Jump to content

மாமியார் வீடு...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பம் நல்லா இருக்கு...ஆத்துக்காரி வேற வாசிக்கின்றார் என்பதால் கவனமப்பு..!!

 

ம்ம்ம்

கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • Replies 276
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள் ஜீவா!! ஜீவாவின் மனைவி இந்தியத் தமிழா?? ( கேக்காட்டியும் குறை நினைப்பியள் :lol: )

 

கேட்பதற்கு இப்படி வேறு ஒரு ஜடியா இருக்கா???? நீங்கள் கில்லாடியான ஆள் தான் அலை அக்கா.. :D:lol:

Link to comment
Share on other sites

தொடருங்கோ.. தொடருங்கோ... நானும் படிக்கிறேன்... :rolleyes:

 

இதைப் படிக்கும்போது சூனா பானாதான் ஞாபகத்துக்கு வந்தார்.. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதைப் படிக்கும்போது சூனா பானாதான் ஞாபகத்துக்கு வந்தார்.. :lol:

 

 

முடியலை..www.animated-animation.de_smiley_3d_gifs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பத்தான் விசாவே கிடைத்திருக்கின்றது. அதற்குள்ளேயே களத்தில் இத்தனை அட்டகாசமான வரவேற்புகள்


மாமியார் வீட்டில்  இன்னும் அட்டகாசமாக இருக்கும் என நம்பலாமா ஜீவா :D  


வாழ்த்துகள்  தொடருங்கள் ஜீவா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு ... (தொடர்ச்சி ...) பகுதி- 3

 

ரெயில் நிலையம் வந்து எனது இடத்துக்கான ரெயில் புறப்படும் நேரத்தை பார்த்த போது மதியம் 1.12க்கு என்று இருந்தது,

அரை மணித்தியாலத்துக்கு மேலை இருக்கே .. உடனே "கம்ப்ஸ்"

c01befcf54317a2d27772e0ec7cc9abe_standar

பேக்கரியில் சாப்பிட்டு, கோப்பி குடிச்சிட்டு கிளம்ப நேரம் சரியாய் இருந்தது.

 

கடுகதியில் செல்லும் ரயிலில் காதோரம் mp33 பிளேயரில் இளையராஜாவின் இனியகானங்களைக் கேட்டவாறே இயற்கையின் அழகை ரசித்தவாறே வீடுவந்து சேர 3.30 மணி.

419711_409581702449452_36445061_n.jpg74691_409581609116128_1695125475_n.jpg

 

வந்து முகத்தை கழுவி விட்டு, குருவி கொத்தினது போல மதிய சாப்பாட்டை அள்ளி எறிந்து விட்டு வேலைக்கு வந்து எல்லா அலுவலும் முடிந்து இணையத்தில் விமான ரிக்கற் தேடினால் எல்லா விமான ரிக்கற்றும் விலை அதிகமாய் இருக்கு நாளைக்கு பார்ப்போம் என்று விட்டிட்டேன். மறு நாள் சிக்கினது யாழ் உறவு ஒருத்தர் தான்.

 

யோவ்.. மொக்கை போடுறிங்களா பேசாமல் எனக்கு ஒரு உதவி பண்ணுங்கோ என்று ரிக்கற் பார்த்து சொல்லுங்கோ என்று அன்பாய் சொல்ல அண்ணரும் தேடிப்பிடிச்சு ஏர் இந்தியாவிலை மலிவா கிடக்கு போறியா என்றார்?

"ஏன்பா என்னை கொல்லப்பார்க்கிறிங்களா? ஏற்கனவே நான் ஒருக்கால் போய் பட்டது காணாது என்று" "என்ன ஒரு கொலைவெறி"..

