Jump to content

அப்பாவி அய்யா சாமியும் ஈழப் போராட்டமும்


Recommended Posts

அப்பாவி அய்யா சாமியும் ஈழப்போராட்டமும்

--------------------------------------------------------------------------------------

[ முன்னறிவித்தல்: இதில் எழுத்துப் பிழைகள் இருந்தால் என்னிடம் சொல்லலாம். கருத்துப் பிழைகள் இருந்தால் அய்யாசாமியிடம் சொல்லலாம். அவருடைய முகவரி c/o ரிம் கோற்றன்]

நல்ல ஒரு மாலைப்பொழுது. சூரியன் மெல்ல மெல்லக் கீழிறங்கி வர மேகப் பெண் வெட்கத்தில் சிவக்கத் தொடங்கிவிட்டாள். அவர்களுக்குள் என்ன சில்மிஷமோ.... நேரம் செல்லச் செல்ல அவள் செம்மை கூடிக் கொண்டிருந்தது. நானும் எதையெதையோ எண்ணிக்கொண்டு ரிம்கோற்றனில் ஒரு கோப்பி வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தேன். சமர் காலம் என்பதால் நேரம் 6 மணியைத் தாண்டியும் வெளிச்சம் இருந்து கொண்டிருந்தது.

அப்போதுதான் அவர் வந்தார். அவர் அய்யா சாமி. ஆதிவாசியையும் விட ஒரு அப்பிராணி. மெல்லத்தான் பேசுவார். "அண்ணை மஹாராஜா" என்ற படி வந்தவர் ஒரு டபிள் டபிள் எடுத்துக் கொண்டு என்னுடன் தொத்திக் கொண்டார். மெள்ள மெள்ளக் கதை பரவி நாட்டு நடப்புகளுக்குள் கால் வைத்ததும் தான் தாமதம் குடிச்ச கோப்பி சூடாயிருந்ததோ என்னவோ அவரும் சூடாகிப் போய்விட்டார். " கெப்பிட்டிக் கொல்லாவில 50 ,60 சிங்களச் சனம் செத்துப் போட்டுதுகள் கேள்விப் பட்டியளோ " என்று கேட்டேன்.சிறிது நேரம் சும்மா இருந்தவர், மெள்ளக் கதைக்கத் தொடங்கினார். " கேள்விப்பட்டனான்... அவங்களே செய்து போட்டு புலியள்ல பழி போடுறாங்கள்" என்றவர் "நாங்கள் தான் செய்ததெண்டாலும் அது பிழையில்லை..." எண்டார்.

" என்ன அய்யாசாமி இப்படிச் சொல்லுறியள் மக்களைக் கொல்லுறது.... " சொல்லி முடிக்கவில்லை சீறிப் பாய்ந்த சிங்கம் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி எண்டு ஓடிவிடும் . அப்பிடி ஒரு சினப்பு .அவரைச் சொல்லவிட்டிட்டு "மெள்ள மெள்ள .." என்று இடைக்கிடையே அமைதிப் படுத்தினேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னவோ ஏதேவென்று 911 அடிச்சாலும் எண்டு உள்ளூற உதறலெடுத்தது என்னவோ உண்மைதான்.அவர் தொடங்கினார். "என்னண்ணை பொது மக்கள் எண்டு சொல்லுறியள் ... இஞ்சை தமிழ்ப் பக்கத்தில செத்ததெல்லாம் புலியள் எண்டோ சொல்லுறியள்... வங்காலையில கழுத்தில சுருக்குப் போட்டுத் தூக்கிவிட்டது புலியளையோ... அல்லைப்பிட்டியில அடிச்சும் சுட்டும் கொண்டது புலியளையோ.... கிபீரில வந்து எத்தனயோ மைலுக்கு மேல நிண்டு குண்டு போட்டு புலியள மட்டும் கொண்டு போட்டுப் போறாங்களோ...ஆமிக்காரங்களைக் கொண்டு

குண்டடிச்சுக் கொல்லுறது பத்தாதெண்டு சிங்களக் காடையளைக் கொண்டு வெட்டியும் குத்தியும் கொல்லுறது புலியள மட்டுமோ... பத்தாததுக்கு காட்டிக் குடுக்கிற கும்பல் தங்களின்ர சனத்தையே காட்டிக்குடுக்கவும் கற்பழிக்கவும் திரியுதுகள்.... இவை கொல்லுறது எல்லாம் புலியள் எண்டுறியள் ....அப்படியே ஒரு கதைக்குப் புலியள் தான் எண்டு ஒத்துக்கொண்டாலும் ஒரு லச்சத்துக்கு மேல கொண்டு போட்டாங்கள்.... பிறகேன் பதவி யேற்கிற ஒவ்வொரு சிங்கள இராணுவத் தளபதியும் புலியள் எண்ணி ஒரு 15000 தான் இருக்கினம் ..அவையைக்கொல்லுறது ஒரு பெரிய விசயம் இல்லை எண்டு சவுடால் விடுறாங்கள்... " என்றவர் மூச்சு வாங்கவும் கோப்பியைக் குடிக்கவும் ஒரு இடை வெளி விட்டார்.

இதை விட்டால் சந்தர்ப்பம் கிடையாதென்று நானும் இடையில் புகுந்து ஒரு கேள்வி கேட்டன். "அவங்கள் செய்யிறாங்கள் எண்டு நாங்களும் செய்யிறதே?"

குடிச்ச கோப்பியைக் குடிக்கவிட்டிருக்கலாம். பிழை விட்டிட்டனோவென்று பிறகு யோசித்து கவலைப்பட்டேன். அப்பிடி ஒரு சூறாவளி போல எழும்பினார். கத்தரினா நவத்திரத்தினா போல வந்துபோன கண்ட கண்ட சூறாவழியெல்லாம் பிச்சை வாங்க வேணும். அப்பிடியொரு சுழட்டுச் சுழட்டி விட்டார்.

