Jump to content

யாழ்பாடி யாருங்கோ?


Recommended Posts

இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும் நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா?

அப்படி இருக்க முடியாது என்று நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா? :?:

முட்டையிலிருந்து மயிர்பிடுங்குதலும், பிடுங்கிய மயிரில் பேன் பார்த்தலும் பற்றியதானவொரு விழிப்புநிலைச் சொல்லாடல்

யாழ்ப்பாணத்துச் சமூகமானது தமிழர் தாயகத்தின் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருமொரு சமூகமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. முழு யாழ்ப்பாண மக்களும் அவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் சக்திகளேயென எவரும் எடைபோட்டுவிடக்கூடாது; யாழ் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில பிரிவினரே அவர்கள்.

இச்சக்திகள் தமிழர்தாயகத்தின் ஏனைய பகுதி மக்கள் மீது மட்டுமல்லாமல், தமது சொந்தச் சமூகத்தின் விளிம்புநிலைப் பிரிவினர் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இச்சக்திகளின் கருத்துக்களே ஒட்டுமொத்தத் தமிழ்மக்களினதும் கருத்துக்களாகக் கணிக்கப்படுகின்றன.

இச்சக்திகள் பிரதேச, மத, சாதி நிலைகளினின்று ஆதிக்கக் கருத்துக்களை முன்வைப்பவர்கள். யாழ், சைவ, வேளாளக் கருத்துக்களென்பவை இவர்களது திருவாயுதித்தவைதான்.

தமிழ்த்தேசிய அரசியல் அறுவடைக் காலத்திலிருக்கும்போது யாழ், சைவ, வேளாளக் கருத்துநிலைகள் தமிழ்த்தேசியத்தின் இருப்பினை அகரீதியாகச் சிதைக்கக்கூடியவை.

தமிழ்த்தேசியப் போராட்டம் பழைய யாழ்பாடிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து, பல புதிய கருத்துநிலையாளர்களையும் உருவாக்கியுள்ளது.

தமிழ்த்தேசியம் - தமிழ்மக்களின் அரசியலை, சமூகத்தை, அறிவியலை, பண்பாட்டினை ஊடுருவி நோக்க - வலிந்து பிரசவித்தவர்களில் ஒருவன்தான் இப்புதிய யாழ்பாடி.

எந்தச் சிந்தனையும் அதனதன் அடித்தளங்களிலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றது. புதிய யாழ்பாடி - இவனது சிந்தனையின் அடித்தளம் தமிழ்த்தேசியம்தான். தமிழ்த்தேசிய அரசியல் இன்று சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்து, அறுவடைக்காலத்தினை அண்மித்திருக்கும் நிலையில் அது சார்ந்த சகல தளங்களையும் ஊடுருவிப் பார்க்கும் அவசியமும், தேவையும் முன்னெப்போதையும் விட அதிகமாகவே காணப்படுகின்றது.

இத்தகையதொரு காலகட்டத்தில் அனைத்து விடயங்களையும் தமிழ்த்தேசியத்திற்குள்ளிரு

Link to comment
Share on other sites

யாழ்பாடி என்பவர் என்னுடன் துருதினர் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தார், அவர் யாழ்க் கள பாடியாக இருக்கலாம் என எண்ணி அழைப்பை ஏற்கவில்லை.(பேய்களுடன் எந்த தனிப்பட்ட உரையாடல்களையும் வைப்பது கிடையாது, மனிதர்களுடன் மட்டுமே).

வலயில் எழுதும் மேற் குறிப்பிட்டவர் தான் அது என்றால் அவர் மீண்டும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும்  நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா?

அப்படி இருக்க முடியாது என்று  நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா?  :?:  

வலைப்பதிபவருக்கும் நமக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

Link to comment
Share on other sites

கறுப்பி அப்ப நீர் உண்மையாக் கறுப்போ?

தகவலுக்கு நன்றி யாழ்பாடி,உந்தளவுக்கு எழுத உம்மால் முடியாது என்று தான் நினச்சனான்,உமக்கு வெட்டத் தானே தெரியும்.எதுக்கும் உறுதி செய்து கொண்டா நல்லம் எண்டு பாத்தன்.அதோட துரிதுனர் மூலம் தொடர்பு கொண்டது நீர் இல்லை என்பதையும் உறுதி செய்வீரா? ஏனெண்டால் அந்த வலைப் பதியிறவரோட கதைக்கலாம்,மீண்டும் தொடர்பு கொண்டால்.