 

ஏற்கனவே நான் எல்லா வெப்சைட்டும் பார்த்து களைச்சிட்டேன் நீங்கள் தான் அடிக்கடி போறனிங்களே ஏதும் டிராவல் ஏஜென்சி தெரிஞ்சால் சொல்லுங்கோ என்றதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

சிறிது நேரத்தின் பின் தொடர்புகொண்டு எமிரேட்ஸ் ல 800€க்கு கிட்ட வரும் போறியா?

 

"ஏர் இந்தியாவிலை போறதுக்கு இது பரவாயில்லை எதுக்கும் சொல்லுறேன்"

 

அப்ப தான் பைல் ல திறந்து பார்க்க பழைய ஈ-ரிக்கற் ஒன்று இருந்தது அந்த நம்பருக்கு தொடர்புகொண்டு கேட்க சரி கட்டார் எயார்வேய்ஸ்சில் ரெயில் அன்ட் ஃப்ளை கொஞ்சம் மலிவா நாலு ரிக்கற் இருக்கு புக் பண்ணட்டா?

 

நாள் வேறை இல்லை இதிலை யோசிக்க என்ன இருக்கு சரி ஓ.கே பண்ணிடுங்க என்று சொல்லிட்டு வச்சாச்சு.

 

வெள்ளிக்கிழமை ரிக்கற் ரெயில் நிலையத்தில் அடிச்சு எடுத்தாச்சு சனி 11மணிக்கு ஃபிளைட். டோஹா ட்ரான்சிற்.

 

உடுப்பொன்றும் எடுக்கலையே, என்ன கொண்டுபோக என்ற தவிப்பு மட்டும் மனசை வாட்டி எடுத்தது. இருப்பது ஒரு இரவுப்பொழுது தான் காலை 6.42க்கு ரெயின். என்ன செய்ய சரி ஏதேனும் வாங்குவோம் என்று போக வழியில் வந்தார் அண்ணாவின் நண்பர் ஒருவர்.

 

மட்டக்களப்பைச் சேர்ந்தவர், அண்ணாவின் நீண்ட நாள் நண்பர். வந்த நாள் முதல் என்னுடனும் நல்ல பழக்கம், எங்கள் வீட்டில் ஒருத்தர் போல இன்ப துன்பம் எல்லாவற்றிலும் இருக்கும் ஒருவர்.

 

"என்ன கடை பூட்டோ?"

ஓம் அண்ணா நாளைக்கு ஃபிளைட் அதான் ஏதும் உடுப்பு பார்க்கலாம் என்று.

 

"நானும் உன் கடைக்கு தான் வந்தனான் நீ இல்லை பிறகேன் நானும் கூடவே வாறேன்"

 

சரி வாங்கோ..

 

எனக்கு தேவையான எல்லாம் வாங்கியாச்சு, ஒரே ஒரு முக்கியமானதை எடுக்கலாம் என்றால் என்கூடவே வாறாரே, என்னெண்டு அதை எடுக்க,இங்கை அது சாதாரணமாக இருந்தாலும் அவருக்கு முன் அதை எடுக்க என்ன நினைப்பாரோ? "வெட்கம் வேறு வந்து தொலைத்தது" எப்படி காய் வெட்டலாம்? மனசுக்குள் ஒரு ஜடியா..!! சிறியண்ணா கை ஃபுல்லா சாமான் இருக்கு ஹான்ட் க்ரீம் எடுக்க மறந்துட்டேன், குறை நினைக்காதையுங்கோ ஒருக்கா எடுத்து கொண்டு வாறிங்களோ நான் பில் போடுறன்.

"சரி என்றவர் வருவதற்குள் எடுத்து பில் போடுமிடத்தில் வைத்து விட்டேன்"

 

பிரியாக்கும்,விஷாலிக்கும் ஏதும் வாங்குவம் என்று பார்த்தால், அது தான் பெரிய காமடி..

 

நான் எதை எடுத்தாலும் "எங்கை காட்டு பார்க்கலாம்"?

இந்தாங்கோ எப்படி அண்ணா இருக்கு?

