Jump to content

ஆரியக் கூத்து (அஸ்வமேத யாகம்)


Recommended Posts

அரசன் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு. அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம் தான் அசுவமேத யாகம். ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும். அப்போது ஓரிரவு முழுவதும் சம்பந்தப்பட்ட அரச வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

“அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்துபத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே”என போகிறது சுலோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி ‘வழிபட வேண்டிய’ முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும். மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேத யாகம்.

சகல சவுபாக்கியங்களையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனி பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம். அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம்.- என மூளைக்குள் முடிவெடுத்தார். சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார். வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.

எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை…? பிராமணர்கள் சொன்னார்கள், “ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள். அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி என பொருள் பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷுக்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸை கூட பசு என கூறினாலும் கூறலாம்.

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.

புத்தர் இதை பார்த்தார். மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தவேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார். அப்போது தான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர்.

மிருகங்களோடு புணரும் காட்சிகள்... கஜுராகோ லஸ்மணன் கோயில் சுவரில்..........................

மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்… “ஏ… ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்களாம்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். “மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே…? ஏன் இப்படி…?”என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்” என்று.

புத்தர் திரும்ப கேட்டார். “ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்களே. எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா…?”

ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப… திடுக்கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.

பிறகு…?

புத்தர் காலம் வரை இதுதான் நிலை என்கிறார் தாத்தாச்சாரியார். இதற்கான ஆதாரமாக இவர்கள் காட்டுவது என்ன என்று பார்த்தால், அவை வேத சடங்குகளில் பயன்படுத்தப்படும் தைத்திரீய சம்கிதையின் சில வரிகள். பாலியல் வசை/பகடித்தன்மை கொண்ட பொருள் தரும் சில வரிகள். ஏதோ அசுவமேத யாகத்தின் தன்மை இதே விதத்தில் மட்டுமே இருந்ததாக பொருள்பட தாத்தாச்சாரியார் எழுதுகிறார். இதை வைத்து இந்து மதத்தையும் வேத பண்பாட்டையும் மிக மோசமாக பலர் தாக்கி எழுதுகிறார்கள். ஆனால் உண்மை என்ன?

பாலியல் சடங்குகள் உலகெங்கிலும் உள்ள பாகனீய ஆன்மிக சடங்குகள் பலவற்றில் உள்ளவையே. உதாரணமாக பழமையான பாலியல் சடங்குகள் இன்றைக்கும் ஐரோப்பிய மறைக்குழுக்கள் சிலவற்றில் இருப்பதை ராபர்ட் லாங்க்டன் தனது ‘டாவின்ஸி கோட்’ நூலில் காட்டியிருப்பார். Hieros gamos எனப்படும் அந்த சடங்கு ஆழமான தத்துவ பின்னணி கொண்டது என்பதையும் அவர் குறிப்பிட்டிருப்பார். ஆனால் இத்தகைய சடங்குகளும் அவற்றின் தத்துவ பின்புலங்களும் கிறிஸ்தவத்தால் துடைத்தழிக்கப் பட்டது. ஆனால் அவற்றை முழுமையாக அழிக்க முடியவில்லை. குதிரையையும் அரச மனைவியையும் தொடர்புபடுத்தும் பாகனிய தொன்மங்களையும் சடங்குகளையும் மக்கள் மனதிலிருந்து கிறிஸ்தவத்தால் அகற்ற இயலவில்லை. எனவே அது ஒரு நாட்டார் கதையாக இன்றும் நிலவுகிறது.