"செய்ய வேணும் ...நல்லாச் செய்ய வேணும்... சிங்கள காடை அரசாங்கமும் சில மொட்டையளும் (பிக்குகள்... இது ஆதிவாசி போல சிலருக்கு விளங்குவதற்காக நான் போட்டது) தான் தமிழனைக் கொல்லத் துடிக்குது எண்டு நீங்கள் நினைக்காதையுங்கோ.... நீங்கள் ..ஆருக்காக இப்ப வக்காலத்து வாங்கிறீங்களோ ( வாங்கினனானோ?...அவர் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும்) ..அவையும் தான்... இல்லை எண்டால் இப்ப ஒரு லட்சத்துக்கும் மேல தமிழர் செத்துப் போட்டினம்...பல லட்சம் எங்களை மாதிரி நாடில்லாமல் அகதியளா அலையிறம்... இந்த மக்களான மக்கள் ...புத்தனை வழி படுற மக்கள்... அகிம்சையான மக்கள் ..தமிழனுக்கு நாடு குடுக்க வேண்டாம்... கொலையாவது செய்யாமல் இருங்கோ எண்டு எந்த அரசாங்கத்தையாவது கேட்டவையோ... இல்லை அப்பிடிப் பட்ட ஒரு அரசாங்கத்தையாவது தெரிவு செய்தவையோ.... கிடையவே கிடையாது.... தமிழனைக் கொல்லவேணும் எண்டுற காமதுறுவையும் ஜேவிபிக்காரனையும் பார்லிமென்றுக்குத் தெரிஞ்சு அனுப்புறது... உந்த மக்கள் தான்...பிறகு எப்பிடி உவையில இரக்கம் வரும்....''

சொல்லி நிறுத்தியவர் மடக்கெண்டு கோப்பியை ஒரு உறுஞ்சு உறுஞ்சினார்... பாவம் தொண்டைத் தண்ணீ வத்தியிருக்கும்... தொடர்ந்தார். "நாங்கள் இவ்வளவு காலமும் அவங்களின்ர இடத்துக்கையோ போய் சண்டை போட்டனாங்கள். அவையள் தான் எங்கட இடத்துக்க வந்து இவ்வளவு கொலையும் கொள்ளையும் பாலியல் வல்லுறவும் நடத்துறாங்கள்... இனி சண்டை எங்கட இடத்துக்க இருக்கக் கூடாது... ஈராக்கில அமெரிக்கா செய்யிறதைப் போல காஸ்மீரில இந்தியா செய்யிறதைப் போல அவங்கள் பாதுகாப்பாய் இருந்து கொண்டு அப்பாவிச் சனத்தை கொண்டு போடுறாங்கள். ....ஒரு ஆமிக்காரன் செத்தால் 50 சனத்தைக் கொல்லுறாங்கள்...சண்டையை நாங்கள் எங்கட இடத்துக்கை வைச்சிருக்கிறதால தான் அவங்கள் புதிசு புதிசா படைக்கு ஆக்களச் சேத்துக் கொண்டு வந்து சண்டை போடுறாங்கள்... அவங்களின்ர ஊருக்குள்ளேயே சண்டையைக் கொண்டு போக வேணும். அப்பத்தான் வலி எண்டால் என்ன இறப்பு எண்டால் என்ன எண்டு அவங்களுக்குத் தெரியும்.... சமாதானம் தனிய தமிழருக்குத் தான் வேணுமெண்டு இல்லை... சிங்களவருக்கும் வேணுமெண்டு தெரியவேணும்... அதுக்கு அவங்களுக்கும் இந்த வலி வேதனை இறப்பு துக்கம் எல்லாம் தெரிய வேணும்... இப்ப கெப்பிட்டிக் கொலாவையில 50 பேர் செத்த உடன மகிந்த அங்க போறார்...ஆறுதல் சொல்லுறார்... ஆனா இத்தனை லட்சம் தமிழ் மக்கள் செத்தினம் ... ஆராவது அப்பாவித் தமிழ்மக்கள் செத்ததுக்கு கவலை தெரிவிச்சினமே... கிடையவே கிடையாது... எல்லாம் புலிதான் அவையின்ர பார்வையில ... ஆம்பிள்ளைப் புலி பொம்பிள்ளைப் புலி... குட்டிப்புலி ...வயசு போன கிழட்டுப் புலி... எல்லாம் புலிதான்.....

ஜனநாயகம் .நடு நிலமை எண்டு சில விசருகள் சொல்லிக் கொண்டு திரியினம்.....இவையின்ர வீட்டுக்கை போய் அக்கா தங்கையைப் பிடிச்சு இழுத்த பிறகு சொல்லட்டும் எது ஜனநாயகம் எது நடு நிலமை எண்டு.... உலகத்துக்கெல்லாம் ஜனநாயகம் சொல்லிக் குடுத்த இந்தியாவில இப்ப ஜனநாயகம் இல்லை... உலகத்துக்கு இப்ப ஜனநாயகம் சொல்லிக் குடுக்க வெளிக்கிட்ட புதுப் பொலிசுக்காரன் செய்யிறதெல்லாம் எந்த வகையில ஜனநாயகம்.... ஜப்பானில சந்தோஷமாய் அணுகுண்டு போட்டினம்... வியற்நாமில அஜெண்ட் ஒரேஞ் எண்ட குண்டைப் போட்டு சோதிச்சுப் பாத்தினம்.... 911 இல இரட்டைக் கோபுரத்தை அடிச்ச உடன குய்யோ முறையோ எண்டு அலறியடிச்சு ஓடிச்சினம்...ஜனாதிபதி அண்டக்கிரவுண்டுக்க ஓடி ஒழிச்சார்......வலி வேதனை தனக்குத் தனக்கு வரத் தான் அருமை தெரியுது.... இந்திய இராணுவம் ..எங்கட ஊருக்கு வந்து செயின் புளக்கால ஆக்களப் படுக்க விட்டிட்டு ஏறி மிதிச்சினம்.... ஒரு அகிம்சாவாதியும் சொட்டுக் கண்ணீர் விடயில்ல.... அங்கை போய் குண்டடிச்சவுடன.... எத்தனை அழுகை...எத்தனை கதறல்..... ....

