Jump to content

நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திர


Recommended Posts

நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திரளாக மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்!

நோர்வே மன்னரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை சந்தித்த போது பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் மீண்டும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நோர்வே மன்னர் 5 ஆம் கறால்ட்டை இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அரச மாளிகையில் மங்கள சமரவீர சந்தித்தார்.

இச்சந்திப்பு இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 2.15 வரை நடைபெற்றது.

இனப்படுகொலை நிகழ்த்துகிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரை நோர்வே மன்னர் சந்திப்பதை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட நோர்வே தமிழர்கள் அரச மாளிகையின் முன்திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நோர்வே மன்னருடனான சந்திப்பு முடிவடையும் வரை ஏறத்தாழ ஒரு மணி நேரம் நோர்வே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ் மக்கள் மீது அப்பட்டமான படுகொலை வெறியாட்டங்களையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்டு வரும் ஒரு பயங்கரவாத அரசின் பிரதிநிதியை நோர்வே மக்களின் சின்னமாகவும் நோர்வே தேசத்தின் சின்னமாகவும் விளங்கும் மன்னர் சந்திப்பது தமிழ் மக்களைக் கவலை அடையச் செய்கின்றது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

"மங்கள சமர வீர - பயங்கரவாத அரசின் அமைச்சர்"

"சிறிலங்கா - தோற்றுப் போன ஒரு தேசம்"

"குருதியில் குளிக்குது தமிழினம், உலகே!, சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை நிறுத்து!"

"தமிழர்களைக் கொல்லாதே, சிறுவர்களைக் கொல்லாதே"

என்று ஆங்கிலத்திலும் நோர்வேஜிய மொழியிலும் எழுதப்பட்ட பல்வேறு பதாகைகளையும்

அல்லைப்பிட்டி மற்றும் மன்னார் வங்காலை படுகொலை அவலங்களின் படங்களையும்

தாங்கியவாறு பெண்கள், இளையோர்கள், பெரியவர்கள் என 400-க்கும் மேற்பட்ட ஒஸ்லோ வாழ் தமிழ் மக்கள் தமது உள்ளக் குறறல்களை வெளிப்படுத்தினர்.

இதனிடையே நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் சார்பில் நோர்வே மன்னருக்கு மனு ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சிறார்களையும் பொது மக்களையும் கொன்று குவிக்கும் பயங்கரவாத அரசாங்கத்தின் பிரதிநிதிக்கு நோர்வே மன்னரின் வரவேற்பும் மதிப்பும் அளிக்கப்படுவது, நோர்வேயைத் தமது இரண்டாவது தாயகமாக நேசிக்கின்ற நோர்வேத் தமிழர்களை பெரும் கவலை அடையச்செய்கின்றது என்று அம் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கு மன்னரைச் சந்திப்பதற்கான நேரமும் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

புதினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வேயும் இப்பொழுது எங்களை கைவிட்டுவிட்டதா? இனவாதிகளுக்கு வரவேற்பளித்து.... இன்னும் இன்னும் தமிழரைக் கொல்லச்சொல்கிறதா?

Link to comment
Share on other sites

மங்களவுக்கு உயர்நிலை அரசியல் வரவேற்பால் தமிழர்கள் கவலையடைவர்: எரிக் சொல்ஹெய்ம்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு நோர்வேயில் வழமைக்கு மாறான உயர்நிலை அரசியல் வரவேற்பு அளிக்கப்படுவதால் தமிழர்கள் கவலையடையக்கூடும் என்று நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

"என்ஆர்கோ" தொலைக்காட்சியின் இணையச் செய்திக்கு எரிக் சொல்ஹெய்ம் அளித்த நேர்காணல்:

ஒரு நாட்டின் வெளியுறவு அமைச்சருக்கு வழங்கப்படுகின்ற வரவேற்பிற்கு அதிகமான வரவேற்பு மங்கள சமரவீரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தாம் பாரபட்சமாக நடாத்தப்படுவதான உணர்வு தமிழ் மக்களுக்கு ஏற்படும் வாய்ப்பு உண்டு என்றார் எரிக் சொல்ஹெய்ம்.

நோர்வே வெளிவிவகார அமைச்சரை மங்கள சமரவீர சந்தித்த போதும் தமிழ் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு வார கால நோர்வேப் பயணம் மேற்கொண்டுள்ள மங்கள சமரவீரவிற்கு நோர்வேயில் உயர்மட்ட அரசியல் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது.

நோர்வே மன்னர்இ தலைமை அமைச்சர்இ நாடாளுமன்ற சபாநாயகர்இ வெளிவிவகார அமைச்சர் மற்றும் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருடன் இதுவரை சந்திப்புக்கள் நடைபெற்றுள்ளன.

மங்களவுக்கு நோர்வே உயர்நிலை வரவேற்பளித்து வருகின்றமைஇ நோர்வேத் தமிழர்களைக் கவலையடையச் செய்துள்ளது என்று நோர்வேயின் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

"என்ஆர்கோ" தொலைக் காட்சியின் இணையத்தளம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில்இ

மங்களவிற்கான நோர்வே மன்னரின் வரவேற்பு தொடர்பாக நோர்வேயிலிருந்து பயணமாகும் போது தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த அதிருப்தி பற்றிய செய்தியை பதிவு செய்துள்ளது.

