Jump to content

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.


Recommended Posts

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.

(திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்)

லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் குழுவும் லண்டன் வந்து பல கோடி செலவில் தீவிர பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதனைத் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறைமேளங்களையும் வேறு சில இசைக்கருவிகளினையும் பயன்படுத்தித் தமிழ்த் தேசியத்தின் பக்கம் உள்வாங்கியதுடன் சிங்களவர்களின் நிகழ்வுகளைப் பார்க்க வந்த சுமார் 25 ஆயிரம் வெள்ளை இனத்தவர்களையும் தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தின் பக்கம் திசை திருப்பினார்கள். நீண்ட நெடுங்காலமாகத் திட்டமிட்ட முறையில் மழுங்கடிக்கபட்டும் போட்டி பொறாமை மமதை காரணமாக நிகழ்வுகளைக் குழப்பியும் வேறு பல சுயநலக் காரணங்களைக் கருத்திற் கொண்டு நிகழ்வுகளை நடத்தாமலும் இருந்து வந்த சிலரால் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் முடக்கப்பட்டிருந்தது. சின்னஞ் சிறுசுகள் தற்போது உணர்வின்பால் உந்தப்பட்டு வீதிக்கு வந்தும் நீண்ட நெடுங்காலமாக மாமனிதர் சிவராம் பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் கூறியது போன்று மீண்டும் பிரித்தானியாவில் முளைவிட்டுள்ள தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தைத் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்த்து மக்களை உற்சாகம் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றமை பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ்ச் சிறுவர்கள் செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகத்தை சிறிது வினாடிகளுக்கு மட்டும் ஒலிபரப்புச் செய்துவிட்டு தமிழர்களுக்கு வேண்டத்தகாத சிங்களவர்களின் ஏற்பாட்டு நிகழ்வைப் பல நிமிடங்களாக ரி.ரி.என் ஒலிபரப்புச் செய்து தமிழ் இளைஞர்ளின் நிகழ்வுகளை ஓரங்கட்டியிருந்ததுடன் இலங்கை தேசியத் தொலைக்காட்சி றூபவாகினியின் செய்தித் தணிக்கை போன்று செயற்பட்டிருந்தது.

ஜரோப்பா எங்கும் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தி ஏற்பாட்டாளர்களைத் தூண்டி அவர்களுக்குப் பூரண ஆதரவு கொடுத்துப் பல வேறு வகையான தீவிர தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தை சுயாதீனமாக முடக்கி விடவேண்டிய தொலைக்காட்சி இவற்றையெல்லாம் மழுங்கடிக்கும் செயல்களைக் காட்சி நேரங்களில் குறைத்து தேவையற்ற விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வேண்டத்தகாத விடயங்களையும் ஒலிபரப்புச் செய்து வருகின்றது.

இத்தகைய விடயங்களை சாதமாகப் பரிசீலித்துப் பிரித்தானியா உட்பட ஜரோப்பிய நாடுகள் அனைத்திலும் தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்குப் பூரண ஊடாக ஆதரவு கொடுத்து பிரச்சார சக்திகளை ஊக்குவித்து வளர்த்துவிட வேண்டியது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் ஊடகம்; ரி.ரி.என் பார்த்து ஜரோப்பாவில் மக்கள் சோம்பலாளிகளாகவும் தமிழ்த் தேசிய ஊற்றில் வற்றியவர்களாகவும் மாறவிடாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது போன்று தேவையற்ற சீக்கிய இனத்தவர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜரோப்பாவெங்கும் சுயாதீன தமிழ்த் தேசியப் பிரச்சார சக்திகளை வளர்த்துவிட வேண்டுமென்று எந்தவித வேறுபாடுகளும் அற்ற முறையில் இத்தகைய ஒரு ஆர்பாட்டமாக இருப்பினும் அதற்குப் பூரண ஆதரவு கொடுப்பதுடன் ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் பல உதவிகளைச் செய்து கொடுத்துக் கட்டமைப்பொன்றை வளர்க்க வேண்டுமென்று லண்டனிலிருந்து சுந்தரம் என்பவர் எமக்கு எழுதி அனுப்பியுள்ள தனது ஆதங்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.nitharsanam.com/?art=18122

Link to comment
Share on other sites

இங்கு புலத்தில் நடக்கும் இப்படியான கழுத்தறுப்புக்கள் யாருக்கு/எதற்கு தாக்கத்தை ஏற்படுத்துமென்று நினைக்காமல் சிலர் தமது கதிரைகளை காப்பாற்றுவதற்காக செய்து வருகிறார்கள்.