அன்பில்லதவனிட்ட அன்பைப்பற்றிக் கதைக்கக் கூடாது... அகிம்சை தெரியாதவனிட்ட அகிம்சை பற்றிக் கதைக்கக் கூடாது....ஜனநாயகம் இல்லாத இடத்தில ஜனநாயகம் பற்றிக் கதைக்கக் கூடாது.... தலைவர் சொல்லுறது போல ..அவலத்தைத் தந்தவனுக்கே அதைத் திருப்பிக் குடுக்க வேணும்....அது தான் சரி... ... இப்ப சிங்கள ஆமி செய்யுது ... சிங்களக் காடையள் செய்யுது எண்டு பாகு படுத்திப் பாக்கேலாது.... சிங்கள மக்களிட்டை இருந்துதான் இவ்வளவும் வருகுது..... அவைக்கே திருப்பிக் குடுக்க வேணும்... அப்பத்தான் எங்களின்ர வலியும் வேதனையும் அழுகையும் அவைக்கும் விளங்கும்..." மூச்சு விட்டு நிறுத்தியவர் கோப்பி முழுவதையும் குடித்து விட்டுத் தொடர்ந்தார்.

" இதை இயக்கம் செய்ய வேணும் இன்னார் செய்ய வேணும் எண்டு நான் சொல்லயில்லை.... மக்கள் செய்ய வேணும்.... எல்லப்புறக் கிராமங்களில எல்லாம் காடையளுக்கு பயிற்சி குடுத்து ஆயுதமும் குடுத்து வைச்சிருக்கிறாங்கள்...அது மாதிரி எங்கட மக்களுக்கும் ஆயுதம் குடுத்து போய் அடிக்க விட வேணும் ..அவங்கள் வந்து.அடிக்குமட்டும் பாத்துக் கொண்டிருக்க வேணுமெண்டு இல்லை.....அமெரிக்காவும் வேற நாடுகளும் வந்திடும் எண்டு சில பேர் பூச்சாண்டி காட்டுகினம்.... மக்கள் செய்யேக்கை பயங்கர வாதியள் எண்டு கொண்டு அவை வந்தால் வரட்டும்... இன்னொரு வியற்நாமின்ரை அனுபவம் எங்களால தான் கிடைக்க வேணுமெண்டால்... கிடைக்கட்டுமன்..." என்றவர் மூச்சு விட இடைவெளி எடுத்தபோது நான் பாய்ந்து குறுக்கிட்டேன்..."தற்செயலா மக்கள் எல்லாம் அழிஞ்சு போயிட்டால் ..." என்று விட்டு அவர் முகத்தைப் பார்த்தேன்..

என்னையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தவர் "தினம் இப்பிடி செத்துப் பிழைப்பதை விட அது எவ்வளவோ நல்லது.." என்றவர் கோப்பிக் கப்பை எடுத்து வாயில் வைத்துச் சரித்தார்... அது தானே எப்பவோ முடிந்து விட்டது என்று சொல்ல நினைத்தபோது...அவரே புரிந்து கொண்டதைப் போல கோப்பிக் கப்பை கையால் நெரித்தார். அப்போது மின்னல் போல எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ஆதிவாசி மட்டும் இப்போ என் முன்னால் நின்றிருந்தால் கப்புக்குப் பதில் ஆதி வாசியின் கழுத்தக் குடுத்திருக்கலாம்...அதுக்குத

Link to comment
Share on other sites

(பார்த்து விட்டு சும்மா போகவேண்டாம்....உங்களுடைய வெளங்காத கருத்துகளை சும்மானாச்சும் எழுதிவிட்டுப் போகவும். இல்லா விட்டால் கறுத்தண்ண அய்யாசாமி பிடிச்சு கருவறுத்து விடுவார்.. :roll: :roll: )

-எல்லாள மஹாராஜா-

என்ன எல்ஸ் இப்படி பயமுறுத்துறீங்கள்?? :oops: :roll:

Link to comment
Share on other sites

என்ன எல்ஸ் இப்படி பயமுறுத்துறீங்கள்?? :oops: :roll:[/quote

இரசிகை!

எதைச் சொல்லுகின்றீர்கள்.... கறுத்தண்ண அய்யாசாமியையா...?

அல்லது அய்யா சாமியின் சுடரும் சூறாவளியையுமா ...?

டவுட்டு கிளியர் பண்ணும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இரசிகை!எதைச் சொல்லுகின்றீர்கள்.... கறுத்தண்ண அய்யாசாமியையா...?அல்லது அய்யா சாமியின் சுடரும் சூறாவளியையுமா ...?

டவுட்டு கிளியர் பண்ணும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

கறுத்தண்ண அய்யாசாமியைத் தான்

சரி அதைவிடுங்க

அய்யாசாமிட கோவம் நியாயமானதுதான் எண்டாலும் அவருடைய சில கருத்துக்களுடன் என்னால் ஒத்துப் போகமுடியவில்லை.

Link to comment
Share on other sites

எங்கேடா ஒரிஜினல் வெளிப்படக் காணோமே என்று

நிறையவே குழம்பிப்போனேன். பதில் கிடைத்துவிட்டது எல்ஸ்.

சரி விடயத்திற்கு வருவோம் இது விளையாட்டுக்களம் இல்லை

எங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் வேதனைகளையும், சோதனைகளையும்

மட்டுமல்ல சாதனைகளையும் எடுத்து விவாதிக்கும் களமாக்கிக்

கொள்வோம்.

எல்ஸ் கூறிய ஈழத்து அய்யாசாமி இந்திரலோகத்தில இருந்து

குதித்தவரும் இல்லை, அல்லது நிம்மதியாகச் சுற்றம் சூழ

வாழ்க்கையை மகிழ்ச்சியோடு புலம்பெயர்ந்த தேசத்தில்

வாழ்பவரும் அல்ல...

பிறந்து வளர்ந்த நாட்டிலேயே ஆளும் வர்க்கத்தால்

அவலப்படுத்தப்பட்டு புலம்பெயர்ந்து தனதுஅடையாளங்களை

இழந்துகொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தின் பிரதிநிதி.

அய்யாசாமியின் குமுறல் வலியினால் எழுந்ததேயன்றி

வலுவினால் அல்ல...

இது எந்த ஒரு ஒடுக்கப்படும் இனத்திற்கோ, மனிதனுக்கோ

இயல்பாகவே எழும் நியாயமான கேள்விகள்.

விரக்தியின் விளிம்பில் நிற்கும் ஓர் இனத்தின் மூச்சு.

