Jump to content

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது போட்டியில் இலங்கை வெற்றி


Recommended Posts

.

அவுஸ்திரேலியாவிற்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரின் 3ஆவது போட்டியில் இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது.

பிறிஸ்பேணில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 26.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 74 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, ஒரு கட்டத்தில் 9 விக்கெட்டுக்களை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இறுதி விக்கெட்டுக்காக மிற்சல் ஸ்ரார்க், ஷேவியர் டொகேர்ட்டி ஆகியோர் 34 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் மிற்சல் ஸ்ரார்க் ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும், ஷேவியர் டொகேர்ட்டி 15 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எந்த வீரரும் இரட்டைப்படை ஓட்டங்களைப் பெற்றிருக்கவில்லை.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அற்புதமாகப் பந்துவீசிய நுவான் குலசேகர 10 ஓவர்களில் 22 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். லசித் மலிங்க 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், அன்ஜலோ மத்தியூஸ், ஷமின்ட எரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

75 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 20 ஓவர்களின் நிறைவில் வெற்றி இலக்கை அடைந்தது.

முதலாவது விக்கெட்டை 4 ஓட்டங்களுக்கே இழந்த இலங்கை அணி, இரண்டாவது விக்கெட்டை 33 ஓட்டங்களுக்கு இழந்தது. அதன் பின்னர் 4 விக்கெட்டுக்களை இழந்து 37 ஓட்டங்களைப் பெற்றுத் தடுமாறிய போதிலும், பின்னர் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர்.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக குஷால் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காமல் 22 ஓட்டங்களையும், திலகரட்ண டில்ஷான் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிற்சல் ஜோன்சன் 3 விக்கெட்டுக்களையும், மிற்சல் ஸ்ரார்க் 2 விக்கெட்டுக்களையும், கிளின்ட் மக்காய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இப்போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் நுவான் குலசேகர தெரிவானார்.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் இலங்கை அணி 3 போட்டிகளின் நிறைவில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

http://tamil.dailymirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/57201-2013-01-18-12-46-06.html

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு ஆட்டம் வெல்ல வேண்டும் .ஆசியில் அது சாதனையாக இருக்கும் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ரெண்டு மட்சில கவனம் செலுத்தேல்லை அதாலை சிறிலங்கா வெண்டிட்டுது. அடுத்த ரெண்டு மட்சையும் விடக் கூடாது. :unsure: 

Link to comment
Share on other sites

இன்னும் ஒரு ஆட்டம் வெல்ல வேண்டும் .ஆசியில் அது சாதனையாக இருக்கும் .

இன்னும் இரண்டு போட்டிகள் இருக்குதானே

Link to comment
Share on other sites

74 ரன்களுக்கு சுருண்டது ஆஸி., * இலங்கை அசத்தல் வெற்றி  

Nuwan-Kulasekara-336.jpg

 

