Jump to content

மாமியார் வீடு...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதி-1

 

558228_408641492543473_143724017_n.jpg

வணக்கம் உறவுகளே.. :)

நீண்டநாட்களின் பின்னர் ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில், அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன். பத்து நாள் போட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறான் என்று பகிடி விடக்கூடாது, :rolleyes:

ஏழுமலை,ஏழுகடல் தாண்டி .. என்ற புராணக்கதைகள் போல கடல் கடந்து காதலி.......சே.../மனைவியுடன் ஒரு சந்திப்பு <_<  என்ற வகைக்குள் அடக்குகிறேன்.

 

ஒரு சில சம்பவங்கள் யாரையும் காயப்படுத்தும், அவமதிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை அப்படி ஏதும் யாரையும் புண்படுத்தி இருக்குமாயின் முன்கூட்டியே அதற்காய் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

*********************************************************************************************************************************

 

வாருங்கள் கதைக்கு போவோம்..

 

 

புதுவருசம் 2013உம் பிறந்திட்டுது விசாவுக்கு விண்ணப்பித்து ஆறுமாதங்கள் ஆகுது இன்னும் விசா வரவில்லை என்ற கவலை ஒருபக்கம், இதை எதிர்பார்த்தே தலை தீபாவளிக்கு போகமுடியவில்லையே என்ற வருத்தம் மறுபக்கம், இப்படியிருக்க அவளுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும், காலை முதல் நள்ளிரவு வரை தினம் வேலை செய்யும் எனக்கும் ஒரு மாற்றம் வேண்டி இருந்தது அதனால் சென்னை போவது என்று திடீர்முடிவெடுத்தேன். ஆனால் எப்படி வீட்டில் சொல்ல பத்து நாள் கடை பூட்டினால் கணக்கு பார்ப்பார்களே, வரவு செலவு பார்த்து என்னை கடுப்பேத்தி விடுவார்கள் என்று தெரியும் அதனால் எல்லா அலுவலும் முடிச்சு சொல்வதாக உத்தேசம் ஆனால் அதுக்கு முதலே சொல்ல வேண்டி வந்திட்டுது அது வேறை கதை பிறகு பார்ப்பம்.

 

தொடரும்..

 

 

Link to comment
Share on other sites

  • Replies 276
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள்... ஜீவா, வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பி  என்று ஓடிவந்தேன்

மாமியார் வீடு என்று வேறு இருக்கு

ஏமாற்றிப்போடாதீர்கள் ஜீவா :D

Link to comment
Share on other sites

ஜீவாவின் புதினம் அறிய ஆசை..  :lol:  தொடருங்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜீவாவுக்கு மச்சினிச்சிமார் அதிகமோ...உங்கள் அனுபவம் சுப்பராய் தான்  இருக்கும் :lol: ...எழுதுங்கோ
Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லாயில்லை ஜீவா ஒழுங்கா ஒருபக்கம் ஆவது எழுத வேணும். :D

Link to comment
Share on other sites

மாமியார் வீட்டில் மவராசனாய் இருந்தவரே :icon_mrgreen: !! வாழியவாழியவே  :D  !!!  இண்டைக்கெண்டு பாத்து கவிதையும் உங்களுக்கு ஏத்த மாதிரி ஆடல் கவிதை போட்டிருக்கிறார்   :lol:  :lol:  . பூந்து விளையாடுங்கோ கதையிலை  :D  :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதிய உறவுகள் அனைவருக்கும் நன்றி.. :)

நாளை தொடர்கிறேன்.



ஜீவாவுக்கு மச்சினிச்சிமார் அதிகமோ...உங்கள் அனுபவம் சுப்பராய் தான்  இருக்கும் :lol: ...எழுதுங்கோ

 


மச்சினிச்சி ஒருத்தி தான் அவளையும் ஏதோ முறை சொல்லி தங்கச்சியாக்கி போட்டாங்கப்பா.. :(

 

நிறைய எதிர்பார்க்கிறிங்கள் போல அந்தளவுக்கு இருக்குமோ தெரியலை பார்ப்பம்.. முடிஞ்சளவு முயற்சி செய்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கன், ஜீவா! காத்திருக்கிறோம்! 