நாங்களும் செய்ய மாட்டோம், மற்றவர்களையும் செய்ய விடமாட்டோம் என்ற மனப்பான்மை பல காலமாக புலத்தில் இருந்து வருவதற்கு இது ஒரு நல்ல சான்று. நேற்று லண்டன் ரவல்கார் சதுக்கத்தில் நடைபெற்ற சிங்களவர்களின் கேளிக்கைகளைக் காட்டத் தெரிந்த ரி.ரி.என் க்கு, அங்கு தமக்கு என்ன நடக்குமோ என்பதையெல்லாம் மறந்து தமிழ்த்தேசியத்திற்க்காக களமமைத்த இளையர்கள் கண்களுக்குத் தெரியாமல் போய் விட்டது.

இது ஒரு நிகழ்ச்சியல்ல!!! இப்படி பல நடந்து கொண்டேயிருக்கிறது. தாயகத்தில் தேசியத்திற்கெதிராக பல்லாண்டுகளாக செயற்பட்ட பலர் இன்று தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்ட நிலையிலும், புலத்தில் மாறாக தேசியத்திற்காக செயற்பட்ட செயற்பாட்டாளர்கள் புறக்கணிக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும் வரும் சூழ்நிலையே தொடர்கிறது.

எங்கள் இனத்துக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய சாபம்தான் இந்தகைய செயற்பாடுகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட தமிழ் தொலைக்காட்சிகளுக்கு எதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேணும் எதுக்குக்கொடுக்கக் கூடாது என்று தெரியவில்லைப் போல கிடக்கு. சின்னத்திரையும் சினிமாவும் நேரம் மட்டும் தப்பாமல் போடுவீனம். மற்ற நம்மவர் நிகழ்வுகள் 5 நிமிடம் 10 நிமிடம் தான் வரும் அதுவும் ஒரு ஊமைப்படம்போல எங்க நடந்தது எதுக்காக நடந்தது என்று ஒருவிளக்கமுமில்லாம் வரும்...

ஏன்தான் இப்படிச்செய்கிறார்களோ தெரியவில்லை?

Link to comment
Share on other sites

அதற்கு பல காரணங்கள் இருக்கிறது, எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாது, தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான், சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான், தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம். :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு பொறுக்குதில்லையே - ரி.ரி.என் செய்தித் தணிக்கை.

(திங்கட்கிழமை, 19 யூன் 2006) (யோககுமார்)

லண்டனில் பரவலாக சிங்களப் பௌத்த பேரினவாதிகளின் அடக்குமுறைக்கு எதிராகத் தமிழ்த் தேசியத்தைப் பிரச்சாரம் செய்து தமிழர்கள் தங்கள் உரிமைகளைத் தட்டிக்கேட்க வீதிக்கு இறங்க ஆரம்பித்துள்ளார்கள். பிரித்தானியப் பாராளுமன்றத்தின் நுளைவாயிலில் இதற்கான ஆரம்ப நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. தற்போது பரவலாக லண்டனில் தமிழ்த் தேசிய பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றது. நேற்று முன்தினம் மங்கள சமரவீர மற்றும் மகிந்த றாஜக்சவின் மனைவி தலைமையிலும் இலங்கை விமானத்தில் ஒரு சிங்கள விசேட இசை நடனக் குழுவும் இன்னொரு விமானத்தில் யானைக்குட்டிகளும் அதன் பாகன்களுமாக மாபெரும் அரசியல் பிரச்சாரம் மேற்கொள்ளும் குழுவும் லண்டன் வந்து பல கோடி செலவில் தீவிர பிரசாரம் ஒன்றை முன்னெடுத்திருந்தது. இதனைத் தமிழ் இளைஞர்களும் சிறுவர்களும் தமிழர்களின் பாரம்பரிய இசைக்கருவிகளான பறைமேளங்களையும் வேறு சில இசைக்கருவிகளினையும் பயன்படுத்தித் தமிழ்த் தேசியத்தின் பக்கம் உள்வாங்கியதுடன் சிங்களவர்களின் நிகழ்வுகளைப் பார்க்க வந்த சுமார் 25 ஆயிரம் வெள்ளை இனத்தவர்களையும் தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தின் பக்கம் திசை திருப்பினார்கள். நீண்ட நெடுங்காலமாகத் திட்டமிட்ட முறையில் மழுங்கடிக்கபட்டும் போட்டி பொறாமை மமதை காரணமாக நிகழ்வுகளைக் குழப்பியும் வேறு பல சுயநலக் காரணங்களைக் கருத்திற் கொண்டு நிகழ்வுகளை நடத்தாமலும் இருந்து வந்த சிலரால் கடந்த காலங்களில் இத்தகைய நிகழ்வுகள் முடக்கப்பட்டிருந்தது. சின்னஞ் சிறுசுகள் தற்போது உணர்வின்பால் உந்தப்பட்டு வீதிக்கு வந்தும் நீண்ட நெடுங்காலமாக மாமனிதர் சிவராம் பேராசிரியர் சிவதம்பி ஆகியோர் கூறியது போன்று மீண்டும் பிரித்தானியாவில் முளைவிட்டுள்ள தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தைத் தமிழ்த் தேசியத்துக்கு உரம் சேர்த்து மக்களை உற்சாகம் கொடுக்க வேண்டிய ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து வருகின்றமை பலருக்கும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் நடந்த நிகழ்வில் தமிழ்ச் சிறுவர்கள் செய்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் துண்டுப் பிரசுர விநியோகத்தை சிறிது வினாடிகளுக்கு மட்டும் ஒலிபரப்புச் செய்துவிட்டு தமிழர்களுக்கு வேண்டத்தகாத சிங்களவர்களின் ஏற்பாட்டு நிகழ்வைப் பல நிமிடங்களாக ரி.ரி.என் ஒலிபரப்புச் செய்து தமிழ் இளைஞர்ளின் நிகழ்வுகளை ஓரங்கட்டியிருந்ததுடன் இலங்கை தேசியத் தொலைக்காட்சி றூபவாகினியின் செய்தித் தணிக்கை போன்று செயற்பட்டிருந்தது.

