Jump to content

மாமியார் வீடு...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகுதி-1

 

558228_408641492543473_143724017_n.jpg

வணக்கம் உறவுகளே.. :)

நீண்டநாட்களின் பின்னர் ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில், அண்மையில் மேற்கொண்ட பயணம் குறித்த சில சுவாரசியமான சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதை எழுதுகிறேன். பத்து நாள் போட்டு வந்து பயணக்கட்டுரை எழுதுறான் என்று பகிடி விடக்கூடாது, :rolleyes:

ஏழுமலை,ஏழுகடல் தாண்டி .. என்ற புராணக்கதைகள் போல கடல் கடந்து காதலி.......சே.../மனைவியுடன் ஒரு சந்திப்பு <_<  என்ற வகைக்குள் அடக்குகிறேன்.

 

ஒரு சில சம்பவங்கள் யாரையும் காயப்படுத்தும், அவமதிக்கும் நோக்கில் எழுதப்படவில்லை அப்படி ஏதும் யாரையும் புண்படுத்தி இருக்குமாயின் முன்கூட்டியே அதற்காய் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.

*********************************************************************************************************************************

 

வாருங்கள் கதைக்கு போவோம்..

 

 

புதுவருசம் 2013உம் பிறந்திட்டுது விசாவுக்கு விண்ணப்பித்து ஆறுமாதங்கள் ஆகுது இன்னும் விசா வரவில்லை என்ற கவலை ஒருபக்கம், இதை எதிர்பார்த்தே தலை தீபாவளிக்கு போகமுடியவில்லையே என்ற வருத்தம் மறுபக்கம், இப்படியிருக்க அவளுக்கும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க வேண்டும், காலை முதல் நள்ளிரவு வரை தினம் வேலை செய்யும் எனக்கும் ஒரு மாற்றம் வேண்டி இருந்தது அதனால் சென்னை போவது என்று திடீர்முடிவெடுத்தேன். ஆனால் எப்படி வீட்டில் சொல்ல பத்து நாள் கடை பூட்டினால் கணக்கு பார்ப்பார்களே, வரவு செலவு பார்த்து என்னை கடுப்பேத்தி விடுவார்கள் என்று தெரியும் அதனால் எல்லா அலுவலும் முடிச்சு சொல்வதாக உத்தேசம் ஆனால் அதுக்கு முதலே சொல்ல வேண்டி வந்திட்டுது அது வேறை கதை பிறகு பார்ப்பம்.

 

தொடரும்..

 

 

Link to comment
Share on other sites

  • Replies 276
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பியுங்கள்... ஜீவா, வாசிக்க ஆவலாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பி  என்று ஓடிவந்தேன்

மாமியார் வீடு என்று வேறு இருக்கு

ஏமாற்றிப்போடாதீர்கள் ஜீவா :D

Link to comment
Share on other sites

ஜீவாவின் புதினம் அறிய ஆசை..  :lol:  தொடருங்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஜீவாவுக்கு மச்சினிச்சிமார் அதிகமோ...உங்கள் அனுபவம் சுப்பராய் தான்  இருக்கும் :lol: ...எழுதுங்கோ
Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கள் ஜீவா அண்ணா. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்லாயில்லை ஜீவா ஒழுங்கா ஒருபக்கம் ஆவது எழுத வேணும். :D

Link to comment
Share on other sites

மாமியார் வீட்டில் மவராசனாய் இருந்தவரே :icon_mrgreen: !! வாழியவாழியவே  :D  !!!  இண்டைக்கெண்டு பாத்து கவிதையும் உங்களுக்கு ஏத்த மாதிரி ஆடல் கவிதை போட்டிருக்கிறார்   :lol:  :lol:  . பூந்து விளையாடுங்கோ கதையிலை  :D  :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதிய உறவுகள் அனைவருக்கும் நன்றி.. :)

நாளை தொடர்கிறேன்.



ஜீவாவுக்கு மச்சினிச்சிமார் அதிகமோ...உங்கள் அனுபவம் சுப்பராய் தான்  இருக்கும் :lol: ...எழுதுங்கோ

 


மச்சினிச்சி ஒருத்தி தான் அவளையும் ஏதோ முறை சொல்லி தங்கச்சியாக்கி போட்டாங்கப்பா.. :(

 

நிறைய எதிர்பார்க்கிறிங்கள் போல அந்தளவுக்கு இருக்குமோ தெரியலை பார்ப்பம்.. முடிஞ்சளவு முயற்சி செய்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கன், ஜீவா! காத்திருக்கிறோம்! 