 

கடவுள் கழுத்தில் தங்கிய நஞ்சில்  கொஞ்சத்தை, மாமியைப் படைக்கும் போது கலந்திருக்க வேணும்! :wub:

Link to comment
Share on other sites

தொடருங்கன், ஜீவா! காத்திருக்கிறோம்!

கடவுள் கழுத்தில் தங்கிய நஞ்சில் கொஞ்சத்தை, மாமியைப் படைக்கும் போது கலந்திருக்க வேணும்! :wub:

சந்திரனின் கதை ஞாபகத்துக்கு வருதே... ஏன்?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு ...(தொடர்ச்சி..) பகுதி - 2

 

தைப்பொங்கலுக்கு முதல் போவது அல்லது போவதில் பிரயோசனம் இல்லை என்பதால் இயன்றளவு விரைவாக வெளிக்கிடுவதாக உத்தேசம். பொங்கலுக்கு கிட்ட தட்ட பத்து நாட்கள் தான் இருந்திருக்கும் ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு விண்ணப்பப்படிவம்,கட்டணத்தை எல்லாம் அருகில் இருந்த கொலோனில்(köln)  உள்ள இந்தியன் விசா சென்டருக்கு அனுப்பி இருந்தேன். கேரளாவைச்சேர்ந்தவர்களால் தான் நடத்தப்படுகிறது. கடைக்கு வந்த ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் எப்போதும் அங்கு தான் குடுப்பதுண்டு அதனால் இந்த முறையும் அங்கு குடுத்தேன் ஆனால் இந்த முறை வில்லங்கம் ஒண்டு விலை குடுத்த மாதிரி வந்திச்சுது, இரண்டு நாள் கழித்து இந்தியன் எம்பசியில் இருந்து போன் வந்திருந்தது. நேரில் வரச்சொல்லி என்ன கொடுமை டா என்று எனக்குள் நினைச்சவாறே,

"நான் வேலையில் இருக்கிறேன் லீவு எடுக்க முடியாது போனில் கேட்க முடியாதா என்று கேட்டேன்."

இல்லை நீங்கள் நேரில் வாருங்கள் என்றது எதிரில் அழைத்த பெண்குரல்.

 

ஏற்கனவே பத்து நாள் லீவு கடை பூட்டவேணும் இதிலை இது வேறையா வெளிக்கிடுறதா இருந்தால் இன்னும் நாலு நாள் தான் இருக்கு சாத்தியமாகுமா என்று நினைத்த நான்,

 

"இல்லை இன்று நாளைக்கு வரமுடியாது நீங்கள் எனது பாஸ்போட்டை திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொன்னேன்."

 

எதிர்முனையில் விசா வேண்டும் என்றால் நேரில் வந்து தான் ஆகவேணும் என்று தனது பெயரைக்கூறி, தொலைபேசி எண்ணைத்தந்து தேதி குறித்து விட்டு வந்து நேரில் சந்திக்கவும் என்று துண்டித்து விட்டது.

 

இப்ப என்ன செய்ய, எதுக்கும் பிரியாவிடம் சொல்லுவம் என்று சொல்ல,

அம்மா எல்லாருக்கும் நீங்கள் வாறது என்று  சொல்லிப்போட்டா, இப்ப வரமுடியாது என்று கவலைப்படுவா .. முடிஞ்சால் நாளைக்கு போட்டுவாங்கோவன்" என்றாள் என் நிலையறிந்தும்.

 

சிம்பிளா சொல்லிட்டாள் நமக்கெல்லோ தெரியும் நாம்படுறபாடு என்று மனசுக்குள் புறுபுறுத்தபடியே,

"சரி ட்ரை பண்ணுறேன்."

 

என் கறுத்த முகம் கூட அப்பப்போ சிவப்பதுண்டு , அந்த நிலை தான் இப்ப, எப்படி அண்ணா,அண்ணிட்ட சொல்ல?

அண்ணாட்டை சொன்னா ஆயிரம் கதை கதைப்பான் எதுக்கும் அண்ணியிடம் சொல்லுவம் என்று..