மத்திய கால இங்கிலாந்து. சீமாட்டி காடீவா… அவள் பெயருக்கு பொருள் ஆண்டவனின் பரிசு. லிப்போரிக் என்கிற குறுநில பிரபுவின் மனைவி. அவள். இக்குறுநில பிரபு, ஏறத்தாழ அந்த பகுதியின் அரசன் போலத்தான். இவன் கடுமையாக வரிகள் விதிப்பதால், மக்கள் கஷ்டப்படுகிறார்கள். மக்களுக்காக கணவனிடம் பேசுகிறாள் காடீவா. அவன் சொல்கிறான், ‘இந்த மக்களுக்காக குதிரை மீது நீ நிர்வாணமாக இந்த ஊர் முழுவதும் சுற்றிவா. அப்போது நான் வரிகளை குறைக்கிறேன்.’ காடீவா ஒத்துக் கொள்கிறாள். மக்களிடம் தான் நிர்வாணமாக குதிரை மீது ஊரை சுற்றிவரப் போகும் நாளையும் நேரத்தையும் சொல்கிறாள். அன்று எவரும் வெளியே வரக்கூடாது என வேண்டுகோள் விடுக்கிறாள். மக்கள் இவள் மீதிருக்கும் அபரிமிதமான மரியாதையாலும் அன்பாலும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் ஒரே ஒரு தையல்காரன் மட்டும் அடக்கமுடியாத ஆசையால் தன் வீட்டுக் கதவில் ஓட்டை போட்டு அவளைப் பார்த்துவிடுகிறான். இவன் தான் Peeping Tom எனும் பதம் உருவாக காரணமானவன். இறைத் தண்டனையாக இவனது ஒரு கண் போய்விடுகிறது. ஆனால் மக்கள் தன் மனைவி மீது காட்டிய அன்பையும், அவளது தைரியத்தையும் பார்த்த மன்னன் மக்கள் மீதான வரிகளை குறைத்து விடுகிறான்.

உண்மையிலேயே இந்த சீமாட்டி வாழ்ந்தாளா? இந்த நாட்டார் கதை உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டதா? ஒரு சம்பவம் நிகழ்கிறது. வருடாவருடம் ஒரு பெண் நிர்வாணமாக குதிரையில் ஊர்வலமாக செல்லும் சடங்கு. ஊரின் நன்மைக்காக. கிறிஸ்தவ தூய்மைவாதிகளால் கூட இந்த சடங்கை சில காலமே தடுக்க முடிந்தது. 1678 முதல் 1826 வரை இந்த சடங்கு தொடர்ந்து நிகழ்ந்தது. பின்னர் மீண்டும் தூய ஒழுக்க வாதிகள் இந்த பெண் ஆடை அணிந்துதான் வரவேண்டுமென்று கூக்குரலிட ஆரம்பித்தனர். பின்னர் மீண்டும் 1900 களில் அது நிர்வாணமாகவே குதிரை மீது நடத்தப்பட்டது.

இதற்கும் அசுவமேத யாகத்துக்கும் என்ன தொடர்பு?

சிட்னி கார்ட்லாண்ட் என்பவர் நாட்டார் வழக்காற்றியலை இங்கிலாந்தில் ஆரம்பித்த தொன்மவியலாளர். அவர் இங்கிலாந்தில் நடக்கும் இந்த நிர்வாண குதிரை சடங்கை பழமையான பாகனீய வளமைச்சடங்கு (fertility ritual) என கூறுகிறார். இந்த எட்டிப் பார்த்தவன் கண் போனது என்பது மக்கள் இந்த சடங்கில் பங்கேற்கவிடாமல் அச்சுறுத்த பின்னர் உருவாக்கப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். பாகனீய வளமைச்சடங்கில் குதிரைக்கும் மன்னன் மனைவிக்குமான பாலியல் தொடர்பு என்பது மானுடத்தின் தொடக்க கால கூட்டு நனவிலி வெளிப்பாடு என்றே கருத வேண்டியுள்ளது. அசுவமேத யாகத்தில் இன்று பழித்து பேசப்படும் சடங்கும் மன்னனுடைய மேன்மைக்காக மட்டுமல்லாது அந்த நாட்டின் வளமைக்காக செழிப்புக்காக நடத்தப்படுவது என்பதை காணும் போது இது ஒரு மிகப்பழமையான வளமை சடங்கு என்பது தெளிவாகிறது. உலகமெங்கும் இது நடக்கிறது என்பதும் தெரிகிறது.

