Jump to content

டெல்லி கிரிக்கெட்: கடுமையாகப் போராடி இந்தியாவுக்கு 'த்ரில்' லான ஆறுதல் வெற்றி!!


Recommended Posts

 டெல்லி கிரிக்கெட்: கடைசி நேர திருப்பத்தில் பெரும் போராட்டத்தில் இந்திய அணிக்கு த்ரில்லான ஆறுதல் வெற்றி!!டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி நேர திருப்பத்தில் கடுமையான போராட்டத்துக்கு இடையே த்ரில்லாக 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. ஒருநாள் போட்டியில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்தியாவுக்கு இது ஆறுதல் வெற்றி!இந்தியா வருகை தந்துள்ள பாகிஸ்தான் அணியுடனான 2 ஒருநாள் போட்டிகள் சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்தியா தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியில் ஷேவாக் இடம்பெறவில்லை. ரஹானேவும் அசோக் திண்டாவுக்குப் பதில் சமி அகமது சேர்க்கப்பட்டனர்.சொதப்பல் இந்தியாபோட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக காம்பீரும் ரஹானேவும் களமிறங்கினர். 4.3-வது ஓவரில் இந்திய அணி 19 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ரஹானே அவுட் ஆனார். அவர் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதைத் தொடர்ந்து மேலும் சில ஓவர்கள் தாக்குப் பிடித்த காம்பீர் 8.4வது ஓவரில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இவர்களைப் போலவே கோஹ்லி 7 ரன்களில் வெளியேறினார். 15.5-வது ஓவரில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த யுவராஜ்சிங் அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி முக்கிய 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த போது மொத்தம் 63 ரன்களே எடுத்திருந்தது.167 ரன்கள்..பின்னர் டோணியும் ரெய்னாவும் சிறிது ரன்களை சேர்க்க ஒருவழியாக 100 ரன்களைக் கடந்தது இந்திய அணி. 111 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில் ரெய்னா அவுட் ஆனார். அடுத்து வந்த அஸ்வின் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். இந்திய அணி 131 ரன்களை எடுத்த போது டோணியும் அவுட் ஆனார். பின்னர் எவரும் நிலைத்து நிற்கவில்லை. 43.4 -வது ஓவரில் 167 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி விக்கெட்டையும் இந்தியா பறிகொடுத்தது. பாகிஸ்தான் வெல்ல 168 ரன்கள் என்ற எளிதான இலக்கை நிர்ணயித்தது.பாகிஸ்தானும் தடுமாற்றம்பாகிஸ்தானின் தொடக்க வீரர்களாக அதிரடி மன்னன் ஜாம்ஷெட்டும் கம்ரன் அக்மலும் களமிறங்கினர். தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தார் புவனேஷ்வர். 2.1-வது ஓவரில் அக்மலை சாய்த்தார். அடுத்த 6.5வது ஓவரில் யூனூஸ் கானையும் புவனேஷ்வர் வெளியேற்றினார். அந்த அணியின் தூணான ஜாம்ஷெட் 34 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் அகப்பட்டு வெளியேறினார். கேப்டன் மிஸ்பா உல்ஹக்கு உமர் அக்மலும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 100 ரன்களைக் கடக்க வைத்தனர். 113 ரன்களை அந்த அணி எடுத்த நிலையில் 34.1 -வது ஓவரில் அஸ்வின் பந்தில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் மொத்தம் 39 ரன்களை எடுத்திருந்தார். பின்னர் உமர் அக்மலுடன் சோயப் மாலிக் இணைந்தார். ஆனால் மாலிக் 5 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மாவின் பந்தில் எல்.பி.டபிள்யூ. அவுட் ஆகினார். அப்போது பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 119 ரன்களை எடுத்திருந்தது.கடைசி நேர திருப்பம்நிலைத்து நின்று 25 ரன்களை எடுத்திருந்த உமர் அக்மல் 39.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் அவுட் ஆனதால் ஆட்டம் பரபரப்பானது. ஓவர்கள் இருந்தாலும் பாகிஸ்தானின் விக்கெட்டுகள் சடசடவென சரிந்ததால் ஏதாவது திருப்பம் ஏற்படும் என்ற நிலை உருவானது. 7 ஓவர்களில் 30 ரன்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆடுகளம் பரபரப்பானது. ஒரு கட்டத்தில் 24 பந்துகளில் 24 ரன்களை எடுக்க வேண்டிய நிலை உருவானதால் ரசிகர்களிடம் கடைசி நேர டென்ஷன் தொற்றிக் கொண்டது.கடைசி ஓவர்களில் டென்ஷன்இந்த டென்ஷ்ன் பாகிஸ்தானின் உமர் குல் 11 ரன்கள் எடுத்த நிலையில் 46.2-வது ஓவரில் அவுட் ஆக பாகிஸ்தானின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 144 ரன்களாக இருந்தது. அந்த அணி வெற்றி பெற 22 பந்துகளில் 24 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நெருக்கடிக்குப் போனது. இதனால் ரசிகர்களிடையே டென்ஷன் இன்னும் உச்சமானது. 11 ரன்களுடன் களத்தில் இருந்த ஹபீசுடன் அஜ்மல் இணைந்தார். ஆனால் வந்த வேகத்தில் அஜ்மல், சமி அகமது பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆன ஆடுகளத்தில் இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தனர். இந்தியா வெற்றியை நோக்கிப் பயணிப்பது உறுதியானது. அப்போது 16 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தாக வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. ஆனால் வந்த வேகத்தில் ஜூனைத்கான் டக் அவுட் ஆகிவிட இந்தியா த்ரில் வெற்றியை கொண்டாட தயாரானது.15 பந்துகளில் 23 ரன்களை எடுத்தாக வேண்டிய நிலையில் முகமது இர்பான் களமிறங்கினார். கடைசி இரண்டு ஓவர்கள்தான் என்ற நிலையில் பாகிஸ்தான் வீரர்கள் அடித்து விளையாடினர். இதனால் 9 பந்துகளில் 16 ரன்கள் என்ற நிலை உருவானது. இஷாந்த் சர்மா வீசிய 49- வது ஓவரில் ரன்களை குவித்த பாகிஸ்தானின் ஹபீஸ் விக்கெட் 48.5-வது ஓவரில் பறிபோக இந்திய அணி கடும் போராட்டத்துக்கு இடையே 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. பாகிஸ்தான் அணியால் 157 ரன்களை மட்டும் எடுக்க முடிந்தது3 போட்டிகளைக் கொண்ட இத்தொடரில் பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆறுதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

Read more at: http://tamil.thatscricket.com/news/2013/01/06/ms-dhoni-doubtful-3rd-odi-due-sore-back-001688.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.