Jump to content

ஐயையோ ...ஐயையோ.... என்னவோ பண்ணுது....


Recommended Posts

ஐயையோ...ஐயையோ....என்னவோ பண்ணுது....

-------------------------------------------

யாழ் களத்தில் அஜீவன் அண்ணா தலைமையில் "டாவின்சி கோட்'டை தமிழில் சினிமாவாக எடுக்க முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

தமிழ்ப் படமென்றபடியால் இடையிடையே ஒரு காதல் கதை ஓடவேண்டுமென்பதும் ......இரண்டு மூன்று பாடல் காட்சிகளும் இருக்கவேண்டுமென்பதும் படம் வெற்றி பெறுவதற்கான எழுதப்படாத சட்டமல்லவா...?

.

முழுக்க முழுக்க யாழ் கள நண்பர்களின் பங்களிப்புடனேயே இந்தப் படம் படமாக்கப்பட இருக்கின்றது.

எனவே பங்கு பெற விரும்பும் கலைஞர்கள் உடனும் தொடர்பு கொள்ளுங்கள் முதல் முதல் படமாக்கப் படும் விடயம் மங்கள கரமாக இருக்க வேண்டுமென்பதனால் அந்தப் படத்திற்கான ஒரு பாடலைப் படமாக்குவதற்கு படப்பிடிப்புக் குழு முதலில் முடிவெடுத்திருக்கின்றது.

இந்தப் பாடலில் பொட்டு தாலி தங்கம் என்ற சொற்கள் மங்களகரமல்லவா...? :lol::lol: இனிப் பாடல்......

அவள் : ஐயையோ....ஐயையோ....

என்னவோ பண்ணுது...

தொண்டை குழியோரம்

என்னென்னவோ அடைக்குது..

நெஞ்சுக் குழி மட்டும்

விம்மி விம்மித் தணியுது...

அவன் : ஆத்தங் கரையோரம்

அந்தி வரும் வேளையிலே

அத்தை பொண்ணு போகையிலே

அடிச்சு மழை கொட்டுதடி...

(ஐயையோ...ஐயையோ..)

அவள் : கொட்டு மழை ஈரத்தில

ஊசி போல குத்துதையா

உந்தன் பார்வை.....

உசிரு எங்கும் தேங்குதையா

(ஐயையோ...ஐயையோ....)

அவன் : ஊதல் காத்து வீசுதடி

உள்ளம் மட்டும் வேர்க்குதடி

போர்வையா நான் வரவா

போர்த்துக் கொள்ள நீ வரியா

(ஐயையோ...ஐயையோ..... )

அவள் : போர்வையா நீ வரலாம்

பொட்டு ஒண்ணு தந்திடையா

தங்கமா நான் வருவேன்

தாலி ஒண்ணு கட்டிடையா

(ஐயையோ..ஐயையோ...)

இந்தப் பாடலை இளைய ராஜாவைக் கொண்டு இசையமைக்க இருக்கின்றோம். பாட விரும்புபவர்கள் உங்கள் பெயர்களைப் பதிவு செய்யவும். மற்றும் போர்வையா இருக்க விரும்புபவர்கள் போர்த்துக் கொள்ள விரும்புபவர்கள் கூட பெயர்களைப் பதிந்து விடவும்.

படப்பிடிப்புக் குழு சார்பில்

-எல்லாள மஹாராஜா-

.

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply

அட எல்லாம் முடிஞ்சு கடசியா அஜீவன் அண்ணாடை தொழிலுக்கையும் கை வைச்சாச்சா?

அப்புறம் படம் எடுத்த மாதிரித்தான். இருந்தாலும் உங்கட பாட்டு நல்லாத்தான் இருக்கு.

எத்தனை காலத்துக்குத்தான் ஒரு காதல்க் கதையையும் இரண்டு மூன்று பாடல் காட்சியையும்

வைச்சு பேக்காட்டுவிங்கள். இப்ப உது எல்லாம் சரி வராது. எதுக்கும் உங்கட பாடலைப் பற்றி

மேலிடத்தில் கலந்து ஆலோசித்து சொல்லுறம் படத்துல போடலாமா எண்டு. ஆனால் என்ன?

கொஞ்சம் செலவாகும் பறவாயில்லையா?

Link to comment
Share on other sites

அட எல்லாம் முடிஞ்சு கடசியா அஜீவன் அண்ணாடை தொழிலுக்கையும் கை வைச்சாச்சா?

