக்கும்பொதெல்லாம் இந்தியா வரும்.

 

ஆனால் "JVP திரும்பி வரும்" என்பது புலிகள் திரும்பவரும் என்ற எதிர்வு கூறல் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இந்தியாவும் திரும்பி வரும்....

இந்தியா எப்போது இலங்கையை விட்டுப் போனது திரும்பிவருவதற்கு? அது எப்போதும் இலங்கையுடந்தானே இருக்கிறது ?

Link to comment
Share on other sites

மஹிந்தவின் அரசியல் சகா மேர்வின் சில்வாவினால் சுட்டுக்கொல
 
 
 சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்தவின் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களனி பிரதேச சபையின் உறுப்பினரான ஹஸித மடவல இன்று (05) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். உயிருக்குப் போராடிய நிலையில் இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
 

 

இன்று பகல் இவர் தனது வீட்டுக்கு முன்னாள் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த இனந்தெரியாத [மேர்வின் சிவாவும் அவரது குழுவும்] குழுவொன்றே இவரைச் சுட்டுவிட்டுச்  தப்பிச் சென்றுள்ளது.

 

களனி தொகுதியின் “அரசியல் தாதா“வான அமைச்சர் மேர்வின் சில்வாவுடன் அண்மைக் காலமாக இவர் முரணபட்டுக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.eelanatham.net/story/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88

 

Link to comment
Share on other sites

சிங்களவர்களும் சகோதரப்படுகொலை செய்வார்களா?

 

பாலியல் வன்முறைகளில், கொள்ளைக் கும்பல், சிங்கள-இந்திய பயங்கரவாதிகளின் கைகூலிகளாக தமிழினத்தை தொடர்ந்து அழிக்கும்  கயவர்களை எச்சரிக்கைகளின் பின்னர் அழித்தால் - அது சகோதரப் படுகொலையாம்!

இந்தக் கயவர்களை சகோதரங்களாக உருவகிப்பவர்கள் எப்படிப்பட்ட கயவர்களாக இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை  

எனவே அகூதா உங்கள் கேள்விக்கு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பதில் கிடைக்காது!

Link to comment
Share on other sites

  ஆனால் இவர்கள் ஆடுகள் மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிராக குரல்கொடுக்கும் பண்பாளர்கள்  :wub:

 

with-animal600.jpg

Link to comment
Share on other sites

ஆடு, மாடுகளை தமிழரும் முஸ்லீம்களும் கொல்வதாக நடிக்கிறார்கள். இறைச்சியை வாங்கி மொட்டைகள் வரயும் போட்டு பிடிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

களனி ஸ்ரீ.ல.சு.கட்சி அலுவலகத்திலிருந்து ஆயுதங்கள் மீட்பு

 

களனி, நுங்கமுகொட பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் கிளை அலுவலகத்தின் வளாகத்திலிருந்த வீடொன்றிலிருந்து இரு வாள்களும் கைக்குண்டொன்றும் இன்று புதன்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56543-2013-01-09-10-15-28.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.