Jump to content

கருவாட்டுக் குழம்பு சமைக்கும் முறை தேவை


Recommended Posts

கருவாட்டுக்குழம்பு எப்படிச் செய்வது? யாராவது சொல்வீர்களா?? மிக்க நன்றி :)

 

                                                கருவாட்டுக் குழம்பு

 

தேவையான பொருட்கள்:

 

    புளி- ஒரு சிறு ஆரஞ்சு அளவு

    சிறிய கருவாட்டுத்துண்டுகள்- ஒரு கப்

    மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

    சின்ன வெங்காயம்-ஒரு கைப்பிடி

    நல்லெண்ணெய்- கால் கப்

    சீரகம்- அரை ஸ்பூன்

    பெரிய வெங்காயம்-1

    சிறிய தக்காளி-3

    இஞ்சி- சிறு துண்டு

    சிறிய பூண்டிதழ்கள்- கால் கப்

    மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன்

    கொத்தமல்லித்தூள்- 2 ஸ்பூன்

    முருங்கைத்துண்டுகள்- 1 கப்

    தேங்காய்த்துருவல்- ஒரு கைப்பிடி

    தேவையான உப்பு

    கறிவேப்பிலை சிறிது

 

செய்முறை:

  

    புளியை போதுமான நீரில் ஊறவைத்து கரைத்துக் கொள்ளவும்.

    பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை தேங்காயுடன் அரைத்துச் 

    சேர்க்கவும். தூள்களை உப்புடன் சேர்த்து குழம்பை நன்கு கலந்து கொள்ளவும்.

    வாணலியை சூடு செய்து நல்லெண்ணையை ஊற்றவும்.

     சீரகம் தாளித்து சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

     கூட்டி வைத்த குழம்பு, முருங்கைக்காய்த்துண்டுகள், கருவாடு சேர்த்து நன்கு

     கொதிக்க விடவும்.

     கருவாட்டில் எப்போதும் சற்று உப்பு அதிகம் இருக்குமென்பதால்  

     அதைப்பார்த்துக்   கொண்டு குழம்பில் உப்பை திட்டமாகச் சேர்க்கவும்.

 

நன்றி: http://arusuvai.com/tamil/node/10146 :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாட்டு குழம்பு பிழைச்சா  வீட்டுக்கார அண்ணாட்ட நல்லா திட்டு வாங்கி கொள்ளுங்கோ அலை.... :lol:

 

Link to comment
Share on other sites

கத்தரிக்காய் குழம்பை செய்துவிட்டு அதற்குள் கருவாட்டை போட்டுவிடுங்கள் .

Link to comment
Share on other sites

நன்றி தமிழினி, யாயினி, அர்ஜுன் அண்ணா :)



http://www.yarl.com/forum3/index.php?showtopic=76294 இதிலையும் இருக்கு இப்ப தான் பார்த்தேன்

Link to comment
Share on other sites

கருவாடு  -         250 கிராம்

பழப்புளி    -         தேசிக்காய்  அளவு

அளவான கத்தரிக்காய்  - 1

மரவள்ளிக் கிழங்கு -     சில துண்டுகள்

பழத்தக்காளி -     2  (தக்காளிக் காய் இருந்தால் ஒன்று போடலாம்)

சின்ன வெங்காயம்    - 10

பச்சை மிளகாய் - தேவையான அளவு

உள்ளி -   1 (முழுப் பூடு)

தேங்காய்ப் பால்    - அரை கோப்பை

கறித் தூள்   - 3 பெரிய கரண்டி

சின்னச் சீரகம், பெரிய சீரகம் தேவையான அளவு

வெந்தயம்   - 1 தேக்கரண்டி

மஞ்சள்   -   அரை தேக்கரண்டி

 

கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.  புளியை அளவான கொதி  நீரில் ஊற வைத்து புளிகரைசலை தயார்படுத்தவும்.

 

கருவாடு, கறித் தூள், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றை சட்டியில் இட்டு,   சிறிது   தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கூட்டு கொதிக்கத் தொடங்கியதும் (சுமார் 5-10 நிமிடங்கள்) மரவள்ளிக் கிழங்கையும் கத்தரிக்காயையும் போடவும். அதன் பின்  புளிக் கரைசலை போடவும். மரவள்ளிக் கிழங்கு அரைவாசி அவிந்ததும் கருவாட்டுத் துண்டுகளைப் போடவும். பிறகு சின்னச் சீரகத்தையும் பெரிய சீரகத்தையும் சேர்க்கவும்.