ஜரோப்பா எங்கும் மக்களுக்கு எழுச்சியை ஏற்படுத்தி ஏற்பாட்டாளர்களைத் தூண்டி அவர்களுக்குப் பூரண ஆதரவு கொடுத்துப் பல வேறு வகையான தீவிர தமிழ்த் தேசியப் பிரச்சாரத்தை சுயாதீனமாக முடக்கி விடவேண்டிய தொலைக்காட்சி இவற்றையெல்லாம் மழுங்கடிக்கும் செயல்களைக் காட்சி நேரங்களில் குறைத்து தேவையற்ற விடயங்களையும் தமிழ் மக்களுக்கு வேண்டத்தகாத விடயங்களையும் ஒலிபரப்புச் செய்து வருகின்றது.

இத்தகைய விடயங்களை சாதமாகப் பரிசீலித்துப் பிரித்தானியா உட்பட ஜரோப்பிய நாடுகள் அனைத்திலும் தமிழ்த் தேசியப் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்களுக்குப் பூரண ஊடாக ஆதரவு கொடுத்து பிரச்சார சக்திகளை ஊக்குவித்து வளர்த்துவிட வேண்டியது தமிழ்த் தேசியத்திற்காக உழைக்கும் ஊடகம்; ரி.ரி.என் பார்த்து ஜரோப்பாவில் மக்கள் சோம்பலாளிகளாகவும் தமிழ்த் தேசிய ஊற்றில் வற்றியவர்களாகவும் மாறவிடாது பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது போன்று தேவையற்ற சீக்கிய இனத்தவர்களின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் ஜரோப்பாவெங்கும் சுயாதீன தமிழ்த் தேசியப் பிரச்சார சக்திகளை வளர்த்துவிட வேண்டுமென்று எந்தவித வேறுபாடுகளும் அற்ற முறையில் இத்தகைய ஒரு ஆர்பாட்டமாக இருப்பினும் அதற்குப் பூரண ஆதரவு கொடுப்பதுடன் ஏற்பாட்டாளர்களுக்கு மேலும் பல உதவிகளைச் செய்து கொடுத்துக் கட்டமைப்பொன்றை வளர்க்க வேண்டுமென்று லண்டனிலிருந்து சுந்தரம் என்பவர் எமக்கு எழுதி அனுப்பியுள்ள தனது ஆதங்கத்தில் தெரிவித்துள்ளார்.

http://www.nitharsanam.com/?art=18122

Link to comment
Share on other sites

இனியும் இந்தப் புலத்தில் தமிழ்த்தேசியத்திற்காக செயற்படுபவர்கள் திருந்தாவிடில் அவர்களை நாம் திருத்த வேண்டும் அதுவும் முடியாவிடில் தூக்கியெறிய வேண்டும்.

இங்கு லண்டனில் தற்போது நடைபெறத் தொடங்கியிருக்கும் தமிழ்த்தேசிய செயற்பாட்டு எழுச்சி நிகழ்வுகளுக்கு, இங்கு பல கோஸ்டிகளாக இருக்கும் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என தம்மைக் கூறிக்கொள்பவர்கள், ஒருவர் மற்றையவரின் நிகழ்ச்சிக்கு தமக்கு தெரிந்தவர்கள் செல்வதை தடுக்கிறார்களாம். இவை உடனடியாக நிறுத்தப் பட வேண்டும்.