இன்றும் நம் நாட்டில் எல்லா மலைவாழ் மக்கள் மற்றும் பழமையான சமுதாய மக்களின் நாட்டார் வழிபாட்டில் மண்ணோடு இணைந்த குதிரை வழிபாட்டை காண்கிறோம். கோண்ட் சமுதாய மக்கள் முதல் தமிழக கிராம தேவதை வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும் சுதை குதிரை வழிபாடு வரை இத்தொடர்ச்சி இருப்பதை நாம் காணலாம். மிகவும் குறுகிய விக்டோரிய மதிப்பீடுகளை வைத்து நாம் இந்த சடங்குகளை ஆபாசம் என புறந்தள்ளிவிட முடியாது என்பதே உண்மை. ஆனால் பூர்விக பழங்குடி மரபுகளிலிருந்து உருவான இந்த சடங்குகள் தொடர்ந்து எவ்வித வடிவங்கள் இந்திய மரபில் பெற்றன? இந்த கேள்விக்கான பதிலில்தான் வேதத்தின் இயங்கு தன்மையை நாம் முழுமையாக அறிய முடியும்.[மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள். யாகம் முடிந்ததும்... “ஏ... ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக பூர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய். அஃதோடு யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்” என்றார்களாம்.

அதன்படியே முதல் நாள் இரவு குதிரையின் உறுப்பை பிடித்துக் கொண்டிருந்தவள்.. மறு நாள் இரவு யாகம் நடத்திய பிராமணர்களுடன் இருக்கிறாள்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். “மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?”என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள்: “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும். லோகத்துக்கு க்ஷமம் கிடைக்கும்” என்று.]

==== தசரதன் நடத்திய அசுவமேத யாகம். ====

அறுபதாயிரத்து மூன்று மனைவிமார்கள் தசரதனுக்கு இருந்தும் குழந்தை மட்டும் இல்லை.

அதற்காக அசுவமேத யாகம் ஒன்றை நடத்தினான் தசரதன். இந்த யாகத்தை நடத்துவதற்காக கலைக்கோட்டு (ருசிய சிருங்கர்) முனிவர் அழைத்து வரப்பட்டார்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee. Kausalya with an undisturbed heart passed one night with that horse.

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு: தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள் கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள். ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் புணர்ந்தார்கள். இதன் காரணமாக தசரதனின் ராஜகுமரிகள் கர்ப்பம் தரித்தார்கள்.

The Priest recites: [7.4.19g] "O horse, place your male organ in between the legs of the queen.

Excite the queen's vagina so that it will receive your huge penis". The Queen then places the horse's limp penis in between her legs.

The Queen once again calls out aloud: [7.4.19h] "O Mother, no-one has slept with me. This good-for nothing horse is fast asleep."

ஓ குதிரையே, உன்னுடைய ஆண்குறியை அரசியின் இரண்டு தொடைகளுக்கும் நடுவில் விடு. அரசியின் பெண்குறியை கிளர்ச்சியடையச் செய்வதன் மூலம் உன் பெரிய குறியானது அவளது குறிக்குள் ஈர்க்கப்படட்டும் என்று அந்த பிராமணர் ஓதும்பொழுது அரசி குதிரையுடன் உடலுறவு கொள்கிறாள் ... "அம்மா...என்னுடன் யாரும் படுத்ததில்லை. இந்த குதிரயோ ஒன்றும் செய்யாமல் தூங்குகிறது!" என்ற புலம்பலுடன்! என்று [[வால்மீகி]] கூறியுள்ளார்.ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

[ஸ்ரீ ராஜா என்ன சொல்கிறேன் தெரியுமா ?? கதைகள் திரிபு அடைகின்றன

ஆனால் உண்மை இல்லாமலும் இல்லை

ஆக ...