கருவாடு அவிந்ததும் (10 நிமிடங்கள்) தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி  வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கறிவேப்பிலையை தூவவும்.

 

 

கருவாட்டில் உப்பு இருப்பதால், உப்பு தேவையில்லை. அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கருவாட்டில் உள்ள உப்பு குழம்பில் ஊறத் தொடங்கும்.  அப்பொழுது தேவையானால் உப்புப் போடலாம்.

கருவாட்டை சிலர் கொதி  நீரில் ஊற விடுவார்கள். கருவாட்டின் ருசியைக் குறைக்கும்.

 

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும் ".இது முக்கியம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கருவாடு  -         250 கிராம்

பழப்புளி    -         தேசிக்காய்  அளவு

அளவான கத்தரிக்காய்  - 1

மரவள்ளிக் கிழங்கு -     சில துண்டுகள்

பழத்தக்காளி -     2  (தக்காளிக் காய் இருந்தால் ஒன்று போடலாம்)

சின்ன வெங்காயம்    - 10

பச்சை மிளகாய் - தேவையான அளவு

உள்ளி -   1 (முழுப் பூடு)

தேங்காய்ப் பால்    - அரை கோப்பை

கறித் தூள்   - 3 பெரிய கரண்டி

சின்னச் சீரகம், பெரிய சீரகம் தேவையான அளவு

வெந்தயம்   - 1 தேக்கரண்டி

மஞ்சள்   -   அரை தேக்கரண்டி

 

கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.  புளியை அளவான கொதி  நீரில் ஊற வைத்து புளிகரைசலை தயார்படுத்தவும்.

 

கருவாடு, கறித் தூள், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றை சட்டியில் இட்டு,   சிறிது   தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கூட்டு கொதிக்கத் தொடங்கியதும் (சுமார் 5-10 நிமிடங்கள்) மரவள்ளிக் கிழங்கையும் கத்தரிக்காயையும் போடவும். அதன் பின்  புளிக் கரைசலை போடவும். மரவள்ளிக் கிழங்கு அரைவாசி அவிந்ததும் கருவாட்டுத் துண்டுகளைப் போடவும். பிறகு சின்னச் சீரகத்தையும் பெரிய சீரகத்தையும் சேர்க்கவும்.

கருவாடு அவிந்ததும் (10 நிமிடங்கள்) தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி  வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கறிவேப்பிலையை தூவவும்.

 

 

கருவாட்டில் உப்பு இருப்பதால், உப்பு தேவையில்லை. அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கருவாட்டில் உள்ள உப்பு குழம்பில் ஊறத் தொடங்கும்.  அப்பொழுது தேவையானால் உப்புப் போடலாம்.

கருவாட்டை சிலர் கொதி  நீரில் ஊற விடுவார்கள். கருவாட்டின் ருசியைக் குறைக்கும்.

 

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

 

கொடுத்து வைச்ச  பொண்ணு........... :wub:

Link to comment
Share on other sites

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

 

நாங்கள் கட்டாப் பாரைக் கருவாட்டில்தான் குழம்பு வைப்பது. எப்படி சமைப்பது என்று எனக்குத் தெரியாதுதானால் மனிசி வைச்சுத் தரும் போது எப்படி சாப்பிடுவது என்று தெரியும். அரிசிமாப் புட்டும் கருவாட்டுக் குழம்பும். பழஞ்சோறும் முதல் நாள் வைத்த கருவாட்டுக் குழம்பும் சுவையான கூட்டணிகள்.

Link to comment
Share on other sites

கொடுத்து வைச்ச  பொண்ணு........... :wub:

 

அப்படியெல்லாம் இல்ல. வார விடுமுறையில் மாத்திரம் சமைப்பேன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அப்படியெல்லாம் இல்ல. வார விடுமுறையில் மாத்திரம் சமைப்பேன். :D

 

எப்படி இருந்தாலும் இவ்வளவையும்  தெரிந்து வைத்துக்கொண்டு அதை  முழுமையாக செய்வதென்பது ஒரு கலை.   பெருமையாக இருக்கு அதை நினைக்க. அதைத்தான் குறிப்பிட்டேன். 

