Jump to content

கருவாட்டுக் குழம்பு சமைக்கும் முறை தேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
   தலையை கையில் பிடித்துக்கொண்டு சூப்பி சூப்பி ..எடுத்தால்... ஆகா என்ன சுவை என்ன சுவை..

 

ஒவாக்..சத்திவருது.. :( 

Link to comment
Share on other sites

மீனிலும் மப்பிள்ளையாப்போன மீனுக்கு நின்மதி இல்லைப்போல.. :( 

 

 

மாப்பிள்ளைமார் சட்டிக்க போட்ட கருவாடு. :D

Link to comment
Share on other sites

நிழலி நீங்கள் சொல்வது நுணலை  / கொய் மீன்

 

கொய் வேறு கீரி வேறு வந்தி. கீரி மீன் தான் போன கிழமை பொரிச்சு சாப்பிட்டதும். சிங்களத்தில் 'ஹுறுலோ' என்றும் தமிழில் கீரி என்றும் அழைப்பர். சிங்கள ஊர்களில் வாழ்ந்தவர்களுக்கு கீரி மீனின் சுவை இன்னும் அதிகமாக தெரிந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  :lol: நானும் சுஜீவனின் கடையில்தான் ஆடர் பண்ணியுள்ளேன்,

 

இனித்தான் சஜீவன் நல்ல மாப்பிள்ளையாய்ப்  பார்த்து ஓடர் பண்ணுவார். :lol:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருவாடு  -         250 கிராம்

பழப்புளி    -         தேசிக்காய்  அளவு

அளவான கத்தரிக்காய்  - 1

மரவள்ளிக் கிழங்கு -     சில துண்டுகள்

பழத்தக்காளி -     2  (தக்காளிக் காய் இருந்தால் ஒன்று போடலாம்)

சின்ன வெங்காயம்    - 10

பச்சை மிளகாய் - தேவையான அளவு

உள்ளி -   1 (முழுப் பூடு)

தேங்காய்ப் பால்    - அரை கோப்பை

கறித் தூள்   - 3 பெரிய கரண்டி

சின்னச் சீரகம், பெரிய சீரகம் தேவையான அளவு

வெந்தயம்   - 1 தேக்கரண்டி

மஞ்சள்   -   அரை தேக்கரண்டி

 

கருவாட்டை ஒரு மணித்தியாலம் குளிர் நீரில் ஊறப்  போட்டு அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும்.  புளியை அளவான கொதி  நீரில் ஊற வைத்து புளிகரைசலை தயார்படுத்தவும்.

 

கருவாடு, கறித் தூள், தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றை சட்டியில் இட்டு,   சிறிது   தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும். கூட்டு கொதிக்கத் தொடங்கியதும் (சுமார் 5-10 நிமிடங்கள்) மரவள்ளிக் கிழங்கையும் கத்தரிக்காயையும் போடவும். அதன் பின்  புளிக் கரைசலை போடவும். மரவள்ளிக் கிழங்கு அரைவாசி அவிந்ததும் கருவாட்டுத் துண்டுகளைப் போடவும். பிறகு சின்னச் சீரகத்தையும் பெரிய சீரகத்தையும் சேர்க்கவும்.

கருவாடு அவிந்ததும் (10 நிமிடங்கள்) தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி  வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது கறிவேப்பிலையை தூவவும்.

 

 

கருவாட்டில் உப்பு இருப்பதால், உப்பு தேவையில்லை. அடுப்பில் இருந்து இறக்கியவுடன் கருவாட்டில் உள்ள உப்பு குழம்பில் ஊறத் தொடங்கும்.  அப்பொழுது தேவையானால் உப்புப் போடலாம்.

கருவாட்டை சிலர் கொதி  நீரில் ஊற விடுவார்கள். கருவாட்டின் ருசியைக் குறைக்கும்.

 

நான் Cod மீன் கருவாட்டில்தான் குழம்பு வைப்பேன்.  அதனை ஒரு இரவு குளிர் நீரில் ஊறவைக்க வேண்டும். அடிக்கடி தண்ணீரை மாற்ற வேண்டும். நல்ல சுவையாக இருக்கும்.

தப்பிலியின்... சமையல் முறையைப் பார்க்க.... இப்பவே கருவாட்டுக் குழம்பு வைச்சு சாப்பிட வேணும் போலை இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இனித்தான் சஜீவன் நல்ல மாப்பிள்ளையாய்ப்  பார்த்து ஓடர் பண்ணுவார். :lol:  

 

இரன்டு வேலை செய்பவர் கானுமோ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுசருக்குப், பிரயோசனப் பட்ட தலைப்பை ஆரம்பித்த்த அலை அக்கா.....
நன்றிகள் பல......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
கருவாட்டுக்குழம்பு எப்படிச் செய்வது? யாராவது சொல்வீர்களா?? மிக்க நன்றி :)

 

கருவாட்டு  குழம்புக்கு கனக்க மினைக்கடத்தேவையில்லை.......என்ன கறியெண்டாலும் அதுக்கை அஞ்சாறு கருவாட்டை போட்டு கிளறிவிட்டியளெண்டால் அதுவே காணும்....அங்காலை  கருவாடு தன்ரை பவரை காட்டும்.....

Link to comment
Share on other sites

தப்பிலி அண்ணாவுக்கு நல்லா சமைக்க தெரிகிறது. :) உங்களுக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை அடிக்கடி இணைக்கலாமே... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வேற யோசனை வருது  :D

கெதியெண்டு வேலை ஒண்டு எடுங்கோ..இல்லாட்டி இப்பிடித்தான் ஏடாகூடமாய் யோசினையல் வரும்... :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.