அதே நேரம் எல்ஸின் கேள்வியும் மிகப் பெரியதொரு

சிந்தனைத் தூண்டிலைப் போட்டு நிற்கிறது.

உணர்வுக்கு வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது.

இப்போது இரண்டும் சமஅளவில் இயங்கவேண்டிய தேவையே

அதிகமாகத் தெரிகிறது.

ஆக இங்கு எடுத்து நோக்க வேண்டிய விடயம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் உறவுகள்

உணர்ச்சி மேலீட்டால் அசட்டுத்தனமாக உளறுவதை (எல்ஸைப்போல.......

மன்னர் மன்னவன் வீர தீர கூரை கோபுர ஜெக ஜால எல்லாள மகாராஜன்)

நிறுத்தி விட்டு (ஆதிவாசியைப்போல்)

அரசியல் சாதுரியத்துடன் ஆக்கபுூர்வமாக தொடர்ந்து

செய்யவேண்டியவை நிறையவே உள்ளன.

உதாரணத்திற்கு தாயகத்தை நோக்கிய அங்கு வாழும் மக்களுக்கான

பாதுகாப்பை சர்வதேசங்களிடம் வலியுறுத்த வேண்டிய

தேவை மிகப்பாரியதாகப் படுகிறது. ஒரு நாள் உரிமைக்குரலிலோ,

101 மணிநேர உண்ணாவிரதத்திலோ,

அல்லாவிடின் ஒரு கறுப்பு வாரத்திலோ.....

சர்வதேசக் கவனத்தை முழுமையாக ஈர்த்துவிட முடியாது.

அகிம்சைப் போராட்டங்களின் தொடர்நிலையே தாயகத்தில்

வாழும் தமிழரை இனவாதப் பேயிடமிருந்து காப்பதற்கு

மாபெரும் அரனாக அமையப்போகிறது என்பதை நாளைய

வரலாறுகள் பதிவாக்கும்.

எல்ஸின் அய்யாசாமியில் ஆரம்பித்திருக்கும் ஆதங்கமானது

குமுறல்களோடு நின்று விடாமல் விவேகமான நடவடிக்கைகளிலும்

நகர்வதே நன்மை பயக்கும்.

(யோவ் எல்ஸ் உம்மோட சபையிலேயே என்வாலினால்

சரியாசனம் போட்டுள்ளேன் சின்ன விண்ணப்பம் என் வால்

நுனியில் தீப்பந்தம் சொருகி விளையாடவேண்டாம்.

ஏற்கனவே கடக வடக யோசியன் வளர்த்த ஓமகுண்டத்தில்

தீய்த்தெடுத்து விட்டார்கள்)

வெந்து நொந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

எல்லாளன் நல்லாத் தான் எழுதி இருக்கியள்,

வினை, எதிர்வினை என்ற சுழல், எது நோக்கி நகர்கிறது என்பதிலயே நடை பெறும் சம்பவங்களைப் பார்க்க வேண்டும். நடிபெறுபவை வெறும் உணர்வு மேலீட்டால் நடை பெறாமல் , ஈழத் தமிழரின் இறுதி இலக்கை நோக்கி எதிர்வினைகளை நகர்த்துவதாகா இருக்க வேண்டும்.

நடை பெறும் சம்பவங்கள் சர்வதேசம்,( வாசிக்க அமெரிக்கா), இந்தியா பிராந்திய வல்லாதிக்கச் சக்தி,தமிழ் நாடு ,சிறிலங்கா இவை எல்லாவற்றைன் எதிர் வினைகளையும் நாம் எதிர்பார்க்கும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

இதில் நாம் வெற்றி பெற்றோமா என்பதை இனி வரும் எதிர் வினைகள் தீர்மானிக்கும்.வரலாற்றின் இயங்கியலைப் புரிந்து கொண்டவர்களாலயே வரலாற்றின் திசையைத் தீர்மானிக்க முடியும்.வரலாற்றின் திசையைத் தீர்மானிப்பவர்களாலயே வரலாறு படைக்கப் படுகிறது.

Link to comment
Share on other sites

எல்ஸ் மகாராஜா நல்லா எழுதி இருக்கிறீங்க :P

அய்யாசாமி அப்பாவி சாமியா இல்லையா எண்டு எனக்கு தெரியாது ஆனால் அவருடைய கருத்துகள் எல்லா ஈழத் தமிழருக்கும் (ஒரு சில புல்லுருவிகளை தவிர்த்து) வரக்கூடியவையே

அய்யாசாமி சொல்லுறது சரிதானே போரை சிங்கள தேசத்தை நோக்கி நகர்த்துவது சிறந்ததே எமது இழப்புகள் பற்றி அவைக்கும் கொஞ்மாவது தெரிய வேண்டாமா

பி. கு : இந்தக் கருத்த நான் ஒன்றும் எல்ஸின'ர பயமுறுத்தலுக்கு பயந்து வைக்கவில்லை :evil: (இப்ப கறுப்பண்ண அய்யாசாமி ஒண்டும் செய'யமாட்டார் தானே எல்ஸ் :wink: :P )

Link to comment
Share on other sites

இது விளையாட்டுக்களம் இல்லை

எங்கள் தமிழ்ச் சமுதாயத்தின் வேதனைகளையும், சோதனைகளையும்

மட்டுமல்ல சாதனைகளையும் எடுத்து விவாதிக்கும் களமாக்கிக்

கொள்வோம்.

அய்யாசாமியின் குமுறல் வலியினால் எழுந்ததேயன்றி

வலுவினால் அல்ல...

எல்ஸின் கேள்வியும் மிகப் பெரியதொரு

சிந்தனைத் தூண்டிலைப் போட்டு நிற்கிறது.

ஆதி! உங்களுடைய சந்தேகமும் கேள்வியும் என்னிடமும் இருந்தன. அதையே அய்யாசாமியிடம் கேட்டேன். நீண்டதொரு விளக்கத்தையே தந்து விட்டார்.

என்ன .... எல்லாள மஹாராஜாவின் கஜானாவிலிருந்து 2 டொலர் 50 காசுகள் தினமும் காலியாகிக் கொண்டிருக்கின்றது.......

கோப்பி வாங்கிக் கொடுப்பது எனது வேலையாகி விட்டது....