Link to comment
Share on other sites

நாங்கள் கட்டாப் பாரைக் கருவாட்டில்தான் குழம்பு வைப்பது. எப்படி சமைப்பது என்று எனக்குத் தெரியாதுதானால் மனிசி வைச்சுத் தரும் போது எப்படி சாப்பிடுவது என்று தெரியும். அரிசிமாப் புட்டும் கருவாட்டுக் குழம்பும். பழஞ்சோறும் முதல் நாள் வைத்த கருவாட்டுக் குழம்பும் சுவையான கூட்டணிகள்.

 

கருவாட்டுக் கறி அடுத்த நாள் சாப்பிட நன்றாக இருக்கும்.  ஊரில மாரி  காலத்தில மோசமான காலநிலை இருந்தா மீனவர்கள் கடலுக்குப் போக மாட்டார்கள். அப்ப  இறால் கருவாடு, பாரைக் கருவாடு, சுங்கான் கருவாடு,  பனையான்  கருவாடு, கட்டாப் பாரை கருவாடு..... தான் சமைப்பார்கள். ஒவ்வொன்றிற்கும் வேறு விதமான மரக்கறி சிறிய அளவில் சேர்ப்பார்கள். அது தனிச் சுவை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல கருவாட்டை தமிழ் கடையில போய் வாங்க வேணும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கீரி மீனும்,கீரி மீன் கருவாடும் மிகவும் பிடிக்கும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கீரி மீன் என்றால் என்ன? நிலத்தில் வாழ்வதா?  :unsure: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கீரி மீன் என்றால் என்ன? நிலத்தில் வாழ்வதா?  :unsure: 

 

கீரி மீன் என மட்டக்களப்பில் சொல்வார்கள்...யாழ்ப்பாணத்தில் இந்த மீனுக்கு என்ன பெயரோ தெரியாது :unsure: ...சூடை மினிலும் பெரிதாக இருக்கும்...சரியான கிரந்தி மீன்

 

தப்பிலி உடனே வரவும்

Link to comment
Share on other sites

கீரி மீன் என மட்டக்களப்பில் சொல்வார்கள்...யாழ்ப்பாணத்தில் இந்த மீனுக்கு என்ன பெயரோ தெரியாது :unsure: ...சூடை மினிலும் பெரிதாக இருக்கும்...சரியான கிரந்தி மீன்

 

தப்பிலி உடனே வரவும்

 

யாழ்ப்பாணத்திலும் எனக்குத் தெரிந்தவரை கீரி மீன் என்று தான் சொல்வார். சூடை மீனின் ஒன்று விட்ட அண்ணர் தான் கீரி மீன். முள்ளு பெரிதாக இருக்கும். குழம்பு வைப்பதை விட பொரிப்பதுதான் சுவை. இங்கு கனடாவில் தமிழ் கடைகளில் அடிக்கடி பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணத்திலும் எனக்குத் தெரிந்தவரை கீரி மீன் என்று தான் சொல்வார். சூடை மீனின் ஒன்று விட்ட அண்ணர் தான் கீரி மீன். முள்ளு பெரிதாக இருக்கும். குழம்பு வைப்பதை விட பொரிப்பதுதான் சுவை. இங்கு கனடாவில் தமிழ் கடைகளில் அடிக்கடி பார்க்கலாம்.

 

சாப்பாட்டு அயிற்றம் எண்டால் நிழலி அண்ணாவை அடிக்கேலா..மனிசன் அக்குவேறாய் ஆணிவேறாய் அறிஞ்சுவச்சிருக்கு...

Link to comment
Share on other sites

சாப்பாட்டு அயிற்றம் எண்டால் நிழலி அண்ணாவை அடிக்கேலா..மனிசன் அக்குவேறாய் ஆணிவேறாய் அறிஞ்சுவச்சிருக்கு...

 

சாப்பாட்டு அயிற்றத்தில் மட்டுமல்ல...எதெது சுவையானதோ அதில் எல்லாம் ஒரு கரை காண வேண்டும் என்று முடிவோடுதான் இருக்கின்றன். வாழும் நாள் கொஞ்சமப்பு...போனால் மீண்டும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கீரி மீன் இதுவா ரதி?