புதினம்.

Link to comment
Share on other sites

நோர்வேயும் இப்பொழுது எங்களை கைவிட்டுவிட்டதா? இனவாதிகளுக்கு வரவேற்பளித்து.... இன்னும் இன்னும் தமிழரைக் கொல்லச்சொல்கிறதா?

எரிக் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஆனால் நாளை புலிகளும் கவலை தெரிவிக்க வேண்டிவரும்.

Link to comment
Share on other sites

போன மீற்ரிங்கோட கொஞ்சம் விளங்கியிருக்கும், கொடியும் பிடிச்சு கத்துங்கோ, அவங்களுக்கும் உதுகள் வடிவா விளங்கவேணும்.

Link to comment
Share on other sites

நோர்வேக்கு விளங்கி விட்டது போர் தொடங்குவது முடுவாகிவிட்டது, அப்போ அவர்களும் அரசு என்ற ரீதியில் கட்சி மாறிவிட்டார்கள். இனி போர் தொடங்கி பிறகு என்ன நிலமையோ அதன் பிறகு புலிகளுடன் சேர்வார்கள்

Link to comment
Share on other sites

போன மீற்ரிங்கோட கொஞ்சம் விளங்கியிருக்கும், கொடியும் பிடிச்சு கத்துங்கோ, அவங்களுக்கும் உதுகள் வடிவா விளங்கவேணும்.

இவ்வளவுகாலமும் விளங்காமல்த்தான் சனம் இருந்தது எண்டே நினைக்கிறீர்.... அதுகள் என்ன செய்யுதுகளே அதை சரியாகவே செய்யுதுகள்....! நீர் வேணும் எண்டால் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு கூட்டத்தை கூட்டி கொடிபிடிச்சுபாரும்.... எத்தினை பின்னால வருது எண்டு...!

உம்மடை கையாலாகாத தனத்தை மற்றவை எது செய்தாலும் நொட்டை பிடிக்கிற வைகல் பட்டடை நாய் வேலை காட்டாதையும்.... இதை வேற மாதிரியும் சொல்லுறவை... ஒற்றுமைக்கு சோனகர்களிட்ட நீர் எல்லாம் பிச்சை வாங்கி திண்டாலும் சரிவராது....!

அது சரி உம்மட பிரச்சினைதான் என்ன எண்டுறீர்... அகதியா வந்து என்சோய் பண்ணுறன் எண்டீர் அதைப்பாருமன்... இங்கை வந்து வெட்டிபுடுங்குறன் எண்டு வேற நிக்கிறீர்....

Link to comment
Share on other sites

இவ்வளவுகாலமும் விளங்காமல்த்தான் சனம் இருந்தது எண்டே நினைக்கிறீர்.... அதுகள் என்ன செய்யுதுகளே அதை சரியாகவே செய்யுதுகள்....! நீர் வேணும் எண்டால் இலங்கைக்கு ஆதரவாய் ஒரு கூட்டத்தை கூட்டி கொடிபிடிச்சுபாரும்.... எத்தினை பின்னால வருது எண்டு...!

உம்மடை கையாலாகாத தனத்தை மற்றவை எது செய்தாலும் நொட்டை பிடிக்கிற வைகல் பட்டடை நாய் வேலை காட்டாதையும்.... இதை வேற மாதிரியும் சொல்லுறவை... ஒற்றுமைக்கு சோனகர்களிட்ட நீர் எல்லாம் பிச்சை வாங்கி திண்டாலும் சரிவராது....!

அது சரி உம்மட பிரச்சினைதான் என்ன எண்டுறீர்... அகதியா வந்து என்சோய் பண்ணுறன் எண்டீர் அதைப்பாருமன்... இங்கை வந்து வெட்டிபுடுங்குறன் எண்டு வேற நிக்கிறீர்....

உவயள் கூட்டம்கூடினவதானே பெல்யியத்தில் ஜந்தாறுபேர் பியர்போத்தல்களுடன், வலைப்பதிவுகளில் பெரிய பட்டிமண்றமே நடந்தது, உவயள் வச்சிருக்கிறது கோணிக்கன் பியரா அல்லது வேறு பியரா என்று. :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேத் தமிழர்கள் செய்தது ஒரு வித முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும். மங்கள சமரவீரவிற்கு காட்டிய எதிர்ப்பைத் தான் எரிக் சொல்கையும், இந்த மரியாதை தமிழ்மக்களைச் சீண்டி விடும் நிலையை உருவாக்கின்றது என்று கூறுவது எம் நோர்வே மக்களின் கண்டணத்தை நோர்வே அரசாங்கம் பதிவு செய்கின்கின்றது என்பதை உணர்த்துகின்றது.

எனவே ஒவ்வொரு நாட்டிலும் சிங்கள முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வரும்போது இவ்வாறன ஆர்ப்பாடட்ங்கள் அவசியமானதாகும். இதன் மூலம் தமிழர் ஒற்றுமையையும், எம் எதிர்ப்பினையும் பதிவு செய்யலாம்!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.