 

கடவுள் கழுத்தில் தங்கிய நஞ்சில்  கொஞ்சத்தை, மாமியைப் படைக்கும் போது கலந்திருக்க வேணும்! :wub:

Link to comment
Share on other sites

தொடருங்கன், ஜீவா! காத்திருக்கிறோம்!

கடவுள் கழுத்தில் தங்கிய நஞ்சில் கொஞ்சத்தை, மாமியைப் படைக்கும் போது கலந்திருக்க வேணும்! :wub:

சந்திரனின் கதை ஞாபகத்துக்கு வருதே... ஏன்?? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு ...(தொடர்ச்சி..) பகுதி - 2

 

தைப்பொங்கலுக்கு முதல் போவது அல்லது போவதில் பிரயோசனம் இல்லை என்பதால் இயன்றளவு விரைவாக வெளிக்கிடுவதாக உத்தேசம். பொங்கலுக்கு கிட்ட தட்ட பத்து நாட்கள் தான் இருந்திருக்கும் ஒன்லைனில் விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு விண்ணப்பப்படிவம்,கட்டணத்தை எல்லாம் அருகில் இருந்த கொலோனில்(köln)  உள்ள இந்தியன் விசா சென்டருக்கு அனுப்பி இருந்தேன். கேரளாவைச்சேர்ந்தவர்களால் தான் நடத்தப்படுகிறது. கடைக்கு வந்த ஒருவரால் அறிமுகப்படுத்தப்பட்டதால் எப்போதும் அங்கு தான் குடுப்பதுண்டு அதனால் இந்த முறையும் அங்கு குடுத்தேன் ஆனால் இந்த முறை வில்லங்கம் ஒண்டு விலை குடுத்த மாதிரி வந்திச்சுது, இரண்டு நாள் கழித்து இந்தியன் எம்பசியில் இருந்து போன் வந்திருந்தது. நேரில் வரச்சொல்லி என்ன கொடுமை டா என்று எனக்குள் நினைச்சவாறே,

"நான் வேலையில் இருக்கிறேன் லீவு எடுக்க முடியாது போனில் கேட்க முடியாதா என்று கேட்டேன்."

இல்லை நீங்கள் நேரில் வாருங்கள் என்றது எதிரில் அழைத்த பெண்குரல்.

 

ஏற்கனவே பத்து நாள் லீவு கடை பூட்டவேணும் இதிலை இது வேறையா வெளிக்கிடுறதா இருந்தால் இன்னும் நாலு நாள் தான் இருக்கு சாத்தியமாகுமா என்று நினைத்த நான்,

 

"இல்லை இன்று நாளைக்கு வரமுடியாது நீங்கள் எனது பாஸ்போட்டை திருப்பி அனுப்பிவிடுங்கள் என்று சொன்னேன்."

 

எதிர்முனையில் விசா வேண்டும் என்றால் நேரில் வந்து தான் ஆகவேணும் என்று தனது பெயரைக்கூறி, தொலைபேசி எண்ணைத்தந்து தேதி குறித்து விட்டு வந்து நேரில் சந்திக்கவும் என்று துண்டித்து விட்டது.

 

இப்ப என்ன செய்ய, எதுக்கும் பிரியாவிடம் சொல்லுவம் என்று சொல்ல,

அம்மா எல்லாருக்கும் நீங்கள் வாறது என்று  சொல்லிப்போட்டா, இப்ப வரமுடியாது என்று கவலைப்படுவா .. முடிஞ்சால் நாளைக்கு போட்டுவாங்கோவன்" என்றாள் என் நிலையறிந்தும்.

 

சிம்பிளா சொல்லிட்டாள் நமக்கெல்லோ தெரியும் நாம்படுறபாடு என்று மனசுக்குள் புறுபுறுத்தபடியே,

"சரி ட்ரை பண்ணுறேன்."

 

என் கறுத்த முகம் கூட அப்பப்போ சிவப்பதுண்டு , அந்த நிலை தான் இப்ப, எப்படி அண்ணா,அண்ணிட்ட சொல்ல?

