Jump to content

அன்று நாம் பொங்கிடுவோம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


தை பிறந்தால் வழிபிறந்தது அன்று
எத்தனை தை பிறந்தும்
தமிழனுக்கு மட்டும் 
வழி பிறக்க வில்லையே

ஏர்  கொண்டு உழுது
பயிர்கள்  தான்  செய்தோம்
ஊரெங்கும் பச்சை வயல்
பசுமைகள் கண்டோம்
எவரையும் நம்பாது
நாம் விழைத்து நம் மண்ணில்
தன்னிறைவு கொண்டோம்

செம்பாட்டு மண்ணில்
செழித்து வளர்ந்திடும்
செவ்விளநீரொடு
மா பலா வாழை என 
வாயினிக்க நாமணக்க 
வகை வகையாய்
வாழையிலை மஞ்சள்
வானுயர்ந்த கருப்பு கட்டிப்
பொங்கி மகிழ்ந்திட்டோம் 

யார் கண்ணோ பட்டதனால்
நாமிருந்த பூமியெல்லாம்
நாசமாய் போனதனால்
நாள் கூட நமக்கின்றி
நாதியற்றுப் போனோம் 
ஏர்கொண்டு ஏற்றமுடன்
எமைக் காத்தோம்  இன்று
ஏழைகளாகி எதிர்பார்த்து
ஏந்தி எம் கைகளை
எல்லோரை நோக்கி 
ஏளனப் பொருளாகி
எதுமற்ரோராகி
எச்சில் இலைகளாய்
எங்கும் கிடக்கிறோம்

எது கொண்டு மறைப்பதற்கும்
எதுமின்றி நாதியின்றி
எங்களினம் வாடுகையில் 
எண்ணம் ஏதுமன்றி
ஏட்டுக் கல்வியின்றி
ஏக்கம் மட்டும் இன்னும்
எல்லோரின் சொந்தமாய்
எதிலிகளாகி எழமுடியாது
எங்கும் இருக்கையில்
ஒருநேர உணவுக்கு
ஊரார் கைபார்த்து
ஏங்கித் தவிக்கையில்
எமக்கெதற்குப் பொங்கல் 

எப்பதவி கொண்டு நீ
எங்கிருந்தாலும்
நாடற்றவன் நீ
நாடற்றவன் 
ஏதுமற்ற தமிழா
எண்ணித் துணிந்துவிடு
எம்மினம் காக்க
ஏழைகளின்றி
ஏக்கங்களின்றி
எமக்கொரு தேசம்
என்றோ விடிந்தால்
அன்று நாம் பொங்கிடுவோம்
புதுப் பானைப் பொங்கல்

Link to comment
Share on other sites

ஒருநேர உணவுக்கு
ஊரார் கைபார்த்து
ஏங்கித் தவிக்கையில்
எமக்கெதற்குப் பொங்கல்

 

நியாயமான கோபமும் கேள்வியும் சுமே . உங்கள் கவி தைத்தால் அதுவே உங்கள் படைப்புக்கு கிடைத்த வெற்றி . பொங்கல் கவிதைக்குப் பாராட்டுக்கள் சுமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் கருத்திட்டமைக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை தை பிறந்தும்
தமிழனுக்கு மட்டும்
வழி பிறக்க வில்லையே..........

 

 

...........கவிதைக்குப் பாராட்டுக்கள்

Link to comment
Share on other sites

எதிலிகளாகி எழமுடியாது
எங்கும் இருக்கையில்
ஒருநேர உணவுக்கு
ஊரார் கைபார்த்து
ஏங்கித் தவிக்கையில்
எமக்கெதற்குப் பொங்கல் ///////////////////

 

முகத்திலறைந்து போகிறது இன்றைய பொங்கலும் பொங்கல் வாழ்த்துக்களும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கப்படாமல், ஒரு உண்மையைச் சொல்லுறதெண்டால், நான் யாழ்ப்பாணத்தில் பொங்கினப் பிறகு பொங்கினதே இல்லை! :o

 

பொங்கலிடும் நிலையில், எனது மனநிலை என்றும் இருந்ததில்லை! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நேற்கொழுதாசன்,புங்கையூரன்.

 

 

Link to comment
Share on other sites

நிச்சயமாக ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ள கோபத்தை பொங்கிய உள்ளத்தோடு பகிர்ந்து இருக்கிறீர்கள்.
ஆனாலும் நம்புவோம்  ...அடுத்த தை பிறக்கும் போதாவது தமிழனுக்கு வழி பிறந்திடுமென்றே... நன்றிகள் கவிதைக்கு சுமேரியர்..
 
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் கவிதைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'கோபமும், ஆதங்கமும், தவிப்பும் பொங்கி நிற்கிறது உங்கள் வரிகளில்!.

 

 

நியாயமான வரிகள்:

 

எப்பதவி கொண்டு நீ
எங்கிருந்தாலும்
நாடற்றவன் நீ
நாடற்றவன் 
ஏதுமற்ற தமிழா
எண்ணித் துணிந்துவிடு
எம்மினம் காக்க
ஏழைகளின்றி
ஏக்கங்களின்றி
எமக்கொரு தேசம்
என்றோ விடிந்தால்
அன்று நாம் பொங்கிடுவோம்
புதுப் பானைப் பொங்கல்

 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.