சிதறிப்போயுள்ள, ஒதுக்கப்பட்ட, விலகிய தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் அணைவரும் அரவணைக்கப்பட வேண்டும். எல்லோருடைய இலக்கும் ஒன்றாக இருக்கும்போது ஏன் குழி பறிப்புக்கள்?????

ஒன்றிணைந்து செயற்படுவோம். ஒற்றுமையே வாழ்வு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு பல காரணங்கள் இருக்கிறது' date=' எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாது, தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான், சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான், தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம்[/color']

உண்மை நிகழ்ச்சிகளை வெளியிட ஏன் நாம் பயப்படவேண்டும். இதைக்காரண்மாகக் கூறுவது பொருத்தமல்ல. தற்போதெல்லாம், விளம்பரங்களே கூடிய நேரத்தை இடம் பிடிக்கின்றன. அந்த விளம்பரங்களைப் போடுவதற்காக் செய்தி நிகழ்ச்சிகளை குறைப்பது, அல்லது, இணைகளத்தில் இருந்து அப்படியே சொல்லுக்கு சொல் செய்திகளைத் தருவது. இப்படி TTN தன் தரத்தை தன்னை அறியாமலையே குறைத்துக் கொண்டு வருகிறது. செய்தி தொகுப்பாளர்கள், முழு நேர செய்திதொகுப்பாளராக இல்லாமல் வந்து விட்டு,வாசித்துவிட்டுப் போகிறவர்களாக இருக்கிறார்கள் போலும். வெளி இடங்களில் நிருபர்கள் வைத்து புலன் வாழ் தமிழ் மக்களின் தமிழ் ஆதரவு செயல்களை வெளிக்காட்டுவதோடு மாத்திரமன்றி மற்றைய நாட்டு ஊடகர்களோடு நட்புறவு ஏற்படுத்தி எமது ஆதரவு செயற்பாட்டுகளை பரிமாறிக் கொள்ளலாம். அதை விட்டு விட்டு கிணற்றுத் தவளைகளாக செயற்படுகிறார்கள் போல் தெரிகிறது!

அல்லிகா

Link to comment
Share on other sites

மேலுள்ள கருத்து தொடர்பாக "தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்" என்று ஒருவர் அனுப்பி வைத்த கருத்து

தமிழ்த்தேசியத்தினைத் தமது வயிற்றுப்பிழைப்புக்காகப் பலர் பாவிக்கத்தொடங்கியுள்ளனர். தாம்தான் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் என்று மேடையேறித் தமிழர்களை நம்ப வைத்துக்கொண்டு திரைமறைவில் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்புகளை புலம்பெயர் நாடுகளில் சிதைப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றனர். இவர்கள் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரீரீஎன் இளையோருடைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்று "சுந்தரத்தாரின்" ஆதங்கங்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால்,

1. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்தி அதற்குரிய பதிலைப் பெற்றிருக்கலாம்.

2. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரீரீஎன் இற்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தி, அந்நிகழ்வை ஒளிபரப்புச் செய்யும்படி கேட்டார்களா என அறிந்திருக்கலாம்.

3. சந்தர்ப்பத்திற்கேற்ப "தமிழீழ" ஆதரவு பேசும் பல ஊடகங்கள் இலண்டனில் இயங்கிவருகின்றனவே. உங்கள் ஆதங்கமும், கோபமும் ஏன் அவர்கள் பால் எழவில்லை?

அடுத்தமுறை, உங்கள் கண்ணையே நீங்கள் குத்தமுன் இருமுறை யோசித்துச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்.

Link to comment
Share on other sites

எல்லா இடங்களிலும் சுயநலம் பிடித்தவர்களும் புகுந்துள்ளதால் இப்படியான பிரச்சனைகள் வருகின்றன.. சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டால் சரியான பதில் தரமாட்டார்கள் நான் அவர்களுடன் பலமுறை கேட்டு எந்தவித பதிலையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. அது ஒரு சில தனிப்பட்டவர்களின் விருப்பு வெறுப்புக்காக நடைபெறுகின்றது.