 

இது கழுத்து பெருசா இருக்கு இதை அங்கை இருக்கிறதுகள் போட மாட்டுதுகள் வேறைய பாரு..

 

மறுபடியும் இன்னொன்றை காட்டி இது எப்படி இருக்கு?

"இது நல்லா இல்லை வேறை பார்"!!

 

எட்டு பத்து உடுப்புக்கு மேலை பார்த்திருப்பேன் ஒன்றும் சரியில்லை என்று சொல்லிப்போட்டார்,

 

"வேலியிலை போற ஓணானைப்பிடிச்சு வேட்டிக்குள்ளை விட்ட கதையாப்போச்சு என் நிலமை"

 

"எனக்குனு வந்து வாய்க்கிறாங்க வைரவருக்கு நாய் வாய்ச்சது போல.." கோவம் வந்தாலும் அவர் மனதை காயப்படுத்த முடியவில்லை, சமாளித்தேன்.

 

சரி வாங்கோ அண்ணா பில் போட்டிட்டு போவம். நான் ஒரு மணித்தியாலத்துக்கு பிறகு கடை திறப்பேன் என்று எழுதிப்போட்டு வந்தனான் ஆரும் காத்திருக்க போகுதுகள். இஞ்சை வாங்கிற காசுக்கு அங்கை வாங்க்கி குடுக்கிறேன் என்றாச்சு.

 

கடையிலை தான் வச்சு இருந்த சாமான்களை எல்லாம் பொதி பண்ணிவிட்டு, எனது ஆவணங்களையும் எடுத்து எல்லாவற்றையும் சரி பார்த்து விட்ட பின் தான் நிம்மதியாய் இருந்தது.

 

காலமை 6.30க்கு போனால் தான் 6.42 ரெயின் எடுக்க முடியும். அந்த நேரம் அண்ணா,அண்ணியிடம் வேறு சொல்ல முடியாது வார இறுதி பிள்ளைகளும் அதிகம் தூங்குவார்கள் அதனால் இரவே எல்லாம் சொல்லி முடித்து விட்டு.

காலை 5.30க்கு எல்லாம் எழும்பி குளிச்சு வெளிக்கிட்டு ரெயில் நிலையம் நோக்கி நடக்க ஆரம்பிக்குறேன்..

 

தொடரும்.....

 

 

Link to comment
Share on other sites

தொடருங்கள்.... :)
பேக்கரியின் படம் ஏதோ இணைக்க முயற்சித்திருக்கிறீர்கள். படம் வரவில்லை. அதை ஒருக்கா சரிபாருங்கள். :rolleyes:

 

"வேலியிலை போற ஓணானைப்பிடிச்சு வேட்டிக்குள்ளை விட்ட கதையாப்போச்சு என் நிலமை"

 

"எனக்குனு வந்து வாய்க்கிறாங்க வைரவருக்கு நாய் வாய்ச்சது போல.." கோவம் வந்தாலும் அவர் மனதை காயப்படுத்த முடியவில்லை, சமாளித்தேன்.

 

அவர் இதை வாசிக்க மாட்டாரோ? :D

 

Link to comment
Share on other sites

தொடருங்கள்....மாமியும் அம்மாதான், அம்மா வீட்டை போறீங்க...ஞாபகமிருக்கட்டும்

Link to comment
Share on other sites

மாமியார் வீடு ... (தொடர்ச்சி ...)

 

எனக்கு தேவையான எல்லாம் வாங்கியாச்சு, ஒரே ஒரு முக்கியமானதை எடுக்கலாம்

என்றால் என்கூடவே வாறாரே, என்னெண்டு அதை எடுக்க,இங்கை அது சாதாரணமாக

இருந்தாலும் அவருக்கு முன் அதை எடுக்க என்ன நினைப்பாரோ? "வெட்கம் வேறு

வந்து தொலைத்தது" எப்படி காய் வெட்டலாம்? மனசுக்குள் ஒரு ஜடியா..!!