அப்புறம் படம் எடுத்த மாதிரித்தான். இருந்தாலும் உங்கட பாட்டு நல்லாத்தான் இருக்கு.

எத்தனை காலத்துக்குத்தான் ஒரு காதல்க் கதையையும் இரண்டு மூன்று பாடல் காட்சியையும்

வைச்சு பேக்காட்டுவிங்கள். இப்ப உது எல்லாம் சரி வராது. எதுக்கும் உங்கட பாடலைப் பற்றி

மேலிடத்தில் கலந்து ஆலோசித்து சொல்லுறம் படத்துல போடலாமா எண்டு. ஆனால் என்ன?

கொஞ்சம் செலவாகும் பறவாயில்லையா?

அன்பு ரசிகை...! அதென்ன எல்லோரும் மேலிடத்தில கதைத்து.....என்று பயங்காட்டுகின்றீர்கள்... :):lol:

எனக்கு மேலிடம் எனது மூளைதான்...அது இல்லாத ஆக்கள் தான் .....இப்படிப் பயங்காட்டுவார்கள் என்று ...எங்களுடைய கந்தப்புப் பெரியப்பாவின்ர வள்ளிப்பிள்ளை ஆச்சி அடிக்கடி சொல்லுவா...

அவ சொல்லும் போது எனக்கு அப்படிப் பட இல்லை...உங்களுக்கு என்ன படுகின்றது... :lol::D சந்தேகம் தீர்க்கும் ஆசையுடன்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஓ...என்னை பாடவிடு என்று கேட்டது இதுக்குத்தானா..?? ம் ..பாட்டு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :wink: :lol:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...

Link to comment
Share on other sites

ஓ...என்னை பாடவிடு என்று கேட்டது இதுக்குத்தானா..?? ம் ..பாட்டு நல்லா இருக்கு வாழ்த்துக்கள் :wink: :lol:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...

கெளரி பாலன்....! நீங்கள் தான் கதாநாயகன் என்று கிசு கிசு பரவுகின்றதே உண்மையா? :lol::lol:

உண்மையென்றாலே..... கதாநாயகிக்குப் பலத்த போட்டி நடக்கும்.... என்ன...நான் சொல்வது சரிதானே...?

வில்லன் ஆதிவாசி என்றும் கதை அடிபடுகின்றது.... :roll: :roll:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அட போப்பா........

எல்ஸ்....

சொந்தக்கதை சோகக்கதை...

நானே காதலிக்காக காத்துக் காத்து நைந்து நூலாக் கிடக்கிறன்.

இதற்குள் சினிமா.....வில்லன்

யோவ்.....ஆதிவாசியை சினிமாவிற்குள் இழுத்தீர்களோ.....

கதை (ஆதிவாசியின் காதல்கதை) கந்தல்!

சோகத்தோடு ஆதிவாசிmonkey.jpg

Link to comment
Share on other sites

´ñÎ ÁðÎõ ¦¾Ç¢Å¡ Å¢ÇíÌÐ..

±øÄ¡Ç Á†¡Ã¡º¡Å¢üÌ þô§À¡ «ÅºÃÁ¡

§À¡÷¨Å §¾¨ÅôÀÎÐ.... :lol:

Link to comment
Share on other sites

பாடவா பாடவா என்று கேட்டு பாடிய பாட்டு நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

´ñÎ ÁðÎõ ¦¾Ç¢Å¡ Å¢ÇíÌÐ..

±øÄ¡Ç Á†¡Ã¡º¡Å¢üÌ þô§À¡ «ÅºÃÁ¡

§À¡÷¨Å §¾¨ÅôÀÎÐ.... :lol:

குளிர் முருகா குளிர்......

வாடை வாட்டுது முருகா .....

போர்வை ஒன்று கேட்குது முருகா.....

இரண்டு போர்வை.. :lol::lol: வைத்திருக்கின்ற முருகா....

அதில் ஒன்றை இரவல் :lol::lol: தந்திடாதே

மேட் இன் சிறிலங்கா :lol::lol: எண்டால் இன்னும் விசேஷம் முருகா...... .

முருகனின் அருள் வேண்டும்

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

பாடவா பாடவா என்று கேட்டு பாடிய பாட்டு நன்றாக இருக்கு ... வாழ்த்துக்கள்.