பல பிரச்சனைகளை இங்கு எழுதமுடியாது. இந்தநேரத்தில் நாம் எம்மீது சேற்றை வாரி இறைக்கமுடியாது. நாம் விடுதலை பெற்றபின் இந்த சுயநல கும்பலை வெளிக்கொணர்வோம். அதுவரை அமைதிகாப்பதுதான் நல்லது. அதற்காக தவறுகளை சுட்டிக்காட்டாமலும் இருக்கமுடியாது.

Link to comment
Share on other sites

எல்லா தமிழ் ஊடகங்களும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஆதரவு அழிக்க வேண்டும்.ஊடகங்கள் நிகழ்வுகள் எங்கு நடந்தாலும், யாரால் நடத்தப்பட்டாலும் அவை தமிழ்தேசியத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருந்தால் கட்டாயம் ஒளி,ஒலி பரப்ப வேண்டும்.யாழ்க் களத்தில் கூட இந்த நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புக்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆகவே இங்கே நிகழ்வு நடை பெற்றது அறிவிக்கப்படவில்லை என்று கூறும் காரணம் வலுவற்றதாகவே இருக்கிறது.மேலும் இதற்குத் தடை காரணம் என்று கூறுவது வலு அற்றது.இந்த நிகழ்வுகள் தடை செய்யப் பட்ட எந்த ஒரு இயக்கதாலும் நடத்தப்படவில்லை, சகல ஜன நாயக உரிமைகளும் உடய பிரித்தானியப் பிரசைகளால் நடத்தப்பட்டது அதுவும் இங்கு பிறந்து வளர்ந்த இளயவர்களால்.இவர்களை நாங்கள் தான் ஊக்கப்படுத்த வேன்டும்.இதில் பெயருக்கு பதவிகளில் இருபோர் வெறும் நொண்டிச் சாக்குக்களைக் கூறுவதாகவே படுகிறது.குறிப்பாக இளயோர் அமைப்பே பிரித்தானியாவிலும் சரி உலகளாவிய ரீதியுலும் சரி முனைப்புடன் இயங்கி வருகிறது.

செயற்பாட்டு ரீதியாக முனைப்புடன் இயங்குபவர்களுக்கு வழி விட்டு , பொறுப்புக்கள் திறமையானவர்களுக்கு வழங்கப் பட்டாலயே இழந்து போன எமது பிரச்சாரத்தை மீளக் கட்டி அமைக்கலாம்.அதற்கு ஆரோக்கியமான சுய விமர்சனமும், இளயவர்களுக்கு வழி விடலும் அவசியம் ஆகும்.

Link to comment
Share on other sites

எனக்கு இருக்கும் சில சந்தேகங்களை தருகிறேன்.

அண்றய தினம் அதே இடத்தில் மங்கள சமரவீர வந்ததையும் பிரித்தானியாவிற்கான இலங்கை தூதுவர் வந்ததையும் அவவுடைய சாறியையும் அவ சிரித்து சிரித்து மங்களவுடன் கதைத்ததையும் மங்கள தனது பரிவாரத்தடன் நடந்து வந்ததையம் சிங்கள பெண்கள் நடனம் ஆடுவதையும் கண்டி பரதநாட்டியத்தையும் இதே ரி.ரி.என்தான் அண்று ஒலிபரப்பு செய்தது...................இது அவர்கள் ரி.ரி.என். இடம் கேட்டார்களா வந்து எடுங்க இதை போடங்க எண்டு?

ரி.ரி.என்னிடம் முன் அனுமதி கேட்டதா இலங்கை அரசு.

ஏற்பாட்டார்கள் தங்களுக்கு சொல்ல வில்லையாம். அப்படியானல் எனக்கு வரும் ஒரு சந்தேகம் ஒரு இணையத்தில் இது 3 நாட்களாக இருந்தது ஒரு மீடியா ஏன் அந்த தொலைபேசிக்கு தொடர்பகொண்டு கேக்க இல்லை. 250 மக்கள் தமது பிள்ழைகள் சகிதம் அந்த நிகழ்வில் வந்து பாரிய எதிர்பு நிகழ்வு நடாத்தியபோதும் ரி.ரி.என் பிரதம விருந்தினம் அனுமதி கேப்பது மாதாரி அல்லவா இருக்கிறது.

மொத்தத்தில் ஊடத்துறை என்பது எந்த வீதியில் அந்த ஊடகத்தின் பின்னனியுடன் தொடர்புடைய விடயமாக இருந்தால் செத்து கிடந்தாலும் அதை தேடி எடுத்து போட வெண்டம் அதுதான் ஊடகம்.