அஸ்வமேத யாகம் என்பது

நானறிந்த வரையில் பலம் மிக்க ஒரு அரசன் தான் பலம் மிக்கவன் என்பதை அடுத்த நாட்டின் அரசனுக்குத் தெரிவிக்கும் முகமாகத் தன் பட்டத்துக் குதிரையை கட்டவிழ்த்து அடுத்த நாடுகளைச் சுற்றிவரச் செய்வான்.

பட்டத்துக் குதிரையை நிறுத்தி வைக்கும் நாடு அரசனின் பலத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்பதாகும். இந்தச் சவாலை பட்டத்துக் குதிரையை அனுப்பிய அரசன் போர் நடத்திச் சந்திப்பான்.

அஸ்வமேத யாகம் என்பது ஒரு அரசனின் தேசம் விஸ்தரிப்புக்கு அவனால் பக்கத்து தேசங்களுக்கு விடப்படும் ஷத்திரிய அறைகூவல்.

இதற்காகத்தான் அஸ்வமேதம், அதாவது அடுத்தவரின் ராஜ்யத்தையெல்லாம் வென்று நமது ராஜ்யத்தை ஒருங்கிணைக்க வேண்டும். அனைத்து நற்பலன்களையும் அடைய அனைத்து பாவங்களையும் நீக்க வேண்டும், இதற்காகத்தான் அஸ்வமேத யாகம்,

ராஜா ஒரு ஆண் குதிரையை அவிழ்த்துவிட்டு அடித்து விடுவார்கள் அக் குதிரை எங்கெங்கு செல்கிறதோ அதன் பின்னாலேயே இந்த ராஜாவின் காலாட்படை ஆயுதங்களோடு திரண்டு பின் தொடரும் ,குதிரை சென்று நிற்கும் இடம் வரை அந்த ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அறிவிக்கப்படும் , எதிர்த்து எவனாவது வந்தால் போர் இல்லையெனில் வெற்றி அறிவிப்பு. பின் அக்குதிரையை மையமாக வைத்தே அஸ்வமேத யாகம், வீரம் கலந்த இந்த யாகத்தில் ஒரு விரசத்தையும் வைத்திருக்கிறார்களே... நூறு முறை எதிர்க்கும் வீரர்களையெல்லாம் தோற்கடித்து அவர்களிடம் திறைப்பொருள் வாங்கி நூறு அஸ்வமேதயாகங்களைக் குறையின்றி நிறைவு செய்யும் வீரனை யாகபலன் இந்திர பதவியில் இருத்தும் என சாஸ்திரங்கள் கூறியுள்ளன. அஸ்வமேதயாகம் செய்பவர் தன் வீர பராக்கிரமங்களை ஒரு பட்டயத்தில் எழுதி யாகக்குதிரையின் கழுத்தில் தொங்க விட்டு இக்குதிரையைப் பிடித்துக் கட்டிச் சமராட விருப்பமுள்ளவர் குதிரையைப் பிடித்துக் கட்டலாம் என்று சவாலான வாக்கியங்கள் பட்டயத்தில் எழுதப்பட்டிருக்கும் இப்படியான வீரவசனங்கள் கொண்ட பட்டயத்தினைக் கழுத்தில் கட்டிக்கொண்டு தன் விருப்பத்துக்கு செல்லும் யாகக் குதிரையை யாராவது பிடித்துக் கட்டினால் அவருக்கும் குதிரையுடன் வரும் சைன்யத்துக்கும் பெரும் போர் மூளும். அவரைத் தோற்கடித்து திறைப் பொருள் பெற்றே யாகக்குதிரையும் சைனியமும் மேலே செல்லும்.]

வேதத்தில் யாகங்கள் முக்கியமானவை.

இந்த யாகங்களை பிராமணர்கள் பண்ணி வைக்கவேண்டும். பிராமணர்கள் Manthra labours. அதாவது மந்திரத் தொழிலாளர்கள்.

வேதத்தில் 6 அங்கங்கள் இருக்கின்றன.