சிறியண்ணா கை ஃபுல்லா சாமான் இருக்கு ஹான்ட் க்ரீம் எடுக்க மறந்துட்டேன்,

குறை நினைக்காதையுங்கோ ஒருக்கா எடுத்து கொண்டு வாறிங்களோ நான் பில்

போடுறன்.

"சரி என்றவர் வருவதற்குள் எடுத்து பில் போடுமிடத்தில் வைத்து விட்டேன்"

 

தொடரும்.....

 

நன்றாக இருக்கு மச்சி. அத வாங்கிறதுக்கு ஏனப்பா தயக்கம்? இப்பத்தானே விதவிதமான பிலேவரில வேற வருகுது.

 

https://www.youtube.com/watch?v=btKG7fK124A

 

இந்த கிளிப் தாண்டா ஞாபகத்துக்கு வந்திச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பத்தான் விசாவே கிடைத்திருக்கின்றது. அதற்குள்ளேயே களத்தில் இத்தனை அட்டகாசமான வரவேற்புகள்

மாமியார் வீட்டில்  இன்னும் அட்டகாசமாக இருக்கும் என நம்பலாமா ஜீவா :D  

வாழ்த்துகள்  தொடருங்கள் ஜீவா. 

 

வரவிற்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி வாத்தியார் அண்ணா, :)

 

உங்கள் அனைவரின் எதிர்பார்ப்புக்கும் அமைய எழுத முயற்சிக்கிறேன் அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள்.... :)

பேக்கரியின் படம் ஏதோ இணைக்க முயற்சித்திருக்கிறீர்கள். படம் வரவில்லை. அதை ஒருக்கா சரிபாருங்கள். :rolleyes:

 

 

அவர் இதை வாசிக்க மாட்டாரோ? :D

 

 

நன்றி துளசி சிஸ்டர்.

 

படம் வேறு இணைத்துள்ளேன் பாருங்கள்.

 

"அவருக்கு மட்டுமல்ல வீட்டில் யாருக்கும் தெரியாது நான் யாழில் எழுதுவது.".. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொடருங்கள்....மாமியும் அம்மாதான், அம்மா வீட்டை போறீங்க...ஞாபகமிருக்கட்டும்

 

நன்றி வந்தியத்தேவன் அண்ணை.. :unsure::blink:  வரவுக்கும் கருத்துக்கும். :)

 

உண்மை தான், எனக்கு இரண்டு அம்மாக்கள். :)

நன்றாக இருக்கு மச்சி. அத வாங்கிறதுக்கு ஏனப்பா தயக்கம்? இப்பத்தானே விதவிதமான பிலேவரில வேற வருகுது.

 

 

 

இந்த கிளிப் தாண்டா ஞாபகத்துக்கு வந்திச்சு...

 

அட பாவி.. :lol:  இப்படி பத்த வச்சிட்டியேடா.. எல்லாருக்கும் படிக்க புரியும் என்று நான் நாசூக்காக எழுத இப்படி பப்ளிக்கா வீடியோ கிளிப் வேறை போட்டு காட்டுறியேடா????? :( :(

 

குடும்பத்திலை குழப்பம் வராமல் விட்டால் சரி தான்.. :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பகிடியா கதை சொல்லுறிங்கள் . உங்கடை கதை உங்கடை ஸ்ரைலிலை வரட்டும் அதுதான் நல்லது .

Link to comment
Share on other sites

ஜீவாவின் எழுத்து சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தொடருங்கள்.பிரியாவும் பின் தொடர்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரியாவும் பார்பதனால் இன்னும் உற்சாகமாக எல்லோ எழுத வேண்டும் யீவா :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாமியார் வீடு ...... (தொடர்ச்சி..) பகுதி - 4

 

200699_409999009074388_1312669324_n.jpg

 

அதிகாலை என்பதால் புகையிரத நிலையத்திலும் சரி, ரெயிலிலும் சரி கூட்டம் அதிகம் இருக்கவில்லை.