Link to comment
Share on other sites

தம்பி மோகன் எல்லாத்தை முன்கூட்டியே சொல்லி சரிவரவில்லை

அதனால்த்தான் இந்த களத்தில எழுதினார்கள் வேணும்

என்றால் ரி.ரி.ன் நிர்வாகத்துடன் தெடர்பு கொண்டு கேழும்

சும்மா ந{ர்ரே நினைத்து எழுதவேண்டாம் உம்மட கண்னை

ந{ர்ரே கூத்தவேண்டாம்

எழுதப்பட்டது: திங்கள் ஆனி 19, 2006 10:47 am Post subject:

--------------------------------------------------------------------------------

மேலுள்ள கருத்து தொடர்பாக "தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்" என்று ஒருவர் அனுப்பி வைத்த கருத்து

தமிழ்த்தேசியத்தினைத் தமது வயிற்றுப்பிழைப்புக்காகப் பலர் பாவிக்கத்தொடங்கியுள்ளனர். தாம்தான் தமிழ்த்தேசியத்தின் காவலர்கள் என்று மேடையேறித் தமிழர்களை நம்ப வைத்துக்கொண்டு திரைமறைவில் தமிழ்த்தேசியத்தின் கட்டமைப்புகளை புலம்பெயர் நாடுகளில் சிதைப்பதில் முனைப்புடன் செயற்படுகின்றனர். இவர்கள் பற்றி அனைவரும் விழிப்புடன் இருக்கவேண்டும்.

ரீரீஎன் இளையோருடைய ஆர்ப்பாட்ட நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்று "சுந்தரத்தாரின்" ஆதங்கங்களுக்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்துச் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்.

நீங்கள் தமிழ்த்தேசியத்தின்பால் அக்கறையுள்ளவராக இருந்திருந்தால்,

1. சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியப்படுத்தி அதற்குரிய பதிலைப் பெற்றிருக்கலாம்.

2. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ரீரீஎன் இற்கு உரிய நேரத்தில் தெரியப்படுத்தி, அந்நிகழ்வை ஒளிபரப்புச் செய்யும்படி கேட்டார்களா என அறிந்திருக்கலாம்.

3. சந்தர்ப்பத்திற்கேற்ப "தமிழீழ" ஆதரவு பேசும் பல ஊடகங்கள் இலண்டனில் இயங்கிவருகின்றனவே. உங்கள் ஆதங்கமும், கோபமும் ஏன் அவர்கள் பால் எழவில்லை?

அடுத்தமுறை, உங்கள் கண்ணையே நீங்கள் குத்தமுன் இருமுறை யோசித்துச் செய்வீர்கள் என நம்புகிறேன்.

நன்றி

தாயகக் கட்டமைப்புகளின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதற்கு பல காரணங்கள் இருக்கிறதுஇ எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாதுஇ தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான்இ சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான்இ தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம்.

_____________________________________________________________

-----------------------------------------------------

அன்பின் பிருந்தன் அவர்கட்கு....

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி என்று எடுத்துக்கொள்வோம்... ஆனால் எங்கள் தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முக்கியம் கொடுக்காமைக்கு சொல்லமுடியாத பல காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.... சரி ஏற்றுக் கொள்கிறோம். ஏன் சிங்களவரின் கூத்தை போட்டுக்காட்டுகின்றீர்கள்.... தமிழர்கள் இதைக் கேட்டார்களா? எதற்கு சிங்களவனின் உல்லாசப்பிரயாணக் களியாட்டத்தைக் காட்டினார்கள்.. அதை காட்டாமல் விட்டிருக்கலாம்தானே....

மேலும் ரி.ரி.என் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரத்துக் அருகே.. எமது தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை துணிச்சலுடன் ஒரு உலக அதிசயமும் உல்லாசப்பிரயாணிகள் பலரும் கூடுமிடத்தில் எமது தமிழ் மக்கள் துணிச்சலுடன் ஏற்றியிருக்கிறார்கள். சும்மா சொல்ல முடியாத காரணம் சொல்லக் கூடிய காரணம் என்று பம்மாத்து விடாதயுங்கோ.... பிழையை பிழையென்று ஏற்று திருந்தும் பக்குவம் வேண்டும்... அதை விட்டுட்டு விட்ட பிழைகளை மூடிமறைப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்காதையுங்கோ

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரி.ரி.ன் பிரித்தானிய பொறுப்பாளர் மேன்மை தாங்கிய கருணைலிங்கம் ரி.ரி.ன் ஓளிப்பதிவாளருடன் பிரசன்னமாகி சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஓளிப்பதிவு செய்தவரின் கண்களில் எம்மவரது நிகழ்ச்சி தென்படவில்லை.