வேத சொற்களின் உச்சரிப்பைப்பற்றி சொல்லும் சிக்ஷா என்பது முதல் அங்கம். மொழியியலைப் பற்றி சொல்வது வ்யாகரண அங்கம்.

யாப்பு இலக்கணம்பற்றி கூறுகிறது சந்தஸு அங்கம். சொற்பிறப்பு பற்றி சொல்வது நிருப்தம். ஜோதிஷம் பற்றி சொல்லாது ஜோதிஷ அங்கம்.

வேதத்தில் கூறப்பட்ட யாகங்களை எப்படி எப்படி செய்யவேண்டும் என்று சொல்வது கல்பம் என்னும் அங்கம்.

இப்படியாக யாகங்களை அனல் முன் நின்று மந்த்ரங்களை ஓதி சும்மாவா சொல்லிக் கொடுப்பார்கள்.

அதற்கு Charge வேண்டாமா? Fees வேண்டாமா?

சம்பளம் கொடுக்கவேண்டும் அல்லவா?

இதற்குப் பெயர்தான் தட்சணை. அதாவது யாகங்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம்தான் தட்சணை!

அசுவமேத யாகம் பற்றி இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியில் நான் சொல்லியிருந்தேன்.

அதில் மன்னர்களுக்காக அஸ்வமேத யாகம் நடத்திவிட்டு...

அதன் பின்னர் மன்னர் வீட்டுப் பெண்களான ராணிகளையும், ராஜகுமாரிகளையும் தங்களோடு அழைத்துச் சென்று விடுவார்கள்.

ராஜ பெண்களோடு ராஜ சுகம் அனுபவித்து விட்டு திரும்ப

அரண்மனைக்கு அனுப்புவார்கள் யாகம் நடத்துபவர்கள்.

இதுபற்றி பண்டித மன்மத நாததத்தயர் பின்வருமாறு மொழி பெயர்த்து எழுதுகிறார்.

Kausalya with three strokes slew that horse experiencing great glee.

Kausalya with an undisturbed heart passed one night with that horse.

The Hotas, Adhwaryus and the Ugatas joined the king’s wives.

இதன் பொருள் வருமாறு:

தசரதனின் மூத்த மனைவியாகிய கோசலை மூன்று வெட்டில் அக்குதிரையை மிக உற்சாகத்தோடு கொன்றாள். அவள்

கலங்கா நெஞ்சோடு ஒரு நாளிரவை அக்குதிரையோடு கழித்தாள்.

ஹோதா, அத்வர்யு முதலிய இருத்துவிக்குகள் இராச பாரியைகளைப் (தசரதனின் மனைவிகளை) புணர்ந்தார்கள்.

இதன் காரணமாக

தசரதனின் ராஜபத்தினிகள் கர்ப்பம் தரித்தார்கள்

என்று வால்மீகி தெளிவாகவே கூறியுள்ளார்.

ஆனால்

வால்மீகி இராமாயணத்தைத்

தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறான்?

யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று புளுகுகிறார்.

ஆரியக் கலாச்சாரம் விபச்சாரத்தைக் கலையாகப் போற்றுவது; அந்தக் காவியத்தை மொழிபெயர்க்க வந்த கம்பனுக்கு ஏனிந்த திரிபு வேலை? -

379357_465803583479299_1015749067_n.jpg
424041_465803606812630_1689931345_n.jpg
317926_465803650145959_23208816_n.jpg
543141_465803700145954_1405840542_n.jpg
20101_465803740145950_37321282_n.jpg
603077_465803790145945_430457953_n.jpg
431199_465803826812608_1736414004_n.jpg
734074_465803870145937_1802023276_n.jpg
 

நன்றி முகநூல் பக்கம் 

Link to comment
Share on other sites

ரமணன்; நாங்கள் நிரூபிக்க முடியாது. ஆனால் நடந்த உண்மை:

  ராமன் சுத்த திராவிடன்.  அவன் இலங்கையை வென்றபின்னர் சீதையை காணிக்கையாக அல்லது பரிசாக பெற்றான். குதிரைகளை அவன் அறிந்திருக்காததால் அயோத்தியிலிருந்து கால் நடையாக தமிழ்நாடு வந்தான். வடநாட்டவர் மிக அண்மைக்காலம் வரை படகுப் போக்குவரத்தை அறிந்திருக்கவில்லை. இதனாலும் வேறுகாரணங்களாலும் பாலம் கட்டியே இலங்கை போனான். வால்மீகி கம்பர் போல் அவதாரக்கதை எழுதவில்லை. ஆனால் அவருக்கு ராமன் தெய்வீக அரசன். இதனால் சீதையும் அப்படியே. குழம்பிப்போன வால்மீகி, கர்ணபரம்பரை கதையை தொகுக்கும் போது  மிச்சம் குழம்பி இருந்தார். நாம் இதை இலகுவாக ஏற்றுகொள்ளாமல், இன்றைய பண்டிதர்கள் கூழுக்கும் பாடி, கஞ்சிக்கும் பாடி இரண்டு பக்கமும் எழுதும் கதைகளில் ஆர்வம் காட்டுகிறோம். இராமன் புத்தருக்கு மிக முந்தைய காலத்தவன். அவனிடமே குதிரைகள் இருக்காத போது அப்பனிடம் குதிரை இருந்ததாக இந்த பண்டிதர்கள் வால்மீகியையும் விடப்பெரிய புரளிகள் கிளறுகிறார்கள்.

 

அன்றைய நாளில் அந்தபுரங்களில் பல பெண்கள் இருந்தார்கள். இதை கல்கோட்டைக்குள் அடைத்து வைத்திருந்த சூரியனை அறியாத சிற்பங்களாக உருவகப்படுத்த முடியாது. அரச மாளிகையே ஒரு சிறு கட்டிடமாகத்தான் இருந்திருக்கலாம். இதனால் பல அந்தப்புரத்து பெண்கள் கவனிப்பார் அற்று இருந்தார்கள். இது நாளடைவில் பல சுவாரசிய கதைகளுக்கு இடமளித்தது. இதனால் ஆட்சிக்கு வந்தவர்கள் பலர் உரிமை உடையவர்கள் அல்ல. இதை இராமாயணம், மகாபாரத்தில் நினைக்க வைப்பது போலவும் அரசனென்றால் impotence ஆகவும் இருக்க வேண்டும் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. சில சில இடர்ப்பாடுகள் சில அரசர்களுக்கு இருந்திருக்கலாம். ஆனால் இராமன், அர்சுனன், வீமன் எல்லோருடய பிறப்புக்ககதைகளும் பிற்காலம் சுவாரசியத்திற்காக இட்டுக்கட்டப்பட்டவையே.

 

முழுக்கதைகளிலும் மிகச் சிறிய பாகமே உண்மை. இதை நாம் ஏற்காமல் மகாபாரதம், இராமாயணம் 100% உண்மை என்று வைத்துகொண்டு அலசுவது பொருள் இல்லாதது. அதை நாம் ஏற்றுகொள்ளதயாரக இருந்தால் ராமனோ, தசரதனோ அஸ்வமேத யாகம் செய்தது பச்சை பொய் என்று ஏற்றுக்கொள்ள கஸ்டம் இருக்காது. 

 

இதில் இந்த ஆசிரியர் அழைப்பதற்காக  புத்தரும் வந்து போட்டுக்கொள்ளவென்றால் மாடுகள் எப்படி வண்டியை இழுக்கபோகிறதோ?

 

(எல்லா சிற்பங்களும் பிற்காலத்தவை. அவைகள் எதற்கும் சாட்சியமாக வரமாட்டா)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமணனும் எதோ பரபரப்பா எழுதவேணும் என்று நினைக்குது. அதுக்கு உந்த ஆரியக் கதைதானா கிடைத்தது. ?????

Link to comment
Share on other sites

ரமணனும் எதோ பரபரப்பா எழுதவேணும் என்று நினைக்குது. அதுக்கு உந்த ஆரியக் கதைதானா கிடைத்தது.   ?????