ஆனால் சில நாழிகைகள் கழித்து டுசில்டோவ் புகையிரத நிலையத்தில் இறங்கி ICE ரெயில் எடுக்க வேண்டி இருந்தது. அங்கிருந்து தான் நேரடியாக ஃப்ராங்பேட் விமானநிலையம் செல்லும்.

 

தானியங்கி கஃபே  மெசினில் ஒரு கோப்பி அடிச்சுக்கொண்டு பிளாட்போர்மில் ரெயினுக்காக காத்திருக்கும் போது

"வெறிக்குட்டி ஒண்டு வந்து லைற்றர் இருக்கா எண்டிச்சுது"

முதல் நாள் டிஸ்கோ அல்லது பார்ட்டிக்கு போட்டு வந்து படுத்திருப்பான் போல உடுப்பு கொஞ்சம் நல்லா இருந்திச்சுது.

 

"இல்லை நான் புகைப்பதில்லை" என்றேன்.

 

"அப்புறம் எதுக்கு இங்கை வாறாய்?" என்று சொல்லிட்டு ஏதோ சொல்லிக்கொண்டு போனான்.

 

கஞ்சாவோ,கொஹைனோ அடிச்சிருப்பான் போல .. அந்த நினைப்பிலையே இருக்கானே, டிஸ்கோவுக்கும்,ரெயில் நிலையத்துக்கும் வித்தியாசம் தெரியாமல்..

 

அடக்கடவுளே! இதை எல்லாம் விபரிக்க அகராதியிலை தான் சொல்லெடுக்கவேணும் என்று சொல்லிக்கொண்டது மனது..

 

நல்ல காலம் அதிக நேரம் காத்திருக்க தேவை இல்லை என்பதால் ரெயினும் வந்துவிட்டது.

 

ஜன்னலோரம் தொங்கிய நாளிதழை எடுத்து பார்த்து கொண்டு mp3 யில் பாட்டுக்கொண்டு வர விமானநிலையம் வந்ததே தெரியவில்லை.

 

72895_408642349210054_547532433_n.jpg

 

558303_408642942543328_698575111_n.jpg

 

கட்டார் எயார்வேய்ஸ் இருக்கும் கவுண்டரைத் தேடிப்பிடித்து போர்டிங்காட்டை எடுத்துக்கொண்டு உடற்சோதனை எல்லாம் முடிந்து விமானத்தில் ஏறுவதற்கு முன் இருந்த நேரத்தில் ஊருக்கும்,பிரியாவுக்கும் சொல்லிவிட்டு விமானத்தில் ஏற சரியாக இருந்தது.

 

 

550007_409581692449453_106609364_n.jpg

 

ஒரு சிலரைத்தவிர அனேகம் வெள்ளை நிறத்தவர்களாகவே இருந்தனர். ஆரவாரமில்லாத அமைதியான பயணம், மதிய உணவு முடிந்ததும் அனேகர் தூங்கி இருந்தனர், ஒரு சிலர் புத்தகங்கள் படிக்க நான் இங்லிஷ் விங்லிஷ் படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

சிறீதேவியின் நடிப்பு அருமை. உறவினர் விழாக்கள்,பணி,புலம்பெயர்ந்து என்ற பல காரணங்களுக்காய் குடும்பத்தை விட்டு வரும் பெண்கள் அன்னிய நாட்டில் படும் மொழிப்பிரச்சனையை சுவாரசியமாகச் சொல்லும் படம். அதுவும் "சிறீதேவியின் லட்டு சூப்பர்".. :rolleyes:

 

திருமண நிகழ்வில் ஒவ்வொருவரும் தம்பதியினரை வாழ்த்தும் போது சிறீதேவியின் முறை வரும் போது பேசும் வசனங்கள் நெகிழ்ச்சி. ஒரு காட்சியில் அமிதாப்பச்சனும் நடித்திருந்தார்.