 

http://i00.i.aliimg.com/photo/v1/454612348/fish_whole_round_scad_.jpg

 

எனக்கு சரியாக தெரியவில்லை தமிழினி :unsure: ...ஆனால் இந்த மீன் இல்லை :D

Link to comment
Share on other sites

கீரி மீன் என மட்டக்களப்பில் சொல்வார்கள்...யாழ்ப்பாணத்தில் இந்த மீனுக்கு என்ன பெயரோ தெரியாது :unsure: ...சூடை மினிலும் பெரிதாக இருக்கும்...சரியான கிரந்தி மீன்

 

தப்பிலி உடனே வரவும்

 

'கீரி' மீன்,  சூடை மீனைச் சேர்ந்த சகல இனம். நன்றாகப் பெருத்து கொழுத்திருக்கும். அதிலும் 'மாப்பிள்ளைக் கீரி' பொரித்துக் குழம்பு வைக்க நன்றாக இருக்கும். எல்லாம் கிரந்தி மீன். தமிழினியின் இணைப்பில் உள்ளது சிறிய பாரை  மீன்.  

 

 

 

 

முதல்ல கருவாட்டை தமிழ் கடையில போய் வாங்க வேணும் :D

 

 

 

கதையோட கதையா அதுக்குள்ளே  'அட்வேர்ட்' :D

 

கருவாடு என்று கேட்காதீர்கள் சஜீவன் கடைக் கருவாடு என்று கேட்டு வாங்குங்கள்.         

 

சுவிசில் தரமான கடல் உணவுகளுக்கு 'சஜீவன் அங்காடீஈஈஈஈஈ..............   :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'கீரி' மீன்,  சூடை மீனைச் சேர்ந்த சகல இனம். நன்றாகப் பெருத்து கொழுத்திருக்கும். அதிலும் 'மாப்பிள்ளைக் கீரி' பொரித்துக் குழம்பு வைக்க நன்றாக இருக்கும். எல்லாம் கிரந்தி மீன். தமிழினியின் இணைப்பில் உள்ளது சிறிய பாரை  மீன்.  

 

மீனிலும் மப்பிள்ளையாப்போன மீனுக்கு நின்மதி இல்லைப்போல.. :( 

கதையோட கதையா அதுக்குள்ளே  'அட்வேர்ட்' :D

 

கருவாடு என்று கேட்காதீர்கள் சஜீவன் கடைக் கருவாடு என்று கேட்டு வாங்குங்கள்.         

 

சுவிசில் தரமான கடல் உணவுகளுக்கு 'சஜீவன் அங்காடீஈஈஈஈஈ..............   :lol:

 

இது ஒரு கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்..அதனால் வாங்கிய மீன்கள் நாறிப்போயிருந்தால் அதற்கு யாழ்களம் பொறுப்பேற்காது.. :D 

Link to comment
Share on other sites

'கீரி' மீன்,  சூடை மீனைச் சேர்ந்த சகல இனம். நன்றாகப் பெருத்து கொழுத்திருக்கும். அதிலும் 'மாப்பிள்ளைக் கீரி' பொரித்துக் குழம்பு வைக்க நன்றாக இருக்கும். எல்லாம் கிரந்தி மீன். தமிழினியின் இணைப்பில் உள்ளது சிறிய பாரை  மீன்.  

 

 

 

 

 

 

 

கதையோட கதையா அதுக்குள்ளே  'அட்வேர்ட்' :D

 

கருவாடு என்று கேட்காதீர்கள் சஜீவன் கடைக் கருவாடு என்று கேட்டு வாங்குங்கள்.         

 

சுவிசில் தரமான கடல் உணவுகளுக்கு 'சஜீவன் அங்காடீஈஈஈஈஈ..............   :lol:

 

  :lol: நானும் சுஜீவனின் கடையில்தான் ஆடர் பண்ணியுள்ளேன், வந்தவுடன் தப்பிலியின் முறையில் செய்து பார்க்கனும். கீரி மீன் நல்ல சுவையானது, முள்ளு பெரிதாக இல்லை, சொதி வைத்தால் அந்த மாதிரி சுவை. தலையை கையில் பிடித்துக்கொண்டு சூப்பி சூப்பி ..எடுத்தால்... ஆகா என்ன சுவை என்ன சுவை..

 

நிழலி நீங்கள் சொல்வது நுணலை  / கொய் மீன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.