 

 ஏன் கடைசி வரை பார்க்கவில்லையா மூலத்தை? 

 

நன்றி ரமணன் பகிர்வுக்கு

Link to comment
Share on other sites

  • 7 years later...

/////////////ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறார்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று கூறுகிறார்.//////////////////////////////

இராமனின் பிறப்பு பற்றிவால் மீகி கூறியது

வால்மீகி ராமாயணம், பாலா காண்டம், சர்க்கம் – 16….


இதம் து ந்ருயார்தூல பாயசம் தேவமிர்தம் 
ப்ரஜாகாரம் க்ருஹான தவம் தந்யமாரோக்ய வர்தநம்  - வசனம் 19

சிங்கம் போன்ற மன்னரே! இது தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாயாஸம். இது புத்திரர்களை தரக் கூடியது, செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது, இதனை பெற்றுக் கொள்.. 

ததஸ்து தா: ப்ராஷ்ய ததுத்த மஸ்த்ரியோ மஹீ பதேருத்தம பாயஸம்
ஹூதாயநாதித்ய ஸமாநேதேஸஸோ-சசிரேண கர்பாந் ப்ரதிபேதிரே ததா    - வசனம்-30

மன்னர் அளித்த பாயாசத்தை தனித்தனியே பருகிய உத்தம பெண்டீர் விரைவிலே கர்பம் தரித்தனர். 

இப்படி புத்திர யாகம் செய்து அதில் உள்ள பிரசாதத்தை உண்டு, பின் பல மாதங்கள் கழித்து தான் தசரதருக்கு-சவுசல்யேகிக்கும் பிறக்கிறார் ராமர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/5/2020 at 22:24, Ananth Jps said:

/////////////ஆனால் வால்மீகி இராமாயணத்தைத் தமிழில் மொழிபெயர்த்த கம்பனோ என்ன எழுதுகிறார்? யாகசாலையில் புகுந்து கலைக்கோட்டு மாமுனி தீ வளர்த்து ஆகுதி வழங்கினான். உடனே பூதமொன்று தீயினின்று எழுந்தது. பூதம் தோன்றி தந்த பாயசத்தைத் தசரதன் தன் மனைவியர் மூவருக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அதன் காரணமாக கவுசலை, கைகேயி, சுபத்திரை ஆகியோர் கர்ப்பம் தரித்தனர் என்று கூறுகிறார்.//////////////////////////////

இராமனின் பிறப்பு பற்றிவால் மீகி கூறியது

வால்மீகி ராமாயணம், பாலா காண்டம், சர்க்கம் – 16….


இதம் து ந்ருயார்தூல பாயசம் தேவமிர்தம் 
ப்ரஜாகாரம் க்ருஹான தவம் தந்யமாரோக்ய வர்தநம்  - வசனம் 19

சிங்கம் போன்ற மன்னரே! இது தேவர்களால் உண்டாக்கப்பட்ட பாயாஸம். இது புத்திரர்களை தரக் கூடியது, செல்வத்தையும் ஆரோக்கியத்தையும் தரக் கூடியது, இதனை பெற்றுக் கொள்.. 

ததஸ்து தா: ப்ராஷ்ய ததுத்த மஸ்த்ரியோ மஹீ பதேருத்தம பாயஸம்
ஹூதாயநாதித்ய ஸமாநேதேஸஸோ-சசிரேண கர்பாந் ப்ரதிபேதிரே ததா    - வசனம்-30

மன்னர் அளித்த பாயாசத்தை தனித்தனியே பருகிய உத்தம பெண்டீர் விரைவிலே கர்பம் தரித்தனர். 

இப்படி புத்திர யாகம் செய்து அதில் உள்ள பிரசாதத்தை உண்டு, பின் பல மாதங்கள் கழித்து தான் தசரதருக்கு-சவுசல்யேகிக்கும் பிறக்கிறார் ராமர். 

இந்த திரி இனி பத்தி எரியும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.