அய்யாசாமியின் வார்த்தைகளிலேயே அவரின் வாதத்தைத் தருகின்றேன். முதலிலேயே சொன்னது போல எழுத்துப் பிழைகள் என்னிடமும் கருத்துப் பிழைகள் அவரிடமும் சென்று சேரட்டும்.

" தமிழர் சரித்திரமே தெரியாதா ஆளா இருக்கிறீங்க அண்ணை மஹாராஜா....(கிழிஞ்சுது யாவாரம்.... ஆதிவாசியால இன்னும் எனக்கு எத்தனை பேச்சுகளோ?)

" இலங்கையின் கரையோரம் முழுக்க எப்படி தமிழ் மக்கள் வாழ்ந்தினம் எண்டு யோசிச்சுப் பாத்தீங்களே. அதுக்கு அங்கையங்கை கட்டி வைச்சிருக்கிற சைவக் கோயில்கள் தானண்ணை ஆதாரம்... திருகோணமலையில கோணேஸ்வரம்... மட்டக்களப்புல மாமாங்கப் பிள்ளையார்...மாத்தளையில முத்து மீனாட்சியமன் ஆலயம்.. அங்கால சிலாபத்தில முன்னீஸ்வரம் உடப்பு முந்தல் எங்கை பார்த்தாலும் தமிழரும் சைவக்கோயில்களும் ...

இண்டைக்கும் இந்தப் பகுதியெல்லாம் தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கினம் ...ஏன் நீர்கொழும்பிலயும் இருந்ததெல்லாம் தமிழ் ஆக்கள் தான் ....கிறிஸ்தவத்துக்கு மாறி இப்ப மெள்ள மெள்ள சிங்களவராய் மாறிக்கொண்டு வருகினம்....பெர்னாண்டோ பிள்ளை ...இப்ப பெர்னாண்டோ புள்ளே ஆகி விட்டார்.....

தமிழற்றை வரலாற்றைப் பார்த்தால் .....யாழ்ப்பாண ராச்சியம் அரசு அந்தஸ்த்துடன் இருந்தது என்றாலும் வேறு பல இராட்சியங்களும் குறைந்த அந்தஸ்துடன் பிரதானி ஆட்சிப் பிரதேசங்களாக இருந்திருக்கு..... வன்னியில் வன்னிமைகள்.. பல இருந்திருக்கின்றன... மட்டக்களப்பிலும் அப்படியான ஒரு ஆட்சி இருந்திருக்கின்றது...

இலங்கையின் கடைசி மன்னன் சிறீ விக்கிரம ராஜ சிங்கன் ....சிங்களவரை நம்பி கண்டியில ஆட்சி செய்ய இல்ல... 1815 இல அவன் வெள்ளையரிட்ட தோக்குமட்டும் அவனோட இருந்த தமிழர்கள் எல்லாம் இப்ப எங்கை....

சிங்களவர்களில் இப்ப இருக்கிற நாயக்க பரம்பரை தென் இந்தியப் படையெடுப்புகளில இலங்கைக்கு வந்த தென்னிந்தியர்களான நாயக்கர்கள் ஆகக் கூட இருக்கலாம். ரத்வத்தை பரம்பரை என்பது கூட மன்னர்களால் வழங்கப் பட்ட பட்டப் பெயராய் இருக்கலாமேயொழிய அது ஒரு சிங்கள பரம்பரைப் பேர் இல்லை.....

மகிந்தரும் சங்கமித்தையும் வந்து தான் இலங்கையில் புத்த சமயத்தைப் பரப்பிச்சினம் எண்டது வரலாறு ....அப்போதிருந்த மன்னன் தேவ நம்பிய தீசன் ... இவன் என்ன மதம் இல்லாத மன்னனாகவா இருந்தான்...

அப்போ இங்கே இருந்த சமயம் என்ன....(கவனிக்க அரசு இராஜதானியெல்லாம் அமைச்சு ஆட்சிசெய்த ஒரு நாகரீகம் மிக்க மக்கள் அங்கிருந்தார்கள்...)

இராமாயணம் முழுக்க முழுக்க கட்டுக்கதை இல்லாமல் சில அரசர்களின் கீர்த்தியைப் பதிவு செய்ய எடுக்கப் பட்ட முயற்சியாய் இருக்கலாம்.... அப்போது இலங்கையின் புகழ் வடமானிலம் வரை பரவியிருந்திருக்கலாம்....வட மானில அரசகுமாரன் ராமா என்பவனது புகழை புகழ்ந்தெழுத முற்பட்ட கள்ளன் வால்மீகி இலங்கையையும் வெற்றி கொள்ளும் வலுவுடையவன் என்பதைக்காட்ட இராமாயணம் என்னும் ஒரு காவியத்தை எழுதியிருக்கலாம்.

இலங்கையுட்பட தென் மானிலங்களுக்கு பயணப்பட்டே இருக்காத வால்மீகி தான் கேள்விப்பட்ட விடயங்களையும் தனது கற்பனை மூலமும் அதைச் செய்திருக்க முடியும்.

அக்காலத்தில் தென் மானிலங்களில் நாகரீகம் குறைந்த அல்லது வட மானிலத்தில் வாழ்ந்தவர்களால் அவ்வாறு நினைக்கப்பட்ட ஒரு மக்கள் கூட்டம் அங்கு வாழ்ந்திருக்கலாம். அதனாலேயே அவர்கள் குரங்குகளாகச் சித்தரிக்கப் பட்டிருக்கலாம்....

இலங்கையில் வாழ்ந்தவர்கள் வலிமை மிக்கவர்களாக இருந்திருந்தமையால் அரக்கர்களாகச் சித்தரிக்கப் பட்டிருக்கின்றார்கள். இராவணன் சைவன் என்பதும் சிவனிடமே வரம் வாங்கியவன் என்பதுவும் இராமாயணத்திலே சொல்லப்பட்ட சில குறிப்புகள். இராவணனை வெற்றி கொண்டான் ராமா என்பதை நம்பவைப்பதற்கே அவனுக்கு(ராமாவுக்கு) இறைவனின் அவதாரப் பூச்சு பூசப்பட்டிருக்கின்றது...