 

"அண்ணி நான் ஒரு கிழமைக்கு இந்தியா போட்டு வரப்போறேன்,அண்ணாட்டையும் சொல்லுங்கோ"

 

இப்ப எதுக்கடா? விசா வந்திடும் தானே ஒரேசாவா போய் கூட்டிக்கொண்டு வாவன் எதுக்கு ரெண்டு செலவு?

 

"இல்லை அண்ணி, தீபாவளிக்கும் போகமுடியலை பொங்கலுக்கு ஆவது போட்டு வருவம் என்று தான், அவர்களும் கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்"

 

ம்ம்ம்ம்.. இப்ப நல்ல குளிர் தான், வேலையும் குறைவாத்தான் இருக்கும்,ஆனால் அண்ணனட்டை எப்படிச்சொல்ல?

 

"எப்படியோ நீங்கள் தான் அண்ணி சொல்லவேணும், நான் நாளைக்கு ரேமின் (நியமனம்) வச்சிட்டு புதன்கிழமை ஃப்ராங்பேட்டுக்கு போட்டு வாறேன் அண்ணி"

 

இதுக்கு மேல் அண்ணி எதுவும் பேசவில்லை. புதன் கிழமை 11மணிக்கு வரச்சொன்னார்கள்.

சாதாரண ரெயினில் போக ஒருநாளாகும் பேசாமல் ICE இல் போவம் என்று ரிக்கற் புக்பண்ணிப்போட்டு

552992_408642199210069_1806183090_n.jpg

 

அங்கை போனால், இருக்கையில் அமரச்சொன்னார்கள். சில மணிநேர காத்திருப்பின் ஒருவர் வந்து குறித்த அறைக்கு வரச்சொன்னவர் முதல் கேள்வியே

"நீங்கள் எதுக்கு இந்தியப்பெண்ணை திருமணம் செய்தீர்கள்?"

சுத்தம்.. பொழுதுபோக்குக்கு தான்.. அப்படிச்சொல்லத்தான் ஆசை இருந்தாலும் அப்படிச்சொல்லேல்லை.

பிடித்திருந்தது அதுதான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

 

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்?

கேட்குறான் பாரு கேள்வி .. என்று நினைத்தவாறே யாழ் இணையத்தின் அருமை,பெருமைகளை அள்ளிவிட்டேன்.

 

"மேலை கீழை வடிவாப் பார்த்தான், பார்த்திட்டு பிசினஸ் என்று போட்டிருக்கு இந்தியாவில் இருந்து சாமான் கொண்டுவரவா போறாய் என்றான்?"

குறுக்காலை போனவன் என் அவசரம் புரியாமல் படுத்துறானெ என்று மனம் வெம்மிக்கொண்டது, என்ன செய்ய அலுவல் முடியணுமே , "இல்லை 14ம் திகதி தமிழர்திருநாள் பொங்கல் அது தான் என் மனைவியுடன் கொண்டாடவேண்டும் என்று சொன்னேன்."

 

ஏதோ திருப்தி கொண்டானோ என்னவோ தெரியாது வெயிட்டிங் ரூமில் காத்திருக்க சொல்லி விட்டு சிறிது நேரத்தின் பின் விசா குடுத்தான்.

 

முதல் வேலையா பிரியாவிடம் சொல்லிவிட்டு ரெயில் நிலையம் நோக்கி நடையைக்கட்டினேன்...

 

தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாமியார் வீடு" தலைப்பைப் பார்த்தால் ஏதோ நாடக பாணி தெரியுது...என்டாலும் கதையை நல்ல விறுவிறுப்பாய் கொண்டு போறீங்கள்...தொடருங்கோ

Link to comment
Share on other sites

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்? :o :o

 

நியாயமான கேள்வி ........... :icon_mrgreen: . ஏன்ராசா முதல் அடியே செப்பல் அடி போலை கிடக்கு :lol: :lol: . தொடருங்கோ....... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

சரியான பாதையில் தான் கதை பயணிக்கிறது.

நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது

ஏன் ஒழித்து வைப்பான்?

தொடருங்கள்

Link to comment
Share on other sites

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ. :)

 

என் கறுத்த முகம் கூட அப்பப்போ சிவப்பதுண்டு , அந்த நிலை தான் இப்ப, எப்படி அண்ணா,அண்ணிட்ட சொல்ல?