 

படம் முடிந்ததும் எப்படி தூங்கினான் என்பது தெரியாது " பயணியர் கவனத்திற்கு இன்னும் சில மணி நேரங்களில் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க உள்ளது, பயணிகள் சீட்பெல்ட்டை மாட்டுமாறு" அறிவிப்புக்கேட்டுத்தான் கண்விழித்தேன். நடு சீற் என்பதால் டோஹாவின் அழகை தரிசிக்க முடியவில்லை.

 

விமானத்திலிருந்து "பாக்" கை எடுத்துக்கொண்டு வரும் போது தான் பார்த்தேன் விமானத்திரிப்பிடத்திலேயே வி.ஜ.பி பிரமுகர்கள் வந்து இறங்குவது போல இறங்க அங்கிருந்து பஸ் மூலம் உரிய பகுதியில் சேர்த்தார்கள்.

46288_408641565876799_1960153000_n.jpg

 

 

மறுபடி டோஹா விமானநிலையத்திலும் உடற்சோதனை முடித்துக்கொண்டு சென்னை செல்லும் கட்டார் எயார்வேய்ஸ் கவுண்டரை நோக்கி நடக்கிறேன்.

 

தொடரும் .......

 

,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யீவா தற்சமயம் பச்சைகள் கையிருப்பில் இல்லை பின்னர் போட்டுவிடுகிறேன். நன்றாக இருக்கிறது. எழுத்துகள் வாசிக்கும் ஆவலைத் தூண்டுகின்றன. மாமியார் வீட்டுக்குப்போகபின்னால்தான் கலகலப்பு அதிகமாக இருக்கும் என்று பட்சி சொல்கிறது. படங்களும் நன்றாக இருக்கின்றன. முக்கியமாக ஒருவிடயத்தைக் கவனத்தில் எடுத்தால் வாசிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும். ஒவ்வொரு பதிவுக்கும் இலக்கம் இடுங்கள். இதுவரை நான் உங்களுடைய  தொடரில் 3 ஐ வாசித்துவிட்டேன் இனி 4இலிருந்து வாசிக்கவேண்டும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க உதவியாக இருக்கும். யீவா நம்மைப் போன்றவர்களுக்கு நேரம் கம்மி. யாழில் சிலருடைய ஆக்கங்களை ஆவலோடு தேடி வாசிப்பேன் அவர்களில் நீங்களும் ஒருவர். அதுதான் அடுத்ததடவை இதற்குள் எட்டிப்பார்க்கும்போது மீண்டும் விட்ட இடத்திலிருந்து படிக்க வசதியாக இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

தொடருங்கள் ஜீவா அண்ணா... :)

Link to comment
Share on other sites

"சிறீதேவியின் லட்டு சூப்பர்".. :rolleyes:

கண்ணா லட்டு திங்கபோற இடத்திலை இது தேவையா.

Link to comment
Share on other sites

ஜீவா கலக்கின்றீர்கள் ,தொடருங்கள் மிக இளமையாகவும் இனிமையாகவும் இருக்கு ,

 

கொசுறு -தமிழில் அமிதாப்பின் இடத்தில் அஜித் நடித்திருந்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவாவின் எழுத்து சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் உள்ளது.தொடருங்கள்.பிரியாவும் பின் தொடர்கிறார் போல.

ம்... தொடருகிறேன் அண்ணா...!!!

ஆனால், மனைவி என்ற உறவில் அல்ல...

ரசிகை என்ற முறையில்...!!

Link to comment
Share on other sites

நன்றாக இருக்கிறது ஜீவா. தொடருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிளேன் காட்டிக்கொண்டு, நெடுக மினக்கடாம, மாமி வீட்டை கெதியாக் கூட்டிக்கொண்டு  போங்கோவன், தம்பி! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.