அப்ப.....பாடிக்கொண்டே ....ஆடவா.. ஆட வா :lol::lol::lol::lol: என்று கேட்டுக் கொண்டு ஆடியது சரியில்லை ....என்கின்றீர்களா? ரமா

Link to comment
Share on other sites

பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இதைப் படத்தில் போடுவதும் போடாததும் அயீவன் அண்ணாவின் கையில்தான் உள்ளது. போடாட்டி பரிந்துரை செய்யச்சொல்லி என்னட்ட வரக்கூடாது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன்

உங்களை முற்றிலும் எதிர்பாராத திசையில் அடையாளப்படுத்தி

இருப்பதைப் பார்த்தால் உங்களை எழுத்தாளர் வட்டத்திலிருந்து

நகர்த்தி கலைஞர் வட்டத்திற்குள் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

இப்படிக்கு வல்வை சகாறா.

Link to comment
Share on other sites

பாடல் நன்றாக இருக்கிறது. ஆனால் இதைப் படத்தில் போடுவதும் போடாததும் அயீவன் அண்ணாவின் கையில்தான் உள்ளது. போடாட்டி பரிந்துரை செய்யச்சொல்லி என்னட்ட வரக்கூடாது. :lol:

பரிந்துரைக்கெல்லாம் வரமாட்டேன்.......... சுஜீந்தன்...... ஹி...ஹி..... அஜீவன் அண்ணாட்டை ஒரு சிபாரிசு செய்வீங்களா..?....

சிபாரிசு வேண்டி -எல்லாள மஹாராஜா

Link to comment
Share on other sites

எல்லாளன்

உங்களை முற்றிலும் எதிர்பாராத திசையில் அடையாளப்படுத்தி

இருப்பதைப் பார்த்தால் உங்களை எழுத்தாளர் வட்டத்திலிருந்து

நகர்த்தி கலைஞர் வட்டத்திற்குள் சேர்க்கலாம் என நினைக்கிறேன்.

இப்படிக்கு வல்வை சகாறா.

அது என்னாங்கோ .... அட்டதிசைக்கு அப்பால ...ஒம்பதாவது திசை. :lol::lol: ......என்னவோ தட்டி.... நிமித்தி... வளைத்து ....எந்த வட்டத்துக்கையாலும் ..சேர்த்தால் சரிதானுங்கோ.... :lol::lol::lol: .. வட்டம் போடுறீங்க...வாத்தியார் வட்டம் (முட்டை) :lol::lol: இல்லைதானுங்களே.....

வட்டத்துக்குள் சதுரமாக -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

யோவ் எல்ஸ்...

எங்கேய்யா போய்விட்டீர்?

மனித உரிமைகள் குழுவிடம் உம்மைக் காணாமல் போனோர்

பட்டியலிலை இணைக்கச்சொல்லிவிட்டு

இப்பதான் வாறன்...

இங்கு அரட்டையோடு நிற்கிறீர்.....

உம்மைக்காணாமல் நான் உம்ம வேலையைப் பாத்து நார்நாராக்

கிழஞ்சு போனன்.......

என்ன வாய்க்குள்ளேயே நமுட்டுச் சிரிப்பு.....

அருவில இனிக் குளிக்கவே போகமாட்டேம்பா....

என்னா கொத்துக் கொத்துறாங்க பறவைகள்...

நான் என்ர புராணத்தை படிச்சுக் கொண்டு......

எங்கேய்யா போயிருந்தீர்.....

நாராய் கிழிந்த ஆதிவாசி

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா தமிழ்ப்படுத்தும் டாவின்சி கோட்டில்....

அவளும்..... அவனும் (தமிழில் என்னா பேர் வைக்கலாம்...?) சந்திக்கின்றார்கள். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி .... இணைபிரியாக் காதலர்கள் ஆகின்றனர்....

இளமையின் புதுராகத்தில் ஜதி பிரிக்க முடியா கிளர்ச்சிகளில் மனம் ஒன்றி லயித்துப் போகின்றார்கள்....

அந்த சுகத்தை... உள்ளத்தில் ஊறிய இன்பத்தை ...தன் இணையிடம் கேட்டு அறிந்து கொள்ளத் துடிக்கும் மனங்களின் துடிப்பு இது....

வெட்டி வேரின் வாசம் விடலைப் பொண்ணின் நேசம் என்றால் ....கட்டிக் கரும்பின் இனிமை அல்லவா ?.....அவனின் அன்பு.....