அண்ணாட்டை சொன்னா ஆயிரம் கதை கதைப்பான் எதுக்கும் அண்ணியிடம் சொல்லுவம் என்று..

 

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறியும் ஆவலில் மனசு......... இன்னும் வேகமாய் எழுதுங்கோ

Link to comment
Share on other sites

யாழ் இணையத்திலை காதலான  பல சோடியள் பிரிஞ்சிருக்கு. ஆனால் சேர்ந்த  ஒரு சிலதிலை நீங்களும். அடக்கம் என்னும் போது மகிழ்ச்சி.  தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கோ.. தொடருங்கோ... நானும் படிக்கிறேன்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ.. தொடருங்கோ... நானும் படிக்கிறேன்... :rolleyes:

நானும் தான்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு அறிய ஆவலாய் உள்ளேன்....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுப்பு அறிய ஆவலாய் உள்ளேன்.... :D

 

உங்கள் ஆவல் வீண்போகாது அண்ணா,மிகுதி விரைவில்... :)

"மாமியார் வீடு" தலைப்பைப் பார்த்தால் ஏதோ நாடக பாணி தெரியுது...என்டாலும் கதையை நல்ல விறுவிறுப்பாய் கொண்டு போறீங்கள்...தொடருங்கோ

 

கத்து குட்டி தானே, சரியாகத்தெரியவில்லை முழுவதும் படித்து சொல்லுங்கள் அக்கா.. :)

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்? :o :o

 

நியாயமான கேள்வி ........... :icon_mrgreen: . ஏன்ராசா முதல் அடியே செப்பல் அடி போலை கிடக்கு :lol: :lol: . தொடருங்கோ....... :)

 

அதை ஏன் கேட்குறியள், சிலது சென்சார் பண்ணித்தான் போட வேண்டியுள்ளது. :lol::D

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஜீவா!! ஜீவாவின் மனைவி இந்தியத் தமிழா?? ( கேக்காட்டியும் குறை நினைப்பியள் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்

சரியான பாதையில் தான் கதை பயணிக்கிறது.

நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது

ஏன் ஒழித்து வைப்பான்?

தொடருங்கள்

 

நன்றி அண்ணா, உங்கள் போன்றோரின் ஊக்கமும்,ஆதரவும் தான் தவழும் எம்மை கை பிடித்து கூட்டிச்செல்வது போல் உள்ளது.

நன்றி அண்ணா தொடர்ந்து படியுங்கள்..... :)

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ. :)

 

 

:lol: :lol:

 

நன்றி துளசி சிஸ்டர்.. :rolleyes:

அறியும் ஆவலில் மனசு......... இன்னும் வேகமாய் எழுதுங்கோ

 

நன்றி அக்கா.. ஒரே நாளில் முடித்தால் திரில் இருக்காது.. :rolleyes::lol:

யாழ் இணையத்திலை காதலான  பல சோடியள் பிரிஞ்சிருக்கு. ஆனால் சேர்ந்த  ஒரு சிலதிலை நீங்களும். அடக்கம் என்னும் போது மகிழ்ச்சி.  தொடருங்கள். :)

 

நன்றி சாத்திரி அண்ணா வரவுக்கும், தகவல் பகிர்வுக்கும்.. :)

நானும் தான்! :D

 

காவடி எடுத்தாச்சு ஆடி முடிக்கத்தானே வேணும்.. :lol:

Link to comment
Share on other sites

ஆரம்பம் நல்லா இருக்கு...ஆத்துக்காரி வேற வாசிக்கின்றார் என்பதால் கவனமப்பு..!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
    • இவ‌ர் சொல்வ‌தை கேலுங்கோ.......................... உத்திர‌பிர‌தேஸ்சில் 24  கோடி ம‌க்க‌ளுக்கு மேல் வ‌சிக்கின‌ம் அவ‌ர்க‌ளின் ஓட்டு ச‌த‌வீத‌ம் / புரிய‌ல‌.....................
    • வாக்களிக்க செல்லும் போது இவ்வளவு பணத்தை யாரும் எடுத்து செல்வார்களா? 😂
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         JJ Bumra 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Pathiran 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         csk 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Virat Kholi 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.