Link to comment
Share on other sites

அதற்கு பல காரணங்கள் இருக்கிறதுஇ எல்லா காரணத்தையும் வெளிப்படையாக கூறமுடியாதுஇ தமிழ்தொலைக்காட்சி ஜரோப்பா தடைசெய்வதற்கு முன்னர் எப்படி செயல்பட்டது இப்போது எப்படி செயல்படுகிறது. தமிழர்களுக்கு என இருக்கும் தொலக்காட்சி இது ஒன்றுதான்இ சண்டை தொடங்கினால் அனைத்து ஊடகங்களும் பழையபடி கொழும்பில் இருந்தவாரே செய்திகளை கொடுத்துக்கொண்டிருக்கும். உண்மை வெளிவராது வரக்கூடிய ஒரு வழி எமது தொலைக்காட்சிதான்இ தற்போது அது முற்றிமுழுதாக புலிகளுக்கு ஆதரவான தொலைக்காட்சி என்ற முத்திரை குத்தி தடை செய்து செய்துவிடக்கூடது என்பதற்கா நடத்தப்படும் ஒரு விளையாட்டு. இது அரசியல் தளம். களம்.

_____________________________________________________________

-----------------------------------------------------

அன்பின் பிருந்தன் அவர்கட்கு....

நீங்கள் சொல்வது ஒரு வகையில் சரி என்று எடுத்துக்கொள்வோம்... ஆனால் எங்கள் தமிழ் இளைஞர்கள் நடத்திய போராட்டத்திற்கு முக்கியம் கொடுக்காமைக்கு சொல்லமுடியாத பல காரணங்கள் இருப்பதாகச் சொல்கிறீர்கள்.... சரி ஏற்றுக் கொள்கிறோம். ஏன் சிங்களவரின் கூத்தை போட்டுக்காட்டுகின்றீர்கள்.... தமிழர்கள் இதைக் கேட்டார்களா? எதற்கு சிங்களவனின் உல்லாசப்பிரயாணக் களியாட்டத்தைக் காட்டினார்கள்.. அதை காட்டாமல் விட்டிருக்கலாம்தானே....

மேலும் ரி.ரி.என் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரத்துக் அருகே.. எமது தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை துணிச்சலுடன் ஒரு உலக அதிசயமும் உல்லாசப்பிரயாணிகள் பலரும் கூடுமிடத்தில் எமது தமிழ் மக்கள் துணிச்சலுடன் ஏற்றியிருக்கிறார்கள். சும்மா சொல்ல முடியாத காரணம் சொல்லக் கூடிய காரணம் என்று பம்மாத்து விடாதயுங்கோ.... பிழையை பிழையென்று ஏற்று திருந்தும் பக்குவம் வேண்டும்... அதை விட்டுட்டு விட்ட பிழைகளை மூடிமறைப்பதற்கு காரணம் தேடிக்கொண்டிருக்காதையுங்கோ

நன்றி

தமிழ்சிறுவர் நடத்திய ஊர்வலத்தை ஒளிபரப்பாததற்காக நான் எழுதவில்லை, பொதுவாக எழுதினேன்.

உதாரணத்துக்கு இன்று அரசு சொல்கிறது விமானத்தாக்குதல் நடைபெறவில்லை என்று, ஆனால் விடுதலைப்புலிகள் சொல்கிறார்கள் நடை பெற்றது என்று, அதை ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வந்தது ரீரீஎன். ஒது ஒரு உதாரணம் மட்டுமே. சமாதன காலத்திலேயே இப்படி சொல்லும், அரசு கூறும் பொய்புரட்டுகளை வெளிக்கொண்டுவர இருக்கும் ஒரு தொலைக்காட்சி, எமது தொலைக்காட்சிதான். அதுபல்வேறுபட்ட நிகழ்வுகளையும் ஒலிபரப்பி ஒருசாதரன தொலைக்காட்சி என்ற மாயையை உருவாக்கி வைத்திருப்பது, நல்லதா? இல்லையா? :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன் அதற்காகத்தான் தமிழீழ தேசிய தொலைக்காட்சி இருக்கிறதே..?

Link to comment
Share on other sites

அது தன்னிச்சையாக உலம்முழுதும் ஒளிபரப்புவதற்குரிய பொருளாதார வசதிகளுடன் இருக்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரி;.ரி.ன் ற்குரிய பொருளாதார வசதி என்ன வானத்திலிருந்தா வந்தது?

எல்லாம் மக்களின் கைகளில் தான் தங்கியுள்ளது.