இதோ....அந்த அன்பில் திளைத்த அவர்களின் அனுபவம்.....

அவன்: நீயே சொல்லு.... நீயே சொல்லு....

நினைக்கும் எண்ணம்

விடியும் வரைக்கும்

நீயே சொல்லு....

அவள்: நினைவில் சுமக்கும் வண்ணம்

நிமிஷம் கொல்லும் பருவம்

உயிரில் கரையும் இதயம்

உண்மை என்ன நீயே சொல்லு

(நீயே சொல்லு)

அவன்: விழியில் இறங்கும் அழகு

விதியில் கலக்கும் உறவு

விடியும் வரையும் இணையும்

விந்தை என்ன நீயே சொல்லு

(நீயே சொல்லு)

அவள்: பருவ வயதின் பாடல்

பழக இனிக்கும் கூடல்

முதுமை வரைக்கும் தேடல்

முடிந்தது என்ன நீயே சொல்லு

இருவரும்: நீயே சொல்லு .... நீயே சொல்லு...

நினைக்கும் எண்ணம்

விடியும் வரைக்கும்

நீயே சொல்லு.....

-எல்லாள மஹாராஜா- :lol::lol:

Link to comment
Share on other sites

கட்டிக் கரும்பின் இனிமை, அது இது எண்டு சொல்லுறியள். என்னமோ நடக்குது, எதுக்கும் அஜீவன் அண்ணாவை இங்காலப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லனும். :P :P

அப்புறம் பாட்டு நல்லா இருக்கு :wink:

Link to comment
Share on other sites

ஆஹா...மகாராஜாவுக்கு என்னமோ ஆகிப்போச்சு...

பாட்டு சூப்பர்,,,தொடரட்டும் தங்கள் பணி :P :D

Link to comment
Share on other sites

கட்டிக் கரும்பின் இனிமை, அது இது எண்டு சொல்லுறியள். என்னமோ நடக்குது, எதுக்கும் அஜீவன் அண்ணாவை இங்காலப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லனும். :P :P

அப்புறம் பாட்டு நல்லா இருக்கு :wink:

அஜீவன் அண்ணா தானே படம் எடுக்கின்றார்... :(:D

வரவேண்டாம் என்றால் எப்படிடிடிடிடி.......

காத்திருக்கும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ஆஹா...மகாராஜாவுக்கு என்னமோ ஆகிப்போச்சு...

பாட்டு சூப்பர்,,,தொடரட்டும் தங்கள் பணி

தொடருகின்றேன் கெளரிபாலன்.....உங்கள் பணி செய்து கிடப்பதே என் வேலை..... :(:D:

பணிசெய்யும் -எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

அஜீவன் அண்ணா தானே படம் எடுக்கின்றார்... :(:D

வரவேண்டாம் என்றால் எப்படிடிடிடிடி.......

காத்திருக்கும்

அதனால்த்தான் வர வேண்டாம் என்று சொல்லுறன். இது கூட மாகாராஜாக்கு புரியவில்லையா? :roll:

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் இருப்பவர்களை எல்லாம் இரசிகை முட்டாள்கள் என்று தீர்மானித்தால் என்ன செய்ய முடியும்.... :lol::D:lol::lol:

உங்கள் வசனத்தைத் தான் சொல்கின்றேன்..... :lol::lol:

முட்டாள்களுள் ஒரு முட்டாள் :lol:

-எல்லாள மஹாராஜா-

Link to comment
Share on other sites

ரசி அக்கா ஏன் அப்பிடி சொன்னவ தெரியுமா எல்ஸ்

இப்படி நீங்க நல்ல பாட்டு எழுதுறதை அஜிவன் அண்ணா பாத்தா உங்களை பாடலாசிரியரா போடுவார் :wink: :P

பிறகு ரசி அக்கா எப்படி திரைப்பாடலாசியர் ஆகிறது அதுதான் :oops: :P

அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா :wink: :?: :?: :?:

Link to comment
Share on other sites

அது சரி எப்படி இப்படி நல்ல பாட்டு எல்லாம் எழுதுறீங்க

காதலிக்கிறீங்களா

அது சரி காதலிச்சாத்தான் பாட்டுவரும் எண்டு உங்களுக்கு எப்படித் தெரியும்? :?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.