அண்ணாட்டை சொன்னா ஆயிரம் கதை கதைப்பான் எதுக்கும் அண்ணியிடம் சொல்லுவம் என்று..

 

"அண்ணி நான் ஒரு கிழமைக்கு இந்தியா போட்டு வரப்போறேன்,அண்ணாட்டையும் சொல்லுங்கோ"

 

இப்ப எதுக்கடா? விசா வந்திடும் தானே ஒரேசாவா போய் கூட்டிக்கொண்டு வாவன் எதுக்கு ரெண்டு செலவு?

 

"இல்லை அண்ணி, தீபாவளிக்கும் போகமுடியலை பொங்கலுக்கு ஆவது போட்டு வருவம் என்று தான், அவர்களும் கொஞ்சம் சந்தோசப்படுவார்கள்"

 

ம்ம்ம்ம்.. இப்ப நல்ல குளிர் தான், வேலையும் குறைவாத்தான் இருக்கும்,ஆனால் அண்ணனட்டை எப்படிச்சொல்ல?

 

"எப்படியோ நீங்கள் தான் அண்ணி சொல்லவேணும், நான் நாளைக்கு ரேமின் (நியமனம்) வச்சிட்டு புதன்கிழமை ஃப்ராங்பேட்டுக்கு போட்டு வாறேன் அண்ணி"

 

இதுக்கு மேல் அண்ணி எதுவும் பேசவில்லை. புதன் கிழமை 11மணிக்கு வரச்சொன்னார்கள்.

சாதாரண ரெயினில் போக ஒருநாளாகும் பேசாமல் ICE இல் போவம் என்று ரிக்கற் புக்பண்ணிப்போட்டு

552992_408642199210069_1806183090_n.jpg

 

அங்கை போனால், இருக்கையில் அமரச்சொன்னார்கள். சில மணிநேர காத்திருப்பின் ஒருவர் வந்து குறித்த அறைக்கு வரச்சொன்னவர் முதல் கேள்வியே

"நீங்கள் எதுக்கு இந்தியப்பெண்ணை திருமணம் செய்தீர்கள்?"

சுத்தம்.. பொழுதுபோக்குக்கு தான்.. அப்படிச்சொல்லத்தான் ஆசை இருந்தாலும் அப்படிச்சொல்லேல்லை.

பிடித்திருந்தது அதுதான் காதலித்து திருமணம் செய்துகொண்டேன்.

 

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்?

கேட்குறான் பாரு கேள்வி .. என்று நினைத்தவாறே யாழ் இணையத்தின் அருமை,பெருமைகளை அள்ளிவிட்டேன்.

 

"மேலை கீழை வடிவாப் பார்த்தான், பார்த்திட்டு பிசினஸ் என்று போட்டிருக்கு இந்தியாவில் இருந்து சாமான் கொண்டுவரவா போறாய் என்றான்?"

குறுக்காலை போனவன் என் அவசரம் புரியாமல் படுத்துறானெ என்று மனம் வெம்மிக்கொண்டது, என்ன செய்ய அலுவல் முடியணுமே , "இல்லை 14ம் திகதி தமிழர்திருநாள் பொங்கல் அது தான் என் மனைவியுடன் கொண்டாடவேண்டும் என்று சொன்னேன்."

 

ஏதோ திருப்தி கொண்டானோ என்னவோ தெரியாது வெயிட்டிங் ரூமில் காத்திருக்க சொல்லி விட்டு சிறிது நேரத்தின் பின் விசா குடுத்தான்.

 

முதல் வேலையா பிரியாவிடம் சொல்லிவிட்டு ரெயில் நிலையம் நோக்கி நடையைக்கட்டினேன்...

 

தொடரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"மாமியார் வீடு" தலைப்பைப் பார்த்தால் ஏதோ நாடக பாணி தெரியுது...என்டாலும் கதையை நல்ல விறுவிறுப்பாய் கொண்டு போறீங்கள்...தொடருங்கோ

Link to comment
Share on other sites

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்? :o :o

 

நியாயமான கேள்வி ........... :icon_mrgreen: . ஏன்ராசா முதல் அடியே செப்பல் அடி போலை கிடக்கு :lol: :lol: . தொடருங்கோ....... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்

சரியான பாதையில் தான் கதை பயணிக்கிறது.

நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது

ஏன் ஒழித்து வைப்பான்?

தொடருங்கள்

Link to comment
Share on other sites

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ. :)

 

என் கறுத்த முகம் கூட அப்பப்போ சிவப்பதுண்டு , அந்த நிலை தான் இப்ப, எப்படி அண்ணா,அண்ணிட்ட சொல்ல?

அண்ணாட்டை சொன்னா ஆயிரம் கதை கதைப்பான் எதுக்கும் அண்ணியிடம் சொல்லுவம் என்று..

 

:lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அறியும் ஆவலில் மனசு......... இன்னும் வேகமாய் எழுதுங்கோ

Link to comment
Share on other sites

யாழ் இணையத்திலை காதலான  பல சோடியள் பிரிஞ்சிருக்கு. ஆனால் சேர்ந்த  ஒரு சிலதிலை நீங்களும். அடக்கம் என்னும் போது மகிழ்ச்சி.  தொடருங்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கோ.. தொடருங்கோ... நானும் படிக்கிறேன்... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ.. தொடருங்கோ... நானும் படிக்கிறேன்... :rolleyes:

நானும் தான்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுப்பு அறிய ஆவலாய் உள்ளேன்....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விடுப்பு அறிய ஆவலாய் உள்ளேன்.... :D

 

உங்கள் ஆவல் வீண்போகாது அண்ணா,மிகுதி விரைவில்... :)

"மாமியார் வீடு" தலைப்பைப் பார்த்தால் ஏதோ நாடக பாணி தெரியுது...என்டாலும் கதையை நல்ல விறுவிறுப்பாய் கொண்டு போறீங்கள்...தொடருங்கோ

 

கத்து குட்டி தானே, சரியாகத்தெரியவில்லை முழுவதும் படித்து சொல்லுங்கள் அக்கா.. :)

"எப்படி உங்களுக்கு அறிமுகமானார்? எப்படி பழகினீர்கள்? :o :o

 

நியாயமான கேள்வி ........... :icon_mrgreen: . ஏன்ராசா முதல் அடியே செப்பல் அடி போலை கிடக்கு :lol: :lol: . தொடருங்கோ....... :)

 

அதை ஏன் கேட்குறியள், சிலது சென்சார் பண்ணித்தான் போட வேண்டியுள்ளது. :lol::D

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஜீவா!! ஜீவாவின் மனைவி இந்தியத் தமிழா?? ( கேக்காட்டியும் குறை நினைப்பியள் :lol: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்

சரியான பாதையில் தான் கதை பயணிக்கிறது.

நல்ல எழுத்தாற்றல் தெரிகிறது

ஏன் ஒழித்து வைப்பான்?

தொடருங்கள்

 

நன்றி அண்ணா, உங்கள் போன்றோரின் ஊக்கமும்,ஆதரவும் தான் தவழும் எம்மை கை பிடித்து கூட்டிச்செல்வது போல் உள்ளது.

நன்றி அண்ணா தொடர்ந்து படியுங்கள்..... :)

நல்லா எழுதுகிறீர்கள். தொடருங்கோ. :)

 

 

:lol: :lol:

 

நன்றி துளசி சிஸ்டர்.. :rolleyes:

அறியும் ஆவலில் மனசு......... இன்னும் வேகமாய் எழுதுங்கோ

 

நன்றி அக்கா.. ஒரே நாளில் முடித்தால் திரில் இருக்காது.. :rolleyes::lol:

யாழ் இணையத்திலை காதலான  பல சோடியள் பிரிஞ்சிருக்கு. ஆனால் சேர்ந்த  ஒரு சிலதிலை நீங்களும். அடக்கம் என்னும் போது மகிழ்ச்சி.  தொடருங்கள். :)

 

நன்றி சாத்திரி அண்ணா வரவுக்கும், தகவல் பகிர்வுக்கும்.. :)

நானும் தான்! :D

 

காவடி எடுத்தாச்சு ஆடி முடிக்கத்தானே வேணும்.. :lol:

Link to comment
Share on other sites

ஆரம்பம் நல்லா இருக்கு...ஆத்துக்காரி வேற வாசிக்கின்றார் என்பதால் கவனமப்பு..!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.