Jump to content

2012ல் ஆதிக்கம் செலுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர்கள்-இந்தியா பெரும் சொதப்பல்!


Recommended Posts

2012ம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் வீரர்களே கிரிக்கெட் உலகில் சத்தம் போடாமல் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒரு நாள் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்தவர்களே பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் முன்னணியில் இருந்தனர். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் இலங்கை வீரரே முன்னணியில் இருந்தார். இந்திய வீரர்கள் எந்த ஒருகிரிக்கெட்டிலும் உலக அரங்கில் இந்த ஆண்டு பிரகாசிக்கவில்லை. முற்றிலும் இருண்டு போன ஆண்டாக இந்த ஆண்டு இந்தியாவுக்கு அமைந்து போனது. டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே முதல் பத்து வீரர்களில் ஒருவர் கூட இந்தியர் இல்லை என்பது ரசிகர்களுக்குப் பெரும் சோகமான செய்தியாகும். ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல் 1/9 Light on ஒரு நாள் பந்து வீச்சில் மலிங்கா கலக்கல் ஒரு நாள் போட்டி பந்து வீச்சில் இலங்கை வீரர் லசித் மலிங்காதான் முன்னணியில் இருந்தார். அவர் 32 போட்டிகளில் 47 விக்கெட்களைச் சாய்த்தார். மேற்கு இந்திய அணிகள் வீரர் சுனில் நரைன் 34 விக்கெட்களுடன் 2வது இடத்தைப் பிடித்தார். இலங்கை வீரர் திசரா பெரைரா 32 விக்கெட்களுடன் 3வது இடத்தைப் பெற்றார். டாப் 10 வீரர்களில் இந்தியாவுக்கு இடமில்லை 2/9 Light on டாப் 10 வீரர்களில் இந்தியாவுக்கு இடமில்லை ஒரு நாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் வரிசையில் டாப் 10 இடத்தில் இந்தியர் ஒருவர் கூட இடம் பெறவில்லை என்பது சோகமானது. பேட்டிங்கில் சங்கக்கரா டாப் 3/9 Light on பேட்டிங்கில் சங்கக்கரா டாப் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங்கில் இலங்கை வீரர் குமார சங்கக்கரா முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் மொத்தம் 1184 ரன்களை இந்த ஆண்டு குவித்தார். இதில் 3 சதம், 6 அரை சதம் அடக்கம். 2வது இடத்தில் இலங்கையின் திலகரத்னே தில்ஷன் இடம் பெற்றுள்ளார். இவரது பங்கு 1119 ரன்கள் ஆகும். கோஹ்லிக்கு 3வது இடம் 4/9 Light on கோஹ்லிக்கு 3வது இடம் இந்திய வீரர் விராத் கோஹ்லி இந்த வரிசையில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 2012ம் ஆண்டில் 1026 ரன்கள் சேர்த்தார். கம்பீருக்கு 9வது இடம் 5/9 Light on கம்பீருக்கு 9வது இடம் பேட்டிங் வரிசையில் இன்னொரு இந்திய வீரரும் டாப் 10 வீரர்களில் இருக்கிறார். அவர் கெளதம் கம்பீர். இவர் 685 ரன்களுடன் 9வது இடத்தைப் பிடித்துள்ளார். டெஸ்ட் பேட்டிங்கில் ஒரு இந்தியரும் இல்லை 6/9 Light on டெஸ்ட் பேட்டிங்கில் ஒரு இந்தியரும் இல்லை டெஸ்ட் பேட்டிங்கைப் பொறுத்தமட்டில் இந்தியர் எவரும் டாப் 10 வீரர்களில் இல்லை. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளர்க் முதலிடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 1595 ரன்களைக் குவித்தார். பந்து வீச்சிலும் இந்தியா சொதப்பல் 7/9 Light on பந்து வீச்சிலும் இந்தியா சொதப்பல் டெஸ்ட் பந்து வீச்சைப் பொறுத்தமட்டில் இலங்கை வீரர் ரங்கண ஹெராத் முதலிடத்தில் உள்ளார். அவர் மொத்தம் 10 போட்டிகளில் ஆடி 60 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதில் ஏழு முறை 5 விக்கெட்களையும், 2 முறை பத்து விக்கெட்களையும் அவர் சாய்த்தார். அஸ்வினுக்கு 12வது இடம் 8/9 Light on அஸ்வினுக்கு 12வது இடம் டெஸ்ட் பந்து வீச்சில் ஜொலித்த முதல் பத்து பேரில் இந்தியர் ஒருவர் கூட இல்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் 37 விக்கெட்களை வீழ்த்தி 12வது இடத்தில் இருக்கிறார்.

Read more at: http://tamil.thatscricket.com/news/2013/01/01/2012-odis-lasith-malinga-top-bowler-001683.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.