நன்றி.

Link to comment
Share on other sites

உந்தளவுக்கு எழுத உம்மால் முடியாது என்று தான் நினச்சனான்

:lol:

பாடி இதுக்காவெண்டாலாவது ஏதாலும் எழுதுமோய். :P

Link to comment
Share on other sites

:lol:

பாடி இதுக்காவெண்டாலாவது ஏதாலும் எழுதுமோய். :P

அதை யாராம் வெட்டுறது ???

வெட்டுறமாதிரி எழுத மாட்டார் எண்டுதான் உள்மனம் சொல்லுது. ஆனால் எழுத வந்தால் வெட்டாத மாதிரி எழுத வருகுதே இல்லையே.!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உமக்கு வெட்டத் தானே தெரியும்.

நன்றி.

அப்படியா நாரதர் அண்ணா!

எனக்கு இப்போது தானே தெரிகின்றது, கருத்துக்களில் பிழை இல்லாமல், ஆண்டாண்டு காலப் பகையை வைத்து தான் இங்கு கருத்துக்கள் வெட்டப்படுகின்றது என்று! :wink:

எனித் தான் ஆரயவேண்டும். என் கருத்துக்களும் சில வெட்டப்பட்டிருக்கின்றன! வெட்டினவருக்கும் எனக்கும் குடும்பப் பகை, வேலிச்சண்டை, ஏதும் இருக்குதோ என்று. இல்லாவிட்டால் என் கருத்தில் எவ்வித பிழை இருந்தாலும் வெட்டமாட்டினம் தானே! :wink: :P

Link to comment
Share on other sites

வணக்கம் தூயவன்,

உந்த யாழ்பாடிக்கும் எனக்கும் எந்தப்பகையும் இல்லை,

நான் இந்த பதிவைப்போட்டதன் அடிப்படைக் காரணம், அவர் யார் என்பதை அறிவதற்கு.ஏனெனில் அவர் ஒருவகை அரசியல் விளயாட்டை விளையாடுகிறார் என்ற உணர்வு.எனக்கு இப்படி ஒரு முகத்தோட நல்லாக் கதைச்சு இன்னொரு முகத்தோட அரசியல் விளயாடுறவைன்ட விளயட்டுப்பிடிகிறேல்ல.ஒரு காலத்தில சில பேர் தங்கட கத்தியின் செல்வாக்கில கன தனிப்பட்ட விளையாட்டுக்கள் விளையாடினவை.தாங்களே வெட்டிப் போட்டு இன்னொரு பேரில வந்து அதுக்கு நியாயம் கற்பிப்பினம். நாங்களும் மோடர் மாதிரி அவைக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பம்.ஆனா அவைக்கு எண்டு ஒரு கூட்டம் இருக்கும் அவைக்குத் தெரியும் என்ன நடக்குது எண்டு. இப்ப நான் கொஞ்சம் இதுகளைப்படிச்சிட்டன்.இப்ப மற்ற எல்லாரும் யோசிப்பினம் இங்க என்ன நடக்குது எண்டு,சில பேருக்கு விளங்கி இருக்கும்.

உதில மதனில எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு,தான் செயிறது நடுனிலயாச் செய்யிறன் என்ற துணிவு அவருக்கு இருக்கு.இப்படி துணிவில்லாதவை தான் உப்படி இரண்டு முகமூடி போடுக்கொண்டு விளயாடுறது.உவை நடுனிலை ஆகசெயற்படுறம் என்று நினச்சா ஏன் முகமூடி போட வேணும்.அதுவும் தனிப்படக் கதைக்கவும் இரண்டு முகமூடி எண்டா ,இங்க எழுதுறவை என்ன பேயரோ?

கள விதிகளின் படி வெட்டுறதுக்கும் இதுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, அது எனக்குப் பிரச்சினையுமில்லை.ஆனா அரசியல் உதுக்க விளையாடி என்னதைக் காணப் போறம்?

நான் எப்பவுமே நேர்மையாக நடப்பவர்களுடன் தான் தொடிசல் வைக்கிறது. நேர்மை அற்றவர்கள் எந்த நேரம் என்ன செய்வினம் என்று பாத்துக்கொண்டிருக்க ஏலாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.