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 74 ரன்களுக்கு "ஆல் அவுட்டாகி' பெரும் அவமானத்தை சந்தித்தது. இப்போட்டியில் 5 விக்கெட் வீழ்த்திய குலசேகரா, இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டார். 
ஆஸ்திரேலியா சென்றுள்ள இலங்கை அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நேற்று நடந்தது. "டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், "பேட்டிங்' தேர்வு செய்தார்.
குலசேகரா மிரட்டல்:
இலங்கை அணியின் மிரட்டல் பந்துவீச்சில் ஆஸ்திரேலியா திணறியது. மாத்யூஸ் பந்தில் வார்னர் (4) வெளியேறினார். பின் குலசேகரா "வேகத்தில்' வரிசையாக விக்கெட்டுகள் சரிந்தன. இவரது பந்துவீச்சில் ஹியுஸ் (3), டேவிட் ஹசி(4), பெய்லி(0), கேப்டன் கிளார்க் (9) வெளியேறினர். வேட் (8) ஏமாற்றினார். ஒரு கட்டத்தில் 18.3 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 40 ரன்கள் எடுத்து தவித்தது. இந்த நேரத்தில் ஸ்டார்க் (22*) கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 26.4 ஓவரில் 74 ரன்களுக்கு "ஆல் அவுட்' ஆனது. 
இலங்கை வீரர் குலசேகரா முதல் முறையாக 5 விக்கெட் வீழ்த்தினார். 
திணறல் துவக்கம்:
சுலப இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு கேப்டன் ஜெயவர்தனா (1) ஏமாற்றினார். பின் மிட்சல் ஜான்சன் "வேகத்தில்' தில்ஷன் (22) வெளியேறினார். திரிமன்னே (7), தரங்கா (12), ஜீவன் மெண்டிஸ் (2) ஏமாற்றினர். பின் விக்கெட் கீப்பர் குஷால் ஜெனித் பெரேரா(22*) கைகொடுக்க, இலங்கை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. 
ஆட்டநாயகன் விருதை குலசேகரா தட்டிச் சென்றார்.
27
நேற்று, 74 ரன்களுக்கு சுருண்ட ஆஸ்திரேலிய அணி, கடந்த 27 ஆண்டுகளில் ஒருநாள் போட்டியில் தனது மோசமான ஸ்கோரை பதிவு செய்தது. இது இந்த அணியின் இரண்டாவது மோசமான ஸ்கோர். முன்னதாக இங்கிலாந்து(1977, பர்மிங்ஹாம்), நியூசிலாந்துக்கு(1986, அடிலெய்டு) எதிராக இரண்டு முறை 70 ரன்களுக்கு சுருண்டது. 
* ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் போட்டியில் முதன்முறையாக, முதலில் "பேட்' செய்து 100 அல்லது அதற்கு குறைவான ஸ்கோரை பெற்றது. 
180
நேற்று, 180 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலங்கை அணி வென்றது. இதன்மூலம் அதிக பந்துகள் மீதமிருந்த நிலையில், தனது மோசமான தோல்வியை பெற்றது ஆஸ்திரேலியா. முன்னதாக 2009ல் செஞ்சுரியனில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் 142 பந்துகள் மீதமிருந்த நிலையில் தோற்றது. 
4
வேகத்தில் மிரட்டிய இலங்கை அணியின் குலசேகரா, 10 ஓவரில் 5 விக்கெட் கைப்பற்றி 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன்மூலம் முதன்முறையாக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய குலசேகரா, தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். 
* தவிர, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றிய 4வது இலங்கை பவுலரானார். 
10
அபாரமாக பந்துவீசிய குலசேகரா, ஆஸ்திரேலிய மண்ணில், 5 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய, 10வது ஆசிய பவுலரானார். இலங்கை சார்பில் இரண்டாவது பவுலரானார்.
8
ஆஸ்திரேலியா சார்பில் "டாப்-8' பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். இது, ஆஸ்திரேலிய அணிக்கு முதன்முறை. ஒருநாள் போட்டி வரலாற்றில், மூன்றாவது முறையாக அரங்கேறி உள்ளது. ஏற்கனவே கனடா (2003), ஜிம்பாப்வே (2004) அணிகளின் "டாப்-8' பேட்ஸ்மேன்கள் இதுபோல மோசமாக வெளியேறினர். இந்த மூன்று அணிகளும், இலங்கைக்கு எதிரான போட்டியில் சொற்ப ரன்களில் சுருண்டன.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழாக்கள் மைதானத்திற்கு முன்னாலே போய் நின்று உற்சாகம் கொடுத்தால் இலங்கை வெல்லாமல் என்ன செய்யும் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதன் கருத்து, இலங்கை அணி பலம் பொருந்தியது என்று அர்த்தமில்லை!

 

அவுஸ்திரேலியா தனது முழுமையான அணியை, விளையாட அனுப்பவில்லை! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்சின்ட முன்னனி விக்கேட் கொஞ்சம் போய் விட்டது 50 ஓட்டத்துக்கு உள்ள ... இன்னும் ஒரு 100 ஓட்டம் எடுத்து இருந்தா இலங்கையை மடக்கி இருப்பினம்....

Link to comment
Share on other sites


542015714index.jpg

சவாலுடன் இன்றைய போட்டியில் ஆஸி. முதலில் துடுப்புடன் களம் இறங்குகிறது

 

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது. 

இன்றைய போட்டியில் நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 

இத் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இரண்டிற்கு ஒன்று என்ற நிலையில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விக்கேட்டுக்கு 50ஓட்டம் என்ர நல்ல நிலையில் அவுஸ் நிக்குது

Link to comment
Share on other sites

மைதானத்திற்குள்  ஒரே சிங்க கொடியாக இருக்கு புலிக்கொடி ஒன்றையும் காணவில்லை .

போராட்டத்தை வெளியில் நின்று பார்த்ததுபோல் கொடியையும் வெளியில் நின்று பிடிக்கின்றார்கள் போல . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர போக்கை பார்த்தா இலங்கை தான் வெல்லும் போல இருக்கு.... அவுஸ் வீரர்கள் ஓட்டம் எடுக்க கஸ்ர படினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்திற்குள்  ஒரே சிங்க கொடியாக இருக்கு புலிக்கொடி ஒன்றையும் காணவில்லை .

போராட்டத்தை வெளியில் நின்று பார்த்ததுபோல் கொடியையும் வெளியில் நின்று பிடிக்கின்றார்கள் போல . 

இப்பொழுது சிறிலங்காவைப் புறக்கணியுங்கள் என்று தான் அவுஸ்திரெலியர்களும் தமிழர்களும் போராட்டம் நடாத்துகிறார்கள். இங்கு ஒரு கொடியினையும் பிடிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ் வெற்றி :D சந்தோச படுர ஆக்கள் சந்தோச படுங்கோ...காவாலி நீங்கள் இன்று விளையாட்டு பார்த்திங்கலா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா பையன் பார்த்தேன். :D :D

சிறிலங்காவ சீரிஸ் வெல்ல விட முடியுமா என்ன? :D :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.