ஏன் அவ்வளவு தொலை தூரங்களுக்குப் போக வேண்டும்...கடல் வியாபாரமாக இந்தியா இலங்கைக்கு வந்த அராபியர் இவ்விரு நாடுகளிலும் கரையோரம் முழுவதும் குடியிருந்த மக்களுடன் திருமணம் செய்தே சோனகர் உருவாகினர். இவர்கள் மதத்தால் மாறு பட்டாலும் இவர்களும் தமிழர்கள். அதிக பட்சம் இவர்களின் தாய் தமிழ்ப் பெண்ணாகவே இருந்திருக்கின்றாள். இலங்கையின் கிழக்கு வாழைச் சேனை மட்டக்களப்பு பகுதிகள் மற்றும் மேற்கு புத்தளப்பகுதிகளும் இந்தியாவின் காயல் பட்டினம் நாகப் பட்டினம் போன்ற பகுதிகளும் நல்ல எடுத்துக் காட்டு...

இவர்களும் தமிழர்கள் என்பதற்கப்பால் வேறு பிரிவு எதுவும் இல்லை. தமிழ் கிறிஸ்தவர்களைப் போலவே தமிழ் முஸ்லீம்கள்..... அவ்வளவே....

ஆகவே நீங்கள் இப்ப செய்ய வேண்டியதெல்லாம் இலங்கையின் உண்மையான வரலாற்றைத் தோண்டி எடுக்க வேண்டியது தான். இலங்கையின் காரையோரங்களிலெல்லாம் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதும் காலத்துக்குக் காலம் படையெடுத்து அனுராத புரத்தையும் கைப்பற்றி முழு இலங்கையை ஆண்டார்கள் என்பதுவும்.....வரலாறு.

தென்னிந்திய மன்னர்களும் படையெடுப்பை அடிக்கடி செய்தார்கள் என்பதும் காலத்துக்குக் காலம் அவர்களுடன் வந்த தமிழர்கள் இலங்கையில் தங்கி விட்டார்கள் என்பதுவும் கூட ...வரலாறே..

சிங்கள மன்னர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்ததென்பதற்கு வரலாறு கிடையாது....ஆகவே தமிழர்கள் இல்லாத ஒன்றுக்காகப் போராடவில்லை என்பதும் 1619இல் ஒல்லாந்தர்களிடம் இழந்த இராட்சியத்திற்காகப் போராடுகின்றார்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்..."

புயலடித்து ஓய்ந்தது போல இருந்தது... உங்கள் சந்தேகங்களையும் கருத்துகளையும் எழுதுங்கள்.... அய்யாசாமியிடம் கேட்டு எழுதுகின்றேன்... ஆதாரங்களையும் தருகின்றேன்.

மறுப்பிருந்தால் ஆதாரங்களுடன் எழுதுங்கள். அற்லீஸ்ட் தமிழர் வரலாற்றை என்றாலும் விளங்கிக் கொள்ளலாம். நாங்கள் ஒன்றும் வெத்து வேட்டுகளோ.... விளங்காத பயல்களோ ஒன்றும் இல்லை என்பதை இளைய தலைமுறை விளங்கிக் கொள்ள வேண்டும்.

படித்து விட்டு உங்கள் வெளங்காத கருத்துகளை எழுதிவிட்டுப் போங்கள் ..கறுத்தண்ண அய்யாசாமியின் கோபத்துக்கு ஆளாவீர்கள். :cry: :cry:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

இரசிகை... உங்களிடம் இருக்கும் ஒத்துப் போக முடியாத கருத்துகள் என்ன.... தெரிந்தால் அடிச்சு நெளிச்சு :):lol: ஒத்துப் போக வைத்து விடலாம்....என்ன சொல்லிகிறீர்கள்....

சம்மட்டியுடன் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

எல்லாளன் நல்லாத் தான் எழுதி இருக்கியள்,

வினை, எதிர்வினை என்ற சுழல், எது நோக்கி நகர்கிறது என்பதிலயே நடை பெறும் சம்பவங்களைப் பார்க்க வேண்டும். நடிபெறுபவை வெறும் உணர்வு மேலீட்டால் நடை பெறாமல் , ஈழத் தமிழரின் இறுதி இலக்கை நோக்கி எதிர்வினைகளை நகர்த்துவதாகா இருக்க வேண்டும்.

நடை பெறும் சம்பவங்கள் சர்வதேசம்,( வாசிக்க அமெரிக்கா), இந்தியா பிராந்திய வல்லாதிக்கச் சக்தி,தமிழ் நாடு ,சிறிலங்கா இவை எல்லாவற்றைன் எதிர் வினைகளையும் நாம் எதிர்பார்க்கும் திசை நோக்கி நகர்த்த வேண்டும்.

நாரதர் ...சரியாகச் சொன்னீர்கள்.... எத்தனை நாளைக்குத் தான் குண்டுகள் போட எங்களின் தலையைக் காட்டிக் கொண்டிருப்பது.....

சிங்களவருக்கும் சண்டை எப்படி இருக்கும் என்று மன்னர் காலங்களுக்குப் பின்னர் மறந்து போயிருக்கும்...

நாங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது....

மேலும் அமெரிக்கா இந்தியா இனித் தான் புதிதாக வர வேண்டுமென்பதல்ல....அவர்கள் ஆயுதங்களும் அறிவுரைகளும் ஏற்கனவே வந்து தான் இருக்கின்றது....

இதை இல்லை என்று சொல்பவர்களையிட்டு எதுவும் சொல்வதற்கில்லை...

இனி வேண்டுமென்றால் ஆள்பல ரீதியில் வருவார்கள்.... வெள்ளை ரத்தமும் மஞ்சள் ரெத்தமும் எங்கள் வயல்களில் பாய வேண்டுமென்பது விதி என்றால் அவ்வாறே நிகழும்...

எதற்காகவும் என்கள் போராட்டத்தை விட்டுக் கொடுக்காத தலைமை எங்களுக்கு இருக்கின்றது...

அமெரிக்கா எல்லாத் தோணியிலும் கால் வைத்திருக்கும் இது தான் சரியான நேரம் ...போராட்டத்தை சிங்களப் பகுதி நோக்கி நகர்த்துவதற்கு...