Link to comment
Share on other sites

அவ்வளவு விளம்பரங்களை தமிழீழதொலைக்காட்சிக்கு புலம்பெய்தமிழர் இந்தநிலையில் கொடுப்பீர்களா? அது அமைப்பு ரீதியாக இயங்குகிறது, இது தனியார் ரீதியாக இயங்குகிறது, சண்டை தொடங்கினால் புலம்பெயர்தேசத்தில் எது இயங்குவது இலகு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பிய காட்சிகளையே ரி.ரி.ன் ஒளிபரப்புகிறது.

சற்று சிந்தியுங்கள் ஒரு வேளை சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் இற்கு எப்படி அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்?

Link to comment
Share on other sites

பிருந்தன் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் ஓளிபரப்பிய காட்சிகளையே ரி.ரி.ன் ஒளிபரப்புகிறது.

சற்று சிந்தியுங்கள் ஒரு வேளை சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் இற்கு எப்படி அது தொடர்பான தகவல்கள் கிடைக்கும்

அப்ப இப்ப மட்டும் இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனதின்னர ஆதரவோடையே தேசிய தொலைக்காட்சி நிகள்ச்சிகளை ஒளிபரப்பீனம்...???

இல்லை அமெரிக்கா சற்றலைற் குடுத்து உதவுதோ...???

உமக்கு விளாப்பு கதையை விட்டால் ஒண்டுமே வராதே..???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தல கருத்தெழுத முன் நன்றாக வாசித்து விளங்கி எழுதவும்.

சண்டை தொடங்கினால் ரி.ரி.ன் நேரடியாக செய்திகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படும். இதனால் தமிழீழ தேசியதொலைக் காட்சியிள் ஒளிபரப்பிலேயே ரி.ரி.ன் இன் எதிர்காலம் தங்கியிருக்கிறது.

Link to comment
Share on other sites

என்றை, உன்றை என்ற சண்டை தயவு செய்து இங்கு வேண்டாம். தவறுகள் விடுவது மனித பண்பு! தேசியத்தையும் அவரடசார் போராட்டங்களையும் எள்ளி நகையாட போட்டி போட்டு நிற்கும் தளங்களுக்க நாமே அவலை கொடுப்பதா?

ரீரீஎன்னுடன் பிரச்சனையென்றால் ரீரீஎன் அலுவலகத்திற்கு போய் கதையுங்கள். உரியவர்கள் கேட்க ஆயுத்தமாக உள்ளனர். இன்றைய கால கட்டத்தில் தமிழர்கள் பலர் சுத்தசுவாதுpனமற்ற நிலையில் வானெலி மற்றும் இணையத் தளங்களில் புலம் பெயர் நாட்டில் உள்ள தேசியத்திற்கு ஆதரவானவர்கள் மீது முத்திரை குத்தி பரிகசித்து ஏளனம் செய்யும் கும்பல் நிச்சயம் இதையும் பாவிக்க போகிறது. தேசியத்தின் மீதான ஆதரவு உடைகிறிது என்ற கூச்சல் வெகு விரைவில் வரப்போகிறது. அதற்கான தார்மீக பொறுப்பை இந்த செய்தியை கொண்டவரே ஏற்க வேண்டும். ரீரீஎன்இல் குறைபாடு இருந்தால் அதை உரியமுறையில் சொல்லி நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுவும் சரி வராவிட்டால் சொல்ல வேண்டிய இடத்திற்கு சொல்லுவோம். அதை விடுத்து இங்கு வந்து எழுதுவது நம் கண்ணை நாமே குத்துவது போல் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இனி வருங்காலங்களில் இப்படி நடக்காது என்ற நம்பிக்கையுடன் இந்த விவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவோம்!

Link to comment
Share on other sites

மேலும் ரி.ரி.என் இருக்கும் பிரான்ஸ் நாட்டில் ஈபிள் கோபுரத்துக் அருகே.. எமது தேசியக் கொடியான புலிக்கொடி ஏற்றப்பட்டு உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒரு தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியை துணிச்சலுடன் ஒரு உலக அதிசயமும் உல்லாசப்பிரயாணிகள் பலரும் கூடுமிடத்தில் எமது தமிழ் மக்கள் துணிச்சலுடன் ஏற்றியிருக்கிறார்கள்.

விளங்காப்பயல் அடிக்கடி உங்களுக்கு விளக்கம் இல்லை எண்டதை நீங்களும் உறுதிப்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள். தடைசெய்யப்பட்டது தமிழீழ விடுதலைப்புலிகள். அதுவும் அர்களது நிதிச் செயற்பாடுகளில் முடக்கம் அடையவைக்கப்பட்டுள்ளது. மக்கள் ஏந்தியிருந்தது தமிழீழ தேசியக்கொடி இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.