பயங்கர வாதிகள் என்று சொல்வார்கள்... இது ஒன்றும் புதிதல்லவே.... இராக்கில் 50 ,60 உயிர்கள் தினமும் போகின்றது... இவர்கள் செய்யாததையா நாங்கள் செய்யப் போகின்றோம்... எங்களுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே இவர்கள் தான் கற்றுக் கொடுக்கின்றார்கள்....

உலகில் எங்கெங்கெல்லாம் ..குருதி ஓடுகின்ரதோ அங்கங்கெல்லாம் இவர்கல் இருப்பார்கள்... இல்லையென்ரு சொல்லட்டும் பார்ப்போம்...

ஆகவே இவர்கல் கதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளத் தேவையில்லை....யாரை நம்பி நாம் ஆயுதத்தைக் கையிலெடுத்தோம்....அதே நம்பிக்கை இறுதி வரை இருக்க வேண்டும்...

எங்களுக்கு சுதந்திரம் தருவதற்கு இவர்கள் எல்லாம் மாமனா மச்சானா...?

கடமையைச் செய்வோம்...பலன் கிடைத்தே தீரும்..எதிர்காலச் சந்ததி படித்து மகிழ ஒரு வீரதீர வரலாறு படைப்போம்..

வெற்றி உணர்வுடன்

-எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

எல்ஸ் மகாராஜா நல்லா எழுதி இருக்கிறீங்க :P

அய்யாசாமி அப்பாவி சாமியா இல்லையா எண்டு எனக்கு தெரியாது ஆனால் அவருடைய கருத்துகள் எல்லா ஈழத் தமிழருக்கும் (ஒரு சில புல்லுருவிகளை தவிர்த்து) வரக்கூடியவையே

அய்யாசாமி சொல்லுறது சரிதானே போரை சிங்கள தேசத்தை நோக்கி நகர்த்துவது சிறந்ததே எமது இழப்புகள் பற்றி அவைக்கும் கொஞ்மாவது தெரிய வேண்டாமா

பி. கு : இந்தக் கருத்த நான் ஒன்றும் எல்ஸின'ர பயமுறுத்தலுக்கு பயந்து வைக்கவில்லை :evil: (இப்ப கறுப்பண்ண அய்யாசாமி ஒண்டும் செய'யமாட்டார் தானே எல்ஸ் :wink: :P )

நித்திலா ,..... இவ்வளவு தெளிவாகச் சிந்திக்கத் தெரிந்த உங்களைக் கறுத்தண்ண சாமி ஒன்றும் செய்ய மாட்டார்...

நடுநிலமை. ஜனநாயகம். அகிம்சை என்று பேசிக்கொண்டிருப்பவர்களின் குரல் வளையைத் தான் பிடித்துக் குதறி எடுப்பார்.....

அகிம்சை என்று கால்பேசில் பேசப் போனபோது சிங்களவர் தந்த பரிசு தலையில்...பொல்லடியும் சேட்டுக் கிழிப்பும் .... தமிழர் தோலில் செருப்புப் போடுவோம் என்ற வசவும் தான்......

ஜனநாயகம் என்ற நீரோட்டத்தில் திம்பு...சிம்பு என்று நீச்சலிடிக்கப் போனபோது சிங்களவர் தந்த பரிசு.....இரத்த ஆறாக ஓடியது வடக்குக் கிழக்கில்....

திருப்பி அடித்தபோது...அரவணைப்பு ..ஒப்பந்தம்...

இப்படித்தான் உலகம் இருக்கின்றது...அவர்களிக்குப் பிடித்த பாசையில் பேசும் போது தான் அவர்களுக்குப் புரிகின்றது...

வெள்ளையன் பீரங்கியை கொண்டு வந்து வைத்திருந்த போது வீர வேல் வெற்றி வேல் என்று...விட்டில்களாகப் பாய்ந்து விழுந்தபோது விட்டது உயிரை மட்டுமல்ல... உயிரிலும் மேலான சுதந்திரத்தையும் தான்......

அமெரிக்கா இந்தியா வந்து விடுமென்று பூச்சாண்டி காட்டுபவர்களுக்கு....... அவர்களுடைய ஆயுதங்களும் ஆலோசனைகளும் ஏற்கெனவே தாராளமாக வந்து விட்டது....இனியும் ஒன்று செய்ய முடியுமென்றால் ஆட்பலத்தை அனுப்பி வைக்க வேண்டும்....

வெள்ளை இரத்தமும் மஞ்சள் இரத்தமும் எங்கள் வயல்களுக்குப் பாய வேண்டுமென்று அவர்கள் விரும்பினால் தாராளமாக அது நடக்கட்டும்....

அமெரிக்கர்களை வெற்றி கொண்ட வியற்நாமியர்கள் ஒன்றும் தேவர்கள் அல்ல.....அவர்கள் அதை எப்படி அடைந்தார்கள் என்பதற்கு இது நல்லதொரு எடுத்துக் காட்டு...

இயற்கைக்காடுகள் மலிந்த வியற்நாமியர்கள் விடுதலைக்குப் பின் வந்த 30,40 ஆண்டுகள் மரப் பொருட்களை இறக்கு மதி செய்தார்கள்.... காரணம் வாள் போட முடியாத அளவிற்கு சன்னங்கள் மரங்களில் பாய்ந்திருந்தமையே.. மரங்களில் மட்டுமல்ல மனிதர்களிலும் தான்.....

அமெரிக்கா இன்று ஆப்கானிஸ்தான் ஈராக் என்று கால்களை வைத்து விரலைச் சுட்டுக் கொண்டிருக்கின்றது....இன்னும் ஈரான் வட கொரியா என்று கால்களை அகல வைக்கும்...அமெரிக்காவின் ஆணவம் அவ்வாறே செய்யத் தூண்டும்...

ஈழத்திலும் வாலாட்ட விரும்பினால் செய்யட்டும்... அதன் வாலை நறுக்குவதற்கு இது தான் சந்தர்ப்பம்....

இராக்கில் தினமும் 50 ,60 உயிர்கள் பறிக்கப் படுகின்றது....உலகில் எங்கெங்கு இரத்த ஆறு ஓடுகின்றதோ அங்கெல்லாம் அமெரிக்கா நிற்கின்றது...அவர்களே எங்களுக்கு மட்டுமில்லை... உலகத்துக்கே கற்றுக் கொடுக்கின்றார்கள்.....

சிங்களப் பகுதிகளை நோக்கி யுத்தத்தை நகர்த்துவதற்கு இதுதான் சந்தர்ப்பம்....

மன்னர் காலத்துக்குப் பின்னர்.. யுத்தத்தின் வலியை சிங்களவர் மறந்து போய் விட்டார்கள்.... மீண்டும் நாங்கள் தான் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது.....

உலகம் என்ன சொல்லும் என்று அஞ்சத் தேவையில்லை... அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்களோ அதனை நாம் செய்கின்றோம்....

மிஞ்சி மிஞ்சிப் போனால் பயங்கரவாதிகள் என்று சொல்வார்கள்.... அது ஏற்கனவே கேட்ட கதை தானே.

எங்களுக்குத் தேவையானதை நாங்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்... மற்றவர்கள் தருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருக்க இது ஒன்றும் பிச்சையல்ல...

அமெரிக்காவும் இந்தியாவும் எங்கள் சுதந்திரத்தைத் தர இவர்கள் என்ன மாமனா...இல்லை மச்சானா....

ஆயத்தத்துடன் -எல்லாள மஹாராஜா-

(ஆயுதத்துடன் என்று வாசிக்க வேண்டாமென்று கேட்டுக் கொள்கின்றேன் :):lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி அமுக்கு கன்னி வெடியை

கன்னி வெடியுடன் - புத்தன்

ஜயோ,நான் ஜனநாயகவாதி,காந்தியவாதி நான் அகிம்சை வாதி,

ஆனால் என்னுடைய ஆயுதம் போதி மரத்திற்கு கீழே இருக்கு....

Link to comment
Share on other sites

அப்படி அமுக்கு கன்னி வெடியை

கன்னி வெடியுடன் - புத்தன்

ஜயோ,நான் ஜனநாயகவாதி,காந்தியவாதி நான் அகிம்சை வாதி,

ஆனால் என்னுடைய ஆயுதம் போதி மரத்திற்கு கீழே இருக்கு....

புத்தன்....! மொட்டைகளை முதலில் களத்திலிருந்து அப்புறப்படுத்துவது ....முக்கியம்....

இஸ்லாமியப் பயங்கர வாதம் என்று சொல்லப்படுவதைப் போல ....

பெளத்தப் பயங்கரவாதம் ...இலங்கையில் இருக்கின்றது...

ஆயுதம் தூக்குவதற்கு சிங்கள அடிமட்ட இளைஞர்களைத் தூண்டுவது.... இந்த மொட்டைகளின் ...பெளத்தப் பயங்கரவாத.... தூண்டுதலே...

திருகோணமலையில் புத்தர் சிலையை வைத்து.... அதிக பட்ச உணர்வு பூர்வமான ....கள நிலைமையை இந்த மொட்டைகள் தூண்ட முயற்சித்ததை மறக்க வேண்டாம்....

பெளத்தம் இல்லையென்றால் .....சிங்களப் பேரினவாதம் இல்லையென்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.....

அன்று துட்டகைமுனு முதல்.....இடையில் வந்த அநகாரீக தர்மபாலா முதல் ஜே ஆர் வரை அவர்களின் ஆயுதம்.... சிங்களப் பெளத்த நாடு என்பதே......

எமது போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னகர்த்த....இவர்களைக் களத்தில் இருந்து அகற்றுவது முக்கியமானது......

உணர்ச்சிக் கொந்தளிப்பு தோன்றலாம்.... ஆனால் எந்தக் கொந்தளிப்பும் ஆயுதத்தின் முன்னால் அடங்கி விடும்....

ஆலோசனையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அய்யாச்சாமி மட்டுமல்ல பல தமிழர்களின் (எமது உறவுகளை கொல்லும்போது இங்கிருந்து ஆற்றாமையால் துடித்த புலம்பெயர்ந்த தமிழர்களின்) எண்ணவோட்டமும் இதுதான். என்னதான் கவலை தெரிவித்தாலும் உள்மனதில் (சிங்களவர்களும் படுகொலைகளின் வலியை இன்று உணர்ந்திருப்பார்கள் என்ற) சிறு சந்தோசம். ஆனால், இன்று புலம்பெயர் நாடுகளில் மாற்றுக்கருத்து, ஜன(நாய்)அகம் என்று தமிழர்களுக்கெதிரான சக்தி(எட்டப்பர்கள்) பலமமாக காலூன்றி விட்டது. எமக்கெதிராக உள்ள பெரியபணி அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும். ஒவ்வொருவரும் தனக்கேன் உந்தப் பிரச்சினை என்று ஒதுங்கியதால்தான் இன்று உந்தஅளவுக்கு வந்திருக்கிறது. இப்படியான பொதுமக்களைத்தாக்கும் சம்பவங்கள் இராஜதந்திரரீதியில் எமக்கு பின்னடைவு. கண்டனம் தெரிவித்த நாடுகள் கூட(அமெரிக்காவைத்தவிர) புலிகளை குற்றஞ்சாட்டவில்லை. இதனால் தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் நிறைவேறவில்லை. ஆனால் அரசு பொய்யான ஆதாரங்களை முன்வைத்து சர்வதேச ஆதரவை தம்பக்கம் திருப்ப முயற்சி செய்கிறது. இதனால் அவர்களின் பிரச்சாரத்தை முறியடிப்பதோடு, எமது நோக்கம் இறுதி விடிவை நோக்கியதாக இருக்கவேண்டும். :idea:

(இது எனது கருத்து மட்டுமே)

Link to comment
Share on other sites

இன்று புலம்பெயர் நாடுகளில் மாற்றுக்கருத்து, ஜன(நாய்)அகம் என்று தமிழர்களுக்கெதிரான சக்தி(எட்டப்பர்கள்) பலமமாக காலூன்றி விட்டது. எமக்கெதிராக உள்ள பெரியபணி அவர்களின் பொய்ப்பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும்

வாழ்த்துக்கள் சுபித்திரன்.....

இதுதான் இன்று புலம் பெயர் மக்களின் முன்னுள்ள பாரிய பணிஅனைவரும் கருத்திலெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமை.....

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.